Cart is Empty
by தி.முருகன்
நடக்கவே முடியாத 77 வயது வீல் சேர் மூதாட்டி... நடைபயிலவே ஆரம்பிக்காத 9 மாதக் கைக்குழந்தை... இவர்களை பணயக்கைதிகளாகப் பிடித்து வைக்கத் துணியும் ஹமாஸ் அமைப்பின் போர்வெறி ஆபத்தானது. ஹமாஸ் அமைப்பிடம் அது இருக்கிறது. 23 லட்சம் பேர் வசிக்கும் காஸாவில் 10 நிமிடங்களுக்கு ஒரு குழந்தை வீதம் பலியாகிக் கொண்டிருக்கிறது. பள்ளிகள், மருத்துவமனைகளையே குறிவைத்து குண்டுகள் வீசும் இரக்கமற்ற ராணுவம் உலகில் வேறு எந்த நாட்டிடமாவது இருக்கிறதா என்று தெரியவில்லை. இஸ்ரேலிடம் அது இருக்கிறது. இந்த இரண்டு தரப்பினருக்குமான போரில் பெரும்பாலும் பலியாவது அப்பாவிகளே! சென்ற நிமிடம் வரை மகிழ்ச்சியாகப் பேசிய மனைவி குண்டுவீச்சில் புதைந்துவிட, இடிபாடுகளின் மீது நின்று கதறும் கணவன்... குழந்தையின் பிறந்தநாள் கேக் வாங்கும் அந்த நொடியில் ரத்தம் கசியும் குழந்தையின் உடலை ஏந்தியபடி கண்ணீர் சிந்தும் தகப்பன்... இறந்து வெறும் புள்ளிவிவர எண்களாகப் பதிவாகியிருக்கும் ஒவ்வொருவரின் பின்னாலும் ஒரு துயரக்கதை. போர்க்கருவிகளுக்கு உணர்வு கிடையாது, இதயமும் கிடையாது. எதிரே இருப்பது ஏதுமறியா குழந்தையா, படுக்கையில் கிடக்கும் நோயாளியா என்றெல்லாம் தெரியாது. எவரையும் கொல்லும். அவற்றைப் பயன்படுத்துவோரும் இதயங்களைக் கழற்றி வைத்துவிடுகிறார்கள். இதுவரை சுமார் 13,000 பேரைக் கொன்றிருக்கும் இஸ்ரேலின் தாக்குதலை நிறுத்தக் கோரி உலகெங்கும் போராட்டங்கள் நடக்கின்றன. ஆனால், மனசாட்சியற்ற போர் தொடர்கிறது. இந்தப் போரின் தொடக்கப்புள்ளி என்ன? பாலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேலுக்கும் என்ன பிரச்னை? அண்டை நாடுகள் என்ன செய்கின்றன? இந்த மோதல் எப்போது நிற்கும்? எல்லாவற்றையும் விவரிக்கும் ஒரு தொகுப்பு இது.
RS. 49 More...by ப.திருமாவேலன்
சென்னை சட்டசபையும், தலைமைச் செயலகமும் செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலிருந்து புதிய வளாகத்துக்கு மாறுகின்றன! வரலாற்றுப் புகழ்பெற்ற செயின்ட் ஜார்ஜ் கோட்டையைப் பற்றிய பெருமைகளை விளக்கும் நூல் இது. சென்னப்பட்டினத்தை சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் பிரிட்டிஷ்காரர்கள் வளைத்துப் போட்டனர். சென்னை வளர்ந்ததும் அதைப் பறிக்கப் பிரெஞ்சுக்காரர்களும் டச்சுக்காரர்களும் போட்ட போட்டியில் சென்னையே அதிர்ந்தது. ஆனாலும், செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளையக்கூட இல்லை, வளரத்தான் செய்தது. ஆங்கிலேயர் ஆட்சியை விரட்டிய புரட்சிக்கு முதல் வித்திட்ட வேலூர்ப் புரட்சியை, ஆங்கிலேயர்களே செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலிருந்து ஆரம்பித்துவைத்தது வரலாற்றின் வேடிக்கை. சுதந்திர இந்தியாவில், தமிழ்நாட்டின் பல்வேறு நிலைகளை வடித்ததும் இந்தக் கோட்டையில்தான். இந்திய வரலாற்றிலிருந்து பிரிக்க முடியாத ராபர்ட் கிளைவ், தான் தற்கொலை செய்துகொள்ள கைத்துப்பாக்கியால் இரண்டு முறை சுட்டுக் கொண்டும் அது வெடிக்கவில்லை. ஆனால், அவருடன் இருந்தவர் சுட்டுப் பார்த்தபோது... அந்தத் துப்பாக்கி வெடித்தது! இதைப் போன்ற பல அபூர்வ சம்பவங்களைத் தொகுத்து, விறுவிறுப்பு குறையாம
RS. 50 More...by சிவதர்ஷினி
மதம் ஒரு அபின் என்றார் மாமேதை லெனின். உலகத்தில் மதத்தை மையமாக வைத்துப் பல போர்கள் மூண்டுள்ளன. ஆனால், மதக் கிளர்ச்சி ஒன்று சுதந்திரத்துக்கான வித்து ஒன்றை விதைத்தது. வேறெங்கும் இல்லை; இந்தியாவில்தான்! ஆம்! சிப்பாய்ப் புரட்சி! இந்தியாவில் வியாபாரம் செய்ய வந்த ஆங்கிலேயன் தனது பிரித்தாளும் சூழ்ச்சி மூலம் இந்துக்களையும், முஸ்லீம்களையும் அடிமைப்படுத்தினான். இரு மதத்தினரின் பிரிவினைக்கு தூபம் போட்டான். பிரித்தாளும் சூழ்ச்சி செய்தவன் இரு மதத்தினரின் பிடியிலும் சிக்கிக்கொண்டான். எப்படி நடந்தது இது? 1857&ல் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து இந்தியச் சிப்பாய்கள் கொதித்தெழுந்தனர். துப்பாக்கித் தோட்டாக்களில் பயன்படுத்தப்பட்ட உயவு எண்ணெயில் பசுவின் கொழுப்பும், பன்றியின் கொழுப்பும் தடவப்பட்டிருந்தது இரு மதத்தினரையும் வீறுகொள்ளச்செய்தது. இந்துக்கள் தெய்வமாக வணங்கும் பசுவின் கொழுப்பும், முஸ்லீம்கள் ‘ஹராம்’ என்று ஒதுக்கும் பன்றிக் கொழுப்புமே புரட்சிக்குக் காரணம். சிப்பாய்க் கலகம் தொடங்கியது. புரட்சியை அடக்க ஆங்கிலேயர்கள் அடக்குமுறையைக் கையாண்டனர். நாம் இப்போது சுவாசித்துக்கொண்டிருக்கும் சுதந்திரக் காற்றை நமக்குத் தந்தவர்கள் பட்டபாடு இந்த நூலில் தெரிகிறது. எத்தனை அடக்குமுறைகள்? எத்தனை படுகொலைகள்? குதிரையில் தன் குழந்தையைச் சுமந்துகொண்டு வீரப் போர் புரிந்த ஜான்ஸி ராணியின் தியாகம் எத்தகையது? ஆங்கிலேயரைப் புரட்டி எடுத்த தீரர் நானா சாகிப்பின் தீரம் எப்படிப்பட்டது? வரலாற்றைப் புரிந்துகொள்ளும் விதத்தில், சிப்பாய்க் கலகத்தின் ஒவ்வொரு நிலையையும், கலகம் நடந்த நாட்களின் திகில் சம்பவங்களையும் கால வரிசையோடு அழகான நடையில் நமக்கு அளித்திருக்கிறார் நூலாசிரியர் சிவதர்ஷினி. இந்த நூலைப் படித்தால் சுதந்திரத்தைப் பெற, தியாகிகள் சிந்திய ரத்தத்தின் சிறப்புகளை நம் சந்ததிகள் அறிந்துகொள்ள முடியும்; சுதந்திரத்தின் அருமை தெரியும் என்பது திண்ணம்.
RS. 50 More...by மு.ஸ்ரீனிவாஸன்
வீரமும் கொடையும் மண்ணை ஆளும் மன்னர்களுக்கே உரிய மகத்தான மாண்புகள். அப்படிப்பட்ட மன்னர்களில் முதன்மையானவன் போஜராஜன். வட இந்தியாவில் தன் ஆளுமையின் கீழ் இருந்த பிரதேசத்தையும், அதில் வாழ்ந்த மக்களையும் புலவர்களையும் அன்பால் அரவணைத்து வாழ்ந்தவன். இவன், சகலக் கலைகளையும் கற்றதுடன், அந்தந்தத் துறை நிபுணர்களையும் அழைத்துச் சிறப்புச் செய்யும் வள்ளலாகத் திகழ்ந்தவன். எழுத்துத் துறையில் அதிக ஆர்வம் கொண்ட போஜராஜன், கவி இயற்றுவதிலும் பாடல் புனைவதிலும் திறன் படைத்தவன் என்பது, ஏடுகள் எடுத்துரைக்கும் தகவல்களில் ஒன்று. இவனுடைய பிறப்பு தொடங்கி, இளமைக் காலம், நாடு, சமகாலத்து மன்னர்களுடனான உறவு, மேற்கொண்ட போர்கள், தலைநகர் தாரா நகரத்தின் தனிச்சிறப்பு, பின்பற்றிய சமயம், கட்டிய ஏரியின் பின்னணி, எழுதிய நூல்கள் என போஜராஜனின் முக்கிய நிகழ்வுகளை வரிசைப்படி எழுதியுள்ளார் நூலாசிரியர் மு.ஸ்ரீனிவாஸன். மேலும், கலைவாணியான சரஸ்வதி தேவிக்கு இவன் எழுப்பிய கோயில், சம்பூராமாயணத்தின் சாரம், சாலி ஹோத்ரா என்பதற்கான விளக்கம், ஆட்சிச் சிறப்பை விளக்கும் செப்பேடுகள், காலத்தை கடந்த நிகழ்வுகளை இன்றும் விளக்கிச் சொல்லும் கல்வெட்டுகள் என போஜராஜனின் வாழ்க்கை வரலாற்றுக்கு வார்த்தைகளால் வடிவம் கொடுத்துள்ளது இந்த நூல். போஜனின் வாழ்க்கைக் குறிப்புகளை அறிந்துகொள்ள பிரியப்படும் வாசகர்களுக்கான வரப்பிரசாதம், இது. போஜராஜன் பற்றிய நூல்கள் தமிழில் இல்லாத குறையைத் தீர்க்க வந்துள்ளது இந்த நூல்.
RS. 50 More...by சிவதர்ஷினி
அகிலத்தின் மிகப்பெரிய வல்லரசு... உலகத்தை ஆட்டிப்படைக்கும் போலீஸ்காரன் என்று உலக மக்களால் மிரட்சியோடு பார்க்கப்படும் அமெரிக்க தேசத்தின் பாதுகாப்பு 50 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தது? ஐம்பது ஆண்டுகளுக்கு முன், அமெரிக்க ஜனாதிபதி ஜான் கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டார். அவரைச் சுட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட குற்றவாளியும் மர்மமான முறையில் கொல்லப்பட்டான். ஆனால், ஜான் கென்னடி கொல்லப்பட்டது ஏன் என்பது இன்றுவரை மர்மமாகவே உள்ளது. உலக நாடுகளில் நடக்கும் விவகாரங்களில் மூக்கை நுழைத்து உளவுபார்க்கும் அமெரிக்கா, ஜான் கென்னடி கொலை வழக்கில் உள்ள புதிர்களை இதுவரை விடுவிக்கவில்லை. ஜான் கென்னடி கொலை வழக்கை விசாரிக்க நியமிக்கப்பட்ட வாரன் கமிஷனின் முடிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்த வழக்கு பற்றி பல்வேறு சந்தேகங்கள் இதுவரை எழுந்துகொண்டே இருக்கின்றன. ஜான் கென்னடியைச் சுட்டுக் கொன்றதாகக் கூறப்படும், ஆஸ்வால்டு தனது சுயவிருப்பத்தின் பேரில்தான் கென்னடியைச் சுட்டானா? வேறு யாருடனாவது கூட்டு சேர்ந்து சதி செய்தானா? கியூபாவின் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோவின் ஏஜன்ட்டாக இருந்து சுட்டானா? அமெரிக்க உளவுத் துறை, சி.ஐ.ஏ. கென்னடி மீது வெறுப்புக்கொண்டு ஆஸ்வால்ட்டைத் தூண்டிவிட்டுக் காரியத்தைச் சாதித்துக் கொண்டதா? மாஃபியா கும்பல் அவனை இதில் பயன்படுத்திக்கொண்டதா? நிஜமாகவே ஆஸ்வால்டுதான் ஜனாதிபதியைச் சுட்டானா போன்ற கேள்விகளுக்கு இதுவரை விடை தெரியவில்லை. ஜான் கென்னடி சுட்டுக்கொல்லப்பட்டதிலிருந்து, கொலை வழக்கு விசாரணை முடியும்வரை நடந்த விவகாரங்கள் என்ன என்பதை துல்லியமாகச் சொல்கிறது இந்த புத்தகம். உலகமே வியக்கும் அமெரிக்க ஜனாதிபதிகளின் உயிர்களுக்கு எந்தெந்த நேரத்தில் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது... எந்த வகையில் தாக்குதல்கள் நடந்துள்ளன என்பன பற்றியெல்லாம் இந்த புத்தகத்தில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார் நூலாசிரியர் சிவதர்ஷினி. ஜான் கென்னடி கொலைவழக்கு கடந்து வந்த பாதையை வரிசைப் படுத்தி, ஒரு துப்பறியும் நாவலைப் போன்று அடுத்தக் கட்டம் நோக்கிப் பக்கத்தைத் திருப்ப வைக்கிறார் நூலாசிரியர். இதுதவிர அமெரிக்க ஜனாதிபதிகளின் அந்தரங்க வாழ்க்கையையும் அலசியிருக்கிறது இந்த நூல். பரபரப்பான புத்தகம் இது.
RS. 50 More...by எம்.எஸ்.கோவிந்தசாமி
மாபெரும் நிலப் பரப்பை அரசாண்ட பெருமைக்கு உரியது மௌரியப் பேரரசு. இன்றைய இந்தியாவின் எண்பது சதவிகித நிலப் பரப்பையும் பாகிஸ்தானையும் ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாள நாடுகளையும் இணைத்து மாபெரும் பேரரசை உருவாக்கி ஆட்சி செய்தவர் பேரரசர் அசோகர். அசோகர் என்றால் அனைவருக்கும் நினைவுக்கு வருவது கலிங்கப் போரும் கல் தூணும் அசோகச் சக்கரமும்தான். ஆனால், அதற்கும் மேல் அசோகர் தன் மக்களைக் குழந்தையாக பாவித்து ஆட்சி செய்தவர்! “எல்லா மாந்தரும் என்னுடைய குழந்தைகளே. என்னுடைய குழந்தைகளுக்கு எவ்வாறு இம்மையிலும் மறுமையிலும் எல்லாவித வளங்களும் (பேறுகளும்) மகிழ்ச்சியும் ஏற்படவேண்டுமென விரும்புகிறேனோ அவ்வாறே எல்லா மாந்தருக்கும் கிட்ட வேண்டுமென விரும்புகிறேன்” என்றவர் அவர். ஒரு ஆட்சியாளன் எவ்வாறு இருக்க வேண்டும்? மக்களுக்கு அவன் ஆற்ற வேண்டிய கடமை என்ன? அரசுக்கு மக்கள் ஆற்ற வேண்டிய கடமை என்ன? இப்படி அவன் ஆட்சி செய்ததும் தங்கள் கடமைகளை மக்களைச் செய்யவைத்ததும் இன்றைய ஆட்சியாளர்களுக்கும், மக்களுக்கும் பொருந்தும். அசோகர் வெளியிட்ட அரசாணைக் கல்வெட்டுகள் அவரைப் பற்றி நாம் அறிய உதவியாக இருக்கின்றன. இந்த நூல் அசோகருடைய வரலாற்றைக் கூறுகிறது. சந்திரகுப்தருக்கும், கிரேக்க மன்னன் செல்யூகஸ் நிகேடருக்கும் இடையே நடந்த போருக்கு பின்னால், ஓர் ஒப்பந்தம் ஏற்படுகிறது. அதன் அடிப்படையில் சந்திரகுப்தர் கிரேக்க மன்னனுக்கு 500 போர் யானைகளை வழங்கினார். அதற்கு பதிலாக கிரேக்க மன்னன் ஆப்கானிஸ்தான், பலுசிஸ்தான், காந்தாரம், இந்துகுஷ் மலைப் பகுதிகளை சந்திரகுப்தருக்கு வழங்கினார். இதைப் போன்ற பல வரலாற்று ஆதாரங்களை விளக்குகிறார் நூலாசிரியர். நாம் பாட புத்தகத்தில் படித்த, ‘குளம் வெட்டினார், மரம் நட்டார்’ போன்றவற்றைவிட, நாம் பொதுவாக அறிந்துவைத்திருப்பதைவிட அதிகமாகப் பல விஷயங்களை நூல் ஆசிரியர் எம்.எஸ்.கோவிந்தசாமி எளிய நடையில் இந்தப் புத்தகத்தில் சுவையாக அளித்துள்ளார். இந்தப் புத்தகம் வரலாற்று நூலாக இருந்தாலும் பல புதிய விஷயங்கள் புதிய கோணத்தில் இருப்பதால் படிப்பதற்கு மிகவும் சுவையாக இருக்கும் என்பது திண்ணம்.
RS. 60 More...by ஜி.எஸ்.எஸ்.
மனிதனால் படைக்கப்பட்ட பைசா நகரத்து சாய்ந்த கோபுரம், தாஜ்மஹால், பாரிஸின் ஈஃபிள் டவர், சீனப் பெரும் சுவர், எகிப்திய பிரமிடு, ரோமின் கொலோசியம், அமெரிக்காவின் எம்பயர் ஸ்டேட் கட்டடம் போன்றவற்றை நாம் உலக அதிசயங்கள் என்கிறோம். மனிதனின் செயற்கறிய சிறந்த செயல்களும், அவனால் படைக்கப்பட்ட தனிச் சிறப்பு வாய்ந்த படைப்புகளும் அதிசயங்கள் என்றே அழைக்கப்பட்டுவருகின்றன. அறியப்படாத அதிசய ரகசியங்கள் உலகத்தில் இன்னும் எத்தனையோ உள்ளன & சிதம்பர ரகசியத்தைப்போல. ஆனால், சில ரகசியங்கள் ஆண்டுகள் பல கடந்து வெளியாகியிருக்கின்றன. அவ்வாறான அதிசயங்களில் பல்வேறு மர்மங்கள் புதைந்திருக்கின்றன. புகழ்பெற்ற மனிதர்களுக்குப் பின்னே ரகசியங்கள் ஒளிந்துகொண்டு இருக்கின்றன. மாவீரன் நெப்போலியனின் இறுதி நாட்கள் எப்படி இருந்தன? அவன் மரணத்தின் மர்மம் என்ன? காலத்தை வென்று நிற்கும் கல்லறைகளான பிரமிடுகளில் ஒளிந்திருப்பவை எவை? சீனப் பெரும் சுவர் சொல்லும் கதை என்ன? விமானங்களை விழுங்கும் பெர்முடா முக்கோணத்தின் ரகசியம் எப்படிப்பட்டது? மூக்கின் மேல் விரலை வைக்கும் அதிசயங்களின் ரகசியங்களை இந்த நூலில் போட்டு உடைத்திருக்கிறார் நூல் ஆசிரியர். பொது அறிவுப் பொக்கிஷமாக போற்றிப் பாதுகாக்க வேண்டிய இந்தப் புத்தகத்தை படியுங்கள். மர்மங்கள் சூழ்ந்த அதிசய உலகின் ரகசிய தரிசனம் உங்களுக்குக் கிடைக்கும். நீங்களும் அதிசயம் அடைவீர்கள்.
RS. 70 More...by இரா.மன்னர் மன்னன்
சிற்பக் கலையும், ஓவியக் கலையும் தமிழகத்தில் ஓங்கிவளரச் செய்தது பல்லவ சாம்ராஜ்ஜியம் என்றால் அது மிகையாகாது. காணக்கிடைக்காத சிற்பங்களை வடித்தவர்கள் பல்லவர். மாமல்லபுரம் குடைவரை சிற்பங்கள் இதற்கு சாட்சி. காஞ்சிபுரத்தை தலைநகராகக் கொண்டு தொண்டை மண்டலத்தை ஆட்சி செய்தவர்கள் பல்லவர்கள். பல்லவர் காலத்தில் சமணம் வளர்க்கப்பட்டது. சைவமும் நிலைபெற்றுள்ளது. பல்லவர்கள் அளித்த பட்டயங்களை ஆய்வு செய்தே பல்லவ மன்னர்கள் யார்? எவர்? என இனங்கண்டுள்ளனர் ஆய்வாளர்கள். பிராகிருதப் பட்டயங்களை வெளியிட்டவர்கள் முற்காலப் பல்லவர்கள். சமஸ்கிருதப் பட்டயங்களை வெளியிட்டவர்கள் இடைக்காலப் பல்லவர்கள். கிரந்தத் தமிழில் பட்டயங்களை வெளியிட்டவர்கள் பிற்காலப் பல்லவர்கள் என்கின்றனர் வரலாற்று அறிஞர்கள். அப்படியானால் பல்லவர்களின் தொடக்கம் எது? எத்தனை பல்லவ அரசர்கள் தமிழகத்தை ஆண்டுள்ளனர்? அத்தனை கேள்விகளுக்கும் தன் ஆய்வின் மூலம் இந்த நூலில் விடைகாண முயன்றிருக்கிறார் நூலாசிரியர் இரா.மன்னர் மன்னன். தொடக்கத்தில் சமண மதத்தினைப் பின்பற்றிய மகேந்திரவர்ம பல்லவனை சைவ மதத்திற்கு மாற்றினார் அப்பர் என்கிற திருநாவுக்கரசர். இதன் காரணமாக சமணப் பள்ளிகள் இடிக்கப்பட்டு சைவத் திருக்கோயில்களைக் கட்டினான் மகேந்திரவர்மன். இவன் காலத்தில்தான் பல்லவ சாம்ராஜ்ஜியத்தின் நாணயங்களில் தமிழ் கிரந்தக எழுத்துப் பொறிப்புகள் இடம்பெற்றுள்ளன. மகேந்திரவர்மனின் படைத்தளபதி பரஞ்சோதி என்பவர்தான் பெரியபுராணம் கூறும் சிறுத்தொண்ட நாயனார் என்கிறது இந்த நூல். பரஞ்சோதிக்குப் பிறகு கழற்சிங்கன் என்ற பல்லவ அரசனே சிவத்தொண்டராக மாறியுள்ளார் என்றும் குறிப்பிடப்படுகிறது. இதுபோன்ற பல்வேறு அரிய வரலாற்றுத் தகவல்கள் இந்த நூலில் காணப்படுவதே இதன் சிறப்பு எனலாம். கல்லில் கலைவண்ணம் கண்டவர்களின் வரலாற்றை பறைசாற்றும் முரசாக இந்த நூல் திகழ்கிறது. வாருங்கள்... பல்லவப் பேரரசை தரிசிப்போம்!
RS. 84 More...by டி.கே.இரவீந்திரன்
தமிழக வரலாற்றில் மூவேந்தர்களுக்கு உள்ள இடத்தினைப் போன்றே களப்பிரர் என்பாருக்கும் இடமுண்டு. தமிழகத்தின் இருண்ட காலம் களப்பிரர்களின் காலம் என்று சொல்லப்படுகிறது. களப்பிரர் தென்னிந்தியாவை ஆண்ட அரசர்கள். களப்பாளர் என்றும் இவர்களை வரலாற்றாளர்கள் குறிப்பிடப் படுவதுண்டு. தமிழகத்தை ஏறக்குறைய கி.பி. 300 - கி.பி. 600 காலப்பகுதியில் ஆண்டார்கள் என்றும் அறியப்படுகிறது. இவர்கள் காலத்தில் சமண சமயம், பெளத்த சமயம் தமிழகத்தில் சிறப்புற்று இருந்தது. இவர்கள் பாலி மொழியை ஆதரித்ததாகவே தெரிகிறது. எனினும், தமிழ்மொழியும் இலக்கியமும் வளர்ந்தது. இவர்களது ஆட்சிக்காலமும், இவர்களது கால தமிழ்ப் படைப்புகளும் பின்னர் வந்த சைவ அல்லது இந்து சமயத்தவர்களால் இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளது. களப்பிரர்கள் எங்கிருந்து வந்தனர்? இவர்களின் மூலம் என்ன? தமிழகத்தில் இவர்கள் வலிமைபெற்றதற்கான பின்னணிகள், தமிழகத்தினுள் படையெடுத்த காலம், அவர்கள் ஆரம்பத்தில் தோற்கடித்த மன்னர்கள் யார்? எவர்? என அத்தனை விவரங்களையும், கிடைக்கப்பெற்ற சான்றுகளின் அடிப்படையில் இந்நூலில் தந்துள்ளார் நூலாசிரியர். களப்பிரர் காலத்தை விளக்கும் கல்வெட்டுச் சான்றுகள், இலக்கியங்களில் ஆங்காங்கே காணப்படும் சில தகவல்கள் போன்றவற்றை திரட்டித் தந்துள்ளார் நூலாசிரியர். களப்பிரர் காலத்து சமயங்கள், களப்பிரரின் நாணயங்கள், களப்பிரர் காலத்து மொழி வளர்ச்சி, சமயங்கள், கலைவளர்ச்சி என களப்பிரர்களைப் பற்றிய அரிய தகவல்களை ஆய்வு நோக்கில் இந்த நூல் சொல்கிறது. தமிழக வரலாற்றில் தவிர்க்கமுடியாத அரசர்களான களப்பிரரை மட்டுமல்ல தமிழகத்தின் வரலாற்றையும் அறிய பக்கத்தைப் புரட்டுங்கள்.
RS. 102 More...by கே.டி.திருநாவுக்கரசு
தமிழக வரலாற்றில் தன்னிகர் இல்லாத சோழ சாம்ராஜ்யத்தை சீரும் சிறப்புமாக ஆட்சி செய்தவர் முதலாம் இராசராச சோழன். இந்திய வரலாற்றில் புகழ்மிக்க ஒரு பண்பாட்டுப் பேரரசை நிறுவிய மாவேந்தனாக விளங்கிய இராசராச சோழனால் சோழப் பேரரசு குன்றாப் பெருமையுடன் தலைநிமிர்ந்து நின்றது. கல்வெட்டுகள், தொல்பொருள் சின்னங்கள், செப்பேடுகள், இலக்கியங்கள், பழைய காசுகள் போன்றவை இராசராசனின் பெருமைகளை பறைசாற்றும் வரலாற்று ஆதாரங்களாக உள்ளன. தன் ஆட்சியில் நிழ்ந்த நிகழ்ச்சிகளைக் கால வரைமுறைப்படுத்தி, இனிய தமிழில் ‘மெய்க்கீர்த்தி’யாக அவன் வெளியிட்டுள்ளான். அவை, அரசியல் வரலாற்றை எழுதுவதற்கு உறுதுணையாக உள்ளன. இந்த மெய்க்கீர்த்தி முறையைப் பின்னால் வந்த அரசர்கள் பலரும் போற்றிப் பின்பற்றியுள்ளனர். சோழ நாடு, பெரிய மலைகள் இல்லாத பெருநிலப் பரப்பாக விளங்கியது. காவிரி, பல கிளையாறுகளாகப் பாய்ந்து அந்த நாட்டை வளமடையச் செய்தது. நீர் வளமும், நில வளமும் கொண்ட சோழ நாட்டைச் ‘சோழ நாடு சோறுடைத்து’ என்று சான்றோர்கள் புகழ்ந்தனர். நீர் வளமும், நிலவளமும் இருந்தால் மட்டும் ஒரு பேரரசை ஆட்சி செய்துவிட முடியுமா? ‘கோன் எவ்வழியோ குடி அவ்வழி’ என்பதில்தானே ஒரு நாட்டின் வளமும், நலமும் அடங்கியுள்ளன! மாமன்னன் இராசராசனின் புகழுக்கு தஞ்சை பெரியகோயில் ஒன்றே போதும். அது வானுயர்ந்து நிற்கும் நற்சாட்சியாக உள்ளது. இராசராச சோழன் அரியணையில் ஏறிய காலத்தில் வட இந்திய அரசியல் வானில் போர் மேகங்கள் சூழ்ந்திருந்தன; எங்கும் உட் பகையாகிய புகை மண்டலம் படர்ந்திருந்தது. வெளி நாட்டவருக்குத் தாய்த் திருநாட்டைக் காட்டிக் கொடுக்கும் புல்லுருவிகள் நாட்டின் பல பகுதிகளில் பொறுப்புமிக்க பதவிகளில் இருந்தனர். இத்தகைய இன்னல்களும் இடர்பாடுகளும் நிறைந்திருந்த காலத்தில், விந்திய மலைக்குத் தெற்கே, இராசராசன் சோழப் பேரரசை நிறுவியது எப்படி? அவனது ஆட்சியில் தென்னாடு பொன்னாடாக மாறியது எப்படி? தமிழனின் பண்பாட்டை, தமிழனின் வாழ்வியலை இராசராசனின் ஆட்சி எவ்வாறு பிரதிபலித்தது என்பதை நூல் ஆசிரியர் கே.டி.திருநாவுக்கரசு விவரித்துள்ளார். வாருங்கள்! இராசராசனின் வரலாற்றை அறிவோம்! தமிழனின் வாழ்வியலை உணர்வோம்!
RS. 105 More...