Cart is Empty
by டாக்டர் டி.நாராயண ரெட்டி
இந்திய கலாசாரத்தால் செக்ஸ் என்பது இன்னும் மறைபொருளாகவும் வெளிப்படையாக அதைப்பற்றிப் பேசுவதும், அறிந்துகொள்வதும் ஆகாத செயல் என்ற நிலைதான் உள்ளது. பெரும்பாலான அந்தப்புரங்களில் தாம்பத்தியம் என்பது சண்டை சச்சரவுகளில்தான் முடிகின்றன. விவாகம் முடிந்த ஒரு சில நாட்களிலேயே விவாகரத்துக் கேட்டு கோர்ட் வாசலில் வந்து நிற்கும் இளம் தம்பதியினர் இன்று அதிகரித்துவிட்டனர். இதற்கு மூல காரணம் தாம்பத்தியம் பற்றி கணவனுக்கும் மனைவிக்கும் இடையே புரிதல் இல்லாமைதான். பருவ வயதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் உடலில் நிகழும் ரசாயன மாற்றங்கள் மனதில் பயத்தை ஏற்படுத்தி செக்ஸ் மீதான பார்வையை வேறு கோணத்தில் கொண்டுபோய்விடுகிறது. செக்ஸ் பற்றிய அனைத்து விஷயங்களையும் அலசி, அந்தப்புரத்தை நம் பக்கமாகத் திருப்புகிறது இந்த நூல். ஆண், பெண் இரு பாலரையும் பதின்ம வயது தொடங்கி, முதுமை எல்லை வரை குறுக்குவெட்டாக ஆராய்ந்து அனைத்து விதமான செக்ஸ் சந்தேகங்களுக்கும், வாசகர்கள் எழுப்பிய ஐயங்களுக்கும் சரியான விளக்கங்களைக் கொடுத்திருக்கிறார் டாக்டர் நாராயண ரெட்டி. டாக்டர் விகடனில் தொடராக வெளிவந்தபோது வாசகர்களின் எல்லா சந்தேகங்களுக்கும் இதழ்தோறும் விளக்கமளித்தார். அந்தத் தொடரின் முழுத் தொகுப்பே நூலாகியிருக்கிறது. படுக்கையறை சங்கதிகளை விரசம் இல்லாமல் கூறி அனைத்துக்கும் விடை கூறும் இந்த நூல், செக்ஸ் மீதான பார்வையை மாற்றிவிடும் என்பது நிஜம்.
RS. 88 More...by எஸ்.கதிரேசன்
மனித மனத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்யும்போது அல்லது சமூக ஒழுக்கத்தைப் புரிந்துகொள்ள முயற்சிக்கும்போது ஏற்படக்கூடிய உணர்வு மாற்றமே ‘மனோதத்துவம்’. இன்றைய தலைமுறையினரிடம் இது முக்கிய இடத்தை வகிக்கிறது. உள்ளுணர்வு, அறியும் ஆற்றல், கவனம், மன உணர்வு அல்லது உணர்ச்சி வேகம், இயல்பு, ஊக்கம், மூளையின் செயல்பாடுகள், ஆளுமை, நடத்தை மற்றும் உள்ளார்ந்த தொடர்புகள் ஆகியவற்றைக் கொண்டதே மனிதனின் அன்றாட செயல்முறைகள். மனிதர்களால் திருத்திக்கொள்ள முடியாத தவறுகள் இன்று ஏராளம். தன்னையும் தன் சமூகத்தைச் சுற்றியும் என்ன நடக்கிறது, என்ன நடக்க இருக்கிறது, குறிப்பிட்ட ஒரு விஷயத்துக்கான நம்முடைய செயல்முறைகள் எப்படி இருக்க வேண்டும், பிறரின் மனதில் பொதிந்துள்ள கருத்தை எவ்வாறு அறிவது போன்ற பல்வேறு சிந்தனைகளுக்கான பதில்கள் நம்மிடையே இருக்கின்றன. ஆனால், அவற்றை உணர்ந்துகொள்ள ஏனோ நாம் முயற்சிப்பது இல்லை. விளைவு, பிரச்னைகளை அலசி ஆராயத் தெரியாமல் எளிதில் சிக்கிக்கொள்கிறோம். குடும்பம், சமூகம், உறவுகள், நண்பர்கள் என, மனிதன் இருக்கும் இடம்தோறும் மனோதத்துவரீதியிலான பிரச்னைகள் இருக்கத்தான் செய்கின்றன. உணர்வுரீதியான, உளவுரீதியான, உறவுரீதியான மனநல நிகழ்வுகளையும், அதற்கு டாக்டர் மாத்ருபூதம் தரும் பதில்களையும் பழகுத் தமிழில் தொகுத்துள்ளார் நூலாசிரியர் கதிரேசன். மனித உறவுகளிடையே ஊசலாடிக்கொண்டு இருக்கும் உணர்வுகளின் ஒட்டுமொத்த வினாக்களுக்கும் இங்கு விடை காணலாம். வாழ்க்கையில், பிடிப்பற்ற அநேக நிலைகள் வரத்தான் செய்யும்; அவற்றை எதிர்நோக்கி வெற்றி கொள்பவனே ‘முழு மனிதன்!’
RS. 63 More...by எஸ்.ஏ.செல்லப்பா
காதலும் போருமாக வாழ்க்கையை ஆரம்பித்த மனித இனத்தில், பாலுறவு பழக்க வழக்கத்தையும், அதனால் ஏற்பட்டு வந்த உடல்ரீதியான - மனரீதியான மாற்றங்களையும், அறிவியல்பூர்வமாக விளக்கிச் சொல்கிறது இந்த நூல். முறையற்ற உடலுறவு, இனப்பெருக்கக் குறைபாடுகள், குழந்தை பிறப்பு, பாலியல் தொற்று நோய்கள், ஆணுக்கும் பெண்ணுக்கும் சுரக்கும் ஹார்மோன் குறைபாடுகள் ஆகியவை பற்றி எச்சரிக்கும் விதமாகவும் இந்த நூல் விளக்கிச் சொல்கிறது. கொலை, திருட்டு, பெண் கடத்தல், குழந்தை கடத்தல், கள்ளத் தொடர்பு, கட்டாய விவாகரத்து... என சமூகத்தில் நடக்கும் குற்றங்கள் அனைத்துக்கும் ஆரம்பக் காரணம், ஆண்-பெண் பாலியல் பிரச்னைகள்தான் என ஆதாரத்துடன் விளக்குகிறார் நூல் ஆசிரியர் எஸ்.ஏ.செல்லப்பா. எனவே, ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே பாலியல்ரீதியாக ஏற்படும் பிரச்னைகளை எப்படித் தீர்த்துக்கொள்வது, தொற்றுநோய்கள் வராமல் தடுக்கும் முறைகள் என்ன, குழந்தையின்மைக்கு என்ன காரணம், விவாகரத்தைத் தவிர்க்க வேண்டியதன் கட்டாயம் என்ன..? - இதுபோன்ற கேள்விகளுக்குப் பதில் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது. மனித இனம் தோன்றிய காலத்திலிருந்தே இருக்கும் பாலியல் சிந்தனைகளையும், அதனால் விளைந்த சமூக மாற்றத்தையும், எழுந்த சிக்கல்களையும், தீர்வுகளையும் விஞ்ஞானபூர்வமாக அலசி ஆராய்ந்து, இந்த நூலில் பதில் தரும் விதமாக நூல் ஆசிரியர் எழுதியிருக்கிறார். ஆண்-பெண் உறவு மேம்பட கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள், திருமண பந்தம் நீடிக்கத் தேவையான வழிமுறைகள், பாலியல் நோய்களிலிருந்து தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகள் ஆகியவை பற்றியும் இந்தத் தலைமுறை அவசியம் அறிந்துகொள்ள வேண்டும். அதற்குத் தக்க தளமாக இந்த நூல் விளங்கும்!
RS. 63 More...