Cart is Empty
by டாக்டர் கு. கணேசன்
குழந்தை வளர்ப்பு மிகப்பெரிய கலை. குழந்தை பிறந்து, பள்ளி செல்லும் வரையிலான காலக்கட்டம் மிகவும் சிக்கலானது. திடீர் திடீரென்று குழந்தைக்கு உடல் நலக் குறைபாடு ஏற்படுவதற்கு நோய் எதிர்ப்பு சக்தி இல்லாததுதான் காரணம். குழந்தை பிறந்ததும் நோய் எதிர்ப்பு சக்தி இருக்காது. தாய்ப் பாலில் இருந்துதான் குழந்தைக்கான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தி மண்டலம் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் மேம்படும். இந்தக் காலக்கட்டத்தில் குழந்தைகளுக்கு எளிதில் நோய்த்தொற்று ஏற்படலாம். இதைத் தவிர்க்கத்தான் குழந்தைகளுக்குத் தடுப்பூசி அல்லது தடுப்பு சொட்டு மருந்து அளிக்கப்படுகிறது. தடுப்பூசியானது குழந்தைக்கு, குறிப்பிட்ட நோய்க்கு எதிராக செயல்படும் ஆற்றலைத் தருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்புவரை இந்தியாவில் ஏராளமான குழந்தைகள் போலியோ நோயால் பாதிக்கப்பட்டனர். இந்திய அரசு எடுத்த தொடர் முயற்சி காரணமாக தற்போது, போலியோ இல்லாத நாடாக இந்தியா மாறிவிட்டது. இதுபோன்று ஏராளமான தொற்று நோய்கள் ஒழிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு தடுப்பூசி அல்லது தடுப்பு மருந்துகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தடுப்பூசி ஏன் போடப்படுகிறது? எப்போது போடவேண்டும்? குறிப்பிட்ட நாளில் தடுப்பூசி போடவில்லை என்றால், மீண்டும் எப்போது போடுவது? காய்ச்சல், சளி இருந்தால் தடுப்பூசி போடலாமா? போன்ற ஏராளமான சந்தேகங்கள் தாய்மார்களுக்கு இருந்துகொண்டே இருக்கிறது. அந்த சந்தேகங்களுக்கு எல்லாம் தீர்வு அளிக்கிறது இந்த நூல். டாக்டர் விகடனில் தொடராக வெளிவந்து பலரின் பாராட்டைப் பெற்று, தற்போது நூலாக வெளிவந்துள்ளது. குழந்தை பிறந்தது முதல் அளிக்க வேண்டிய தடுப்பூசிகள் என்று இந்திய குழந்தைகள் நல மருத்துவர்கள் கூட்டமைப்பு பரிந்துரைத்த அனைத்து தடுப்பூசிகள் பற்றி விரிவாகக் குறிப்பிட்டுள்ளார் நூலாசிரியர். கர்ப்பிணிகளுக்கும், குழந்தை பெற்ற பெண்களுக்கும்... நோயில்லா, ஆற்றல்மிக்க குழந்தைகளை வளர்த்தெடுக்க சிறந்த வழிகாட்டியாக இந்த நூல் திகழும்.
RS. 81 More...by ச.சிவ.வல்லாளன்
நமது மரபணுக்கள் நம் ஆதாரம். நமது உடல்-மனம்-அறிவுத்திறன் என்று நம்மிடம் எத்தனை உண்டோ அத்தனைக்கும் பொறுப்பு, உடல் செல்களில் பொதிந்துள்ள மரபணுக்கள் (GENES)தான். தலைமுறை தலைமுறையாக தாய்-தந்தை இருவரின் அடிப்படைப் பண்புகளை நம்மிடம் கொண்டுவந்து சேர்த்துப் பாதுகாப்பவை, மரபணுக்களே. மரபணுக்கள் சீராகச் செயல்படுவதற்கு அவைகளுக்கும் ஊட்டச்சத்துகள் இன்றியமையாதது. ஊட்டச்சத்து பற்றாக் குறையால் மரபணுக்களின் செயல்பாடுகளில் பிறழ்ச்சி ஏற்படக்கூடும். மரபணுக்களின் செயல்பாடுகளுக்கு உறுதுணையாகச் செயல்படுகின்றன ஆன்டிஆக்ஸிடன்ட்கள். ஆன்டிஆக்ஸிடன்ட்கள் என்றால் என்ன? ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உணவில் இருந்து பெறும் ஊட்டச்சத்துக்களாகவோ அல்லது உயிர்ச் சத்துக்களாகவோ இருக்கலாம். உடலில் உருவாகும் என்சைம்களாகவும் இருக்ககலாம். ஆனால், எல்லாவகை ஊட்டச்சத்துகளும் உயிர்ச் சத்துகளும் என்சைம்களும் ஆன்டிஆக்ஸிடன்ட்களாக இருக்க முடியாது. ஆன்டிஆக்ஸிடன்ட்களின் பயன் என்ன? நமது உடலின் இயற்கையான மூப்பு வளர்ச்சியை விரைவுபடுத்தி இளமையில் முதுமைப் பருவத்தை உருவாக்கக்கூடிய ஆற்றல்மிக்கவை ஃபிரிரேடிகல்கள். முதுமை தோற்றத்தைக் கொடுப்பதோடு நின்று விடாமல், முதுமை பருவத்துக்கு உரிய நோய்களையும் உருவாக்கிவிடும். OPC ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃபிரிரேடிகல்களை அழிக்கின்றன. அதனால் உடல் முதுமை வளர்ச்சி வேகம் குறைகிறது. இளமையில் முதுமைத் தோற்றம் தடுக்கப்படுகிறது. இத்தகைய ஆன்டிஆக்ஸிடன்ட்களின் அற்புதத்தன்மை குறித்து இந்த நூலில் விளக்கியுள்ளார் நூலாசிரியர். இந்த நூலைப் படித்தால் நம்மை நாம் உணரலாம். நம் உடம்புக்கு எது தேவை என்பதை இந்த நூல் சுட்டிக்காட்டுகிறது. நம்மை நாம் அறிய பக்கத்தைப் புரட்டுங்கள்.
RS. 74 More...by ச.சிவ-வல்லாளன்
நம் எண்ணமே செயல் என்ற முதுமொழியைப் போல் நம் உணவே மருந்து என்ற புதுமொழி தற்போது ஒலிக்கத் தொடங்கியுள்ளது. உணவில் நல்லது? எது கெட்டது? கடந்த சில ஆண்டுகளாகப் பரம்பரை வியாதிகள் என்று அழைக்கப்பட்ட புற்றுநோய், சர்க்கரை வியாதிகள் இன்று அனைவரையும் பீடிக்கும் நிலை உருவாகியுள்ளது. உணவு முறையில் ஏற்பட்ட மாற்றம் நம் உடலில் பல விளைவுகளை ஏற்படுத்திவருகிறது. இன்றைய அவசர உலகத்தில் வைத்தியர் நுழையாத வீடு இல்லை என்பதே நிஜம். பண்டைய உணவுப் பழக்கங்களை நாம் கைவிட்டது மருந்தகங்களை, மருத்துவமனையை நாம் தேடிச் செல்வதற்கு வழிவகை செய்துவிட்டது. இந்த நிலை மாறாதா? நிச்சயம் மாறும். நம்முடைய அடுப்படியே ஒரு நோய் தீர்க்கும் மருந்தகம் என்று அடித்துச் சொல்கிறார் இந்த நூலின் ஆசிரியர் ச.சிவ&வல்லாளன். வெள்ளைப் பூண்டு, மிளகாய், மஞ்சள், வெங்காயம், எண்ணெய் வகைகள் என நாம் அன்றாடம் அடுப்படியில் பயன்படுத்தும் பொருட்களில் காணப்படும் மருத்துவ குணநலன்கள் என்ன, அவற்றின் பயன்கள் என்ன என்று ஆதாரத்துடன் விளக்குகிறார். இதய நோய் உருவாகும் வாய்ப்பை ஆலிவ் எண்ணெய் குறைக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், ஆலிவ் எண்ணெய் நீரழிவு நோயை உருவாக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? எந்த உணவு நம் உடலுக்குத் தேவை, எது தேவையற்றது... என்பதை நீங்கள் அறிய வேண்டாமா? பக்கத்தைப் புரட்டுங்கள். அறிந்துகொள்ளுங்கள்.
RS. 144 More...by டாக்டர். செல்வராஜன்
விரும்பியதைச் சாப்பிடுகிறோம். வேண்டிய அளவுக்குச் சாப்பிடுகிறோம். அளவிலோ ஆசையிலோ நாம் குறை வைப்பதே இல்லை. நெல் கொட்டி வைக்கும் குதிர்போல் கண்டதையும் போட்டு நிரப்பி நம் வயிற்றை எப்போதும் சுமையுடனேயே வைத்திருக்கிறோம். நம் உடலின் இயக்கத்துக்கான சக்தியைக் கொடுக்கும் வயிற்றையும் அதன் சார்பு உறுப்புகளையும் பற்றி நாம் துளியும் வருத்தப்படுவது இல்லை. அளவுக்கு மீறிச் சாப்பிட்டு சிலர் வயிற்றைக் கெடுத்துக் கொள்கிறார்கள். சிலரோ, சாப்பிடாமல் கிடந்தே வயிற்றை வதைத்துக் கொள்கிறார்கள். உடலின் ஆக்கபூர்வ சக்தி மையமாக இருக்கும் வயிற்றை, நாம் எப்படிப் பேணிப் பாதுகாக்க வேண்டும் என்பதை இந்த நூல் மிக அருமையாக விளக்கிச் சொல்கிறது. என்ன சாப்பிடுவது, எப்படிச் சாப்பிடுவது என்பது தொடங்கி, உட்கொள்ளப்படும் உணவு எப்படி செரிமானமாகி சக்தியாக மாறுகிறது என்பது வரை வயிறு தன் வரலாறு கூறுவதுபோல் மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருக்கிறது இந்த நூல். ‘இப்படிக்கு வயிறு!’ என்கிற தலைப்பில் டாக்டர் விகடனில் 30 இதழ்களாக இந்தத் தொடர் வெளியானபோது இதற்குக் கிடைத்த வரவேற்பு மகத்தானது. மருத்துவம் குறித்த விளக்கம் என்றாலே அது யாருக்கும் எளிதில் புரியாததாக இருக்கும் என்கிற கடந்தகால மரபுகளை உடைத்து, எளிய தமிழில் ‘வயிறு’ என்கிற உறுப்பே வரைந்த மடலாக & அதன் வாய்மொழி உரையாடலாக உருவாகி இருக்கும் இந்த நூல், மருத்துவ நூல்களில் தனித்த அடையாளத்தைக் கொண்டது. கல்லீரல், பித்தப்பை, கணையம், மண்ணீரல் உள்ளிட்ட உறுப்புகளின் அன்றாட செயல்முறைகளை விளக்கி, செரிமானம் நடக்கும் விதத்தையும் அதற்கு உறுதுணையாக நாம் செய்யவேண்டிய கடைப்பிடிப்புகளையும் ஓர் ஆசானைப்போல் சொல்கிறது இந்த நூல். மேலும், குடல்வால், அல்சர், உணவு ஒவ்வாமை, அடிவயிற்று வலி போன்ற நோய்களுக்கான சிகிச்சை முறைகளையும் தெளிவாகக் கூறி இருக்கிறார் நூல் ஆசிரியர் டாக்டர் செல்வராஜன். வயிற்றின் வரலாற்றையும், அது செயல்படும் விதத்தையும், அதைக் காக்க வேண்டிய அவசியத்தையும் சொல்லி சரியான நேரத்தில் நமக்குள் எச்சரிக்கை மணி அடிக்கும் மகத்தான மருத்துவ நூல் இது!
RS. 70 More...by பொன்.திருமலை
உணவே மருந்தாக இருந்த காலம் மலையேறி மருந்தே உணவாக மாறிவிட்டது இப்போது. அவசரம் சுமந்த வாழ்க்கை ஓட்டத்தில் உணவுக்காக நிதானம் காட்டக்கூட நமக்கு நேரம் இல்லை. என்ன சாப்பாடு, அதில் என்ன சத்து உள்ளது, நமக்கிருக்கும் பிரச்னைகளுக்கும் சாப்பிடும் உணவுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா என்கிற எவ்விதப் புரிதலும் நமக்கு இல்லை. நாகரிகம், வளர்ச்சி, வேகம் என்கிற அசுரத்தனமான போக்கில் நம் உணவுப்பழக்கங்களில் இருந்து காய்கறிகளைக் கட்டம் கட்டி வைத்துவிட்டோம். வியாதிகள் பெருகிப்போய்விட்ட நிலையில்தான் காய்கறிகளின் அவசியம் நமக்குப் புரிகிறது. இயற்கையின் பெருங்கொடையாக நமக்கு வாய்த்திருக்கும் காய்கறிகள் குறித்து எளிய நடையில் அற்புதமாக எழுதி இருக்கிறார் பொன்.திருமலை. காய்கறிகளில் உள்ள எண்ணிலடங்கா சத்துக்களை எல்லோருக்கும் புரியும்வண்ணம் விளக்கி இருக்கிறார். காய்கறிகள் அனைத்துமே நன்மை தரக்கூடியவை எனப் பொத்தம்பொதுவாகச் சொல்லாமல், எந்தக் காய்கறி உடலைக் குளிர்ச்சியாக்கும், எது உடல் உஷ்ணத்தை அதிகப்படுத்தும், எந்த நேரத்தில் எந்தக் காய்கறியைப் பயன்படுத்துவது, காய்கறிகளை வாங்கும்போது கவனிக்க வேண்டியவை என சிறு குழந்தைக்கும் புரியும் விதமாக எழுதி இருப்பது சிறப்பு. சர்க்கரை நோய் உள்ளவர்களும் ரத்த அழுத்தம் உள்ளவர்களும் தவிர்க்க வேண்டிய காய்கறிகளையும் இந்த நூல் பட்டியல் போடத் தவறவில்லை. காய்கறிகளின் மகத்துவத்தையும் இன்றைய தலைமுறை காய்கறிகளைப் பயன்படுத்த வேண்டிய அவசியத்தையும் ஒருசேர வலியுறுத்தும் உணவு வழிகாட்டி இந்த நூல்!
RS. 77 More...by அன்னமேரி பாட்டி
மருத்துவமனைகளில் முன்பதிவு செய்துகொண்டு மக்கள் காத்துக்கிடக்கும் நிலை இப்போது. ஆனால், நம் முன்னோர்கள் காலத்தில் வீடு தேடி வைத்தியர் வந்து கைவைத்தியத்தால் நோய் தீர்த்தனர். ஒரு காலத்தில் சமுதாய நலன் கருதிய சேவையாக இருந்துவந்த மருத்துவம் இன்றைய காலகட்டத்தில் பணம் கொழிக்கும் துறையாக மாறிவிட்டது. தடுக்கி விழுந்தால் மருத்துவமனை, லேப், ஸ்கேன் சென்டர்கள் என்று மலிந்து கிடக்கின்றன. இந்தச் சூழலிலும் நாட்டு வைத்தியத்தின் தேவை, செயல்பாடு ஒருபுறம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. இயற்கையில் கிடைக்கக்கூடிய புல், பூண்டு, மரம், செடி, கொடி, வேர், பட்டை, இலை, பூ, பிஞ்சு, காய், பழம், வித்து போன்றவற்றைப் பயன்படுத்தி, உடல் கோளாறுகளைத் தீர்க்கும் வைத்தியமே நாட்டு வைத்தியம். இது தலைமுறை தலைமுறையாக நம் நாட்டில் இருந்துவரும் பாரம்பரியமான மருத்துவ முறை. நவீன மருத்துவம் தோன்றுவதற்கு முன்பே தமிழர்கள் மருத்துவத்தில் கைதேர்ந்தவர்களாக இருந்ததற்கான சான்றுகள் இலக்கியங்களில் உள்ளன. ‘பத்து மிளகு இருந்தால் பகையாளி வீட்டிலும் விருந்து உண்ணலாம்’ என்ற பழமொழி இன்றும் வழக்கில் உள்ளது. அன்னமேரி பாட்டி பேச்சுவழக்கில், நம்பிக்கையூட்டும் விதமாக ‘நாட்டு வைத்தியம்’ என்ற தலைப்பில் ‘அவள் விகடனி’ல் அளித்துவந்த ஆலோசனைகளின் தொகுப்பே இந்த நூல். அன்னமேரி பாட்டியின் மருத்துவக் குறிப்புகளை வாஞ்சை மாறாத வார்த்தைகளில் பதிவு செய்திருக்கிறார் மரிய பெல்சின். குழந்தைகள், பெண்கள், ஆண்கள், பெரியவர்கள் என வகைப் படுத்தி, வழிமுறைகளைக் கையாள எளிமையாக்கி இருப்பது இந்த நூலின் சிறப்பு. இந்த நூலில் சொல்லப்பட்டிருக்கும் வழிமுறைகளை முறையாகப் பின்பற்றினால், சிறுநீரகக் கல், மூலம், மாரடைப்பு, புற்றுநோய் போன்றவற்றைக்கூட ஆரம்பத்திலேயே சரிசெய்துகொள்ள முடியும். மொத்தத்தில் இந்த நூல் ஒவ்வோர் இல்லத்திலும் இருக்கவேண்டிய அவசியமான மருத்துவக் கையேடு!
RS. 74 More...by ராஜம் முரளி _ ஜீவா சேகர்
‘அடுக்களையிலேயே இருக்கிறது அழகுக்கலை’ என்பதுதான் நம் முன்னோர்களின் சித்தாந்தம். நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களான பழங்கள், காய்கறி மற்றும் பூ வகைகளைக் கொண்டே அழகைப் பாதுகாக்கும் அற்புதக் கலையை அறிந்துகொள்ள யாருக்குதான் ஆசை இருக்காது? இயற்கையாகக் கிடைக்கும் உணவுப் பொருட்களைக் கொண்டே அகத்துக்கும் புறத்துக்கும் வேண்டிய ஆரோக்கியம் மற்றும் தற்காப்பு முறைகளை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். மா, பலா, வாழை, பேரீச்சை, ஆரஞ்சு, தர்பூசணி... போன்ற பழ வகைகள், மல்லிகை, ரோஜா, சம்பங்கி... போன்ற பூ வகைகள், துளசி, மரிக்கொழுந்து... போன்ற மூலிகை வகைகளின் சிறப்புகளையும், அதில் ஒளிந்துள்ள சத்துகளையும், அவை நமது உடலின் அழகை எப்படிப் பாதுகாக்கிறது என்கிற விவரங்களை விளக்கும் விதமாக ‘இயற்கை தரும் இளமை வரம்’ என்கிற தலைப்பில் ‘அவள் விகடன்’ இதழ்களில் வெளியான கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல். ‘ஒரே கல்லில் இரண்டு மாங்காய்’ என்பது போல, இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தி உடலின் மேற்பரப்பில் எடுத்துக்கொள்ள வேண்டிய அழகுக் குறிப்புகளை ராஜம் முரளியும் அவற்றை உட்கொள்ளும் விதத்திலேயே ஆரோக்கியத்தைக் காத்துக
RS. 75 More...by டாக்டர் கே.ஜி.ரவீந்திரன்
ஆனந்த விகடனில் 'உடலே, ரிலாக்ஸ் ப்ளீஸ்!' ஆயுர்வேத மருத்துவத் தொடர் வந்துகொண்டிருந்த போது, அதைப் படித்த வாசகிகள், 'அன்றாட வாழ்வில் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் மிகவும் அல்லல்படும் எங்களைப் போன்ற பெண்களுக்கு ஆயுர்வேத மருத்துவம் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியுமா?' என்று கேட்டு நிறைய விசாரிப்புகள் வந்துகொண்டிருந்தன. வாசகிகளின் ஆர்வத்தைப் புரிந்துகொண்டு, கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றில் சிசு வளர்ச்சியில் ஆரம்பித்து, பூப்படைவது, தாய்மை அடைவது, முதுமை அடைவது வரை பெண்களின் நடைமுறை வாழ்க்கைக்கு வழிகாட்டும் விதத்தில் அவள் விகடனில் ஒரு கட்டுரைத் தொடர் வெளியிடலாம் என்று தீர்மானித்தோம். 'ஆயுள் வளர்க்கும் ஆயுர்வேதம்!' என்று வெளியான தொடர் எதிர்பார்த்தபடியே ஆரோக்கிய வாழ்வை உணர்த்தும் அற்புதமான தொடராக அமைந்தது. ஆண்களும் அதைப் படித்து, பெண்களின் மன உணர்வுகளைப் புரிந்துகொண்டு குடும்பத்தில் ஒத்துழைப்பு கொடுக்கும் விதமாகவும் அமைந்தது. இதோ, அந்தக் கட்டுரைகள் புத்தக வடிவில் மலர்ந்திருக்கிறது. உணவே மருந்தாகவும், உடல் வளர்ச்சிக்கும் மன வளர்ச்சிக்கும் அதுவே சிறந்த அமுதமாகவும
RS. 90 More...by வெ.தமிழழகன்
உண்ணும் உணவு முறையாலும் உணவுப் பொருள்களாலும் பசியை மட்டுமின்றி, வந்த பிணியை விரட்டியும், நோய் வராமல் காத்தும் கொண்ட பக்குவத்தை அறிந்திருந்தது நம் தமிழ்ப் பாரம்பர்யம். காய்கறிகளிலும் கீரைகளிலும் விதைகளிலும் மருத்துவக் குணங்கள் இருப்பதை நன்கு அறிந்துவைத்து, உணவாக உண்டு ஆரோக்கியமாக வாழ்ந்தனர் நம் முன்னோர். உணவே மருந்து என்ற நிலை மாறி, உணவே விஷமாகும் விபரீத சூழ்நிலையில்தான் இன்றைய தலைமுறை உள்ளது. இதனால், தமிழர்களின் ஆதி மருத்துவ முறையான சித்த மருத்துவத்திற்கு, இளம் தலைமுறையைத் திருப்பவேண்டியது அவசியம். அசுத்தமான தண்ணீரைச் சுத்தப்படுத்தி அதைப் பருகும் நிலைக்குப் பக்குவப்படுத்தும் தேற்றான் கொட்டை முதல் காய்கள், அதன் விதைகள், கொட்டைகளில் உள்ள மருத்துவக் குணங்கள் பற்றியும் அவற்றை எவ்வாறு மருந்தாகப் பயன்படுத்துவது பற்றியும் விளக்குகிறது இந்த நூல். மூளையையும் இதயத்தையும் பலப்படுத்தி நினைவாற்றலைப் பெருக்கும் கடுக்காய், மண்ணீரல், கல்லீரல் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகும் சுண்டைக்காய்.. இப்படி இயல்பாய்க் கிடைக்கும் காய்கள், விதைகள், கொட்டைகளிலிருந்து நம் வீடுகளிலேயே எளிய முறையில் மருந்துகள் தயாரித்து பயன்பெற வழிசொல்லும் நூலிது. காய், விதை, கொட்டைகளின் மருத்துவக் குணங்களை அறிந்துகொண்டு ஆரோக்கியம் பெறுங்கள்!
RS. 150 More...by டாக்டர் பி.எஸ்.லலிதா
மனித உடல் ஒரு தானியங்கி இயந்திரம். உடலின் உள் உறுப்புகள் யாவும் இயற்கையோடு ஒன்றி வாழக்கூடியது. இயற்கையின்றி மனித வாழ்வு இல்லை. பிரபஞ்ச சக்தி இன்றி உடலுக்கு சக்தி இல்லை. மருந்து, மாத்திரை, ஊசி, அறுவை சிகிச்சை, ஸ்கேனிங் என ஓடி ஓடிக் களைத்த மக்கள் அவற்றால் நிரந்தரத் தீர்வு இல்லை என்பதை உணர்ந்துள்ளனர். நம் உச்சி முதல் பாதம் வரையிலான உடலின் முக்கிய உறுப்புகள் உள்ளங்கையில் புள்ளிகளாக அமைந்திருக்கின்றன. எந்தெந்த உறுப்பு எந்தெந்த புள்ளியைக் காட்டுகிறது என்பதை அறிந்து, முறையாக அழுத்தம் கொடுப்பதன் மூலம் உடல் உபாதைக்கு தீர்வு தரலாம் என்கிறது ரெய்கி என்னும் மருந்தில்லா மருத்துவ முறை. இதற்கு மருந்து மற்றும் மாத்திரையோ தேவையில்லை. தினந்தோறும் செய்யக்கூடிய எளிமையான பயிற்சிகள், சிகிச்சைகள் மூலம் நிவாரணம் பெறமுடியும். `உடல் ஆரோக்கியம் பற்றி விழிப்புஉணர்வு அடைந்து ரெய்கி, யோகா, அக்குபஞ்சர் போன்ற மருந்தில்லா மருத்துவ சிகிச்சையை மக்கள் நாடத் தொடங்கியிருக்கிறார்கள். இதனால் மூட்டுவலி, கழுத்துவலி, இதயம், கல்லீரல், முதுகுவலி, மூச்சுத்திணறல், தூக்கமின்மை, இதய நோய்கள், கர்ப்பக்கால பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு உண்டு' என்கிறார் நூலாசிரியர் டாக்டர் பி.எஸ்.லலிதா. மேலும், எந்தெந்த நோய்களுக்கு எப்படி தீர்வுபெற முடியும் மற்றும் சுறுசுறுப்பான, துடிப்பான, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ்வது சாத்தியம் என்பதை எடுத்துரைக்கிறது இந்த நூல். டாக்டர் விகடனில் `மருந்தில்லா மருத்துவம்' என்கிற பெயரில் வெளியான கட்டுரைகள், நிரந்தர ஆரோக்கியத்தை உங்கள் கையில் கொடுக்கக் காத்திருக்கிறது.
RS. 110 More...