Cart is Empty
by டாக்டர் ஷாலினி
தாய், தந்தை, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, பேரன், பேத்தி... என சங்கிலித்தொடர்போல வாழும் மனித உறவுகள் அனைத்தும் ரத்த சம்பந்தமான உறவு என்பதால் இவர்களிடையே பாசப் பிணைப்பும் இயற்கையாக அமைந்துவிடும். கூடிவாழ்தல், விட்டுக்கொடுத்தல், சகிப்புத்தன்மை, பகிர்ந்து அளிக்கும் தன்மை போன்ற குணங்களும் வழிவழியாக அமைந்துவிடும். ஆனால், அனைத்து உறவுகளின் மீதும் ஒருவருக்குப் பாசம் வந்துவிடாது. அதிலும் ஆண்-பெண் உறவு என்பது மிகவும் சிக்கல் வாய்ந்தது! கணவன்-மனைவி என்ற உறவுச்சங்கிலி இடையில் ஏற்படுவது. திருமணம் என்ற பாலம் மட்டுமே இவர்களை இணைப்பதால், அந்தஸ்து, வேலை, பொருளாதாரம், உணவுமுறை, உடை, பிறந்தவீட்டுப் பாசம் போன்ற காரணிகளால் குடும்பத்தில் சிக்கல்கள் எழும்போது அந்த உறவுப்பாலம் உடையவும் வாய்ப்பு ஏற்பட்டு விடுகிறது. ‘ஆண்தான் உயர்ந்தவன்... பெண்தான் உயர்ந்தவள்’ என்கிற ஈகோ உருவாகி, இருவருக்கும் இடையில் அன்பு நழுவும் நேரத்தில் பிரிவு என்பது நிரந்தரமாகிவிடுகிறது! இப்படி, ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே பிரிவு ஏன் வருகிறது? இரு இனத்துக்கும் இடையே போட்டி தொடர்ந்து கொண்டே இருக்க என்ன காரணம்? ஆண்கள் மட்டும் தனித்தோ, பெண்கள் மட்டும் தனித்தோ இந்த உலகை ஆளமுடியுமா? -மனித இனம் தழைக்க, இதுபோன்ற கேள்விகளுக்குப் பதில் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது. ஆண்-பெண் உறவு மேம்படவும், திருமண பந்தம் நீடிக்கவும் தேவையான வழிமுறைகளைக் காண, பல துறைகளைச் சார்ந்த வல்லுனர்கள் தொடர்ந்து ஆராய்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். மனித இனம் தோன்றிய காலத்திலிருந்தே இருக்கும் ஆண்&பெண் உறவுச் சிக்கலை விஞ்ஞான ரீதியாக அலசி ஆராய்ந்து இந்த நூலில் எழுதியிருக்கிறார், உளநலவியல் நிபுணர் டாக்டர் ஷாலினி. அடிமைத் தளத்திலிருந்து விடுபடவும், தங்களுக்கான பாதுகாப்பைத் தேடிக்கொள்ளவும், கலவி வாழ்க்கையில் வீரியம்மிக்க நல்ல வாரிசுகளைக் கருவாக்கவும் ஆதிகாலத்திலிருந்தே பெண் இனம் எப்படி பரிணாமவளர்ச்சி அடைந்திருக்கிறது என்பதைத் தெளிவாக விளக்குகிறது இந்த நூல்.
RS. 70 More...by எஸ்.கே.முருகன்
மனித உலகின் உயிர்ச்சுழற்சியே காதல்தான்! ‘காதலிக்க நேரமில்லை!’, ‘காதலிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்!’, ‘காதல் படுத்தும் பாடு!’, ‘காதலுக்குக் கண்ணில்லை!’, ‘காதல் கசக்குதய்யா!’, ‘காதல் போயின் சாதல், சாதல், சாதல்..!’ - இப்படி, காதல் அனுபவங்களை நாவலாகவும், கவிதையாகவும், நாடகமாகவும், சினிமாவாகவும் காலம் காலமாகப் பதிவுசெய்து வைத்திருந்தாலும்... வெற்றியோ தோல்வியோ, காதல் பற்றி எப்போது பேசினாலும் கரும்புபோல இனிக்கவே செய்கிறது. அன்பு, நேசம், நளினம், ஆசை, மகிழ்ச்சி, உற்சாகம், தைரியம், வீரம், பெருமிதம், அடக்கம், வெட்கம், பாராட்டு, தூய்மை, நம்பிக்கை, ரகசியம், கற்பு - இவை அனைத்தும் காதலுக்கு மரியாதை தரும் வார்த்தைகள். ‘காதலுக்கு இலக்கணம்’ என்று பல்வேறு அறிஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் காதல் உணர்வுகளை இப்போதும் எழுதிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆணுக்கும் பெண்ணுக்கும் காதல் உணர்வு என்பது பொதுவானது. எந்த வயதில், யாருக்கு, எப்போது காதல் உணர்ச்சி எழும் என்று சொல்ல முடியாது. ஆனால், அந்தக் காதல் உடனே நிறைவேற வேண்டும் என்று தவமாய் தவமிருப்பவர்கள் ஏராளம். காதல் கைகூடி வந்தபிறகு அதில் திளைத்து வாழ்பவர்கள் ஏராளம். அதே சமயத்தில், ‘காதல் தோல்வி’ என உயிரை மாய்த்துக்கொள்பவர்களும் ஏராளம்! காதலில் தோல்வி அடையாமல், காதலை வளர்க்க விரும்புபவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய பத்து மந்திரங்களை, இந்த நூலில் அழகாகத் தொகுத்து எழுதி இருக்கிறார் எஸ்.கே.முருகன். காதலை ரசனை மிக்க வாழ்க்கையாக அமைத்துக்கொள்ள விரும்பும் காதலனும் காதலியும் செய்ய வேண்டியது, செய்யக் கூடாதது, காதல் உணர்வை அலட்சியப்படுத்தினால் ஏற்படும் விளைவுகள், பெற்றோர்களால் வரும் ஆபத்து, காதல் கல்யாணத்தால் சமூகத்தில் எழும் பிரச்னைகள்... என காதலைப் பற்றி முழு ஆராய்ச்சி செய்து, விறுவிறுப்பாக எழுதி இருக்கிறார் நூலாசிரியர். அனைவராலும் காதலிக்கப்பட வேண்டிய நூல் இது.
RS. 60 More...by டாக்டர் டி.நாராயண ரெட்டி
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கல்வி கற்பது பற்றிக் குறிப்பிடும்போது இப்படிச் சொல்லி இருந்தார்: ‘ஒரு விளக்கால் இன்னொரு விளக்கை ஏற்றுவோம்’. எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் தெரிந்துகொள்ளாமல் இருப்பதைவிட ஆபத்தானது அந்த விஷயத்தைப் பற்றி அரைகுறையாகத் தெரிந்து வைத்திருப்பது. மேலும் நாம் பல விஷயங்களில் ஆயத்தமாக முன் முடிவுகளைக் கொண்டிருப்பவர்களாக இருக்கிறோம். இதுவும் மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும். ஒருவருக்குத் தெரிந்த செய்திகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதுகூட இன்னொரு விளக்கை ஏற்றும் செயலே. அதுவும் அறிவியல் தனது பன்முகத் தன்மையால் உலகையே தன் கீழ்க் கொண்டுவந்துவிட்ட காலம் இது. அறிவியல், ஒவ்வொரு நாளும் புதிய புதிய உண்மைகளைப் பந்தி வைத்துக்கொண்டு இருக்கிறது. அதில் செக்ஸ் விஷயமும் விதிவிலக்கல்ல! டாக்டர் நாராயண ரெட்டி அவர்கள் இந்தியாவில் செக்ஸுவல் மெடிசன் துறையில் புகழின் உச்சியில் இருப்பவர். அவர் தனது ஆய்வுப் பார்வையுடன் செக்ஸ் அறிவியல் உண்மைகளை இந்தப் புத்தகத்தில் தமிழ் வாசகர்களுக்கு வழங்கியிருக்கிறார். இந்தப் புத்தகம் எளிய தமிழில் இனிய முறையில் செக்ஸுவல் மருத்துவ அடிப்படையில், நம்முடைய பல சந்தேகங்களுக்கும் பல முன் முடிவுகளுக்கும் மூடநம்பிக்கைகளுக்கும் வேட்டுவைத்து தெளிவான பதிலை அறிவியல்பூர்வமாக வழங்குகிறது. டாக்டர் விகடனில் வெளிவந்து வாசகர்களின் பேராதரவைப் பெற்ற தொடர் இப்போது நூல் வடிவில் உங்கள் கைகளில் தவழ்கிறது. படிப்போம்... தெளிவோம்!
RS. 81 More...by எஸ்.ஏ.செல்லப்பா
காதலும் போருமாக வாழ்க்கையை ஆரம்பித்த மனித இனத்தில், பாலுறவு பழக்க வழக்கத்தையும், அதனால் ஏற்பட்டு வந்த உடல்ரீதியான - மனரீதியான மாற்றங்களையும், அறிவியல்பூர்வமாக விளக்கிச் சொல்கிறது இந்த நூல். முறையற்ற உடலுறவு, இனப்பெருக்கக் குறைபாடுகள், குழந்தை பிறப்பு, பாலியல் தொற்று நோய்கள், ஆணுக்கும் பெண்ணுக்கும் சுரக்கும் ஹார்மோன் குறைபாடுகள் ஆகியவை பற்றி எச்சரிக்கும் விதமாகவும் இந்த நூல் விளக்கிச் சொல்கிறது. கொலை, திருட்டு, பெண் கடத்தல், குழந்தை கடத்தல், கள்ளத் தொடர்பு, கட்டாய விவாகரத்து... என சமூகத்தில் நடக்கும் குற்றங்கள் அனைத்துக்கும் ஆரம்பக் காரணம், ஆண்-பெண் பாலியல் பிரச்னைகள்தான் என ஆதாரத்துடன் விளக்குகிறார் நூல் ஆசிரியர் எஸ்.ஏ.செல்லப்பா. எனவே, ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே பாலியல்ரீதியாக ஏற்படும் பிரச்னைகளை எப்படித் தீர்த்துக்கொள்வது, தொற்றுநோய்கள் வராமல் தடுக்கும் முறைகள் என்ன, குழந்தையின்மைக்கு என்ன காரணம், விவாகரத்தைத் தவிர்க்க வேண்டியதன் கட்டாயம் என்ன..? - இதுபோன்ற கேள்விகளுக்குப் பதில் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது. மனித இனம் தோன்றிய காலத்திலிருந்தே இருக்கும் பாலியல் சிந்தனைகளையும், அதனால் விளைந்த சமூக மாற்றத்தையும், எழுந்த சிக்கல்களையும், தீர்வுகளையும் விஞ்ஞானபூர்வமாக அலசி ஆராய்ந்து, இந்த நூலில் பதில் தரும் விதமாக நூல் ஆசிரியர் எழுதியிருக்கிறார். ஆண்-பெண் உறவு மேம்பட கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள், திருமண பந்தம் நீடிக்கத் தேவையான வழிமுறைகள், பாலியல் நோய்களிலிருந்து தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகள் ஆகியவை பற்றியும் இந்தத் தலைமுறை அவசியம் அறிந்துகொள்ள வேண்டும். அதற்குத் தக்க தளமாக இந்த நூல் விளங்கும்!
RS. 63 More...