Cart is Empty
by ராஜம் முரளி
இளமை அழகானது இனிமையானது. இளமையைப் பாதுகாத்துத் தக்கவைத்துகொள்ள எல்லா வயதினருக்கும் ஆசைதான். பெண்கள் எப்போதும் தங்களை அழகாக்கிக் கொள்வதில் அதீத ஆர்வம்கொண்டிருப்பர். இது இயற்கை யான உணர்வு. எல்லோரும் விரும்புவதும் இதுதான். ஆனால், உபயோகப்படுத்தும் காஸ்மெடிக்ஸ், ரசாயனம் நிறைந்த அழகுப் பொருள்களால் ஏற்படும் ஒவ்வாமை யினால் தோல் வறட்சியுற்று இளமையில் முதுமைத் தோற்றம் பெற்றுவிடுகின்றனர் சில பெண்கள். உணவு, பழக்கவழக்கம், வாழ்வுமுறைமாறுபாடுகளால் ஆண்களும் சிறு பிள்ளைகளும்கூட இளமையில் முதுமைத் தோற்றம் பெற்றுவிடுகின்றனர். இதனால் மனவருத்தம், மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர். அனைவரின் பிரச்னைக்கும் தீர்வு அளிக்கும் நூல் இது. முடி உதிர்வு, முடி வளர்ச்சி, தோல் நோய், சுருக்கம், வறட்சி நீங்கவும், சிவப்பழகுக்கு, கருமை நீங்க, குண்டு கன்னம் பெற, செரிமானத்துக்கு, பாதவெடிப்பு அனைத்துப் பிரச்னைக்கும் தீர்வு பெறவும், சிறு சிறு செடி இலைகள் முதல் கொண்டு வீட்டு அஞ்சறைப் பெட்டி சாமான்கள், உலர் பழங்கள், எண்ணெய் வகைகள், கீரை வகைகள், பூலாங்கிழங்கு, புங்கங்காய் ஆகிய மருந்துப் பொருள்களும், கடலைமாவு, அரிசி மாவு, பயத்தம் மாவு ஆகிய மாவுப் பொருள்கள், தயிர், வெண்ணெய் ஆகிய பால் பொருள்கள் அனைத்தும் உணவுப் பொருள்களாக மட்டுமல்ல... அழகு தரும் சாதனங்களும்கூட. இவை அனைத்தையும் எவற்றோடு எவை சேர என்ன பலன் கிடைக்கும் என்பதைச் சொல்லியிருக்கிறார் நூலாசிரியர். ஜாதிக்காய், மாசிக்காயை இழைத்துத் தடவ நெற்றிச் சுருக்கம் மறையும்... தேனுடன் வெந்தயத்தைக் கலந்து பூச முக அழகு கூடும்... பப்பாளி, வெள்ளரிக்காய்ச் சாறு விரல்களின் வறட்சித் தன்மையைப் போக்கும்... இப்படி உச்சி முதல் பாதம் வரைக்கும் அழகாக பாதுகாத்துக் கொள்ளக்கூடிய அழகுக் குறிப்புகள் நிறைந்த நூல் இது. வாருங்கள் அழகாவோம்... அழகாக்குவோம்...
RS. 200 More...by சூர்யநர்மதா, ஆர்.வைதேகி
உயிர்வளியாக, உணவாக, மருந்தாக, நிழலாக, கோடிக் கணக்கான சிற்றுயிர்களுக்கு வாழ்விடமாக, இன்னும் எத்தனை எத்தனையோ பயன்களைத் தருவதோடு, கண்ணுக்கு இனிமை செய்து, உள்ளத்துக்கு உவப்பையும் அளிப்பவை மரங்கள். விதை போட்டவருக்கு மட்டுமே என்றில்லாமல், தலைமுறைகள் பல தாண்டியும் ஒரு தவம்போல உலகத்துக்குச் சேவை புரிபவை இவை. வீட்டுக்கு ஒரு தோட்டம் என்பதோடு, வாசல்தோறும் ஒரு மரம் வளர்க்கவேண்டிய அவசர அவசியம் இன்று உருவாகியிருக்கிறது. 2016-ம் ஆண்டின் இறுதியில் தமிழகத்தைத் தாக்கிய வர்தா புயல் காரணமாக லட்சக்கணக்கான மரங்களை இழந்திருக்கிறோம். ஒரு பைசா கூட செலவே இல்லாத ஆக்சிஜன் தொழிற்சாலையாக விளங்கி, நமக்குச் சுவாசம் அளித்துவந்த ஒப்பற்ற உயிர்கள் அவை. 2 டிகிரி அளவுக்கு வெப்பநிலையையும் குறைத்து இயற்கை ஏசியாகவே திகழ்ந்தவை அவை. இச்சூழலில் ஆர்வம் பெருகினாலும்கூட, செடிகள் வளர்ப்பது குறித்த சந்தேகங்களை யாரிடம் கேட்பது என்று அறியாமல் இருப்பவர் பலர் உண்டு. அவர்களின் குழப்பங்கள் தீர்த்து தெளிவு பெறச் செய்யவே 'கார்டனிங்' எனும் இந்த நூல். விதைகள் நட்டு, தண்ணீர் ஊற்றினால் செடிகள் வளர்ந்துவிடும் என்ற எண்ணத்தை மாற்றி, செடிகள் வளர்ப்பதில் இத்தனை விஷயங்கள் இருக்கிறதா, இவ்வளவு நுணுக்கங்கள் இருக்கிறதா என்று வியக்கவைக்கும் அளவுக்கு பல்வேறு தகவல்கள் இந்நூலில் கொட்டிக் கிடக்கின்றன. தோட்டக்கலை நிபுணர் சூர்யநர்மதாவும் பத்திரிகையாளர் ஆர்.வைதேகியும் இணைந்து எழுதிய இந்த நூல் தோட்டக்கலை பற்றிய முழுமையான வழிகாட்டியாக அமையும். தோட்டக்கலை நிபுணர் சூர்யநர்மதாவின் ஆலோசனையில், நேரடி கண்காணிப்பில் பல தோட்டங்கள் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நூலில் வெளிப்பட்டுள்ள அவரது ஆழ்ந்த அனுபவக் கருத்துகள் செழிப்புடன் செடிகள் வளர்க்க நிச்சயம் உதவும்!
RS. 140 More...by சல்மா
நாம் சார்ந்திருக்கும் சமூகம் பெண்களை எப்படி வைத்திருக்கிறது என்பதை சல்மாவின் படைப்புக்களை வாசித்துப்பார்த்தால் தெரியும் என்ற அளவிற்கு அவலங்களை அம்பலத்தில் ஏற்றிய எழுத்துக்கள் சல்மாவினுடையவை. தமிழ்நாட்டின் கவிஞர் மற்றும் அரசியல்வாதி சல்மா. பெண் என்ற காரணத்தினால் கல்வி வாய்ப்பு மறுக்கப்படும் ஒரு சமூகத்தில் இருந்து வெளிப்பட்டு அடக்குமுறைகளுக்கு எதிராக தனது படைப்புகளின் மூலம் குரலெழுப்பி வருபவர். இவரைப்பற்றி ஆவணப்படம் தயாரிக்கப்பட்டு அமெரிக்காவில் திரையிடப்பட்டது. பெண்கள் தங்களின் முன்னேற்றத்துக்காக எடுக்கும் முயற்சிகளில் எத்தனை தடைக்கற்கள்? அத்தனையையும் உடைத்துக் கொண்டு வருபவர் சல்மா. தான் சார்ந்திருக்கும் சமுதாயத்தில் பெண்களின் நிலை குறித்து எழுதி கடும் எதிர்ப்புகளை சம்பாதித்துக் கொண்டவர். மதத்தின் பெயரால் அடக்கப்பட்ட, ஆணாதிக்கத்தால் ஒடுக்கப்பட்ட பெண் சமுதாய விடுதலைக்கான வெளிச்சமாக சல்மா தனது இலக்கியப் பயணத்தை தொடர்ந்து வருகிறார். இவரது வெளியுலக பயண அனுபவத் தொகுப்பே இந்த நூல். கட்டுக்கோப்பான ஒரு மதத்தில் பிறந்த ரொக்கையா பீவியாக (இயற்பெயர்) இருந்த சல்மா, உலக பயணம் மேற்கொண்டது எப்படி? அதில் எத்தனை எதிர்ப்புக்கள்? எத்தனை சுவாரசியங்கள்? பக்கத்து ஊருக்குக் கூட தனியாக செல்லமுடியாத சல்மா, வீட்டுக்குத் தெரியாமல் பாஸ்போர்ட் அலுவலகம் சென்று புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தது எப்படி? சல்மாவின் வெளியுலக பயண அனுபவங்கள் வாசிப்பதற்கு மட்டுமல்ல... வாழ்க்கைக்கும் நல்ல அனுபவமாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. வாசியுங்கள்... வசப்படுவீர்கள்!
RS. 102 More...by வீணா குமாரவேல்
இன்றைய நவ நாகரிக உலகில் தங்களைப் பளிச்செனக் காட்டிக்கொள்ள விரும்பாத பெண்கள் இல்லை. ஒவ்வொருவரின் அறிவு, மதிப்பு, வசதியை அழகு மேலும் உயர்த்திக் காட்டுகிறது. பிறருடைய ஈர்ப்பை மட்டும் அல்லாது தன்னம்பிக்கை, பெருமை, தெளிவு என அழகு நமக்குக் கொடுக்கும் அபரிமிதமான ஆற்றல்கள் அதிகம். மேக்கப் என்பது சினிமா மற்றும் சின்னத்திரை நடிகைகள், வசதிபடைத்த மேல்தட்டுப் பெண்களுக்கு மட்டுமேயானது என்கிற நிலை இப்போது மாறிவிட்டது. நடுத்தர வர்க்கத்துப் பெண்களும் தங்களை அழகாக மாற்றிக்கொள்ள மேக்கப் கலையை நாடத் தொடங்கிவிட்டார்கள். அதனால்தான் பெருநகரங்களில் அழகு நிலையங்கள் பல்கிப் பெருகி உள்ளன. இமை, விழி, புருவம், நெற்றி, உதடு, கன்னம், கழுத்து, காது, மூக்கு, முகம், முதுகு, மேனி, விரல்கள், நகங்கள், சருமம், கூந்தல் என அத்தனை உறுப்புகளும் அழகு பெற நூலாசிரியர் வீணா குமாரவேல் சொல்லும் வழிமுறைகள் அனைவரும் பின்பற்றத்தக்கவை. மேலும், நம் நிறத்துக்கு ஏற்றபடி உடை அலங்காரம், அணிகலன்கள், கையில் எடுத்துச் செல்லும் பை என அனைத்தையும் மாற்றிக்கொள்ளும் வழிமுறைகளையும் இங்கே கற்றுத் தருகிறார் வீணா குமாரவேல். அழகுக்கு அணி சேர்க்கும் எக்கச்சக்கக் குறிப்புகள் அடங்கிய இந்தப் புத்தகம், உங்கள் வீட்டு நிலைக்கண்ணாடி முன் இருக்க வேண்டிய ஒன்று.
RS. 74 More...by ராஜம் முரளி
மனைவி, தாய், மருமகள், அண்ணி, அதிகாரி என்று வீட்டிலும் வெளியிலும் பொறுப்புகளை ஏற்று திறம்படச் செய்பவள் இன்றைய பெண். தன்னை எப்போதும் மலர்ச்சியான தோற்றத்தில் வைத்துக்கொள்வது அவளுக்கு அவசியமான ஒன்று. அதற்கு உதவுவதுதான் இந்தப் புத்தகம். அன்றாடம் சமையலுக்குப் பயன்படும் பொருள்களைக் கொண்டு, உடலை ஆரோக்கியமாகவும், புறத்தோற்றத்தை எப்போதும் அழகு மிளிர வைத்துக்கொள்ளவும் பாரம்பரிய அழகுக் குறிப்புகளைத் தருகிறார் ராஜம் முரளி. ''மேற்கத்திய நாகரிகத்தின் தாக்கத்தால் நம்முடைய பாரம்பரிய வழக்கங்களை ஒவ்வொன்றாக மறந்து வருகிறோம், அவற்றின் மகத்துவம் புரியாமலேயே! அழகு விஷயமும் அப்படித்தான் ஆகிவிட்டது. அந்தக் காலத்துப் பெண்கள், தங்களை அழகுபடுத்திக்கொள்ள அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் பொருட்களைத்தான் பயன்படுத்தினார்கள். இளமை, அழகுக்கு உத்தரவாதம் தரும் அந்தப் பொருட்கள் நம் கைக்கு பழக்கப்பட்டவைதான் என்றாலும் எதை எதை எதோடு எந்த அளவில் சேர்க்கிறோம் என்பதில்தான் இருக்கிறது விஷயம்!'' என்கிறார் ராஜம் முரளி. தன் குடும்பத்தின் மூத்த தலைமுறைகளிடமிருந்து கற்றுக்கொண்ட கைப்பக்குவங்கள் ஏராளம். அந்த ரகசியங்களை எடுத்துச்
RS. 100 More...by விகடன் பிரசுரம்
பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்..! வண்ணத்து பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்..! உண்மைதான்! ரகசியங்கள் நம் கண்களுக்குப் புலப்படாமல் இருக்கும்வரை அவை ஆச்சரியமான அதிசயங்கள்தான்! எப்போது அவை நம் கண்களுக்கு புலப்படுகிறதோ, அப்போது அவை அழகான அதிசயங்களாக நம்மை பிரமிக்க வைத்துவிடும். அதுவும் பிரபலமானவர்களின் அழகு ரகசியங்கள் நமக்கு ஆச்சரியத்தையும் ஆனந்தத்தையும் தந்து, நம்மையும் அழகுபடுத்திக் கொள்ளத் தூண்டும். அப்படி நமக்கு ஏற்கெனவே அறிமுகமான சில பிரபலங்களின் அழகு ரகசியங்களை இங்கே அணிவகுத்துத் தந்திருக்கிறோம். அவள் விகடன் இதழில் தொடர்ந்து வெளியான அழகின் ரகசியம் கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல். சினிமா, இசை, நடனம் என்று பல்வேறு துறைகளில் பிரபலமான 42 பெண்மணிகள், தங்கள் அழகுக்கும் ஆரோக்கியத்துக்கும் காரணமான விஷயங்களை மிகவும் ஆர்வத்துடன் விளக்கிச் சொல்கிறார்கள். பளிச் என்று மின்னலைத் தோற்கடிக்கும் அழகோடு வலம் வரும் பிரபலங்களைப் பார்க்கும்போது, எப்படிப்பா அவங்க ஸ்கின் மட்டும் பளபளனு மின்னுது..! அவங்க என்னதான் உபயோகிப்பாங்களோ? அது என்னனு தெரிஞ்சா நானும் வாங்கி அழகுபடுத்திப்பேனே
RS. 84 More...by முரளி கிருஷ்ணன்
அவசரம் கலந்த அதிரடியான நிகழ்வுகள் நிறைந்த இன்றைய வாழ்க்கை முறை, அனைவரையும் மூச்சுமுட்டத் துரத்திக் கொண்டுதான் இருக்கிறது. அந்த ஓட்டத்தால் உடலின் வாட்டம் குன்றி, ஒவ்வொருவரின் உடல் அழகும் அதல பாதாளத்தில் விழுந்துவிடுகிறது. அதை மேம்படுத்தும் வழிமுறைகள் பல இருப்பினும், நமது பொருளாதார நிலை நம்மை சற்றே தயங்க வைக்கிறது. அதை உடைத்தெறியும் விதமாக, அன்றாடம் வீட்டில் நாம் பயன்படுத்தும் இயற்கைப் பொருட்களை வைத்து அழகை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறிப்புகளாக இந்த நூலில் ஏராளம் உள்ளன. மனித உடலின் ஒவ்வொரு பாகத்துக்கும் உரிய அழகை பெறும் இயற்கை இடுபொருட்களை நமக்குச் சுட்டிக்காட்டுவதோடு, சுருக்கமான செய்முறைகளையும், அரிய குறிப்புகளையும் எளிய முறையில் தொகுக்கப்பட்டுள்ளது. மஞ்சள், வேப்பிலை, கறிவேப்பிலை, நல்லெண்ணெய், கிராம்பு, முட்டையின் வெள்ளைக் கரு, அருகம்புல், தேங்காய் எண்ணெய், பூண்டு, இஞ்சி, வெந்தயம், காய்கறிகள், பழ வகைகள், கீரை வகைகள் என உடலின் புற அழகு மட்டுமல்லாமல், அக அழகையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கான அசத்தல் குறிப்புகள் அனைத்தையும் எடுத்துரைப்பது இந்த நூலின் சிறப்பு. தலைமுடி தொடங்கி, தனம் தொடர்ந்து, குறுக்கு வசீகரிப்பதற்கான வழிமுறையோடு பாத வெடிப்பு வரையில் ஆரோக்கியமான வாழ்வுக்கு வேண்டிய தெளிவான செயல்முறைகளோடு பழகும் விதத்தில் அழகை அள்ளி அணைத்திருக்கிறார் நூலாசிரியர் முரளி கிருஷ்ணன். சிறுவர் & சிறுமியர், யுவன் & யுவதி, மூத்தோர் & முதியோர் என அனைத்து பிரிவினருக்கு தேவையான அத்தனை அழகுக் குறிப்புகளையும் ஒருங்கே தொகுத்து இருப்பது இந்த நூலின் தனிச்சிறப்பு. இது, அழகால் அனைவரையும் ஆச்சர்யப்படுத்த ஓர் எளிய வழிகாட்டி!
RS. 50 More...by வடிவேலு
‘‘இந்த வாழ்க்கை, ஓட்டப்பந்தயம் மாதிரி வெரட்டிக்கிட்டே இருக்கு. நாமளும் பின்னங்காலு பிடரியில அடிக்கிற வேகத்துல ஓடிட்டே இருக்கோம். எதுக்கு... யாருக்காக இப்புடி ஓடுறோம்னு தெரியாமலே ஓடிட்டே இருக்கோம். ஒரு எடத்துல நிக்கறப்பதேன்... அதப்பத்தி எல்லாம் யோசிக்க நேரங் கெடைக்குது!’’ - வடிவேலு அவர்கள் என்னிடம் இந்த வார்த்தைகளைப் பகிர்ந்த நிகழ்வு இப்போதும் நினைவில் இருக்கிறது. அனுபவ முத்துக்களாக வெளிப்படும் அவருடைய ஒவ்வொரு வார்த்தைகளும் நிஜமாகவே நெகிழத்தக்கவை; நம்மை நெறிப்படுத்தக்கூடியவை. ஒவ்வொரு குடும்பத்தின் தாய்மார்களையும் தனது உடன்பிறந்த பிறப்புகளாகப் பாவித்து, தன் வாழ்க்கை அனுபவங்களையும், தன் உறவுகள் குறித்த நிகழ்வுகளையும் எடுத்துச் சொல்லி, ‘உங்களில் நான் ஒருவன்’ என்பதை உண்மையான அக்கறையோடு வடிவேலு நிரூபித்திருக்கிறார் இந்தப் புத்தகத்தில். ஒவ்வொரு குடும்பமும் ஆனந்தத்தின் இருப்பிடமாக இருக்க வேண்டும் என்கிற அக்கறையில் உணவு தொடங்கி நாம் உண்ணும் உணவு வரையிலான அத்தனை விஷயங்களையும் ஆத்மார்த்தமாக நம்மோடு பகர்கிறார் வடிவேலு. செவாலியே சிவாஜி கணேசனுக்குப் பிறகு தமிழ் சினிமா உலகின் தரமான - தங்கமான அடையாளம் வடிவேலுதான். உடல்மொழியிலும் வட்டார வழக்கிலும் நெஞ்சைச் சிலிர்க்கவைக்கும் நகைச்சுவை அவதாரமான வடிவேலு, விகடன் பிரசுரத்துக்காக வழங்கும் இரண்டாவது புத்தகம் இது. நிதானம், பொறுமை, சகிப்புத்தன்மை உள்ளிட்ட அடிப்படைக் கூறுகள் தொடங்கி மாமியார் - மருமகள் பிரச்னைகள் வரை இந்தப் புத்தகத்தில் வடிவேலு சொல்லி இருக்கும் கருத்துகள் அவ்வளவு அற்புதமானவை. தமிழ்ப் பேசும் அத்தனை பேரின் இல்லங்களிலும் - உள்ளங்களிலும் நிறைந்திருக்கும் பாசக்காரராக இந்தப் புத்தகத்தின் மூலம் மறுபடியும் நிரூபித்திருக்கிறார் வடிவேலு.
RS. 60 More...by ராஜம் முரளி
‘அழகு’ என்ற வார்த்தையை உச்சரிக்கும்போதே அதில் ஒளிந்துள்ள உற்சாகத்தை நாமும் உணர முடிகிறது. உணவு, உடை, இருப்பிடத்துக்கு அடுத்தபடியாய் வாழ்க்கையின் நான்காவது தேவை ஆரோக்கியம். அதிலும் அழகுடன் சேர்ந்த ஆரோக்கியம் கிடைத்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி! இன்றைய நவநாகரிக உலகில் அழகை ஆராதிக்காத ஆத்மாக்களே இல்லை. ‘அழகு’ என்கிற வார்த்தைதான் உலகை ஆள்கிறது. உடல் அழகை மேன்மேலும் உயர்த்துவதற்கான வழிகள் ஆங்காங்கே கிடைத்தாலும், அவற்றில் ஆரோக்கியம் இருப்பதில்லை. ஆரோக்கியத்தை விரும்பும் அனைவரும் அழகையும் விரும்புவது இயல்புதானே! இதன் அடிப்படையில், ரசாயனக் கலவை இல்லாத இயற்கை வஸ்துகளின் மூலம் இனிக்கும் இளமையான தோற்றத்தைப் பெறும் அற்புதத் தகவல்களைத் தாங்கி வந்துள்ளது இந்த நூல். தலைமுடி தொடங்கி புருவம், கன்னம், கழுத்து, பாதம் வரையிலான உடல் உறுப்புகள் அனைத்தும் அசாத்தியமான அழகைப் பெறுவது சாத்தியமா? ‘சாத்தியமே’ என்ற பதிலை, சுவாரஸ்யமிக்க செய்முறைகளுடன் விளக்கியுள்ளார் நூலாசிரியர் ராஜம் முரளி. ‘அவள் விகடனி’ல் ‘அழகே... ஆரோக்கியமே...’ என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். அனைத்துத் தரப்பு மக்களும் மிக எளிதாக செய்து பார்க்கும் வழிமுறைகள் இதில் உள்ளன. அழகுடன் பழகும் அற்புத வாய்ப்புக் கிடைக்காதா! என ஏங்குபவர்களுக்கும், அழகை அரவணைக்க ஆசைப்படுபவர்களுக்கும் இந்த நூல் அற்புதமானப் பொக்கிஷம்.
RS. 60 More...by கங்கா ராமமூர்த்தி
இன்றைய வாழ்க்கையில் அழகுக்கு நாம் அதிகமாகவே ஓர் அந்தஸ்தை வழங்கி இருக்கிறோம். இயற்கையாக உள்ள அழகுக்கு மேலும் மெருகூட்ட அனைவரும் பியூட்டி பார்லர்களை நோக்கிப் படையெடுக்கிறோம். அதிக விலை கொடுத்து அறிமுகமில்லாத செயற்கை க்ரீம்களையும், லோஷன்களையும் வாங்கிப் பூசிக்கொண்டு இயற்கை அழகைக் கெடுத்துக்கொள்வதைவிட, இயற்கையாக விளைந்த மூலிகை, மருந்துப் பொருட்கள், அஞ்சறைப் பெட்டி அழகு சாதனங்கள் போன்றவற்றின் மூலமாக முகத்தைப் பொலிவடையச் செய்து மூலிகைகளின் மூலம் அழகை உங்கள் முன் மண்டியிடச்செய்ய முடியும். முகத்தில் பருக்கள் வராமல் தடுப்பது எப்படி; முகத்திலுள்ள எண்ணெய்ப் பிசுபிசுப்பால் நாம் அடையும் நன்மை என்ன; அலர்ஜி, அல்சர் ஆகியவற்றுக்கான காரணம்தான் என்ன; மோர் ஒரு மருந்தாவது எப்படி; வில்வ இலையைக் கொண்டு உடலின் வில்லங்கத்தைப் போக்குவது எப்படி; துளசியைக்கொண்டு நம் உடல் உறுப்புகளை தூய்மைப்படுத்துவது எப்படி; புறக்கண்ணில் ஏற்படும் கருவளையத்தைப் போக்குவது எவ்வாறு போன்ற பலவித நுணுக்கங்கள் இந்த நூலில் இருக்கின்றன. அதிகச் செலவில்லாமலேயே அழகை அதிகரித்துக் கொள்வது எப்படி; எந்தெந்தப் பொருளை எப்படிப் பயன்படுத்த
RS. 50 More...