Cart is Empty
by இயகோகா சுப்பிரமணியம்
அரசாங்க வேலையை நோக்கி இளைஞர்கள் ஓடியது ஒரு காலம்; அந்தக் கதவுகள் திறக்கப்படாததால் தனியார் துறையை நோக்கிப் படையெடுக்கிறார்கள். ஆனால், எத்தனை சதவிகிதம் பேர் தொழில் முனைவோராக வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்? பரம்பரைத் தொழில் செய்பவர்கள் மற்றும் பரம்பரைப் பணக்காரர்கள் மட்டுமே தொழில் செய்து முன்னுக்கு வருகிறார்கள். படித்த இளைஞனுக்கு தொழில் முனைவோராக ஆவதற்கு குடும்பத்திலும் சமுதாயத்திலும் பல இடைஞ்சல்கள். இந்த வகை இளைஞர்களுக்குத் தேவை நல்ல வழிகாட்டுதலும் சரியான அறிவுரையும். இதைத் தெளிவாகவும் தனது அழகான மொழி நடையாலும் எடுத்துரைக்கிறார் நூல் ஆசிரியர் இயகோகா சுப்பிரமணியம். பிரபல தொழில் அதிபராக இருப்பதாலும், பழுத்த அனுபவசாலியாக இருப்பதாலும் வாழ்க்கையில் வெற்றி வெளிச்சத்தைக் காண விரும்பும் அனைவருக்கும் முன் உதாரணமாகத் திகழ்கிறார். தான் சந்தித்த மனிதர்கள், பிற நாட்டுக் கலாச்சாரம் மற்றும் பிரபல நிறுவனங்களின் வெற்றி ரகசியங்களையும் கூறி சுய முன்னேற்றத்துக்கான வழிவகைகளை அழகாக எடுத்துரைக்கிறார். சுயமுன்னேற்றம் மற்றும் தொழிலில் வெற்றி என்பது ‘ஒவ்வொரு நாட்டுக்கும் உள்ள கலாச்சாரம், அரசியல் அமைப்பு, தனி மனிதப் பண்பாட்டின் அடிப்படையில்தான் அமைகின்றன’ என்று ஆணித்தரமாக அடித்துரைக்கிறார். வெற்றி வெளிச்சத்தில் உலாவ நினைக்கும் அனைவருக்கும் இந்த நூல் பயன்படும்!
RS. 74 More...by டாக்டர் எஸ்.கார்த்திகேயன்
பணம் சம்பாதிக்க எல்லோருக்கும் ஆசை! சம்பாதிப்பதில் உள்ள -ஆபத்துக்குத்தான் பயப்படுகிறார்கள். ஆபத்துக்கும் ரிஸ்க்குக்கும் உள்ள வித்தியாசம் இந்தப் புத்தகத்தில் அருமையாக விளக்கப் பட்டிருக்கிறது. ரிஸ்க் என்பது என்ன என்று தெரியாமலேயே ஒரு விஷயத்தில் புகுந்தால் அது ‘ரிஸ்க்’ அல்ல; ஆபத்து. இதைத் தமிழில் அருமையாக ‘ஆழம் தெரியாமல் காலை விடுவது ஆபத்து’ என்று சொல்லி இருக்கிறார்கள். இந்தப் புத்தகத்தில் ‘ரிஸ்க்’குக்கு ஓர் அருமையான விளக்கம் இருக்கிறது. ரிஸ்க் என்பதை நம்மில் பலர் ஆபத்து என்றே தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறோம். துருவ, வெள்ளைக் கரடிகள் பனிப் பாளத்தின் மேலே பக்குவமாக நடந்து செல்லும். திடீரென்று தயங்கி வளைந்து செல்லும். அங்கே செல்பவர்கள் அது எங்கெங்கே காலை வைக்குமோ அந்தத் தடத்திலேயே காலை வைத்துச் செல்வார்கள். அந்த இடத்தில் எல்லாம் கரடியின் எடையைப் பனிப் பாளம் தாங்கும். மற்ற இடத்தில் காலை வைத்தால் ஒல்லியான மனிதனுடையை எடையைக்கூட பாளம் தாங்காமல் நொறுங்கிவிடும். வாழ்க்கையில் ஒரேயடியாக ரிஸ்க் எடுக்காமலிருந்தாலும் முன்னேற முடியாது. கண் மண் தெரியாமல் ஆபத்தை விலை கொடுத்தும் வாங்கக் கூடாது. அன்றாட வாழ்க்கையிலேயே நாம் குறைந்த பட்ச ரிஸ்கை எடுத்துக்கொண்டுதான் இருக்கிறோம். இயற்கையே குறைந்தபட்ச ரிஸ்குக்கு நம்மை தண்டிப்பதில்லை. ரிஸ்க் எடுக்காமல் இருந்தாலும், அதிக பட்ச ரிஸ்க் எடுத்தாலும் தண்டிக்கிறது. ரிஸ்கைப் பற்றித் தெரிந்துகொண்டாலே நம் மன நிலை முன்னேற்றத்துக்குப் பாதி தயாராகிவிடும். இந்த சூட்சுமம் இந்தப் புத்தகத்தில் விளக்கப்பட்டிருக்கிறது. ‘மிதமிஞ்சிய ரிஸ்க் எடுக்காமல் அளவான ரிஸ்க் எடுத்து பணத்தை அள்ளுவது எப்படி? அளவான ரிஸ்க் எடுத்தால் நிச்சயம் பணம் எப்படி வருகிறது? ரிஸ்கை எப்படி அளப்பது? பணம் சம்பாதிப்பதற்கான மன நிலை எப்படித் தானாகவே அமைகிறது? சில சமயங்களில் அதற்கேற்ற மன நிலையை எப்படி வளர்த்துக்கொள்வது?’ ஆகிய பணம் சம்பாதிப்பதற்கான பல முக்கிய விஷயங்களை அக்கறையுடன் விவரித்துள்ளார் நூல் ஆசிரியர். இனி பணம் உங்கள் கையில் அடங்கியிருக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை!
RS. 112 More...by டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம்
இது ஒரு கலாம் காலம். காரணம் சரித்திரத்தில் இடம்பிடித்த ஏவுகணை நாயகராம் மறைந்த திரு. ஆ.ப.ஜெ. அப்துல்கலாம் அவர்களின் எண்ணமும் எழுத்தும், எழுச்சிமிக்க கவிதை வரிகளும் இளைய சமுதாயத்தினருக்கு உந்து சக்தியாக இருக்கிறது. சமூகப் பொருளாதார வேறுபாட்டை மீறி தரமான கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதில் மிகுந்த முனைப்பு காட்டியவர் கலாம். தோல்வியைத் தோல்வியடையச் செய்வதே கலாம் அவர்கள் வலியுறுத்தும் முக்கிய குறிக்கோள். இந்தக் குறிக்கோள் சிறுவர் முதல் பெரியோர் வரை அனைத்துத் தரப்பினர் வாழ்விலும் ஓர் ஊன்றுகோலாக மாறும் என்பது உறுதி. ‘மாணவர்கள் தங்கள் சிறு வயதிலிருந்தே புத்தகம் வாங்கிப் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்; மனித வாழ்வை செம்மைப்படுத்தும் இனிய நண்பனாக புத்தகம் விளங்கும்' என்று புத்தகத்தின் இன்றியமையாமையை விளக்கி, அநேக புத்தக நண்பர்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தினார் கலாம். வீடுகள்தோறும் நூலகம் அமைத்து தினமும் வாசித்து செம்மைபெற்று, லட்சியத்தை அடைய வேண்டும் என்கிற கலாமின் கருத்துக்கள் இந்த நூலில் விதைக்கப்பட்டிருக்கிறது. 'என்ன இல்லை நம்மிடம்... என்னால் முடியும்' என்ற நம்பிக்கைதான் நம்மிடம் இல்லை. ஆனால், இந்த நூலை நுகரும் உங்களது ஒவ்வொருவர் இதயத்திலும் இனி அந்த நம்பிக்கை நிச்சயம் பூக்கும். டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் தமிழகத்தின் பல்வேறு பள்ளி மாணவர்களிடையே ஆற்றிய எழுச்சி உரைகளின் தொகுப்புதான் இந்த நூல். தண்ணீரை உள்வாங்கும் விதை, வேர்விட்டு செழித்து விருட்சமாவது போல் கலாமின் வழிகாட்டுதல்களை உள்வாங்கும் உங்களது மனம் நிச்சயம் செழித்து மேலோங்கும்.
RS. 105 More...by டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம்
‘ஓர் இனிமையான, வளமான, பாதுகாப்பு மிகுந்த, அமைதியான, சுகாதார வளமிக்க, வளர்ச்சிப் பாதையை நோக்கி பீடுநடை போடக்கூடிய நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும். இந்த மாற்றம் இளைஞர்களால் மட்டுமே முடியும்' என்பது கலாமின் கனவு. இந்த நூலில் பதிவு செய்யப்பட்ட கலாமின் வரிகள் அளிக்கும் ஆக்கமும் ஊக்கமும் இளைய சமுதாயத்தின் இதயத்தில் நிலைத்திருக்குமேயானால், அந்தக் கனவு நனவாகும் காலம் வெகு தொலைவில் இல்லை. இன்று கொம்புத் தேனாய் காட்சி தரும் தங்கள் வளமிக்க எதிர்காலத்தை, எதிர்கொள்ளத் தயங்கும் இளைஞர்களைக் கண்டு, இனி பயப்படத் தேவையில்லை என்றும் அதை படிக்கற்களாக எண்ணி லட்சிய சிகரத்தை அடையலாம் என்று சொல்லி உற்சாகப்படுத்துகிறார். இந்தியாவின் எதிர்காலத் தூண்களாக விளங்கப்போகிற இளைஞர்களின் வாழ்வு ஒளிர, அவர்களின் முன்னேற்றப் பாதை நிமிர, கலாமின் கவிதை வரிகளையும் இனிய சொற்பொழிவுகளையும், சான்று காட்டிய நீதி நூல் வரிகளையும் உள்ளடக்கிய இந்த நூல், இளைஞர்களுக்கு வழிகாட்டியாக அமையும். புத்தகம் ஒவ்வொரு மனித வாழ்வையும் செம்மைப்படுத்தி, இனிய நண்பனாக விளங்கும் என்பதால், புத்தகங்களைச் சேகரித்து வீட்டு நூலகம் அமைக்க வலியுறுத்திக் கூறிய அப்துல் கலாம் அவர்கள், தமிழகத்தின் பல்வேறு கல்லூரி மாணவர்களிடையே ஆற்றிய எழுச்சி உரைகளின் தொகுப்புதான் இந்த நூல். தான் கற்ற கல்வியை சரியான முறையில் வாழ்வின் நடைமுறையில் செயல்படுத்துகிறவர்களால் மட்டுமே லட்சியத்தை அடைய முடியும். இந்த நூல் அதற்கு ஒரு நல்ல நண்பனாக விளங்கும்.
RS. 112 More...by தரணீதரன்
வாழ்க்கையில் திட்டமிடல் என்பது மிக மிக முக்கியம். ஒரு செயலை செய்யத் தொடங்குமுன் அதைப்பற்றிய திட்டமிடல் இருந்தால்தான் அந்தச் செயல் முழுமையடையும். ஆனால், இன்றைய இளைஞர்கள் எதிர்கால லட்சியமோ, வாழ்க்கை குறித்த திட்டமிடலோ இல்லாமல் சமூகவலைதளங்களிலும் செல்போனிலும் தங்கள் நேரத்தை விரயமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இன்றைய நவீன தொழில்நுட்பத்தையும் சமூக வலைதளங்களையும் பொழுதுபோக்குக்காக அல்லாமல் நம் திறமையை, எழுத்தை, புதிய கருத்தை அவற்றில் வெளிப்படுத்தினால் அதன்மூலம் புது உற்சாகமும் புதிய புதிய தொடர்புகளும் கிடைக்கும். எனவே, எந்தவிதமான இலக்கை நீங்கள் நிர்ணயித்தாலும் அதில் வெற்றிபெற சுயமதிப்பீடும், சிறந்த பழக்கவழக்கமும் தன்னம்பிக்கையும் இருந்தால் வெற்றிபெறலாம். அதற்கு இந்த நூல், 21 நாள் திட்டத்தைத் தந்து வழிகாட்டுகிறது. அதிகாலை எழுதல், சுயவிவரக் குறிப்பு எழுதுதல், ஒரு செயலை எப்போது செய்யக்கூடாது, எப்போது செய்ய வேண்டும் என்ற நேர நிர்வாகத்தின் முக்கியத்துவத்தும் போன்ற எளிய வழிகளைச் சொல்லி, நாம் நினைத்த எதையும் சாதிக்கலாம் என்று தெம்பூட்டுகிறது இந்த நூல். 21 நாள் அதிசயம் சொல்லும் வழிமுறைகளைக் கடைப்பிடியுங்கள், வெற்றி உங்களத் தேடி வரும்.
RS. 150 More...by வழக்கறிஞர் த.இராமலிங்கம்
நம்பிக்கை வார்த்தைகள், சோர்வுறும் மனதுக்கு தீர்வு சொல்லும் அறநெறிகள், ஏக்கம் கொள்ளும் உள்ளத்துக்கு ஊக்கம் தரும் உரைகள் என நம் முன்னோர் நமக்காக விட்டுச் சென்றுள்ளவை ஏராளம் உள்ளன ஏடுகளாக! ஒட்டுமொத்த மனித குலத்துக்கே மறை சொன்ன திருக்குறள், வாழ்வுக்குத் தேவையான அத்தனைக் கோட்பாடுகளையும் சொல்லும் ஆத்திசூடி... என நம் தமிழ்ச் சங்கக் கருவூலத்தில் ஏராளமான கருத்துகள் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றை நாம் கடைப்பிடித்து வாழ்ந்தாலே நம் வாழ்வு மேம்படும், சிந்தனை சீர்படும். நம்மை சோர்வுறச் செய்யாமல் நம்பிக்கையூட்டி நல்வழிப்படுத்தி அழைத்துச் செல்லும் அறக் கருத்துகள் கொண்ட சங்க இலக்கியப் பாடல்களை எடுத்துக்காட்டி இன்றைய இளைஞர்களுக்குத் தேவையான பொறுமை, நேர்மை, தன்னம்பிக்கை ஆகியவற்றை எடுத்துக் கூறுகிறது இந்த நூல்! ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று கூறி, ஒற்றை வரியில் உலகத்தின் ஒட்டுமொத்த மனித குலத்தையும் ஒரே உறவாக இணைத்த நம் சங்கத் தமிழ்ச் சிந்தனைகள் நமக்கு என்றென்றும் வழிகாட்டிகளாக இருக்கின்றன. அறக் கருத்துகளை அள்ளித் தரும் இந்த நூல் இளைய சமுதாயத்துக்கு இன்றியமையாதது!
RS. 170 More...by எஸ்.கே.முருகன்
‘பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை' என்று எழுதிவைத்துள்ளார் வள்ளுவர். அந்தப் பொருள் நம் வாழ்வில் கிடைக்க நமக்கு முதல் முக்கியத் தேவை பணம்தான். நாளுக்கு நாள் அனைத்துத் துறைகளில் மாற்றம் கண்டு வரும் இவ்வுலகில் நிம்மதியான இல்லற வாழ்வுக்கு அடிப்படையாக இருப்பது பணமே. நாடுகளுக்கு நாடு பணத்தின் பெயர் மாறலாம், ஆனால் அதன் பயன்பாடு உலகத்தாருக்கு எல்லாம் ஒன்றே. அப்படிப்பட்ட பணத்தைச் சம்பாதிக்க எத்தனையோ வழிகள் இருந்தாலும் அற வழியில் வரும் வருமானமே வாழ்வுக்கு உண்மையான வளம் சேர்க்கும். சிலர் சீக்கிரமே பணக்காரராகிவிட வேண்டும் என்று தவறான வழியில் பணம் சேர்க்க நினைக்கும் இக்காலத்தில், நேர் வழியில் வரும் பணமே நிரந்தரம் என்பதைச் சொல்கிறது இந்து நூல். சம்பளத்துக்கு வேலை செய்யும் சாதாரண தொழிலாளராக இருந்து இந்தியாவின் முன்னணி தொழிலபதிராக உயர்ந்த திருபாய் அம்பானி முதல், ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்திருந்தாலும் இன்றும் சளைக்காமல் பணியாற்றிக் கொண்டிருக்கும் இசைஞானி இளையராஜா வரை பல்வேறு துறைகளில் தன் கடும் உழைப்பாலும் அறிவுத் திறனாலும் உயர்ந்து அதன்மூலம் கோடீஸ்வரர்களாக ஆனவர்களின் வாழ்வை எடுத்துக்காட்டி அவர்களின் ஊக்க நல்லுரைகளையும் தந்திருக்கிறார் நூலாசிரியர். மனம் நினைத்தால் பணம் வரும் வழி கிடைக்கும் என்பதை எடுத்துக்கூறும் இந்த நூல், நீங்களும் கோடீஸ்வரராக நிச்சயம் உதவும்.
RS. 125 More...by சுவாமி சுகபோதானந்தா
அமைதியான மனதை நம்மைச் சுற்றி நிகழும், நிகழ்த்தப்படும் புறக்காரணங்கள் சலனப்படுத்தி விடுகின்றன. நடந்ததையே நினைத்து அல்லலுறுவது, ஆசை, கோபம், எதிர்காலத்தை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் இவைகளால் மனம் அமைதியாக ஓர் இடத்தில் நிற்காமல் அலைபாய்ந்துகொண்டே இருக்கிறது இன்றைய காலகட்டத்தினருக்கு! மனதை சரியான பக்குவத்தில் வைத்திருந்தால், நம்மால் எதையும் எதிர்கொள்ள முடியும், எதையும் சாதிக்க முடியும். மனதுக்கு அப்படியோர் ஆற்றல் உண்டு. பணம், பல வசதிகள் எல்லாம் இருந்தும் பலர் நிம்மதியில்லாமல் வாழ்வதற்குக் காரணம் மன அமைதியின்மையே. ஒன்று கிடைத்தால் அதை விட சிறந்த ஒன்று கிடைக்காதா என ஆசைப்படும் மனதால் எப்படி நிம்மதியாய் இருக்க முடியும்? அதனால் இன்றைய அவசர உலகில் பல்வேறு காரணங்களால் மன அழுத்தத்தால் நிம்மதியை இழக்கின்றர் பலர். மனதைச் சரிப்படுத்தினால் எல்லாம் சரியாக நடக்கும் என்பதை சுவாமி சுகபோதானந்தா இந்த நூலில் பல உதாரணக் கதைகள் மூலம் விளக்குகிறார். மனசே, ரிலாக்ஸ் ப்ளீஸ்-1 மற்றும் 2-ம் பாகங்களை அடுத்து ஆனந்த விகடனில் வெளியான மனசே, ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G தொடர் கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. விகடன் பிரசுரம் வெளியிட்ட சுவாமி சுகபோதானந்தாவின் நூல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. அந்த வரிசையில் இந்த நூலும் இடம்பெறும் என்பதில் மறுப்பில்லை.
RS. 250 More...