Cart is Empty
by பொன். செந்தில்குமார்
‘நல்ல நல்ல நிலம் பார்த்து நாமும் விதை விதைக்கணும்... நாட்டு மக்கள் மனங்களிலே நாணயத்தை வளர்க்கணும்!’ - இந்தப் பாடல் வரிகளுக்குப் பொருத்தமான உதாரணமாகத் திகழும் கிராமங்களைப் பற்றிய நூல் இது. ஆறுகளோ, வாய்க்கால்களோ, குளங்களோ இல்லாத கிராமங்களிலும் விவசாயிகள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஒரு ஏக்கர், இரண்டு ஏக்கர் நிலங்களை மட்டுமே வைத்துக்கொண்டு மழையை நம்பி வாழும் கிராம மக்கள், எதை விதைக்கலாம், எந்தப் பயிரை நட்டால் லாபம் ஈட்டலாம் எனத் தெரியாமல் ஏங்கித் தவிக்கிறார்கள். இப்படிப்பட்ட கிராமங்களுக்கு வழிகாட்டும் விதமாக, ஆந்திர மாநிலம், தெலுங்கானா பகுதியில், ஜகீராபாத் தாலுகாவில் உள்ள கிராம மக்கள், மழையை மட்டுமே நம்பி வளரும் சிறுதானியங்களை விதைத்து, அந்தப் பயிர்கள் மூலம் கிடைக்கும் அமோகமான வருமானத்தை வைத்து, மாடிவீடு கட்டி, பிள்ளகளைப் படிக்க வைத்து சுகமாக வாழ்க்கையை நடத்துகிறார்கள். கிணறு இல்லை, உரம் போடவில்லை, பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கவில்லை, எந்த வங்கியிலும் கடன் வாங்கவில்லை... இருந்தாலும் அந்த மானாவாரி பூமியில், கம்பு, கேழ்வரகு, சோளம், நிலக்கடலை, துவரை போன்ற 20 வகையான பயிர்களை சாகுபடி செய்து லாபம் சம்பாதிக்கிறார்கள் அந்தக் கிராம மக்கள். இது எப்படி சாத்தியம்? நம்பிக்கை, முயற்சி இவற்றை மட்டுமே மனதில் தேக்கி, உழைக்கும் அந்த ஆந்திர மக்களைப்பற்றிய கதைகளை, பசுமை விகடன் இதழ்களில் ‘வானம் பார்த்த பூமி... வாழ வைத்த சாமி!’ என்ற தலைப்பில் எழுதினார் நூலாசிரியர் பொன்.செந்தில்குமார். அந்தக் கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த ‘மானாவாரியிலும் மகத்தான லாபம்!’ சிறுதானியங்களைப் பயிர்செய்யும் முறைகள், விளைந்த தானியங்களை சந்தையில் விற்கும் திறமை, உற்பத்தி செய்யப்பட்ட விதைகளைக் காக்கும் முறைகள்... என அனைத்தையும் மேற்கொள்ளும் அந்தக் கிராமங்கள் வளம்செழித்துக் கிடப்பதை விளக்கும் இந்த நூல் விவசாயிகளுக்கான விடிவெள்ளி!
RS. 50 More...by ஆர்.குமரேசன்
உலக அளவிலான பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைச் சமாளிக்க இந்தியா மட்டுமல்ல, உலக நாடுகள் அனைத்தும் மீன் வளர்ப்பு மற்றும் மீன் பிடிப்புத் தொழில்களை முறையாக அங்கீகரித்து, ஊக்கப்படுத்தி வருகின்றன. ஆடு&மாடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு ஆகிய தொழில்களைப்போல, சமீப காலங்களில் விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்திருப்பது மீன் வளர்ப்புத் தொழில். கிணறு, ஆறு, குளங்களை நம்பி விவசாயம் செய்து நொடித்துப்போன விவசாயிகள்கூட இப்போது, மீன் வளர்ப்பதிலும், வளர்த்த மீன்களை சந்தைக்குக் கொண்டுசென்று விற்பதிலும் அதிக ஆர்வம் காட்டி, பொருளாதாரத் தேவைகளில் பூர்த்தி அடைந்து, தாங்கள் இழந்த வாழ்க்கையை மீண்டும் மகிழ்ச்சியான பாதைக்குத் திருப்பி இருக்கிறார்கள். மீன் வளர்ப்புத் தொழிலில், குறைந்த முதலீட்டில், குறைந்த வேலை ஆட்களின் மூலமாக அதிக லாபத்தை அடைந்த பல விவசாயிகளை நேரில் சந்தித்து, அவர்களுடைய அனுபவங்களை பசுமை விகடன் இதழ்களில் எழுதி இருக்கிறார் ஆர்.குமரேசன். அந்தக் கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல். மீன் குஞ்சு வாங்குதல், செயற்கைக் குளம் வெட்டுதல், தீவனம் தயாரித்தல், பராமரித்தல், நோய்த் தடுப்பு, விற்பனை என அனைத்துக்கும் விளக்கங்களைத் தருவதோடு, மீன் குஞ்சுகள் வளர்க்கும் நிலையம் அமைத்தல், மீன் தீவனம் தயாரிக்கும் நிலையம் அமைத்தல், புதிய குளங்கள் வெட்டுதல், பண்ணைக் குட்டைகள் வெட்டிதல், மீன் பிடி உபகரணங்கள் வாங்குதல் ஆகியவற்றுக்கு மத்திய&மாநில அரசு அமைப்புகளில் மானிய உதவி, கடன் வசதி பெறும் வழிகளையும் அட்டவணையாகத் தருகிறது இந்த நூல்.
RS. 53 More...by முனைவர் க.அழகுசுந்தரம்
தண்ணீர் கிடைக்காமல் காய்கறிகள் பழங்கள் ஆகியவற்றைப் பயிர் செய்வதே விவசாயிகளுக்குப் பெரும் பாடு. சிறிது காலம் காத்திருந்தால் விளை பொருட்களை நிச்சயம் அதிக விலைக்கு விற்க முடியும் என்பது கண்கூடாகத் தெரிந்தாலும் அழுகும் பொருட்கள் என்பதால் நல்ல விலை கிடைக்கிறதோ அல்லது செலவு மட்டும் கிடைக்கிறதோ உடனே விற்க வேண்டிய நிர்ப்பந்தம் அதைவிடப் பெரும் பாடு. இப்படி அவசரமாக விற்காமல் காய்கறிகளையும் பழங்களையும் அப்படியே வைக்காமல் அவற்றை பழச் சாறாகவோ வேறு வடிவமாகவோ மாற்றினால் அவற்றின் மதிப்பு கூடும். இப்படி மதிப்பைக் கூட்டிப் பாதுகாத்து லாபத்துக்கும் விவசாயியின் சௌகரியத்துக்கும் ஏற்றவாறு விற்க ஏராளமான வழி முறைகளை இந்த நூலில் விவரித்திருக்கிறார் நூல் ஆசிரியர் க.அழகுசுந்தரம். காய்கறிகள் பழங்கள் மட்டுமல்லாமல் நெல் போன்ற தானிய வகைகளையும் திறமையாகவும் கவனமாகவும் பாதுகாப்பது மட்டுமல்ல சேமித்து, விற்பனை செய்யும் முறைகள் இந்த நூலில் விவரிக்கப்பட்டிருக்கின்றன. நெல்லில் உள்ள ஈரப்பதத்தைப் போக்கி மதிப்பைக் கூட்டிச் சேமிக்கும் முறை, சேமிக்கும் நெல்லைப் பூச்சிகள் தாக்காமலிருக்க வழிகள், பழங்களை நவீன முறையில் அழகுபடுத்தும் முறைகள், தங்களிடம் இருக்கும் பழங்களைச் சிறு அளவுகூட விரையமாக்காமல் மதிப்பைக் கூட்டும் யுக்திகள், பழங்கள் அதிக வெப்பத்தால் சீக்கிரம் கெட்டு விடுகின்றன. அவை கெடாமல் குறைந்த வெப்பத்தில் பாதுகாக்கும் ரகசியம், பறித்த பிறகும் பழங்கள் சுவாசிக்கின்றன; அவற்றின் சுவாசத்தை நீடிக்கும் மெழுகுப் பூச்சு ஆகிய அனேக ரகசியங்களை இந்த நூலில் உடைக்கிறார் நூல் ஆசிரியர். விளை பொருட்களின் மதிப்பைக் கூட்டுவதை விளக்குவதோடு உபயோகிக்கும் உபகரணங்க¬ளைத் தேர்ந்தெடுப்பது, அவற்றை அமைக்கும் விதம், சரியாகக் கையாள்வது, பராமரிப்பது ஆகிய யுக்திகளையும் விவரித்திருக்கிறார். பசுமை விகடனில் வெளிவந்த தொடர் பலரையும் சென்றடைந்து பயன்தரும்வண்ணம் நூலாக உங்கள் கைகளில் தவழ்கிறது. விற்பனையாளர்களிடம் தங்களை இழந்துவிடாமல் தாங்களே லாபம் பெறும் யுக்திகள் அடங்கிய இந்த நூல் விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதம்.
RS. 53 More...by பொன். செந்தில்குமார்
இனியெல்லாம் இயற்கையே...' _ இது நாளைய உலகம் முழுவதுமே உச்சரிக்கப் போகும் ஒரு மந்திரச் சொல். அதற்கு ஓராயிரம் காரணங்கள் கண்முன்னே விரிந்து கிடக்கின்றன. பருவம் தப்பிய மழை... சுழற்றியடிக்கும் சுனாமி... வளைத்து விழுங்கும் வெள்ளம்... திடீர் தாக்குதல் நடத்தும் மர்ம நோய்கள்... என்று இந்தப் பூமிப் பந்திலிருக்கும் ஜீவராசிகள் ஒவ்வொன்றும் அனுபவிக்கும் இன்னல்களே இதற்கு சாட்சி. மனித இனம், இயற்கையை விட்டு வெகுதூரம் விலகி வந்துவிட்டதன் விளைவுதான் இது என்று பலரும் எடுத்துச் சொல்கிறார்கள். ஆனால், அது அனைவரின் காதுகளிலும் ஏறிவிடுகிறதா...? 'ஊருக்கு ஒண்ணு வந்தா... அது எனக்கும் வந்துட்டுப் போகட்டும்...' என்ற அலட்சிய மனப்பான்மை கிட்டத்தட்ட அனைவரையுமே தொற்றிக் கொண்டுவிட்டது என்பதுதான் கசப்பான உண்மை. இத்தகைய போக்குக்கு எதிராக, பலரும் வில்லெடுத்து போர் தொடுத்த வண்ணம் உள்ளனர். 'இனி இயற்கைதான் இந்த பூமிக்கே சோறு போடும்... அதை நாம் மதிக்க வேண்டும்... வாழ்க்கையை அதனுடன் இணைத்துக் கொள்ள வேண்டும்...' என்று முழங்கி வருகின்றனர். இயற்கைக்கு ஆதரவான வேலைகளை வேளாண்மையில் இருந்துதான் முதலில் தொடங்க வேண்டும். காரணம், இயற
RS. 67 More...by ஜி.பிரபு
நாட்டுக்கோழி வளர்ப்பதை, நாகரிகம் கருதி கைவிட்டவர்கள்கூட இன்றைக்குப் போட்டி போட்டுக் கொண்டு வளர்ப்பதற்குக் காரணம், அதில் கிடைக்கும் வருமானம்தான். கணினியின் முன் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள்கூட பொழுதுபோக்காக _ பகுதிநேர வேலையாக நாட்டுக்கோழி, வான்கோழி, கின்னிக்கோழி, சேவல், வாத்து போன்ற பல்வேறு கால்நடைகளை வளர்த்து விற்பனை செய்பவர்களும் உண்டு. உலக அளவிலான பொருளாதார வீழ்ச்சியைச் சமாளிக்க, இந்தியா மட்டுமின்றி அமெரிக்காவிலும் புறக்கடை முறையில் கோழிகளை வளர்க்க ஆரம்பித்துள்ளனர். அதிலும், நாட்டுக்கோழி வளர்ப்பில் நல்ல பலனைக் காண்போர் அதிகம். நாட்டுக்கோழி வகைகள், கோழி வளர்ப்பு முறைகள், கோழிக்குஞ்சுகளை உற்பத்தி செய்யும் முறை, கோழிகளுக்கும் குஞ்சுகளுக்குமான தீவன முறைகள், அலங்காரக்கோழிகளின் மூலம் அதிக வருவாய் பெறும் முறைகள், புறக்கடைக் கோழி வளர்ப்பில் அமெரிக்க முறை... என கோழி வளர்ப்பில் உள்ள ஏராளமான செயல்முறைகளை அனைவரும் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் எழுதியிருக்கிறார் நூலாசிரியர் ஜி.பிரபு. கால்நடை மருத்துவர்கள், கோழிப் பண்ணை முதலீட்டாளர்கள்... என பல்வேறு நிபுணர்களின் கோழி வளர்ப்பு அனுபவம் மற்றும் மருத்துவம் குறித்தக் கருத்துகளும், வருமானம் ஈட்டக்கூடிய வழிமுறைகளும் இந்த நூலில் தொகுத்துத் தரப்பட்டு உள்ளன. ‘கையில எப்பவும் பணம் புழங்கிக்கிட்டே இருக்கணும்’ என்று நினைப்பவர்களுக்கு, நாட்டுக்கோழி வளர்ப்புத் தொழில் நிச்சயம் கை கொடுக்கும்.
RS. 67 More...by டாக்டர் கோ.நம்மாழ்வார்
பெருகிவரும் மக்கள்தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை அதிகரிக்க, இன்று பல்வேறு செயற்கை உரங்கள் பயன்பாட்டில் உள்ளன. காய்கறிகள் முதல் கடுகு வரை ஒவ்வொன்றையும் விளைவிக்க பயன்படுத்தப்படும் யூரியா போன்ற செயற்கை ரசாயன உரங்களும், தவறான தொழில்நுட்ப முறைகளும் மனித சமுதாயத்துக்கு பெரும் தீங்கை விளைவிக்கின்றன. இதில் இருந்து நாம் விடுபட, நமக்குக் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம்தான் ‘இயற்கை விவசாய முறை’. இது, மண் வளத்தைப் பெருக்கி பசுமைப் புரட்சிக்கு வித்திடுகிற நமது பாட்டன் காலத்து விவசாய வழக்கம்தான்! உழவர்கள், பூச்சிக்கொல்லியை அதிகமான அளவில் தெளிப்பதால் நிலம், நீர், காற்று மாசுபடுவது மட்டுமல்லாமல், உயிரினப் பன்மயமும் அழிந்துபோகிறது. செயற்கை ரசாயனம் கலந்த பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதன் மூலம், நிலம் தன் நலம் இழக்கிறது. உடலின் இயல்பான வளர்ச்சி எக்குத்தப்பாக மாறுகிறது. உடல் பருமன், அதீத வளர்ச்சி, சீக்கிரமே பருவம் அடைவது, ஆண்மை இழப்பு... என ரசாயனக் கலப்புகளால் நாம் அனுபவிக்கும் துன்பங்கள் அதிகம். இயற்கை விவசாயத்தின் மூலமே அனைத்துவிதமான பயிர் சாகுபடியை வெற்றிகரமாக நிகழ்த்த முடியும் என்பதை, அனுபவத் தொகுப்பாக படைத்திருக்கிறார் நூலாசிரியர் டாக்டர் கோ.நம்மாழ்வார். ‘எந்நாடுடைய இயற்கையே போற்றி!’ என்ற தலைப்பில் பசுமை விகடனில் வந்த தொடரின் தொகுப்பு, இந்த நூல். இயற்கை முறை விவசாயம் மூலம் வாழ்வில் வளம் பெற உழைக்கும் ஒவ்வொருவருக்கும், அற்புதமான விளைச்சலை பெறுவதற்கான அரிச்சுவடிப் பாடமாக இந்த நூல் விளங்கும்!
RS. 67 More...by காசி.வேம்பையன்
நெல், வாழைப் பயிர்களின் சாகுபடி காலங்கள், பூச்சிகள், நோய்த் தாக்குதல், நீர் மேலாண்மை, அறுவடை - இவை குறித்த விவசாயிகளின் எண்ணற்ற சந்தேகங்களுக்கும், எந்தப் பட்டத்தில் விதைப்பது... பட்டத்துக்கேற்ற ரகங்கள் இருக்கின்றனவா... எந்தெந்த காலத்தில் என்னென்ன நோய்கள் தாக்கும்... இவற்றுக்கான விளக்கங்களைத் தரும் நூல் இது. ஒரு ஏக்கருக்கு எத்தனை கிலோ விதை நெல் தேவை என அறிந்து, விதையின் முளைப்புத் திறனைக் கண்டறிந்து அதில் தரமான நெல் விதையை தேர்வு செய்து, அது விதை நேர்த்தி செய்யப்பட்டதா என ஆராய்ந்து... ஒரு நெல் விதைப்பதற்கே பல படிநிலைகளை பொறுப்பாக செய்கிறார்கள் விவசாயிகள். இப்படி நேர்த்தியாக வயலில் பயிரை விளைவிப்பதன் மூலம் நல்ல தரமான நெல்லில் இருந்து அரிசி நமக்குக் கிடைக்கிறது. `விதைகள் மூலமாக பரவக்கூடிய பூச்சி, நோய் மற்றும் நூற்புழுக்களின் தாக்குதலைக் குறைப்பதற்கும், விதைகளின் முளைப்புத் திறனை அதிகப்படுத்தவும் விதை நேர்த்தி முறை உதவும். விதைநேர்த்தி செய்தால், ‘குலைநோய்’ தாக்காது. நெல் வயலுக்குக் கண்டிப்பாக ரசாயன உரங்களைத் தவிர்க்க வேண்டும்... ‘மெத்தைலோ பாக்டீரியா’வைப் பயன்படுத்தி வாடும் பயிர்களைக் காப்பாற்ற முடியும். இந்த பாக்டீரியாவைத் தெளித்தால், இலைகளில் உள்ள பச்சையம் தக்க வைக்கப்படுகிறது.' இதுபோன்ற அரிய தகவல்களை விவசாயிகளின் கேள்வி-பதில் மூலம் வயல்வெளிப் பள்ளி நேர்த்தியாகக் கற்றுக் கொடுக்கிறது. பசுமை விகடனில் தொடராக வெளிவந்த வயல்வெளிப் பள்ளி, நூலாக்கம் பெற்று விவசாயிகளின் சந்தேகத்தைத் தீர்க்கக் காத்திருக்கிறது. நெல் மற்றும் வாழை வேளாண் விவசாயிகள் வளமான விவசாயத்தை செய்திட இந்த நூல் சிறந்த வழிகாட்டியாகத் திகழும்!
RS. 67 More...by த.ஜெயகுமார்
காணி நிலம் இருந்தாலே போதும், கணக்கு பார்க்காமல் உழைத்து அந்த நிலத்தை பசுமையாக்கிப் பார்த்து பரவசமடைந்த விவசாயிகள் இப்போது இல்லை. நகரமயமாதலும், நூறு நாள் வேலையும் விவசாயத் தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டிக்கொண்டுவிட்டன. தன் சொந்த நிலத்தில்கூட உழைக்க மறந்து பாதை மாறிவிட்டனர். அதனால் விவசாயம் செய்ய ஆளில்லாமல் கரடுக் காடாய் மாறிக்கொண்டிருக்கின்றன விவசாய நிலங்கள். என்றாலும், விவசாயமே எங்களின் எல்லாமும் என எண்ணி உழைப்பவர்களும் இருக்கிறார்கள். விவசாயம் செய்ய ஆள் கிடைக்காவிட்டாலும் அவர்கள், தங்கள் நிலத்தை தரிசாக்காமல் செழிக்கவைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு பெருந்துணையாய் இருப்பவை விவசாயக் கருவிகள். அந்தக் கருவிகளைப் பற்றியும் அவற்றின் பயன்பாடு பற்றியும் கூறுகிறது இந்த நூல். தென்னை மரம் ஏற, நிலத்தை உழ, பூச்சி விரட்ட, கரும்பு வெட்ட, களை எடுக்க... என அனைத்து விதமான விவசாய வேலைகளுக்கும் இப்போது கருவிகள் வந்துவிட்டன. அப்படிப்பட்ட கருவிகளின் துணையால் விவசாயம் செய்து பயன் அடைந்தவர்களின் அனுபவங்களையும், எந்தெந்த கருவியை எதற்குப் பயன்படுத்தலாம் என்பதையும் எடுத்துச் சொல்கிறது இந்த நூல். பண்ணைக் கருவிகளின் பயன்பாட்டையும் பராமரிப்பையும், விளக்கமாகக் கூறும் இந்த நூலில் உள்ள தகவல்கள் அனைத்தும் பசுமை விகடனில் வெளிவந்தவை. அவற்றின் முழுத் தொகுப்பே இந்த நூல். பயனின்றிக் கிடக்கும் தங்கள் நிலங்களுக்கு பசுமையைப் போர்த்திவிட விவசாயிகளுக்கு இந்த நூல் நிச்சயம் உற்சாகம் ஊட்டும். கருவிகளின் பயன் அறியுங்கள், பயன்படுத்துங்கள், பயன்பெறுங்கள்!
RS. 67 More...by டாக்டர் கோ.நம்மாழ்வார்
கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக இயற்கை வேளாண்மைக்காக இடைவிடாமல் போராடும் போராளி டாக்டர் கோ.நம்மாழ்வார். ஒற்றை மனிதனாக ஆரம்பித்த இவரது வாழ்க்கைப் பயணம், இன்று லட்சக்கணக்கான மக்களை இயற்கை விவசாயத்தின் பக்கம் திரும்ப வைத்திருக்கிறது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை வேளாண் பட்டம் பெற்று, தமிழக வேளாண் துறையில் பணியில் சேர்ந்தவர் நம்மாழ்வார். ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், வீரிய விதைகள் ஆகியவற்றால் வேளாண்மை முழுக்க நஞ்சாகி விட்டதைக் கண்டு கொதித்து, பணியிலிருந்து வெளியேறியவர். நிலங்களில் விதைப்பது வாடிக்கை... இவரோ நிலங்களையே விதைகளாக்கியிருக்கிறார். ஆம். இயற்கை வேளாண்மைக்கான விதையை தமிழகம் முழுக்கப் பல்வேறு இடங்களில் விதைத்து, இன்றைக்கு அவையெல்லாம் இயற்கை வேளாண்மைக்கான பயிற்சிப் பட்டறைகளாக மிளிர்வதுதான் இவரது வாழ்க்கை அர்ப்பணிப்புக்குக் கிடைத்துள்ள வெற்றி! இயற்கை வேளாண் விஞ்ஞானி என்று அழைக்கப்படும் இவரது பேச்சு மற்றும் எழுத்தில் சமூகம், இயற்கை, கலாசாரம், வரலாறு, அரசியல், பொருளாதாரம், மருத்துவம், விளையாட்டு, சுற்றுச்சூழல் என்று பூமிப்பந்திலிருக்கும் அனைத்தும் அடங்கியிருக்கும்.
RS. 70 More...by விகடன் பிரசுரம்
பொய்யூர்' முருங்கைக்காய்... 'வேலூர்' முள்ளு கத்தரிக்காய்... 'பூங்காவூர்' புடலங்காய்... 'அன்னஞ்சி' தக்காளி... என்று குறிப்பிட்ட சில காய்கறிகளின் பெயர்களோடு ஊர்ப் பெயர்களையும் இணைத்துப் பேசப்படுவது உண்டு. அந்த அளவுக்குக் காய்கறிகளை ருசித்து, ரசிப்பவர்கள் நாம். இன்று 'ஹெல்த் கேர்' முக்கியத்துவத்தை அனைவருமே உணரத் துவங்கிவிட்டதால், நாள்தோறும் சத்தான காய்கறிகளை வாங்கி உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அதனால், விவசாயிகளுக்கு காய்கறி சாகுபடி மீது கூடுதல் கவனம் ஏற்பட்டிருக்கிறது. ஒவ்வொரு காய்கறிச் செடியையும் விவசாயி வளர்த்தெடுப்பதற்குள் அவர்களை வாட்டி எடுக்கும் இடைஞ்சல்கள்தான் எத்தனை! திடீர் மழை, மின் தடை, உரத்தட்டுப்பாடு, பூச்சித் தாக்குதல், விலை வீழ்ச்சி, கூலி ஆள் பற்றாக்குறை... இப்படி எத்தனையோ! இவ்வளவு பிரச்னைகளையும் சமாளித்து வெற்றிகரமாக காய்கறி சாகுபடியில் சாதிப்பது எப்படி என்பது பல விவசாயிகளுக்கும் கைவந்த கலையாகவே இருக்கிறது. அத்தகைய விவசாயிகளின் வெற்றி ரகசியங்கள் அடங்கிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல், 'பசுமை விகடன்' இதழில் வெளியான, காய்கறி சாகுபடியில் மகசூல் அள்ளிய வ
RS. 70 More...