Cart is Empty
by சல்மா
நாம் சார்ந்திருக்கும் சமூகம் பெண்களை எப்படி வைத்திருக்கிறது என்பதை சல்மாவின் படைப்புக்களை வாசித்துப்பார்த்தால் தெரியும் என்ற அளவிற்கு அவலங்களை அம்பலத்தில் ஏற்றிய எழுத்துக்கள் சல்மாவினுடையவை. தமிழ்நாட்டின் கவிஞர் மற்றும் அரசியல்வாதி சல்மா. பெண் என்ற காரணத்தினால் கல்வி வாய்ப்பு மறுக்கப்படும் ஒரு சமூகத்தில் இருந்து வெளிப்பட்டு அடக்குமுறைகளுக்கு எதிராக தனது படைப்புகளின் மூலம் குரலெழுப்பி வருபவர். இவரைப்பற்றி ஆவணப்படம் தயாரிக்கப்பட்டு அமெரிக்காவில் திரையிடப்பட்டது. பெண்கள் தங்களின் முன்னேற்றத்துக்காக எடுக்கும் முயற்சிகளில் எத்தனை தடைக்கற்கள்? அத்தனையையும் உடைத்துக் கொண்டு வருபவர் சல்மா. தான் சார்ந்திருக்கும் சமுதாயத்தில் பெண்களின் நிலை குறித்து எழுதி கடும் எதிர்ப்புகளை சம்பாதித்துக் கொண்டவர். மதத்தின் பெயரால் அடக்கப்பட்ட, ஆணாதிக்கத்தால் ஒடுக்கப்பட்ட பெண் சமுதாய விடுதலைக்கான வெளிச்சமாக சல்மா தனது இலக்கியப் பயணத்தை தொடர்ந்து வருகிறார். இவரது வெளியுலக பயண அனுபவத் தொகுப்பே இந்த நூல். கட்டுக்கோப்பான ஒரு மதத்தில் பிறந்த ரொக்கையா பீவியாக (இயற்பெயர்) இருந்த சல்மா, உலக பயணம் மேற்கொண்டது எப்படி? அதில் எத்தனை எதிர்ப்புக்கள்? எத்தனை சுவாரசியங்கள்? பக்கத்து ஊருக்குக் கூட தனியாக செல்லமுடியாத சல்மா, வீட்டுக்குத் தெரியாமல் பாஸ்போர்ட் அலுவலகம் சென்று புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தது எப்படி? சல்மாவின் வெளியுலக பயண அனுபவங்கள் வாசிப்பதற்கு மட்டுமல்ல... வாழ்க்கைக்கும் நல்ல அனுபவமாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. வாசியுங்கள்... வசப்படுவீர்கள்!
RS. 102 More...by பசுமைக்குமார்
விண்வெளிப் பயணம் என்பது மனித குலச் சாதனை. புவி ஈர்ப்பு அற்ற நிலையில் மிதந்து, நடந்து, சில நாட்கள் விண்வெளியில் வாழ்வது இதற்கு அத்தியாவசியம். இந்த விண்வெளிப் பயணத்தில் பெண்களும் சாதனை புரிந்ததைப் பற்றியே இந்த நூல். இதில் ஆண்கள் சாதனை படைத்தது அதிசயமே அல்ல; ஆனால், பெண்கள் தங்கள் குடும்பத்தையும் கவனித்துக்கொண்டு, எட்டாத தூரத்தில் இருக்கும் சாத்தியங்களையும் எட்டிப் பிடித்து, ஆணுக்கு நிகராக சாதனை புரிந்தது சாதனையிலும் சாதனை; அதிசயத்திலும் அதிசயம். அப்படிப்பட்ட வீர சாகசங்கள் புரிந்த வீராங்கனைகளைப் பற்றிச் சுவையாக எழுதி இருக்கிறார் நூல் ஆசிரியர் பசுமைக்குமார். விண்வெளிக்குச் சென்ற முதல் பெண், அதிலேயே முதல் அமெரிக்கப் பெண், விண்வெளியில் நடந்த முதல் பெண், நடந்த முதல் அமெரிக்கப் பெண், விண்வெளிக்குச் சென்ற முதல் ஆசிரியை, முதல் அமெரிக்க யூத இனப் பெண், முதல் பிரிட்டிஷ் பெண், முதல் கருப்பு இனப் பெண், முதல் ஜப்பான் பெண், முதல் கனடா பெண், விண்வெளியில் அதிக காலம் பயணம் செய்த பெண்மணி, முதல் இந்தியப் பெண், 3 முறை பயணம் செய்த பெண், 606 முறை பூமியைச் சுற்றிய பெண், 5 மாதம் குடியிருந்த பெண்... என எத்தனையோ சாதனைப் பெண்களைப் பற்றி எழுதியிருக்கிறார். பெண்களின் பெருமையைத் தெரிந்துகொள்வதும், முன்னேறத் துடிக்கும் பெண்கள் தங்கள் உற்சாகத்தை வளர்த்துக்கொள்வதும், அணைந்துவிடாமல் காத்துக்கொள்வதும் மட்டும் அல்லாமல் ஆண்களும் தங்கள் முன்னேற்றத்துக்கும் பயன்படுத்தும் வகையில் இந்த நூல் வழிகாட்டும் என்பதில் ஐயம் இல்லை. விண்ணை அளந்துதான் பார்ப்போமே!
RS. 98 More...by ப்ரியா தம்பி
‘‘உங்களுக்குக் கல்யாணம் ஆனப்போ, நான் எங்கே இருந்தேன்?”, ‘‘இறந்துபோனவங்களை மண்ணுக்குள் புதைச்சா, அவங்க எப்படி மேல போவாங்க?” - இப்படி குழந்தைகள் அறிவுபூர்வமாக கேள்விகள் எழுப்பும்போது நம்மால் அவர்களுக்குப் புரிகிறமாதிரி பதில்கள் தர முடிவது இல்லை. ஆண் குழந்தைகள் புத்திசாலித்தனமாகப் பேசினால் ‘அறிவாளி’ என்றும், அதுவே பெண் குழந்தைகள் என்றால் ‘வாயாடி’ என்றும் நாமே பிரிவினை செய்துவிடுகிறோம். இப்போதுள்ள சூழ்நிலையில் பெண்கள் பேசுவதைக் காட்டிலும் எழுதுவதற்கு நல்ல தளம் கிடைத்து, அதை நன்றாகவே பயன்படுத்திக்கொள்கின்றனர். தனது பால்யகாலம்தொட்டு தற்போது வாழும் வாழ்க்கை வரையிலான அனைத்து சம்பவங்களையும், தான் சந்தித்த மனிதர்களையும் படம்பிடித்து நம் முன்னே திரைப்படமாகக் காண்பிக்கிறார் நூல் ஆசிரியர் ப்ரியா தம்பி. போகிறபோக்கில் சம்பவங்களைச் சொல்லிச் சென்றாலும் ஒரு விஷயம் ஒருவருக்கு மயிலிறகால் வருடுவதுபோலவும் அதுவே வேறொருவருக்கு ஊசியால் குத்துவதுபோலவும் இருப்பது, இவரது எழுத்து வன்மையின் எடுத்துக்காட்டு. எந்த ஒளிவுமறைவும் இன்றி உள்ளது உள்ளபடி பகிர்ந்ததால் அனைத்துத் தரப்பினராலும் பாராட்டப் பெற்ற ‘பேசாத பேச்செல்லாம்...’ தொடர், இப்போது புத்தகமாக வெளிவருகிறது. புத்தகம் படித்து முடிக்கும்போது உங்களை நீங்களே எடைபோட்டுப் பார்த்துக்கொள்ள முடியும்.
RS. 130 More...by சூர்யநர்மதா, ஆர்.வைதேகி
உயிர்வளியாக, உணவாக, மருந்தாக, நிழலாக, கோடிக் கணக்கான சிற்றுயிர்களுக்கு வாழ்விடமாக, இன்னும் எத்தனை எத்தனையோ பயன்களைத் தருவதோடு, கண்ணுக்கு இனிமை செய்து, உள்ளத்துக்கு உவப்பையும் அளிப்பவை மரங்கள். விதை போட்டவருக்கு மட்டுமே என்றில்லாமல், தலைமுறைகள் பல தாண்டியும் ஒரு தவம்போல உலகத்துக்குச் சேவை புரிபவை இவை. வீட்டுக்கு ஒரு தோட்டம் என்பதோடு, வாசல்தோறும் ஒரு மரம் வளர்க்கவேண்டிய அவசர அவசியம் இன்று உருவாகியிருக்கிறது. 2016-ம் ஆண்டின் இறுதியில் தமிழகத்தைத் தாக்கிய வர்தா புயல் காரணமாக லட்சக்கணக்கான மரங்களை இழந்திருக்கிறோம். ஒரு பைசா கூட செலவே இல்லாத ஆக்சிஜன் தொழிற்சாலையாக விளங்கி, நமக்குச் சுவாசம் அளித்துவந்த ஒப்பற்ற உயிர்கள் அவை. 2 டிகிரி அளவுக்கு வெப்பநிலையையும் குறைத்து இயற்கை ஏசியாகவே திகழ்ந்தவை அவை. இச்சூழலில் ஆர்வம் பெருகினாலும்கூட, செடிகள் வளர்ப்பது குறித்த சந்தேகங்களை யாரிடம் கேட்பது என்று அறியாமல் இருப்பவர் பலர் உண்டு. அவர்களின் குழப்பங்கள் தீர்த்து தெளிவு பெறச் செய்யவே 'கார்டனிங்' எனும் இந்த நூல். விதைகள் நட்டு, தண்ணீர் ஊற்றினால் செடிகள் வளர்ந்துவிடும் என்ற எண்ணத்தை மாற்றி, செடிகள் வளர்ப்பதில் இத்தனை விஷயங்கள் இருக்கிறதா, இவ்வளவு நுணுக்கங்கள் இருக்கிறதா என்று வியக்கவைக்கும் அளவுக்கு பல்வேறு தகவல்கள் இந்நூலில் கொட்டிக் கிடக்கின்றன. தோட்டக்கலை நிபுணர் சூர்யநர்மதாவும் பத்திரிகையாளர் ஆர்.வைதேகியும் இணைந்து எழுதிய இந்த நூல் தோட்டக்கலை பற்றிய முழுமையான வழிகாட்டியாக அமையும். தோட்டக்கலை நிபுணர் சூர்யநர்மதாவின் ஆலோசனையில், நேரடி கண்காணிப்பில் பல தோட்டங்கள் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நூலில் வெளிப்பட்டுள்ள அவரது ஆழ்ந்த அனுபவக் கருத்துகள் செழிப்புடன் செடிகள் வளர்க்க நிச்சயம் உதவும்!
RS. 140 More...by ஆர்.வைதேகி
இன்றைய தேதியில் பலருக்கும் 'தலையாய' பிரச்னையாக இருப்பது தலைமுடியை பாதுகாப்பது தான். இந்தப் பிரச்னை பெண்களுக்கு மட்டுமல்ல... ஆண்களுக்கும் பொதுவானதுதான். இயந்திரங்களின் உலகமாகிவிட்ட தற்கால சூழலில் மாசு கலந்த காற்றும் நீரும் தலைமுடிக்கு மிகப்பெரிய தலைவலியாக இருக்கின்றன. எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்பதைப்போல மாசு மற்றும் தூசியிலிருந்து தலைமுடியைக் காப்பாற்ற... என்ன மாதிரியான தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பது என்று தெரியாமல் எத்தனையோ பேர் தவிக்கின்றனர். சிலருடைய ஆலோசனையைக் கேட்டு இருந்த முடியை இழந்தவர்களும் உண்டு. அமேசான் காடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட அபூர்வ மூலிகைக் கதைகளை நம்பி காசையும் முடியையும் இழந்தவர்களுக்கும் இங்கே பஞ்சமில்லை. எனில், இந்த பிரச்னைக்கு என்னதான் தீர்வு? `கூந்தல் என்சைக்ளோபீடியா' என்கிற இந்தப் புத்தகம் அதற்கான முழுமையான தீர்வைச் சொல்கிறது!
RS. 110 More...