Cart is Empty
by வ.நாகப்பன்
அற வழியில் பொருள் ஈட்டி இன்பம் காண்பது மனிதனின் இயல்பு. அறம், பொருள், இன்பம் மூன்றும் வாழ்க்கைக்கு முக்கியமானவை. இதில் ஒன்றில் முறையான திட்டமிடல் இல்லாவிட்டாலும் அடிப்படையான வாழ்வாதாரமே அசைவு கண்டுவிடும். முதலில் அறம் செய்தல். தான் தேர்ந்தெடுத்த தொழில், அல்லது திட்டம் ஆகியவற்றில் கண்ணியமாக செயலாற்றுவதும் அதன்வழியில் பொருளீட்டலும் அதை வீணாக செலவழிக்காமல் காப்பதினால் பிற்காலத்தில் இன்பமாய் வாழலாம். இதில்தான் சிக்கலே. இந்த சிக்கலுக்கான விடையாகவே அமைகிறது இந்த நூல். உழைப்பு, முறையான திட்டமிடல், சேமிப்பு, முதலீடு, காப்பு ஆகியவற்றில் அரசு, வங்கி அமைத்துக் கொடுத்திருக்கும் திட்டத்தில் சேர்ந்து தங்களது உழைப்பையும் சேமிப்பையும் காப்பீடுகளால் தங்களை காத்துக்கொள்ளும் வழிகள் ஏராளம் உண்டு. எவ்வளவு சேமிப்பது, எப்படித் திட்டமிடுவது? எங்கு முதலீடு செய்வது? கைநிறைய சம்பாதித்தும் சேமிப்பு இல்லை... சேமித்தாலும் அதை வெகு நாட்கள் காக்க முடிவதில்லை... இதற்கான திட்டங்கள் என்னென்ன? என்.ஆர்.ஐ., கணக்கு தொடங்க முடியுமா? கடன் வாங்கி வீட்டு மனை வாங்குவது சரியா? தங்கம் ஒரு சேமிப்பா? ELSS திட்டத்தில் நாம் முதலீடு செய்வதால், என்ன ஆதாயம்? நல்ல மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது எப்படி? `பவர் ஆஃப் காம்பவுண்டிங்’ என்றால் என்ன? இதுபோன்ற அநேக புதிய திட்டங்கள், சந்தேகங்கள், குழப்பங்கள் ஆகியவற்றுக்கு தெளிவான விளக்கம் தருகிறது இந்த நூல். ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த `அறம் பொருள் இன்பம்' நூல் வடிவில், இப்போது உங்கள் கைகளில். உழைத்து, திட்டமிட்டு, சேமித்து, முதலீடு செய்து காப்பீட்டில் பதிவாகி ஆயுள் காக்கும் உறுதியான வாழ்வாதாரத்தைப்பெற இந்த நூல் நிச்சயம் கைகொடுக்கும்.
RS. 105 More...by விகடன் பிரசுரம்
‘வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப் போமென்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்’ - என அன்று பாடிய பாரதி இன்று இருந்திருந்தால், பெண் சுதந்திரத்தை, பெண் உரிமையைக் கண்டு ஆனந்தக் கூத்தாடியிருப்பார். அந்தளவுக்கு இன்று எத்துறையிலும் முத்திரை பதிக்கும் வகையில் அறிவிற் சிறந்தோங்கித் திகழ்கிறார்கள் பெண்கள். வீட்டில் இருந்தவாறே பெண்கள் பல வகையான சிறு தொழில்களையும் அதன் மூலம் பெற்ற அனுபவத்தைக் கொண்டு அந்தத் தொழிலை பெரிய அளவிலும் கொண்டு சென்று சாதித்துக்கொண்டிருக்கிறார்கள். வீட்டில் முடங்குவது மூடத்தனம், முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்ற பக்குவப்பட்ட நிலையில்தான் இன்றைய மாதர் குலம் உள்ளது. தங்களுக்கு ஏற்பட்ட சோதனைகளைத் துச்சமென எண்ணித் தூக்கி எறிந்து, தங்களுக்குத் தெரிந்த தொழிலைத் தொடங்கி அதில் சாதனை படைத்துக்கொண்டிருக்கும் பெண்கள், வீட்டில் வீணே கிடக்கவேண்டாம் என எண்ணி சிறுதொழில் தொடங்கி வெற்றிபெற்ற பெண்கள், தாங்கள் வெற்றிபெற்றது எப்படி என்பது பற்றிக் கூறிய கட்டுரைகள் அவள் விகடனில் தொடராக வெளிவந்தன. அதன் தொகுப்பு நூல் இது! இந்த நூலை வாசிக்கும் பெண்களுக்கு, தாங்களும் தொழில் தொடங்கி சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும் என்பது திண்ணம்!
RS. 150 More...by சிவகாசி மணிகண்டன்
ஏன் சேமிக்க வேண்டும், ஏன் முதலீடு செய்ய வேண்டும் என்பது தொடங்கி அனைத்துவிதமான முதலீட்டுத் திட்டங்களின் சாதக பாதகங்களையும், வங்கி சேமிப்புக் கணக்கு, ஃபிக்ஸட் டெபாசிட், ஆர்.டி, தபால் அலுவலக சேமிப்புத் திட்டங்கள், கம்பெனி ஃபிக்ஸட் டெபாசிட் தங்க முதலீட்டுத் திட்டங்கள், பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் பற்றியும் விரிவாகக் கூறுகிறது இந்த நூல். அனைவராலும் விரும்பப்படும் மற்றும் வேகமாக வளர்ந்து வரும் முதலீடு என்றால் மியூச்சுவல் ஃபண்ட்தான். அதைப் பற்றி மட்டுமே பத்து அத்தியாயங்கள் இந்த நூலில் விரிவாக இடம்பெற்றிருக்கிறது. அனைத்து நிதித் தேவைகளுக்கும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை எப்படிப் பயன்படுத்துவது, மியூச்சுவல் ஃபண்ட் வகைகள் என்னென்ன என்பதைப் பற்றி தகுந்த உதாரணங்களுடன் எடுத்துக்காட்டுகிறது இந்த நூல். நாணயம் விகடன் வார இதழில் சேமிப்பும் முதலீடும் எனும் தலைப்பில் தொடராக வெளிவந்த கட்டுரைகள் நூல் வடிவம் பெற்றிருக்கிறது. குறுகிய காலம், நடுத்தரக் காலம், நீண்ட காலத்துக்கு எந்த மாதிரியான முதலீட்டுத் திட்டங்களைத் தேர்வு செய்ய வேண்டும், ஒருவரின் ரிஸ்க் எடுக்கும் திறனுக்கு ஏற்ப எந்தத் திட்டங்கள் சரியாக இருக்கும் என்பதையும், முதலீட்டைப் பாதுகாக்கும் அவசர கால நிதி, ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு பற்றியும், முதலீட்டை சரியாகத் தேர்வு எப்படி என்பதையும் உதாரணங்களுடன் நூலாசிரியர் விளக்கியுள்ளார். சேமிப்பையும் முதலீட்டையும் சரியான திட்டமிடலுடன் செய்தால் நிறைவான, நிம்மதியான வாழ்க்கை நிச்சயம் என்பதை எடுத்துக்கூறுகிறது இந்த நூல்.
RS. 150 More...by ராம் வசந்த்
சொந்தமாகத் தொழில் தொடங்க வேண்டும் என்பது எல்லோருக்கும் இருக்கும் விருப்பம். ஏனென்றால் சுயதொழில் செய்தால் சுயமரியாதையோடு வாழலாம் என்பதால் அந்த ஆசை எல்லோருக்கும் இருக்கும். ஆனால், முதலீடு செய்ய பணம் இல்லாமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அதை நிறைவேற்ற முடியாமல் வேறு வேலைகளுக்குச் சென்றுவிடுகின்றனர். சொந்தத் தொழில் செய்து நஷ்டம் அடைந்து விட்டால் என்ன செய்வது, எல்லாத் துறையும் வேகமாக மாறிவரும் காலகட்டத்தில் நாம் தொடங்கும் தொழிலைத் தொடந்து நடத்த முடியுமா, தொழிலில் தோல்வியடைந்தால் குடும்பத்தின் நிலை என்னாவது போன்ற அச்சங்கள்தான் தொழில் தொடங்க நினைக்கும் அனைவரின் முன் நிற்கின்றன. இப்படிப்பட்ட கேள்விகளுக்கு பதில்களையும் ஊக்கமளிக்கும் ஆலோசனைகளையும் சொல்லி, ஆனந்த விகடனில் வெளியான ‘வணிகத் தலைமைகொள்’ தொடர் கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளுதல், நுகர்வோரை எப்படி அணுக வேண்டும், அவர்களை எப்படித் தக்கவைத்துக்கொள்வது, தொழிலை விரிவுபடுத்த என்னென்ன செய்ய வேண்டும் போன்ற, சொந்தத் தொழிலில் வெற்றிகரமாகச் செயல்பட அனைத்து ஆலோசனைகளையும் மிக எளிமையாகச் சொல்லித் தரும் நூல் இது. சுயதொழில் வெற்றிக்கான சூத்திரங்களை அறிந்து கொள்ள வாருங்கள்!
RS. 150 More...by வே.கிருஷ்ணவேணி
கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் என்கிற முன்னோர் மொழி, இன்றும் கைகளால் புனையும் கைவினை கலைஞர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். பொறுமை, கற்பனை, முதலீடு, நேரம் என இவற்றைச் சார்ந்து உருவாக்கப்படும் இவ்வகை கலைப் பொருட்களுக்கு தொழில் ரீதியாகவும் நல்ல வரவேற்பு உள்ளது. ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்கிறபடி ‘வேண்டாம்’ என நினைக்கும் பொருட்களைக் கூட அழகிய வடிவம் கொடுத்து கற்பனைக்கேற்ற நல்ல உருவங்களை உருவாக்க முடியும் என்பதற்கு இந்நூல் ஓர் உதாரணம். காலப்போக்கில் கிராஃப்ட் என்கிற கைவினைப் பொருட்களை உருவாக்குவதற்கென புனையப்பட்ட மினி கருவிகள் சந்தையில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. கிளிஞ்சல்கள், ஐஸ் குச்சி, வண்ணக் காகிதங்கள், ரிப்பன், க்ளே, மணிகள், துண்டு கண்ணாடிகள், தெர்மாகோல், க்ளூ ஸ்டிக், ஊசி, கோல்டன் ரிப்பன், பிளாஸ்டிக் பூக்கள் என பல வித்தியாசமான பொருட்கள் இந்த கைவினை கலைப் பொருட்களை உருவாக்குவதில் இடம்பிடித்திருக்கின்றன. வீட்டிலிருக்கும் பெண்கள் தங்கள் நேரத்தைப் பயனுற செலவழிக்க இது ஓரு நல்ல தொழில் மாத்திரம் அல்ல... தங்களின் திறமையை வெளிப்படுத்தக்கூடிய விதத்தில் அமையும் உத்தியும்கூட. இந்த வடிவங்கள் பூந்தொட்டிகள், வால் ஹாங்கர், கிஃப்ட் பாக்ஸ், கலர் லைட்ஸ், பென் ஸ்டாண்ட், வேக்ஸ் பொருட்கள், அலங்கார தோரணம், ஆபரணங்களான நெக்லஸ் - தோடு - பிரேஸ்லெட் மற்றும் ஊதுபத்தி ஸ்டாண்ட், தலையணை ஆகிய வடிவங்களை உருவாக்குவதில் கைதேர்ந்த, அனுபவமுள்ள கைவினைக் கலைஞர்களைக் கண்டெடுத்து அவர்களது திறமையையும் முன்னேற்றங்களையும் வரிசைப்படுத்தியிருக்கிறார் நூல் ஆசிரியர் வே.கிருஷ்ணவேணி. இவை கிராஃப்டில் ஆர்வமுள்ளவர்களின் கற்பனைக்கு நல்ல விருந்தாகும். ஆர்வமுள்ளவர்கள் நிச்சயம் தங்கள் கற்பனைக்கேற்ற விதத்தில் உருவாக்கும் கிராஃப்ட்களை விற்பனைக்கும் கொடுக்க முடியும். தங்களின் ஆக்கத்திற்கு ஏற்ப விற்பனை விலையையும் அதிகரித்துக்கொள்ளலாம். குறைந்த நேர உழைப்பில் குறைந்த செலவில் நிறைந்த லாபத்தைப் பெறமுடியும் என்கிற நம்பிக்கையைக் கொடுத்திருப்பது இந்த நூலின் சிறப்பம்சமாகும். அவள் விகடனில் 4 ஆண்டுகளுக்கு மேல் தொடராக வெளிவந்த ‘கைகொடுக்கும் கிராஃப்ட்’ பகுதி மொத்த தொகுப்பாக நூலாக்கம் பெற்று இதோ உங்கள் கைகளில்... வாருங்கள்... நீங்களும் கைவினைக் கலைஞர்களாகிட கைகொடுக்கிறது இந்த கிராஃப்ட்... உங்கள் திறமைக்கேற்ற விதத்தில் உருவாக்கும் உத்தியைக் கற்று, படைத்து, விற்பனை செய்யுங்கள்... முன்னேறுங்கள்!
RS. 137 More...by சொக்கலிங்கம் பழனியப்பன்
“ஷேர் ரேட் சூப்பரா உயர்ந்திருக்கே, சபாஷ்!” “அடக் கடவுளே! இன்னைக்கு ஷேர் இவ்ளோ இறங்கிடுச்சே..!” - பஸ், ரயில் பிரயாணங்களில் இதுபோன்ற ‘டயலாக்’கை நீங்கள் அடிக்கடி கேட்டிருப்பீர்கள். ‘இந்தியப் பொருளாதாரத்தை நிர்ணயிப்பதில் பெரும்பங்கு வகிக்கும் ‘ஷேர் மார்க்கெட்’டில் அப்படி என்னதான் இருக்கு..?’ என்ற கேள்விக்கு, உரிய பதிலைத் தேடுவோர் அநேகர். அதிக அளவில் முதலீடு செய்து இயங்கிவரும் ஸ்தாபனம் அல்லது புதிதாக தொடங்கப்பட இருக்கும் ஸ்தாபனம் வெளியிடும் முதலீட்டுப் பங்குகளை, லாப நோக்கில் வாங்குவதும் - விற்பதுமான வியாபார நடைமுறையை பங்குச் சந்தை ( SHARE MARKET ) என்கிறார்கள். பங்குச் சந்தையில் எந்த வகையான பங்குகளை வாங்கலாம், ஒரு பங்கை வாங்கும்முன் நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை, ஒரு பங்கு எந்த நிலையில் இருக்கும்போது வாங்க விற்க வேண்டும், பங்குச் சந்தையில் ‘காளை’ மற்றும் ‘கரடி’ நிலைகளை அறியும் வழிமுறை, இதில் நிபுணராக நாம் மேற்கொள்ள வேண்டிய யுக்தி... போன்ற பல்வேறு தகவல்களை நடைமுறை உதாரணங்களோடு விளக்கியுள்ளார் நூலாசிரியர் சொக்கலிங்கம் பழனியப்பன். நாணயம் விகடனில் ‘பங்குச் சந்தை ஆத்திசூடி’ என்ற தலைப்பில் வெளிவந்த தகவல் தொகுப்புதான் இந்த நூல். ‘வீட்டுப் பாடம்’ என்ற தலைப்பில், பங்கு பரிவர்த்தனையில் ஈடுபடுவதற்கான சில பயிற்சி முறைகளை அத்தியாயம் தோறும் சொல்லி இருப்பது, இந்த நூலுக்கே உரிய தனிச்சிறப்பு. மொத்தத்தில், சாமானிய மக்களும் ‘ஷேர் மார்க்கெட்’ தொடர்பான அடிப்படை அறிவைப் பெறவேண்டும் என்பதே இந்த நூலின் நோக்கம்.
RS. 120 More...by ‘கவின்கேர்’ சி.கே .ரங்கநாதன்
‘பிசினஸா... எனக்கும் அதுக்கும் ரொம்ப தூரம்... அதைப் பற்றி எனக்குத் தெரியாது... எனக்கு சப்போர்ட் பண்ண யாரும் இல்லை...’ என்ற எண்ணம் கொண்டிருப்பவர்கள் இந்த நூலைப் படித்த பிறகு அப்படிச் சொல்லவே முடியாது. முதலில் என்ன பிசினஸ் செய்யலாம் எனத் தேர்ந்தெடுத்து பின் அதை எந்த இடத்தில் அமைக்கலாம்... அதற்கு முதலீடு செய்ய என்னென்ன தேவை என்பதை ஆராய்ந்து, திட்டமிட்டு, எளிமையான முறையில் கையாளும்பட்சத்தில் குறைந்த முதலீட்டில் அதிக வருமானத்தைப் பெறும் உத்திகளைப் பற்றி இந்த நூல் தெளிவாகக் கற்றுக்கொடுக்கிறது. என்ன தொழில் செய்ய வேண்டும்? அதில் எது நமக்கு ஏற்றதாய் இருக்கும் எனக் கண்டுபிடித்து அதை எப்படி ஆரம்பிக்க வேண்டும்? தொழிலாளர்களை எப்படி நியமிக்க வேண்டும்? பிசினஸில் ஏற்படும் தடைகளையும் தவறுகளையும் எப்படி எதிர்கொண்டு முன்னேற்றம் அடைய வேண்டும்? பிசினஸுக்காக முதலீட்டுப் பணம் எப்படிப் பெறுவது? அதற்கான திட்டங்கள் என்ன? போன்ற நுணுக்கமான வழிமுறைகளை எடுத்துரைத்திருப்பது இந்த நூலின் சிறப்பு. பிசினஸ் செய்வதில் குறுக்குவழி கூடாது; அதனால் சந்திக்க நேரிடும் விளைவுகள்... வருமான வரி செலுத்துவதன் அவசியங்கள்; அதனால் கிடைக்கும் மரியாதை... வங்கி அதிகாரிகளால் அங்கீகரிக்கப்படுதல்; இதனால் கூடுதல் கடன் கிடைக்கக்கூடிய வாய்ப்பு... போன்ற பிசினஸ் சீக்ரெட்ஸ்களை பக்குவமாகச் சொல்லியிருக்கிறார் நூலாசிரியர் சி.கே.ஆர். நாணயம் விகடனில் தொடராக வெளிவந்த பிசினஸ் சீக்ரெட்ஸ், நூல் வடிவம் பெற்றிருக்கிறது. சிறந்த ஆலோசனைகளையும் ஆக்கப்பூர்வமான அறிவுரைகளையும் பெற்று, உங்கள் பிசினஸில் நீங்கள் வெற்றிபெற, பக்கங்களைப் புரட்டுங்கள்... பிசினஸில் வெல்லுங்கள்!
RS. 144 More...by பேராசிரியர் ஸ்ரீராம்
சுய தொழில் செய்து அதில் முன்னேற்றம் காணத் துடிக்கும் இளைஞர்கள் காலம் இது. அதற்கான ஆயிரம் வாசல்கள் திறந்திருந்தாலும் அவசரமாக உள்ளே நுழைந்துவிட்டு பாதியில் திக்கித் திணறுவது அதிகம் நடக்கிறது. சிறியதோ பெரியதோ எந்த பிசினஸ் செய்வதானாலும் அதற்கு முன் யோசிக்கவும் வேண்டும், பிசினஸ் பற்றிய புரிதலும் வேண்டும். சொந்த பிசினஸ் மட்டுமல்ல பெரிய பெரிய நிறுவனங்களில் சி.இ.ஓ-வாக, பொது மேலாளராக, மேலாளராகப் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கும்பட்சத்தில் அதில் வெற்றியாளராகத் திகழ்ந்தால்தான் அடுத்தடுத்த உயர்நிலைக்குச் செல்லமுடியும். பிசினஸோ, மேலாண்மை செய்யும் பதவியோ அதில் பல ஸ்ட்ராடஜிக்களைக் கையாண்டால்தான் நீங்கள் உங்களை அதில் நிலைநிறுத்திக்கொள்ள முடியும். அதற்கான அனைத்து தந்திரங்களையும் நடைமுறைச் சம்பவங்களின் மூலம் எடுத்துச் சொல்லி விளக்குகிறது இந்த நூல். உலக அளவில் பரந்து விரிந்த பல நிறுவனங்கள் இன்று காணாமல் போனதற்குக் காரணம், கால மாற்றத்துக்கு ஏற்ப தங்களைத் தகவமைத்துக் கொள்ளாததுதான் எனச் சொல்லும் நூலாசிரியர், சிறிய முதலீடு, பரந்த சிந்தனையின் மூலம் உலகம் முழுதும் வியாபித்திருக்கும் நிறுவனங்களின் வெற்றி ஃபார்முலாக்களைச் சொல்லியிருக்கிறார். ஃபேஸ் புக், டிவிட்டர், வாட்ஸ் அப்-களைக் கண்டுபிடித்தவர்கள் எல்லாம், மல்டி மில்லியனர் ஆகவேண்டும் என்று ஆசைப்பட்டவர்கள் அல்ல, தாங்கள் கண்டுபிடித்ததை, கால மாற்றத்துக்கு ஏற்ப வெற்றிகரமான பிசினஸ் ஆக்கிக்கொண்டார்கள். பிசினஸ் செய்வதற்கும் நிர்வாகப் பணியில் வெற்றி காண்பதற்கும் அரிச்சுவடி முதல் அனைத்தையும் கற்றுத் தரும் இந்த நூல் உங்களின் பணியிலும் பிசினஸிலும் உங்களை வெற்றியாளராக்கும்!
RS. 160 More...by சி.சரவணன்
ஒருவரை அவரின் சம்பளம் கோட்டீஸ்வராக மாற்றாது. அவரின் சேமிப்பு மற்றும் முதலீடுதான் கோடீஸ்வரர் ஆக மாற்றும். மாதம் ரூ.1,000 வீதம் 30 ஆண்டுகளுக்கு தொடர்ந்து முதலீடு செய்து வந்தால் நீங்களும் கோடீஸ்வராகக் கூடும் என்பது இந்த நூலில் எளிமையாக விளக்கப்பட்டிருக்கிறது. இந்த நூலில் சேமிப்புக்கும் முதலீட்டுக்கும் உள்ள வேறுபாடு தொடங்கி 108 முக்கிய முதலீட்டு மந்திரங்களை விவரிக்கிறது. துறை சார்ந்த நிபுணர்களின் உதவியோடு தொகுத்து வழங்கி இருக்கிறார் நூலாசிரியர் சி.சரவணன். முதல் செலவு - முதலீடு, முதலீட்டுக்கான சரியான ஃபார்முலா; வருமானம் - சேமிப்பு = செலவு, ஜீரோ ரிஸ்க் - ஜீரோ வருமானம், உங்கள் பணம் உங்களுக்காக உழைக்க வேண்டும், போன்ற முதலீட்டு மந்திரங்கள் சிந்திக்க தூண்டுபவையாக இருக்கின்றன. வங்கி ஃபிக்ஸடு டெபாசிட், இன்ஷுரன்ஸ், பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்டு, ரியல் எஸ்டேட், தங்கம் என எந்த முதலீடாக இருந்தாலும் அதனை மேற்கொள்ளும் முன் இந்தப் புத்தகத்தை ஒருமுறை படித்துவிட்டு செய்தால் நிச்சயம் லாபகரமாக இருக்கும், அந்த அளவுக்கு விஷயங்கள் இதில் பரந்து விரிந்திருக்கின்றன. இந்த முதலீட்டு மந்திரங்கள் உங்களை செல்வந்தராக்கும் என்பதில் சந்தேகமில்லை! மந்திரங்களை உச்சரிக்க உள்ளே செல்லுங்கள்!
RS. 160 More...