Cart is Empty
by ராஜம் முரளி
மனைவி, தாய், மருமகள், அண்ணி, அதிகாரி என்று வீட்டிலும் வெளியிலும் பொறுப்புகளை ஏற்று திறம்படச் செய்பவள் இன்றைய பெண். தன்னை எப்போதும் மலர்ச்சியான தோற்றத்தில் வைத்துக்கொள்வது அவளுக்கு அவசியமான ஒன்று. அதற்கு உதவுவதுதான் இந்தப் புத்தகம். அன்றாடம் சமையலுக்குப் பயன்படும் பொருள்களைக் கொண்டு, உடலை ஆரோக்கியமாகவும், புறத்தோற்றத்தை எப்போதும் அழகு மிளிர வைத்துக்கொள்ளவும் பாரம்பரிய அழகுக் குறிப்புகளைத் தருகிறார் ராஜம் முரளி. ''மேற்கத்திய நாகரிகத்தின் தாக்கத்தால் நம்முடைய பாரம்பரிய வழக்கங்களை ஒவ்வொன்றாக மறந்து வருகிறோம், அவற்றின் மகத்துவம் புரியாமலேயே! அழகு விஷயமும் அப்படித்தான் ஆகிவிட்டது. அந்தக் காலத்துப் பெண்கள், தங்களை அழகுபடுத்திக்கொள்ள அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் பொருட்களைத்தான் பயன்படுத்தினார்கள். இளமை, அழகுக்கு உத்தரவாதம் தரும் அந்தப் பொருட்கள் நம் கைக்கு பழக்கப்பட்டவைதான் என்றாலும் எதை எதை எதோடு எந்த அளவில் சேர்க்கிறோம் என்பதில்தான் இருக்கிறது விஷயம்!'' என்கிறார் ராஜம் முரளி. தன் குடும்பத்தின் மூத்த தலைமுறைகளிடமிருந்து கற்றுக்கொண்ட கைப்பக்குவங்கள் ஏராளம். அந்த ரகசியங்களை எடுத்துச்
RS. 100 More...by வீணா குமாரவேல்
இன்றைய நவ நாகரிக உலகில் தங்களைப் பளிச்செனக் காட்டிக்கொள்ள விரும்பாத பெண்கள் இல்லை. ஒவ்வொருவரின் அறிவு, மதிப்பு, வசதியை அழகு மேலும் உயர்த்திக் காட்டுகிறது. பிறருடைய ஈர்ப்பை மட்டும் அல்லாது தன்னம்பிக்கை, பெருமை, தெளிவு என அழகு நமக்குக் கொடுக்கும் அபரிமிதமான ஆற்றல்கள் அதிகம். மேக்கப் என்பது சினிமா மற்றும் சின்னத்திரை நடிகைகள், வசதிபடைத்த மேல்தட்டுப் பெண்களுக்கு மட்டுமேயானது என்கிற நிலை இப்போது மாறிவிட்டது. நடுத்தர வர்க்கத்துப் பெண்களும் தங்களை அழகாக மாற்றிக்கொள்ள மேக்கப் கலையை நாடத் தொடங்கிவிட்டார்கள். அதனால்தான் பெருநகரங்களில் அழகு நிலையங்கள் பல்கிப் பெருகி உள்ளன. இமை, விழி, புருவம், நெற்றி, உதடு, கன்னம், கழுத்து, காது, மூக்கு, முகம், முதுகு, மேனி, விரல்கள், நகங்கள், சருமம், கூந்தல் என அத்தனை உறுப்புகளும் அழகு பெற நூலாசிரியர் வீணா குமாரவேல் சொல்லும் வழிமுறைகள் அனைவரும் பின்பற்றத்தக்கவை. மேலும், நம் நிறத்துக்கு ஏற்றபடி உடை அலங்காரம், அணிகலன்கள், கையில் எடுத்துச் செல்லும் பை என அனைத்தையும் மாற்றிக்கொள்ளும் வழிமுறைகளையும் இங்கே கற்றுத் தருகிறார் வீணா குமாரவேல். அழகுக்கு அணி சேர்க்கும் எக்கச்சக்கக் குறிப்புகள் அடங்கிய இந்தப் புத்தகம், உங்கள் வீட்டு நிலைக்கண்ணாடி முன் இருக்க வேண்டிய ஒன்று.
RS. 74 More...by கங்கா ராமமூர்த்தி
இன்றைய வாழ்க்கையில் அழகுக்கு நாம் அதிகமாகவே ஓர் அந்தஸ்தை வழங்கி இருக்கிறோம். இயற்கையாக உள்ள அழகுக்கு மேலும் மெருகூட்ட அனைவரும் பியூட்டி பார்லர்களை நோக்கிப் படையெடுக்கிறோம். அதிக விலை கொடுத்து அறிமுகமில்லாத செயற்கை க்ரீம்களையும், லோஷன்களையும் வாங்கிப் பூசிக்கொண்டு இயற்கை அழகைக் கெடுத்துக்கொள்வதைவிட, இயற்கையாக விளைந்த மூலிகை, மருந்துப் பொருட்கள், அஞ்சறைப் பெட்டி அழகு சாதனங்கள் போன்றவற்றின் மூலமாக முகத்தைப் பொலிவடையச் செய்து மூலிகைகளின் மூலம் அழகை உங்கள் முன் மண்டியிடச்செய்ய முடியும். முகத்தில் பருக்கள் வராமல் தடுப்பது எப்படி; முகத்திலுள்ள எண்ணெய்ப் பிசுபிசுப்பால் நாம் அடையும் நன்மை என்ன; அலர்ஜி, அல்சர் ஆகியவற்றுக்கான காரணம்தான் என்ன; மோர் ஒரு மருந்தாவது எப்படி; வில்வ இலையைக் கொண்டு உடலின் வில்லங்கத்தைப் போக்குவது எப்படி; துளசியைக்கொண்டு நம் உடல் உறுப்புகளை தூய்மைப்படுத்துவது எப்படி; புறக்கண்ணில் ஏற்படும் கருவளையத்தைப் போக்குவது எவ்வாறு போன்ற பலவித நுணுக்கங்கள் இந்த நூலில் இருக்கின்றன. அதிகச் செலவில்லாமலேயே அழகை அதிகரித்துக் கொள்வது எப்படி; எந்தெந்தப் பொருளை எப்படிப் பயன்படுத்த
RS. 50 More...by சூர்யநர்மதா, ஆர்.வைதேகி
உயிர்வளியாக, உணவாக, மருந்தாக, நிழலாக, கோடிக் கணக்கான சிற்றுயிர்களுக்கு வாழ்விடமாக, இன்னும் எத்தனை எத்தனையோ பயன்களைத் தருவதோடு, கண்ணுக்கு இனிமை செய்து, உள்ளத்துக்கு உவப்பையும் அளிப்பவை மரங்கள். விதை போட்டவருக்கு மட்டுமே என்றில்லாமல், தலைமுறைகள் பல தாண்டியும் ஒரு தவம்போல உலகத்துக்குச் சேவை புரிபவை இவை. வீட்டுக்கு ஒரு தோட்டம் என்பதோடு, வாசல்தோறும் ஒரு மரம் வளர்க்கவேண்டிய அவசர அவசியம் இன்று உருவாகியிருக்கிறது. 2016-ம் ஆண்டின் இறுதியில் தமிழகத்தைத் தாக்கிய வர்தா புயல் காரணமாக லட்சக்கணக்கான மரங்களை இழந்திருக்கிறோம். ஒரு பைசா கூட செலவே இல்லாத ஆக்சிஜன் தொழிற்சாலையாக விளங்கி, நமக்குச் சுவாசம் அளித்துவந்த ஒப்பற்ற உயிர்கள் அவை. 2 டிகிரி அளவுக்கு வெப்பநிலையையும் குறைத்து இயற்கை ஏசியாகவே திகழ்ந்தவை அவை. இச்சூழலில் ஆர்வம் பெருகினாலும்கூட, செடிகள் வளர்ப்பது குறித்த சந்தேகங்களை யாரிடம் கேட்பது என்று அறியாமல் இருப்பவர் பலர் உண்டு. அவர்களின் குழப்பங்கள் தீர்த்து தெளிவு பெறச் செய்யவே 'கார்டனிங்' எனும் இந்த நூல். விதைகள் நட்டு, தண்ணீர் ஊற்றினால் செடிகள் வளர்ந்துவிடும் என்ற எண்ணத்தை மாற்றி, செடிகள் வளர்ப்பதில் இத்தனை விஷயங்கள் இருக்கிறதா, இவ்வளவு நுணுக்கங்கள் இருக்கிறதா என்று வியக்கவைக்கும் அளவுக்கு பல்வேறு தகவல்கள் இந்நூலில் கொட்டிக் கிடக்கின்றன. தோட்டக்கலை நிபுணர் சூர்யநர்மதாவும் பத்திரிகையாளர் ஆர்.வைதேகியும் இணைந்து எழுதிய இந்த நூல் தோட்டக்கலை பற்றிய முழுமையான வழிகாட்டியாக அமையும். தோட்டக்கலை நிபுணர் சூர்யநர்மதாவின் ஆலோசனையில், நேரடி கண்காணிப்பில் பல தோட்டங்கள் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நூலில் வெளிப்பட்டுள்ள அவரது ஆழ்ந்த அனுபவக் கருத்துகள் செழிப்புடன் செடிகள் வளர்க்க நிச்சயம் உதவும்!
RS. 140 More...by சல்மா
நாம் சார்ந்திருக்கும் சமூகம் பெண்களை எப்படி வைத்திருக்கிறது என்பதை சல்மாவின் படைப்புக்களை வாசித்துப்பார்த்தால் தெரியும் என்ற அளவிற்கு அவலங்களை அம்பலத்தில் ஏற்றிய எழுத்துக்கள் சல்மாவினுடையவை. தமிழ்நாட்டின் கவிஞர் மற்றும் அரசியல்வாதி சல்மா. பெண் என்ற காரணத்தினால் கல்வி வாய்ப்பு மறுக்கப்படும் ஒரு சமூகத்தில் இருந்து வெளிப்பட்டு அடக்குமுறைகளுக்கு எதிராக தனது படைப்புகளின் மூலம் குரலெழுப்பி வருபவர். இவரைப்பற்றி ஆவணப்படம் தயாரிக்கப்பட்டு அமெரிக்காவில் திரையிடப்பட்டது. பெண்கள் தங்களின் முன்னேற்றத்துக்காக எடுக்கும் முயற்சிகளில் எத்தனை தடைக்கற்கள்? அத்தனையையும் உடைத்துக் கொண்டு வருபவர் சல்மா. தான் சார்ந்திருக்கும் சமுதாயத்தில் பெண்களின் நிலை குறித்து எழுதி கடும் எதிர்ப்புகளை சம்பாதித்துக் கொண்டவர். மதத்தின் பெயரால் அடக்கப்பட்ட, ஆணாதிக்கத்தால் ஒடுக்கப்பட்ட பெண் சமுதாய விடுதலைக்கான வெளிச்சமாக சல்மா தனது இலக்கியப் பயணத்தை தொடர்ந்து வருகிறார். இவரது வெளியுலக பயண அனுபவத் தொகுப்பே இந்த நூல். கட்டுக்கோப்பான ஒரு மதத்தில் பிறந்த ரொக்கையா பீவியாக (இயற்பெயர்) இருந்த சல்மா, உலக பயணம் மேற்கொண்டது எப்படி? அதில் எத்தனை எதிர்ப்புக்கள்? எத்தனை சுவாரசியங்கள்? பக்கத்து ஊருக்குக் கூட தனியாக செல்லமுடியாத சல்மா, வீட்டுக்குத் தெரியாமல் பாஸ்போர்ட் அலுவலகம் சென்று புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தது எப்படி? சல்மாவின் வெளியுலக பயண அனுபவங்கள் வாசிப்பதற்கு மட்டுமல்ல... வாழ்க்கைக்கும் நல்ல அனுபவமாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. வாசியுங்கள்... வசப்படுவீர்கள்!
RS. 102 More...by பசுமைக்குமார்
விண்வெளிப் பயணம் என்பது மனித குலச் சாதனை. புவி ஈர்ப்பு அற்ற நிலையில் மிதந்து, நடந்து, சில நாட்கள் விண்வெளியில் வாழ்வது இதற்கு அத்தியாவசியம். இந்த விண்வெளிப் பயணத்தில் பெண்களும் சாதனை புரிந்ததைப் பற்றியே இந்த நூல். இதில் ஆண்கள் சாதனை படைத்தது அதிசயமே அல்ல; ஆனால், பெண்கள் தங்கள் குடும்பத்தையும் கவனித்துக்கொண்டு, எட்டாத தூரத்தில் இருக்கும் சாத்தியங்களையும் எட்டிப் பிடித்து, ஆணுக்கு நிகராக சாதனை புரிந்தது சாதனையிலும் சாதனை; அதிசயத்திலும் அதிசயம். அப்படிப்பட்ட வீர சாகசங்கள் புரிந்த வீராங்கனைகளைப் பற்றிச் சுவையாக எழுதி இருக்கிறார் நூல் ஆசிரியர் பசுமைக்குமார். விண்வெளிக்குச் சென்ற முதல் பெண், அதிலேயே முதல் அமெரிக்கப் பெண், விண்வெளியில் நடந்த முதல் பெண், நடந்த முதல் அமெரிக்கப் பெண், விண்வெளிக்குச் சென்ற முதல் ஆசிரியை, முதல் அமெரிக்க யூத இனப் பெண், முதல் பிரிட்டிஷ் பெண், முதல் கருப்பு இனப் பெண், முதல் ஜப்பான் பெண், முதல் கனடா பெண், விண்வெளியில் அதிக காலம் பயணம் செய்த பெண்மணி, முதல் இந்தியப் பெண், 3 முறை பயணம் செய்த பெண், 606 முறை பூமியைச் சுற்றிய பெண், 5 மாதம் குடியிருந்த பெண்... என எத்தனையோ சாதனைப் பெண்களைப் பற்றி எழுதியிருக்கிறார். பெண்களின் பெருமையைத் தெரிந்துகொள்வதும், முன்னேறத் துடிக்கும் பெண்கள் தங்கள் உற்சாகத்தை வளர்த்துக்கொள்வதும், அணைந்துவிடாமல் காத்துக்கொள்வதும் மட்டும் அல்லாமல் ஆண்களும் தங்கள் முன்னேற்றத்துக்கும் பயன்படுத்தும் வகையில் இந்த நூல் வழிகாட்டும் என்பதில் ஐயம் இல்லை. விண்ணை அளந்துதான் பார்ப்போமே!
RS. 98 More...by ராஜம் முரளி
இயற்கை உணவுப் பொருள்கள், ஆரோக்கியத்தோடு அழகையும் தரக்கூடியவை. அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்று பெண்கள் மட்டுமல்ல, இன்றைய காலத்தில் ஆண்களுமே ஆசை கொள்கின்றனர். அதற்காக செயற்கை முறையில் தயாரிக்கப்படும் அழகு சாதனப் பொருள்களை வாங்கி உபயோகிக்கின்றனர். அதனால் அழகுக்குப் பதில் உடல் ஆரோக்கியம்தான் கெடுகிறது. ஆனால், நமக்கு எளிதில் கிடைக்கும் கீரை வகைகளில் உடல் ஆரோக்கியத்தைக் காக்கும் சத்துகள் மட்டுமின்றி நம் உடல் பாகங்களை அழகாக்கும் பலன்களும் உள்ளன. பார்வையைக் கூர்மையாக்கி கண்களை அழகாக்கும் பொன்னாங்கண்ணி, வயிற்றுப் புண்ணை நீக்கி, பருக்களைப் போக்கி முகத்துக்குப் பொலிவு தரும் மணத்தக்காளி, தோலுக்குப் பளபளப்புத் தரும் கற்பூரவல்லி... என கீரைகள் ஒவ்வொன்றும் நமக்கு ஆரோக்கியத்தையும் அழகையும் சேர்த்தே தருகின்றன. கீரை மட்டுமின்றி நட்ஸ் வகைகள், பழங்கள் ஆகியவவை உடல் பாகங்களை அழகாக்க எப்படி யெல்லாம் உதவுகின்றன என்பதையும் பயன்படுத்தும் முறைகளையும் அழகாக எடுத்துச் சொல்கிறது இந்த நூல். ஆரோக்கியத்தோடு இயற்கை தரும் பேரழகையும் பெற்று ஜொலியுங்கள்!
RS. 150 More...