Cart is Empty
by அஜயன் பாலா
சிலர் வரலாற்றில் இடம் பிடிக்கிறார்கள்; சிலருக்கு வரலாறே இடம் அளிக்கிறது. இரண்டாவது கூற்றுக்கு நூறு சதவிகிதம் பொருத்தமானவர் மாமேதை கார்ல் மார்க்ஸ். நூறு பக்கங்களில் உலக வரலாறு எழுதப்படுகிறது என்றாலும்கூட, இவருக்கு அதில் ஒரு பக்கம் ஒதுக்கித்தான் ஆகவேண்டும். இது தவிர்க்க முடியாத ஒன்று. கார்ல் மார்க்ஸ் பெயர் நினைவிருக்கும் வரை, வறுமையின் காரணமாக தன் ரத்தத்தையே தன் குழந்தைகளுக்குப் பாலாகவும் அறிவாகவும் கொடுத்த மார்க்ஸின் மனைவி ஜென்னியின் பெயரும் நிச்சயம் நினைவிருக்கும். ‘நாமெல்லாம் உழைக்க மட்டுமே பிறந்தவர்கள்’ என்று நினைத்திருந்த தொழிலாளிகளை முதலாளிகளாக்கியவர் மார்க்ஸ். ‘மூலதனம்’ என்ற புத்தகத்தின் மூலம் உலகத்துக்கே பொருளாதார பாதையை ஏற்படுத்திக் கொடுத்த கார்ல் மார்க்ஸின் குடும்பம், பொருளாதார நெருக்கடியில் சிக்கி தன் குழந்தைகளையே வறுமைக்கு பலிகொடுக்க நேர்ந்ததை என்னவென்று சொல்வது. மார்க்ஸக்கு உறுதுணையாக மனைவி ஜென்னியும், நண்பர் ஏங்கெல்சும் இல்லை எனில் மார்க்ஸம் ஒரு சாதாரண மனிதராகத்தான் இறந்திருக்கக் கூடும். இதனை மார்க்ஸே ஏற்றுக்கொள்கிறார் என்பதுதான் குறிப்பிடத்தக்க ஒன்று. உழைக்கும் தொழ
RS. 50 More...by அஜயன் பாலா
உலகப்புகழ் பெற்ற மனிதர்கள் இவ்வுலகை விட்டு மறைந்தாலும் அவர்கள் விட்டுச்சென்ற ஆக்கம் தரும் படைப்புகளும், ஊக்கம் தரும் செயல்களும் பல நூற்றாண்டுகள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கும். அவர்களுடைய சாதனைகள் என்றும் நிலைத்திருக்கும்; நினைவுகள் எப்போதும் துளிர்த்துக் கொண்டிருக்கும். உலகத் திரைப்பட வரலாற்றில் யாரும் எளிதில் எட்டமுடியாத உயரத்தைத் தொட்டவர் சார்லி சாப்ளின். அவருடைய வாழ்க்கையை அழகாகச் சொல்கிறது இந்நூல். அடிமட்டத்திலிருந்து வாழ்க்கையின் உச்சத்துக்குச் சென்ற சார்லி சாப்ளினின் வாழ்க்கை, எத்தகைய சோதனைகள் நிறைந்தது என்பதையும், அதை எவ்வாறெல்லாம் எதிர்கொண்டு வெற்றி பெற்றார் என்பதையும், உருக்கமாக எழுதியிருக்கிறார் நூலாசிரியர் அஜயன் பாலா. இளம்வயதில் தந்தையின் ஆதரவில்லாதது, தாய் மனநலம் பாதிக்கப்பட்ட நிலை, பட்டினி இரவுகளோடும் பராரியாக அவமானங்களோடும் போராடிப் பெற்ற வெற்றிகள், தன்னை உதாசீனப்படுத்திய காதலி ஹெட்டி, படங்களின் மூலம் கிடைத்த பல மில்லியன் டாலர் நோட்டுகள், அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படுதல், ஆஸ்கர் விருது, அமெரிக்காவுக்கே திரும்ப அழைத்துக்கொள்ளுதல்... இப்படி சார்லி சாப்ளினின் போராட்டம
RS. 50 More...by எஸ்.எல்.வி.மூர்த்தி
மரத்தில் இருந்து விழுந்த ஆப்பிள்தான் நியூட்டனை எழுப்பியது. புவியீர்ப்பு விசையைக் கண்டறிந்து அறிவிக்கிற அறிவாளியாக அவரை உயர்த்தியது. ஆப்பிளால் உருவான நியூட்டனைப்போல், ஆப்பிளை உருவாக்கி உலகப் புகழ் பெற்றவர் ஸ்டீவ் ஜாப்ஸ். ‘எனக்கு ஆப்பிள் வேண்டும்’ என்று உலகத்தையே ஏங்க வைத்தவர். ஆப்பிள் நிறுவனத் தயாரிப்புகள் அவ்வளவு தரம் வாய்ந்தவை. டிஜிட்டல் உலகத்தின் கடவுளாகக் கொண்டாடப்படுகிற அளவுக்கு ஸ்டீவ் ஜாப்ஸின் புதிய புதியக் கண்டுபிடிப்புகள் உலகையே வியக்கவைத்தன. சராசரி மனிதர்களைப்போலவே ஸ்டீவ் ஜாப்ஸ் வாழ்க்கையிலும் முரண்பாடுகளும், சறுக்கல்களும் அதிகமாகவே இருந்தன. குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய குறைகளுக்கும் அவரிடத்தில் பஞ்சம் இல்லை. ஆனாலும், உலகத்தின் கவனத்தைத் திருப்பிய சாதனையாளராக அவர் நின்றார்; வீழ்ச்சிகளைக் கடந்தும் அவர் வென்றார். அவருடைய சாதனைகளை மட்டுமே பட்டியலிடாமல், அவருடைய சராசரி குணங்களையும், சறுக்கல்களையும் நுணுக்கமாகப் பதிவு செய்திருக்கிறது இந்த நூல். குறைகள் இல்லாத மனிதர்களே இல்லை என்கிற நிலையில், ‘குறை ஒரு குறை அல்ல... ஒருமித்த சிந்தனையும் அயராத உழைப்பும் நம் குறைகளைக் களைந்து, ஆகச்சிறந்த சாதனைக்கு நம்மை உரித்தாக்கும்’ என்பதை ஸ்டீவ் ஜாப்ஸ் வாழ்க்கை மூலமாக நமக்கு உணர்த்தி இருக்கிறார் நூலாசிரியர் எஸ்.எல்.வி.மூர்த்தி. சாதிக்கத் துடிக்கும் இன்றைய இளைய தலைமுறைக்கும் டிஜிட்டல் உலக ஆர்வலர்களுக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் வாழ்க்கை அற்புதமான பாடம். ஒவ்வொரு மனிதரையும் உயர்வை நோக்கி உசுப்பேற்றும் விதமான ஸ்டீவ் ஜாப்ஸ் வாழ்க்கை நிச்சயம் உங்களையும் நம்பிக்கைகொள்ள வைக்கும்!
RS. 53 More...by அஜயன் பாலா
பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவில் குடியேறிய ஐரோப்பியர்கள், தங்கள் பண்ணைகளில் வேலை செய்வதற்காக ஆப்பிரிக்காவிலிருந்து கறுப்பு இன மக்களை அமெரிக்காவுக்கு அடிமைகளாகத் தருவித்தனர். காலப்போக்கில் ஐரோப்பிய _ கறுப்பு இனங்களில் கலப்பு இனமும் உண்டாயிற்று. ஆனாலும் கலப்பு இனமும் கறுப்பு இனத்தவராகவே கருதப்பட்டனர். ஐரோப்பியர்கள் தங்களுக்கே அளித்துக் கொண்ட முன்னுரிமை, கௌரவம், சலுகை ஆகியவற்றை கறுப்பு இனத்தவர்களுக்கு அளிக்கவில்லை. பேருந்துகளில் ஐரோப்பியர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் _ அது காலியாகவே இருந்தாலும் _ கறுப்பு இனத்தவர் அமர முடியாது. உணவு விடுதிகளில் சரி சமமாக அமர்ந்து உணவு உண்ண முடியாது. இது ஓர் உதாரணம்தான். இதுபோல எத்தனையோ கொடுமைகள். கறுப்பு இன மக்களை இந்தக் கொடுமைகளிலிருந்து மீட்க விடிவெள்ளியாக உதித்த கறுப்பு இனத்தவர்தான் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர். தன் வாழ்நாள் முழுவதும் கறுப்பு இன மக்களின் உரிமைக்காக அகிம்சை வழியில் அயராது பாடுபட்டவர். மகாத்மா காந்தியை நேசித்த மனித நேயர். ஆனந்த விகடனில் ‘நாயகன்’ வரிசையில் தொடராக வந்த மார்ட்டின் லூதர் கிங்கின் வாழ்க்கை வரலாறு இப்போது நூலாக உங்
RS. 50 More...by டிராஃபிக் ராமசாமி
டிராஃபிக் ராமசாமி உண்ணாவிரதம், டிராஃபிக் ராமசாமி கைது, டிராஃபிக் ராமசாமி கோர்ட்டில் ஆஜர்... பத்திரிகைகளில் இதுபோன்ற செய்திகளை நிறைய படிக்கிறோம். பத்தோடு பதினொன்றாக அதைப் பார்த்துவிட்டு அனுதின இயக்கங்களில் கலக்கிறவர்கள் நாம். ஆனால், ‘இவர் ஏன் இப்படிப் போராடுகிறார்? இவருடைய வாழ்க்கை எப்படியானது? இவரால் எப்படி இத்தனைப் பிரச்னைகளோடு போராட முடிகிறது’ என்று எப்போதாவது நாம் யோசித்துப் பார்த்திருக்கிறோமா? ஒரு நாள் கோடம்பாக்கம் மேம்பாலத்தின் வழியே டூவீலரில் நான். கடுமையான போக்குவரத்து நெருக்கடி. ஹாரன் சத்தங்களும் சலிப்புக் குரல்களும் சரிவிகிதக் கலவையாக இருந்த அந்த மேம்பாலத்தின் ஓரத்தில் எதையுமே சட்டை செய்யாமல் ஒரு பெரியவர் போஸ்டர் கிழித்துக்கொண்டு இருந்தார். தன்னை யாரும் கவனிக்கிறார்களா என்கிற எண்ணம் கூட அவரிடத்தில் இல்லை. அவர்... ராமசாமி! அவரைப் பற்றிய புத்தகத்துக்கான அவசியம் பிறந்த இடம் - கணம் அது! பிறப்பு தொடங்கி இன்றைய போராட்டங்கள் வரை சுய சரிதையாக இந்தப் புத்தகத்தில் ராமசாமி சொல்லி இருக்கும் செய்திகள் சமூக ஆர்வம்கொண்ட அனைவரும் படிக்க வேண்டிய பாடம். அரசியல், காவல்துறை, மீடியா எனக் கலந்துகட்டி தன் வரலாற்றைச் சொல்லி இருக்கும் விதம் அத்தனை அலாதியானது. ‘இந்தக் காலத்திலும் இப்படி ஒரு மனிதரா?’ எனச் சிலிர்க்கத்தக்க ஒருவரின் வரலாற்றை சமூகப் போராளிக்கான சமர்ப்பணமாக வெளியிடுகிறது விகடன் பிரசுரம்!
RS. 63 More...by அஜயன் பாலா
செழிப்பான, வளமான நாடுகளைத் தங்களின் பீரங்கிக் குண்டுகளாலும், துப்பாக்கி ரவைகளாலும் அடிமைப் படுத்தி, அங்குள்ள மக்களை கொத்தடிமைகளாகக் கொட்டடியில் அடைத்துக் கொடுமைப் படுத்தியவர்கள் ஐரோப்பிய வெள்ளை இனத்தவர். வெள்ளை, கறுப்பு என நிறம் பிரித்து கதைகளையும் விளையாட்டுகளையும் உருவாக்கி மனரீதியாகவும் தாழ்வுப் படுத்தி, கறுப்பு இன மக்களுக்கு அடிமை விலங்கைப் பூட்டிய இந்தக் கொடுமை, தென் ஆப்பிரிக்காவில் வேறூன்றியதால், அந்த மக்கள் தங்கள் நாட்டிலேயே அடிமைகளாக நானூறு ஆண்டுகள் வாழ நேர்ந்தது. இந்தச் சூழ்நிலையில், தென் ஆப்பிரிக்காவின் ஒரு சிறிய கிராமத்தில், சாதாரணக் குடும்பத்தில் பிறந்த நெல்சன் மண்டேலா, அடிமைத்தனத்தை எதிர்த்து வீறுகொண்டு எழுந்தார்! தன் சிந்தனையாலும், செயலாலும், பல தேசங்களில் சிதறிக் கிடந்த தனது கறுப்பு இன மக்களை ஒன்றிணைத்து ‘ஆப்பிரிக்கா, ஆப்பிரிக்கர்களுக்கே!’ என்ற மன உறுதியோடு போராடினார். பல இன்னல்களைச் சந்தித்த மண்டேலா, 27 ஆண்டுகள் கடுமையான சிறைவாசத்துக்குப் பிறகே சுதந்திரக் காற்றைச் சுவாசித்தார். உலக சமாதானத்துக்கான நோபல் பரிசையும், சுதந்திரம் அடைந்த தென் ஆப்பிரிக்காவின் முதல் அதிபரா
RS. 50 More...by மாலதி பாலன்
தீபாவளித் திருநாளான 1944 அக்டோபர் 16_ம் தேதி, தமிழ்த் திரையுலக வரலாற்றில் ஒளி வீசிய ஒரு மாபெரும் சாதனையின் தொடக்க நாள். ஆம்! அன்றுதான் ‘ஹரிதாஸ்’ திரைப்படம் வெளியானது. தொடர்ந்து 110 வாரங்கள் ஓடியது. அதாவது, 80 வருடகால தமிழ்த் திரையுலகில் மூன்று தீபாவளிகளைக் கண்ட ஒரே படம் இதுதான்! மயில்கண் சரிகை வேஷ்டி, சில்க் சட்டை, ஜவ்வாது மணம், பளபளக்கும் சரீரத்துடன், அனைவரையும் வியக்க வைக்கும் சாரீரத்தையும் பெற்றிருந்த எம்.கே.தியாகராஜ பாகவதர்தான் அந்தச் சாதனையின் கதாநாயகன். நாடகத் துறையின் மூலம் திரைத் துறையில் நுழைந்து, கந்தர்வ கானத்தால் மக்கள் மனதை வென்று ‘ஏழிசை மன்னர்’ என்ற பட்டம் பெற்ற எம்.கே.டி.பாகவதரின் வாழ்க்கைக் கதையை, சுவையோடு பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர் மாலதி பாலன். பாகவதருக்கு, நாடகங்கள் மீதும் இசையின் மீதும் ஆர்வம் ஏற்பட்டதையும், இவரை திரைப்படத் துறை தத்தெடுத்தக் காரணத்தையும், முதன்முதலில் இவருக்கு திரைப்பட வாய்ப்பு வந்ததின் பின்னணியையும், லட்சுமிகாந்தன் கொலைவழக்கில் இவர் சிக்க நேர்ந்த விவரத்தையும், சிறைவாசத்துக்குப் பிறகு இவருடைய நிலையையும் இந்த நூலில் தெளிவாக விளக்கியிருக்கி
RS. 56 More...by எஸ்.ராஜகுமாரன்
இன்றைய உலகில் ஊழலும் லஞ்சமும், அரசியல் சுயலாபமும் தலைவிரித்தாடுகின்றன. பதவிக்காக எதையும் செய்யத் துணிவது அரசியல்வாதிகளின் முக்கியக் கொள்கையாகிவிட்டது. நாட்டில் வன்முறைகள் ஆக்கிரமித்துவிட்டன. சொந்த தேசத்திலேயே அகதிகளாக நடத்தப்படுவதும், இன வாதமும், உலகம் வேடிக்கை பார்க்கும் வேதனைக் காட்சிகளும் ஒவ்வொரு நாளும் அரங்கேறுகின்றன. இவற்றுக்கெல்லாம் மருந்து தடவும் விதமாக வாழ்ந்து மறைந்த சென்னை மாகாணத்தின் முதல்வர் ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியாரின் வாழ்க்கை வரலாற்றை அழகாகச் சொல்கிறது இந்த நூல். இரண்டு ஆண்டுகளே ஆட்சியில் இருந்தாலும் இன்றளவும் போற்றக்கூடிய ஓமந்தூராரின் நிர்வாகத் திறமை, ஜமீன்தாரி ஒழிப்பு, தேவதாசி முறை ஒழிப்பு, மதுவிலக்கு, இந்துசமய அறநிலையச் சட்டங்களையும், வேளாண் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை போன்ற பல நலத்திட்ட சாதனைகளையும் நிகழ்த்தி விட்டு சென்றிருப்பதைப் படிக்கும்போது அவரது உன்னதமான அரசியல்வாதியின் அகமும் முகமும் ஆழ்மனதில் தெரிகிறது. நூலைப் படிக்கப் படிக்க விறுவிறுப்பும் ஆவலும் மேலிடுகிறது. ஓமந்தூராரின் இளமைப் பருவம் தொடங்கி அவருடைய ஒரே மகனான சுந்தரம் குருகுலப் பள்ளியில் படிக்கும்போது இறந்துபோகும் சம்பவம், மாநாட்டுக்கு கொடிக் கம்பம் நடக்கூடாது என்கிறபோது உயரமான பனைமரங்களில் தேசியக் கொடிகளைக் கட்டி பறக்க விட்ட நிகழ்வு, முதலமைச்சராக இருந்தபோது அவருடைய அன்றாட அலுவல்கள் என்று அந்தக் காலகட்டத்துக்கே நம்மை அழைத்துச் செல்கிறது எஸ்.ராஜகுமாரனின் இயல்பான எழுத்து. ஓமந்தூராரின் வாழ்க்கை வரலாற்றை, கள ஆய்வோடு சுவைபட எழுதப்பட்டுள்ள இந்த நூல், அரசியல் வாழ்க்கை நடத்துபவர்களும், புதிதாக அரசியலுக்கு வரும் இளைஞர்களும் வாசகர்களும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய நூல்.
RS. 60 More...by பா.முருகானந்தம்
அலங்கரிக்கப்படாத உண்மைகளே வரலாற்றுக்கு அழகு. சுவாரஸ்யம் என்கிற பெயரில் கற்பனைகளையும் அனுமானங்களை நிறைத்து எழுதுவது வரலாற்று வழக்கமாகிவிட்டது. அத்தகைய வழி செல்லாமல், எல்லாவிதமான சேகரிப்புகளோடும் தேடுதலோடும் ராபர்ட் கிளைவ் வாழ்ந்து வீழ்ந்த வரலாற்றை அற்புதப் பதிவாக இந்த நூலில் வழங்கி இருக்கிறார் நூல் ஆசிரியர் பா.முருகானந்தம். ஆங்கில பிரபுவாக மட்டுமே ராபர்ட் கிளைவ் குறித்து நம் பாடப் புத்தகங்கள் விளக்கி இருக்கின்றன. ராபர்ட் கிளைவின் ஆரம்பகால மெத்தனம் தொடங்கி, மனநிலைக் குழப்பம், வேலையில் விருப்பமின்மை, தற்கொலை முயற்சி, வாழ்க்கைப் போராட்டம் என அடுத்தடுத்து அவர் எதிர்கொண்ட சறுக்கல் களையும், ஒருகட்டத்தில் பிரச்னைகளையே வெற்றிக்கான சூத்திரங்களாக மாற்றிக்கொண்டு அவர் ஏறுபடிகளில் வீறுநடை போட்டதையும் யதார்த்தமான நடையில் விளக்குகிறது இந்த நூல். சென்னையில் பணியாற்றியபோது மனச்சிதைவு நோய்க்கு ஆளாகும் அளவுக்குப் பணிச்சுமை கொண்ட ராபர்ட் கிளைவ் தற்கொலைக்கு எண்ணி துப்பாக்கியால் தன்னைச் சுட்டுக்கொள்ள முயற்சித்ததும், துப்பாக்கி சரிவர இயங்காததால் அவர் தப்பியதும் இதுவரைக் கேள்விப்படாத பதிவு. கடைசிக்காலத்தில் அவர் தற்கொலை செய்துகொண்டாரா, கொலைக்கு ஆளானாரா என்கிற உண்மை தெரியாத அளவுக்கு அவருடைய முடிவு அமைந்து போனது பெருந்துயரம். நாடோடியாக, பற்று அற்றவராக, மனத் தெளிவு இல்லாதவராக அறிமுகம் கொண்ட ராபர்ட் கிளைவ், வரலாற்றின் முக்கியப் பக்கங்களில் இடம்பெறுகிற அளவுக்குத் தன்னை முன்னிறுத்திய விதம் ஆச்சர்யம் அளிக்கிறது. ஒரு வரலாற்று நாயகனின் பதிவாக மட்டும் அல்லாது, மனதை வைராக்கியப்படுத்தும் நம்பிக்கை வெளிச்சமாகவும் இந்த நூல் அமைந்திருக்கிறது. ஜோடனை இல்லாத வெகு யதார்த்தமான நடையில், கால இடைவெளிக்கான ஒப்பீட்டில் நம்மை ஆண்ட ஆங்கில பிரபுவின் வரலாற்றை கண்முன்னே நிறுத்தும் இந்த நூல், வாசிக்கும் அனைவரையும் நிச்சயம் சிலிர்க்க வைக்கும்.
RS. 70 More...by அருணகிரி
பெண்கள், பெற்ற குழந்தைகளின் எதிரிலேயே பாலியல் கொடுமைகளுக்கு ஆளாவது, மனித உடலின் அந்தரங்க இடங்களில் ஆயுதம் வைத்து வெடிக்கச் செய்வது, ‘எப்போது உயிர் போகுமோ!’ என பதற்றத்தோடு வாழும் அகதிகளின் அவலம்... இவையே இன்றைய ஈழத்தின் அடையாளம்! வாழ்க்கையைத் தொலைத்துக்கட்டி, ஓர் இனத்தின் அமைதியை ஆழ்குழியில் புதைத்துவிட்டு, ஆயுதங்களுடன் கோரத்தாண்டவமாடி, இலங்கை ராணுவம் பலியிட்ட ஈழத் தமிழ் உயிர்கள் எண்ணிலடங்கா! அக்கிரமக்கார அரசுக்கு அடிபணிந்து ஈழத்து மண்ணும், மக்களின் மனமும் வறண்டு போகலாம்; ஆனால், பட்ட துயரங்களைத் துடைத்தெடுக்க முயற்சிக்கும் ஈழத்து எழுத்தாளர்களின் எழுத்து, இன்றும் அந்த மக்களுக்கு எழுச்சி தந்து, பிரவாகமாக பொங்கிக்கொண்டுதான் இருக்கிறது. ஆம்! மரணங்களே வாழ்வாகிப்போன மண்ணைக் கருவாக்கி, மனிதநேயம் மிக்க எழுத்தாளர்கள் உருவாக்கும் ஈழத்தின் இலக்கியங்கள் வீரியம் மிக்கவை! உறைவிடத்தை இழந்தாலும், தம் உணர்வுகளை நிலைநாட்டும் எண்ணத்தில் தாய்மண்ணை விட்டு பல்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்த எழுத்தாளர்கள் அநேகர். உயிருக்குப் போராடும் மனிதர்கள் மத்தியில், ‘அவர்களின் அவல நிலை இன்று மாறும், நாளை மாறும்’ என தங்கள் எழுத்தின் மூலம் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் காசி ஆனந்தன், ‘மறவன் புலவு’ சச்சிதானந்தன், பத்மினி சிதம்பரநாதன், மாவை சோ.சேனாதிராசா, மாஸ்டர் நவம், யாழூர் துரை... போன்ற ஈழத்து எழுத்தாளர்களின் ஒட்டுமொத்த உணர்ச்சிக் குவியல்தான் இந்த நூல். ஈழத் தமிழர்களுடைய உணர்வுகளைப் பதிவு செய்யும் வகையில், ஈழத்து எழுத்தாளர்கள் சிலரின் கருத்துகளை பதிவுசெய்துள்ளார் நூலாசிரியர் அருணகிரி.
RS. 63 More...