Cart is Empty
by விகடன் பிரசுரம்
‘வசீகரிக்கும் அழகைப் பெற, வாசனைமிக்க திரவியங்களுடன் கூடிய பல்வேறு க்ரீம்களை வாரிப் பூசிக்கொள்ள வேண்டும்’ என தோன்றுவது இயல்பு. ஆனால், பெற்றோர் நமக்கு அளித்துள்ள மேனியை எந்தவித செயற்கை வஸ்துகளாலும் சீரழித்துவிடாமல் இயற்கையான முறையில் காப்பதே உண்மையான அழகு! பொதுவாக, அழகுக் குறிப்புகள் என்றாலே அதை அறிந்துகொள்வதில் அனைவருக்கும் விருப்பம் உண்டு. ஆனால், அன்றாட நடவடிக்கைகளின் மூலமே அழகுக்கு அழகு சேர்க்க முடியும். ஆனந்த விகடன் இதழ்களில் ‘டாக்டர் விகடன்’ பகுதியில், அழகுக் குறிப்புகள், ஆரோக்கியத்தை காக்கும் வழிமுறைகள்... என, பல துறைகளில் ஒளிவீசும் பிரபலங்களின் ஃபிட்னெஸ் ரகசியங்கள் கட்டுரைகளாக வெளிவந்து வாசகர்களின் அமோக வரவேற்பைப் பெற்றன. தமிழச்சி தொடங்கி அமலா பால் வரையிலான அழகுப் பெண்களின் ஃபிட்னெஸ் ரகசியங்கள், அழகை ஆராதிக்கும் அனைவருக்கும் வழிகாட்டலாக அமைந்திருக்கிறது. ‘எளிமையே அழகு’, ‘இயல்பும் இயற்கையுமே அழகு’, ‘புன்னகை மாறா முகமே அழகு’... என வி.ஐ.பி. பெண்கள் சொல்லியிருக்கும் அர்த்தங்கள் விதம் விதமானவை. சரியான உணவு முறை, உடற்பயிற்சி, ஆயில் புல்லிங் செய்யும் முறை, ரத்த அழுத்தம் தொடங்கி முகப்பரு வரை அனைத்துக்கும் தெளிவான தீர்வு... என உடல் அழகை மேம்படுத்தும் பல தகவல்கள் இந்நூலில் இருக்கின்றன. அழகுச் சாதனப் பொருட்கள் எதையும் பயன்படுத்தாமல், நாம் உண்ணும் உணவின் மூலமே அனைவரையும் அசரவைக்கும் அழகைப் பெற முடியும் என்பதை இந்த நூல் தெளிவாக விளக்குகிறது.
RS. 60 More...by டாக்டர் சு.முத்துச்செல்லக்குமார்
தந்தையின் அன்பைவிட தாயின் அன்பே மகத்தானது என்பதற்கு இரண்டு சாட்சிகள். தாயைப்போல் ஒரு குழந்தையை தந்தையால் 10 மாதங்கள் வயிற்றில் சுமக்க முடியாது. அடுத்தது, குழந்தையின் சக்திக்கும் வளர்ச்சிக்கும் உதவும் விதமாக, தன் ரத்தத்தையே பாலாக்கிக் கொடுக்கும் ஒரு தாயைப்போல் தந்தை செயல்பட முடியாது. கருப்பையும், மார்பகமும் பெண் என்கிற பெருந்தெய்வத்துக்கு கிடைத்த மகத்தான வரங்கள். வரமே சாபமாவதுதானே மனிதகுல வாழ்வின் வழக்கம். இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு உண்டாகும் பிரச்னைகள் பெரும்பாலும் மார்பகம் மற்றும் கர்ப்பப்பை சம்பந்தப்பட்டதாகவே இருக்கின்றன. கர்ப்பப்பை குறித்த விழிப்பு உணர்வு சமீபகாலமாக அதிகமானாலும், மார்பகம் குறித்து அந்த அளவுக்கு அறிவுறுத்தல்கள் எழவில்லை. அதனை நிறைவு செய்யும் விதமாகவே மார்பகப் பராமரிப்பு குறித்து தெளிவான விவரங்களோடு இப்படி ஒரு புத்தகத்தை எழுதி இருக்கிறார் மருத்துவர் சு.முத்துச்செல்லக்குமார். மார்பகப் பாதிப்புகள் குறித்தும், அதில் இருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறைகள் குறித்தும் படங்களுடன் விளக்கிச் சொல்லும் இந்தப் புத்தகம், பெண்ணாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் வணங்கத்தக்க வழிகாட்டியாக உதவும்!
RS. 53 More...by அன்னமேரி பாட்டி
மருத்துவமனைகளில் முன்பதிவு செய்துகொண்டு மக்கள் காத்துக்கிடக்கும் நிலை இப்போது. ஆனால், நம் முன்னோர்கள் காலத்தில் வீடு தேடி வைத்தியர் வந்து கைவைத்தியத்தால் நோய் தீர்த்தனர். ஒரு காலத்தில் சமுதாய நலன் கருதிய சேவையாக இருந்துவந்த மருத்துவம் இன்றைய காலகட்டத்தில் பணம் கொழிக்கும் துறையாக மாறிவிட்டது. தடுக்கி விழுந்தால் மருத்துவமனை, லேப், ஸ்கேன் சென்டர்கள் என்று மலிந்து கிடக்கின்றன. இந்தச் சூழலிலும் நாட்டு வைத்தியத்தின் தேவை, செயல்பாடு ஒருபுறம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. இயற்கையில் கிடைக்கக்கூடிய புல், பூண்டு, மரம், செடி, கொடி, வேர், பட்டை, இலை, பூ, பிஞ்சு, காய், பழம், வித்து போன்றவற்றைப் பயன்படுத்தி, உடல் கோளாறுகளைத் தீர்க்கும் வைத்தியமே நாட்டு வைத்தியம். இது தலைமுறை தலைமுறையாக நம் நாட்டில் இருந்துவரும் பாரம்பரியமான மருத்துவ முறை. நவீன மருத்துவம் தோன்றுவதற்கு முன்பே தமிழர்கள் மருத்துவத்தில் கைதேர்ந்தவர்களாக இருந்ததற்கான சான்றுகள் இலக்கியங்களில் உள்ளன. ‘பத்து மிளகு இருந்தால் பகையாளி வீட்டிலும் விருந்து உண்ணலாம்’ என்ற பழமொழி இன்றும் வழக்கில் உள்ளது. அன்னமேரி பாட்டி பேச்சுவழக்கில், நம்பிக்கையூட்டும் விதமாக ‘நாட்டு வைத்தியம்’ என்ற தலைப்பில் ‘அவள் விகடனி’ல் அளித்துவந்த ஆலோசனைகளின் தொகுப்பே இந்த நூல். அன்னமேரி பாட்டியின் மருத்துவக் குறிப்புகளை வாஞ்சை மாறாத வார்த்தைகளில் பதிவு செய்திருக்கிறார் மரிய பெல்சின். குழந்தைகள், பெண்கள், ஆண்கள், பெரியவர்கள் என வகைப் படுத்தி, வழிமுறைகளைக் கையாள எளிமையாக்கி இருப்பது இந்த நூலின் சிறப்பு. இந்த நூலில் சொல்லப்பட்டிருக்கும் வழிமுறைகளை முறையாகப் பின்பற்றினால், சிறுநீரகக் கல், மூலம், மாரடைப்பு, புற்றுநோய் போன்றவற்றைக்கூட ஆரம்பத்திலேயே சரிசெய்துகொள்ள முடியும். மொத்தத்தில் இந்த நூல் ஒவ்வோர் இல்லத்திலும் இருக்கவேண்டிய அவசியமான மருத்துவக் கையேடு!
RS. 74 More...by பொன்.திருமலை
உணவே மருந்தாக இருந்த காலம் மலையேறி மருந்தே உணவாக மாறிவிட்டது இப்போது. அவசரம் சுமந்த வாழ்க்கை ஓட்டத்தில் உணவுக்காக நிதானம் காட்டக்கூட நமக்கு நேரம் இல்லை. என்ன சாப்பாடு, அதில் என்ன சத்து உள்ளது, நமக்கிருக்கும் பிரச்னைகளுக்கும் சாப்பிடும் உணவுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா என்கிற எவ்விதப் புரிதலும் நமக்கு இல்லை. நாகரிகம், வளர்ச்சி, வேகம் என்கிற அசுரத்தனமான போக்கில் நம் உணவுப்பழக்கங்களில் இருந்து காய்கறிகளைக் கட்டம் கட்டி வைத்துவிட்டோம். வியாதிகள் பெருகிப்போய்விட்ட நிலையில்தான் காய்கறிகளின் அவசியம் நமக்குப் புரிகிறது. இயற்கையின் பெருங்கொடையாக நமக்கு வாய்த்திருக்கும் காய்கறிகள் குறித்து எளிய நடையில் அற்புதமாக எழுதி இருக்கிறார் பொன்.திருமலை. காய்கறிகளில் உள்ள எண்ணிலடங்கா சத்துக்களை எல்லோருக்கும் புரியும்வண்ணம் விளக்கி இருக்கிறார். காய்கறிகள் அனைத்துமே நன்மை தரக்கூடியவை எனப் பொத்தம்பொதுவாகச் சொல்லாமல், எந்தக் காய்கறி உடலைக் குளிர்ச்சியாக்கும், எது உடல் உஷ்ணத்தை அதிகப்படுத்தும், எந்த நேரத்தில் எந்தக் காய்கறியைப் பயன்படுத்துவது, காய்கறிகளை வாங்கும்போது கவனிக்க வேண்டியவை என சிறு குழந்தைக்கும் புரியும் விதமாக எழுதி இருப்பது சிறப்பு. சர்க்கரை நோய் உள்ளவர்களும் ரத்த அழுத்தம் உள்ளவர்களும் தவிர்க்க வேண்டிய காய்கறிகளையும் இந்த நூல் பட்டியல் போடத் தவறவில்லை. காய்கறிகளின் மகத்துவத்தையும் இன்றைய தலைமுறை காய்கறிகளைப் பயன்படுத்த வேண்டிய அவசியத்தையும் ஒருசேர வலியுறுத்தும் உணவு வழிகாட்டி இந்த நூல்!
RS. 77 More...by வெ.தமிழழகன்
உத்தியோகத்தின் பின்னே ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய அவசர யுகத்தில் உணவுக்கான நேரத்தை ஒதுக்குவது என்பதே அரிதாக உள்ளது. காலநேரத்தை கணக்கில் கொள்ளாமல் வேலை ஓட்டத்தில் கிடைக்கும் உணவை உண்ணவேண்டிய அவசர நிலை இன்று. சத்து இழந்த வெறும் சக்கைகளே (பீட்சா, பர்கர், ஃபாஸ்ட் புட்) இன்றைய உணவுக் கலாசாரத்தில் முதன்மை வகிக்கின்றன. இதில் எங்கிருந்து ஊட்டச்சத்து நிறைந்த உணவைத் தேடிச் செல்வது..? இயற்கையின் பின்னணியில் ஆரோக்கியமான உடல்நலத்தை வழங்கக்கூடியவை, காய்&கனிகளே! ‘நவநாகரிக உணவுக் கலாசாரம்’ என்ற பெயரில் செயற்கை உணவுப் பண்டங்களை உண்டு, நம் உடலுக்கு நாமே ஊறுவிளைவித்துக் கொள்கிறோம். எந்த அளவுக்கு உண்ணுகிறோம் என்பதைவிட, என்ன உண்ணுகிறோம் என்பதுதான் முக்கியம். புரதச்சத்து, கால்சியம், பொட்டாசியம், கொழுப்புச்சத்து, இரும்புச்சத்து, தயாமின், ரைபோஃபிளோவின், நியாசின் போன்ற சரிவிகித ஊட்டச்சத்துமிக்க உணவுவகைகள் எவை, எந்த உணவில் என்ன வகை ஊட்டச்சத்து உள்ளது, எந்த அளவுக்கு உள்ளது என்பதை அலசி ஆராய்ந்து உண்ணும் பழக்கத்தை நம்மிடையே உருவாக்குவதற்கான தொடக்க நிலையே இந்த நூல். இதன் அடிப்படையில் உண்ணும் உணவு இயற்கை உணவா, செயற்கை உணவா?, இயற்கை உணவுகளான காய்கறிகளிலும் கனிகளிலும் உள்ள ஊட்டச்சத்துக்கள் என்னென்ன, எந்தெந்த நோய்க்கு என்ன உணவு மருந்தாகும், சர்க்கரை நோயாளிகள் அரிசி உணவை எடுத்துக்கொள்ளலாமா, காய் மற்றும் கனி வகைகளில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துகளின் கொள்ளளவு என்ன என்பதை அட்டவணையுடன் அழகுத் தமிழில் தெளிவாகத் தொகுத்துள்ளார் வெ.தமிழழகன். அன்றாட வாழ்க்கையில் மனிதர்கள் எதிர்நோக்கும் பற்பல உடல் உபாதைகளுக்கு இயற்கை உணவின் மூலம் தீர்வைத் தந்து, நம் வாழ்க்கையை இனிமைப்படுத்தும் மருத்துவ நூல்களில் இதுவும் ஒன்று.
RS. 95 More...by டாக்டர். செல்வராஜன்
விரும்பியதைச் சாப்பிடுகிறோம். வேண்டிய அளவுக்குச் சாப்பிடுகிறோம். அளவிலோ ஆசையிலோ நாம் குறை வைப்பதே இல்லை. நெல் கொட்டி வைக்கும் குதிர்போல் கண்டதையும் போட்டு நிரப்பி நம் வயிற்றை எப்போதும் சுமையுடனேயே வைத்திருக்கிறோம். நம் உடலின் இயக்கத்துக்கான சக்தியைக் கொடுக்கும் வயிற்றையும் அதன் சார்பு உறுப்புகளையும் பற்றி நாம் துளியும் வருத்தப்படுவது இல்லை. அளவுக்கு மீறிச் சாப்பிட்டு சிலர் வயிற்றைக் கெடுத்துக் கொள்கிறார்கள். சிலரோ, சாப்பிடாமல் கிடந்தே வயிற்றை வதைத்துக் கொள்கிறார்கள். உடலின் ஆக்கபூர்வ சக்தி மையமாக இருக்கும் வயிற்றை, நாம் எப்படிப் பேணிப் பாதுகாக்க வேண்டும் என்பதை இந்த நூல் மிக அருமையாக விளக்கிச் சொல்கிறது. என்ன சாப்பிடுவது, எப்படிச் சாப்பிடுவது என்பது தொடங்கி, உட்கொள்ளப்படும் உணவு எப்படி செரிமானமாகி சக்தியாக மாறுகிறது என்பது வரை வயிறு தன் வரலாறு கூறுவதுபோல் மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருக்கிறது இந்த நூல். ‘இப்படிக்கு வயிறு!’ என்கிற தலைப்பில் டாக்டர் விகடனில் 30 இதழ்களாக இந்தத் தொடர் வெளியானபோது இதற்குக் கிடைத்த வரவேற்பு மகத்தானது. மருத்துவம் குறித்த விளக்கம் என்றாலே அது யாருக்கும் எளிதில் புரியாததாக இருக்கும் என்கிற கடந்தகால மரபுகளை உடைத்து, எளிய தமிழில் ‘வயிறு’ என்கிற உறுப்பே வரைந்த மடலாக & அதன் வாய்மொழி உரையாடலாக உருவாகி இருக்கும் இந்த நூல், மருத்துவ நூல்களில் தனித்த அடையாளத்தைக் கொண்டது. கல்லீரல், பித்தப்பை, கணையம், மண்ணீரல் உள்ளிட்ட உறுப்புகளின் அன்றாட செயல்முறைகளை விளக்கி, செரிமானம் நடக்கும் விதத்தையும் அதற்கு உறுதுணையாக நாம் செய்யவேண்டிய கடைப்பிடிப்புகளையும் ஓர் ஆசானைப்போல் சொல்கிறது இந்த நூல். மேலும், குடல்வால், அல்சர், உணவு ஒவ்வாமை, அடிவயிற்று வலி போன்ற நோய்களுக்கான சிகிச்சை முறைகளையும் தெளிவாகக் கூறி இருக்கிறார் நூல் ஆசிரியர் டாக்டர் செல்வராஜன். வயிற்றின் வரலாற்றையும், அது செயல்படும் விதத்தையும், அதைக் காக்க வேண்டிய அவசியத்தையும் சொல்லி சரியான நேரத்தில் நமக்குள் எச்சரிக்கை மணி அடிக்கும் மகத்தான மருத்துவ நூல் இது!
RS. 70 More...by மருத்துவர் கு.சிவராமன்
‘‘கீரையத் தொட்டுக்க... உடம்புக்கு குளிர்ச்சி!’’, ‘‘எதுக்கு கறிவேப்பிலைய எல்லாம் தூக்கிப் போடுற... நல்லா மென்னு தின்னு. உடம்புக்கு அவ்வளவு நல்லது’’, ‘‘பெரண்டை தொவையலைத் தொட்டுக்க, வவுத்துக்கு நல்ல மருந்து’’ &உணவையே பிணி தீர்க்கும் வழியாகக் கடைபிடித்த நம் முந்தைய தலைமுறையின் நினைவுகள் மட்டுமே நம்மிடம் மிச்சம் இருக்கின்றன. சேர்ந்து சாப்பிடும் வழக்கமே மறைந்துவிட்ட இந்தக் காலச்சக்கர ஓட்டத்தில் எது நல்ல உணவு, எது உடலுக்கு உகந்தது என்பதை எல்லாம் அறிவதற்கே நேரம் இல்லை. சளிப் பிடித்தால் தூதுவளை ரசம், சிறுநீரகப் பிரச்னைக்கு வாழைத்தண்டு கூட்டு, உடல் உறுதிக்கு முருங்கைக் கீரை என நம் உடல் சம்பந்தமான தேவைகளுக்கு ஏற்ற உணவைத் தேர்தெடுத்து உண்ண, இப்போது எத்தனை பேரால் முடிகிறது? கால்களில் சக்கரம் கட்டாத குறையாகச் சுழலும் இன்றைய உலகம், ‘கிடைத்ததை உண்போம்’ என்கிற மனப்போக்குக்கு வந்துவிட்டது. தேர்ந்தெடுத்து உண்ணும் ஒரு சிலரும் சுவையை மட்டுமே மனதில் கொள்கிறார்களே தவிர, உடல் நலனை அல்ல! பருவநிலை, பாதிப்பு, தேவை ஆகியவற்றைப் பட்டியலிட்டு அதற்குத் தகுந்த உணவுகளை இந்த நூலில் வகைப்படுத்திக் காட்டுகிறார் மருத்துவர் சிவராமன். நெல்லிக்கனி, முட்டைக்கோஸ், முருங்கைக் கீரை, கொத்தமல்லிக் கீரைகளில் உடலை வனப்பாக்கும் அதிசயங்கள் நிறைந்திருக்கின்றன. நீரிழிவைக் கட்டுப்படுத்தும் வெந்தயம், இதயத்தைக் காக்கும் பூண்டு, மலச்சிக்கலைத் தீர்க்கும் பிடிகருணை என உணவின் மருத்துவ மகத்துவங்களை நூல் ஆசிரியர் சிவராமன் அற்புதமாக எழுதி இருக்கிறார். பாரம்பரிய வாழ்வியலையும், இன்றைய நிகழ்வுகளையும் ஒப்பிட்டு உணவு விஷயத்தில் நாம் கடைபிடிக்க வேண்டிய நல்லன எல்லாவற்றையும் சொல்லும் மகத்தான நூல் இது. ஒரு மருத்துவராக மட்டும் அல்லாமல், இன்றைய சூழல் மீது அக்கறை கொண்டவராக, இளைய தலைமுறை மீது மாறாத நம்பிக்கைக் கொண்டவராக சிவராமன் எழுதி இருக்கும் இந்த நூல், உணவு தொடங்கி உள்ளம் வரையிலான பலவிதத் தெளிவுகளையும் நமக்குள் ஏற்படுத்தும்.
RS. 70 More...by டாக்டர் மோகன் ராஜன், டாக்டர் சுஜாதா மோகன்
உயிரின் ஒளி கண்... சாதாரண தலைவலி காய்ச்சல் முதற்கொண்டு எந்த நோய்க்கும் சித்தா, ஆயுர்வேதம், இயற்கை மருத்துவம், அக்குபஞ்சர், அலோபதி என எந்த மருத்துவரைப் பார்த்தாலும் முதலில் கண்ணைத்தான் சோதிக்கிறார்கள். கண்ணை மட்டுமே சோதித்து அதன் மூலம் உடல் பிரச்னைகளை ஆராய்ந்து சிகிச்சை அளிக்கும் இரிடாலஜி ஒரு தனி மருத்துவத் துறை. இன்றைய சூழலில் இயற்கையிலிருந்து அந்நியப்பட்ட நச்சுத்தன்மை வாய்ந்த உணவையே நாம் சாப்பிட வேண்டியிருப்பதால் கண் சார்ந்த பிரச்னையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. இத்துடன் கண்ணுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் இரு சக்கர வாகனம் ஓட்டுதல், அதிக வெளிச்சம் நிரம்பிய சூழலில் நீண்ட நேரம் இருப்பது, கணினித் திரையை நீண்ட நேரம் உற்றுப் பார்ப்பது, ஆகியவை நம் அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாததாகிவிட்டது. எனவே இவை சார்ந்த கண் பாதிப்புகள் யாருக்கும் எந்த நேரத்திலும் நேரலாம். எந்தெந்த அறிகுறிகள் என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்தும், அதற்கு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன, அவற்றுக்கான மருத்துவத் தீர்வு என்ன, எப்படிப்பட்ட வாய்ப்பை நாம் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது போன்ற நுணுக்கமான அம்சங்களை மிகுந்த அக்கறையுடனும் எளிதில் புரியும்படியாகவும் தங்கள் கள அனுபவத்துடன் எழுதியுள்ளனர் டாக்டர்கள் பேரா. மோகன் ராஜன் மற்றும் சுஜாதா மோகன். கண் நலம் சார்ந்த நூல் என்பதால் வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களையும் கடந்து புதிய வாசகர்களையும் சென்றடையும் பயனுள்ள நூல் இது என்று நம்புகிறோம்.
RS. 63 More...by சி.அண்ணாமலை
‘வழக்கமாகச் செய்யும் வேலைகளைக்கூட உடற்பயிற்சியாக மாற்றியதுதான் நவீனத் தொழில்நுட்பத்தின் ஆகச் சிறந்த பணி!’ என்பது நிதர்சனமான உண்மை. நடப்பது, ஓடுவது, குதிப்பது, தாண்டுவது, குனிவது, நிமிர்வது போன்றவை எல்லாம் நாம் இயல்பாகச் செய்யக்கூடிய சாதாரண வேலைகள்தான். ஆனால் இன்றைய தொழில்நுட்பக் காலத்தில் இத்தகைய வேலைகளை எல்லாம் இயந்திரத்திடம் வாங்கிக்கொண்டிருக்கிறோம். நடப்பது என்பதுகூட இன்று உடற்பயிற்சியாகத்தான் பார்க்கப்படுகிறது. இந்தக் காலத்தில் நடந்து செல்வதுகூட அவமானமாகப் பார்க்கப் படுகிறது. நடந்து செல்பவனின் பொருளாதாரத்தை அளவிடுகின்றனர். இதுபோன்ற சூழ்நிலைகளிலிருந்து தப்பித்துக் கொள்ள கடன் வாங்கியாவது வாகனத்தை வாங்கிவிடுகிறோம். இது வர்த்தக நிறுவனங்களால் உருவாக்கப்படுகின்ற போலி பிம்பம். அதை உண்மை என நம்பி நாமும் வீழ்ந்துவிடுகிறோம். இந்த இயந்திர வாழ்க்கை நமக்குப் பல்வேறு நோய்களைக் கொண்டு வந்து சேர்க்கிறது. நமது உடல் நலத்திலும் அக்கறை செலுத்த வேண்டும். அதற்கு எளிமையான வழி யோகாதான். உடற்பயிற்சி செய்வதால் உடல் நலம் மட்டும் பாதுகாக்கப்படும். ஆனால், முறையான யோகாவின் மூலம் உடல் நலத்தோடு மன நலமும் பேணப்படும். நம்முடைய உடல் நலக் கேட்டுக்கு மன நலம் மறைமுகமாக காரணியாக இருக்கிறது. யோகா என்பது பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிவிட்ட ஒரு, மன மற்றும் உடல் பயிற்சிக் கலை. இந்தக் கலைக்குள் நுழைவதற்கான ஒரு நுழைவு வாயில்தான் இந்த நூல். யோகாவின் முக்கியத்துவம், யோகாவை நாம் ஏன் செய்ய வேண்டும், யோகா செய்வதன் மூலமாக நமக்குக் கிடைக்கக்கூடிய நன்மைகள், எந்தப் பயிற்சியை எப்படிச் செய்தால் என்ன மாதிரியான நன்மைகள் வரும் என்பது போன்ற பல தகவல்கள் அனுபவபூர்வமாக இதில் படங்களோடு விளக்கப்பட்டுள்ளன. இந்த நூலைப் படிப்பதன் மூலமாக யோகா குறித்த அடிப்படைத் தகவல்களைத் தெரிந்துகொள்ள முடியும். இந்த அடிப்படைத் தகவல்கள் உங்களின் அடுத்தகட்ட தேடலுக்கான ஒரு வழிகாட்டியாக அமையும். இந்த நூலை வாசித்து முடித்த பிறகு சந்தேகம் அனைத்தும் தீர்ந்திருக்கும்!
RS. 60 More...by மருத்துவர் கு.சிவராமன்
நம் பாரம்பரிய முறைப்படி உணவைத் தயாரிக்கும்போது தாளிப்பதில் மருத்துவக் காரணங்கள் அடங்கியிருக்கின்றன. இப்போது சேர்ப்பதுபோல் தாளிப்புக்கு கடுகு, உளுத்தம்பருப்பு மட்டும் அந்தக் காலத்தில் போட்டதில்லை. திரிதோஷ சமப் பொருட்கள் என்ற பெயருடன் ஏலம், சுக்கு, வெந்தயம், பூண்டு, மஞ்சள், மிளகு, சீரகம், பெருங்காயம் எனும் எட்டுப் பொருட்கள்--தான் அந்தக் காலத்தில் சமையலுக்குத் தாளிக்கப் பயன்பட்டன. உணவுப் பொருட்களுக்கு இருக்கும் பிரத்யேகச் சுவையால் அவற்றுக்கு மருத்துவக் குணம் வருகிறது என்று சித்த, ஆயுர்வேத மருத்துவத் துறைகள் சொல்கின்றன. ஆனால், இப்போது மாறியுள்ள உணவு முறை நாவின் சுவைக்காக மட்டுமே ஒழிய, அதில் எந்த மருத்துவ குணமும் இல்லை. காய்கறிகளையும், சிறுதானியங்களையும் நாம் பயன்படுத்தினால் நோயற்ற வாழ்வு வாழலாம் என்கிறார் நூல் ஆசிரியர் மருத்துவர் கு.சிவராமன். சமையலுக்கு பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாத்திரங்களும், குளிர்சாதன பெட்டிகளும் சமுதாயத்துக்குக் கேடு விளைவிப்பவை என எச்சரிக்கிறார் நூலாசிரியர். ஆனால், அவசர உலகில் வாழ்பவர்களுக்கு மாற்றுஉணவு என்ன இருக்கிறது?. ‘கைப் பையில் கொஞ்சம் சிவப்-பரிசி அவலும் சின்னத் துண்டு பனை வெல்லமும் எடுத்துச் சென்றால், மாலைப் பசிக்கு உடனடி அவல் இனிப்புத் தயார். கால் மணி நேரம் ஊற-வைத்த அவலும் வெல்லமும் உடலுக்கு உறுதியும் கூடவே இரும்புச் சத்து, வைட்டமின் பி சத்தையும் தரும்... உடனடியாகச் செரிக்கக்கூடியது கேழ்வரகு லட்டு. கேழ்வரகு கால்சியம் நிறைந்த ஒரு தானியம்’ என இப்படியாக மனித இனம் நோயில்லாமல் வாழ நூறு யோசனைகளை இந்த நூலில் விவரிக்கிறார். இதுதவிர எந்தக் காய்கறிகளை எப்படிப் பயன்படுத்தினால் சக்தி கிடைக்கும்? குதிரைவாலி, சாமை, தினை, வரகு போன்ற சிறு தானியங்களால் ஏற்படும் பயன்கள் என்ன? அவை மனிதனுக்கு தரும் சத்து எத்தகையது..? அத்தனை அம்சங்களையும் தருகிறார். ஆனந்த விகடனில் வந்த தொடர் இப்போது நூல் வடிவில். ஆறாம் திணை என்ற இந்த புத்தகம் மனிதனை காக்க வந்த ஒரு ஆயுதம். வெளிச்சம் இல்லாத வீட்டில் வைத்தியன் நுழைவான் என்பது முதுமொழி. ஆறாம் திணை என்ற இந்த புத்தகம் இல்லாத வீட்டிலும் மருத்துவன் நுழைவான் என்பது புதுமொழி எனக் கொள்ளும் அளவுக்கு இதில் ஆரோக்கியத் தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. படித்துப் பாருங்கள்... ஆறாம் திணை மனித சமுதாயத்துக்கு நல்ல துணை என்பது புரியும்.
RS. 119 More...