Cart is Empty
by டாக்டர் க.சம்பத்குமார்
நோய்க்கு எதிரான ஓர் ஆற்றல் இருந்தால்தான் நோய் குணமடையும். இந்த நோய் எதிராற்றலை எங்கே கண்டறிவது? நோய் எதிராற்றல் என்பது தினசரி நம்முடைய உடலில் நடந்து கொண்டிருக்கும் செயல்பாடுதான். நோய்க் கிருமிகள் உடலைத் தாக்கும்போது இயற்கையாகவே நம் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு செல்கள் அவற்றை அழிக்கின்றன. சில செல்கள் தங்களால் அழிக்கப்பட்ட கிருமியை நினைவில் வைத்துக்கொண்டு மீண்டும் அதுபோன்று ஏதேனும் உடலுக்குள் நுழைந்தால் அவற்றின் தாக்குதலிலிருந்து நம்மைப் பாதுகாக்கின்றன. இயற்கையிலேயே அதிசயமாக அமைந்திருக்கும் இந்தக் கட்டமைப்பு நமது உடலுக்குள் இயங்கி எந்த நோய்க்கும் நாம் ஆட்படாமல் பாதுகாக்கிறது. நோய் எதிராற்றலை நமக்கு அளிப்பவை திசுக்களே. நோய்க் கிருமிகளிடமிருந்து நம்மைப் பாதுகாத்தல், நச்சுகள், தேவையற்ற கழிவுகள் போன்றவற்றை நீக்கி உடலைத் தூய்மையாக வைத்துக்கொள்ளுதல் ஆகியவற்றைத் திசுக்களே செய்கின்றன என்கிறார் இந்த நூலின் ஆசிரியர் மருத்துவர் க.சம்பத்குமார். ஜலதோஷம், ஃப்ளூ போன்ற தொற்று நோய்களை விரட்டியடிக்க அதிகத் தண்ணீர் குடிப்பது நல்லது. இது கிருமிகளையும் அவற்றின் நச்சுப் பொருட்களையும் வெளியேற்ற நிணநீர் மண்டலத்துக்கு பெரிதும் உதவும். ஆனால், தண்ணீரை எப்படிக் குடிப்பது, எவ்வளவு நீரை உட்கொண்டால் நோய் எதிர்ப்பாற்றலைப் பெறலாம் போன்றவற்றை ஆய்வுத் தகவல்களுடன் அள்ளித் தருகிறார் நூலாசிரியர். எலும்பும் தோலும் போர்த்திய மனித உடம்புக்குள் எத்தனை அதிசயங்கள்? இந்த நூலைப் படித்து முடிக்கும் போது, உங்கள் உடலுக்கு நீங்களே ஆற்றல்மிக்க மருத்துவராகும் அதிசயமும் நடக்கும்.
RS. 84 More...by டாக்டர் எம்.செந்தில்குமார்
ஆ... ஊ.. அச்... இந்த கதறல்களை நாம் கேட்பது சர்வசாதாரணமாகி விட்டது. மனித குலத்தின் முன் நிற்கும் தலையாய பிரச்சனை எது என்று கேட்டால் வலி என்றுதான் பெரும்பாலோர் சொல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. உடல் வலி, கைவலி, கால்வலி, மூட்டு வலி, முழங்கால் வலி, முதுகுத்தண்டு வலி என உயிரை எடுக்கக்கூடிய வலியின் வேதனையை சொல்லி மாளாது என்றுச் சொல்பவர்களுக்காகத் தான் இந்த புத்தகம். வலி என்றால் என்ன? வலி தரும் வேதனைகள் அல்லது விளைவுகள் எத்தகையது? வலியை வரும்முன் தடுப்பது எப்படி? மொத்தத்தில் வலி இல்லாமல் வாழ்வது எப்படி? என வலிதீர்க்கும் வழிகளை அடுக்கியிருக்கிறார் இந்நூலாசிரியர். வலியை தீர்ப்பது என்பது சுலபமான காரியமா? நடைபயிற்சியே பெரும்பாலான வலிகளுக்கு சிறந்த நிவாரணி என்கிறார் நூலாசிரியர். நெஞ்சை நிமிர்த்தி தரையைப் பார்க்காமல் இருபது அடி முன்னோக்கிப் பார்த்து நடக்க வேண்டும், கைகளை ஆட்டி பக்கவாட்டில் உயர்த்தாமல் அதேவேளை நெஞ்சுப்பகுதியை விட உயர்த்திவிடாமல் நடந்து செல்ல வேண்டும் , தினமும் 30 நிமிடம் நடப்பதே வலியை விரட்டும் என்று சொல்கிறார் நூலாசிரியர். என்ன செய்தாலும் வலி போகவில்லை. உயிரை எடுக்கிறதே வலி என்று வருத்தப்படுபவர்களின் துக்கத்தைப் போக்க, எந்த மாத்திரையும், வேதிப்பொருள் கலந்த வலி நிவாரணியும் இல்லாமல், பச்சைக்கலர், சிவப்புக்கலர் பெயின் பாம்கள் தடவாமல் வலியை குணமாக்க வழிகள் இந்நூலில் ஏராளமாக உள்ளன. படியுங்கள்... வலி உங்களை விட்டு விலகும்.
RS. 91 More...by யசோதரை கருணாகரன்
இன்றைய தினம் பெரும்பான்மை மனிதர்களை கவலைப்பட வைக்கக்கூடியது எது தெரியுமா? அது நீரிழிவு நோய்தான். சர்க்கரை என்றால் வாய் இனித்த காலம் என்று ஒன்று இருந்தது. இப்போது யாரிடமாவது சர்க்கரை என்று சொல்லிப் பாருங்களேன்; நீரிழிவு நோயை மக்கள் சர்க்கரை நோய் என்று பயன்படுத்துவதால் சர்க்கரை என்றால் இப்போதெல்லாம் சோகம் ஆட்கொண்டு விடுகிறது. நீரிழிவு நோய் வந்தால் என்ன ஆகும்? ‘எப்படி இருந்த ஆளு இப்போ இப்படி ஆயிட்டாரே...’ என மற்றவர்கள் கேட்கத் தோன்றும் அளவுக்கு உடல் மெலிந்துவிடும். உயிரையும் பறிக்கும். நீரிழிவு நோய் எதனால் வருகிறது? இதற்கு பல காரணங்களைச் சொல்கின்றனர். இது பரம்பரை நோய். மேலும், உடல் பருமன், பல்வேறு நோய்களுக்காக உட்கொள்ளும் மருந்துகளால் ஏற்படும் பக்கவிளைவு, எந்தவித உடற்பயிற்சியும் இல்லாமல் உடம்பை வளர்ப்பது மற்றும் எந்த நேரமும் கணக்கு வழக்கு இல்லாமல் சாப்பிடுவது என நீரிழிவு நோய்க்கான காரணங்களை அடுக்குகின்றனர் மருத்துவ வல்லுநர்கள். சரி, இந்த நோய் நடுத்தர மற்றும் முதியோர்களை மட்டும்தான் தாக்குமா? இல்லை... அதற்கும் மேலே... 6 மாதக் குழந்தை தொடங்கி 60-ஐத் தாண்டிய முதியோர் வரை அனைவரையும் நீரிழிவு நோய் தாக்குகிறது. இதனைத் தடுக்க என்ன வழி? அதுதான் உணவுக்கட்டுப்பாடு. மாவுச்சத்துள்ள பொருட்களையும், கொழுப்புச்சத்துள்ள பொருட்களையும் குறைப்பது நீரிழிவைக் கட்டுப்படுத்தும். ‘நாம் சாப்பிடும் அரிசியே மாவுச்சத்து நிரம்பியது தானே?’ என்று கேள்வி கேட்பவர்களுக்குத்தான் இந்த அரிய புத்தகம். நீரிழிவு நோயாளிகள் எந்த உணவு சாப்பிடலாம்? அந்த உணவு வகைகள் என்னென்ன? இளம் வயது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவு எது? உங்கள் எண்ணங்களுக்கு ஏற்றாற்போல் அடுக்குகிறார் உணவு ஆலோசகர் யசோதரை கருணாகரன். உணவைக் கட்டுப்படுத்தினால் உடல் உறுதியாகும். உடல் உறுதியானால் நீரிழிவு ஓடிப்போகும். கட்டுப்பாடுள்ள உணவுகளை அடையாளம் காட்டி, உணவுக் குறிப்புகளையும் வகைப்படுத்துகிறது இந்த நூல். நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த நூல் புத்தகமல்ல... புதையல்.
RS. 81 More...by யசோதரை கருணாகரன்
இதயம் - மனித உடலின் உயிர்நாடி. இதன் துடிதுடிப்பே மனித வாழ்க்கையின் இயக்கம். இதயம் ஒருவருக்கு சீராக இயங்குகிறதென்றால் அவரது ஆயுள் நீடிக்கும். இதயம் மற்றும் மற்ற உடற்பாகங்களின் இயக்கம் சீராகவோ அல்லது நோயுடனோ இயங்க முக்கியக் காரணம் உணவுதான். உடலின், சமமான ஒழுங்கான இயக்கத்துக்கு உணவு முறை அவசியம். நாவின் ருசிக்கு அடிமையாகாத எவரும் பூரண ஆயுளோடு வாழமுடியும். பரபரப்பான இன்றைய அவசரமான வாழ்க்கைச் சூழலில் சமைப்பதில் கிடைத்த உணவா... ஏற்ற உணவா... என்கிற போட்டியே நடைபெறுகிறது. இதில் ஜெயிப்பது கிடைத்த உணவே. இன்றைய மக்களில் பலர் பாரம்பர்ய உணவு குறித்த அவசியத்தில் விழிப்பு உணர்வு பெற்றிருக்கின்றனர். இருப்பினும் மேலைநாட்டு உணவு மீது உள்ள மோகத்தைக் குறைத்து, நம் முன்னோர் கடைப்பிடித்து வந்த பாரம்பர்ய உணவுமுறையைப் பின்பற்றி ஆரோக்கியமாக வாழலாம். உடல் காக்கும் உயிர் காக்கும் பாரம்பர்ய உணவுகளை தேர்ந் தெடுத்து உண்ணுவது உடலையும் உடலை இயங்க வைக்கும் இதயத்தையும் நோய் அணுகாமல், தூய்மையாகப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை ஆசிரியர் எடுத்துரைக்கிறார். அஞ்சறைப் பெட்டியின் பொருட்கள் முதல் கீரை, சிறுதானியங்கள், பயறு வகைகள், பாரம்பர்ய அரிசி, ரசாயனம் இல்லாத பழம் மற்றும் காய் வகைககளைக் கொண்டு சமைக்கும் முறையையும், காலை முதல் இரவு வரை எந்தெந்தநேரத்தில் என்னென்ன உணவுகளை உட்கொள்ளலாம் என்கிற முறைகளையும் இந்த நூல் பட்டியலிட்டுக் காட்டுகிறது. உணவே மருந்தாகி உடல் நோயை போக்கிவிடும்... தேவையற்ற உணவால் தேங்கும் கழிவுகளை உணவாலேயே அகற்ற முடியும் என்கிற பல ஆச்சரியமான தகவல்களை அள்ளிக் கொடுப்பதோடு, நோயில்லா வாழ்வுடன், பூரண ஆயுளும் சேர்ந்து, பல்லாண்டு காலம் வாழ இந்த நூல் வாழ்த்துகிறது.
RS. 120 More...by டாக்டர் ஷாலினி
‘‘மனித மனம் சஞ்சலமுடையது, வலிமையுடையது, கலங்க வைப்பது, அடக்க முடியாதது, காற்றைப்போல் அதை அடக்குவது கடினமானது’’ என்று கீதையில் கிருஷ்ணர் சொல்கிறார். மனம் என்பது எண்ணங்களின் கூட்டமைப்பு. நம் ஆழ்மனதில் தோன்றும் எண்ணங்களே நம்மை வழிநடத்துகின்றன. மனதால் முடியாதது எதுவுமில்லை. நம் மனதுக்குள் படரும் பயம், படபடப்பு, கோபம், வெறுப்பு.. என சின்னச் சின்ன விஷயங்களை உதாசினப் படுத்திவிட்டால், அதுவே பின்னாளில் மனதைப் பெரிய அளவில் பாதித்து வாழ்க்கையை திசை மாற்றிவிடும். இப்படி நம் மனதில் எழும் சின்ன சின்ன மாற்றங்களை எடுத்துக்கூறி அவை ஏன் நடைபெறுகின்றன, அதற்கான தீர்வு என்ன என்பதைக் கூறுகிறது இந்த நூல். உதாரணமாக ‘‘Body Dysmorphophobia என்கிற ஒரு வகை பதற்றக் கோளாறு நோய் இருப்பவர்களுக்கு, “என் மூக்கு கோணலா இருக்கு, என் பல்லு கலர் மாறி இருக்கு, என் தோளில் ஏதோ தேமல் இருக்கு’’ என்று தங்கள் உடல் அமைப்பைப் பற்றி ஏதாவது ஒரு குறையைக் கண்டுபிடித்து, சதா சர்வ காலமும் அதைப்பற்றியே யோசித்து, கவலைப்பட்டு, அதை மறுசீர் அமைப்பதைப் பற்றிய கற்பனையிலேயே இருப்பார்கள்.’’ என்பன போன்ற மனம் சம்பந்தப்பட்டவற்றை விளக்கி ஜூனியர் விகடனில் டாக்டர் ஷாலினி எழுதிய தொடரின் தொகுப்பு நூல் இது! மனம் சார்ந்த பிரச்னைகளையும் அதற்கான தீர்வையும் பேசுகிறது இந்த நூல்.
RS. 63 More...by டாக்டர் பி.எஸ்.லலிதா
மனித உடல் ஒரு தானியங்கி இயந்திரம். உடலின் உள் உறுப்புகள் யாவும் இயற்கையோடு ஒன்றி வாழக்கூடியது. இயற்கையின்றி மனித வாழ்வு இல்லை. பிரபஞ்ச சக்தி இன்றி உடலுக்கு சக்தி இல்லை. மருந்து, மாத்திரை, ஊசி, அறுவை சிகிச்சை, ஸ்கேனிங் என ஓடி ஓடிக் களைத்த மக்கள் அவற்றால் நிரந்தரத் தீர்வு இல்லை என்பதை உணர்ந்துள்ளனர். நம் உச்சி முதல் பாதம் வரையிலான உடலின் முக்கிய உறுப்புகள் உள்ளங்கையில் புள்ளிகளாக அமைந்திருக்கின்றன. எந்தெந்த உறுப்பு எந்தெந்த புள்ளியைக் காட்டுகிறது என்பதை அறிந்து, முறையாக அழுத்தம் கொடுப்பதன் மூலம் உடல் உபாதைக்கு தீர்வு தரலாம் என்கிறது ரெய்கி என்னும் மருந்தில்லா மருத்துவ முறை. இதற்கு மருந்து மற்றும் மாத்திரையோ தேவையில்லை. தினந்தோறும் செய்யக்கூடிய எளிமையான பயிற்சிகள், சிகிச்சைகள் மூலம் நிவாரணம் பெறமுடியும். `உடல் ஆரோக்கியம் பற்றி விழிப்புஉணர்வு அடைந்து ரெய்கி, யோகா, அக்குபஞ்சர் போன்ற மருந்தில்லா மருத்துவ சிகிச்சையை மக்கள் நாடத் தொடங்கியிருக்கிறார்கள். இதனால் மூட்டுவலி, கழுத்துவலி, இதயம், கல்லீரல், முதுகுவலி, மூச்சுத்திணறல், தூக்கமின்மை, இதய நோய்கள், கர்ப்பக்கால பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு உண்டு' என்கிறார் நூலாசிரியர் டாக்டர் பி.எஸ்.லலிதா. மேலும், எந்தெந்த நோய்களுக்கு எப்படி தீர்வுபெற முடியும் மற்றும் சுறுசுறுப்பான, துடிப்பான, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ்வது சாத்தியம் என்பதை எடுத்துரைக்கிறது இந்த நூல். டாக்டர் விகடனில் `மருந்தில்லா மருத்துவம்' என்கிற பெயரில் வெளியான கட்டுரைகள், நிரந்தர ஆரோக்கியத்தை உங்கள் கையில் கொடுக்கக் காத்திருக்கிறது.
RS. 110 More...by வெ.தமிழழகன்
உண்ணும் உணவு முறையாலும் உணவுப் பொருள்களாலும் பசியை மட்டுமின்றி, வந்த பிணியை விரட்டியும், நோய் வராமல் காத்தும் கொண்ட பக்குவத்தை அறிந்திருந்தது நம் தமிழ்ப் பாரம்பர்யம். காய்கறிகளிலும் கீரைகளிலும் விதைகளிலும் மருத்துவக் குணங்கள் இருப்பதை நன்கு அறிந்துவைத்து, உணவாக உண்டு ஆரோக்கியமாக வாழ்ந்தனர் நம் முன்னோர். உணவே மருந்து என்ற நிலை மாறி, உணவே விஷமாகும் விபரீத சூழ்நிலையில்தான் இன்றைய தலைமுறை உள்ளது. இதனால், தமிழர்களின் ஆதி மருத்துவ முறையான சித்த மருத்துவத்திற்கு, இளம் தலைமுறையைத் திருப்பவேண்டியது அவசியம். அசுத்தமான தண்ணீரைச் சுத்தப்படுத்தி அதைப் பருகும் நிலைக்குப் பக்குவப்படுத்தும் தேற்றான் கொட்டை முதல் காய்கள், அதன் விதைகள், கொட்டைகளில் உள்ள மருத்துவக் குணங்கள் பற்றியும் அவற்றை எவ்வாறு மருந்தாகப் பயன்படுத்துவது பற்றியும் விளக்குகிறது இந்த நூல். மூளையையும் இதயத்தையும் பலப்படுத்தி நினைவாற்றலைப் பெருக்கும் கடுக்காய், மண்ணீரல், கல்லீரல் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகும் சுண்டைக்காய்.. இப்படி இயல்பாய்க் கிடைக்கும் காய்கள், விதைகள், கொட்டைகளிலிருந்து நம் வீடுகளிலேயே எளிய முறையில் மருந்துகள் தயாரித்து பயன்பெற வழிசொல்லும் நூலிது. காய், விதை, கொட்டைகளின் மருத்துவக் குணங்களை அறிந்துகொண்டு ஆரோக்கியம் பெறுங்கள்!
RS. 150 More...by டாக்டர் கே.ஜி.ரவீந்திரன்
ஆனந்த விகடனில் 'உடலே, ரிலாக்ஸ் ப்ளீஸ்!' ஆயுர்வேத மருத்துவத் தொடர் வந்துகொண்டிருந்த போது, அதைப் படித்த வாசகிகள், 'அன்றாட வாழ்வில் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் மிகவும் அல்லல்படும் எங்களைப் போன்ற பெண்களுக்கு ஆயுர்வேத மருத்துவம் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியுமா?' என்று கேட்டு நிறைய விசாரிப்புகள் வந்துகொண்டிருந்தன. வாசகிகளின் ஆர்வத்தைப் புரிந்துகொண்டு, கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றில் சிசு வளர்ச்சியில் ஆரம்பித்து, பூப்படைவது, தாய்மை அடைவது, முதுமை அடைவது வரை பெண்களின் நடைமுறை வாழ்க்கைக்கு வழிகாட்டும் விதத்தில் அவள் விகடனில் ஒரு கட்டுரைத் தொடர் வெளியிடலாம் என்று தீர்மானித்தோம். 'ஆயுள் வளர்க்கும் ஆயுர்வேதம்!' என்று வெளியான தொடர் எதிர்பார்த்தபடியே ஆரோக்கிய வாழ்வை உணர்த்தும் அற்புதமான தொடராக அமைந்தது. ஆண்களும் அதைப் படித்து, பெண்களின் மன உணர்வுகளைப் புரிந்துகொண்டு குடும்பத்தில் ஒத்துழைப்பு கொடுக்கும் விதமாகவும் அமைந்தது. இதோ, அந்தக் கட்டுரைகள் புத்தக வடிவில் மலர்ந்திருக்கிறது. உணவே மருந்தாகவும், உடல் வளர்ச்சிக்கும் மன வளர்ச்சிக்கும் அதுவே சிறந்த அமுதமாகவும
RS. 90 More...by ராஜம் முரளி _ ஜீவா சேகர்
‘அடுக்களையிலேயே இருக்கிறது அழகுக்கலை’ என்பதுதான் நம் முன்னோர்களின் சித்தாந்தம். நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களான பழங்கள், காய்கறி மற்றும் பூ வகைகளைக் கொண்டே அழகைப் பாதுகாக்கும் அற்புதக் கலையை அறிந்துகொள்ள யாருக்குதான் ஆசை இருக்காது? இயற்கையாகக் கிடைக்கும் உணவுப் பொருட்களைக் கொண்டே அகத்துக்கும் புறத்துக்கும் வேண்டிய ஆரோக்கியம் மற்றும் தற்காப்பு முறைகளை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். மா, பலா, வாழை, பேரீச்சை, ஆரஞ்சு, தர்பூசணி... போன்ற பழ வகைகள், மல்லிகை, ரோஜா, சம்பங்கி... போன்ற பூ வகைகள், துளசி, மரிக்கொழுந்து... போன்ற மூலிகை வகைகளின் சிறப்புகளையும், அதில் ஒளிந்துள்ள சத்துகளையும், அவை நமது உடலின் அழகை எப்படிப் பாதுகாக்கிறது என்கிற விவரங்களை விளக்கும் விதமாக ‘இயற்கை தரும் இளமை வரம்’ என்கிற தலைப்பில் ‘அவள் விகடன்’ இதழ்களில் வெளியான கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல். ‘ஒரே கல்லில் இரண்டு மாங்காய்’ என்பது போல, இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தி உடலின் மேற்பரப்பில் எடுத்துக்கொள்ள வேண்டிய அழகுக் குறிப்புகளை ராஜம் முரளியும் அவற்றை உட்கொள்ளும் விதத்திலேயே ஆரோக்கியத்தைக் காத்துக
RS. 75 More...by அன்னமேரி பாட்டி
மருத்துவமனைகளில் முன்பதிவு செய்துகொண்டு மக்கள் காத்துக்கிடக்கும் நிலை இப்போது. ஆனால், நம் முன்னோர்கள் காலத்தில் வீடு தேடி வைத்தியர் வந்து கைவைத்தியத்தால் நோய் தீர்த்தனர். ஒரு காலத்தில் சமுதாய நலன் கருதிய சேவையாக இருந்துவந்த மருத்துவம் இன்றைய காலகட்டத்தில் பணம் கொழிக்கும் துறையாக மாறிவிட்டது. தடுக்கி விழுந்தால் மருத்துவமனை, லேப், ஸ்கேன் சென்டர்கள் என்று மலிந்து கிடக்கின்றன. இந்தச் சூழலிலும் நாட்டு வைத்தியத்தின் தேவை, செயல்பாடு ஒருபுறம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. இயற்கையில் கிடைக்கக்கூடிய புல், பூண்டு, மரம், செடி, கொடி, வேர், பட்டை, இலை, பூ, பிஞ்சு, காய், பழம், வித்து போன்றவற்றைப் பயன்படுத்தி, உடல் கோளாறுகளைத் தீர்க்கும் வைத்தியமே நாட்டு வைத்தியம். இது தலைமுறை தலைமுறையாக நம் நாட்டில் இருந்துவரும் பாரம்பரியமான மருத்துவ முறை. நவீன மருத்துவம் தோன்றுவதற்கு முன்பே தமிழர்கள் மருத்துவத்தில் கைதேர்ந்தவர்களாக இருந்ததற்கான சான்றுகள் இலக்கியங்களில் உள்ளன. ‘பத்து மிளகு இருந்தால் பகையாளி வீட்டிலும் விருந்து உண்ணலாம்’ என்ற பழமொழி இன்றும் வழக்கில் உள்ளது. அன்னமேரி பாட்டி பேச்சுவழக்கில், நம்பிக்கையூட்டும் விதமாக ‘நாட்டு வைத்தியம்’ என்ற தலைப்பில் ‘அவள் விகடனி’ல் அளித்துவந்த ஆலோசனைகளின் தொகுப்பே இந்த நூல். அன்னமேரி பாட்டியின் மருத்துவக் குறிப்புகளை வாஞ்சை மாறாத வார்த்தைகளில் பதிவு செய்திருக்கிறார் மரிய பெல்சின். குழந்தைகள், பெண்கள், ஆண்கள், பெரியவர்கள் என வகைப் படுத்தி, வழிமுறைகளைக் கையாள எளிமையாக்கி இருப்பது இந்த நூலின் சிறப்பு. இந்த நூலில் சொல்லப்பட்டிருக்கும் வழிமுறைகளை முறையாகப் பின்பற்றினால், சிறுநீரகக் கல், மூலம், மாரடைப்பு, புற்றுநோய் போன்றவற்றைக்கூட ஆரம்பத்திலேயே சரிசெய்துகொள்ள முடியும். மொத்தத்தில் இந்த நூல் ஒவ்வோர் இல்லத்திலும் இருக்கவேண்டிய அவசியமான மருத்துவக் கையேடு!
RS. 74 More...