Cart is Empty
by விகடன் பிரசுரம்
புகழின் கிளையில் பூப்பூத்த ஒவ்வொருவரும் போராட்டத்தில் வேர்பிடித்தவரே! தனிப்பட்ட குணநலன்களிலிருந்து, சுவாரஸ்யமான பழக்க வழக்கங்கள் வரை பிரபலங்களின் பாதையையும் பயணத்தையும் கூர்ந்து கவனித்தாலே அவர்களின் வெற்றி சூட்சுமம் புலப்படும். ஆனந்த விகடனில் தொடர்ந்து வெளியான, 60 பிரபலங்களைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல் குறிப்புகளின் மொத்த தொகுப்புதான் இந்த நூல்! பெரியார் முதல் சோனியா வரை... ரஜினி முதல் பிரபாகரன் வரை... பலரைப் பற்றி இதுவரை வெளிவராத பல தகவல்களின் களஞ்சியம் இது. படித்துவிட்டு அந்த வாரத்தோடு முடிந்து போவதாக இல்லாமல், மூளைக்குள் ‘முடிந்து’ வைத்துக் கொள்கிற மினி சரித்திரமாக இந்தப் பகுதி இருந்ததால், தனி நூலாக வெளியிடுகிறோம். நம் மனதுக்கு நெருக்கமான பிரபலங்களைப் பற்றி பல புதிய விஷயங்களை அறிமுகப்படுத்தும், ‘அட’ என பல இடங்களில் ஆச்சர்யப்படுத்தும் இந்தத் தொகுப்பு ஒவ்வொருவரும் பத்திரப்படுத்த வேண்டிய அசத்தல் ஆவணம்! சச்சின் டெண்டுல்கருக்குப் பிடித்த உணவு முதல், கவுண்டமணிக்குப் பிடித்த கார் வரை விரியும் இந்தக் கலக்கல் கருவூலம், கையடக்கத்தில் ஒரு சுவாரஸ்யமான சரித்திரச் சுவடு! பிரபலங்களையும் சாதனையாளர்களையும் இன்னும் நெருக்கமாக அறியவும், தெரியவும், புரியவும் அனைவருக்கும் இந்த நூல் நிச்சயம் பயன்படும்.
RS. 70 More...by மாலதி பாலன்
தீபாவளித் திருநாளான 1944 அக்டோபர் 16_ம் தேதி, தமிழ்த் திரையுலக வரலாற்றில் ஒளி வீசிய ஒரு மாபெரும் சாதனையின் தொடக்க நாள். ஆம்! அன்றுதான் ‘ஹரிதாஸ்’ திரைப்படம் வெளியானது. தொடர்ந்து 110 வாரங்கள் ஓடியது. அதாவது, 80 வருடகால தமிழ்த் திரையுலகில் மூன்று தீபாவளிகளைக் கண்ட ஒரே படம் இதுதான்! மயில்கண் சரிகை வேஷ்டி, சில்க் சட்டை, ஜவ்வாது மணம், பளபளக்கும் சரீரத்துடன், அனைவரையும் வியக்க வைக்கும் சாரீரத்தையும் பெற்றிருந்த எம்.கே.தியாகராஜ பாகவதர்தான் அந்தச் சாதனையின் கதாநாயகன். நாடகத் துறையின் மூலம் திரைத் துறையில் நுழைந்து, கந்தர்வ கானத்தால் மக்கள் மனதை வென்று ‘ஏழிசை மன்னர்’ என்ற பட்டம் பெற்ற எம்.கே.டி.பாகவதரின் வாழ்க்கைக் கதையை, சுவையோடு பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர் மாலதி பாலன். பாகவதருக்கு, நாடகங்கள் மீதும் இசையின் மீதும் ஆர்வம் ஏற்பட்டதையும், இவரை திரைப்படத் துறை தத்தெடுத்தக் காரணத்தையும், முதன்முதலில் இவருக்கு திரைப்பட வாய்ப்பு வந்ததின் பின்னணியையும், லட்சுமிகாந்தன் கொலைவழக்கில் இவர் சிக்க நேர்ந்த விவரத்தையும், சிறைவாசத்துக்குப் பிறகு இவருடைய நிலையையும் இந்த நூலில் தெளிவாக விளக்கியிருக்கி
RS. 56 More...by அருணகிரி
பெண்கள், பெற்ற குழந்தைகளின் எதிரிலேயே பாலியல் கொடுமைகளுக்கு ஆளாவது, மனித உடலின் அந்தரங்க இடங்களில் ஆயுதம் வைத்து வெடிக்கச் செய்வது, ‘எப்போது உயிர் போகுமோ!’ என பதற்றத்தோடு வாழும் அகதிகளின் அவலம்... இவையே இன்றைய ஈழத்தின் அடையாளம்! வாழ்க்கையைத் தொலைத்துக்கட்டி, ஓர் இனத்தின் அமைதியை ஆழ்குழியில் புதைத்துவிட்டு, ஆயுதங்களுடன் கோரத்தாண்டவமாடி, இலங்கை ராணுவம் பலியிட்ட ஈழத் தமிழ் உயிர்கள் எண்ணிலடங்கா! அக்கிரமக்கார அரசுக்கு அடிபணிந்து ஈழத்து மண்ணும், மக்களின் மனமும் வறண்டு போகலாம்; ஆனால், பட்ட துயரங்களைத் துடைத்தெடுக்க முயற்சிக்கும் ஈழத்து எழுத்தாளர்களின் எழுத்து, இன்றும் அந்த மக்களுக்கு எழுச்சி தந்து, பிரவாகமாக பொங்கிக்கொண்டுதான் இருக்கிறது. ஆம்! மரணங்களே வாழ்வாகிப்போன மண்ணைக் கருவாக்கி, மனிதநேயம் மிக்க எழுத்தாளர்கள் உருவாக்கும் ஈழத்தின் இலக்கியங்கள் வீரியம் மிக்கவை! உறைவிடத்தை இழந்தாலும், தம் உணர்வுகளை நிலைநாட்டும் எண்ணத்தில் தாய்மண்ணை விட்டு பல்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்த எழுத்தாளர்கள் அநேகர். உயிருக்குப் போராடும் மனிதர்கள் மத்தியில், ‘அவர்களின் அவல நிலை இன்று மாறும், நாளை மாறும்’ என தங்கள் எழுத்தின் மூலம் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் காசி ஆனந்தன், ‘மறவன் புலவு’ சச்சிதானந்தன், பத்மினி சிதம்பரநாதன், மாவை சோ.சேனாதிராசா, மாஸ்டர் நவம், யாழூர் துரை... போன்ற ஈழத்து எழுத்தாளர்களின் ஒட்டுமொத்த உணர்ச்சிக் குவியல்தான் இந்த நூல். ஈழத் தமிழர்களுடைய உணர்வுகளைப் பதிவு செய்யும் வகையில், ஈழத்து எழுத்தாளர்கள் சிலரின் கருத்துகளை பதிவுசெய்துள்ளார் நூலாசிரியர் அருணகிரி.
RS. 63 More...by டிராஃபிக் ராமசாமி
டிராஃபிக் ராமசாமி உண்ணாவிரதம், டிராஃபிக் ராமசாமி கைது, டிராஃபிக் ராமசாமி கோர்ட்டில் ஆஜர்... பத்திரிகைகளில் இதுபோன்ற செய்திகளை நிறைய படிக்கிறோம். பத்தோடு பதினொன்றாக அதைப் பார்த்துவிட்டு அனுதின இயக்கங்களில் கலக்கிறவர்கள் நாம். ஆனால், ‘இவர் ஏன் இப்படிப் போராடுகிறார்? இவருடைய வாழ்க்கை எப்படியானது? இவரால் எப்படி இத்தனைப் பிரச்னைகளோடு போராட முடிகிறது’ என்று எப்போதாவது நாம் யோசித்துப் பார்த்திருக்கிறோமா? ஒரு நாள் கோடம்பாக்கம் மேம்பாலத்தின் வழியே டூவீலரில் நான். கடுமையான போக்குவரத்து நெருக்கடி. ஹாரன் சத்தங்களும் சலிப்புக் குரல்களும் சரிவிகிதக் கலவையாக இருந்த அந்த மேம்பாலத்தின் ஓரத்தில் எதையுமே சட்டை செய்யாமல் ஒரு பெரியவர் போஸ்டர் கிழித்துக்கொண்டு இருந்தார். தன்னை யாரும் கவனிக்கிறார்களா என்கிற எண்ணம் கூட அவரிடத்தில் இல்லை. அவர்... ராமசாமி! அவரைப் பற்றிய புத்தகத்துக்கான அவசியம் பிறந்த இடம் - கணம் அது! பிறப்பு தொடங்கி இன்றைய போராட்டங்கள் வரை சுய சரிதையாக இந்தப் புத்தகத்தில் ராமசாமி சொல்லி இருக்கும் செய்திகள் சமூக ஆர்வம்கொண்ட அனைவரும் படிக்க வேண்டிய பாடம். அரசியல், காவல்துறை, மீடியா எனக் கலந்துகட்டி தன் வரலாற்றைச் சொல்லி இருக்கும் விதம் அத்தனை அலாதியானது. ‘இந்தக் காலத்திலும் இப்படி ஒரு மனிதரா?’ எனச் சிலிர்க்கத்தக்க ஒருவரின் வரலாற்றை சமூகப் போராளிக்கான சமர்ப்பணமாக வெளியிடுகிறது விகடன் பிரசுரம்!
RS. 63 More...