Cart is Empty
by முதியோர் மருத்துவர் வி.எஸ்.நடராசன்
உயிர்களின் படைப்பிலே அற்புதப் படைப்பாக அமைந்தது மானுடப் பிறவி. வேறு எந்த உயிரினத்துக்கும் இல்லாத பகுத்தறியும் திறன், மனித இனத்துக்கு மட்டும் ஒரு சிறப்பு! அதிலும், எண்ணிலடங்கா நிகழ்வுகளையும், அனுபவங்களையும் பதிவாக்கி வைத்து, தேவையான வேளைகளில் பயன்படும் நினைவாற்றலைக் கொண்ட மனிதனின் மூளை பிரமிப்புக்குரியதே! மறதி ஒவ்வொருவருக்கும் ஏற்படக்கூடியதுதான். அந்த மறதியினால் ஒரு சில வேளைகளில் நன்மையும், ஒரு சில வேளைகளில் தீமையும் விளைவதுண்டு. இந்த அனுபவம் நிச்சயம் எல்லோருக்கும் ஏற்பட்டிருக்கும். மறதி எப்படி ஏற்படுகிறது? மறதி என்பது மறதி நோயாக ஆகிவிடுவது எப்படி? யார் யாருக்கெல்லாம் மறதி நோய் ஏற்படக்கூடும்? வரும் முன் காப்பது எப்படி? வந்த பின் குறைப்பது எப்படி? &இப்படி அடுக்கடுக்கான பல கேள்விகளுக்கு இந்த நூல் விடையளிக்கிறது. மறதி, சுகமாகவும் சுமையாகவும் அமைவதை, அறிவியல்பூர்வமாகவும் அனுபவபூர்வமாகவும் தெள்ளத்தெளிவாக விளக்கியுள்ளார் நூலாசிரியர் டாக்டர் வி.எஸ்.நடராசன். மறதி நோயின் தன்மை, பாதிப்புகளைக் கண்டறியும் விதம், சிகிச்சை முறைகள், நோயாளிகளைக் கவனித்துக்கொள்ளும் உறவினர்களுக்கான ஆலோசனைகள்... இப்படி, பல உபயோகமான தகவல்களை இந்த நூலில் கொடுத்துள்ளார். ‘குருத்து ஓலை ஒரு நாள் பழுத்த ஓலை ஆகும்’ என்பதாலும், ‘நினைவாற்றல் குறைந்த முதியோர் அனைத்து இல்லங்களிலும் இருக்கின்றனர்’ என்பதாலும் இந்த நூலை அனைவருமே படித்துப் பயன் பெற முடியும். இதில் குறிப்பிடப்பட்டுள்ள பயிற்சிகளால் நினைவாற்றலைப் பெருக்கி வயோதிக காலத்தையும் வசந்தமாக்குவோம்!
RS. 50 More...by டாக்டர் நாராயண ரெட்டி
மனித வாழ்க்கை என்பது, உழைப்பது, பொருள் ஈட்டுவது, உண்டு உயிர் வாழ்வது என ஒரு இயந்திரம் போல இயங்கி முடிந்துவிடக்கூடியது அல்ல... பந்தம், பாசம், இன்பம், துன்பம் என்பது போன்று காதல், காமம் என்ற உணர்வுகளையும் உள்ளடக்கியது. அதனால்தான் அறத்துப்பால், பொருட்பால் என்ற அதிகாரங்களோடு வள்ளுவர் காமத்துப்பால் என்ற அதிகாரத்தையும் எழுதி வைத்தார். அந்தரங்கம் என்பது அந்தரங்கமாகவே இருந்த காலம் மாறி, இன்று ஆலோசனை பெறும் காலமாகிவிட்டது. பருவ வயதைத் தொட்டதுமே பாலுணர்வு பற்றிய பல சந்தேகங்கள், ஆண்&பெண் பேதமின்றி இருவருக்குமே எழுகின்றன. இந்தச் சந்தேகங்களின் ஆரம்பப் புள்ளி இளம் பருவம் என்றாலும், அது முதுமை வரை தொடரக் கூடியது. அப்படி, பல்வேறு பருவங்களில் எழும் பல்வேறு சந்தேகங்களுக்கும், குழப்பங்களுக்கும் உண்மை சம்பவங்களை மேற்கோள் காட்டி இந்த நூலில் விளக்கம் சொல்லியிருக்கிறார், பிரபல செக்ஸாலஜிஸ்ட், டாக்டர் டி.நாராயண ரெட்டி. ஆனந்த விகடன் இதழ்களில் ‘டூயட் கிளினிக்’ என்ற தலைப்பில், வாழ்வியல் கலையை போதிக்கும் அற்புதமான அந்தக் கட்டுரைகள் முதல் பாகமாக வெளிவந்து வாசகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்று வருகிறது. இது ‘ட
RS. 50 More...by விகடன் பிரசுரம்
உடல் ஆரோக்கியத்துக்கு மனமே மூலகாரணம். ‘உடலுக்குப் போதிய ஓய்வு இருந்தால் மன சஞ்சலம் என்பதே இருக்காது’ என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். யோகா, தியானம் செய்வதன் மூலம் உடல் எந்தளவுக்குப் புத்துணர்ச்சி அடையும் என்பதை சொல்லத் தேவை இல்லை. அதேபோல், அதிகாலை நேரத்தின் அமைதியேகூட, மன நிம்மதிக்கு வழிவகுக்கும். அதிகாலையில் விழித்தெழுந்து, அந்த அமைதியை அனுபவித்துப் பாருங்கள். ஆரோக்கிய வாழ்க்கையின் ரகசியத்தை முழுமையாக உணர்ந்து உற்சாகம் அடைவீர்கள். இப்படி, உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொண்டு, வாழ்க்கையை இனிமையாக அமைத்துக் கொள்ள எளிய வழிமுறைகளைச் சொல்கிறது இந்த நூல். அன்றாட வாழ்க்கையின் பரபரப்பில் சிக்கிக் கொண்டு அவஸ்தைப்படுவது பெரும்பாலும் பெண்கள்தான். உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் விரைவில் சோர்வடைந்து பலவிதமான நோய்களுக்கு ஆட்பட்டு விடுகிறார்கள். பெண்களைப் பெரிதும் தாக்கும் நோய்கள் பற்றியும், அதற்கான தீர்வுகள் பற்றியும், அவள் விகடன் இதழ்களில் ‘டாக்டர் விகடன்’ பகுதியில், மருத்துவர்கள் சொன்ன வழிமுறைகளும், சக்தி விகடன் இதழ்களில் ‘டாக்டர் விகடன்’ பகுதியில், பிரபலமானவர்கள் விவரித்த அனுபவங்களும், மனதை லகுவாக்கி ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வழிகாட்டுகின்றன. வாசகிகளின் பெரும் வரவேற்பைப் பெற்ற அந்தக் கட்டுரைகளின் தொகுப்புதான், ‘வாழ்க்கை இனிது... வழிமுறை எளிது!’ இந்த நூலை ஆழ்ந்து படித்து, அவரவர் உடல், மனம் மீது அக்கறை எடுத்துச் செயல்பட்டால் குடும்பத்தில் என்றும் ஆரோக்கியம் தவழும்.
RS. 60 More...by எஸ்.ஏ.செல்லப்பா
இன்று உடல் பருமன் குறித்து ஆண், பெண் இருபாலரும் விழிப்புடன் இருக்கிறார்கள். எக்காரணம் கொண்டும் உடல் பருத்துவிடக் கூடாது என்பதிலும், எப்பாடுபட்டாவது உடல் இளைத்துவிட வேண்டும் என்பதிலும் இரு சாராருக்குமே கவனம் அதிகம். தெருவுக்கு இரண்டு fitness centre முளைத்து வருவதற்கு இதுவே மூல காரணம்! கடற்கரையிலும் பூங்காக்களிலும் மட்டுமல்ல, கிராமத்துத் தெருக்களிலும்கூட சிறுவர் முதல் பெரியவர் வரை தினமும் காலையில் மும்முரமாக நடைப்பயிற்சி செய்வதற்கும் இந்தப் ‘பருமன் பாதிப்பு’ தான் காரணம்! அதாவது, வரும்முன் காப்பதற்கும், வந்ததை கட்டுப்படுத்தவும் இது மாதிரியான பயிற்சி முறைகள் உதவக்கூடும் என்பது நம்பிக்கை. தவிர, சாப்பாடு விஷயத்தில் எக்கச்சக்க சுயக்கட்டுப்பாட்டை விதித்துக் கொள்வதும் ‘பருமன் கவலை’ இருப்பதால்தான்! உடல் பருமன் ஏற்படக் காரணமாக உள்ள சூழ்நிலைகள், வாழ்க்கை முறை, உணவுப் பழக்கவழக்கம் முதற்கொண்டு பல தகவல்களை இந்த நூலில் தந்திருக்கிறார் நூலாசிரியர் எஸ்.ஏ.செல்லப்பா. உடல் பருமனைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகளையும், உணவுக் கட்டுப்பாடுகளையும் அனைவருக்கும் புரியும்படி அட்டவணைகளோடு விளக்கியிருக்கிறார். அதே மாதிர
RS. 50 More...by டாக்டர் நாராயண`ரெட்டி
அன்பு, கோபம், அழுகை, வெறுப்பு, ஆசை, காதல், காமம்... என மனித உயிர்களை ஆட்டிப்படைக்கும் உணர்வுகள் ஏராளம். இதில், காதலும் காமமும் தவிர்க்க முடியாதது என்பது எவரும் ஒப்புக்கொள்ளக்கூடிய உண்மை. ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படும் பாலுணர்வு, இளமைப் பருவத்தில் தொடங்கி முதிய பருவம் வரையில் வாழ்க்கையில் பல வகையில் சுக_துக்கங்களை அளிக்கவல்லது. விபரீதமான வித்தியாசமான ஆசைகளை ஏற்படுத்தும் இந்தப் பாலுணர்வை, ஒவ்வொருவரும் எப்படி கையாள வேண்டும் என்பதில் தொடங்கி, குழந்தைகள் மத்தியில் நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், பாலுணர்வு தொடர்பான செய்திகளை குழந்தைகளிடம் எப்படிச் சொல்ல வேண்டும், தாம்பத்திய வாழ்வில் துணையிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், உடலுறவின்போது ஏற்படக்கூடிய பிரச்னைகள் என்ன..? _ இப்படி நம் மனதில் எழும் பல கேள்விகளுக்கான பதில்களை, அசத்தலான உதாரணங்களோடு விளக்கியுள்ளார் நூலாசிரியர் டாக்டர் டி.நாராயண ரெட்டி. ஆனந்த விகடனில் ‘டூயட் கிளினிக்’ என்ற தலைப்பில் வெளிவந்து கொண்டிருக்கும் தாம்பத்தியத் தகவல்கள், செக்ஸ் பற்றிய ஆழமான கருத்துகளை மிகவும் சுலபமாகப் புரிந்துகொள்ள உதவுகிறது. டாக்டர் டி.நாராயண ரெட்ட
RS. 50 More...