Cart is Empty
by சல்மா
நாம் சார்ந்திருக்கும் சமூகம் பெண்களை எப்படி வைத்திருக்கிறது என்பதை சல்மாவின் படைப்புக்களை வாசித்துப்பார்த்தால் தெரியும் என்ற அளவிற்கு அவலங்களை அம்பலத்தில் ஏற்றிய எழுத்துக்கள் சல்மாவினுடையவை. தமிழ்நாட்டின் கவிஞர் மற்றும் அரசியல்வாதி சல்மா. பெண் என்ற காரணத்தினால் கல்வி வாய்ப்பு மறுக்கப்படும் ஒரு சமூகத்தில் இருந்து வெளிப்பட்டு அடக்குமுறைகளுக்கு எதிராக தனது படைப்புகளின் மூலம் குரலெழுப்பி வருபவர். இவரைப்பற்றி ஆவணப்படம் தயாரிக்கப்பட்டு அமெரிக்காவில் திரையிடப்பட்டது. பெண்கள் தங்களின் முன்னேற்றத்துக்காக எடுக்கும் முயற்சிகளில் எத்தனை தடைக்கற்கள்? அத்தனையையும் உடைத்துக் கொண்டு வருபவர் சல்மா. தான் சார்ந்திருக்கும் சமுதாயத்தில் பெண்களின் நிலை குறித்து எழுதி கடும் எதிர்ப்புகளை சம்பாதித்துக் கொண்டவர். மதத்தின் பெயரால் அடக்கப்பட்ட, ஆணாதிக்கத்தால் ஒடுக்கப்பட்ட பெண் சமுதாய விடுதலைக்கான வெளிச்சமாக சல்மா தனது இலக்கியப் பயணத்தை தொடர்ந்து வருகிறார். இவரது வெளியுலக பயண அனுபவத் தொகுப்பே இந்த நூல். கட்டுக்கோப்பான ஒரு மதத்தில் பிறந்த ரொக்கையா பீவியாக (இயற்பெயர்) இருந்த சல்மா, உலக பயணம் மேற்கொண்டது எப்படி? அதில் எத்தனை எதிர்ப்புக்கள்? எத்தனை சுவாரசியங்கள்? பக்கத்து ஊருக்குக் கூட தனியாக செல்லமுடியாத சல்மா, வீட்டுக்குத் தெரியாமல் பாஸ்போர்ட் அலுவலகம் சென்று புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தது எப்படி? சல்மாவின் வெளியுலக பயண அனுபவங்கள் வாசிப்பதற்கு மட்டுமல்ல... வாழ்க்கைக்கும் நல்ல அனுபவமாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. வாசியுங்கள்... வசப்படுவீர்கள்!
RS. 102 More...by ஆர்.வைதேகி
இன்றைய தேதியில் பலருக்கும் 'தலையாய' பிரச்னையாக இருப்பது தலைமுடியை பாதுகாப்பது தான். இந்தப் பிரச்னை பெண்களுக்கு மட்டுமல்ல... ஆண்களுக்கும் பொதுவானதுதான். இயந்திரங்களின் உலகமாகிவிட்ட தற்கால சூழலில் மாசு கலந்த காற்றும் நீரும் தலைமுடிக்கு மிகப்பெரிய தலைவலியாக இருக்கின்றன. எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்பதைப்போல மாசு மற்றும் தூசியிலிருந்து தலைமுடியைக் காப்பாற்ற... என்ன மாதிரியான தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பது என்று தெரியாமல் எத்தனையோ பேர் தவிக்கின்றனர். சிலருடைய ஆலோசனையைக் கேட்டு இருந்த முடியை இழந்தவர்களும் உண்டு. அமேசான் காடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட அபூர்வ மூலிகைக் கதைகளை நம்பி காசையும் முடியையும் இழந்தவர்களுக்கும் இங்கே பஞ்சமில்லை. எனில், இந்த பிரச்னைக்கு என்னதான் தீர்வு? `கூந்தல் என்சைக்ளோபீடியா' என்கிற இந்தப் புத்தகம் அதற்கான முழுமையான தீர்வைச் சொல்கிறது!
RS. 110 More...by ராஜம் முரளி
இயற்கை உணவுப் பொருள்கள், ஆரோக்கியத்தோடு அழகையும் தரக்கூடியவை. அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்று பெண்கள் மட்டுமல்ல, இன்றைய காலத்தில் ஆண்களுமே ஆசை கொள்கின்றனர். அதற்காக செயற்கை முறையில் தயாரிக்கப்படும் அழகு சாதனப் பொருள்களை வாங்கி உபயோகிக்கின்றனர். அதனால் அழகுக்குப் பதில் உடல் ஆரோக்கியம்தான் கெடுகிறது. ஆனால், நமக்கு எளிதில் கிடைக்கும் கீரை வகைகளில் உடல் ஆரோக்கியத்தைக் காக்கும் சத்துகள் மட்டுமின்றி நம் உடல் பாகங்களை அழகாக்கும் பலன்களும் உள்ளன. பார்வையைக் கூர்மையாக்கி கண்களை அழகாக்கும் பொன்னாங்கண்ணி, வயிற்றுப் புண்ணை நீக்கி, பருக்களைப் போக்கி முகத்துக்குப் பொலிவு தரும் மணத்தக்காளி, தோலுக்குப் பளபளப்புத் தரும் கற்பூரவல்லி... என கீரைகள் ஒவ்வொன்றும் நமக்கு ஆரோக்கியத்தையும் அழகையும் சேர்த்தே தருகின்றன. கீரை மட்டுமின்றி நட்ஸ் வகைகள், பழங்கள் ஆகியவவை உடல் பாகங்களை அழகாக்க எப்படி யெல்லாம் உதவுகின்றன என்பதையும் பயன்படுத்தும் முறைகளையும் அழகாக எடுத்துச் சொல்கிறது இந்த நூல். ஆரோக்கியத்தோடு இயற்கை தரும் பேரழகையும் பெற்று ஜொலியுங்கள்!
RS. 150 More...by வசுந்தரா
வாழ்க்கை அழகு நிறைந்தது. மலர், தென்றல், நதி, கடல், காடு, மலை, வானம், வயல் என்று இயற்கையின் படைப்பில் யாவும் அழகு ததும்புவன; பெண்ணும்தான். பெண்ணை பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அறிவை, தெரிவை, பேரிளம் பெண் என்று வயதைக் கொண்டு ஏழாக வகைப்படுத்தியிருக்கிறது நமது இலக்கியம். அதுபோல, பெண்ணின் அழகை வெளிப்படுத்தும் பாகங்களையும் ஏழாக வகைப்படுத்தலாம். கூந்தல், கண்கள், இதழ்கள், கன்னம், கழுத்து, இடை மற்றும் விரல்கள் ஆகிய ஏழு வகை பாகங்களும் அழகு பொருந்தி இருக்க வேண்டும் என்று எல்லாப் பெண்களும் நினைப்பார்கள்; அது இயற்கையே. ஆனாலும், தொடர்ந்து அழகைப் பேணிப் பாதுகாக்கும் பெண்களுக்கே இந்த ஏழு வகை அம்சங்களும் பொருந்தியிருக்கும். சிலருக்கு அழகைப் பேணுவதில் ஆர்வம் இருக்கும். ஆனால், அதற்கான வழிமுறைகள் தெரியாது. தெரிந்தாலும் அரைகுறையாகவே தெரிந்திருக்கும். அப்படிப்பட்ட பெண்களுக்காகவே 'அவள் விகடன்' இதழில் 'அழகு' தொடராக வெளிவந்தது. அழகுக்கலை நிபுணர் வசுந்தரா எழுதிவந்த இந்தத் தொடர் வாசகியர் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றது. இந்த நூல் முழுக்க இயற்கை முறையிலான அழகுக் குறிப்புகள் நிறைந்து இருக்கின்றன. எ
RS. 123 More...by ப்ரியா தம்பி
‘‘உங்களுக்குக் கல்யாணம் ஆனப்போ, நான் எங்கே இருந்தேன்?”, ‘‘இறந்துபோனவங்களை மண்ணுக்குள் புதைச்சா, அவங்க எப்படி மேல போவாங்க?” - இப்படி குழந்தைகள் அறிவுபூர்வமாக கேள்விகள் எழுப்பும்போது நம்மால் அவர்களுக்குப் புரிகிறமாதிரி பதில்கள் தர முடிவது இல்லை. ஆண் குழந்தைகள் புத்திசாலித்தனமாகப் பேசினால் ‘அறிவாளி’ என்றும், அதுவே பெண் குழந்தைகள் என்றால் ‘வாயாடி’ என்றும் நாமே பிரிவினை செய்துவிடுகிறோம். இப்போதுள்ள சூழ்நிலையில் பெண்கள் பேசுவதைக் காட்டிலும் எழுதுவதற்கு நல்ல தளம் கிடைத்து, அதை நன்றாகவே பயன்படுத்திக்கொள்கின்றனர். தனது பால்யகாலம்தொட்டு தற்போது வாழும் வாழ்க்கை வரையிலான அனைத்து சம்பவங்களையும், தான் சந்தித்த மனிதர்களையும் படம்பிடித்து நம் முன்னே திரைப்படமாகக் காண்பிக்கிறார் நூல் ஆசிரியர் ப்ரியா தம்பி. போகிறபோக்கில் சம்பவங்களைச் சொல்லிச் சென்றாலும் ஒரு விஷயம் ஒருவருக்கு மயிலிறகால் வருடுவதுபோலவும் அதுவே வேறொருவருக்கு ஊசியால் குத்துவதுபோலவும் இருப்பது, இவரது எழுத்து வன்மையின் எடுத்துக்காட்டு. எந்த ஒளிவுமறைவும் இன்றி உள்ளது உள்ளபடி பகிர்ந்ததால் அனைத்துத் தரப்பினராலும் பாராட்டப் பெற்ற ‘பேசாத பேச்செல்லாம்...’ தொடர், இப்போது புத்தகமாக வெளிவருகிறது. புத்தகம் படித்து முடிக்கும்போது உங்களை நீங்களே எடைபோட்டுப் பார்த்துக்கொள்ள முடியும்.
RS. 130 More...by சூர்யநர்மதா, ஆர்.வைதேகி
உயிர்வளியாக, உணவாக, மருந்தாக, நிழலாக, கோடிக் கணக்கான சிற்றுயிர்களுக்கு வாழ்விடமாக, இன்னும் எத்தனை எத்தனையோ பயன்களைத் தருவதோடு, கண்ணுக்கு இனிமை செய்து, உள்ளத்துக்கு உவப்பையும் அளிப்பவை மரங்கள். விதை போட்டவருக்கு மட்டுமே என்றில்லாமல், தலைமுறைகள் பல தாண்டியும் ஒரு தவம்போல உலகத்துக்குச் சேவை புரிபவை இவை. வீட்டுக்கு ஒரு தோட்டம் என்பதோடு, வாசல்தோறும் ஒரு மரம் வளர்க்கவேண்டிய அவசர அவசியம் இன்று உருவாகியிருக்கிறது. 2016-ம் ஆண்டின் இறுதியில் தமிழகத்தைத் தாக்கிய வர்தா புயல் காரணமாக லட்சக்கணக்கான மரங்களை இழந்திருக்கிறோம். ஒரு பைசா கூட செலவே இல்லாத ஆக்சிஜன் தொழிற்சாலையாக விளங்கி, நமக்குச் சுவாசம் அளித்துவந்த ஒப்பற்ற உயிர்கள் அவை. 2 டிகிரி அளவுக்கு வெப்பநிலையையும் குறைத்து இயற்கை ஏசியாகவே திகழ்ந்தவை அவை. இச்சூழலில் ஆர்வம் பெருகினாலும்கூட, செடிகள் வளர்ப்பது குறித்த சந்தேகங்களை யாரிடம் கேட்பது என்று அறியாமல் இருப்பவர் பலர் உண்டு. அவர்களின் குழப்பங்கள் தீர்த்து தெளிவு பெறச் செய்யவே 'கார்டனிங்' எனும் இந்த நூல். விதைகள் நட்டு, தண்ணீர் ஊற்றினால் செடிகள் வளர்ந்துவிடும் என்ற எண்ணத்தை மாற்றி, செடிகள் வளர்ப்பதில் இத்தனை விஷயங்கள் இருக்கிறதா, இவ்வளவு நுணுக்கங்கள் இருக்கிறதா என்று வியக்கவைக்கும் அளவுக்கு பல்வேறு தகவல்கள் இந்நூலில் கொட்டிக் கிடக்கின்றன. தோட்டக்கலை நிபுணர் சூர்யநர்மதாவும் பத்திரிகையாளர் ஆர்.வைதேகியும் இணைந்து எழுதிய இந்த நூல் தோட்டக்கலை பற்றிய முழுமையான வழிகாட்டியாக அமையும். தோட்டக்கலை நிபுணர் சூர்யநர்மதாவின் ஆலோசனையில், நேரடி கண்காணிப்பில் பல தோட்டங்கள் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நூலில் வெளிப்பட்டுள்ள அவரது ஆழ்ந்த அனுபவக் கருத்துகள் செழிப்புடன் செடிகள் வளர்க்க நிச்சயம் உதவும்!
RS. 140 More...by ராஜம் முரளி
இளமை அழகானது இனிமையானது. இளமையைப் பாதுகாத்துத் தக்கவைத்துகொள்ள எல்லா வயதினருக்கும் ஆசைதான். பெண்கள் எப்போதும் தங்களை அழகாக்கிக் கொள்வதில் அதீத ஆர்வம்கொண்டிருப்பர். இது இயற்கை யான உணர்வு. எல்லோரும் விரும்புவதும் இதுதான். ஆனால், உபயோகப்படுத்தும் காஸ்மெடிக்ஸ், ரசாயனம் நிறைந்த அழகுப் பொருள்களால் ஏற்படும் ஒவ்வாமை யினால் தோல் வறட்சியுற்று இளமையில் முதுமைத் தோற்றம் பெற்றுவிடுகின்றனர் சில பெண்கள். உணவு, பழக்கவழக்கம், வாழ்வுமுறைமாறுபாடுகளால் ஆண்களும் சிறு பிள்ளைகளும்கூட இளமையில் முதுமைத் தோற்றம் பெற்றுவிடுகின்றனர். இதனால் மனவருத்தம், மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர். அனைவரின் பிரச்னைக்கும் தீர்வு அளிக்கும் நூல் இது. முடி உதிர்வு, முடி வளர்ச்சி, தோல் நோய், சுருக்கம், வறட்சி நீங்கவும், சிவப்பழகுக்கு, கருமை நீங்க, குண்டு கன்னம் பெற, செரிமானத்துக்கு, பாதவெடிப்பு அனைத்துப் பிரச்னைக்கும் தீர்வு பெறவும், சிறு சிறு செடி இலைகள் முதல் கொண்டு வீட்டு அஞ்சறைப் பெட்டி சாமான்கள், உலர் பழங்கள், எண்ணெய் வகைகள், கீரை வகைகள், பூலாங்கிழங்கு, புங்கங்காய் ஆகிய மருந்துப் பொருள்களும், கடலைமாவு, அரிசி மாவு, பயத்தம் மாவு ஆகிய மாவுப் பொருள்கள், தயிர், வெண்ணெய் ஆகிய பால் பொருள்கள் அனைத்தும் உணவுப் பொருள்களாக மட்டுமல்ல... அழகு தரும் சாதனங்களும்கூட. இவை அனைத்தையும் எவற்றோடு எவை சேர என்ன பலன் கிடைக்கும் என்பதைச் சொல்லியிருக்கிறார் நூலாசிரியர். ஜாதிக்காய், மாசிக்காயை இழைத்துத் தடவ நெற்றிச் சுருக்கம் மறையும்... தேனுடன் வெந்தயத்தைக் கலந்து பூச முக அழகு கூடும்... பப்பாளி, வெள்ளரிக்காய்ச் சாறு விரல்களின் வறட்சித் தன்மையைப் போக்கும்... இப்படி உச்சி முதல் பாதம் வரைக்கும் அழகாக பாதுகாத்துக் கொள்ளக்கூடிய அழகுக் குறிப்புகள் நிறைந்த நூல் இது. வாருங்கள் அழகாவோம்... அழகாக்குவோம்...
RS. 200 More...