Cart is Empty
by விகடன் பிரசுரம்
ஒரு கோயில் என்று எடுத்துக் கொண்டால், உங்கள் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து விஷயங்களும் அங்கே கிடைக்கும். ஆலயங்களில் புதைந்துள்ள அற்புதங்களும், அவை சொல்லும் அதிசயங்களும் ஏராளம். ஒவ்வொரு ஆலயத்துக்கும் ஒவ்வொரு புராணம் இருக்கிறது. சிறப்பு இருக்கிறது. மகத்துவம் இருக்கிறது. அவற்றை எல்லாம் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். பலன் பெற வேண்டும். ஓர் ஆலயத்தைத் தரிசிக்கச் செல்லும் முன் அந்த ஆலயம் பற்றிய முழு விவரங்களையும் நம் விரல் நுனியில் வைத்திருந்தால், விளக்கங்கள் கேட்டு எவரிடமும் செல்ல வேண்டாம். அறிந்த ஆலயங்கள், அபூர்வ தகவல்கள் என்ற இந்தப் புத்தகம் ஓர் உன்னதமான தொகுப்பு. பிரபலமான ஒவ்வொரு ஆலயத்தைப் பற்றியும் வாசகர்கள் எழுதி அனுப்பிய செய்திகளை, அலசி ஆராய்ந்து அதை அழகான கட்டுரையாகத் தொகுத்து சக்தி விகடன் இதழ் தொடர்ந்து வெளியிட்டது. அந்தக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு, நூலாக வெளிவந்துள்ளது. இந்த நூலில், அந்தந்த ஆலயங்கள் பற்றிய அபூர்வத் தகவல்களோடு, வண்ணப் படங்களும் தரப்பட்டுள்ளது. செல்லும் வழி, தங்கும் இடம், எங்கே இருக்கிறது, கோயிலின் சிறப்புதினங்கள் என்ன, எப்போது
RS. 102 More...by எஸ்.ராஜகுமாரன்
இந்தியாவின் ஆதி மருத்துவம் சித்த வைத்தியம், ஆதி மருத்துவன் சித்தன். மலைகள் இருக்கும் இடமெல்லாம் சித்தர்கள் வசித்தார்கள். சித்தத்தை அடக்கியவர்கள் மட்டும் அல்ல; இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்து, இயற்கையை முற்றிலும் அறிந்தவர்களே சித்தர்கள். மலைகள் இறைவன் உறையும் இல்லங்கள் என்கின்றனர் மெய்யறிவாளர்கள். அவை இயற்கை தந்த கொடைகள். பல அரிய மூலிகைச் செடிகளையும் மரங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள மலைகளில், ஆதிச்சித்தன் சிவனின் அடியார்களாக வலம் வந்த சித்தர்கள், மூலிகைகளைக் கொண்டு பல மருத்துவ மகிமைகளைச் செய்துள்ளனர். தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற மலைகளில் சித்தர்கள் இன்றும் அரூபமாக வாழ்ந்துகொண்டு பல அமானுஷ்ய செயல்களை செய்துவருவதாக நம்பப்படுகிறது. அந்தச் சித்தர்கள் பற்றிக் கூறும் இந்த நூலில், எந்தெந்த மலையில் எந்த சித்தர் சமாதி அடைந்தார், அவர் செய்த அமானுஷ்யங்கள் பற்றியும், சித்தர்கள் உறையும் மலைகளின் சிறப்பு பற்றியும் விளக்கி உள்ளார் நூலாசிரியர் எஸ்.ராஜகுமாரன். ‘காடே திரிந்தென்ன, கந்தையே உடுத்தென்ன, ஓடே எடுத்தென்ன' என்று ஓரிடத்திலும் தங்காமலும் எதனையும் சொந்தமெனக் கொள்ளாமலும் வாழ்ந்த சித்தர்கள் மூடப்பழக்கங்களையும் விட்டொழிக்கச் சொன்னவர்கள். அப்படிப்பட்ட சித்தர்களைப் பற்றி அறிந்துகொள்ள இந்த நூல் ஆகச் சிறந்ததாகும்!
RS. 98 More...by வெ.நீலகண்டன்
தன் சந்தோஷத்தைப் பகிர்ந்துகொள்ளும் உறவாக.. தனக்கு வழிகாட்டும் முன்னோனாக... தன் வாழ்க்கை நிகழ்வுகளுக்கு காரணகர்த்தாவாக... இப்படி சிறுதெய்வங்களை எல்லாமுமாகப் பார்க்கிறான் கிராமப்புற பாமரன். வேல், நடுகல், மரம் இப்படி எளிமையான பொருள்களில் இறையாக உறைந்திருக்கும் சிறுதெய்வங்களே தமிழக கிராமங்களின் காவல் அரண். தங்கள் வீட்டில் நல்லது கெட்டது எது நடந்தாலும் அதன்பொருட்டு, தங்கள் காவல் தெய்வங்களான கருப்பனிடமோ ஐயனாரிடமோ மாடசாமியிடமோ பேய்ச்சியிடமோ மனதார வேண்டுதல்வைக்கும் வழக்கம், இன்றும் தமிழ்நாட்டின் கிராமங்களில் பரவலாக இருந்து வருகிறது. தமிழகத்தின் பெரும்பாலான கிராமப்புறங்களில் வெட்டரிவாளோடும் வேல் கம்போடும் மிரட்டும் பார்வையில் முரட்டு மீசையுடன் உட்கார்ந்திருக்கும் ஐயனாரைப் பார்த்தவுடன் சிறு அச்சம் எழுந்து அடங்கும். இந்த ஐயனார் அவதாரமல்ல; அவர் ஒரு குலத்தின் முன்னோடியாக இருந்து கதைகளின் வழியே காவல் தெய்வமாக பரம்பரை பரம்பரையாக வாழ்ந்துகொண்டிருப்பவர். இப்படி முனியனாகவும் சுடலைமாடனாகவும் கருப்பனாகவும் ராக்காயியாகவும் கிராமப்புற மக்களின் மாறா மரபோடு கலந்திருக்கும் சிறுதெய்வங்கள் பற்றி சக்தி விகடனில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. இனி, காவல் தெய்வங்களின் கதை கேளுங்கள்!
RS. 140 More...by எஸ்.கண்ணன் கோபாலன்
தமிழகத்தின் மிகப்பெரிய கலாச்சார உதாரணம் கோயில்கள்தான். ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் தமிழகத்தின் தொன்மையையும் கலை நயத்தையும், பாருக்குப் பறைசாற்றிக்கொண்டு நிற்கிறது தஞ்சை பெரிய கோயில். அதைப்போல இன்னும் பல கோயில்கள் நம் பாரம்பர்யத்தை சொல்லிக்கொண்டிருக்கின்றன. மன்னர் ஆட்சிக் காலத்தில் கோயில் கோபுரத்தைவிட வேறு எந்தக் கோபுரமும் உயரமாக இருக்கக் கூடாது என்று ஓர் எழுதப்படாத சட்டமே இருந்தது. மனக்கவலை, குழப்பம் இருந்தால் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு கோயில் வளாகத்துக்குள்ளேயே சிறிது நேரம் அமர்ந்திருந்தால் கவலை எல்லாம் அகன்று, மனதில் ஒரு புத்துணர்ச்சி தோன்றும். அதனால்தான் ‘ஆலயம் தொழுவது சாலவும் நன்று' என்றும், ‘கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்றும் ‘கோபுர தரிசனம் கோடி புண்ணியம்' என்றும் சொல்லிவைத்துள்ளனர் நம் முன்னோர். அப்படிப்பட்ட பாரம்பர்யம் கொண்ட கோயில்களின் தனிச் சிறப்புகளைப் பற்றிப் பேசுகிறது இந்த நூல். மகரிஷிகள் வழிபட்ட திருத்தலங்கள், மகான்களின் திருவடிகள் பதிந்த ஆலயங்கள், மன்னர்கள் எழுப்பி பாதுகாத்த கோயில்கள் என ஒவ்வொரு கோயிலின் வரலாற்றையும், அந்தக் கோயிலில் எழுந்தருளிய இறைவனின் புராணத்தையும் விளக்குகிறார் நூலாசிரியர். இறைவனை வழிபடும் கோயில்களின் புனித வரலாறு நமக்குத் தெரிந்திருக்க வேண்டியது அவசியம். தமிழ்நாட்டில் உள்ள பாரம்பர்யக் கோயில்களைப் பற்றி நாமும் நம் சந்ததியினரும் தெரிந்துகொள்ள இந்த நூல் உதவும். ஓர் ஆன்மிகப் பயணம் மேற்கொண்ட அனுபவத்தைப் பெற, அடுத்தடுத்த பக்கங்களைப் புரட்டுங்கள்!
RS. 291 More...by இராஜா ஆதிபரஞ்ஜோதி
தத்துவத்தின் மெய்யியலை உணர்ந்தவர் ஸ்ரீராமாநுஜர். வேதாந்தத்தின் விளக்கமாக விசிஷ்டாத்வைதத்தை முன்வைத்தவர். இந்திய தேசத்தின் இணையற்ற குருமார்கள் மூவர். ஒருவர் ஆதிசங்கரர். மற்றவர் மத்வர். மூன்றாமாவர், பிரம்ம சூத்திரத்திற்கு உரை எழுதிய தத்துவவாதி ஸ்ரீராமாநுஜர். தமிழ்நெறியை வளர்த்து போற்றிய ஸ்ரீராமாநுஜர் ஒரு சீர்திருத்தவாதி. திருவரங்கம் ரங்கநாத பெருமாள் கோயிலின் நிர்வாகத்தை ஏற்று சீர்திருத்தினார். பள்ளிகொண்ட நாதனுக்கு அன்றாடம் நடக்க வேண்டிய பூஜைகளை ஒழுங்குபடுத்தினார். அப்போது அவருக்கு எதிர்ப்பு உண்டானது. ஆண்டாண்டு காலமாக செய்யப்பட்டு வரும் முறையில் மாற்றம் கொண்டுவந்தால், பழைமைவாதிகள் உடனே ஏற்பார்களா என்ன? ஸ்ரீராமாநுஜரை கொல்லும் முயற்சிகள் நடந்தன. அனைத்தையும் வென்று புதிய நெறிமுறைகளை உருவாக்கி வைணவத்தை காத்தவர் ஸ்ரீராமாநுஜர். அரங்கன் கோயில் மட்டுமின்றி திருமலை திருவேங்கடவன் கோயிலுக்குச் சென்று அங்கும் திருக்கோயில் நிர்வாகத்தை முறைப்படுத்தி இன்றளவும் அவரது ஏற்பாட்டின்படியே அனைத்து பூஜைகளும் ஏழுமலையானுக்கு நடைபெற்று வருகிறது. கோயில் நிர்வாகத்தையும், வைணவ மட நிர்வாகத்தையும் ஒருங்கே கவனித்து, திருவரங்கனின் அருளைப் பெற்று திருவரங்கனால்் ‘நம் உடையவர்’ என அழைக்கப்பட்டார். ஆத்திகர்களும், நாத்திகர்களும் கொண்டாடும் சீர்திருத்தவாதியாகக ஸ்ரீராமாநுஜர் ஆனது எப்படி? சாதி மதங்களை எதிர்த்த ஸ்ரீராமாநுஜர் வாழ்வு எப்படிப்பட்டது? நாம் அவரிடமிருந்து கற்க வேண்டியது என்ன? அத்தனையையும் இந்த நூலில் அழகுறச் சொல்லியுள்ளார் நூலாசிரியர் இராஜா ஆதிபரஞ்ஜோதி. ஆயிரமாவது ஆண்டை நெருங்கும் இந்தத் தருணத்தில் அந்த மகானின் வாழ்க்கையை அறிவதே ஆனந்தம்தானே. அற்புதத்தை உணர பக்கத்தைப் புரட்டுங்கள்.
RS. 95 More...by சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்
ஜோதிடம் என்பது எதிர்காலத்தில் நிகழப்போவதை அப்படியே முக்காலமும் உணர்த்துவது அல்ல என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அதே சமயம், ஜோசியம் முழுவதுமே சுத்த ‘ஹம்பக்’ என்று ஒதுக்கித்தள்ளிவிடவும் கூடாது. நம்மிடம் ஓர் அடிப்படைத் தெளிவு இல்லாமல், ஜோதிடத்தை மேம்போக்காகக் கணிப்பவர்களை நம்புவதாலும், ஒரேயடியாக நம்பாமல் இருப்பதாலும்தான்... துன்பம் வரும்போது நிலைகொள்ளாமல் தவிப்பதும், திடீரென்று செல்வம் வரும்போது என்ன செய்வது என்று தெரியாமல் முழி பிதுங்குவதுமான நிலை நமக்கு ஏற்படுகிறது. ஜோதிடத்தை எந்த நிலையில் வைப்பது, எப்படிக் கையாள்வது என்பதை சேஷாத்ரிநாத சாஸ்திரிகள் இந்த நூலில் அருமையாக விளக்கியிருக்கிறார். ஜோதிடம் என்பது எது நிகழப்போகிறது என்பதை குறி சொல்வதல்ல. ஒருவரின் வாழ்க்கையில் அந்தந்தக் காலகட்டத்தில் கிரகங்கள், நட்சத்திரங்கள், ராசிகள் அனைத்தும் எப்படி இருக்கின்றன என்பதைப் பொறுத்து அவருடைய சூழ்நிலைகளைக் கணிக்கும் கணக்கு. இந்தக் கணிப்பைக் கொண்டு, சில இடர்களை வருமுன் காத்துக்கொள்ளலாமே தவிர, கிரக நிலைகளை மாற்றி அமைக்க முடியாது. நீண்ட தொலைவு ரயில் பயணம் செய்யும்போது சில நேரங்களில் இடர்கள் ஏற்பட்டால் மாற்று வழியில் பயணத்தைத் தொடர்வதைப் போல, நம் வாழ்க்கையில் சில இடர்களை சமயோசிதமாக ஜோதிட உதவியோடு கடந்துவிடலாம். கிரகம், நட்சத்திரம், ராசி ஆகியவை ஒன்றுடன் ஒன்று சேரும்போது ஆயிரக்கணக்கான பலன்கள் எப்படி விளைகின்றன; அவற்றைக் கணித்து ஒருவர் வாழ்க்கையில் எப்படித் துல்லியமாகப் பலன்களைச் சொல்லலாம், தொலைக்காட்சியில் சொல்லும் வார பலன்கள் ஏன் சிலருக்குப் பொருத்தமாகவும் வேறு சிலருக்குப் பொருத்தமில்லாததாகவும் இருக்கின்றன; ஆகவே, எதையெல்லாம் தவிர்க்காமல் கணக்கில் எடுத்துக்கொண்டு துல்லியமாக பலன்களைக் கணிக்கலாம் என்றெல்லாம் விவரமாக விளக்கி இருக்கிறார் நூல் ஆசிரியர். சக்தி விகடனில் தொடராக வந்து வாசகர்களின் பாராட்டைப் பெற்ற கட்டுரைகள் இப்போது நூல் வடிவில் உங்கள் கைகளில் தவழ்கிறது.
RS. 140 More...by கே.நிறைமதி அழகன்
மனிதன் அதிகம் யாசிப்பது நிம்மதி என்ற பெரும்பேற்றைத்தான். அதற்காக மனிதன் நோக்கிச் செல்லும் மார்க்கம் அவனுக்கு பெருவாழ்வை அளிக்கிறதா? மதங்களைக் கடந்த மரணமில்லா பெருவாழ்வு பெற வேண்டுமா? அத்தகைய பெருவாழ்வு சாத்தியம் என்கிறது மெய்வழிச்சாலை. புதுக்கோட்டையில் இருந்து விராலிமலை செல்லும் வழியில் இருக்கும் அன்னவாசல் கிராமத்தில் இருந்து வடக்கே 5 கி.மீ-ல் இருக்கிறது இந்த மெய்வழிச்சாலை. இந்த மெய்வழிச்சாலை என்பது மதமா? ஆம், இது எம்மதமும் சம்மதம் எனும் ஒரு மார்க்கம். திரு. காதர் பாட்சா என்பவர் 1922-ல் ஆரம்பித்த மார்க்கம் இது. பல சமய நெறிகளைப் பின்பற்றி, உருவ வழிபாட்டை மறுக்கிறது மெய்வழிச்சாலை. ஐந்து வேளை இறைவனை கும்பிடுதல் அல்லது தொழுதல் இங்கு நடக்கிறது. தலையில் தலைப்பாகை கட்டிக்கொள்வது, பஞ்சகச்சம் அணிந்து கொள்வது, பெண்கள் தலையில் முக்காடு போட்டுக்கொள்வது போன்ற சமய சடங்குகள் நிறைந்துள்ளன. இந்த மதத்தை தோற்றுவித்த ஸ்தாபகரை ‘சாலை ஆண்டவர்’ என மெய்வழி அன்பர்கள் அழைக்கிறார்கள். இவருக்கு பல அதீத சக்திகள் நிறைந்திருந்ததாக நூல் ஆசிரியர் குறிப்பிடுகிறார். பல்வேறு அதிசயங்களைச் செய்த சாலை ஆண்டவர் பிறப்பால் இஸ்லாமியராக இருந்தாலும் இவர் ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற திருமூலரின் தத்துவத்தை மக்களுக்கு உணர்த்தியவர். ஜீவசமாதி அடைந்த இவரை பின்பற்றுபவர்கள் மெய்வழிச்சாலையை வழிநடத்துகிறார்கள். மெய்வழிச் சாலை சடங்குகளும், சம்பிரதாயங்களும் புதிராகவே உள்ளன என்று சொல்பவருக்கு இந்த நூலில் விளக்கம் சொல்கிறார் நூலாசிரியர் கே. நிறைமதி அழகன். மெய்வழிச் சாலையின் தகவல்களை அறிந்து கொள்ள... பக்கத்தைப் புரட்டுங்கள்.
RS. 60 More...by பொன்.காசிராஜன்
பயணம் என்பது பயனுள்ளதாக இருக்க வேண்டும். அது சுற்றுலாப் பயணமாக இருந்தாலும் சரி; ஆன்மிகப் பயணமாக இருந்தாலும் சரி. அந்த வகையில் இந்த நூல் இரண்டு வகைப் பயணங்களிலும் அடங்கும். இமயமலைத் தொடரில் உள்ள ஒரு மலை முடிதான் கயிலாயம். திபெத் நாட்டில் உள்ள இந்த மலையை இந்துக்கள் மட்டுமல்லாது பிற சமயத்தினரும் புனிதமாகக் கருதி யாத்திரையை மேற்கொள்கின்றனர். அரசாங்கமும் தனியாரும் இந்த யாத்திரை செல்வதற்கு பல்வேறு ஏற்பாடுகளைச் செய்து தருகின்றனர். அவற்றிலுள்ள சாதக பாதகங்களைச் சிறப்பாக எடுத்துக் கூறியிருக்கிறார் நூல் ஆசிரியர் பொன்.காசிராஜன். புகைப்படக் கலைஞரான இவர், இந்த நூலின் மூலம் எழுத்தாளராகவும் உருவெடுத்து இருக்கிறார். யாத்திரை செல்ல நினைப்பவர்களுக்கு கடைப்பிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள், பயணத்துடன் எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்கள், உடல்நிலையைக் காக்க தேவையான மருத்துவக் குறிப்புகள் என்று திருக்கயிலாய யாத்திரை ஆரம்பிப்பதில் இருந்து முடியும்வரை வழித்துணையாக இருந்து நம்முடனே பயணிக்கிறார் நூல் ஆசிரியர். திருக்கயிலாய யாத்திரை ஒருமுறையேனும் சென்றுவிட நம்மைத் தூண்டிவிடுகிறார் என்றால் அது மிகையில்லை. நூலைப் படித்து முடித்தவுடன் நேரில் சென்று தரிசித்த அனுபவத்தை உங்களுக்குத் தருவதுடன் நீங்கள் நேரிலேயே சென்று தரிசிக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் உங்களுக்கு நிச்சயம் ஏற்படுத்தும் என்பது உறுதி.
RS. 67 More...by பி.என்.பரசுராமன்
வாழ்க்கையில் படிப்பதற்கு இரண்டு விதப் புத்தகங்கள் வேண்டும். ஒன்று உழைத்து அலுத்துச் சலித்திருக்கும்போது மனதை லகுவாக்குவதற்காகப் படிக்க வேண்டிய ‘லைட் ரீடிங்’ புத்தகங்கள். சில ‘கூகுள்’ புத்தகங்கள் & அதாவது விஷயங்களைத் தெரிந்துகொள்வதற்கான புத்தகங்கள். ஆழ்ந்து படிக்க வேண்டிய புத்தகங்கள். இரண்டும் அவசியம். இந்தப் புத்தகம் பொழுதைக் கழிப்பதற்கான புத்தகம் அல்ல. இரண்டாவது வகையைச் சேர்ந்தது. பல அரிய பழம் பெரும் புத்தகங்களை அறிமுகப்படுத்தி அதிலுள்ள விஷய ஞானத்தை விவரித்துள்ளார் நூல் ஆசிரியர் பி.என்.பரசுராமன். அண்ணன் - தம்பி - தமக்கை போன்ற உறவு முறைகளுக்கு, நாம் அறிந்த பொதுவான அர்த்தத்துக்கும் மேலாக விளக்கங்கள் கொடுத்து வியக்கவைக்கும் ‘அறப்பளீசுர சதகம்’, வாழ்க்கையில் செய்யாமல் நாம் அசிரத்தையாக இருக்கும் சில செயல்கள் எப்படி சுற்றுச் சூழலுக்கே மாசு விளைவிக்கிறது என்பதை எடுத்துக்கூறும் ‘சிறு பஞ்ச மூலம்’, இவ்வாறு ஒவ்வொரு அறத்தைச் சொல்லும், ‘ஆசாரக் கோவை’, ‘அற நெறிச் சாரம்’, ‘நல்வழி’ போன்ற ஏராளமான நூல்களில் உள்ள விஷயங்களை சில எடுத்துக்காட்டுகளுடன் விவரித்துள்ளார். மிகவும் அரிதான புத்தகங்கள். அனைத்துமே கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு முன் பதிப்பிக்கப்பட்டவை. நூல் கிடைத்த விவரங்களையும், அது பதிப்பிக்கப்பட்ட முறையையும், அதை வெளிக்கொண்டு வர முயற்சி எடுத்தவர்களையும் பற்றி சில விவரங்களையும் எழுதியிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது. ஆழ்ந்து படிக்க வேண்டிய புத்தகமானாலும் சிரமம் தெரியாமலிருக்க ஆங்காங்கே சில லைட் ரீடிங் நிகழ்ச்சிகளும் இருப்பது இந்தப் புத்தகத்தில் வலிமை. சக்தி விகடனில் தொடராக வந்து வாசகர்களின் பாராட்டைப் பெற்ற கட்டுரைகள் இப்போது நூல் வடிவில் உங்கள் கைகளில் தவழ்கிறது. பழம் பெரும் நூல்களில் உள்ள காலாகாலத்துக்கும் பொருந்தும் கருத்துகள், உண்மைகள் உங்களைக் கவரும் என்பது திண்ணம்.
RS. 81 More...by மாதவன்
இந்த மண்ணில் சிலர் தாங்கள் வாழும் வாழ்க்கையால் மகான்களாகின்றனர். அவர்கள் தாங்கள் மகான்கள் என்று என்றுமே கூறிக்கொண்டதில்லை. மக்கள் அவர்கள் வாழும் வாழ்க்கையைக் கூர்ந்து பார்த்து, எடை போட்டு மகான்கள் என்று கொண்டாடுகின்றனர். அப்படிப்பட்ட மகான்களில் காஞ்சி மகாபெரியவருக்கு எப்போதுமே முதலிடம் உண்டு. காஞ்சி மகாபெரியவரின் கருணை மிகுந்த அறிவுரைகள் சிலரது வாழ்க்கையை எப்படி மேம்படுத்தியது என்பதை நூல் ஆசிரியர் மாதவன் இந்த நூலில் வாழ்க்கைக் கதைகளாகக் கூறியிருக்கிறார். மனம் நொந்த நிலையில் அவரைத் தரிசிப்பவர்கள் அவருடைய அருளால் தங்கள் கவலை தீர்ந்து நிம்மதி அடையும் கதைகள் பக்தர்களுக்கு வரப்பிரசாதம். காஞ்சிப் பெரியவர் தன்னிடம் வந்த பக்தர்களின் மனதைப் படிக்கும் வல்லமை பெற்றிருந்தார். அவர் புரிந்த கடுந் தவத்தால் இந்த வல்லமை அவருக்கு வாய்த்தது. இந்த வல்லமையை அவர் ஒருபோதும் சுயநலத்துக்குப் பயன்படுத்தியதில்லை. எந்த ஆசையும் அவரை ஆட்கொள்ளவில்லை. மக்களை நல் வழிப்படுத்துவதற்கும் அவர்களுடைய துன்பத்தைப் போக்குவதற்கும் மட்டுமே இதை அவர் பயன்படுத்தினார். இந்த விஷயங்கள் அனைத்தும் பக்தர்களின் அனுபவங்களின் மூலமாக இந்த நூலிலிருந்து புலனாகின்றன. தீயவர்களையும் அவர் வெறுத்ததோ அவர்களுக்கு தண்டனை அளித்ததோ இல்லை. அவர்களுடைய மனங்களையும் தன் தவ வலிமையால் மாற்றினார். மாற்றியதோடு அல்லாமல் அவர் அவர்களை மன்னித்து, திருந்திய மனிதரைப் போற்றவும் செய்தார். இந்த தெய்வ குணங்கள் எல்லாம் பக்தர்களின் கதைகளிலிருந்து வெளிப்படுகின்றன. பெரிய வாக்கியங்களை எழுதாமல் சின்ன சின்ன வாக்கியங்களில் தனக்கே உரிய எளிய நடையில் இந்தக் கதைகளை நூல் ஆசிரியர் விளக்கியிருப்பது நூலுக்கு மெருகு சேர்க்கிறது.
RS. 70 More...