Cart is Empty
by பாரதி தம்பி
நூலகத்துக்கும் அலுவலகத்துக்கும் கோவில்களுக்கும் செல்லவேண்டிய கால்கள் இன்று முதலாவதாக மதுக் கடையை நோக்கிச் செல்வதற்கு ஆர்வம் காட்டுகிறதே காரணம் என்ன? குடியைக் கெடுக்கும் மதுக்கடைகளின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. அரசாங்கமே தன் குடிமக்களை குடிக்கு அடிமையாக்கி வைத்திருக்கிறது. சினிமாவும் மதுவை முதன்மைப்படுத்தி அதன் வளர்ச்சிக்கு ஊக்குவிப்பது கவலைக்கிடமே. மதுவை நாடுபவர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்கா. மதுவாலும் அதை நாடுபவர்களாலும் விளைவது என்ன? இந்த நூல் அதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது. பல குடும்பத்தில் கணவர், தகப்பன், பிள்ளை - என குடும்பத்தைக் காக்கும் பொறுப்பில் இருப்பவர்கள், மது என்னும் எமனுக்கு பலியாகி தன் குடும்பத்தினரின் வாழ்வை சின்னாபின்னமாக்கிச் செல்கிறார்கள். மது அடிமை என்ற நிலையில் இருந்து தன் கணவனை, தந்தையை, மகனை மீட்டெடுக்க ஒவ்வொரு தாயும், மனைவியும் சகோதரியும் படும் துயரம் தொடர்கதையாகிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு டாஸ்மாக் கடையும் ஒவ்வொரு கழிவறை. அந்தக் கழிவறையின் நாற்றத்தில் புரண்டு அங்கேயே நோயாளியாகி, வீட்டினரின் நல்வாழ்வையும் கெடுத்து விடுகிறார்கள். மக்கள் நலம் காக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும், பொது நல நோக்கோடு ஒவ்வொரு வரியிலும் ‘டாஸ்மாக்கை மூடு’ என்கிற கோரிக்கையை முன்வைத்து, அதற்கான காரணத்தை முன்வைத்திருப்பது இந்த நூலின் சிறப்பம்சமாகும். ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்து மிகுந்த வரவேற்பைப் பெற்றது. மது இல்லா எதிர்காலம் உங்கள் கைகளில் என்பதை எடுத்துரைக்க காத்திருக்கிறது.
RS. 91 More...by ப.திருமாவேலன்
மரணஓலம் மங்காது ஒலித்துக் கொண்டும், காற்றில் ரத்தவாசம் வீசிக்கொண்டும், விளை நிலங்கள் அனைத்தும் பிண நிலங்களாகக் காட்சி தரும் தேசம்தான் இன்றைய ‘ஈழம்’! கொடூரக் கொலைகளையும், திசை அறியாது பதைபதைத்து ஓடும் அவலத்தையும், குண்டு வீச்சுகளைத் தாங்கித் தாங்கி ஈரம் காய்ந்துபோன மண்ணையும் ஒருங்கே கண்டு நடுங்கிய ஈழ தேசத்து மக்களின் பரிதாப நிலைகளை, ஆனந்த விகடன், ஜூனியர் விகடன் இதழ்கள் தொடர்ந்து கட்டுரைகளாக வெளியிட்டு, உண்மையை உலகறியச் செய்தன. இலங்கைத் தமிழர்களுக்கும், அவர்களின் வாழ்விடங்களை சீரழித்துவரும் சிங்களப் படையினருக்கும் உள்ள பல்வேறு நிலைப்பாடுகள் முதல், முள்ளிவாய்க்கால் பகுதியில் விடுதலைப்புலித் தலைவர் பிரபாகரன் எதிர்கொண்ட இறுதிப்போர் வரை நடைபெற்ற சம்பவங்களைத் தொகுத்து, ‘ஈழம் இன்று!’ என்கிற தலைப்பில் ஏற்கெனவே நூலாக வெளியிட்டுள்ளது விகடன் பிரசுரம். அதிர்ச்சியூட்டும் புதிய உண்மைகள் அடங்கிய இரண்டாம் பாகம் இது. ஈழப் பிரச்னை, உலகலாவிய பிரச்னை ஆனதற்கான காரணம், தமிழக மீனவர்கள் சிறைப்பிடிக்கப்படுவது, போர்க் குற்றங்கள், இலங்கை அரசின் இன்றைய அரசியல் நிலை... என பல்வேறு தகவல்களை இந்த நூலில் தொகுத்துள்ளார் நூலாசிரியர் ப.திருமாவேலன். தன் நாட்டு மக்களையே கொடூரமாகக் கொன்று குவித்து, சிறிதும் குற்ற உணர்வே இல்லாமல், கொடுங்கோல் ஆட்சி நடத்திவரும் ராஜபக்ஷே சகோதரர்களின் கூட்டுச்சதியை அம்பலமாக்கும் முக்கிய சாட்சியமே இந்த நூல்.
RS. 56 More...by விகடன் பிரசுரம்
அனைத்துத் துறைகளிலும் தனியார் நிறுவனங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. ஆனால், அதிக வசதி வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் பெரும்பாலான அரசுத் துறை நிறுவனங்கள், அப்படியே முடங்கிக் கிடப்பது ஒரு சாபக்கேடு! விளம்பரத்திலும் வியாபார நேர்த்தியிலும் தனியார் நிறுவனங்களுக்கு ஈடுகொடுத்து முன்னேறிக் கொண்டிருந்த தொலைத்தொடர்புத் துறை, இப்போது ‘ஊழல்’ என்கிற புதைகுழியில் சிக்கி இருப்பது, நம்மை வேதனைப்படுத்துகிறது; வெட்கித் தலைகுனிய வைத்திருக்கிறது! மத்திய தொலைத்தொடர்புத் துறையின் சார்பில் வழங்கப்படும் தொலைபேசி மற்றும் மொபைல் சேவையை நாடு முழுவதும் வழங்குவதற்கான டெண்டரை முடிவு செய்வதில் ஏற்பட்ட முறைகேடுதான் ‘ஸ்பெக்ட்ரம் ஊழல்’. ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் இருக்கக்கூடிய அடிப்படைப் பிரச்னை, மத்திய அமைச்சராக இருந்த ஆ.ராசா குழுவினர் செய்த விதிமீறல்கள், இந்த ஒதுக்கீடு யார் யாருக்கெல்லாம் வழங்கப்பட்டது, அப்படி வழங்கப்பட்டதற்கான ரகசியம், அவ்வாறு வழங்கப்பட்டதில் ராசாவுக்கும், அவரைச் சார்ந்தவருக்கும் கிடைத்த முதலீட்டு விவரம், இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம், சி.பி.ஐ., அமலாக்கப் பிரிவு, மத்திய கணக்கு தணிக்கைக் குழு... போன்ற துறைகள் வெளியிட்ட விவரங்கள், தீர்ப்புகள்... இவற்றை உள்ளடக்கி இந்த நூல் வெளிவந்திருக்கிறது. இந்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக, 2007 மே முதல் 2011 பிப்ரவரி வரை, ஜூனியர் விகடன், ஆனந்த விகடன் இதழ்களில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு இது. இந்த நூல் _ ஊழலை உறித்தெடுக்கும்; உண்மை நிகழ்வுகளை நாட்டு மக்களுக்கு விளங்கவைக்கும்!
RS. 70 More...by ப.திருமாவேலன்
ஆதியோடு அந்தமாக ஈழத்து தமிழ் மக்களின் உரிமைப் பிரச்னைகளும், சொந்த மண்ணிலேயே அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மக்களின் உணர்வுகளும், போராளிகளின் வாழ்க்கையும் ‘ஆனந்த விகடன்’ இதழ்களில் கட்டுரைகளாக வெளிவந்து, உண்மை நிலையை உலகறியச் செய்தது! லட்சக்கணக்கான மக்கள் சொந்த மண்ணில் வாழ்வுரிமைக்காகப் போராடி, உயிரிழந்த கொடுமைகளைப் பார்த்து இந்த உலகம் வேதனைப் பெருக்கோடு கண்ணீர் சிந்திக்கொண்டுதான் இருக்கிறது. எத்தனையோ சமாதான முயற்சிகள் தோல்வியடைந்தன. இதையெல்லாம் மீறி இலங்கை அரசாங்கம் செய்தது என்ன? சிங்கள ராணுவம் அங்கு வாழ்ந்த தமிழ் மக்கள் மீது ஏற்படுத்திய நெருக்கடிகள்தான் அவர்களைப் போராளிகளாக உருவாக்கியது என்பதைச் சுட்டிக்காட்டி, ‘குற்றவாளிகள் பிறப்பதில்லை; உருவாக்கப்படுகிறார்கள்’ எனத் தெளிவாக விளக்கியுள்ளார் நூலாசிரியர் திருமாவேலன். தன்மானத்தை மட்டுமே தன்னுடன் வைத்துக் கொண்டு தனி ஈழம் கேட்டு போராடிய தலைவர்களுடன், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுக்கு இணைப்பு உண்டானது எப்படி? பிரபாகரன் உள்ளிட்ட இளைஞர் படை ஆயுதம் ஏந்திய போராளிகளாக உருவெடுப்பதற்கான திருப்புமுனைச் சம்பவம் என்ன? இலங்கை
RS. 67 More...by எவிடன்ஸ் கதிர்
சாதி - தீச்சுவாலையைவிட கொடுஞ்சூடு நிறைந்த சொல்லாக மருவிக் கொதிக்கிறது. தொழிலை அடிப்படையாகக் கொண்டு பிரிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட சாதி, இடையே இழிவான தொழில் செய்பவன் இழிந்த சாதி என ஆதிக்க சமுதாயம் மனிதத்தைக் கூறுபோட்டுப் பிரித்தது. இதன் விளைவு, தலித்துக்கள் மீதான தொடர் தாக்குதல்கள் மற்றும் அவர்களது உடைமைகள் தீயிடப்படுவதும், தலித் பெண்கள் காட்டுமிராண்டித்தனமாக கற்பழிக்கப்படுவதும் ஆகும். சாதியம், பள்ளிகளில் தன் கோர நாக்கை விரிக்கிறது. தலித் மாணவர்கள் மீதான ஆதிக்கத்தை ஆதிக்க சாதி மாணவர்கள் செலுத்தும் நிலையும் ஒரு புறமும், வழிபாட்டுத் தலங்கள் தீண்டாமை எனும் கொடுமரம் வேர் பிடித்து விறுவிறுவென வளர்ந்து தலித்துக்களின் கழுத்தை நெரிக்கிறது. மலத்தை வாயில் ஊற்றி மனிதத்தைக் கொன்று புதைத்த தமிழகத்தில், களத்தில் நின்று பாதிக்கப்பட்டவர்களுக்காகப் போராடி வருகிறார் எவிடன்ஸ் கதிர். மனிதர்களை சாதியம் எரிக்கிறபோது, கொல்லுகிறபோது, பலத்த தாக்குதல் நடத்துகிறபோதெல்லாம் ஒரு தீர்க்கதரிசனக் குரல் கேட்கும். அங்கெல்லாம் பறக்கத் தொடங்குவேன். பாதிக்கப்பட்ட மக்கள் உயிரையும் மானத்தையும் காப்பாற்றிக் கொள்வதற்காக கதறுகிறபோதெல்லாம் அவர்களோடு இருந்து நானும் கதறுவேன். ஒரு நாளும் அவர்களை என்னால் காப்பாற்ற முடியவில்லை. என் பயணம் உயிர்ப்பு மிகுந்தது. நீதி கிடைக்கும் என்கிற நம்பிக்கையும் கலந்தது என்ற அறிமுகம்தான் எவிடன்ஸ் கதிர் என்ற களப்போராளியின் அடையாளம். விளிம்பு நிலை மக்களின் உயிர்நிலைக்காக தன் வாழ்நாளில் எதிர்கொண்ட வழக்குகளையும், தலித் மக்களின் மீதான அடக்குமுறை களையும், கவுரவக் கொலைகளையும் வாக்குமூலங்களாக இந்த நூலில் பதிவு செய்திருக்கிறார் எவிடன்ஸ் கதிர். குரலற்றவர்களின் குரலாக ஒலித்த ஒரு களப் போராளியின் வாக்குமூலத்தை வாசிக்க பக்கத்தைப் புரட்டுங்கள்.
RS. 130 More...by அ.முத்துக்கிருஷ்ணன்
போராட்டம். இந்த வார்த்தை காலம் காலமாக உலகெங்கும் கோடிக்கணக்கான உதடுகள் உச்சரித்துக்கொண்டிருக்கும் வார்த்தை. தனக்கான உரிமை மறுக்கப்படும்போதெல்லம் அதைப் பெற மனிதனுக்கு இயற்கை கொடுத்த ஆயுதம்தான் போராட்டக் குணம். உலகத்தில் பல மாற்றங்களும் முன்னேற்றங்களும் காலம்தோறும் நிகழ்ந்துகொண்டே இருக்க போராட்டமே ஆணிவேர். ஆண்டான் அடிமை முறை, முதலாளித்துவத்தின் அடக்குமுறை, தனியுடைமை இவற்றையெல்லாம் நீர்த்துப்போகச் செய்ததே போராட்டம்தான். ஆனால், இவை இன்னும் முற்றுமாக ஒழிந்துவிடவில்லை. வேறு பெயரில் வேறு உருவில் ஆங்காங்கே அவ்வப்போது தோன்றிக்கொண்டுதான் இருக்கின்றன. அப்போதெல்லாம் முன்வந்து நின்று அதை முடக்கிப்போடுவது போராட்டம்தான். காந்தி தலைமையில் வெறும் 50 பேருடன் தொடங்கி இறுதியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்ட உப்பு சத்தியாகிரகப் போராட்டப் பயணம் பிரிட்டிஷ் ஆதிக்கத்தையே அசைத்துப் பார்த்தது. தமிழ்நாட்டின் அரசியல் எதிர்காலத்தையே மாற்றிய இந்தி எதிர்ப்புப் போராட்டம், குலக்கல்வி திட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டம் என தமிழ்நாடு தொடங்கி உலகம் முழுதும் நடந்த பல்வேறு போராட்டங்களைப் பற்றி ஜூனியர் விகடனில் வெளிந்த கட்டுரைத் தொடரின் தொகுப்பு நூல் இது. வீறுகொண்டு எழுந்த பற்பல போராட்டங்களைப்பற்றி அறிய வாருங்கள்!
RS. 240 More...by ஜி.ராமச்சந்திரன்
சிறைச்சாலைகள், குற்றவாளி தன் தவறுக்கு தனிமையில் வருந்தி, மனம் திருந்திட வழிவகுக்கும் இடமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் உருவாக்கப்பட்டன. தவறு செய்தோரில் பெரும்பாலோர் உணர்ச்சிவயத்தில் தவறிழைத்தவர்களாகவே இருப்பார்கள். நெடிய மதிற்சுவர்களுக்குள்ளே சிறையில் நடக்கும் செயல்கள், கைதிகளின் நடவடிக்கைகள், சிறை நடைமுறைகள், சிறைக்குச் சென்ற அரசியல் தலைவர்கள், பிரபலங்களுடன் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி இந்த நூலெங்கும் சொல்லியிருக்கிறார் நூலாசிரியர். 39 ஆண்டுகளாக சிறைத்துறை அதிகாரியாக பணியாற்றியது குறித்து தன் அனுபவங்கள் குறித்து ஜூனியர் விகடனில் ஜி.ராமச்சந்திரன் எழுதிய தொடர் கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. ‘‘சிறை என்பது முன்பு தண்டிக்கும் இடமாக இருந்தது. இப்போது, மனித மனங்களைச் செப்பனிடும் பட்டறையாக மாறியிருக்கிறது. சிறைவாசிகளைப் புறக்கணிப்பதும் வெறுப்பதும் அவர்களை மீண்டும் குற்றத்தின் திசையிலேயே பயணிக்கவைக்கும். இந்தத் தொடர், சிறைவாசிகளைப் பற்றி மக்களின் மனங்களிலிருந்த சித்திரத்தை மாற்றியிருக்க வேண்டுமென்று விழைகிறேன்’’ என நூலாசிரியர் குறிப்பிட்டிருப்பதற்கு ஏற்ப, சிறை பற்றியும் கைதிகள் பற்றியும் இருக்கும் பொதுவான கண்ணோட்டத்தை இந்த நூல் மாற்றிவிடும். இனி சிறைச்சாலை பற்றிய உண்மைகளை நீங்கள் அறிய அதன் கதவுகள் திறக்கும்!
RS. 250 More...by இலங்கை ஜெயராஜ்
ஒருவர் தனது வாழ்வு அனுபவங்களையும் அந்த அனுபவங்கள் தந்த புதிய கருத்தாக்கங்களையும் எழுத்தாக்கும்போது அந்த எழுத்து வாசகனின் மனதில் சிறிதேனும் சிலிர்ப்பையோ சீண்டலையோ உண்டாக்கினால் அந்த எழுத்து வெற்றிபெற்றதாகிவிடும். கம்பவாரிதி ஜெயராஜ் வெற்றிபெற்றிருக்கிறார். இந்தக் கட்டுரைகளில் சில சிந்திக்க வைக்கின்றன, சில சிலிர்க்க வைக்கின்றன, சில களிக்க வைக்கின்றன.ஜெயராஜ் தனது கட்டுரைகளின் வாயிலாக வாழ்க்கையில் பின்பற்றப்பட வேண்டிய தத்துவங்களை ஆங்காங்கே அள்ளித் தெளித்திருக்கிறார். யாழ்ப்பாணத்தைப் பற்றிக் குறிப்பிடும் நூலாசிரியர் ஜெயராஜ், பழைய யாழ்ப்பாணத்துக்கும் இன்றைய யாழ்ப்பாணத்துக்கும் உள்ள வேறுபாட்டைக் கூறி எது சிறந்த யாழ்ப்பாணம் என்பதை வாசகரின் முடிவுக்கே விட்டுவிடுகிறார். சாதி வேற்றுமை, மன உறுதியால் நிகழும் மாயாஜாலமான நிகழ்வுகள், இறை நம்பிக்கை, விதி, விதிவிலக்கு என அனைத்தையும் தம் வாழ்வில் நிகழ்ந்தவற்றின் வழியே சொல்லி தெளிவுபடுத்தி இருக்கிறார். தன் வாழ்வின் அனுபவங்களிலிருந்து சமூகத்துக்கான செய்திகளை அகழ்ந்தெடுத்துப் பரிமாறி இருக்கும் ஜெயராஜ், வாசகனோடு எளிமையான நடையால் உரையாடல் நடத்துகிறார். நூல் ஆசிரியரின் இந்தக் கட்டுரைகள், வீரகேசரி நாளிதழில் ‘அதிர்வுகள்’ என்ற தலைப்பில் வெளியானவை. அவையே இப்போது நூலாகி யிருக்கிறது. இனி கம்பவாரிதியின் கட்டுரைகளை கண்ணுறுங்கள். இதமாகவும் புதுமையாகவும் சுவையாகவும் இருக்கும்!
RS. 119 More...by அதிஷா
தனிமனிதனுக்கு அடிப்படையாக இருக்க வேண்டிய குணங்கள், தகுதிகள், உணர்வுகள் யாவும் முற்றிலும் மாறுபட்டிருக்கும் நிலை - ஒரு சமூக நோய். ஊழல், ஏய்ப்பு, வன்முறை, அநியாயம், சுயநலம், நன்மை, மனிதாபிமானம், பொதுநலம், உதவி... இதில் எதை நாம் எதிர்பார்க்கிறோம்? எதைக் கொடுக்கிறோம் என்பதைச் சிந்திக்க வேண்டும். பெற்றோர் மீது உண்மையான அக்கறை, பெரியோர் மீது நன்மரியாதை, சுற்றியுள்ளோர் மீது அன்பு, எளிய மனிதன் மீதான அக்கறை - இப்படியான இயல்பான குணங்களை இழந்துவரும் நாம் எப்படி ஆரோக்கியமான வாழ்வை வாழமுடியும்? பல நாள் பிரச்னைக்கு ஒரே நாளில் தீர்வு கிடைத்துவிடக்கூடும். ஆனால், ஒரு நாள் பிரச்னைக்கு பல மாதங்கள் ஆகியும் தீர்வின்றி தவிப்போம்... இது குடும்பம், நோய், கல்வி, சமுதாயம், பணியிடம் என பல தரவுகள் வழியே ஏற்படுவது. மாறவேண்டியது நாம்தான்; பின் சமூகம் தானாக மாறும். இது சுலபம் அல்ல. பொறுமையும் காத்திருப்பும், நற்காரியங்களுக்காகப் போராடத் தயாராகிற மனமும் எடுத்த காரியத்தில் உறுதி குறையாதிருக்கும் நிலைத்தன்மையும் வேண்டும். மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், மணல் கொள்ளையர்கள், இயற்கையைச் சூறையாடும் மத நிறுவனங்கள், சுற்றுச்சூழலை விழுங்கும் சாமியார்கள், பிணவறைக் காப்பாளர்கள், கழிவறைகளைச் சுத்தப்படுத்துகிறவர்கள், ஹோட்டல் சர்வர், போட்டோகிராபர் என இவர் தொடாத மனிதர்கள் இல்லை. ஒரு சாமான்யன் முதற்கொண்டு, பல்வேறு மனிதர்களின் வாழ்வியல் கூறுகளில் உள்ள தீய அடைப்புகளை நீக்கினால் மனித வாழ்வு எவ்வளவு சிறப்புடையதாக இருக்கும் என்பதை மனித உணர்வுகளின் மீதுள்ள அக்கறையால் ஆதங்கப்பட்டிருக்கிறார் நூல் ஆசிரியர் அதிஷா. சொல்லிக்கொண்டிருக்காமல் இனி செய்யத் தொடங்கத் தூண்டும் வழிகாட்டியாக இந்த நூல் உங்கள் கைகளில்...
RS. 169 More...by த.ஸ்டாலின் குணசேகரன்
இந்திய விடுதலைப் போராட்டத்தில் உறவு, உணவு, கனவு, ஏன் தன் வாழ்வையே நாட்டுக்காக அர்ப்பணித்த சுதந்திரத் தியாகிகள் - சுதந்திரச் சுடர்களாக மின்னிக் கொண்டிருக்கிறார்கள் இந்நூலில். இந்திய சுதந்திர வரலாறு ஒரு பொக்கிஷம். அந்தப் பொக்கிஷத்தைத் தோண்டித் தோண்டி விடுதலைப் போராட்டத்தின் வீர வரலாற்றைத் தொடக்க காலத்திலிருந்து நடந்த நிகழ்வுகளை ஆசிரியர் தன் உணர்வுப்பூர்வமான சொற்பொழிவுகளால் அள்ளி வீசியிருக்கிறார். ஆகஸ்ட் புரட்சி, ஜாலியன் வாலாபாக் படுகொலை, வெள்ளையனே வெளியேறு இயக்கம் போன்ற சுதந்திரப் போராட்டத் தியாகிகள் தங்கள் வாழ்வில் எதிர்கொண்ட போராட்டங்கள் குறித்து கல்வி மூலம் நாம் பாடமாகக் கற்றிருந்தாலும், அந்த நிகழ்வுகளை நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துவதோடு, நம்மையும் அந்தக் களத்திற்கே நேரடியாகக் கொண்டு செல்கிறது ஆசிரியரின் தமிழியல் நடை. காந்தி, நேரு, நேதாஜி, பாரதி, ராஜாஜி, பெரியார், வ.உ.சி, ம.பொ.சி., கட்டபொம்மன், உத்தம் சிங், பகத் சிங், ஆஸாத், சுந்தராம்பாள், கே.பி.ஜானகியம்மாள், தில்லையாடி வள்ளியம்மை, ஜி.சுப்பிரமணிய ஐயர் என சுதந்திரச் சுடர்களின் பட்டியல் நீளுகிறது, எண்ணிக்கையில் அடங்காத வானத்து நட்சத்திரங்களைப் போல... இந்திய நாட்டின் மீது அவர்களுக்கு இருந்த தீராதபற்று, சமுதாயத்தின் மீது அவர்களுக்கு இருந்த அக்கறை, நாட்டு மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதியை எதிர்க்கும் மனவலிமை போன்றவை இன்றைய தலைமுறையை ஊக்குவித்து நிச்சயம் மாற்றியமைக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. எப்பேர்ப்பட்டவனும் சந்திக்க அஞ்சும் ஹிட்லரை நேரடியாக நேதாஜி சந்தித்த சம்பவம்; நிறைமாதக் கர்ப்பிணியாக ‘வந்தே மாதரம்!' என்று சொல்லிக்கொண்டு, சிறைக்குள் சென்ற கடலூர் அஞ்சலை அம்மாள்... இவை போன்ற நாம் அறியாத பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை சுமந்து நிற்கும் இந்த நூல், உங்களை சுதந்திரப் போராட்ட காலத்திற்கே அழைத்துச் செல்லும்!
RS. 189 More...