Cart is Empty
by கா.உதயசங்கர்
குழந்தைகள் உலகம் அறம் சார்ந்தது. குழந்தைகளுக்கு பொய் பிடிக்காது. உண்மை கசக்காது. உறவுகள் பகைக்காது. இந்த உலகத்தில் எல்லாமே அற்புதம்தான். குழந்தை இலக்கியமும் அப்படித்தான்... `சிறுவர் இலக்கியம் வாசிக்கும் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியைத் தரவேண்டும். இன்பமளிக்க வேண்டும். ஆர்வத்தைத் தூண்ட வேண்டும். ஆச்சரியப்படுத்த வேண்டும். அவர்களின் படைப்பூக்கத்தைத் துலங்க வைக்க வேண்டும். விந்தையும் விசித்திரமான உலகத்திற்குள் அழைத்துச் செல்லவேண்டும். அற்புத உணர்வுகளின் சிகரத்தில் நிற்க வைக்க வேண்டும். இயற்கையை நேசிக்க வைக்க வேண்டும். அன்பையும் நேசத்தையும் பாசத்தையும் வளர்க்க வேண்டும். மாயங்களின் உலகில் குழந்தைகள் ஓடிப்பிடித்து விளையாட வேண்டும். அவர்கள் அறியாமல் அவர்கள் கதைகளின் வழியாக யதார்த்த உலகைப் புரிந்து கொள்கிறார்கள்' என்கிறார் நூலாசிரியர் உதயசங்கர். அற்புதத்தை சுமந்து செல்லும் மந்திர கம்பளமாய் சிறுவர் கதைகளை இந்நூலில் சுமந்து வருகிறார் எழுத்தாளர் உதயசங்கர். குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களும் படித்து குதூகலமடையும் வகையில் இந்நூலில் ஒன்பது உன்னதக்கதைகள் நவரத்தினங்களாக இடம்பெற்றுள்ளன. ஆனியின் பயணம் என்ற குறுநாவலும் இடம்பெற்றுள்ளது. கதைக்கேற்ற ஓவியங்கள் கதைமாந்தர்களை கண்முன் கொண்டு வருகின்றன. வாருங்கள் குழந்தைகள் உலகத்திற்குள் நுழைவோம். குதூகலத்துடன் கொண்டாடுவோம்.
RS. 100 More...by கே.முரளிதரன்
‘ஒரு ஊரில்...' என்று பாட்டி சொன்ன கதை முதல் இன்று வரை கதை சொல்லல் இனிது, கதை கேட்டல் அதனினும் இனிது. கதை கேட்கும் ஆர்வம் ஆதி காலந்தொட்டே மக்களுக்கு இருந்தது. குறிப்பாக சிறுவர்களுக்கு கதை கேட்கும் ஆர்வம் அதிகம். ஒவ்வொரு கூட்டுக் குடும்பத்திலும் குழந்தைகளுக்கு கதை சொல்லி நிலாவைக் காட்டி அம்மாக்கள் சோறூட்டிட, பாட்டிகள் கதை சொல்லி உறங்கவைத்த பழக்கம் கடந்த தலைமுறைவரை இருந்தது. இன்று தொலைக்காட்சிகளில் டோரா புஜ்ஜிகள் கதை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். கதைகளால் சிறுவர்களுக்கு சந்தோஷத்தையும் அதன் மூலம் அவர்கள் உள்ளத்தில் உயர்ந்த எண்ணங்களையும் விதைக்க முடியும். கதைகள் மன அழுத்தத்தைக் குறைப்பவை, மகிழ்ச்சியை, புத்துணர்வைக் கொடுக்கக் கூடியவை. கதை கேட்டு வளர்ந்த சமூகம் மிகவும் விழிப்பு உணர்வு பெற்றதாக இருந்தது. சிறுவர்கள் மட்டுமல்ல கதைகளால் களிக்கும் பெரியோர்களும் உண்டு... கதைகள் வெவ்வேறு காலகட்டங்களில், வெவ்வேறு வகைகளில் சொல்லப்பட்டு வந்தன. இன்றுவரை கதைகளில் ஆர்வமில்லாதவர்கள் இருக்கவே முடியாது. புராணக் கதைகள், ராஜாக்களின் கதைகள், நீதிக் கதைகள், சாகசக் கதைகள், புனைவுக் கதைகள்... என எல்லா விதமான கதைகளை எல்லோரும் கேட்டிருப்போம். அந்த வரிசையில் சுட்டி விகடனில் குட்டீஸ்களுக்காக வெளிவந்த தேவதைக் கதைகளும் அதனுடன் புதிய கதைகளும் சேர்ந்து இப்போது நூலாகியிருக்கிறது. குழந்தைகள் தேவதை போன்றவர்கள், அந்த தேவதைகளை உற்சாகப்படுத்தும், உள்ளத்தில் உயர்ந்த எண்ணங்களை உருவாக்கும், இந்த தேவதைக் கதைகள்!
RS. 74 More...by அ.சுப்பையா பாண்டியன்
நியூட்டன் புவியீர்ப்பை எங்கோ வானத்திலிருந்து கண்டுபிடிக்க வில்லை. அன்றாட வாழ்க்கையில் இருந்துதான் கண்டுபிடித்தார். வாழ்க்கைக்கு உதவாத விஞ்ஞானம் எதற்குப் பயன்? அன்றாட வாழ்க்கையில்தானே அது பொதிந்து இருக்கிறது. என்ன, ‘தோட்டத்துப் பச்சிலைக்கு வீர்யம் போதாது’ என்பதைப்போல அதை நாம் அலட்சியம் செய்துவிடுகிறோம் அல்லது கவனிக்கத் தவறிவிடுகிறோம். நாம் அனுதினமும் பயன்படுத்தும் பொருட்களை வைத்துக் கொண்டு இந்த நூலில் அறிவியலை ஆழம் பார்க்கிறார் நூலாசிரியர் அ.சுப்பையா பாண்டியன். இந்த நூலில் அடங்கி இருக்கும் சோதனைகளும் விளக்கங்களும் ‘அறிவியல், இவ்வளவு எளிமையாகவா இருக்கிறது?’ என்ற ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது. இந்த நூலில் இருக்கும் சோதனைகளையும், விஷயங்களையும் தெரிந்துகொண்டால் பள்ளி மாணவர்களும் மாணவிகளும் அறிவியலில் கொடிகட்டிப் பறப்பார்கள் என்பதில் எள் அளவும் சந்தேகமில்லை. கடினம், கசப்பு என்று நாம் நினைக்கும் அறிவியலை மிகவும் எளிமையாகக் கொடுத்திருக்கிறார் நூல் ஆசிரியர். கூடவே கொடுக்கப்பட்டிருக்கும் படங்களும் விஷயங்களுக்கு வழிகாட்டியாக இருக்கின்றன. பெரியவர்களும் இவற்றைக்கொண்டு தம் மக்களுக்கு அறிவியலைச் சொல்லிக்கொடுக்கலாம். ‘சுட்டி விகடன்’ இதழ்களில் தொடராக வந்து மக்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற கட்டுரைகளின் தொகுப்பு இப்போது நூல் வடிவில் உங்கள் கைகளில்!
RS. 102 More...by இரா.நடராசன்
‘‘டேய் ஆகாஷ், அதோ தெரு முனையில ஒரு கார் நிக்குது இல்ல... அதை யார் முதலில் தொடுறாங்கன்னு பார்ப்போமா?’’ என்று ப்ரவீனிடம் கேட்டதும், அவனும் ‘சரி’ என்று சொல்லி, ஒன்.. டூ... த்ரீ... என்று சொல்லி ஓடினார்கள். இரண்டு பேருமே ஓரிரு நொடிகள் வித்தியாசத்தில் காரைத் தொட்டுவிட்டார்கள். நான்தான் முதலில் தொட்டேன்... இல்லை நான்தான் முதலில் தொட்டேன் என்று ஒரே சண்டை. ப்ரவீன் சொன்னான், ‘‘வா.. அங்கிள்கிட்டே சொல்லுவோம்; அவர் என்ன சொல்றாருன்னு பார்ப்போம்’’ ஆகாஷும் சரி என்றான். காரை யார் தொட்டார்கள் என்பதற்கே இவ்வளவு பெரிய சண்டை என்றால் உலகத்தையே மாற்றிப்போட்ட அறிவியல் கண்டுபிடிப்புகளின் போது எப்படியெல்லாம் சண்டை நடந்திருக்கும். வெவ்வேறு காலகட்டங்கள், வெவ்வேறு மனிதர்கள், வெவ்வேறு ஆராய்ச்சி முயற்சிகள்னு பல கட்டங்களுக்குப் பிறகுதான் நமக்குத் தேவையான ஒரு கண்டுபிடிப்பு உருவாகுது. சமயத்தில், ஒரே பொருளை ‘நான்தான் கண்டுபிடிச்சேன்’னு ஒருத்தர் மல்லுக்கட்டுவார். ‘இல்லை, இது என்னோட கண்டுபிடிப்பு’னு மார் தட்டுவார் இன்னொருத்தர். ஆனால், இதைத் தாண்டி ‘இதை இவர்தான் கண்டுபிடித்தார்’னு எப்படி நிரூபணம் ஆச்சு? இந்த நிஜமான சண்டைகளைப் பற்றி தெரிந்துகொள்ள உங்களுக்கும் ஆசைதானே... அதைத்தான் ஓர் அழகான கற்பனையா உருவாக்கியிருக்கோம். ‘யுரேகா கோர்ட்’னு ஒரு கற்பனையான நீதிமன்றத்தை உருவாக்கி, அதில் ரெண்டு தரப்பு விவாதங்களையும் அலசி ஆராய்ந்து, துவைச்சுத் தொங்கப்போட்டிருக்கோம். ஆமாம். இந்த யுரேகா யாருன்னு கேட்கிறீங்களா... ‘யுரேகா கோர்ட்’னு எதுக்குப் பேர் வெச்சிருக்கோம்னு ஆர்க்கிமிடிஸைத் தெரிஞ்சவங்களுக்கு எல்லாம் கண்டிப்பா தெரியும். ‘கடுப்பேத்துறாங்க மை லார்ட்’னு சொல்லாம, கைதட்டி உற்சாகமா வரவேற்றாங்க சுட்டிகள். சுட்டி விகடன் வெளியானபோதும் ‘யுரேகா கோர்ட்’டை நான்தான் முதலில் படிப்பேன், இல்லை இல்லை நான்தான் முதலில் படிப்பேன் என்று பல சுட்டிகளின் வீடுகளில் யுரேகா கோர்ட் வைக்கும் அளவுக்கு சண்டையே நடக்கும். இந்த சூப்பரான தொடர் மூலம், அறிவியல் விஷயங்களை சுவையாகத் தரமுடியும் என்று நிரூபித்திருக்கிறார் , சிறந்த சிறுவர் எழுத்தாளருக்கான ‘பால சாகித்ய அகாதமி விருது’ பெற்ற எழுத்தாளர், ஆயிஷா இரா.நடராசன். அவருடைய இந்தப் புதுமையான உத்தி, சுட்டிகளுக்குக் கண்டிப்பாகப் பிடிக்கும். மாணவர்கள் மத்தியில் அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதற்காகத்தான் இந்த ‘யுரேகா கோர்ட்’. ஆர்டர்... ஆர்டர்... ஆர்டர்!
RS. 74 More...by பி.என்.பரசுராமன்
வாழ்க்கையைக் கற்றறிந்தவர்களும், வாழ்வின் ஆழம் தெரிந்தவர்களும், வயதில் முதியவர்களும் சொல்லிவைத்த பழமொழிகள், தத்துவங்கள், சொலவடைகள், வைத்திய முறைகள், சடங்கு சம்பிரதாயங்கள் போன்ற அனைத்தும் அவர்கள் நேரடியாக தங்களது வாழ்விலிருந்து அனுபவித்து, ஆராய்ந்து சொல்லியவை. அவை வெறும் வார்த்தைகள் அல்ல! தங்களுடைய வாழ்க்கை அனுபவங்கள் நமக்கு சிறந்ததொரு வழிகாட்டியாக விளங்க வேண்டும் என்பதற்காகவே பெரியவர்கள் அவற்றை நமக்கு அவ்வப்போது அறிவுறுத்தியும் வலியுறுத்தியும் வந்திருக்கிறார்கள். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா? என்கிறார்களே... எதற்கு? காலை நேரச் சூரியனிலிருந்து வெளிவருகிற ஒளிக்கதிர்களில் கண்ணுக்குத் தேவையான வைட்டமின்கள் நிறைந்திருக்கின்றன. ஆகவே, தினமும் சூரியநமஸ்காரம் செய்துவந்தால் சூரிய ஒளிக்கற்றைகள் கண்களில் பட்டு பார்வையில் இருக்கிற சிறுசிறு குறைபாடுகளும் நீங்கி, கண் சீராக இருக்கும். அன்றி, பார்வைக் குறைபாடு ஏற்பட்ட பிறகு சூரியநமஸ்காரம் செய்வது எந்தவிதத்திலும் கண்ணுக்குப் பலன் அளிக்காது என்பதே அதன் பொருள். இப்படி பெரியவர்கள் சொல்லியிருக்கிற பல கருத்துக்களை, கதாபாத்திரங்களின் வழியே, எளிய முறையில் வி
RS. 77 More...