Cart is Empty
by விகடன் பிரசுரம்
விவசாயம் செய்து லாபம் பார்ப்பது இன்றைய காலகட்டத்தில் குதிரைக் கொம்பாகத்தான் இருக்கிறது. காவிரி கைவிரித்ததால், மீண்டும் பட்டினிச் சாவுக்கு ஆளாகும் சூழலில் சிக்கித் தவிக்கிறார்கள் விவசாயிகள். பயிரையே உயிராக நினைத்தவர்கள் மாற்றுக்கு வழியற்றுத் தவிக்கும் சூழலில், குறைந்த தண்ணீரில், போதுமான முதலீட்டில், குறைவான மெனக்கெடுதலில் செய்யக்கூடிய காய்கறி விவசாயம் குறித்த இந்த நூல் காலத்தே உதவும் என்பது நிச்சயம். ‘பசுமை விகடன்’ இதழில் வெளிவந்த காய்கறி சாகுபடி குறித்த கட்டுரைகளைத் தொகுத்து, இன்றைய நிலவரங்களுக்கு ஏற்றபடியான விவரங்களைக் கூடுதலாகச் சேர்த்து, எல்லோருக்கும் வழிகாட்டும் விதத்தில் இந்த நூல் உருவாக்கப்பட்டு இருக்கிறது. பந்தல் இல்லாமலே பாகற்காய், நம்பிக்கை தரும் நாட்டுக் கத்திரி, பிரமிக்க வைக்கும் பீர்க்கன்காய், பளபளக்கும் பாலியஸ்டர் மிளகாய், வெற்றிக்கு வழிகாட்டும் வெள்ளரி என பலவிதமான காய்கறி சாகுபடிகளை விரிவாக விளக்குகிறது இந்த நூல். கூடவே, சாகுபடியை மேம்படுத்துவதற்கான யோசனைகளையும், உரிய உரத் தயாரிப்புகளையும் தனியே பெட்டிச் செய்திகளாக இணைத்து, எல்லோருக்கும் பயனளிக்கும் ஏற்றமிகு கட்டுரைகளாக இந்த நூலில் தொகுக்கப்பட்டு உள்ளன.நெல்லி விவசாயத்துக்கான மேம்பாட்டு யோசனைகள், முந்திரி பூமியில் முந்தும் மஞ்சள், தென்னைக்கு இடையில் அரசாணி, வறண்ட நிலத்திலும் வளம் சேர்க்கும் சீத்தா என வித்தியாசமான கட்டுரைகளுக்கும் இந்த நூலில் குறைவு இல்லை. காய்கறி சாகுபடியில் உங்களை வெற்றிகரமான விவசாயியாக இந்த நூல் நிச்சயம் மாற்றிக்காட்டும்!
RS. 77 More...by பொன்.செந்தில்குமார்
‘இந்தியாவின் ஆன்மா கிராமங்கள்’ என்றார் மகாத்மா காந்தி. அந்த கிராமங்களின் பிராண வாயு விவசாயம். அந்த விவசாயத்தின் அனைத்து நிலைகளுக்கும் வகைகளுக்கும் அரிய ஆலோசனைகளை அள்ளி வழங்குகிறது இந்த நூல். பசுமை விகடனில் வெளிவந்து விவசாயப் பெருமக்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘மண்புழு மன்னாரு’ பகுதிகள் ஏற்கெனவே ஒரு தொகுப்பு நூலாக வெளிவந்துள்ளது. அந்த நூலின் பகுதிகளும், அதன் பின்னர் பசுமை விகடனில் தொடர்ந்து வெளிவந்த ‘மண்புழு மன்னாரு’ பகுதிகள் மொத்தமாகத் தொகுக்கப்பெற்று வெளியாகியுள்ள நூல் இது. ‘ஆவாரை சேர்த்தால் நெல் அதிகம் விளையும், அரளிச் செடியில் இருக்கிறது பூச்சி விரட்டி, எப்போது, எதை விளைவித்தால் நல்ல லாபம் கிடைக்கும், எந்தப் பட்டத்தில் எந்தெந்த காய்கறிகளைப் பயிரிடலாம், பசு கன்று ஈனும்போது செய்ய வேண்டியவை, கால்நடைகள், கோழிகள் வளர்ப்பு என விவசாயத் தொழில்கள் சார்ந்த பலப்பல நுணுக்கமான தகவல்களை & எளிய மொழியில் விவசாயிகளின் தோளில் கைபோட்டுக் கொண்டு பேசுவது போல் சொல்கிறது இந்நூல். பல பகுதிகளுக்குப் பயணம் செய்து, விவசாய வாழ்வியலின் அனைத்து ஆழங்களுக்கும் சென்று அரிய தகவல்களை சேகரித்துத் தந்துள்ளார், நூலாசிரியரும் ‘பசுமை விகடன்’ பொறுப்பாசிரியருமான பொன். செந்தில்குமார். விவசாயிகளுக்கு எழும் சந்தேகங்களுக்கு அரும் பெரும் விளக்கங்களைத் தந்து அவர்களின் ஐயம் போக்குவதில் எப்போதும் இந்த நூல் முதலிடம் வகிக்கும் என்பது திண்ணம்.
RS. 116 More...by பொன்.செந்தில்குமார்
‘விதைத்துவிட்டு நல்ல விளைச்சல் கிடைக்கும் எனக் காத்திருக்கும் விவசாயிகளுக்கு பல நேரங்களில் ஏமாற்றமே மிஞ்சுகிறது. ஏனெனில், விவசாயமும் காலத்துக்கேற்ப மாறி வருகிறது. அத்தகைய மாற்றங்களுக்கு ஏற்றவாறு பயிரிட விவசாயிகளுக்குப் பயன்தரும் பல ஆலோசனைகளைத் தருகிறது இந்த நூல். விவசாயம் தொடங்கி, கால்நடைகள் பராமரிப்பு, சுற்றுச்சூழல், மரம் வளர்ப்பு, பண்ணைகளைப் பராமரித்தல் என அனைத்து வகையினருக்கும் விரிவான விளக்கங்களை அள்ளித் தரும் நூல் இது. எல்லாவித சந்தேகங்களுக்கும் அந்தந்தத் துறையில் சிறந்துவிளங்கும் வல்லுநர்கள் விளக்கமளித்திருப்பதே இந்த நூலின் சிறப்பம்சம். பசுமை விகடனில் ‘நீங்கள் கேட்டவை’ பகுதியில் வெளிவந்த வாசகர்களின் கேள்விகளும் அதற்கான விளக்கங்களும், ஏற்கெனவே மூன்று தொகுதிகளாக வெளிவந்து மகத்தான வரவேற்பைப் பெற்றன. நான்காம் தொகுதியாக வெளிவந்திருக்கும் இந்த நூலில், ‘மண் புழு கரைசலால் மகத்தான மகசூல் கிடைக்குமா? காளான் வளர்ப்பால் கைநிறைய பணம் கிடைக்குமா? எந்தெந்த மரங்களை அரசாங்கத்தின் அனுமதியோடு வெட்டி விற்பனை செய்யமுடியும்? நண்டு வளர்க்க பயிற்சி உண்டா?’ என்பன போன்ற கேள்விகளுக்கு அரிய, உரிய தகவல்களை அளிப்பதோடு நின்றுவிடாமல், அதற்குரிய வல்லுநர்களின் முகவரி, தொலைபேசி எண் ஆகியவை களைக் கொண்ட அரியதொரு பெட்டகமாய்த் திகழ்கிறது இந்நூல். இதை பசுமை விகடன் இதழின் பொறுப்பாசிரியர் பொன். செந்தில்குமார் தொகுத்துள்ளார். விவசாயம், விவசாயம் சார்ந்த துறையினருக்கு உற்ற நண்பனாக, ஆசானாக, இந்த நூல் வழிகாட்டும் என்பது மிகையல்ல!
RS. 74 More...