Cart is Empty
by மருத்துவர் கு.சிவராமன்
ஆறாம் திணை முதல் பாகம் ஏற்கெனவே புத்தகமாக வெளியிடப்பட்டு, அதன் தொடர்ச்சியான இரண்டாம் பாகம் இது. தற்காலத்தில் நாம் உண்ணும் உணவே நோய்களை உண்டாக்குகிறது. அதைத் தவிர்த்து நம் பாரம்பரிய உணவுகளைக் கொஞ்சம் அக்கறையுடன் உண்டாலே ஏராளமான நோய்கள் வராமல் காக்கலாம் என்பதை நூல் ஆசிரியர் மருத்துவர் கு.சிவராமன் முதல் பாகத்திலிருந்து தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். தற்காலத்தில் பொருத்தம் இல்லாத தயாரிப்பில் உருவான ‘பஃப்’ செய்யப்பட்ட பாக்கெட் நொறுக்குச் சிற்றுண்டிகளான, சிப்ஸ், கார வகைகள், ஏரியேட்டட் டிரிங்க்ஸ் ஆகியவற்றை உண்ணவே இளைஞர்கள், யுவதிகள், சிறுவர்கள் எல்லோரும் விரும்புகின்றனர். இவற்றால் உடலுக்கும் பலம் ஏற்படுவதில்லை. இவை நோயையும் வரவழைக்கின்றன. நாம் எதை உண்ண வேண்டுமோ அதை உண்ணாமல் உண்ணத் தகாததை உண்கிறோம். இந்த விஷயத்தைப் பற்றிய தெளிவு இன்மையே இதற்கெல்லாம் காரணம். மேலும், வியாபார நோக்கில் அதிக விளம்பரங்கள் செய்து வெளிநாட்டு நிறுவனங்கள் இதை நம் மேல் திணிக்கின்றன. இதைத் தெள்ளத் தெளிவாக பொட்டில் அடித்தாற்போல விளக்குகிறார் நூல் ஆசிரியர். கூடவே பாரம்பரிய உணவுகளை சுவையாக, எந்தெந்த மாதிரி தயாரிக்கலாம், அதன் மருத்துவ குணம் போன்றவற்றையும் எழுதியிருக்கிறார். ஆனந்த விகடனில் தொடராக வந்தபோதே வாசகர்களின் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்ற கட்டுரைகள் இவை. இவற்றில் சில ஏற்கெனவே முதல் பாகமாக முழுப் புத்தகமாக வெளி வந்து வாசகர்களின் பேராதரவைப் பெற்றது. அதைத் தொடர்ந்து மீதியுள்ள அனைத்துக் கட்டுரைகளும் தொகுக்கப்பட்டு இப்போது நூல் வடிவில் இரண்டாம் பாகமாக உங்கள் கைகளில் தவழ்கிறது. இந்தப் புத்தகத்தைப் படித்தால் ‘நம் வருங்கால சந்ததியை, குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்க்க வேண்டும். அதற்கு பாரம்பரிய உணவுதான் மருந்து. அந்த உணவை விதவிதமாகப் பக்குவமாகத் தயாரிப்பதில்தான் வெற்றி அடங்கியிருக்கிறது’ என்ற விழிப்பு உணர்வு நிச்சயம் ஏற்படும்.
RS. 102 More...by நெய்வேலி பாரதிக்குமார்
இயற்கை அளித்த வரங்கள் அனைத்துமே மனித குல நன்மைக்குத்தான். அந்த வகையில் இயற்கை நமக்கு அளித்த கொடை கனி வகைகள். மரங்கள், பூக்கள், பழங்கள் இல்லாத மனித வாழ்வை நினைத்துப் பார்க்க முடியுமா? இவை இல்லாவிட்டால் உயிரினங்கள் இல்லை. ஆம்! மரம் காற்றில் கார்பன் டை ஆக்ஸைடை எடுத்துக் கொண்டு நமக்காக ஆக்ஸிஜனை வெளியே விடுகிறது. மனிதகுல ஆரோக்கியத்திற்காக கனிகளை நமக்குத் தருகிறது. இயற்கை தந்த கனிகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சுவை. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தன்மை. ஒவ்வொன்றிலும் அற்புத சக்தி ஒளிந்துள்ளது. சிறிய கனியான நெல்லிக்கனி நமக்கு சுறுசுறுப்பைத் தருகிறது. அற்புத ஆப்பிள் வைட்டமின்களை அள்ளித் தருகிறது. தித்திக்கும் அத்திப்பழம், ரத்தத்தை சுத்திகரித்து பெரிய நோய்களைப் போக்குகிறது. கனிகளில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள் - புதையல்கள் போன்றவை. எத்தகைய சித்திகளையும் அள்ளித்தரும் சக்தி கனிகளுக்கு உண்டு. இதனைப் ‘பழம் பெருமை பேசுவோம்’ என்ற தலைப்பில் நூலாக்கித் தந்துள்ளார் நூலாசிரியர். கரியமேனி கொண்ட சிறிய நாவல் பழம்தான், சிறுநீரகத்தில் உள்ள கற்களை நீக்கவல்லது. கந்தக பூமியில் விளையும் முந்திரிப்பழம் நீரிழிவு நோயைப் போக்கும். இதுபோன்ற எத்தனையோ பழங்களின் வரலாற்றையும், அவை உண்பதால் குணமாகும் நோய்களையும், பழங்கள் நமக்குத் தரும் சத்துக்களையும், இலக்கியங்களில் பழங்களின் தொன்மையையும், பழங்களை வைத்து சத்துள்ள உணவு வகைகளை சமைப்பது குறித்தும், பழங்கள் குறித்த பழமொழிகளையும் அடுக்கியுள்ளார் நூலாசிரியர். கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது முதுமொழி. ஆனால், ‘பழங்கள் இல்லாத வீடு பாழடைந்த வீடு’ என்பது பழங்களைப் பற்றிய புதுமொழி. பழங்களைப் பற்றி தெரிந்து, நம்மை காத்துக்கொள்ள வாருங்கள்... ‘பழம்’ பெருமை பேசுவோம்.
RS. 102 More...by மருத்துவர் கு.சிவராமன்
நாம் தொலைத்து வருவது நல்ல உணவு, நல்ல உடலுறுதி, நல்ல உள்ள மகிழ்வு, நல்ல சுற்றுச்சூழல். பாரம்பரிய எச்சங்களை, அறம்சார் அறிவியலின் துணைகொண்டு மீட்டெடுப்பது மட்டும்தான் மிச்சமிருக்கும் ஒரே நம்பிக்கை. - மருத்துவர் கு.சிவராமன். இயற்கையை மீறி நடக்கும் செயல்கள் யாவும் சிறப்புடன் அமைந்ததில்லை என்று சரித்திரம் சொல்கிறது. அது உணவுக்கும் பொருந்தும், மருத்துவத்திற்கும் பொருந்தும். உடலே உயிர்.. உணவே மருந்து என்ற திட நுட்பமான உண்மை விளங்கினால் நோயற்ற வாழ்வு நிச்சயம். அவசர கதியான உலகில் மனித வாழ்வியலில் எங்கு நோக்கினும் கலப்படம் என்பது இரண்டற கலந்துவிட்டது. இதன் விளைவு புதிய புதிய நோய்களின் உற்பத்தி. இயற்கை விதிகளை மீறி சூழலை மாசுபடுத்துவதின் விளைவாக விளையும் பாதிப்புகள் மனிதகுல அழிவுக்கு வழிவகுக்கும். இந்த பேரபாயத்தை நாம் உணர வேண்டும். உணவும், சூழலும், மருத்துவமும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. ‘பாரம்பரிய அனுபவங்களைக் கட்டவிழ்க்க, பாரபட்சமற்ற பாரம்பரிய மருத்துவப் புரிதலும் வேண்டும்; நவீன விஞ்ஞான ஆய்வுகளும் வேண்டும். இரண்டில் எது குறைந்தாலும் விடை கிடைக்காது. இங்கே முட்டுக்கட்டையாக இருப்பது இரண்டின் ஒருங்கிணைந்த பார்வையும் இல்லாததுதான்’ என்கிறார் மருத்துவர் கு.சிவராமன். இயற்கையோடு இணைந்த வாழ்வே பெருவாழ்வு. நாம் உண்ணும் உணவு தூய்மையானதாக, கலப்படம் அற்றதாக இருக்க வேண்டும். அதனை உற்பத்தி செய்யும் நிலத்தை பாதுகாக்க வேண்டும். நமக்கெல்லாம் சோறுபோடும் விவசாயி வயிறு நிரம்ப வேண்டும். இதற்கு நாம் என்ன செய்யவேண்டும். ‘சுற்றமும் சூழலும் நட்பும்’ என்ற இந்தப் புத்தகத்தில் நம் நிகழ்கால வாழ்வுக்கும், எதிர்கால வாழ்வாதாரத்திற்கும் அடிப்படை என்ன என்பதை சுட்டிக்காட்டுகிறார் நூலாசிரியர். ‘நலவாழ்வுக்கு நல்ல தூக்கமும் அக மகிழ்வும் இயல்பாய் நிகழும் வாழ்வியல் வேண்டும். அதற்கு வாழ்வின் உயரங்களை விட சம நிலங்களைப் பற்றிய புரிதல் வேண்டும். பாரம்பரியம் பலகாலமாய்க் கற்றுக் கொடுத்தது அதைத்தான்’ எனும் கு.சிவராமன் நம் வாழ்வை நெறிப்படுத்தும் முறைகளையும் வகுத்தளிக்கிறார். வாருங்கள் நாமும் அவரோடு இணைவோம். நம் பாரம்பரியம் காக்க...
RS. 56 More...by டாக்டர் பா.பாசுமணி
மனிதன் உணவு சாப்பிடத் தொடங்கியபோதே செரிமானத்துக்கான உறுப்புகள் இயங்க ஆரம்பித்தன. வாய், பற்கள், உணவுக் குழாய், சிறுகுடல், பெருங்குடல், கணையம் போன்ற பல உறுப்புகள் செரிமானத்துக்கானவை. இந்த உறுப்புகள் உணவை சரியாய் உள்வாங்கி தேவையானவற்றை எடுத்துக்கொண்டு தேவையற்றதை வெளியேற்றும் பணியை செவ்வனே செய்துகொண்டிருக்கின்றன. உயிர்வாழ இன்றியமையாதது உணவு மட்டுமே, மனிதன் உயிர் வாழ சக்தியைப் பெற சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும். சுவைக்காக மட்டும் அல்ல.. சத்தானதாகவும், உறுப்புகள் சீராக இயங்கவும் ஆரோக்கியத்துக்கு ஏற்றதாக இருப்பது அவசியம். நம் பழந்தமிழர் உணவு முறைகள் அற்புதமானவை. ஒவ்வோர் உணவையும் செரிமானத்துக்கு ஏற்ற வகையில் எந்த முறையில் சமைக்க வேண்டும் என்பதை உணர்ந்து சமைத்தவர்கள் அவர்கள். ஒருவர் உணவை மெல்லாமல் விழுங்கினால் செரிமான மண்டலம் ஓயாமல் இயங்கும் நிலை ஏற்படுகிறது. இதனால், செரிமான உறுப்புகள் விரைவில் பாதிப்படைவதோடு நம் அன்றாட வேலைகளைச் செய்ய முடியாமல் தடைபடும். சாப்பிடுவதில் நேர ஒழுங்கின்மை, ஏதாவது ஒரு வேளை அதிகமாகச் சாப்பிடுவது, ஒரு வேளை முற்றிலுமாக உணவைப் புறக்கணிப்பது போன்றவை, உடல் உபாதைகளை ஏற்படுத்தும். செரிமானப் பணி எப்படி நடைபெறுகிறது? எந்த உணவைத் தவிர்த்து எந்தெந்த உணவை உண்ண வேண்டும்... என செரிமானம் குறித்த பல கேள்விகளுக்குப் பதில் கூறியிருக்கிறார் டாக்டர் பா.பாசுமணி. அளவான எடை, சத்தான உணவு, சரியான பொசிஷனில் படுத்து உறங்குவது என மூன்று விஷயங்களை கடைப்பிடித்தாலே செரிமானக் கோளாறைத் தவிர்க்கலாம். இதுபோன்ற செரிமானத்துக்கான செய்திகளை உள்ளடக்கி டாக்டர் விகடனில் ‘இனி எல்லாம் சுகமே’ எனும் பெயரில் வெளியான தொடர், ‘செரிமானம் அறிவோம்’ எனும் தலைப்பில் நூல் வடிவம் பெற்று இப்போது உங்கள் கைகளில்...
RS. 85 More...by மருத்துவர் கு.சிவராமன்
தற்போது உருவாகியுள்ள வாசிப்புப் பழக்கம் உடலைக் குறித்தும் சிந்திக்க வைத்துள்ளது. அக,புற நெருக்கடிகளால் சிக்கித் தவிக்கும் மனிதனை அதிலிருந்து விடுதலை செய்யும் அருமருந்தாக தற்போது புத்தகங்கள் இருக்கின்றன. புத்தகங்கள் தற்போது இரண்டு பணிகளைச் செய்ய வேண்டியுள்ளது. ஒன்று, மனதை நெருக்கடியில் இருந்து விடுவிப்பது; மற்றொன்று உடலை நோயிலிருந்து காப்பது. மருத்துவரிடம் செல்லாமல் கிடைக்கும் மருந்துகளைக் கொண்டு நம்முடைய நோயைக் குணமாக்கிக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தால் நாமும் மருத்துவர்தானே! பாட்டிகளின் கை வைத்தியத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது. அவர்களின் நினைவுகளில் ஒரு மருத்துவ ஆய்வுக்கூடமே அன்று இருந்தது. எந்தவித பின்விளைவுகளும் இல்லாத அத்தகைய சித்த மருத்துவத்தை மக்கள் இன்று அதிக அளவில் நாடத் தொடங்கியுள்ளனர். இதில் ஆனந்த விகடனின் பங்களிப்பு மிக முக்கியமானது. ஆறாம் திணைதான் அதற்கான வாசல். ஆறாம் திணை தந்த மருத்துவர் கு.சிவராமனின் மற்றுமொரு படைப்புதான் இந்த நூல். பாட்டிக்கும் பேத்திக்குமான உரையாடல் வடிவில் அனைத்து விஷயங்களையும் தந்திருப்பது இந்தப் புத்தகத்தின் சிறப்பு. மூட்டுவலிக்கு முடக்கத்தான், ஆழ்ந்த தூக்கத்துக்கு அமுக்கராங் கிழங்கு, பித்தத் தலைவலிக்கு சுக்குக் கஷாயம், எலும்புக்குக் கேழ்வரகு, கண்ணுக்குத் தினை, அரிப்பைப் போக்க அருகம்புல் சாறு என்று நோயைப் போக்குவதற்கு மட்டும் அல்லாது தோல் சுருக்கம் மறைய தோசை மாவு, மீசையை மழிக்க மூலிகை திரெடிங் என்று அழகுக் குறிப்புகளையும் தந்திருப்பது கூடுதல் சிறப்பு. டாக்டர் விகடனில் வெளிவந்தபோதே மிகுந்த வரவேற்பைப் பெற்ற தொடர் இப்போது நூல் வடிவில் உங்கள் கைகளில். உங்கள் பாட்டி விட்டுச்சென்ற வைத்திய முறைகளை இந்தப் புத்தகம் செய்யும் என்பதில் ஐயமில்லை!
RS. 60 More...by டாக்டர் எல்.மஹாதேவன்
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். மனித சமுதாயம் நித்தம் நித்தம் விதவிதமான நோய்த் தாக்குதல்களுக்கு ஆளாகிக் கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில், லட்ச லட்சமாகப் பணம் இருந்தாலும் நாம் செல்வமற்றவர்கள்தான். நோய்த் தாக்குதல் என்பது இன்று பரவலாகக் காணப்படுகிறது. விவசாயத்தில் பயன்படுத்தப்படும் ரசாயன உரங்களாலும், சுகாதார சீர்கேட்டாலும், உணவுப் பழக்கத்தாலும், மனப் பிரச்னைகளாலும் என, பல்வேறு காரணங்களால் உடலில் நோய்கள் உருவாகின்றன. இந்த நோய்களை எதிர்கொண்டு வாழ மனிதனுக்கு ஆறுதலாக, ஆதரவாக உள்ளது மருத்துவம். இன்று மிகவும் பிரசித்தி பெற்றதாக, அறுவை சிகிச்சையில் முன்னேறியதாக ஆங்கில மருத்துவம் இருந்தபோதும், இதற்கெல்லாம் ஆரம்பமாகவும், முன்னோடியாகவும் அமைந்தது நம் நாட்டின் ஆயுர்வேதம் எனலாம். அப்படிப்பட்ட ஆயுர்வேத மருத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவரும் நூல்தான் தேவமருந்து. நோய்களுக்கு ஆயுர்வேத மருத்துவ முறையில் என்னென்ன பெயர்கள், நோய்களை உருவாக்கும் காரணிகள் எவை போன்றவற்றையும், நோய்களைத் தீர்ப்பதற்கான மூலிகைகளைப் பற்றியும், அந்த மூலிகைகள் ஆயுர்வேதத்தில் என்னென்ன பெயர்களைக் கொண்டுள்ளன என்பனவற்
RS. 74 More...by விகடன் பிரசுரம்
‘வசீகரிக்கும் அழகைப் பெற, வாசனைமிக்க திரவியங்களுடன் கூடிய பல்வேறு க்ரீம்களை வாரிப் பூசிக்கொள்ள வேண்டும்’ என தோன்றுவது இயல்பு. ஆனால், பெற்றோர் நமக்கு அளித்துள்ள மேனியை எந்தவித செயற்கை வஸ்துகளாலும் சீரழித்துவிடாமல் இயற்கையான முறையில் காப்பதே உண்மையான அழகு! பொதுவாக, அழகுக் குறிப்புகள் என்றாலே அதை அறிந்துகொள்வதில் அனைவருக்கும் விருப்பம் உண்டு. ஆனால், அன்றாட நடவடிக்கைகளின் மூலமே அழகுக்கு அழகு சேர்க்க முடியும். ஆனந்த விகடன் இதழ்களில் ‘டாக்டர் விகடன்’ பகுதியில், அழகுக் குறிப்புகள், ஆரோக்கியத்தை காக்கும் வழிமுறைகள்... என, பல துறைகளில் ஒளிவீசும் பிரபலங்களின் ஃபிட்னெஸ் ரகசியங்கள் கட்டுரைகளாக வெளிவந்து வாசகர்களின் அமோக வரவேற்பைப் பெற்றன. தமிழச்சி தொடங்கி அமலா பால் வரையிலான அழகுப் பெண்களின் ஃபிட்னெஸ் ரகசியங்கள், அழகை ஆராதிக்கும் அனைவருக்கும் வழிகாட்டலாக அமைந்திருக்கிறது. ‘எளிமையே அழகு’, ‘இயல்பும் இயற்கையுமே அழகு’, ‘புன்னகை மாறா முகமே அழகு’... என வி.ஐ.பி. பெண்கள் சொல்லியிருக்கும் அர்த்தங்கள் விதம் விதமானவை. சரியான உணவு முறை, உடற்பயிற்சி, ஆயில் புல்லிங் செய்யும் முறை, ரத்த அழுத்தம் தொடங்கி முகப்பரு வரை அனைத்துக்கும் தெளிவான தீர்வு... என உடல் அழகை மேம்படுத்தும் பல தகவல்கள் இந்நூலில் இருக்கின்றன. அழகுச் சாதனப் பொருட்கள் எதையும் பயன்படுத்தாமல், நாம் உண்ணும் உணவின் மூலமே அனைவரையும் அசரவைக்கும் அழகைப் பெற முடியும் என்பதை இந்த நூல் தெளிவாக விளக்குகிறது.
RS. 60 More...by டாக்டர் சு.முத்துச்செல்லக்குமார்
தந்தையின் அன்பைவிட தாயின் அன்பே மகத்தானது என்பதற்கு இரண்டு சாட்சிகள். தாயைப்போல் ஒரு குழந்தையை தந்தையால் 10 மாதங்கள் வயிற்றில் சுமக்க முடியாது. அடுத்தது, குழந்தையின் சக்திக்கும் வளர்ச்சிக்கும் உதவும் விதமாக, தன் ரத்தத்தையே பாலாக்கிக் கொடுக்கும் ஒரு தாயைப்போல் தந்தை செயல்பட முடியாது. கருப்பையும், மார்பகமும் பெண் என்கிற பெருந்தெய்வத்துக்கு கிடைத்த மகத்தான வரங்கள். வரமே சாபமாவதுதானே மனிதகுல வாழ்வின் வழக்கம். இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு உண்டாகும் பிரச்னைகள் பெரும்பாலும் மார்பகம் மற்றும் கர்ப்பப்பை சம்பந்தப்பட்டதாகவே இருக்கின்றன. கர்ப்பப்பை குறித்த விழிப்பு உணர்வு சமீபகாலமாக அதிகமானாலும், மார்பகம் குறித்து அந்த அளவுக்கு அறிவுறுத்தல்கள் எழவில்லை. அதனை நிறைவு செய்யும் விதமாகவே மார்பகப் பராமரிப்பு குறித்து தெளிவான விவரங்களோடு இப்படி ஒரு புத்தகத்தை எழுதி இருக்கிறார் மருத்துவர் சு.முத்துச்செல்லக்குமார். மார்பகப் பாதிப்புகள் குறித்தும், அதில் இருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறைகள் குறித்தும் படங்களுடன் விளக்கிச் சொல்லும் இந்தப் புத்தகம், பெண்ணாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் வணங்கத்தக்க வழிகாட்டியாக உதவும்!
RS. 53 More...by டாக்டர் மோகன் ராஜன், டாக்டர் சுஜாதா மோகன்
உயிரின் ஒளி கண்... சாதாரண தலைவலி காய்ச்சல் முதற்கொண்டு எந்த நோய்க்கும் சித்தா, ஆயுர்வேதம், இயற்கை மருத்துவம், அக்குபஞ்சர், அலோபதி என எந்த மருத்துவரைப் பார்த்தாலும் முதலில் கண்ணைத்தான் சோதிக்கிறார்கள். கண்ணை மட்டுமே சோதித்து அதன் மூலம் உடல் பிரச்னைகளை ஆராய்ந்து சிகிச்சை அளிக்கும் இரிடாலஜி ஒரு தனி மருத்துவத் துறை. இன்றைய சூழலில் இயற்கையிலிருந்து அந்நியப்பட்ட நச்சுத்தன்மை வாய்ந்த உணவையே நாம் சாப்பிட வேண்டியிருப்பதால் கண் சார்ந்த பிரச்னையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. இத்துடன் கண்ணுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் இரு சக்கர வாகனம் ஓட்டுதல், அதிக வெளிச்சம் நிரம்பிய சூழலில் நீண்ட நேரம் இருப்பது, கணினித் திரையை நீண்ட நேரம் உற்றுப் பார்ப்பது, ஆகியவை நம் அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாததாகிவிட்டது. எனவே இவை சார்ந்த கண் பாதிப்புகள் யாருக்கும் எந்த நேரத்திலும் நேரலாம். எந்தெந்த அறிகுறிகள் என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்தும், அதற்கு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன, அவற்றுக்கான மருத்துவத் தீர்வு என்ன, எப்படிப்பட்ட வாய்ப்பை நாம் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது போன்ற நுணுக்கமான அம்சங்களை மிகுந்த அக்கறையுடனும் எளிதில் புரியும்படியாகவும் தங்கள் கள அனுபவத்துடன் எழுதியுள்ளனர் டாக்டர்கள் பேரா. மோகன் ராஜன் மற்றும் சுஜாதா மோகன். கண் நலம் சார்ந்த நூல் என்பதால் வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களையும் கடந்து புதிய வாசகர்களையும் சென்றடையும் பயனுள்ள நூல் இது என்று நம்புகிறோம்.
RS. 63 More...by முரளி கிருஷ்ணன்
இயற்கை மருத்துவ முறை நம் மண்ணில் காலங்காலமாகக் கடைபிடிக்கப்பட்டு வந்தது. ஆனால், ஆங்கில மருத்துவம் தீவிரமாக வளர்ந்ததால் நாட்டு மருத்துவம் பின்னுக்குத் தள்ளப்பட்டது. ஆங்கில மருந்துகளோ பக்கவிளைவுகளை ஏற்படுத்திவருகின்றன. மரபு வழி மருத்துவம் பக்கவிளைவை ஏற்படுத்துவதில்லை. இதனால், சமீபகாலமாக மரபு வழி மருத்துவமே மாற்று வழியாக உலகில் வலம் வருகிறது. மனித சமுதாயத்தை வாட்டும் பல நோய்களுக்கு அருமருந்தை அள்ளித் தருகிறது இந்த மருத்துவ முறை என்றால் அது மிகையாகாது. உதாரணமாக குடி நோய் என்பது மனித சமுதாயத்தை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நோயாக உள்ளது. இதைத் தீர்க்க எந்த மருத்துவ முறையிலும் சரியான தீர்வு இல்லை. ஆனால், மரபு வழி மருத்துவத்தின் மூலம் குடி நோயைக் குணப்படுத்த முடியும் என்கிறார் நூலாசிரியர் முரளி கிருஷ்ணன். குடிக்க வேண்டும என்கிற எண்ணம் வரும்போதெல்லாம் லவங்கப்பூ, கிராம்பு இவற்றைச் சம அளவு சேர்த்து வாயில் போட்டு மென்று சுவைக்க வேண்டும். வில்வ இலைக் கொழுந்தை தினமும் காலை, மாலை இரண்டு வேளை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வெந்நீர் குடிக்க வேண்டும். இளம் தென்னம் மட்டையை இடித்து சாறு பிழிந்து தினமும் காலை, மாலை இரண்டு வேளை வெறும் வயிற்றில் நூறு மில்லி அளவு குடிக்க வேண்டும். வெந்தயத்தை தூள் செய்து தினமும் காலை மாலை இரண்டு வேளை ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டு வெந்நீர் குடிக்க வேண்டும்... இதுபோன்ற எண்ணற்ற சிகிச்சை முறைகளை சொல்லியிருக்கிறார் நூலாசிரியர். பெண் மலடு நீங்க, நெஞ்சு வலி சரியாக, மஞ்சள் காமாலை நோயை விரட்ட, தொண்டை வலி, தூக்கமின்மை, நகச்சுற்றி, நினைவாற்றல் பெருக, நீர்க் கடுப்பு, படை, பல் வலி, படுக்கைப் புண், மாதவிடாய் கோளாறு, மாரடைப்பு... பல நோய்களுக்கு மரபு வழி மருத்துவத்தை இந்த நூல் சொல்லித்தருகிறது. கேள்விப்படக்கூடிய, நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும் மருந்துகளைப் பயன்படுத்தினாலே தீராத நோய்களும் தீரும் என்கிறது இந்த நூல். இது நம் மருத்துவத்தைப் பற்றிய பயனுள்ள நூல் என்பதைப் படித்தால் உணர்வீர்கள்.
RS. 74 More...