Cart is Empty
by காம்கேர் கே.புவனேஸ்வரி
‘கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்’ என்றொரு பழமொழி உண்டு. சைபர் வேர்ல்டில் பயணிக்கும் ஒவ்வொருவரும், தனக்கு இன்னல்கள் வந்த பின்புதான் விழித்துக்கொள்வார்கள். மொபைல் போனை தொலைத்துவிட்டு IMEI எண் தெரியாமல் விழித்துக் கொண்டிருப்பார்கள். அவ்வாறு இல்லாமல் இன்னல் வருமுன் நம்மை பாதுகாத்துக்கொள்வதற்கு வழிகளைச் சொல்லித் தருகிறது இந்த நூல். டெபிட் கார்டு, க்ரெடிட் கார்டு, நெட் பேங்கிங், ஃபேஸ்புக், டிவிட்டர், பிளாக் போன்றவற்றைப் பயன்படுத்தும்போது எவ்வாறு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்; அவற்றில் பிரச்னை ஏற்பட்ட உடன் அதிலிருந்து பாதுகாத்துக்கொள்ள யாரை, எவ்வாறு அணுக வேண்டும் என்று விலாவாரியாக வகுப்பு எடுத்துள்ளார் நூல் ஆசிரியர் காம்கேர் கே.புவனேஸ்வரி. உட்கார்ந்த இடத்திலேயே அனைத்து வேலைகளையும் செய்யும் வசதி இணையதளத்தின் மூலம் நடக்கும்போது ஒரு சில ஆபத்துகளும் நம்மைத் தேடி வரத்தான் செய்கிறது. அந்த ஆபத்துகளிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறைகளை, அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் மிக எளிமையாக எழுதியுள்ளார் நூல் ஆசிரியர். சைபர் வேர்ல்டில் நாம் பயணிக்கும்போது ‘மூன்றாவது கண்’ நம்மை கண்காணித்துக்கொண்டிருக்கும். நமது பாதுகாப்புக்காக நம்மைச் சுற்றி ஒரு கவசத்தை அணிந்துதான் பயணிக்க வேண்டியுள்ளது. அந்தப் பாதுகாப்புக் கவசமாக இந்தப் புத்தகம் விளங்கும் என்பதில் ஐயமில்லை. தன்னையும் தன் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்ளும் அக்கறையோடு இந்தச் சமுதாயத்தையும் பேணிப் பாதுகாக்கும் கடமை ஒவ்வொருவருக்கும் உண்டு. அந்தப் பாதுகாப்பைப் பெறுவதற்கு இந்த நூல் அவசியம் உதவும்.
RS. 70 More...by காம்கேர் கே.புவனேஸ்வரி
பத்து கைகள் இருந்தாலும் சாத்தியப்படாத வேலைகளை, நிமிடங்களில் முடித்துத் தரக்கூடிய கம்ப்யூட்டர் இன்றைய அவசர யுகத்தில் ஒரு வரப்பிரசாதம். ரயில் டிக்கெட், பஸ் டிக்கெட், சினிமா டிக்கெட்டில் ஆரம்பித்து, இன்று நமது அன்றாடத் தேவைகள் பலவற்றைக் கண் மூடித் திறக்கும் நேரத்தில் கச்சிதமாகச் செய்து முடித்துக் கொடுக்கும் ஆற்றல் கம்ப்யூட்டருக்கு உண்டு. சட்டைப் பையிலேயே ‘பாக்கெட் அளவு கம்ப்யூட்டர்’ வைத்திருக்கும் காலம் இது. சூரியனைப் பற்றியும் சூரியனுக்குக் கீழுள்ள அத்தனை விஷயங்கள் பற்றியும் படிக்க, படங்களாகப் பார்க்க, படித்ததையும் பார்த்ததையும் சேமித்து வைக்க, புதிய டிஸைன்களை உருவாக்க, கடிதங்கள் எழுத, வர்த்தக தொடர்பு கொள்ள... இப்படி நம் வாழ்க்கைக்குக் கூடுதலான வசதிப் பெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள அடிப்படை கம்ப்யூட்டர் அறிவு என்பது அத்தியாவசியத் தேவை. இந்த அவசியம் கருதித்தான் கம்ப்யூட்டர் பற்றி 'ஏ டூ இஸட்' விஷயங்களை விளக்கி, மிகவும் எளிமையாக இந்த நூலில் கொடுத்திருக்கிறார் காம்கேர் கே.புவனேஸ்வரி. கம்ப்யூட்டரின் ஒவ்வொரு பாகத்தையும் விளக்கிச் சொல்லியிருப்பது மட்டுமல்லாமல், அதன் பயன்பாடுகள் பற்றியும் இந
RS. 91 More...by பரணிராஜன்
உலக அளவில் ஆட்டோமொபைல் என்பது மிகப் பெரிய துறை. இந்தத் துறை, நம் நாட்டில் கடந்த பத்து ஆண்டுகளாகத்தான் மிகப் பெரிய வளர்ச்சியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. ஒரு நாட்டில் குறிப்பிட்ட ஒரு துறை வளரவேண்டுமானால், அந்தத் துறையில் அறிவுசார் பங்களிப்பிலும் தொழில்நுட்பத்திலும் நிபுணத்துவம் பெற்றவர்கள் உருவாகிக்கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் அந்தத் துறையின் வளர்ச்சி முழுமையடையும். முன்பு, கார் என்றாலே ஒரு சில மாடல்களே இருந்தன. சுலபமாக நமக்குத் தேவையான ஒன்றைத் தேர்ந்தெடுத்துவிடவும் முடியும். ஆனால், இன்றைக்கு கார் வாங்கலாம் என்று நினைத்தால், எந்த காரை வாங்குவது என்ற குழப்பம் நிச்சயம் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுவது இயல்பு. வாடிக்கையாளர்கள் அந்தக் குழப்பம் இல்லாமல் தனக்கு ஏற்ற வாகனத்தைத் தேர்ந்தெடுக்க உதவும் விதத்தில், கடந்த 2007-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது `மோட்டார் விகடன்' மாத இதழ். புதுப்புதுப் பெயர்களில் அறிமுகமாகும் நவீனத் தொழில்நுட்பங்களின் செயல்பாடுகள் தொடங்கி, எதிர்காலத் தொழில்நுட்பங்கள் வரை இன்றைக்கு தமிழ் வாசகர்கள், வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்வதில் முன்னோடியாக விளங்கும் மோட்டார் விகடனில் வெளிவந்த தொடர்தான் `எந்திரன்'. காரில் என்னவெல்லாம் இருக்கின்றன; அது எப்படி வேலை செய்கிறது. ஒவ்வொரு பாகத்தின் செயல்பாடுகள் என்ன; எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்கிற விவரங்களை, நமக்கு எளிதாகப் புரியும் விதத்தில், உதாரணங்களோடு மிக அழகாக விளக்கியிருக்கிறார் இந்த நூலாசிரியர். ஆட்டோமொபைலின் அடிப்படையே, மெக்கானிக்கல் ஆற்றலில் செயல்படுவதுதான். ஆனால், மெக்கானிக்கலுடன் மிக எளிதாக இணைந்து கொண்டது எலெக்ட்ரானிக்ஸ். அதேசமயம், அடிப்படை என்பது எப்போதும் மாறாதது. அந்த அடிப்படை மெக்கானிஸித்தையும் எலெக்ட்ரானிக்ஸ் செயல்பாடுகளையும் தனது அனுபவத்தின் மூலம் இங்கே பதிவு செய்திருக்கிறார் பரணிராஜன். இந்தப் புத்தகம் ஆட்டோமொபைல் துறை சார்ந்த மாணவர்களுக்கு மட்டுமல்லாமல், ஆட்டோமொபைல் துறையில் ஆர்வம் இருக்கும் எல்லோருக்கும் மிகப் பயனுள்ள நூலாகவும் இருக்கும்.
RS. 105 More...by மொஹமத் சலீம்
ஏன் மாமரத்தில் மாங்காய்தான் காய்க்க வேண்டுமா? ஆப்பிள் காய்க்கக் கூடாதா? கோழி ஏன் குட்டி போடுவது இல்லை, ஒட்டகம் ஏன் முட்டை போடுவதில்லை? இவை யெல்லாம் முட்டாள்தனமான கேள்வியாக இருக்கலாம். ஆனால் இவையெல்லாம் மரபியலின் மகத்தான மர்மங்கள். மரபியலைப் பற்றிய ஞானம் வெகு காலத்துக்கு முன்பிருந்தே முன்னோர்களால் கையாண்டிருப்பதும் உண்மையே. இதுதான் ‘மரபியல்’ என்று தெரியாமல். ஆதிகால மனிதன், தன் குழந்தை தன்போலவே இருப் பதைக் கண்டறியும்போது, நாகரிகம், கலாசாரம், பண்பாடு என வளர்ச்சியடையும்போது இதன் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டதன் பிறகே மரபியல் கண்டுபிடிப்பு உருவானது. முதன்முதலில் மரபியல் குறித்த கேள்வியை எழுப்பிய அறிஞர்கள் பலரது ஆராய்ச்சியில் மனிதன் உருவாவதில் ஆண் பெண் இருவரின் சமபங்கு இருக்கிறது. எப்படி ஆண் பெண் இனங்கள் உருவாகிறது? - எனத் தொடங்கிய கண்டுபிடிப்பு, விலங்கினங்கள், தாவர இனங்களிலும் மரபியல் சோதனை மேற்கொள்ளப்பட்டு ஆராய்ச்சியாக மாறி, பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டு ஜீன்களுக்குள் ஒளிந்திருக்கும் ஆச்சர்யமான தகவல்களை புலனாய்வு செய்து, நமக்குப் பொக்கிஷமாகக் கொடுத்திருக்கிறார் ஆசிரியர். சிக்கலான அறிவியல் அடிப்படைகளை எளிய மனிதர்களும் புரிந்துகொள்ளும்படி அமைத்திருப்பது இந்நூலின் சிறப்பம்சமாகும். நான் யார்? எப்படி உருவானேன்? எங்கு உருவாக்கப் பட்டேன்? என்கிற ஒரு மனிதன் யூகிக்க முடியாத ரகசியங்கள் ஜீன்களால்தான். மற்றும் டி.என்.ஏ, குரோமோசோம்களால் நிகழக்கூடிய மாற்றம், அவற்றின் விளைவு, அதன் நுணுக்கமான ஆய்வுகள் என்ன என்று விரிவாக விளக்கியிருப்பது இந்த நூலின் கூடுதல் சிறப்பாகும். மக்களிடையே மரபியல் தொடர்பான விழிப்புஉணர்வு ஏற்படும் நோக்கில், ஜூனியர் விகடனில் வெளியான தொடர் இப்போது நூல் வடிவில் வெளியிடப்படுகிறது.
RS. 112 More...by விகடன் பிரசுரம்
‘பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல' என்பதற்கேற்ப, புதிய புதிய மாற்றங்கள்தாம் பழைய பூமியை இன்னும் உயிர்ப்புடன் வைத்துள்ளன. கற்களை உரசி ஆதி மனிதன் கண்டுபிடித்த நெருப்பில் இருந்து தொடங்கிய புதிய கண்டுபிடிப்பு தாகம் மனித இனத்துக்கு இன்னும் தணியவே இல்லை. அப்படி மனிதன் கண்டுபிடித்த மின்சாரமும் தகவல் தொழில்நுட்பமும் பூமியின் முகத்தையே மாற்றின. அயல் கிரக ஆராய்ச்சிகள், நானோ, ரோபோ என மனிதனின் தொழில்நுட்பத் தேடல்கள் பல வகைகளில் பல தளங்களில் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. இப்போது உலக நாடுகள் எல்லாம் பல துறைகளில் பயன்படுத்த, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் தீவிரம் காட்டிக்கொண்டிருக்கின்றன. புதிய புதிய தொழில்நுட்பங்கள் பற்றி ‘சர்வைவா’ எனும் தலைப்பில் ஆனந்த விகடனில் டெக்னோ தொடர் கட்டுரைகள் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றன. அவற்றின் தொகுப்பு நூல் இது! ‘தொழில்நுட்பங்கள் மனிதனைக் கடவுள்களாக மாற்றிக்கொண்டிருக்கின்றன. கடவுளைப்போன்ற சக்திகளை நாம் பெறத்தொடங்கியிருக்கிறோம். அப்படிப்பட்ட சக்தியை வைத்துக்கொண்டு நாம் என்ன செய்யப்போகிறோம் என்கிற கேள்வியில்தான் இருக்கிறது நம் எதிர்காலம்' என்று நூலாசிரியர் குறிப்பிட்டிருப்பதைப்போல, மாற்றங்களை ஏற்றுக்கொள்வது அவசியம் என்றாலும் அந்த மாற்றங்களால் மனித குலம் செழிக்கவேண்டும், பூமியில் அமைதி பூக்கவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்!
RS. 160 More...by காம்கேர் கே.புவனேஸ்வரி
அதிவேக இயந்திரத்தனமான இன்றைய வாழ்க்கைச் சூழலில் அதிகம் பேர் சொல்லக்கூடிய ஒரு வார்த்தை ‘நேரமே இல்லை’ என்பதுதான். ஒவ்வொரு நாளும் ஓட்டமும் நடையுமாக கரைகிறது; நித்தம் நித்தம் நிறைவேற்ற வேண்டிய கடமைகள், முடிக்க வேண்டிய பணிகள் நிறையவே இருக்கிறது. இப்படிப்பட்ட சிக்கல்களில் உதவிக் கரம் நீட்டுகின்றன மனித கண்டுபிடிப்புகளில் மகத்தானவையான எலக்ட்ரானிக் கருவிகள். அந்த வரிசையில் இன்று முன்னிலையில் உள்ளது லேப்டாப். பட்ட மேற்படிப்பு படிக்கும் மாணவர்கள், பொறியியல் மற்றும் மருத்துவம் படிக்கும் மாணவர்கள், விற்பனைப் பிரதிநிதிகள், பிசினஸ் புள்ளிகள் என அனைவரும் லேப்டாப் கம்ப்யூட்டர் ஒன்று தங்களுக்கென இருப்பது மிகவும் முக்கியம் என்று எண்ணுகின்றனர். லேப்டாப் கம்ப்யூட்டர் மட்டும் வாங்கினால் போதாது. பல இடங்களுக்கும் எடுத்துச் சென்று பயன்படுத்தும் சாதனம் அது என்பதால், செல்லும் இடங்களில் உங்கள் லேப்டாப் கம்ப்யூட்டரின் இயக்கத்துக்கு துணை சாதனங்கள் தேவைப்படலாம். எனவே லேப்டாப் வாங்கிய கையோடு அவற்றையும் வாங்கிப் பயன்படுத்துவது அவசியம். நாம் லேப்டாப்பை எங்கேயும், எப்போதும் பயன்படுத்தி தங்கு தடையின்றி பல வேலைகளை முடிக்கலாம். இணையதளத்தின் துணையோடு லேப்டாப் ஒன்று இருந்துவிட்டால், எப்போது வேண்டுமானாலும் உலகையே வலம் வரலாம். ஆகவேதான் இப்போதெல்லாம் லஞ்ச் பேக் சுமப்பவர்களைவிட லேப்டாப் பேக் சுமப்பவர்கள் அதிகம். லேப்டாப் வாங்க வேண்டும் என்ற எண்ணம் வந்ததுமே, அதைத் தொடர்ந்து எந்த பிரேண்ட், என்ன கான்ஃபிகரேஷன், சாஃப்ட்வேர்கள் தேவை; அவற்றை எப்படி இன்ஸ்டால் செய்வது என்பது போன்ற பல சந்தேகங்கள் எழக்கூடும். கவலையை விடுங்கள். உங்களின் சந்தேகங்களுக்கெல்லாம் விடைகிடைத்து விட்டது. தொழில்நுட்ப ரீதியாக, தெளிவாக பல படங்களுடன் தகவல்கள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. லேப்டாப்புடன் எக்ஸ்டர்னல் டிரைவ்கள், கேமரா, மொபைல் போன், ஐபாட், ஸ்கேனர், பிரின்டர் ஆகியவற்றை இணைத்து செயல்படுத்துவது, இன்டர்நெட் இணைப்பை பெறும் விதம் போன்றவையும் படங்களுடன் விளக்கப்பட்டுள்ளன. பல நுணுக்கமான விஷயங்களை, சுலபமாக கையாள்வதற்கு தகுந்த வகையில் தனித்தனி வழிமுறைகளோடு இந்த நூலில் கொடுத்துள்ளார் நூலாசிரியர். லேப்டாப் பயன்பாட்டின் அடிப்படை ஞானமே இல்லாதவர்கள்கூட எளிதாக லேப்டாப்பை பயன்படுத்தலாம். மொத்தத்தில் லேப்டாப் குறித்த பயனுள்ள பல தகவல்களைக் கொண்ட, அனைவருக்கும் உபயோகமான தொழில்நுட்ப நூல் இது.
RS. 119 More...by காம்கேர் கே.புவனேஸ்வரி
‘ஃபேஸ்புக்’ - எகிப்து புரட்சிக்கு வித்திட்ட இணையதளப் பக்கம். இன்றைய நவீன காலத்தில் ஃபேஸ்புக் பற்றி அறியாத ஆட்களே இருக்க முடியாது. அறிவிற்சிறந்த பெருமக்களாக இருந்தாலும் ஃபேஸ்புக் அக்கவுன்ட் இல்லை என்றால், உலகம் இளக்காரமாகப் பார்க்கத் தொடங்கிவிடுகிறது. வி.ஐ.பி-க்கள் தங்களின் மனக் கருத்துகளை இறக்கிவைக்கும் தளமாக ஃபேஸ்புக் பக்கத்தைப் பயன்படுத்துகிறார்கள். கூகுள், ஜி-மெயில், ஆர்குட், பிளாக் எனப் படிப்படியான கணினி யுகத்தின் பரிணாம வளர்ச்சியில் ஃபேஸ்புக் குறிப்பிடத்தக்க அங்கத்தை வகிக்கிறது. அவசரகதியில் அதிரடியாக வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதனின் வாழ்க்கை அதிகமான தேடல்கள் நிறைந்ததாக ஆகிவிட்டது. அதனால் உற்றார் உறவினர், உடன் பிறந்தோர், நண்பர்கள் என அனைவரோடும் பேசிப் பழகும் நேரமும், சந்தோஷமான தருணங்களும் காணாமல் போய்விட்டன. இந்தக் குறையைப் போக்கிடும் வகையில் அற்புத உருவாக்கமாக நியூயார்க்கின் அருகில் உள்ள சிறிய ஊரைச் சேர்ந்த இளைஞரான மார்க் ஜக்கர்பெர்க் நமக்கு வரப்பிரசாதமாக வழங்கியதுதான் இந்த ஃபேஸ்புக். சமூகத்தில் முகநூலின் தாக்கம் மிகப் பெரிய அளவில் வியாபித்துள்ளது. என்றோ பிரிந்த நண்பர்களையும், உறவுகளையும், பள்ளி-கல்லூரி சகாக்களையும்கூட தேடிக் கொடுக்கும் சந்திப்புப் புள்ளியாக இந்த சமூக வலைத்தளம் விளங்குகிறது. உங்கள் பாக்கெட்டில் இருக்கும் மொபைல் போனே போதும்... ஃபேஸ்புக்கில் நீங்கள் உலகை வலம் வரலாம். ஃபேஸ்புக் எப்படி உருவானது, எந்த நோக்கத்தின் ஆரம்பப் புள்ளியாக அது அமைந்தது, அது படிப்படியாக வளர்ந்து இன்று உலக அளவில் பேசப்படும் தகவல் தளமாக எப்படி மாறியது என்பவற்றையெல்லாம் மிக எளிமையாக - அழகிய தமிழ் நடையில் அற்புதமாக எழுதி இருக்கிறார் நூலின் ஆசிரியர் காம்கேர் கே.புவனேஸ்வரி. மேலும், ஃபேஸ்புக்கில் எப்படி அக்கவுன்ட் துவங்குவது; நண்பர்களை எப்படி சேர்த்துக்கொள்வது; ஒரே மாதிரியான சிந்தனை கொண்டவர்களின் குழுவை எப்படி அமைப்பது; பொருளாதார ரீதியாக ஃபேஸ்புக் எப்படி பயன்படுத்தப்படுகிறது; சாட் செய்வது; நம் இல்லத்தின் விழாக்களை எப்படி மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வது; ஃபேஸ்புக்கில் பாதுகாப்பான வழிமுறைகளை எப்படி கையாள்வது; எப்படிப்பட்ட விஷயங்களில் நாம் முன்னெச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பன போன்ற அற்புதமான, அடிப்படையான பல தகவல்களை இந்த நூலில் நமக்கு வழங்கி இருக்கிறார் நூல் ஆசிரியர். ஃபேஸ்புக்கின் ப்ளஸ் மைனஸ்கள் என்னென்ன என்பவற்றையும் ஆங்காங்கே நினைவூட்டி இருக்கிறார். ஃபேஸ்புக் பற்றி ஒன்றுமே தெரியாதவர்கள்கூட இந்த நூலின் உதவியோடு உலக அளவில் நட்பு வட்டத்தை விரிவாக்கிக் கொள்ளலாம்.
RS. 137 More...by காம்கேர் கே.புவனேஸ்வரி
இன்றைய அதிவேகமான வாழ்க்கைக்கு அழகு சேர்த்து வருகிறது நவீன கணினி தொழில்நுட்பம். செல்போன்களைப் போல, ‘இன்டர்நெட்’ என்பதும் மனித வாழ்க்கையின் ஓர் அங்கமாக மாறிவிட்டது. கணினி பற்றிய அடிப்படையே தெரியாதவர்கள்கூட, இன்டர்நெட் மூலம் கட்டுக்கட்டாக வருமானம் பார்க்கும் காலம் இது. ராணுவம் முதல் விவசாயம் வரை பயன்படக்கூடிய தொழில்நுட்ப வசதிகளை சில நொடிகளிலேயே பெற்றுக் கொள்ளவும், பொது அறிவு விஷயங்களைப் படித்துத் தெரிந்துகொள்ளவும், விரும்பும் நபரிடம் தொடர்புகொண்டு உருவத்தைப் பார்க்கவும் உரையாடவும் பயன்படும் இந்த இன்டர்நெட், விஞ்ஞான வளர்ச்சியின் தலைசிறந்த தொழில்நுட்பமாக உயர்ந்து நிற்கிறது. நமக்கு வேண்டிய ஆவணங்களை உடனுக்குடன் பார்த்து டவுன்லோடு செய்துகொள்ளவும், நமக்குத் தெரிந்த தகவல்களை ஒரே நேரத்தில் உலகம் முழுவதும் தங்கு தடையின்றி அனுப்புவதற்கும் இன்டர்நெட் முக்கிய பங்கு வகிக்கிறது. சாதாரண பொருள் பட்டுவாடாவில் தொடங்கி, கோடிகளை எளிதாகப் புரட்டும் வங்கிகள் வரை இன்டர்நெட்டைப் பயன்படுத்துவது சர்வசாதாரண விஷயமாகிவிட்டது. இன்டர்நெட் பற்றிய அடிப்படையையும், அதன் தொழில்நுட்பத் தகவல்களையும், விரல் நுனியில் வைத்த
RS. 147 More...by காம்கேர் கே.புவனேஸ்வரி
இன்றைய இணைய உலகில், மனிதனின் உள்ளங்கைக்குள் உலகம் சுருண்டு உட்கார்ந்துகொண்டுள்ளது. நினைத்த நேரத்தில், நினைத்த இடத்தில், உலகின் எந்த மூலையில் உள்ள நபர்களையும் பார்க்க முடியும். உட்கார்ந்த இடத்தில் இருந்தே ஊறுகாய் முதல் உயிருள்ள ஓவியம் வரை அனைத்தையும் விற்பனை செய்யக்கூடிய காலம் இது. வீட்டிலேயே இருந்துகொண்டு நாம் விரும்பும் எதையும் வீட்டுக்கே தேடி வரவைத்துக் கொண்டிருக்கிறோம். எல்லாம் இணையமயமானதால் இவையெல்லாம் சாத்தியமாகின்றன. அதேபோல் சமூக வலைதளங்களால் இன்று அரிய பெரிய மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அந்த சமூக வலைதளங்கள் மூலம் நம் திறமையை மூலதனமாக்கி வியாபாரத்தைப் பெருக்க, வாய்ப்புகள் வாசல் திறந்து வைத்து காத்திருக்கின்றன. நீங்கள் எவ்வாறு அந்த சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி முன்னேறலாம் என்று வழிகாட்டுகிறார் நூலாசிரியர் காம்கேர் கே.புவனேஸ்வரி. இணையம் வழியே வேலை செய்து கொடுத்துவிட்டு அதற்கான பலன் கிடைக்காமல் ஏமாந்து போவோர் அனேகர். அவ்வாறெல்லாம் ஏமாறாமல் நம் தொழிலை, நம்மிடம் உள்ள திறமையைக் கொண்டு சமூக வலைதளங்களால் வளமான முன்னேற்றம் பெற, இந்த நூல் பல நுட்பங்களைச் சொல்லிக்கொடுக்கிறது. இமெயில், கூகுள்+, வெப்சைட், பிளாக், யு-டியூப், ஃபேஸ்புக், டிவிட்டர், லிங்க்குடுஇன், சவுண்ட் கிளவுட், இன்ஸ்டாகிராம், ஸ்கைப், பின் - என அனைத்து சமூக வலைதளங்களும் உங்கள் தொழில் திறனை உலகுக்குக் காட்ட காத்துக்கிடக்கின்றன. பக்கங்களைப் புரட்டுங்கள். உங்களுக்கு வளமான வாழ்வு காத்திருக்கிறது!
RS. 151 More...by சுஜாதா
‘எண் சாண் உடம்புக்குச் சிரசே பிரதானம்’ என்ற பழமொழி, தலைக்குள் இருக்கும் மூளையைத்தான் குறிப்பிடுகிறது. மனித மூளை அதிசயமானது. அதன் செயல்பாடுகள் வியப்பானவை, புதிரானவை. மருத்துவ மேதைகளும் விஞ்ஞானிகளும் இன்னமும் தொடர்ந்து ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். நமது உடலை அடக்கியும் கட்டளைகள் பிறப்பித்தும் இயங்கும் மூளையைத் தலைமைச் செயலகமாகவே குறிப்பிடலாம். சுஜாதா _ ஊழலற்ற இந்தத் தலைமைச் செயலகத்தின் சுறுசுறுப்பான பணியை எளிய நடையில் புரியவைத்தார். மிகவும் நுணுக்கமான விஷயங்களைக்கூட வாசகர்கள் எளிதில் புரிந்து கொள்ளுமாறு எழுதிய சுஜாதாவின் தலைமைச் செயலகத்தை எத்தனை பாராட்டினாலும் தகும்! இந்தப் புத்தகத்தைப் படிக்கும் வாசகர்களும் இதை ஒப்புக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
RS. 160 More...