Cart is Empty
by அனிதா பட்
இன்றைய உலகில் பணம் நினைத்ததைச் செய்கிறது. அதுவே எல்லாவற்றிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. ‘பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை’ என்பதுபோல் பணம் இந்த மனிதர்களைத் துரத்துகிறது. துன்பத்தில் ஆழ்த்துகிறது. அதனால்தான், ஏழைகளாக, நடுத்தரக் குடும்பத்தினராகப் பிறந்து திண்டாடும் ஒவ்வொருவரும் எந்தெந்த வழிகளில் எல்லாம் பணத்தைப் பொன்&பொருள்களைப் பெருக்கலாம், வசதியாக வாழலாம் என்று வழி தெரியாமல் தடுமாறுகிறார்கள். அப்படி, வாழ்க்கையில் பணப் பிரச்னைகளாலும், செலவுகள் அதிகரிப்பதாலும், விலைவாசிகள் உயர்வதாலும் சிரமத்தில் திண்டாடிக்கொண்டு இருப்பவர்களுக்கும், வசதியாக வாழ விரும்புகிறவர்களுக்கும் தங்களின் சின்னச் சின்ன சேமிப்புகள், முதலீடுகள், காப்பீடுகள் மூலம் அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்தி, வாழ்க்கையை வசதியாக, பாதுகாப்பாக வாழ வழி வகைகளைச் சொல்கிறது இந்த நூல். பட்ஜெட் போட்டுக் குடும்பம் நடத்துவது முதல் இக்கட்டில் காப்பாற்றும் மெடிக்ளைம் பாலிசி, எதிர்பாராத இழப்புகளில் இருந்து பாதுகாக்கும் இன்ஷ§ரன்ஸ், மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை, தங்க முதலீடுகள், பேப்பர் கோல்ட் ஆவணங்கள் வரை, பணத்தை பெருக்கும் வழிகள் இன்று பல்கிப் பெருகியுள்ளன. அவற்றை, எல்லோரும் உணரும்வண்ணம் மிக எளிமையாகத் தன் சொந்த அனுபவத்தின் மூலம் விளக்கியுள்ளார் நூலாசிரியர் அனிதா பட். அவள் விகடனில் தொடராக வரும்போதே பலபேருக்குப் பயன் தந்து, வாசகர்களின் அமோக வரவேற்பைப் பெற்ற இந்தக் கட்டுரைகள், நிச்சயம் உங்கள் வாழ்க்கையை வளமாக்கவும் வழிகாட்டும்!
RS. 50 More...by வாசு கார்த்தி
எந்த ஒரு செயலாக இருந்தாலும் திட்டமிடல் மிக அவசியமான ஒன்று. திட்டமிட்ட வாழ்வு தெவிட்டாத இன்பம் தரும் என்பது மறுக்கமுடியாத உண்மை. இன்றைய வாழ்க்கைச் சூழலில் நாம் குடும்பம் நடத்தவே ஒவ்வொரு மாதமும் திட்டமிடவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். விலைவாசி, குடும்பச் சூழல், யூகிக்க முடியாத எதிர்பாராத செலவுகள் போன்றவற்றை வைத்துப் பார்த்தால், அவசரக் காலங்களில் கைகொடுக்கும் தோழனாக காப்பீட்டு பாலிசிகள் அமையும் என்பது நிதர்சனமான உண்மை. நம் ஒவ்வொருவருக்கும் காப்பீடு என்பது மிக முக்கியம். அதிலும் குடும்ப வருமானத்துக்கு முழு ஆதாரமான நபர் என்றால், காப்பீடு அதிமுக்கியமானது. ஆனால், நூற்றுக்கணக்கில் குவிந்துகிடக்கும் காப்பீட்டுத் திட்டங்களில் எது அவசியம்? எந்தக் காப்பீடு எடுப்பது சிறந்தது? எந்த பாலிசி குறைந்த கவரேஜில் அதிக லாபம் தரும்? என்பன போன்ற சந்தேக முடிச்சுகள் நம் அனைவருக்கும் எழக்கூடும். இந்த முடிச்சுகளை அவிழ்க்கும்விதமாக பல தகவல்களை இந்த நூலின் ஆசிரியர் வாசுகார்த்தி தெளிவாகவும் விளக்கமாகவும் எழுதியிருக்கிறார். ஒருவரின் மாதச் சம்பளத்தை மனதில் வைத்து அதற்கு ஏற்ப திட்டமிட்டு எப்படி காப்பீடுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்; குடும்ப நலனுக்கு எந்த பாலிசி சிறந்தது; பாலிசிகளை எடுக்கும் வழிமுறைகள்; அவற்றுக்கான ப்ரீமியம் கட்டவேண்டிய கால அளவுகள்; கிளைம் பெறுவது; எந்த பாலிசி எப்படிப் பயன்படும்; அவற்றில் உள்ள ப்ளஸ் மைனஸ்; பாலிசிகள் முதலீடுகள் ஆகுமா? என்பது போன்ற நாம் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய நடைமுறைகளை எளிமையான நடையில், சுலபமாகப் புரிந்துகொள்ளும் வகையில், சில சம்பவங்களின் உதாரணங்களோடு எடுத்துக் கூறியிருப்பது சிறப்பு. இதுவரை காப்பீடு பாலிசிகளின் சேவைகளையும் தேவைகளையும் பற்றி ஒன்றுமே தெரியாதவர்களும்கூட, தங்களுக்கு ஏற்ற பாலிசி எது என்பதைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள இந்த நூல் நிச்சயம் வழிகாட்டும்.
RS. 50 More...by எஸ்.எல்.வி.மூர்த்தி
வியாபாரிகளுக்கான நூல் இது. வியாபாரத்தில் என்னதான் ‘அலர்ட் ஆறுமுகமாக’ இருந்தாலும், ஒரு சில விஷயத்தில் அலர்ட்டாக இருக்கும் சமயத்தில் நமக்குப் பின்னால் நடக்கும் பல விஷயங்களை நாம் கோட்டை விடுவது சகஜம்! பொதுவாகவே, வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள், தங்கள் பணத்தை முதலீடு செய்வதால் அதி ஜாக்கிரதையாகவே இருப்பார்கள். ஆனால், பணம் செலவாகும்போது, கண்ணுக்குத் தெரியும் ஓட்டைகளை அடைப்பதில் மட்டும்தான் ஜாக்கிரதையாக இருப்பார்களே தவிர, சட்டென்று எழும் பிரச்னைகளிலும், லாபம் வரும் விஷயங்களிலும், மெதுவாக வியாபாரத்தை அரிக்கும் விஷயங்களிலும் ஜாக்கிரதையாக இருக்க மாட்டார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு, வியாபாரத்தை நிலைநிறுத்தி லாபம் அள்ளித்தரும் நுணுக்கமான விஷயங்களை அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதியிருக்கிறார் நூலாசிரியர் எஸ்.எல்.வி.மூர்த்தி. ‘இது தெரிந்த விஷயம்தானே, இதெல்லாம் வியாபாரத்தைக் கவிழ்த்து விடுமா என்ன?’ என்று அக்கறை இல்லாமல், கவனக்குறைவாக இருந்து தோல்வி அடைந்த வியாபாரிகளுக்கும் பல ‘டிப்ஸ்’கள் தரப்பட்டுள்ளன. நாம் நினைக்கும் ‘அல்ப’ விஷயம் எப்படி வியாபாரத்தைச் சாய்த்துவிடும் என்பதை உணர்த்தும் விதமாக ஏராளமான வியாபார தந்திரங்கள் தரப்பட்டிருக்கின்றன. பல வியாபாரிகளின் அனுபவங்கள் நிறைந்திருப்பது இந்த நூலின் சிறப்பு. நாணயம் விகடனில் தொடராக வந்த கட்டுரைகள் தொகுக்கப்பட்டு ஒரே நூலாக இப்போது உங்கள் கைகளில் தவழ்கிறது. பயப்படாமலும் ஆர்வத்துடனும் வியாபாரம் செய்ய ஊக்கம் தரும் நூலாக இது அமைந்திருக்கிறது.
RS. 50 More...by விகடன் பிரசுரம்
‘நம்ம கையிலயும் நாலு காசு புரளணும்னு ஆசையாதான் இருக்கு. வீட்டை விட்டு வெளியே போய் சம்பாதிக்கலாம்னா குழந்தையை யார் பார்த்துக்கிறது? வீட்டிலேயே ஏதாச்சும் வேலை இருந்தா செய்யலாம். ஆனா, என்ன வேலை செய்றது..?’ என்று யோசனையில் இருக்கும் இல்லத்தரசிகள் ஏராளம். ஏறிக்கொண்டே போகிறது விலைவாசி. இறங்கிக்கொண்டே வருகிறது பணத்தின் மதிப்பு. கணவன்_மனைவி இருவரும் சம்பாதித்தால்தான் வாழ்க்கையை ஓட்ட முடியும் என்ற நிர்பந்தம். எனவே, பொருளாதார சூழ்நிலையைச் சமாளிக்க விரும்பும் ஏராளமான இல்லத்தரசிகள் காட்டன் வேஸ்ட், கோணி, காகிதம், மெழுகு போன்ற சாதாரணப் பொருட்களை தங்கள் கை வண்ணத்தின் மூலம் காசாக்கும் தொழில் ரகசியத்தைக் கற்று முன்னேறியிருக்கிறார்கள். இப்படி, இந்தக் கலையை சரிவரக் கற்று, முயற்சி செய்து, ‘தொழிலில் முதன்மை’ என்ற நாற்காலியில் அமர்ந்த பெண் தொழில்முனைவோர் 22 பேர் தங்கள் அனுபவங்களை இந்த நூலில் பகிர்ந்து கொள்கிறார்கள். ‘வீட்டிலேயே செய்யலாம் பிஸினஸ்!’ என்ற தலைப்பில் ‘அவள் விகடன்’ இதழ்களில் வெளி வந்த கட்டுரைகளின் தொகுப்புதான் இது. காகிதப்பை, ஆரத்தி தட்டு, ரப்பர் ஸ்டாம்ப், ஜுவல் பாக்ஸ், ஜெல் கேண்டில் போன்றவை தயா
RS. 53 More...by சி.சரவணன்
‘ஆறிலிருந்து அறுபது வரை’ அனைத்து பெண்மணிகளும் விரும்புவது தங்க ஆபரணங்கள் என்றால் மிகை இல்லை. அதேசமயம், மகளுக்குக் கல்யாணம், உறவினர் வீட்டுக்குச் செய்முறை, நேர்த்திக்கடன் போன்ற சமயங்களில் நடுத்தரக் குடும்பங்களைக் கவலைப்படுத்தும் மிகப் பெரிய விஷயம், தங்கத்தின் ‘கிடுகிடு’ விலை உயர்வுதான்! ‘இந்த விலை உயர்வு எங்கே போய் நிற்குமோ?’ என்ற கேள்வி அனைவரின் மனதிலும் அலைபாய்கிறது. பல குடும்பங்களில், ஆத்திர அவசரத்துக்கு அடமானம் வைக்க உதவுவதும், வாங்கிய கடனைத் திருப்பிக் கேட்டு நெருக்கடி வரும் சமயங்களில், குடும்ப மானத்தைக் காப்பாற்றுவதும் அவர்கள் சேமித்து வைத்திருக்கும் தங்கம்தான். தங்கநகை சேமிப்பு என்பது நமது பாரம்பரியப் பழக்கம்தான். 2010_ம் ஆண்டில் மட்டும் இந்திய முதலீட்டாளர்கள் தங்கத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்திருக்கிறார்கள். உலக அளவில் தங்கத்தைப் பயன்படுத்துவதில் இந்தியர்கள்தான் முன்னணியில் இருக்கிறார்கள். இன்றைய நிலையில், பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், ரியல் எஸ்டேட் போன்ற முதலீடுகளில் வருமானம் என்பது நிலையானதாக இல்லை என்பதால் பெரும்பாலோர் விரும்பும் ஒரே முதலீடு தங்கம்தான். தங்க முதலீட்டை லாபகரமாகச் செய்வது, அதற்கான வழி முறைகள், தங்கநகை வாங்கும்போது கவனிக்க வேண்டியவை, தங்கத்தைப் பாதுகாக்கும் முறைகள்... போன்ற விவரங்களை, துறை சார்ந்த நிபுணர்களிடம் கேட்டு, அலசி ஆராய்ந்து எழுதியிருக்கிறார் நூலாசிரியர் சி.சரவணன். இந்த நூலைப் படித்துவிட்டு, தங்கத்தில் முதலீடு செய்து லாபம் அடையலாம் என்பதை நிச்சயம் உணர்வீர்கள்!
RS. 63 More...by தி.ரா.அருள்ராஜன்
"ஷேர் மார்க்கெட்டா? அதுல அதிகமா பணம் பண்ணலாமே... நானும் இப்போ அதை பத்தித் தெரிஞ்சிக்கத்தான் கிளாஸ் போறேன்..." என்று சொல்லி புறப்பட்டு, புறப்பட்ட வேகத்திலேயே திரும்பி, இருந்த பணத்தை இழந்து தவித்தோர் பலர். ஷேர் மார்க்கெட்டில் டிரேடிங் செய்வது என்பது காய்கறி, ஜவுளி, வீட்டு சாமான்களை விலைபேசி வாங்கும் சந்தை போல் அல்ல... பங்கு வர்த்தகம் - இது அனுபவம், திறமை, அறிவு, ஆலோசனை எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டது. கற்றுக்கொள்ள வேண்டியதும் வழிமுறைகளை சரியான நேரத்தில் சரியான முறையில் கையாளுவதும் மிக மிக முக்கியம்... காரணம் இதற்கான கால நேரம் மிகவும் குறுகியது. முடிவுகள் உடனுக்குடன் எடுக்கக்கூடிய மன வலிமை வேண்டும்... இல்லாவிட்டால் டிரேடிங் பண்ணி பொருட்களை வாங்கி விற்பதில் பண இழப்பு அதிகமாவதோடு, விட்டதைப் பிடிக்க மீண்டும் மீண்டும் டிரேட் செய்து மொத்தத்தையும் இழந்து வெளியேறுவதில் உடல் வலி, மனச்சோர்வுதான் மிச்சமாகும். சந்தை சூழ்நிலைக்கு ஏற்ப கிடைத்த லாபத்தை எடுத்துக்கொண்டு வெளியேறிவிட வேண்டும். டிரெண்ட் மாறும்போது அதற்கேற்ப டிரேடிங் முறைகளை மாற்றுபவர்கள் வெற்றிபெறும் டிரேடர்களாக முடியும் என்று டிரேட் செய்கிறவர்களுக்கு கருத்தாய் பாடம் கற்பிப்பது இந்த நூலின் சிறப்பம்சமாகும். தங்கள் வரவு, செலவு கணக்கு, மீதம் உள்ள பணம், மற்றும் டிவியில் உள்ள ஷேர் விவரங்கள், பங்குச் சந்தை நிலவரங்களின் நுணுக்கங்களை உடனுக்குடன் தெரிந்துகொண்டு தங்களை அப்டேட் செய்துகொள்பவர்களே சிறந்த டிரேடர்கள். ‘டிரேடர்களே உஷார்’ எனும் தலைப்பில் நாணயம் விகடனில் வெளிவந்து டிரேடர்களை உஷார்படுத்திய தொடர் நூலாக்கம் பெற்றிருக்கிறது. டிரேடிங்கில் ஈடுபடுபவர்களுக்கு எல்லா வகையிலும் கைகொடுக்கும், வழிகாட்டும், இந்த நூல்!
RS. 77 More...by வ.நாகப்பன்
இன்றைய பொருளாதார வாழ்க்கை முறையில் பணத்தை ஈட்டுவது என்பதைவிட, ஈட்டியப் பணத்தை எதில் முதலீடு செய்து பாதுகாப்பது என்பதுதான், தற்போதைய தலைமுறையின் பெருத்த சிந்தனை. பொதுவாக, சேமிப்பு-முதலீடு என்றாலே, நமக்குத் தெரிந்ததெல்லாம் ‘ஃபிக்ஸட் டெபாசிட்’ அல்லது ‘ரியல் எஸ்டேட்’தான். இவற்றையும் தாண்டி விதவிதமான முதலீட்டு விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் அனைவருக்குமே விருப்பம் உண்டு. ஆனால், அதற்கான சூழ்நிலை அமைவதில்லை. உழைப்பின் சன்மானமாகக் கிடைக்கும் ஊதியத்தை, வழக்கம்போல் வங்கிக் கணக்குகளிலோ, நகைகள் வாங்குவதிலோ முதலீடு செய்வதுதான் இன்றைய மக்களின் இயல்பு. இதில் எல்லாம் பல்வேறுவிதமான பண இழப்புகள் இருந்தாலும், அதற்கான மாற்று வழி தெரியாததால், அவர்கள் அதையே பின்பற்றி வருகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு, பண இழப்பே இல்லாத முதலீட்டு வழியான கமாடிட்டீஸில் முதலீடு செய்வது பற்றிய தகவல்களைத் தந்து உதவ வந்திருப்பதுதான் இந்த ‘கமாடிட்டியிலும் கலக்கலாம்!’ என்ற நூல். கமாடிட்டி சந்தையின் வரலாறு, கமாடிட்டி வர்த்தகத்தின் வகைகள், முதலீடு செய்யும் வழிமுறைகள் என கமாடிட்டீஸ் தொடர்பான அ முதல் ஃ வரையிலான அத்தனைக் கேள்விகளுக்கும் உரிய பதில்களை, எளிய செயல்முறை விளக்கங்களுடன் கூறியுள்ளார் நூலாசிரியர் வ.நாகப்பன். ‘நாணயம் விகடன்’ இதழில் இதே தலைப்பில் வெளிவந்த தொடருக்கு, வாசகர்களிடம் கிடைத்த சிகப்புக் கம்பள வரவேற்பின் வெளிப்பாடே இந்த நூல். கமாடிட்டி சந்தையில் கண நேரத்தையும் வீணாக்காமல் காசு அள்ள முயற்சிக்கும் அனைவருக்கும், இந்த நூல் நல்ல பலனைக் கொடுக்கும் என்பது உறுதி!
RS. 95 More...by சி.சரவணன்
பணத்தைப் பெருக்குவதற்கும் சேமிப்பதற்கும் நமக்கு எழும் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் என்றைக்கும் பஞ்சமே இல்லை. ஒரு சந்தேகம் தீர்ந்தால், அடுத்த சந்தேகம். அதுவும் முடிந்தால் இன்னொன்று... காரணம், ‘பணம் சேர்த்தது போதும்’ என்று நமது மனம் திருப்தியடைய மறுப்பதுதான். அதேபோல, பணத்தை நிர்வகிப்பதிலும் எல்லோருக்கும் ஏகப்பட்ட சந்தேகங்கள். பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், ரியல் எஸ்டேட்... இப்படி பணம் கொழிக்கும் துறைகளில் முதலீடு செய்து பணத்தை பெருக்கவேண்டும் என்று விரும்பினாலும் அவை குறித்து பலருக்குத் தயக்கமும் இருக்கிறது. அப்படிப்பட்ட தயக்கங்களைப் போக்கும் பணியை இந்தப் புத்தகம் செய்யும். சேமிப்பு, முதலீடு, வளமான வாழ்க்கை என்ற தாரக மந்திரத்துக்கான கருவிகளைப் பற்றி அடிப்படையில் இருந்தே தெரிந்துகொள்ள நினைப்பவர்களுக்கு இந்தப் புத்தகம் ஒரு எல்.கே.ஜி. (லேனர்ஸ் நாலேட்ஜ் கைட்) ஆக இருக்கும். அதேசமயம், ஏற்கெனவே தெரிந்து கரைகண்டவர்களுக்கு மேலும் பலமூட்டி வளமூட்டும் ஒரு தகவல் களஞ்சியமாகவும் இருக்கும். ‘நாணயம் விகடன்’ இதழோடு 'எல்.கே.ஜி.' இணைப்பாக வெளிவந்து, வாசகர்களின் மனதைக் கவர்ந்த கட்டுரைகளின் த
RS. 98 More...by ஏ.ஆர்.குமார்
வெற்றி என்பது தோல்வி கற்றுத்தந்தது. தோல்விகளில் துவளாமல் தமது விடாமுயற்சியால் பிசினஸில் வெற்றிபெற்று புகழ்பெற்றவர்கள் ஏராளம். பிசினஸ் செய்வதற்கான குணங்களையும், வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற தீராத தாகத்தையும் உடையவர்களால் மட்டுமே பிசினஸில் வெற்றிபெற முடிகிறது. போட்டிகளும் புதுமைகளும் பெருகிக்கொண்டே இருக்கும் இந்தக் காலத்தில் புதியவற்றைக் கற்றுக்கொண்டே இருப்பது, பிசினஸ் செய்பவர்களுக்கு முக்கியமானது. ஒவ்வொரு நிமிடமும் நிகழும் மாற்றங்களுக்கு ஏற்ப தம்மைப் புதுப்பித்துக்கொண்டால்தான் அவர்களின் பிசினஸில் தொடர் வெற்றிபெற முடியும். இந்திய அளவிலும் உலக அளவிலும் புகழ்பெற்றுத் திகழ்ந்த தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர்கள், தாங்கள் தொடங்கிய தொழிலில் எப்படி வெற்றிபெற்றார்கள் என்பதையும் அந்தத் தொழில் சாம்ராஜ்ஜியம் தலைமுறைகளாகத் தொடர்வது பற்றியும் கூறும் நூல் இது! இதில் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உண்டு. அவர்களின் வெற்றி வரலாறு, நாணயம் விகடனில் `பிசினஸ் சமூகம்' எனும் தொடராக வெளிவந்தது. இப்போது நூலாகி இருக்கிறது. உங்களுக்கு உத்வேகத்தைக் கொடுக்கும் அந்த வெற்றியாளர்களின் வரலாற்றை அறிய... உள்ளே வாருங்கள்!
RS. 98 More...by வ.நாகப்பன்
அற வழியில் பொருள் ஈட்டி இன்பம் காண்பது மனிதனின் இயல்பு. அறம், பொருள், இன்பம் மூன்றும் வாழ்க்கைக்கு முக்கியமானவை. இதில் ஒன்றில் முறையான திட்டமிடல் இல்லாவிட்டாலும் அடிப்படையான வாழ்வாதாரமே அசைவு கண்டுவிடும். முதலில் அறம் செய்தல். தான் தேர்ந்தெடுத்த தொழில், அல்லது திட்டம் ஆகியவற்றில் கண்ணியமாக செயலாற்றுவதும் அதன்வழியில் பொருளீட்டலும் அதை வீணாக செலவழிக்காமல் காப்பதினால் பிற்காலத்தில் இன்பமாய் வாழலாம். இதில்தான் சிக்கலே. இந்த சிக்கலுக்கான விடையாகவே அமைகிறது இந்த நூல். உழைப்பு, முறையான திட்டமிடல், சேமிப்பு, முதலீடு, காப்பு ஆகியவற்றில் அரசு, வங்கி அமைத்துக் கொடுத்திருக்கும் திட்டத்தில் சேர்ந்து தங்களது உழைப்பையும் சேமிப்பையும் காப்பீடுகளால் தங்களை காத்துக்கொள்ளும் வழிகள் ஏராளம் உண்டு. எவ்வளவு சேமிப்பது, எப்படித் திட்டமிடுவது? எங்கு முதலீடு செய்வது? கைநிறைய சம்பாதித்தும் சேமிப்பு இல்லை... சேமித்தாலும் அதை வெகு நாட்கள் காக்க முடிவதில்லை... இதற்கான திட்டங்கள் என்னென்ன? என்.ஆர்.ஐ., கணக்கு தொடங்க முடியுமா? கடன் வாங்கி வீட்டு மனை வாங்குவது சரியா? தங்கம் ஒரு சேமிப்பா? ELSS திட்டத்தில் நாம் முதலீடு செய்வதால், என்ன ஆதாயம்? நல்ல மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது எப்படி? `பவர் ஆஃப் காம்பவுண்டிங்’ என்றால் என்ன? இதுபோன்ற அநேக புதிய திட்டங்கள், சந்தேகங்கள், குழப்பங்கள் ஆகியவற்றுக்கு தெளிவான விளக்கம் தருகிறது இந்த நூல். ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த `அறம் பொருள் இன்பம்' நூல் வடிவில், இப்போது உங்கள் கைகளில். உழைத்து, திட்டமிட்டு, சேமித்து, முதலீடு செய்து காப்பீட்டில் பதிவாகி ஆயுள் காக்கும் உறுதியான வாழ்வாதாரத்தைப்பெற இந்த நூல் நிச்சயம் கைகொடுக்கும்.
RS. 105 More...