Cart is Empty
by டாக்டர் எல்.மஹாதேவன்
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். மனித சமுதாயம் நித்தம் நித்தம் விதவிதமான நோய்த் தாக்குதல்களுக்கு ஆளாகிக் கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில், லட்ச லட்சமாகப் பணம் இருந்தாலும் நாம் செல்வமற்றவர்கள்தான். நோய்த் தாக்குதல் என்பது இன்று பரவலாகக் காணப்படுகிறது. விவசாயத்தில் பயன்படுத்தப்படும் ரசாயன உரங்களாலும், சுகாதார சீர்கேட்டாலும், உணவுப் பழக்கத்தாலும், மனப் பிரச்னைகளாலும் என, பல்வேறு காரணங்களால் உடலில் நோய்கள் உருவாகின்றன. இந்த நோய்களை எதிர்கொண்டு வாழ மனிதனுக்கு ஆறுதலாக, ஆதரவாக உள்ளது மருத்துவம். இன்று மிகவும் பிரசித்தி பெற்றதாக, அறுவை சிகிச்சையில் முன்னேறியதாக ஆங்கில மருத்துவம் இருந்தபோதும், இதற்கெல்லாம் ஆரம்பமாகவும், முன்னோடியாகவும் அமைந்தது நம் நாட்டின் ஆயுர்வேதம் எனலாம். அப்படிப்பட்ட ஆயுர்வேத மருத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவரும் நூல்தான் தேவமருந்து. நோய்களுக்கு ஆயுர்வேத மருத்துவ முறையில் என்னென்ன பெயர்கள், நோய்களை உருவாக்கும் காரணிகள் எவை போன்றவற்றையும், நோய்களைத் தீர்ப்பதற்கான மூலிகைகளைப் பற்றியும், அந்த மூலிகைகள் ஆயுர்வேதத்தில் என்னென்ன பெயர்களைக் கொண்டுள்ளன என்பனவற்
RS. 74 More...by டாக்டர் கே.ஜி.ரவீந்திரன்
ஆனந்த விகடனில் 'உடலே, ரிலாக்ஸ் ப்ளீஸ்!' ஆயுர்வேத மருத்துவத் தொடர் வந்துகொண்டிருந்த போது, அதைப் படித்த வாசகிகள், 'அன்றாட வாழ்வில் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் மிகவும் அல்லல்படும் எங்களைப் போன்ற பெண்களுக்கு ஆயுர்வேத மருத்துவம் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியுமா?' என்று கேட்டு நிறைய விசாரிப்புகள் வந்துகொண்டிருந்தன. வாசகிகளின் ஆர்வத்தைப் புரிந்துகொண்டு, கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றில் சிசு வளர்ச்சியில் ஆரம்பித்து, பூப்படைவது, தாய்மை அடைவது, முதுமை அடைவது வரை பெண்களின் நடைமுறை வாழ்க்கைக்கு வழிகாட்டும் விதத்தில் அவள் விகடனில் ஒரு கட்டுரைத் தொடர் வெளியிடலாம் என்று தீர்மானித்தோம். 'ஆயுள் வளர்க்கும் ஆயுர்வேதம்!' என்று வெளியான தொடர் எதிர்பார்த்தபடியே ஆரோக்கிய வாழ்வை உணர்த்தும் அற்புதமான தொடராக அமைந்தது. ஆண்களும் அதைப் படித்து, பெண்களின் மன உணர்வுகளைப் புரிந்துகொண்டு குடும்பத்தில் ஒத்துழைப்பு கொடுக்கும் விதமாகவும் அமைந்தது. இதோ, அந்தக் கட்டுரைகள் புத்தக வடிவில் மலர்ந்திருக்கிறது. உணவே மருந்தாகவும், உடல் வளர்ச்சிக்கும் மன வளர்ச்சிக்கும் அதுவே சிறந்த அமுதமாகவும
RS. 90 More...by அமுதவன்
இன்று வீட்டுக்கு ஒரு ‘சர்க்கரை நோயாளி’ இருப்பது சகஜமாகிவிட்டது. ‘டயாபடீஸ்’ என்ற வார்த்தையை அனைவருமே அறிந்திருக்கிறார்கள். இந்த நோய் வந்தால், பல தொந்தரவுகளுக்கு ஆளாக நேரிடும் என மக்கள் பதற்றத்துடன் வாழ்க்கையை எதிர்கொள்கிறார்கள். உணவுக் கட்டுப்பாடு வேண்டும்; இனிப்பு கூடவே கூடாது; தொடர்ந்து மருந்து சாப்பிட்டுக்கொண்டே வரவேண்டும்... இப்படி சர்க்கரை நோய் பற்றி பரவலாக பல கருத்துகள் உலா வருகின்றன. சர்க்கரை நோய் என்பது என்ன? அது எதனால் வருகிறது? வந்தால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்? சர்க்கரை நோயை எந்தெந்த மருத்துவ முறைகளால் கட்டுப்படுத்தலாம்? என்ன மாதிரியான உணவுப் பழக்கங்களை மேற்கொள்ளலாம்? போன்ற கேள்விகளுக்கு எளிதாகவும் தெளிவாகவும் விடை சொல்லி வழிகாட்டுகிறார் நூலாசிரியர் அமுதவன். இந்த நூல், நோய் குறித்த பயத்தை விரட்டுகிறது. அலோபதி, ஹோமியோபதி, சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி போன்ற மருத்துவ முறைகளாலும், அக்குபஞ்சர், அக்குபிரஷர், ரெய்கி, பிராணிக்&ஹீலிங் போன்ற சிகிச்சைகள் மற்றும் யோகா, தியானம், நடைப்பயிற்சி, உடல்பயிற்சி, மூச்சுப்பயிற்சி, முத்திரைகள் போன்ற பயிற்சி முறைகளாலும், மாத்திரைகளை
RS. 67 More...by டாக்டர் நாராயண`ரெட்டி
அன்பு, கோபம், அழுகை, வெறுப்பு, ஆசை, காதல், காமம்... என மனித உயிர்களை ஆட்டிப்படைக்கும் உணர்வுகள் ஏராளம். இதில், காதலும் காமமும் தவிர்க்க முடியாதது என்பது எவரும் ஒப்புக்கொள்ளக்கூடிய உண்மை. ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படும் பாலுணர்வு, இளமைப் பருவத்தில் தொடங்கி முதிய பருவம் வரையில் வாழ்க்கையில் பல வகையில் சுக_துக்கங்களை அளிக்கவல்லது. விபரீதமான வித்தியாசமான ஆசைகளை ஏற்படுத்தும் இந்தப் பாலுணர்வை, ஒவ்வொருவரும் எப்படி கையாள வேண்டும் என்பதில் தொடங்கி, குழந்தைகள் மத்தியில் நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், பாலுணர்வு தொடர்பான செய்திகளை குழந்தைகளிடம் எப்படிச் சொல்ல வேண்டும், தாம்பத்திய வாழ்வில் துணையிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், உடலுறவின்போது ஏற்படக்கூடிய பிரச்னைகள் என்ன..? _ இப்படி நம் மனதில் எழும் பல கேள்விகளுக்கான பதில்களை, அசத்தலான உதாரணங்களோடு விளக்கியுள்ளார் நூலாசிரியர் டாக்டர் டி.நாராயண ரெட்டி. ஆனந்த விகடனில் ‘டூயட் கிளினிக்’ என்ற தலைப்பில் வெளிவந்து கொண்டிருக்கும் தாம்பத்தியத் தகவல்கள், செக்ஸ் பற்றிய ஆழமான கருத்துகளை மிகவும் சுலபமாகப் புரிந்துகொள்ள உதவுகிறது. டாக்டர் டி.நாராயண ரெட்ட
RS. 50 More...by ராஜம் முரளி _ ஜீவா சேகர்
‘அடுக்களையிலேயே இருக்கிறது அழகுக்கலை’ என்பதுதான் நம் முன்னோர்களின் சித்தாந்தம். நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களான பழங்கள், காய்கறி மற்றும் பூ வகைகளைக் கொண்டே அழகைப் பாதுகாக்கும் அற்புதக் கலையை அறிந்துகொள்ள யாருக்குதான் ஆசை இருக்காது? இயற்கையாகக் கிடைக்கும் உணவுப் பொருட்களைக் கொண்டே அகத்துக்கும் புறத்துக்கும் வேண்டிய ஆரோக்கியம் மற்றும் தற்காப்பு முறைகளை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். மா, பலா, வாழை, பேரீச்சை, ஆரஞ்சு, தர்பூசணி... போன்ற பழ வகைகள், மல்லிகை, ரோஜா, சம்பங்கி... போன்ற பூ வகைகள், துளசி, மரிக்கொழுந்து... போன்ற மூலிகை வகைகளின் சிறப்புகளையும், அதில் ஒளிந்துள்ள சத்துகளையும், அவை நமது உடலின் அழகை எப்படிப் பாதுகாக்கிறது என்கிற விவரங்களை விளக்கும் விதமாக ‘இயற்கை தரும் இளமை வரம்’ என்கிற தலைப்பில் ‘அவள் விகடன்’ இதழ்களில் வெளியான கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல். ‘ஒரே கல்லில் இரண்டு மாங்காய்’ என்பது போல, இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தி உடலின் மேற்பரப்பில் எடுத்துக்கொள்ள வேண்டிய அழகுக் குறிப்புகளை ராஜம் முரளியும் அவற்றை உட்கொள்ளும் விதத்திலேயே ஆரோக்கியத்தைக் காத்துக
RS. 75 More...by எஸ்.ஏ.செல்லப்பா
இன்று உடல் பருமன் குறித்து ஆண், பெண் இருபாலரும் விழிப்புடன் இருக்கிறார்கள். எக்காரணம் கொண்டும் உடல் பருத்துவிடக் கூடாது என்பதிலும், எப்பாடுபட்டாவது உடல் இளைத்துவிட வேண்டும் என்பதிலும் இரு சாராருக்குமே கவனம் அதிகம். தெருவுக்கு இரண்டு fitness centre முளைத்து வருவதற்கு இதுவே மூல காரணம்! கடற்கரையிலும் பூங்காக்களிலும் மட்டுமல்ல, கிராமத்துத் தெருக்களிலும்கூட சிறுவர் முதல் பெரியவர் வரை தினமும் காலையில் மும்முரமாக நடைப்பயிற்சி செய்வதற்கும் இந்தப் ‘பருமன் பாதிப்பு’ தான் காரணம்! அதாவது, வரும்முன் காப்பதற்கும், வந்ததை கட்டுப்படுத்தவும் இது மாதிரியான பயிற்சி முறைகள் உதவக்கூடும் என்பது நம்பிக்கை. தவிர, சாப்பாடு விஷயத்தில் எக்கச்சக்க சுயக்கட்டுப்பாட்டை விதித்துக் கொள்வதும் ‘பருமன் கவலை’ இருப்பதால்தான்! உடல் பருமன் ஏற்படக் காரணமாக உள்ள சூழ்நிலைகள், வாழ்க்கை முறை, உணவுப் பழக்கவழக்கம் முதற்கொண்டு பல தகவல்களை இந்த நூலில் தந்திருக்கிறார் நூலாசிரியர் எஸ்.ஏ.செல்லப்பா. உடல் பருமனைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகளையும், உணவுக் கட்டுப்பாடுகளையும் அனைவருக்கும் புரியும்படி அட்டவணைகளோடு விளக்கியிருக்கிறார். அதே மாதிர
RS. 50 More...by டாக்டர் நாராயண ரெட்டி
மனித வாழ்க்கை என்பது, உழைப்பது, பொருள் ஈட்டுவது, உண்டு உயிர் வாழ்வது என ஒரு இயந்திரம் போல இயங்கி முடிந்துவிடக்கூடியது அல்ல... பந்தம், பாசம், இன்பம், துன்பம் என்பது போன்று காதல், காமம் என்ற உணர்வுகளையும் உள்ளடக்கியது. அதனால்தான் அறத்துப்பால், பொருட்பால் என்ற அதிகாரங்களோடு வள்ளுவர் காமத்துப்பால் என்ற அதிகாரத்தையும் எழுதி வைத்தார். அந்தரங்கம் என்பது அந்தரங்கமாகவே இருந்த காலம் மாறி, இன்று ஆலோசனை பெறும் காலமாகிவிட்டது. பருவ வயதைத் தொட்டதுமே பாலுணர்வு பற்றிய பல சந்தேகங்கள், ஆண்&பெண் பேதமின்றி இருவருக்குமே எழுகின்றன. இந்தச் சந்தேகங்களின் ஆரம்பப் புள்ளி இளம் பருவம் என்றாலும், அது முதுமை வரை தொடரக் கூடியது. அப்படி, பல்வேறு பருவங்களில் எழும் பல்வேறு சந்தேகங்களுக்கும், குழப்பங்களுக்கும் உண்மை சம்பவங்களை மேற்கோள் காட்டி இந்த நூலில் விளக்கம் சொல்லியிருக்கிறார், பிரபல செக்ஸாலஜிஸ்ட், டாக்டர் டி.நாராயண ரெட்டி. ஆனந்த விகடன் இதழ்களில் ‘டூயட் கிளினிக்’ என்ற தலைப்பில், வாழ்வியல் கலையை போதிக்கும் அற்புதமான அந்தக் கட்டுரைகள் முதல் பாகமாக வெளிவந்து வாசகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்று வருகிறது. இது ‘ட
RS. 50 More...by ரேகா சுதர்சன்
பெண்களின் வாழ்வில் எல்லையில்லா சந்தோஷத்தையும், இன்பமான உணர்வையும் தரக்கூடியது தாய்மை அடையும் தருணம்தான். ஆனால், அந்தப் பெண்கள் கர்ப்ப காலம் முதல், பிரசவ காலம் வரை உடலளவிலும் மனதளவிலும் பலவிதமான மாற்றங்களையும் கஷ்டங்களையும் சந்திக்க வேண்டியுள்ளது! ஒவ்வொரு மாதமும் மருத்துவப் பரிசோதனைக்குச் சென்றாலும்கூட, கரு வளர்ச்சியின் போது ஏற்படக்கூடிய உடல் உபாதைகளுக்கு இன்றும் உதவக்கூடியது அந்தக்கால பாட்டி வைத்தியம்தான். அந்தவகையில், கர்ப்பிணிப் பெண்கள் பின்பற்ற வேண்டிய பாரம்பரிய வழிமுறைகளோடு பல பயிற்சிகளையும் விளக்கி, இந்த நூலில் நம்பிக்கை தரும் விதத்தில் எழுதியிருக்கிறார் ரேகா சுதர்சன். மனநல ஆலோசகரும், பிரசவ கால உடற்பயிற்சி ஆசிரியருமான ரேகா சுதர்சன், அவள் விகடன் இதழ்களில் எழுதிய அந்தக் கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல். கர்ப்ப காலத்தில் நிகழும் மாற்றங்களையும், அதற்கேற்ப உட்காரும் முறை, நடைப்பயிற்சி, மூச்சுப் பயிற்சி போன்றவற்றை விளக்கும் படங்கள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. சிசேரியன் எப்போது அவசியம், சுகப்பிரசவம் எப்படி உடல் ரீதியாக சுகம் தரும் என்பது போன்ற தகவல்களும், பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும் முறைகளும் விளக்கப்பட்டுள்ளன. பிரசவ காலத்தைப் பற்றிய பயம் தேவையற்றது என்பதையும், அதனால் ஏற்படக்கூடிய மன அழுத்தத்தைப் போக்கிக் கொள்ள ஒரே மருந்து மன வலிமைதான் என்பதையும், அந்த மன வலிமையை ஏற்படுத்திக் கொள்ள எளிய வழிமுறைகளையும் இந்த நூலின் வாயிலாக தெரிந்துகொள்ள முடியும். மொத்தத்தில் சுகப்பிரசவத்துக்கு உடல் ரீதியாக, மன ரீதியாக தயார்படுத்திக் கொள்ள வலியுறுத்தும் வழிகாட்டி இந்த நூல்.
RS. 63 More...by விகடன் பிரசுரம்
உடல் ஆரோக்கியத்துக்கு மனமே மூலகாரணம். ‘உடலுக்குப் போதிய ஓய்வு இருந்தால் மன சஞ்சலம் என்பதே இருக்காது’ என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். யோகா, தியானம் செய்வதன் மூலம் உடல் எந்தளவுக்குப் புத்துணர்ச்சி அடையும் என்பதை சொல்லத் தேவை இல்லை. அதேபோல், அதிகாலை நேரத்தின் அமைதியேகூட, மன நிம்மதிக்கு வழிவகுக்கும். அதிகாலையில் விழித்தெழுந்து, அந்த அமைதியை அனுபவித்துப் பாருங்கள். ஆரோக்கிய வாழ்க்கையின் ரகசியத்தை முழுமையாக உணர்ந்து உற்சாகம் அடைவீர்கள். இப்படி, உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொண்டு, வாழ்க்கையை இனிமையாக அமைத்துக் கொள்ள எளிய வழிமுறைகளைச் சொல்கிறது இந்த நூல். அன்றாட வாழ்க்கையின் பரபரப்பில் சிக்கிக் கொண்டு அவஸ்தைப்படுவது பெரும்பாலும் பெண்கள்தான். உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் விரைவில் சோர்வடைந்து பலவிதமான நோய்களுக்கு ஆட்பட்டு விடுகிறார்கள். பெண்களைப் பெரிதும் தாக்கும் நோய்கள் பற்றியும், அதற்கான தீர்வுகள் பற்றியும், அவள் விகடன் இதழ்களில் ‘டாக்டர் விகடன்’ பகுதியில், மருத்துவர்கள் சொன்ன வழிமுறைகளும், சக்தி விகடன் இதழ்களில் ‘டாக்டர் விகடன்’ பகுதியில், பிரபலமானவர்கள் விவரித்த அனுபவங்களும், மனதை லகுவாக்கி ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வழிகாட்டுகின்றன. வாசகிகளின் பெரும் வரவேற்பைப் பெற்ற அந்தக் கட்டுரைகளின் தொகுப்புதான், ‘வாழ்க்கை இனிது... வழிமுறை எளிது!’ இந்த நூலை ஆழ்ந்து படித்து, அவரவர் உடல், மனம் மீது அக்கறை எடுத்துச் செயல்பட்டால் குடும்பத்தில் என்றும் ஆரோக்கியம் தவழும்.
RS. 60 More...by முதியோர் மருத்துவர் வி.எஸ்.நடராசன்
உயிர்களின் படைப்பிலே அற்புதப் படைப்பாக அமைந்தது மானுடப் பிறவி. வேறு எந்த உயிரினத்துக்கும் இல்லாத பகுத்தறியும் திறன், மனித இனத்துக்கு மட்டும் ஒரு சிறப்பு! அதிலும், எண்ணிலடங்கா நிகழ்வுகளையும், அனுபவங்களையும் பதிவாக்கி வைத்து, தேவையான வேளைகளில் பயன்படும் நினைவாற்றலைக் கொண்ட மனிதனின் மூளை பிரமிப்புக்குரியதே! மறதி ஒவ்வொருவருக்கும் ஏற்படக்கூடியதுதான். அந்த மறதியினால் ஒரு சில வேளைகளில் நன்மையும், ஒரு சில வேளைகளில் தீமையும் விளைவதுண்டு. இந்த அனுபவம் நிச்சயம் எல்லோருக்கும் ஏற்பட்டிருக்கும். மறதி எப்படி ஏற்படுகிறது? மறதி என்பது மறதி நோயாக ஆகிவிடுவது எப்படி? யார் யாருக்கெல்லாம் மறதி நோய் ஏற்படக்கூடும்? வரும் முன் காப்பது எப்படி? வந்த பின் குறைப்பது எப்படி? &இப்படி அடுக்கடுக்கான பல கேள்விகளுக்கு இந்த நூல் விடையளிக்கிறது. மறதி, சுகமாகவும் சுமையாகவும் அமைவதை, அறிவியல்பூர்வமாகவும் அனுபவபூர்வமாகவும் தெள்ளத்தெளிவாக விளக்கியுள்ளார் நூலாசிரியர் டாக்டர் வி.எஸ்.நடராசன். மறதி நோயின் தன்மை, பாதிப்புகளைக் கண்டறியும் விதம், சிகிச்சை முறைகள், நோயாளிகளைக் கவனித்துக்கொள்ளும் உறவினர்களுக்கான ஆலோசனைகள்... இப்படி, பல உபயோகமான தகவல்களை இந்த நூலில் கொடுத்துள்ளார். ‘குருத்து ஓலை ஒரு நாள் பழுத்த ஓலை ஆகும்’ என்பதாலும், ‘நினைவாற்றல் குறைந்த முதியோர் அனைத்து இல்லங்களிலும் இருக்கின்றனர்’ என்பதாலும் இந்த நூலை அனைவருமே படித்துப் பயன் பெற முடியும். இதில் குறிப்பிடப்பட்டுள்ள பயிற்சிகளால் நினைவாற்றலைப் பெருக்கி வயோதிக காலத்தையும் வசந்தமாக்குவோம்!
RS. 50 More...