Cart is Empty
by காம்கேர் கே.புவனேஸ்வரி
கம்ப்யூட்டர் ரெசிப்பி என்ற கான்செப்டில் உருவாகியுள்ள மைக்ரோசாஃப்ட் பவர்பாயின்ட் 2013 புத்தகம், லேட்டஸ்ட் வர்ஷனான மைக்ரோசாஃப்ட் ஆபீஸ் 2013&ல் வேலை செய்யக்கூடிய பிரசன்டேஷன் சாஃப்ட்வேர். மீட்டிங்கில் பேசும் ஒருவர், தான் வெளிப்படுத்த வேண்டிய விஷயங்களை மற்றவர்களுக்கு எளிதாக விளக்கும் பொருட்டு எழுத்துகளுடன் ஆடியோ மற்றும் வீடியோவையும் சேர்த்து சமர்ப்பிப்பதே பவர்பாயின்ட் பிரசன்டேஷன். இதை புரொஜக்டர் மூலம் பெரிதுபடுத்தித் திரையில் காண்பிப்பதால் அந்த பிரசன்டேஷனைப் பார்ப்பவர்களுக்கு எளிதாகப் புரியும்; அவர்களுக்குப் பயனுள்ள வகையிலும் அமையும். பவர்பாயின்ட் ஸ்லைடுகளில் கேம்ஸ்கள், அனிமேஷன்கள், போஸ்டர்கள் போன்றவற்றை சுலபமாகவும், விரைவாகவும் தயாரிக்க முடியும் என்று விரிவாக எடுத்துக் கூறியிருக்கிறார் நூலாசிரியர் காம்கேர் கே.புவனேஸ்வரி. தானாக இயங்குகிற (ஷிமீறீயீ ஸிuஸீஸீவீஸீரீ றிக்ஷீமீsமீஸீtணீtவீஷீஸீ) பவர்பாயின்ட் பிரசன்டேஷன் ஃபைலை வடிவமைப்பதைப் பற்றியும் பிரசன்டேஷன் ஃபைலை வீடியோ ஃபைலாக மாற்றும் முறை பற்றிக் கூறியிருப்பதும் கூடுதல் சிறப்பம்சம். இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்தவுடன் பவர்பாயின்ட்டில் நீங்களும் ஒரு எக்ஸ்பர்ட் ஆவீர்கள் என்பது திண்ணம்.
RS. 186 More...by காம்கேர் கே.புவனேஸ்வரி
கம்ப்யூட்டர், இன்டர்நெட், மொபைல் - இந்த மூன்று தொழில்நுட்பங்களே இன்றைய உலகை இயக்கிக்கொண்டிருக்கின்றன. உண்ணும் உணவு, உடுக்கும் உடை, கல்வி, வங்கி, நூலகம், தியேட்டர் என எல்லாமே, ஒரு மவுஸ் கிளிக்கில் நாம் இருக்கும் இடத்துக்கு வேகமாக வந்து சேரும் காலத்தில் வாழ்கிறோம். உலகளாவிய தகவல் பரிமாற்றத்துக்கும் கருத்துகளின் ஒருங்கிணைப்புக்கும், பேருதவி செய்துகொண்டிருக்கும் ஒரே தளம் இணையம். ‘சைபர் வேர்ல்ட்’ என்று சொல்லக்கூடிய கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் சார்ந்த உலகத்தில் பாதுகாப்பாகப் பயணிக்கும் சூட்சுமத்தைக் கற்றுக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். தொழில்நுட்பத் தளத்தில் உலவ நினைக்கும் அத்தனை வலைதளங்களுக்கும் இன்டர்நெட்டில் பல அற்புதமான வசதிகள், சாமானியனையும் வெற்றிகரமாகப் பயணிக்கச் செய்ய உதவுகின்றன. உட்கார்ந்த இடத்தில் இருந்தே உலகம் முழுவதும் தான் செய்யும் தொழிலை விளம்பரப்படுத்தி, லாபம் அதிகரிக்கச் செய்யவும் தொழிலை விரிவுபடுத்தவும் பல உபயோகமான தகவல்களைச் சொல்வது இந்த நூலின் சிறப்பம்சமாகும். கம்ப்யூட்டர், இன்டர்நெட், மொபைல் - இன்றைய காலக்கட்டத்துக்கு எவ்விதங்களில் உதவுகின்றன? தெரிந்த சாஃப்ட்வேர்கள் மற்றும் வலைதளங்களில் தெரியாத ஆப்ஷன்களால் தொழில்நுட்பத்துக்கு என்ன பயன்? - இதுபோன்ற கேள்விகளுக்கும் ஆபரேட்டிங் சிஸ்டத்தில் நாம் தினமும் பயன்படுத்தும் ஃபைல்களைக் கையாள்வதில் ஏற்படும் சந்தேகங்களுக்கும், விடையளிக்கிறது இந்த நூல். லேப்டாப்பில் உள்ளதை டி.வி-யில் பார்ப்பது எப்படி? நம் கம்ப்யூட்டரை தடுமாறச் செய்வது என்ன? நாம் இறந்த பிறகு நம் ஃபேஸ்புக் அக்கவுன்ட் என்னவாகும்? திறமையைச் சம்பாத்தியமாக்க உதவும் சமூக வலைதளங்கள் என்னென்ன? பிசினஸுக்கு யுடியூபைப் பயன்படுத்துவதன் உத்திகள் எவை... இதுபோன்ற பல நுட்பமான தகவல்களை விரிவாக, விளக்கப் படங்களுடன் விவரிக்கிறார் நூலாசிரியர் காம்கேர் கே.புவனேஸ்வரி. இதுபோன்று இன்னும் பல தகவல்களால், உங்கள் சந்தேகங்களை நீக்கி இணையத்தில் இணைந்து தெரியாததைத் தெரிந்து வெற்றியடைய வழிகாட்டுகிறது இந்த நூல்.
RS. 220 More...by முனைவர் இல.சுந்தரம்
கணினியைத் தவிர்த்து இன்றைய உலகத்தை கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது. நம் அன்றாட வாழ்க்கையில் அனைத்துச் ெசயல்பாடுகளும் கணினி இன்றி நடைபெறாது என்ற நிலை உருவாகிவிட்டது. உலகத்தை ஒவ்வொருவர் உள்ளங் கையிலும் கொண்டுவந்து கொடுத்துவிட்டது கணினியுகம். மனிதர்களின் அதிதேவையாக மாறிவிட்ட கணினியில் தமிழ் நுழைந்துவிட்டது நம் மொழியின் பெருமை. ஆனால் தமிழில் தட்டச்சு செய்வதால் மட்டும் கணினியின் அனைத்து செயல்களிலும் தமிழ் கலந்துவிட்டது என்றாகிவிடாது. அந்தக் குறையைப் போக்க வந்ததே இந்நூல். கணினியின் அடிப்படை முதற்கொண்டு அனைத்து நிலைகளிலும் தமிழைக் கையாளுவதற்கு வழிசொல்லும் நூல் இது. நாம் கணினிப் பயன்பாடு சொற்களில் சில சொற்களுக்கு மட்டுமே தமிழ் சொல் அறிந்து வைத்திருக்கிறோம். ஆனால் இந்த நூலில் கணினியின் அனைத்து தொழில்நுட்ப சொற்களுக்கும் தமிழ் சொல் கொடுக்கப்பட்டிருக்கிறது. 'தாய்ப்பலகை - Motherboard, நேரடி அணுகல் நினைவகம் - RAM, வன்தட்டு நிலைவட்டு - Hard Disk' என அனைத்துக்கும் இதில் தமிழில் கொடுக்கப்பட்டுள்ளது சிறப்பம்சம். அனைத்துத் தரப்பினரும் கணினி செயல்பாடுகளை எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் விரிவாகக் கொடுத்துள்ளார் நூலாசிரியர் முனைவர் இல.சுந்தரம். வன்பொருள், மென்பொருள் தொழில்நுட்பம் பற்றி அறிமுக நிலையில் தெரிந்துகொள்ளவும், இணையத்தின் அடிப்படையையும் அதில் தமிழை எவற்றிலெல்லாம் பயன்படுத்தலாம் என்பதையும் விளக்கிக் கூறுகிறது நூல். மொத்தத்தில் எல்லாத் தரப்பினருக்கும் குறிப்பாக தமிழ்மொழியியல் ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், கணினியிலும் இணையத்திலும் தமிழைக் கையாள விரும்பும் அனைவருக்கும் ஆகச் சிறந்த நூலாகத் திகழும் என்பதில் மாற்று இல்லை.
RS. 161 More...by சுஜாதா
‘எண் சாண் உடம்புக்குச் சிரசே பிரதானம்’ என்ற பழமொழி, தலைக்குள் இருக்கும் மூளையைத்தான் குறிப்பிடுகிறது. மனித மூளை அதிசயமானது. அதன் செயல்பாடுகள் வியப்பானவை, புதிரானவை. மருத்துவ மேதைகளும் விஞ்ஞானிகளும் இன்னமும் தொடர்ந்து ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். நமது உடலை அடக்கியும் கட்டளைகள் பிறப்பித்தும் இயங்கும் மூளையைத் தலைமைச் செயலகமாகவே குறிப்பிடலாம். சுஜாதா _ ஊழலற்ற இந்தத் தலைமைச் செயலகத்தின் சுறுசுறுப்பான பணியை எளிய நடையில் புரியவைத்தார். மிகவும் நுணுக்கமான விஷயங்களைக்கூட வாசகர்கள் எளிதில் புரிந்து கொள்ளுமாறு எழுதிய சுஜாதாவின் தலைமைச் செயலகத்தை எத்தனை பாராட்டினாலும் தகும்! இந்தப் புத்தகத்தைப் படிக்கும் வாசகர்களும் இதை ஒப்புக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
RS. 160 More...by மதன்
ஆனந்த விகடனில், மாலியில் தொடங்கி ராஜு, கோபுலு என்று வழிவழியாக வந்த ஒளிமயமான நகைச்சுவை ஓவியர் மற்றும் கார்ட்டூனிஸ்ட்களில் மதன் முக்கியமான அங்கம். பொதுவாக கார்ட்டூனிஸ்ட்கள் நேரில் பழகும்போது ரொம்பவே சீரியஸான மூடில்தான் இருப்பார்கள் என்ற ஒரு எண்ணம் உண்டு. மதன் அதற்கு முற்றிலும் விதிவிலக்கு. தான் இருக்கும் சூழலையே ஒட்டுமொத்தமாக நகைச்சுவை வெள்ளத்தில் தோய்த்தெடுக்கிற குணாதிசயம் இயற்கையிலேயே வாய்க்கப் பெற்றவர் மதன். ஆனந்த விகடன் வெளியீடுகளின் இணையாசிரியராக அவர் பொறுப்பு??வகித்தபோது,??அவரிடமிருந்து??வெளிப்பட்ட பன்முகத் திறமைகள் என்னை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வியப்புக்குள்ளாக்கும். அப்படித்தான் வந்தார்கள்... வென்றார்கள் மூலம் தேர்ந்த சரித்திர ஆசிரியராகவும் தன்னை வெளிப்படுத்தி என் வியப்பைக் கூட்டினார் மதன். ஜூ.வி|யில் எழுதிய அந்தத் தொடரின் மூலம், கடந்த காலத்தின் பரிமாணத்தை சுவைபட படம் பிடித்துக் காட்டும் தேர்ந்த எழுத்தாளராக தன்னை வெளிப்படுத்திக் கொண்ட அவர், மனிதனின் மூளைக்குள் மனவியல் ரீதியாக புகுந்து பார்த்து எழுதிய இன்னொரு தொடர்தான் மனிதனுக்குள்ளே ஒரு மிருகம்! மிகநுட்பமாக திரட்டிய தகவல்களைத்
RS. 200 More...by காம்கேர் கே.புவனேஸ்வரி
பத்து கைகள் இருந்தாலும் சாத்தியப்படாத வேலைகளை, நிமிடங்களில் முடித்துத் தரக்கூடிய கம்ப்யூட்டர் இன்றைய அவசர யுகத்தில் ஒரு வரப்பிரசாதம். ரயில் டிக்கெட், பஸ் டிக்கெட், சினிமா டிக்கெட்டில் ஆரம்பித்து, இன்று நமது அன்றாடத் தேவைகள் பலவற்றைக் கண் மூடித் திறக்கும் நேரத்தில் கச்சிதமாகச் செய்து முடித்துக் கொடுக்கும் ஆற்றல் கம்ப்யூட்டருக்கு உண்டு. சட்டைப் பையிலேயே ‘பாக்கெட் அளவு கம்ப்யூட்டர்’ வைத்திருக்கும் காலம் இது. சூரியனைப் பற்றியும் சூரியனுக்குக் கீழுள்ள அத்தனை விஷயங்கள் பற்றியும் படிக்க, படங்களாகப் பார்க்க, படித்ததையும் பார்த்ததையும் சேமித்து வைக்க, புதிய டிஸைன்களை உருவாக்க, கடிதங்கள் எழுத, வர்த்தக தொடர்பு கொள்ள... இப்படி நம் வாழ்க்கைக்குக் கூடுதலான வசதிப் பெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள அடிப்படை கம்ப்யூட்டர் அறிவு என்பது அத்தியாவசியத் தேவை. இந்த அவசியம் கருதித்தான் கம்ப்யூட்டர் பற்றி 'ஏ டூ இஸட்' விஷயங்களை விளக்கி, மிகவும் எளிமையாக இந்த நூலில் கொடுத்திருக்கிறார் காம்கேர் கே.புவனேஸ்வரி. கம்ப்யூட்டரின் ஒவ்வொரு பாகத்தையும் விளக்கிச் சொல்லியிருப்பது மட்டுமல்லாமல், அதன் பயன்பாடுகள் பற்றியும் இந
RS. 91 More...by காம்கேர் கே.புவனேஸ்வரி
இன்றைய அதிவேகமான வாழ்க்கைக்கு அழகு சேர்த்து வருகிறது நவீன கணினி தொழில்நுட்பம். செல்போன்களைப் போல, ‘இன்டர்நெட்’ என்பதும் மனித வாழ்க்கையின் ஓர் அங்கமாக மாறிவிட்டது. கணினி பற்றிய அடிப்படையே தெரியாதவர்கள்கூட, இன்டர்நெட் மூலம் கட்டுக்கட்டாக வருமானம் பார்க்கும் காலம் இது. ராணுவம் முதல் விவசாயம் வரை பயன்படக்கூடிய தொழில்நுட்ப வசதிகளை சில நொடிகளிலேயே பெற்றுக் கொள்ளவும், பொது அறிவு விஷயங்களைப் படித்துத் தெரிந்துகொள்ளவும், விரும்பும் நபரிடம் தொடர்புகொண்டு உருவத்தைப் பார்க்கவும் உரையாடவும் பயன்படும் இந்த இன்டர்நெட், விஞ்ஞான வளர்ச்சியின் தலைசிறந்த தொழில்நுட்பமாக உயர்ந்து நிற்கிறது. நமக்கு வேண்டிய ஆவணங்களை உடனுக்குடன் பார்த்து டவுன்லோடு செய்துகொள்ளவும், நமக்குத் தெரிந்த தகவல்களை ஒரே நேரத்தில் உலகம் முழுவதும் தங்கு தடையின்றி அனுப்புவதற்கும் இன்டர்நெட் முக்கிய பங்கு வகிக்கிறது. சாதாரண பொருள் பட்டுவாடாவில் தொடங்கி, கோடிகளை எளிதாகப் புரட்டும் வங்கிகள் வரை இன்டர்நெட்டைப் பயன்படுத்துவது சர்வசாதாரண விஷயமாகிவிட்டது. இன்டர்நெட் பற்றிய அடிப்படையையும், அதன் தொழில்நுட்பத் தகவல்களையும், விரல் நுனியில் வைத்த
RS. 147 More...by காம்கேர் கே.புவனேஸ்வரி
கம்ப்யூட்டர் ரெசிப்பி என்ற கான்செப்டில் உருவாகியுள்ள மைக்ரோசாஃப்ட் வேர்ட் 2013 புத்தகம், லேட்டஸ்ட் வர்ஷனான மைக்ரோசாஃப்ட் ஆபீஸ் 2013-ல் வேலை செய்யக்கூடிய சாஃப்ட்வேர். மைக்ரோசாஃப்ட் வேர்ட் என்பது முக்கியமாக வேர்ட் பிராசசிங் வேலைகள் செய்வதற்கு மட்டும்தான் என்று எல்லோரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதைத் தவிர பல வேலைகளைச் சுலபமாக மேற்கொள்ள முடியும் என்று விரிவாக விவரித்துள்ளார் நூல் ஆசிரியர் காம்கேர் கே.புவனேஸ்வரி. ஒரே கடிதத்தை பல பேருக்கு அனுப்ப நினைப்பவர்கள் வேர்டையும் எக்ஸலையும் இணைக்கும் ‘மெயில் மெர்ஜ்’ என்ற ஆப்ஷன்; தகவல்களை முறைப்படுத்த உதவும் ‘டேபிள்’; பல வேலைகளை ஒருங்கிணைத்து ஒரே க்ளிக்கில் சீக்கிரம் வேலையை முடிக்கும் ‘மேக்ரோ’; மல்டிமீடியாக்களுடன் இணைந்து செய்யும் வேலை போன்ற பல வசதிகளை உள்ளடக்கியது இந்த ‘வேர்ட்’. வேர்ட் டாக்குமென்ட் ஃபைலை கிளவுட் கம்ப்யூட்டிங்கில் சேமித்து வைத்துக்கொண்டால் எங்கு இன்டர்நெட் கனெக்ஷன் உள்ளதோ அங்கே அந்த ஃபைலை திறந்து பார்க்கும் வசதி; பிடிஎஃப் ஃபைல்களைத் திறந்து பார்க்கவும் மாற்றங்கள் செய்து சேமிக்கவும் முடியும் என்ற வசதி ஆகிய வேர்ட் 2013&ல் மட்டுமே உள்ள சிறப்பான வசதிகள் இதில் விவரிக்கப்பட்டிருக்கின்றன. இந்த நூலில் உள்ள விஷயங்களை ஒவ்வொன்றாகக் கற்றுக்கொண்டு அதை நீங்கள் கம்ப்யூட்டரில் சோதித்துப் பார்த்தால் ‘வேர்ட்’-ல் எக்ஸ்பர்ட் ஆகிவிடுவீர்கள் என்பதில் சந்தேகமில்லை.
RS. 165 More...by மொஹமத் சலீம்
ஏன் மாமரத்தில் மாங்காய்தான் காய்க்க வேண்டுமா? ஆப்பிள் காய்க்கக் கூடாதா? கோழி ஏன் குட்டி போடுவது இல்லை, ஒட்டகம் ஏன் முட்டை போடுவதில்லை? இவை யெல்லாம் முட்டாள்தனமான கேள்வியாக இருக்கலாம். ஆனால் இவையெல்லாம் மரபியலின் மகத்தான மர்மங்கள். மரபியலைப் பற்றிய ஞானம் வெகு காலத்துக்கு முன்பிருந்தே முன்னோர்களால் கையாண்டிருப்பதும் உண்மையே. இதுதான் ‘மரபியல்’ என்று தெரியாமல். ஆதிகால மனிதன், தன் குழந்தை தன்போலவே இருப் பதைக் கண்டறியும்போது, நாகரிகம், கலாசாரம், பண்பாடு என வளர்ச்சியடையும்போது இதன் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டதன் பிறகே மரபியல் கண்டுபிடிப்பு உருவானது. முதன்முதலில் மரபியல் குறித்த கேள்வியை எழுப்பிய அறிஞர்கள் பலரது ஆராய்ச்சியில் மனிதன் உருவாவதில் ஆண் பெண் இருவரின் சமபங்கு இருக்கிறது. எப்படி ஆண் பெண் இனங்கள் உருவாகிறது? - எனத் தொடங்கிய கண்டுபிடிப்பு, விலங்கினங்கள், தாவர இனங்களிலும் மரபியல் சோதனை மேற்கொள்ளப்பட்டு ஆராய்ச்சியாக மாறி, பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டு ஜீன்களுக்குள் ஒளிந்திருக்கும் ஆச்சர்யமான தகவல்களை புலனாய்வு செய்து, நமக்குப் பொக்கிஷமாகக் கொடுத்திருக்கிறார் ஆசிரியர். சிக்கலான அறிவியல் அடிப்படைகளை எளிய மனிதர்களும் புரிந்துகொள்ளும்படி அமைத்திருப்பது இந்நூலின் சிறப்பம்சமாகும். நான் யார்? எப்படி உருவானேன்? எங்கு உருவாக்கப் பட்டேன்? என்கிற ஒரு மனிதன் யூகிக்க முடியாத ரகசியங்கள் ஜீன்களால்தான். மற்றும் டி.என்.ஏ, குரோமோசோம்களால் நிகழக்கூடிய மாற்றம், அவற்றின் விளைவு, அதன் நுணுக்கமான ஆய்வுகள் என்ன என்று விரிவாக விளக்கியிருப்பது இந்த நூலின் கூடுதல் சிறப்பாகும். மக்களிடையே மரபியல் தொடர்பான விழிப்புஉணர்வு ஏற்படும் நோக்கில், ஜூனியர் விகடனில் வெளியான தொடர் இப்போது நூல் வடிவில் வெளியிடப்படுகிறது.
RS. 112 More...by பரணிராஜன்
உலக அளவில் ஆட்டோமொபைல் என்பது மிகப் பெரிய துறை. இந்தத் துறை, நம் நாட்டில் கடந்த பத்து ஆண்டுகளாகத்தான் மிகப் பெரிய வளர்ச்சியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. ஒரு நாட்டில் குறிப்பிட்ட ஒரு துறை வளரவேண்டுமானால், அந்தத் துறையில் அறிவுசார் பங்களிப்பிலும் தொழில்நுட்பத்திலும் நிபுணத்துவம் பெற்றவர்கள் உருவாகிக்கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் அந்தத் துறையின் வளர்ச்சி முழுமையடையும். முன்பு, கார் என்றாலே ஒரு சில மாடல்களே இருந்தன. சுலபமாக நமக்குத் தேவையான ஒன்றைத் தேர்ந்தெடுத்துவிடவும் முடியும். ஆனால், இன்றைக்கு கார் வாங்கலாம் என்று நினைத்தால், எந்த காரை வாங்குவது என்ற குழப்பம் நிச்சயம் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுவது இயல்பு. வாடிக்கையாளர்கள் அந்தக் குழப்பம் இல்லாமல் தனக்கு ஏற்ற வாகனத்தைத் தேர்ந்தெடுக்க உதவும் விதத்தில், கடந்த 2007-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது `மோட்டார் விகடன்' மாத இதழ். புதுப்புதுப் பெயர்களில் அறிமுகமாகும் நவீனத் தொழில்நுட்பங்களின் செயல்பாடுகள் தொடங்கி, எதிர்காலத் தொழில்நுட்பங்கள் வரை இன்றைக்கு தமிழ் வாசகர்கள், வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்வதில் முன்னோடியாக விளங்கும் மோட்டார் விகடனில் வெளிவந்த தொடர்தான் `எந்திரன்'. காரில் என்னவெல்லாம் இருக்கின்றன; அது எப்படி வேலை செய்கிறது. ஒவ்வொரு பாகத்தின் செயல்பாடுகள் என்ன; எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்கிற விவரங்களை, நமக்கு எளிதாகப் புரியும் விதத்தில், உதாரணங்களோடு மிக அழகாக விளக்கியிருக்கிறார் இந்த நூலாசிரியர். ஆட்டோமொபைலின் அடிப்படையே, மெக்கானிக்கல் ஆற்றலில் செயல்படுவதுதான். ஆனால், மெக்கானிக்கலுடன் மிக எளிதாக இணைந்து கொண்டது எலெக்ட்ரானிக்ஸ். அதேசமயம், அடிப்படை என்பது எப்போதும் மாறாதது. அந்த அடிப்படை மெக்கானிஸித்தையும் எலெக்ட்ரானிக்ஸ் செயல்பாடுகளையும் தனது அனுபவத்தின் மூலம் இங்கே பதிவு செய்திருக்கிறார் பரணிராஜன். இந்தப் புத்தகம் ஆட்டோமொபைல் துறை சார்ந்த மாணவர்களுக்கு மட்டுமல்லாமல், ஆட்டோமொபைல் துறையில் ஆர்வம் இருக்கும் எல்லோருக்கும் மிகப் பயனுள்ள நூலாகவும் இருக்கும்.
RS. 105 More...