Cart is Empty
by வெ.தமிழழகன்
‘பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்’ என்ற முதுமொழிக்கேற்ப நம் நாட்டின் செடிகளிலும் கொடிகளிலும் பூக்களிலும் காய்களிலும் கனிகளிலும் விதைகளிலும் மருத்துவப் பயன்கள் கொட்டிக்கிடக்கின்றன. அறுகம் புல் முதல் ஆலம் விழுது வரை அனைத்திலும் மருத்துவக் குணம் நிறைந்திருக்கிறது. கிராமப்புறங்களில் நம் வீட்டைச் சுற்றி வளர்ந்திருக்கும் செடிகள், மரங்கள் ஒவ்வொன்றும் ஒரு மருத்துவர் போன்றது. ஆனால், நாம் நம் பக்கத்திலேயே மருத்துவரை வைத்துக்கொண்டு மருத்துவமனைகளுக்கு ஓடிக்கொண்டிருக்கிறோம். உதாரணமாக, கிராமப்புறங்களில் அடிக்கடி தேள்கடிச் சம்பவங்கள் நடைபெறுவதுண்டு. தேள்கடி விஷத்துக்கு, துளசி இலையை எடுத்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கவும், கடித்த இடத்தில் அழுத்தித் தேய்க்கவும் தேள்விஷம் உடனே முறிந்துவிடும் என்கிறது சித்த மருத்துவம். இப்படி இயற்கையிலேயே நம் அருகிலேயே மருத்துவ முறை இருப்பதை நாம் மறந்துவிட்டோம். இப்படிப்பட்ட நம் பாரம்பர்ய மருத்துவத்தை வலியுறுத்துகிறது இந்த நூல். நூற்றுக்கும் மேற்பட்ட இயற்கைத் தாவரங்கள், மரங்கள், காய், கனி, இஞ்சி, மிளகு போன்றவைகளில் என்னென்ன மருத்துவக் குணங்கள் இருக்கின்றன என்றும் மருந்து செய்முறைகளையும் கூறுகிறது இந்த நூல். உங்கள் ஆரோக்கியத்தைக் காக்க இந்த நூல் ஆகச்சிறந்த வழிகாட்டி!
RS. 150 More...by டாக்டர் தெ.வேலாயுதம்
புதிய புதிய நோய்கள் உருவாகி உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில் நம் முன்னோர் வாழ்க்கை முறையை நினைத்தால் பெருமைகொள்ளாமால் இருக்க முடியாது. கொரோனா போன்ற கண்ணுக்குத் தெரியாத வைரஸ்கள் உருவாகி இன்று மனித குலத்தை அச்சுறுத்திக்கொண்டிருப்பதற்கு காரணம், உலக மக்களின் வாழ்க்கைமுறை மாறிப் போனதுதான். குடிக்கும் நீருக்கு விலை வைக்கும் நிலை உருவானபோதே எல்லாம் மாறிவிட்டன. நம் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் வாழ்ந்த முன்னோர்கள், தம் வாழ்க்கை முறையையும் உணவு முறையையும் இயற்கையோடு அமைத்துக்கொண்டதால் ஆரோக்கியமாக நீண்ட ஆயுளோடு வாழ்ந்தனர். இன்று எல்லாவற்றிலும் கலப்படம் என்றாகிவிட்டதால் நோய்கள் பெருகி மனித ஆயுள் குறுகிவிட்டது. இந்தச் சூழலில் எந்த முறையான வாழ்க்கை முறை, உணவு முறையைப் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறது இந்த நூல். டாக்டர் விகடன் இதழில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பே இது. அதிகாலை எழுதல், பல் துலக்கும் முறை, குளிக்கும் முறை, உடற்பயிற்சிக்கான நேரம், உணவு முறை, ஆடை உடுத்துதல் போன்ற நம் அன்றாட வாழ்க்கை முறைகளை எப்படி எப்படியெல்லாம் செய்தால் நோயின்றி வாழலாம் என்பதை இந்த நூல் விளக்குகிறது. முறையான வாழ்க்கை முறையால் நிறைவான வாழ்க்கை வாழ வழிகாட்டும் நூல் இது!
RS. 150 More...by மருத்துவர் வி.விக்ரம்குமார்
உணவுக்கும் ஆரோக்கியத்துக்கும் ஒருசேர உதவி புரிபவை அஞ்சறைப் பெட்டியின் எளிமையான பொருள்கள். உணவே மருந்து, மருந்தே உணவு என வாழ்ந்து, உணவுப் பொருள்களில் உள்ள மருத்துவக் குணங்களை தரணிக்குச் சொன்னது நம் தமிழ்ச்சமூகம். `சீரகம் இல்லா வீடும், சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது’, `பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உணவருந்தலாம்’ போன்ற முதுமொழிகள் அஞ்சறைப் பெட்டிப் பொருள்களின் மகத்துவத்தை உணர்த்துகின்றன. சிறிய உபாதைகள் முதல் உயிரைப் பறிக்கும் புற்று நோய் வரை நம்மைக் காக்கும் மகத்துவம் கொண்டவை நம் பாரம்பர்ய உணவுப் பொருள்கள். உதாரணமாக, குடல்பகுதியில் இருக்கும் புழுக்களை அழித்து வெளியேற்றும் ஓமம், புற்றுநோய் வராமல் தடுக்கும் வால் மிளகு, வயிறு மற்றும் குடல் பகுதிகளில் பாதுகாப்பு அரணாக விளங்கும் வசம்பு... போன்ற எளிமையான உணவுப் பொருள்கள் நம் ஆரோக்கியத்தின் அரண்கள். உணவுக்குச் சுவையையும் உடலுக்கு ஆரோக்கியத்தையும் அள்ளி வழங்கும் உணவுப் பொருள்களின் வரலாற்றையும் அவற்றின் பயன்களையும் விளக்கி, அவள் விகடனில் வெளிவந்த அஞ்சறைப் பெட்டி கட்டுரைகளில் சில ஏற்கெனவே ‘அஞ்சறைப் பெட்டி' எனும் தொகுப்பு நூலாக விகடன் பிரசுரம் வெளியிட்டது. அந்தக் கட்டுரைகளின் இரண்டாவது தொகுப்பு நூல் இது. சுவையுடன் ஆரோக்கியத்தையும் அள்ளித்தரும் உணவுப்பொருள்களை அறிய வாருங்கள்!
RS. 150 More...by டாக்டர் அருண்குமார்
உணவே மருந்து என்பது எல்லோருக்கும் எல்லா காலத்திலும் பொருந்தும் மறுக்க முடியாத உண்மை. எந்த உணவு சாப்பிட்டால் என்ன நன்மை அல்லது என்ன விளைவு ஏற்படும் என்ற எண்ணம் இல்லாமல் வேகமாக நகரும் வாழ்க்கையில் நினைத்த உணவை சாப்பிடுகிறோம். தற்போதைய காலகட்டத்தில் மனிதன் அவதியுறும் பெரும்பாலான நோய்களான உடல் பருமன், சர்க்கரை நோய், அதீத இரத்த கொழுப்பு, உயர் இரத்த அழுத்தம், பெண்களுக்கான குழந்தையின்மை போன்ற பற்பல வாழ்வியல் நோய்களுக்கும் உணவிற்கும் நேரடி சம்பந்தம் இருக்கின்றது என்பதை நாம் உணர்வதே இல்லை. உணவு முறையில் தொலைத்த ஆரோக்கியத்தை மருந்துகளில் தேடிக் கொண்டிருக்கிறோம். உணவுப் பொருள்களின் தன்மை, அந்த உணவுகள் நம் உடலுக்குத் தரும் நன்மை, தீமை என்பவை பற்றி விளக்கி ஆனந்த விகடனில் வெளியான `ஆரோக்கியம் ஒரு பிளேட்' கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. ஒரே வார்த்தையில் நன்மை தீமை என்று பேசாமல், நாம் அன்றாடம் பயன்படுத்துகிற எல்லா உணவுப் பொருள்களையும் பகுத்தறிந்து, நவீன உணவுகள் மட்டுமல்ல, பாரம்பர்ய உணவுகள் குறித்த சாதக பாதகங்களையும் இந்த நூலாசிரியர் மருத்துவர் அருண்குமார் அவர்கள் சாமானியனுக்கும் புரியும் வகையில் விளக்கமாக எடுத்துரைத்துள்ளார். உங்கள் உணவுத் தட்டை ஆரோக்கியமாக மாற்றி, ஆனந்தமாக வாழ இந்த நூல் வழிகாட்டுகிறது!
RS. 250 More...by டாக்டர் அருண்குமார்
எந்த உணவு சாப்பிட்டால் என்ன நன்மை அல்லது என்ன விளைவு ஏற்படும் என்று புரிந்துகொள்ளாமல் வேகமாகச் செல்லும் வாழ்க்கையில் நினைத்த உணவை சாப்பிடுகிறோம். இந்த காலகட்டத்தில் மனிதன் அவதியுறும் பெரும்பாலான நோய்களான உடல் பருமன், சர்க்கரை நோய், அதீத ரத்தக் கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம், பெண்களுக்கான குழந்தையின்மை போன்ற பற்பல வாழ்வியல் நோய்களுக்கும் உணவுக்கும் நேரடி சம்பந்தம் இருக்கின்றது என்பதை நாம் உணர்வதே இல்லை. உணவு முறையில் தொலைத்த ஆரோக்கியத்தை மருந்துகளில் தேடிக்கொண்டிருக்கிறோம். உணவுப் பொருள்களின் தன்மை, அந்த உணவுகள் நம் ஆரோக்கியத்துக்கு எப்படி உதவும் அல்லது உபாதை ஏற்படுத்துமா என்பதை விளக்கி ஆனந்த விகடனில் வெளியான `ஆரோக்கியம் ஒரு பிளேட்' கட்டுரைகளின் முதல் தொகுப்பு நூல் ஏற்கெனவே வெளியாகி வாசகர்களின் வரவேற்பைப் பெற்றது. அந்தக் கட்டுரைகளின் இரண்டாம் தொகுப்பு நூல் இது. நாம் அன்றாடம் பயன்படுத்துகிற எல்லா உணவுப் பொருள்களையும் பகுத்தறிந்து, நவீன உணவுகள் மட்டுமல்ல, பாரம்பர்ய உணவுகள் குறித்தும், காய்கறிகளின் தன்மை, சைவ, அசைவ உணவுகளின் சாதக பாதகங்களையும் விளக்கமாகக் கூறுகிறது இந்த நூல். உணவுப் பொருள்களின் உண்மைத்தன்மையை விளக்கி ஆரோக்கிய வாழ்வுக்கு இந்த நூல் வழிகாட்டுகிறது!
RS. 250 More...