Cart is Empty
by தொ.பரமசிவன்
தமிழ்நாடு என்றால் வெறும் மொழியும் இனமும் ஒன்றிணைந்து இயங்குகின்ற ஒரு பெரிய நிலப்பரப்பு மட்டும் அன்று... சமயங்களும் தத்துவங்களும் சடங்குகளும் பெரும் நம்பிக்கையாகச் செயல்பட்டுவரும் உயிர் நிலம்! தமிழ் இலக்கணமும் இலக்கியமும் ஓர் இயக்கமாக வளர்ந்து வருவதுபோல், ஆதிகாலம் தொட்டு தமிழகத்தில் வளர்ந்துவரும் சமயங்களும், பல்வேறு காலமாற்றத்தைக் கடந்து, மக்கள் மனதிலும் பல மாற்றங்களை உண்டாக்கி, சர்ச்சைக்கும் ஆராய்ச்சிக்கும் உரிய பாதையாக தொடர்ந்துகொண்டு இருக்கிறது. ‘பண்பாட்டுப் பேரறிஞர்’ பேராசிரியர் தொ.பரமசிவன், சமயங்களில் புதைந்து கிடக்கும் அரசியலை, தன் புதிய ஆய்வு முறையின் மூலம் தோண்டி எடுத்து, இந்த நூலின் மூலமாக உலகின் பார்வைக்குப் படைத்திருக்கிறார். உலகில் தோன்றிய சமயங்கள் அனைத்தும் ‘பிறவாப் பெருநிலை’யைத் தேடி தத்துவங்களை உருவாக்கி இருந்தாலும், இந்தியச் சமய மரபு மட்டும், பிறப்பால் உருவாக்கப்பட்ட வருணப் பாகுபாடு, சுரண்டல், ஒடுக்குவாதம், அடிமைப்படுத்தல் போன்ற அம்சங்களைக்கொண்டு இழிவான இயக்கமாக மாறி வந்ததை இந்த நூலில் வெளிச்சமிட்டுக் காட்டி இருக்கிறார். இந்திய வைதீகம், பிறப்பால் மக்களைத் தாழ்வு படுத்தியது என்றால், பிற்பாடு வளர்ந்த சில சமயங்களும், ஆணுக்கு வேறாகவும், பெண்ணுக்கு வேறாகவும் தத்துவங்களை வகுத்துச் சொல்லி, செயல்பட்டு வந்திருக்கின்றன என்று உணர்த்துகிறார்! இந்தியத் தத்துவம், இந்தியச் சமயங்கள் ஆகியவற்றின் வரலாறு என்பது, ஒடுக்குகின்ற சாதிக்கும் ஒடுக்கப்படுகின்ற சாதிகளுக்கும் இடையிலான போராட்டம் என்பதே இந்த நூலின் கருத்து நிலை. இந்தக் கருத்தை, புத்தகங்களில் இருந்து மட்டும் தரவுகளாகத் தொகுக்கவில்லை... கல்வெட்டுகள், வழக்காறுகள், பழமொழிகள், கதைகள், நாட்டார் பாடல்கள் போன்ற வெகுஜன மக்களின் அதிகாரமற்றத் தரவுகளிலிருந்தும் தொகுத்து எழுதி இருப்பது இந்த நூலின் சிறப்பு. இதே நூலில் மற்றொரு பகுதியாக, தமிழகச் சமயங்கள் பற்றி நூலாசிரியருடன் பேராசிரியர் சுந்தர் காளியின் உரையாடல் இடம்பெற்றிருப்பது மற்றுமொரு சிறப்பு. ஆராய்ச்சி மாணவர்கள், ஆசிரியர்கள், சமய உணர்வாளர்கள் என பசி கொண்டவர்கள் வாசிக்கும்போது இது நூலாகத் தெரியாது... கடலாகத் தெரியும்!
RS. 67 More...by கே.ராஜாதிருவேங்கடம்
‘லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து’ - இந்தச் சொற்களை எங்கே கேட்டாலும் ஒரு முகம் உங்கள் மனக்கண் முன்வந்து நிற்கும். அவர்தான் சகாயம். ஊழல், முறைகேடு, விதி மீறல்கள் செய்பவர்களுக்கு எப்போதும் அவர் சுக்குக் கஷாயம் போல் கசக்கக் கூடியவர். அதிகார வர்க்கத்தின் எந்தப் பதவியில் இருந்தாலும் தன்னுடைய கற்பைக் காப்பாற்றிக்கொண்டு இருக்கக்கூடிய ஒரு சில அதிகாரிகளில் சகாயமும் ஒருவர். அதிலும் குறிப்பிடத்தகுந்தவர். பல அதிகாரிகள் தன்னளவில் நேர்மையாளர்களாக இருந்தால் போதும் என்று நினைப்பார்கள். ஆனால், சகாயம், அதைவிட முக்கியமாக தன்னைச் சுற்றி உள்ளவர்களையும் நேர்மையானவர்களாக மாற்றும் பிரசாரத்தையும் தொடர்ந்து செய்துவருபவர். அப்படிப்பட்ட சகாயம், தனது பணிக் காலத்தில் சந்தித்த சவால்களின் தொகுப்பு முதன்முதலாக புத்தகமாக வருகிறது. ‘பொது ஊழியர் ஒருவர் தன்னால் செய்யப்பட வேண்டிய அதிகாரப்பூர்வமான வேலைக்குச் சட்டப்படி பெற வேண்டிய ஊதியத்தைத் தவிரக் கைகூலி பெறுவதையே 'லஞ்சம்’ என்று வரையறை செய்கிறது அரசியலமைப்புச் சட்டம். லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர் கைது செய்யப்பட்டார் என்ற செய்தி இல்லாமல் தினசரி செய்தித்தாள்கள் வருவது இல்லை. லஞ்சம் வாங்காத நேர்மையான அதிகாரி ஓர் அலுவலகத்துக்கு ஒருவர் இருந்தாலே அது ஆச்சர்யமாகப் பேசப்படுகிறது. அப்படிப்பட்ட ஆச்சர்யம் தரும் மனிதர்களில் முதன்மையானவர் சகாயம்! ‘என் அரசுப் பணியில் எங்காவது ஓர் இடத்தில் ஒரு சிறு ஊழல் செய்து இருந்தாலோ, ஒரு ரூபாய் லஞ்சம் வாங்கி இருந்தாலோ, பொதுமக்கள் முன்னிலையில் என்னைத் தூக்கில் போடலாம்’ என்று முதலமைச்சருக்கு கடிதம் எழுதும் தைரியம் எந்த அதிகாரிக்கு இருக்கிறது? அப்படியொரு நேர்மையாளருக்கு மகுடம் சூட்டுகிறது இந்த நூல். சகாயம் கடந்து வந்த முள் பாதைகளையும், அவர் பணியில் சந்தித்த அனுபவங்களையும் பத்திரிகையாளர் கே.ராஜாதிருவேங்கடம் அழகான நடையில் தந்திருக்கிறார். சாக்கடைச் சமூகத்தில் அதைச் சுத்தப்படுத்துவர் அனுபவிக்கும் கஷ்டத்துடனேயே சகாயம் போன்றவர்களின் பயணமும் இருக்கிறது. ஊழல் இல்லாத சமுதாயம் படைக்கவும் ஊழலை எதிர்த்துப் போராடவும் ஊக்க சக்தியாக இந்தப் புத்தகம் அமையும்!
RS. 70 More...by மகா.தமிழ்ப் பிரபாகரன்
உலகத்தின் ஜனநாயக மிதியடியாகக் கிடக்கிறது இலங்கை. இனவெறித் தாண்டவங்களால் லட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்து, புத்தனின் தேசத்தையே ரத்த வாடைக்குள் தள்ளியிருக்கிறது சிங்கள வெறி. நடந்த கொடூரத்தின் வேதனையை நேர்நின்றுப் பார்க்கிற தைரியத்தில் அக்கிரம தேசத்துக்கே சென்று பட்ட ரணத்தை வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறார் தம்பி தமிழ்ப் பிரபாகரன். போர் தொடங்கிய போதும், படிப்படியாக வெறி பெருகி பன்னாட்டுச் சர்வாதிகாரங்களுடன் சிங்கள அரசு தனது கொடூரப் போரைத் தீவிரமாக்கியபோதும், சுருட்டி வீசப்பட்ட கோரைப்பாயாக ஈழக்கனவு சிதைக்கப்பட்டபோதும், இன்று இழவு தேசமாக இலங்கை மாறிவிட்டபோதும்... இனப் பிள்ளைகளாக நாம் செய்தது வேடிக்கை பார்த்தது மட்டுமே! உலகத்தின் கொடூரச் சுடுகாடாக மாறி இருக்கும் இலங்கைக்கு எதிராக இப்போதுதான் சர்வதேச ஜனநாயக சக்திகள் வாய் திறக்கத் தொடங்கி இருக்கின்றன. இலங்கையின் இனவெறிக் கொடூரத்துக்கு எதிராகத் தொடங்கி இருக்கும் ஒருமித்த போரின் எழுச்சி நெருப்பாக இந்த நூல் நிச்சயம் விளங்கும். இலங்கை வாழ் தமிழர்கள் வாழ்ந்த இடங்கள், பட்ட துயரங்கள், கடந்துவந்த பாதைகள், எதிர்கொண்ட சூழ்ச்சிகள், புலிகளின் நினைவிடங்கள், வாழ்வாதாரத் தடயங்கள், மலையகத்துக்குத் தமிழகத் தமிழர்கள் வந்த பின்னணி, திலீபனின் கடைசித் தருணங்கள், சிங்களர் என்பதற்கான வரலாற்றுப் பின்னணி என இலங்கையில் ஒவ்வொரு நாளும் நடந்தேறிய நிகழ்வுகளை காட்சியாகவும் சாட்சியாகவும் ‘ஜூனியர் விகடனி’ல் தொடராக எழுதினார் தம்பி தமிழ்ப் பிரபாகரன். அந்த அக்னித் தொடரே இப்போது புத்தக வடிவில்! இடிந்தகரை மண்ணில் இன்றும் போராடிவரும் சுப.உதயகுமாரனின் அணிந்துரையும், கவிஞர் காசி ஆனந்தனின் கருத்தும் இந்த நூலின் வன்மைக்கு சாட்சியானவை. கண்ணீராக - கடுந்தீயாக உணர்வெழுச்சி கொள்ளத்தூண்டும் இந்த நூல் உலகத்தின் மனசாட்சியை உலுக்கும் பேராயுதம்!
RS. 70 More...by இலங்கை ஜெயராஜ்
ஒருவர் தனது வாழ்வு அனுபவங்களையும் அந்த அனுபவங்கள் தந்த புதிய கருத்தாக்கங்களையும் எழுத்தாக்கும்போது அந்த எழுத்து வாசகனின் மனதில் சிறிதேனும் சிலிர்ப்பையோ சீண்டலையோ உண்டாக்கினால் அந்த எழுத்து வெற்றிபெற்றதாகிவிடும். கம்பவாரிதி ஜெயராஜ் வெற்றிபெற்றிருக்கிறார். இந்தக் கட்டுரைகளில் சில சிந்திக்க வைக்கின்றன, சில சிலிர்க்க வைக்கின்றன, சில களிக்க வைக்கின்றன.ஜெயராஜ் தனது கட்டுரைகளின் வாயிலாக வாழ்க்கையில் பின்பற்றப்பட வேண்டிய தத்துவங்களை ஆங்காங்கே அள்ளித் தெளித்திருக்கிறார். யாழ்ப்பாணத்தைப் பற்றிக் குறிப்பிடும் நூலாசிரியர் ஜெயராஜ், பழைய யாழ்ப்பாணத்துக்கும் இன்றைய யாழ்ப்பாணத்துக்கும் உள்ள வேறுபாட்டைக் கூறி எது சிறந்த யாழ்ப்பாணம் என்பதை வாசகரின் முடிவுக்கே விட்டுவிடுகிறார். சாதி வேற்றுமை, மன உறுதியால் நிகழும் மாயாஜாலமான நிகழ்வுகள், இறை நம்பிக்கை, விதி, விதிவிலக்கு என அனைத்தையும் தம் வாழ்வில் நிகழ்ந்தவற்றின் வழியே சொல்லி தெளிவுபடுத்தி இருக்கிறார். தன் வாழ்வின் அனுபவங்களிலிருந்து சமூகத்துக்கான செய்திகளை அகழ்ந்தெடுத்துப் பரிமாறி இருக்கும் ஜெயராஜ், வாசகனோடு எளிமையான நடையால் உரையாடல் நடத்துகிறார். நூல் ஆசிரியரின் இந்தக் கட்டுரைகள், வீரகேசரி நாளிதழில் ‘அதிர்வுகள்’ என்ற தலைப்பில் வெளியானவை. அவையே இப்போது நூலாகி யிருக்கிறது. இனி கம்பவாரிதியின் கட்டுரைகளை கண்ணுறுங்கள். இதமாகவும் புதுமையாகவும் சுவையாகவும் இருக்கும்!
RS. 119 More...by வைகோ
வைகோவைத் தமிழ்நாடு நன்கு அறியும். அவருடைய உணர்ச்சி மிக்க உரை அனைவரையும் கட்டிப்போட்டுவிடும். அவர் வேலூர் சிறையில் அரசியல் கைதியாக இருந்தபோது தன் கட்சித் தொண்டர்களுக்காக, சங்கொலி இதழில் கடிதங்கள் எழுதினார். அவை உலகப் புரட்சித் தலைவர்களின் வீரக் காவியத்தைப் பேசும் வரலாற்றுக் கடிதங்கள். அந்த வீர வரலாற்று நிகழ்ச்சிகளின் தொகுப்பே இந்த நூல். வரலாற்றின் ஊடே தமிழகத்துக்கு, இன்றைய நிலைக்குத் தேவையான மெல்லிய ஆனால், அழுத்தமான வீரத்தை ஊட்டுகிறார். பிரெஞ்சுப் புரட்சி, செங்கொடிப் புரட்சி, தன் நாட்டுக்காக மட்டுமே நிறுத்திக்கொள்ளாமல் அடுத்த நாட்டிலுள்ள உரிமை இழந்தவர்களுக்காக போராட்டத்தில் ஈடுபட்ட சே குவாராவின் போராட்டங்கள், உணர்ச்சித் தீ மூட்டிய உமர் முக்தார், அயல் நாட்டுக்குப் போய் இந்திய சுதந்திரத்துக்காக மூச்சு விட்ட நேதாஜி, அடிமை விலங்கை ஒடித்த ஆப்ரகாம் லிங்கன், அமெரிக்க சொகுசு வாழ்க்கை கிடைத்தும் அதை உதறித் தள்ளிய கரிபால்டி என்று பலருடைய வரலாற்று வீச்சுகளை வைகோ தனக்கே உரிய நடையில் உணர்ச்சிக் காவியமாகப் படைத்திருக்கிறார். இவை இன்றைய இளைஞர்களின் உள்ளத்தைப் பண்படுத்தும் ஏர் என்பது திண்ணம்!
RS. 189 More...by விகடன் பிரசுரம்
அனைத்துத் துறைகளிலும் தனியார் நிறுவனங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. ஆனால், அதிக வசதி வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் பெரும்பாலான அரசுத் துறை நிறுவனங்கள், அப்படியே முடங்கிக் கிடப்பது ஒரு சாபக்கேடு! விளம்பரத்திலும் வியாபார நேர்த்தியிலும் தனியார் நிறுவனங்களுக்கு ஈடுகொடுத்து முன்னேறிக் கொண்டிருந்த தொலைத்தொடர்புத் துறை, இப்போது ‘ஊழல்’ என்கிற புதைகுழியில் சிக்கி இருப்பது, நம்மை வேதனைப்படுத்துகிறது; வெட்கித் தலைகுனிய வைத்திருக்கிறது! மத்திய தொலைத்தொடர்புத் துறையின் சார்பில் வழங்கப்படும் தொலைபேசி மற்றும் மொபைல் சேவையை நாடு முழுவதும் வழங்குவதற்கான டெண்டரை முடிவு செய்வதில் ஏற்பட்ட முறைகேடுதான் ‘ஸ்பெக்ட்ரம் ஊழல்’. ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் இருக்கக்கூடிய அடிப்படைப் பிரச்னை, மத்திய அமைச்சராக இருந்த ஆ.ராசா குழுவினர் செய்த விதிமீறல்கள், இந்த ஒதுக்கீடு யார் யாருக்கெல்லாம் வழங்கப்பட்டது, அப்படி வழங்கப்பட்டதற்கான ரகசியம், அவ்வாறு வழங்கப்பட்டதில் ராசாவுக்கும், அவரைச் சார்ந்தவருக்கும் கிடைத்த முதலீட்டு விவரம், இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம், சி.பி.ஐ., அமலாக்கப் பிரிவு, மத்திய கணக்கு தணிக்கைக் குழு... போன்ற துறைகள் வெளியிட்ட விவரங்கள், தீர்ப்புகள்... இவற்றை உள்ளடக்கி இந்த நூல் வெளிவந்திருக்கிறது. இந்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக, 2007 மே முதல் 2011 பிப்ரவரி வரை, ஜூனியர் விகடன், ஆனந்த விகடன் இதழ்களில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு இது. இந்த நூல் _ ஊழலை உறித்தெடுக்கும்; உண்மை நிகழ்வுகளை நாட்டு மக்களுக்கு விளங்கவைக்கும்!
RS. 70 More...by த.ஸ்டாலின் குணசேகரன்
இந்திய விடுதலைப் போராட்டத்தில் உறவு, உணவு, கனவு, ஏன் தன் வாழ்வையே நாட்டுக்காக அர்ப்பணித்த சுதந்திரத் தியாகிகள் - சுதந்திரச் சுடர்களாக மின்னிக் கொண்டிருக்கிறார்கள் இந்நூலில். இந்திய சுதந்திர வரலாறு ஒரு பொக்கிஷம். அந்தப் பொக்கிஷத்தைத் தோண்டித் தோண்டி விடுதலைப் போராட்டத்தின் வீர வரலாற்றைத் தொடக்க காலத்திலிருந்து நடந்த நிகழ்வுகளை ஆசிரியர் தன் உணர்வுப்பூர்வமான சொற்பொழிவுகளால் அள்ளி வீசியிருக்கிறார். ஆகஸ்ட் புரட்சி, ஜாலியன் வாலாபாக் படுகொலை, வெள்ளையனே வெளியேறு இயக்கம் போன்ற சுதந்திரப் போராட்டத் தியாகிகள் தங்கள் வாழ்வில் எதிர்கொண்ட போராட்டங்கள் குறித்து கல்வி மூலம் நாம் பாடமாகக் கற்றிருந்தாலும், அந்த நிகழ்வுகளை நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துவதோடு, நம்மையும் அந்தக் களத்திற்கே நேரடியாகக் கொண்டு செல்கிறது ஆசிரியரின் தமிழியல் நடை. காந்தி, நேரு, நேதாஜி, பாரதி, ராஜாஜி, பெரியார், வ.உ.சி, ம.பொ.சி., கட்டபொம்மன், உத்தம் சிங், பகத் சிங், ஆஸாத், சுந்தராம்பாள், கே.பி.ஜானகியம்மாள், தில்லையாடி வள்ளியம்மை, ஜி.சுப்பிரமணிய ஐயர் என சுதந்திரச் சுடர்களின் பட்டியல் நீளுகிறது, எண்ணிக்கையில் அடங்காத வானத்து நட்சத்திரங்களைப் போல... இந்திய நாட்டின் மீது அவர்களுக்கு இருந்த தீராதபற்று, சமுதாயத்தின் மீது அவர்களுக்கு இருந்த அக்கறை, நாட்டு மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதியை எதிர்க்கும் மனவலிமை போன்றவை இன்றைய தலைமுறையை ஊக்குவித்து நிச்சயம் மாற்றியமைக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. எப்பேர்ப்பட்டவனும் சந்திக்க அஞ்சும் ஹிட்லரை நேரடியாக நேதாஜி சந்தித்த சம்பவம்; நிறைமாதக் கர்ப்பிணியாக ‘வந்தே மாதரம்!' என்று சொல்லிக்கொண்டு, சிறைக்குள் சென்ற கடலூர் அஞ்சலை அம்மாள்... இவை போன்ற நாம் அறியாத பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை சுமந்து நிற்கும் இந்த நூல், உங்களை சுதந்திரப் போராட்ட காலத்திற்கே அழைத்துச் செல்லும்!
RS. 189 More...by டி.எல்.சஞ்சீவி குமார்
‘‘நாளை முதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்... இன்னிக்கு ராத்திரிக்குத் தூங்க வேணும் ஊத்திக்கிறேன் கொஞ்சம்!’’ - குடிவாழ்வின் உண்மைச் சாட்சியமாக கண்ணதாசன் எழுதிவைத்த வரிகள் இவை. குடிப் பிரச்னையில் இருந்து மீள்வது பல நேரங்களில் சாத்தியமற்றதாகத்தான் இருக்கிறது. ‘இன்றையில் இருந்து குடிக்க மாட்டேன்; வருடப் பிறப்பிலிருந்து குடியை நிறுத்திவிட்டு புது வாழ்க்கை வாழப்போறேன்; பிறந்த நாள் பார்ட்டியோடு இந்த கட்டிங்குக்கு கட்டிங்க்; திருமணத்துக்குப் பிறகு குவார்ட்டருக்கு குட்பை’ என்கிற சபதங்களுக்குக் குறைவே இல்லை. ஆனால், ‘விடு மச்சி... சரக்கு அடிக்காட்டி சர்டிபிகேட்டா கொடுக்குறாய்ங்க?’ என யாரோ ஒரு நண்பனின் உசுப்பேற்றலில் மறுபடியும் மட்டையாகுபவர்கள் அதிகம். போதைப்பழக்கம் எத்தனைக் கொடுமையானது என்பது எல்லோருக்குமே தெரியும். ஆனால், ‘இவ்வளவு கொடூரமானதா?’ என ஒவ்வொருவரையும் திகைக்க வைத்தது ‘மயக்கம் என்ன?’ தொடர். ஜூனியர் விகடனில் வாரம் இருமுறை இந்தத் தொடர் வந்தபோதுதான் குடியின் அவலமும் கொடூரமும் பொளேரெனப் புரிந்தது. ‘இன்றைய சமூகத்துக்குத் தேவையான மிக அவசியமான பணியை விகடன் கையில் எடுத்திருக்கிறது!’ என நெஞ்சில் கைவைத்துச் சொன்னவர்கள் நிறைய பேர். மதுவின் தீமையை, அதன் மிக மோசமான பாதிப்புகளை, குடும்பங்களின் சீரழிவை, சகிக்க முடியாத நோய்களை அறிவுலக நியாயங்களுடன் அழுத்தமாக விளக்கும் இந்தப் புத்தகம், குடியின் பிடியில் இருந்து இந்தச் சமூகத்தையே காப்பாற்றும் சாலச் சிறந்த கருவி!
RS. 81 More...by எவிடன்ஸ் கதிர்
சாதி - தீச்சுவாலையைவிட கொடுஞ்சூடு நிறைந்த சொல்லாக மருவிக் கொதிக்கிறது. தொழிலை அடிப்படையாகக் கொண்டு பிரிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட சாதி, இடையே இழிவான தொழில் செய்பவன் இழிந்த சாதி என ஆதிக்க சமுதாயம் மனிதத்தைக் கூறுபோட்டுப் பிரித்தது. இதன் விளைவு, தலித்துக்கள் மீதான தொடர் தாக்குதல்கள் மற்றும் அவர்களது உடைமைகள் தீயிடப்படுவதும், தலித் பெண்கள் காட்டுமிராண்டித்தனமாக கற்பழிக்கப்படுவதும் ஆகும். சாதியம், பள்ளிகளில் தன் கோர நாக்கை விரிக்கிறது. தலித் மாணவர்கள் மீதான ஆதிக்கத்தை ஆதிக்க சாதி மாணவர்கள் செலுத்தும் நிலையும் ஒரு புறமும், வழிபாட்டுத் தலங்கள் தீண்டாமை எனும் கொடுமரம் வேர் பிடித்து விறுவிறுவென வளர்ந்து தலித்துக்களின் கழுத்தை நெரிக்கிறது. மலத்தை வாயில் ஊற்றி மனிதத்தைக் கொன்று புதைத்த தமிழகத்தில், களத்தில் நின்று பாதிக்கப்பட்டவர்களுக்காகப் போராடி வருகிறார் எவிடன்ஸ் கதிர். மனிதர்களை சாதியம் எரிக்கிறபோது, கொல்லுகிறபோது, பலத்த தாக்குதல் நடத்துகிறபோதெல்லாம் ஒரு தீர்க்கதரிசனக் குரல் கேட்கும். அங்கெல்லாம் பறக்கத் தொடங்குவேன். பாதிக்கப்பட்ட மக்கள் உயிரையும் மானத்தையும் காப்பாற்றிக் கொள்வதற்காக கதறுகிறபோதெல்லாம் அவர்களோடு இருந்து நானும் கதறுவேன். ஒரு நாளும் அவர்களை என்னால் காப்பாற்ற முடியவில்லை. என் பயணம் உயிர்ப்பு மிகுந்தது. நீதி கிடைக்கும் என்கிற நம்பிக்கையும் கலந்தது என்ற அறிமுகம்தான் எவிடன்ஸ் கதிர் என்ற களப்போராளியின் அடையாளம். விளிம்பு நிலை மக்களின் உயிர்நிலைக்காக தன் வாழ்நாளில் எதிர்கொண்ட வழக்குகளையும், தலித் மக்களின் மீதான அடக்குமுறை களையும், கவுரவக் கொலைகளையும் வாக்குமூலங்களாக இந்த நூலில் பதிவு செய்திருக்கிறார் எவிடன்ஸ் கதிர். குரலற்றவர்களின் குரலாக ஒலித்த ஒரு களப் போராளியின் வாக்குமூலத்தை வாசிக்க பக்கத்தைப் புரட்டுங்கள்.
RS. 130 More...