Cart is Empty
by ரா.கண்ணன், ராஜுமுருகன்
காதல்தான் நம்மை இயக்குகிறது; சில நேரம் அப்படியே மார்போடு இறுக்குகிறது. வென்றாலும் தோற்றாலும் காதல் நமக்குக் கையளித்துவிட்டுச் செல்லும் பரிசு, வண்ணத்துப்பூச்சியைப் பிடித்த விரல்களில் ஒட்டியிருக்கும் வண்ணத்தைப் போன்றது. நீண்ட நெடிய வாழ்வின் நீளம் முழுக்க அந்த வண்ணம் நிலைத்திருக்கும். அப்படிப்பட்ட பல வண்ணங்களின் கலவைதான் இந்தப் புத்தகம். கண்ணதாசனின் வரிகளைப் பிள்ளையார்சுழியாகக் கையாண்டு ஆரம்பிக்கப்பட்டதாலோ என்னவோ... இந்தக் கதைகள் கடல் கடலாய்க் காதலை விரித்துப்போட்டு அழகு காட்டுகின்றன. ஜாலியும் கேலியுமாய் சரவெடி கொளுத்திய வித்தியாச எழுத்துநடைதான், இந்தக் கதைகளின் ஹைலைட். ஒவ்வொரு கதையைப் படிக்கும்போதும் நாமும் நம் சம்பந்தப்பட்ட சம்பவமும் நினைவுக்கு வருவதைத் தவிர்க்கவே முடியாது. சமூகப் புழக்கங்களில் முழுக்க நனைந்தவர்களாக இன்றைய இளைய தலைமுறையின் நரம்புகளுக்குள் ஊடுருவி உள்மனம் அறிந்தவர்களாக ரா.கண்ணன், ராஜுமுருகன் இருவரும் காதலைத் திகட்டத் திகட்ட பந்தி வைத்திருக்கிறார்கள். மொட்டை மாடி, ஒயின் ஷாப், மருத்துவமனை, தெருமுனை என நாம் உலவிவந்த சகல இடங்களிலும் ஒளித்துவைத்துப் பதிவு செய்யப்பட்ட உரையாடல்களைப்போல் இந்தக் கதைகள் சொல்லும் சேதிகள் அத்தனையும் நமக்கே நமக்கேயானது. உயிருக்குயிராகப் பழகிய நண்பர்கள், ஒரு மலையாளி நர்ஸுக்குக்காக பேசிக்கொள்ளாமல் ரணமாகிக் கிடந்தது முதல் காதலில் தோற்றவன் ரவுடியாக உருமாறி நின்றதுவரை இந்தப் புத்தகத்தைப் புரட்டப் புரட்ட நீங்கள் சம்பந்தப்பட்ட நினைவுகள் வந்துகொண்டே இருக்கும். ஆனந்த விகடனில் தொடராக வந்தபோதே இந்தத் தனித்துவ எழுத்துக்களுக்குக் கிடைத்த வரவேற்பு எக்கச்சக்கம். மயிலிறகுத் தொகுப்பாக மலர்ந்திருக்கும் ‘ஒன்று’, உங்கள் மனதை நிச்சயம் வென்று காட்டும்!
RS. 70 More...by டி.கே.இரவீந்திரன்
பல்லவப் பேரரசின் மன்னர்களில் ஒருவனான பரமேஸ்வர வர்மன், வாரிசு ஏதும் இல்லாமல் மறைந்தான். பின்னர் கிளை வழியில் அந்தப் பேரரசுக்கு தன் பன்னிரண்டு வயதில் மன்னன் ஆன நந்திவர்மனை மையமாகக்கொண்டு புனையப்பட்டுள்ளது இந்தப் புதினம். காஞ்சிபுரத்தைத் தலைமையகமாகக் கொண்டிருந்தாலும், கும்பகோணத்துக்கு அருகில் நந்திபுரத்தில் அழகான கோட்டை ஒன்றை நிர்மாணித்தான் நந்திவர்மன். சாளுக்கிய மன்னன் விக்கிரமாதித்தியன் கங்க மன்னனுடன் சேர்ந்து போர் நடத்தி, போர் தர்மத்தைப் புறந்தள்ளி, நந்திவர்மனைத் தோற்கடித்தான். போர்க்களத்தில் இருந்து தப்பித்த நந்திவர்மன், நந்திபுரத்தில் இரண்டு ஆண்டுகள் இருந்தபோது, அங்கு திருமங்கை ஆழ்வார் அறிவுரையின்பேரில் திருமாலுக்கு விண்ணகரம் எனும் கோயிலை எழுப்பினான். இரண்டு ஆண்டுகள் கழித்து தனது படைத் தளபதி உதயசந்திரனின் துணையுடன் சாளுக்கியர்களுடன் போரிட்டு அவர்களை பல்லவ தேசத்தில் இருந்து விரட்டி மீண்டும் ஆட்சிப்பரிபாலனம் செய்தான். இந்தக் கருவை மையமாகக்கொண்டு நந்திவர்மனுடன் சில கற்பனைப் பாத்திரங்களைப் படைத்து சுவாரஸ்யமான விறுவிறுப்பான புதினமாகத் தந்திருக்கிறார் நூலாசிரியர். வாசிக்கும் வாசகர்களை இந்த நந்திபுரத்து நாயகன் நிச்சயம் வசீகரப்படுத்துவான் என்பது திண்ணம்... நாயகனைக் காண பக்கங்களைப் புரட்டுங்கள்.
RS. 230 More...by தபூ சங்கர்
உலகம் எட்டு பக்கம் காற்றாலும் எல்லா பக்கமும் காதலாலும் சூழப்பட்டிருக்கிறது. காதலின் கைகள்தான் பூமிப்பந்தை சுழற்றிக்கொண்டு இருக்கின்றன. ஆதாம் ஏவாள் கடித்த ஆப்பிள் இன்னும் தீரவேயில்லை. கடிக்கக் கடிக்க குறையாமல் வளர்ந்துகொண்டே இருக்கிறது காதல் ஆப்பிள். கடவுளையே காதலனாக்கியது ஆண்டாளின் காதல். தன் காதலி செல்மா கராமி இறந்த பிறகும் அவள் கல்லறை வழியே செல்பவர்களைப் பார்த்து 'பாதம் அதிராமல் செல்லுங்கள்... என் காதலியின் தூக்கம் கலைந்துவிடப் போகிறது' என்று பாட வைத்தது கலீல் ஜிப்ரானின் காதல். பெரும் செல்வங்களை விட்டுவிட்டு வறுமையிலும் காதலைக் கொண்டாடியது ஜென்னி மார்க்ஸின் காதல். காற்று புகாத இடங்களிலும் காதல் நுழைந்துவிடும். காதல் தீரும் இடத்தில் காலம் உறைந்துவிடும். காதலின் கண்களுக்குத்தான் கலைடாஸ்கோப்பில் வானவில் தெரியும். ஒரு குடம் நீரூற்றி ஓராயிரம் பூ பூப்பது காதல் செடியில்தான். காதல் மனதால்தான் பனித்துளியில் வானம் பார்க்க முடியும். காதல் சில நேரங்களில் அழகான முட்டாள்தனம், சிலநேரங்களில் அடம் பிடிக்கும் குழந்தைத்தனம். அதனாலென்ன... மழையையும் இசையையும் ரசிக்க காரண காரியங்கள் எதற்கு? காதல
RS. 70 More...by விகடன் பிரசுரம்
ஒரு நிமிடத்தில் எத்தனையோ கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்துவிடுகிறது ராக்கெட். எங்கோ ஒரு மூலையில் நடக்கின்ற நிகழ்வுகளை, அந்த நிமிடத்திலேயே உலகின் அனைத்துத் திசைகளிலும் வெளிச்சமிட்டுவிடுகிறது தொலைக்காட்சி . அந்த வகையில், மனித உணர்வுகளை நிமிடங்களில் சொல்லும் கதைகள் இவை. வாழ்க்கையின் எல்லா கூறுகளிலிருந்தும் அனுபவ நிதர்சனங்களை சிறுசிறு தேன் துளிகளைப்போல் திரட்டிய தேன் அடைகள். வாழ்க்கையோடு பின்னப்பட்ட நடைமுறை சம்பவங்களை உருக்கமாகவும், நகைச்சுவை உணர்வோடும் ஒருசில மணித்துளிகளில் சொல்லி, நம் சிந்தனைக்கு விருந்தாக அமைந்திருக்கும் இந்தக் கதைகள், மனச் சோர்வுக்கு மருந்தாகவும் விளங்கும். ஆனந்த விகடனில் பரிசுபெற்ற ஒரு நிமிடக் கதைகள் வாசகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றன. புதிய வடிவத்தில் மினி ஓவியங்களுடன் மிளிர்ந்த அந்த மின்மினிக் கதைகள் தொகுக்கப்பட்டு இந்த நூலாகியுள்ளது. கையடக்கமான இந்த நூலை பஸ், ரயில் பயணங்களின் போது எளிதாக எடுத்துச் சென்று படிக்கலாம்... ரசிக்கலாம்... ஒவ்வொரு நிமிடத்திலும் இந்த உலகை ஊடுருவிப் பார்க்கலாம்!
RS. 50 More...by விகடன் பிரசுரம்
சிறுகதைகளுக்கு மொழி, மத, இன வேறுபாடுகள் கிடையாது. அனைத்து மொழிகளிலும் காலம் காலமாக எழுதப்பட்டு வரும் சிறுகதைகளுக்கு என்றுமே ஒரு தனி வாசகர் வட்டம் உண்டு. அதேபோல், சிறுகதைகளில் கையாளப்படாத விஷயங்களே கிடையாது. மனித உறவுகள், உணர்ச்சிகள், பாசப் போராட்டங்கள் என்று ஒரு பக்கமும், சமூக விழிப்பு உணர்ச்சிக் கதைகள், அரசியலை துகிலுரித்துக் காட்டும் கதைகள், மத நல்லிணக்கத்தைப் போதிக்கும் கதைகள் என்று இன்னொரு பக்கமும் விரிந்து கிடக்கும் களம் சிறுகதைகளுக்கு இன்று வரை உண்டு. படிப்பவர்களை வசீகரிக்கும் காதல் கதைகளுக்கும் இங்கு பஞ்சமில்லை. தமிழ் பருவ இதழ்களில் சிறுகதைகளுக்கு என்றுமே சிறப்பான இடம் உண்டு. அவற்றைப் படித்து ரசிக்கும் வாசகர்களின் எண்ணிக்கையும் பெரியது! இன்று காலத்தின் கட்டாயமாக பத்திரிகைகளில் வெளியாகும் சிறுகதைகளின் எண்ணிக்கை சற்று குறைந்திருக்கலாமே தவிர, அவற்றின் தரம் குறைவது கிடையாது. இதுவரை பத்திரிகைகளில் வெளிவராத புத்தம் புதிய சிறுகதைகளைத் தொகுத்து நூலாக வெளியிட வேண்டும் என்ற விருப்பத்தில் பிரபலமான பதினைந்து எழுத்தாளர்களைக் கேட்டபோது, அவர்கள் உடனடியாக ஒப்புக்கொண்டு மகிழ்ச்சியு
RS. 50 More...