Cart is Empty
by யோகஸ்ரீ மணிபாரதி
‘வீட்டைக் கட்டிப் பார் கல்யாணம் பண்ணிப் பார்’ என்பார்கள். அந்த அளவு இரண்டுமே, சிரமமான காரியங்களாக அந்த நாட்களில் மட்டுமல்ல, இந்த நாட்களிலும் இருந்து வருகின்றன. என்னதான் வசதிகளுடன் வாடகை வீட்டில் குடியிருந்தாலும் சொந்த வீட்டில் உள்ள சுக அனுபவமே தனிதான். அதனால்தான் இல்லாள், இல்லத்தரசி என்று மனைவியைக் கூறுவார்கள். அத்தனை சிறப்பு வாய்ந்த இல்லம் எல்லோருக்கும் அமைகிறதா என்றால், அமைவதில்லை. அப்படியே அமைந்தாலும், அதில் ஏகப்பட்ட சிக்கல்கள். தொல்லை தராத உள்ளம் கவரும் நல்ல இல்லமாக அமைய வேண்டும் என்றுதான் எல்லோரும் ஆசைப்படுகிறோம். அப்படிப்பட்ட இல்லத்தை அமைப்பது எப்படி என்பதையும், அப்படி அமைந்த இல்லத்தில் நாம் வாழ்வதற்கான ஆன்மிக வழிமுறைகளையும் சிறப்பாக எழுதித் தொகுத்து வழங்கி இருக்கிறார் டாக்டர் யோகஸ்ரீ மணிபாரதி. வீடுகளைக் கட்டும்போது நாம் எத்தகைய வாஸ்து வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை, சின்னச் சின்ன விஷயங்களையும் முத்துகளைக் கோத்ததுபோல் கோவையாக வழங்கி இருப்பது நூலின் சிறப்பு. ஆன்மிக வாழ்வில் நாம் வணங்க வேண்டிய தெய்வங்களையும் அவர்களை வணங்குவதற்குரிய வழிமுறைகள், காரணங்கள் மற்றும் பலன்களை எளிய முறையில் புராணக் கதைகளின் உதாரணங்களோடு தொகுத்து வழங்கி இருப்பது இந்த நூலுக்கு இருக்கும் கூடுதல் சிறப்பு. அந்த விதத்தில் இல்லந்தோறும் இருக்க வேண்டிய நல்ல நூல் இது.
RS. 88 More...by வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன்
‘பிள்ளையார் சுழிபோட்டு எதையும் தொடங்கு’ என்பது எதற்காக? ஆனைமுகத்தானை மனதில் ஏந்தி செயலைத் தொடங்கினால் வெற்றி நிச்சயம் என்பதற்காகத்தானே! அதனால்தான் விநாயகர், முழுமுதற் கடவுள் என்று அழைக்கப்படுகிறார். வித்தியாசமான உருவம் கொண்ட இவரை வணங்கினால் 16 வகை செல்வங்களும் பெற்று சிறப்பாக வாழலாம் என்பது ஐதீகம். இதனால்தான் புராணத்தில் 16 வகையான விநாயகரைப்பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு தலத்திலும் விநாயகர், வன்னி மரத்தடி விநாயகர், முக்குருணி விநாயகர், கன்னி மூல கணபதி, வியாக்ர சக்தி விநாயகர் என விசேஷப் பெயர்களில் அழைக்கப்பட்டு அருள்புரிந்து வருகிறார். தமிழகத் திருக்கோயில்கள் ஒவ்வொன்றிலும் தனிக் கோயில் கொண்டுள்ள விநாயகர் ரூபத்துக்குச் சிறப்புப் பெயர் வருவதற்கு என்ன காரணம்? அவருடைய பெயர்க் காரணத்துக்குப் பின்னால் உள்ள வரலாறுதான் என்ன? ஒவ்வொரு விநாயகர் பெயரிலும் ஒளிந்துள்ள சக்தியும், அவரை வழிபட்டால் உண்டாகும் மகிமையும் என்னென்ன? அத்தனையையும் அருள் மணம் கமழ இந்த நூலில் விவரித்துள்ளார் நூல் ஆசிரியர் வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன். பஞ்சபாண்டவர்கள் வனவாசம் சென்றபோது தங்கள் ஆயுதங்களை வன்னி மரத்தடியில் மறைத்து வைத்ததாகவும், பின்னர் நாடு திரும்பிய போது அந்த ஆயுதங்கள் களவு போகாமல் அப்படியே இருந்ததாகவும் கூறப்படுகிறது. அந்த ஆயுதங்களை விநாயகப் பெருமான் பத்திரமாக காத்துவைத்திருந்தார் என்று சொல்வார்கள். பூமியில் தாழ்வான, மேடான பகுதிகள் உண்டு. ஈசானிய மூலை தாழ்வாக இருப்பதால் அதைச் சமன் செய்யும் வகையில் கன்னி மூலையில் விநாயகர் அமர்ந்திருப்பதாகச் சொல்வார்கள். அந்தக் கன்னி மூல கணபதியை வழிபட்டால் அறிவும், ஆற்றலும் மேம்படும்; தொழில் அபிவிருத்தி ஏற்படும்; நல்ல எண்ணங்கள் உருவாகும். இவ்வாறு சக்தியையும், ஞானத்தையும் பக்தர்களுக்கு அளிக்கும் விநாயகருடைய பெயர் காரணங்களை அறிந்து நாம் பயன்பெற வேண்டாமா? எந்த விநாயகரிடம் வேண்டினால் என்ன சக்தி கிடைக்கும்? இந்தப் புத்தகத்தில் எல்லாம் உள்ளது. சக்தி விகடனில் வந்த கட்டுரைகளின் தொகுப்பே இது. கணநாதனின் கடைக்கண் பார்வை கிடைக்கப் பக்கத்தைப் புரட்டுவோம் வாருங்கள்!
RS. 77 More...by சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்
தேடலும் கேள்விகளும்தான் மனதை தீவிரமான ஆன்மிகப் பாதைக்கு அழைத்துச் செல்கின்றன என்கிறார்கள் பெரியோர்கள். ஆன்மிகம் தொடர்பான கேள்விகளும் சந்தேகங்களும் மிக இயல்பாக நம்மோடு இருக்கின்றன. நாம் எல்லோருமே பதில்களைத் தேடும் மனநிலையில் இருக்கிறோம். இறைவன் எங்கிருப்பான்... யாரெல்லாம் அவனை அறிந்தவர்கள்..? பாவம் _ புண்ணியம், நல்ல நேரம் _ கெட்ட நேரம் என்பதெல்லாம் என்ன..? அன்றாட வாழ்க்கையில் நாம் கடைப்பிடிக்கும் பழக்கவழக்கங்கள் சரிதானா? இதுபோன்ற பல கேள்விகளுக்கு சக்தி விகடன் இதழில் தொடர்ந்து பதிலளித்து வருகிறார் ப்ரம்மஸ்ரீ சேஷாத்ரிநாத சாஸ்திரிகள். ஐயம் போக்கும் விதத்தில் அவர் அளித்துவரும் ஆன்மிக பதில்கள் வாசகர்களை பெரிதும் கவர்ந்து வருகின்றன. இந்த பதில்களின் தொகுப்பு ஏற்கெனவே ஐயம் போக்கும் ஆன்மிகம் என்ற தலைப்பில் இரண்டு பாகங்கள் விகடன் பிரசுரமாக வெளியாகி பரவலான பாராட்டுகளைப் பெற்றிருக்கின்றன. இது அதன் மூன்றாம் பாகம். இந்த நூலிலும் ஆன்மிகம் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு தெளிவான பதில்களை அளித்திருக்கிறார் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள். வாங்கிப் படித்து, பயன்பெறுங்கள்!
RS. 74 More...by சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்
‘எப்படி வேண்டுமானாலும் வாழலாம்’ என்பது விலங்கினங்களுக்குப் பொருத்தமாக இருக்கலாம். ஆனால், ‘இப்படித்தான் வாழவேண்டும்’ என்ற கோட்பாடு மனித இனத்துக்கே உரியது. இந்த உலகில் பிறந்த நாள் முதல் மறையும் நாள் வரை ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டிய வாழ்வியல் நெறிகளை வழங்குபவையே வேதங்கள். மனித வாழ்க்கை சார்ந்த விஷயங்கள் குறித்து தற்கால அறிவியலால் கண்டறியப்பட்டுள்ள அனைத்தும், அப்போதே வேதங்களில் சொல்லப்பட்டுள்ளன என்பதைப் பார்க்கும்போது வியப்பில் ஆழ்கிறோம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் தோன்றிய வேதங்கள், அன்றும் இன்றும் மட்டுமல்ல, என்றென்றும் நமக்கு உறுதுணை என்பதில் சிறிதும் ஐயமில்லை. இத்தகைய சிறப்பு வாய்ந்த வேதங்களை இன்றைய தலைமுறைக்குக் கொண்டு செல்லும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருபவர் ப்ரம்மஸ்ரீ சேஷாத்ரிநாத சாஸ்திரிகள். ‘வேதங்கள் சொல்லும் வாழ்க்கை ரகசியம்!’ என்ற தலைப்பில் சம்ஸ்காரங்களைப் பற்றி சாஸ்திரிகள் எழுதிய தொடர், ‘சக்தி விகட’னில் வெளிவந்தபோது அதற்குக் கிடைத்த மிகப் பெரிய வரவேற்பே, அவரது அளப்பரிய ஞானத்துக்குக் கிடைத்த வெற்றியின் அடையாளம். பண்டைய பாரதத்தின் ஒப்புயர்வற்ற வேதக் கருத்துகளை எளிய முறையில் இத்தனை சுவாரசியமாக விளக்க, இவர் போன்ற பெரியவர்களால்தான் முடியும். ‘வேதங்கள் சொல்லும் வாழ்க்கை ரகசிய’த்தை முழுமையாக அறிந்துகொள்வதோடு நில்லாமல், முடிந்தவரை கடைப்பிடிக்கவும் செய்வீர்கள் என்று நம்புகிறோம்.
RS. 126 More...by பாரதி பாஸ்கர்
மைக் பிடிப்பதும் பேனா பிடிப்பதும் பாரதி பாஸ்கருக்கு கைவந்த கலையாகிவிட்டது. பட்டிமன்றப் பேச்சில் நமக்கான நம்பிக்கையாக - ஆறுதலாக ஆத்மார்த்தமான வாதங்களை வைத்து கைத்தட்டல் பெறும் பாரதி பாஸ்கர், தன் வாழ்வியல் பகிர்வாக & பிறர் வாழ வேண்டிய பக்குவமாக ஆன்மிகத்தின் வழிநின்று சொல்லும் பாடங்களே இந்த நூல். நம் நெஞ்சத்துள் நன்னெறிக்கான பாதை போடும் பணியை பாரதி பாஸ்கரின் எழுத்துகள் செவ்வனே செய்திருக்கின்றன. வங்கியில் உயர் அதிகாரியாக இருக்கும் பாரதி பாஸ்கர், ‘சிறகை விரி, பற!’ எனும் இந்த நூலில் புராண, இதிகாசங்களில் வரும் சம்பவங்கள், மன்னர்கள் காலத்தில் நடந்த வரலாற்று நிகழ்வுகள், சிறு வயதில் தான் உற்று, உணர்ந்த பக்தி அனுபவங்கள், படித்த, தனக்கு ஏற்பட்ட அனுபவங்களோடு அன்றாடம் நடக்கும் இன்றைய நிகழ்வுகளையும் ஒப்பிட்டு மிக அற்புதமான விஷயங்களைத் தோரணமாகப் படைத்திருக்கிறார். குறிப்பாக அனுமன் ராமனிடம் ‘கண்டேன் சீதையை’ எனச் சொன்னது, ஔவையார் வாழ்த்தும்போது ‘வரப்புயர’ என வாழ்த்தியது, மனுநீதிச் சோழன் நீதி கேட்ட பசுவுக்காகத் தன் மகனைத் தேர்க்காலில் இட்டது, கண்ணதாசன் கம்பன் விழாவுக்குத் தாமதமாக வந்தது, செல்போன் பேசிக்கொண்டே பேருந்தைக் கவிழ்த்த இன்றைய நிகழ்வு வரை பாரதி பாஸ்கரின் பார்வையும் பதிவும் அதியற்புதம்! எல்லாவற்றுக்கும் ஹைலைட்டாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த நூலுக்குக் கொடுத்திருக்கும் வாழ்த்துரை மகத்தானது. அவ்வளவு சீக்கிரத்தில் யாருக்கும் வாழ்த்துரை வழங்காத ரஜினிகாந்த், இந்த நூலின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு இதயம் திறந்து பாராட்டி இருக்கிறார். இந்த நூலின் அற்புதத்தைச் சொல்ல ரஜினியின் பாராட்டே போதுமானது. பட்டிமன்றப் பேச்சாளர் ராஜாவின் அணிந்துரை இந்த நூலுக்குக் கூடுதல் அழகு! விகடன் பிரசுரத்தில் இருந்து வெளியாகும் பாரதி பாஸ்கரின் இரண்டாவது நூல் இது. காற்றின் போக்கில் மிதக்கும் பறவையின் இறகாக எல்லோருடைய மனதையும் ஈர்க்கக்கூடிய பாரதி பாஸ்கரின் எழுத்து நடை, இன்னும் பல நூல்களை வாசக உலகுக்கு வழங்கட்டும்!
RS. 56 More...by எஸ்.ராஜகுமாரன்
இந்தியாவின் ஆதி மருத்துவம் சித்த வைத்தியம், ஆதி மருத்துவன் சித்தன். மலைகள் இருக்கும் இடமெல்லாம் சித்தர்கள் வசித்தார்கள். சித்தத்தை அடக்கியவர்கள் மட்டும் அல்ல; இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்து, இயற்கையை முற்றிலும் அறிந்தவர்களே சித்தர்கள். மலைகள் இறைவன் உறையும் இல்லங்கள் என்கின்றனர் மெய்யறிவாளர்கள். அவை இயற்கை தந்த கொடைகள். பல அரிய மூலிகைச் செடிகளையும் மரங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள மலைகளில், ஆதிச்சித்தன் சிவனின் அடியார்களாக வலம் வந்த சித்தர்கள், மூலிகைகளைக் கொண்டு பல மருத்துவ மகிமைகளைச் செய்துள்ளனர். தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற மலைகளில் சித்தர்கள் இன்றும் அரூபமாக வாழ்ந்துகொண்டு பல அமானுஷ்ய செயல்களை செய்துவருவதாக நம்பப்படுகிறது. அந்தச் சித்தர்கள் பற்றிக் கூறும் இந்த நூலில், எந்தெந்த மலையில் எந்த சித்தர் சமாதி அடைந்தார், அவர் செய்த அமானுஷ்யங்கள் பற்றியும், சித்தர்கள் உறையும் மலைகளின் சிறப்பு பற்றியும் விளக்கி உள்ளார் நூலாசிரியர் எஸ்.ராஜகுமாரன். ‘காடே திரிந்தென்ன, கந்தையே உடுத்தென்ன, ஓடே எடுத்தென்ன' என்று ஓரிடத்திலும் தங்காமலும் எதனையும் சொந்தமெனக் கொள்ளாமலும் வாழ்ந்த சித்தர்கள் மூடப்பழக்கங்களையும் விட்டொழிக்கச் சொன்னவர்கள். அப்படிப்பட்ட சித்தர்களைப் பற்றி அறிந்துகொள்ள இந்த நூல் ஆகச் சிறந்ததாகும்!
RS. 98 More...by எஸ்.கண்ணன் கோபாலன்
தமிழகத்தின் மிகப்பெரிய கலாச்சார உதாரணம் கோயில்கள்தான். ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் தமிழகத்தின் தொன்மையையும் கலை நயத்தையும், பாருக்குப் பறைசாற்றிக்கொண்டு நிற்கிறது தஞ்சை பெரிய கோயில். அதைப்போல இன்னும் பல கோயில்கள் நம் பாரம்பர்யத்தை சொல்லிக்கொண்டிருக்கின்றன. மன்னர் ஆட்சிக் காலத்தில் கோயில் கோபுரத்தைவிட வேறு எந்தக் கோபுரமும் உயரமாக இருக்கக் கூடாது என்று ஓர் எழுதப்படாத சட்டமே இருந்தது. மனக்கவலை, குழப்பம் இருந்தால் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு கோயில் வளாகத்துக்குள்ளேயே சிறிது நேரம் அமர்ந்திருந்தால் கவலை எல்லாம் அகன்று, மனதில் ஒரு புத்துணர்ச்சி தோன்றும். அதனால்தான் ‘ஆலயம் தொழுவது சாலவும் நன்று' என்றும், ‘கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்றும் ‘கோபுர தரிசனம் கோடி புண்ணியம்' என்றும் சொல்லிவைத்துள்ளனர் நம் முன்னோர். அப்படிப்பட்ட பாரம்பர்யம் கொண்ட கோயில்களின் தனிச் சிறப்புகளைப் பற்றிப் பேசுகிறது இந்த நூல். மகரிஷிகள் வழிபட்ட திருத்தலங்கள், மகான்களின் திருவடிகள் பதிந்த ஆலயங்கள், மன்னர்கள் எழுப்பி பாதுகாத்த கோயில்கள் என ஒவ்வொரு கோயிலின் வரலாற்றையும், அந்தக் கோயிலில் எழுந்தருளிய இறைவனின் புராணத்தையும் விளக்குகிறார் நூலாசிரியர். இறைவனை வழிபடும் கோயில்களின் புனித வரலாறு நமக்குத் தெரிந்திருக்க வேண்டியது அவசியம். தமிழ்நாட்டில் உள்ள பாரம்பர்யக் கோயில்களைப் பற்றி நாமும் நம் சந்ததியினரும் தெரிந்துகொள்ள இந்த நூல் உதவும். ஓர் ஆன்மிகப் பயணம் மேற்கொண்ட அனுபவத்தைப் பெற, அடுத்தடுத்த பக்கங்களைப் புரட்டுங்கள்!
RS. 291 More...by சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்
ஜோதிடம் என்பது எதிர்காலத்தில் நிகழப்போவதை அப்படியே முக்காலமும் உணர்த்துவது அல்ல என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அதே சமயம், ஜோசியம் முழுவதுமே சுத்த ‘ஹம்பக்’ என்று ஒதுக்கித்தள்ளிவிடவும் கூடாது. நம்மிடம் ஓர் அடிப்படைத் தெளிவு இல்லாமல், ஜோதிடத்தை மேம்போக்காகக் கணிப்பவர்களை நம்புவதாலும், ஒரேயடியாக நம்பாமல் இருப்பதாலும்தான்... துன்பம் வரும்போது நிலைகொள்ளாமல் தவிப்பதும், திடீரென்று செல்வம் வரும்போது என்ன செய்வது என்று தெரியாமல் முழி பிதுங்குவதுமான நிலை நமக்கு ஏற்படுகிறது. ஜோதிடத்தை எந்த நிலையில் வைப்பது, எப்படிக் கையாள்வது என்பதை சேஷாத்ரிநாத சாஸ்திரிகள் இந்த நூலில் அருமையாக விளக்கியிருக்கிறார். ஜோதிடம் என்பது எது நிகழப்போகிறது என்பதை குறி சொல்வதல்ல. ஒருவரின் வாழ்க்கையில் அந்தந்தக் காலகட்டத்தில் கிரகங்கள், நட்சத்திரங்கள், ராசிகள் அனைத்தும் எப்படி இருக்கின்றன என்பதைப் பொறுத்து அவருடைய சூழ்நிலைகளைக் கணிக்கும் கணக்கு. இந்தக் கணிப்பைக் கொண்டு, சில இடர்களை வருமுன் காத்துக்கொள்ளலாமே தவிர, கிரக நிலைகளை மாற்றி அமைக்க முடியாது. நீண்ட தொலைவு ரயில் பயணம் செய்யும்போது சில நேரங்களில் இடர்கள் ஏற்பட்டால் மாற்று வழியில் பயணத்தைத் தொடர்வதைப் போல, நம் வாழ்க்கையில் சில இடர்களை சமயோசிதமாக ஜோதிட உதவியோடு கடந்துவிடலாம். கிரகம், நட்சத்திரம், ராசி ஆகியவை ஒன்றுடன் ஒன்று சேரும்போது ஆயிரக்கணக்கான பலன்கள் எப்படி விளைகின்றன; அவற்றைக் கணித்து ஒருவர் வாழ்க்கையில் எப்படித் துல்லியமாகப் பலன்களைச் சொல்லலாம், தொலைக்காட்சியில் சொல்லும் வார பலன்கள் ஏன் சிலருக்குப் பொருத்தமாகவும் வேறு சிலருக்குப் பொருத்தமில்லாததாகவும் இருக்கின்றன; ஆகவே, எதையெல்லாம் தவிர்க்காமல் கணக்கில் எடுத்துக்கொண்டு துல்லியமாக பலன்களைக் கணிக்கலாம் என்றெல்லாம் விவரமாக விளக்கி இருக்கிறார் நூல் ஆசிரியர். சக்தி விகடனில் தொடராக வந்து வாசகர்களின் பாராட்டைப் பெற்ற கட்டுரைகள் இப்போது நூல் வடிவில் உங்கள் கைகளில் தவழ்கிறது.
RS. 140 More...by சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்
மனிதனின் பரிணாம வளர்ச்சியில் அறிவுத் தேடல் முக்கிய இடத்தை வகிக்கிறது. மனிதனுக்குள் துளிர் விடும் சந்தேகங்கள்தான், வாழ்க்கையை வழிநடத்திச் செல்ல துணை புரிகிறது என்பதை சான்றோர் அனைவரும் அறிவர். வேதங்கள், புராணங்கள், சடங்குகள், சம்பிரதாயங்கள், வழிபாடு, சாஸ்திரத்தின் பின்னணி, வீட்டு விசேஷத்துக்கான வழிமுறைகள்... போன்றவற்றில் எழும் சந்தேகங்களுக்கு உரிய பதிலை நாமே தேடும்போதுதான் அறிவு தெளிவு பெறும். ‘ஓம்’ எனும் பிரணவ மந்திரத்தின் அர்த்தம் என்ன? கர்ம யோகம், ஞான யோகம் இரண்டில் எது சிறந்தது? மனிதனின் உடலில் அவனது உயிர் எங்கே ஒளிந்து இருக்கிறது? மறுபிறவி என்பது உண்டா? _ இதுபோன்ற ஆன்மிகம் தொடர்பான கேள்விகளுக்கு இந்த நூலில் பதில் கிடைக்கும். மனதில் எழும் சந்தேகங்களுக்கு, பதில் எங்கு பெறுவது; எப்படி பெறுவது என்று வாசகர்கள் தேடி அலையக்கூடாது என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில், சக்தி விகடன் இதழ்களில் வாசகர்களின் கேள்விகளுக்குத் தெளிவாக பதிலளித்து வருகிறார் ப்ரம்மஸ்ரீ சேஷாத்ரிநாத சாஸ்திரிகள். அப்படி வெளிவந்த கேள்வி_பதில் பகுதியைத் தொகுத்து, ‘ஐயம் போக்கும் ஆன்மிகம்’ எனும் தலைப்பில் ஏற்கெனவே நான்கு பாகங்கள் விகடன் பிரசுரத்தில் வெளியாகி, வாசகர்களிடம் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளன. இது ஐந்தாவது பாகம். இந்தத் தொகுப்பும் ஆன்மிக வாசகர்களின் அறிவுத் தேடலுக்கு உறுதுணையாக இருக்கும் என நம்புகிறோம்!
RS. 74 More...by இராஜா ஆதிபரஞ்ஜோதி
தத்துவத்தின் மெய்யியலை உணர்ந்தவர் ஸ்ரீராமாநுஜர். வேதாந்தத்தின் விளக்கமாக விசிஷ்டாத்வைதத்தை முன்வைத்தவர். இந்திய தேசத்தின் இணையற்ற குருமார்கள் மூவர். ஒருவர் ஆதிசங்கரர். மற்றவர் மத்வர். மூன்றாமாவர், பிரம்ம சூத்திரத்திற்கு உரை எழுதிய தத்துவவாதி ஸ்ரீராமாநுஜர். தமிழ்நெறியை வளர்த்து போற்றிய ஸ்ரீராமாநுஜர் ஒரு சீர்திருத்தவாதி. திருவரங்கம் ரங்கநாத பெருமாள் கோயிலின் நிர்வாகத்தை ஏற்று சீர்திருத்தினார். பள்ளிகொண்ட நாதனுக்கு அன்றாடம் நடக்க வேண்டிய பூஜைகளை ஒழுங்குபடுத்தினார். அப்போது அவருக்கு எதிர்ப்பு உண்டானது. ஆண்டாண்டு காலமாக செய்யப்பட்டு வரும் முறையில் மாற்றம் கொண்டுவந்தால், பழைமைவாதிகள் உடனே ஏற்பார்களா என்ன? ஸ்ரீராமாநுஜரை கொல்லும் முயற்சிகள் நடந்தன. அனைத்தையும் வென்று புதிய நெறிமுறைகளை உருவாக்கி வைணவத்தை காத்தவர் ஸ்ரீராமாநுஜர். அரங்கன் கோயில் மட்டுமின்றி திருமலை திருவேங்கடவன் கோயிலுக்குச் சென்று அங்கும் திருக்கோயில் நிர்வாகத்தை முறைப்படுத்தி இன்றளவும் அவரது ஏற்பாட்டின்படியே அனைத்து பூஜைகளும் ஏழுமலையானுக்கு நடைபெற்று வருகிறது. கோயில் நிர்வாகத்தையும், வைணவ மட நிர்வாகத்தையும் ஒருங்கே கவனித்து, திருவரங்கனின் அருளைப் பெற்று திருவரங்கனால்் ‘நம் உடையவர்’ என அழைக்கப்பட்டார். ஆத்திகர்களும், நாத்திகர்களும் கொண்டாடும் சீர்திருத்தவாதியாகக ஸ்ரீராமாநுஜர் ஆனது எப்படி? சாதி மதங்களை எதிர்த்த ஸ்ரீராமாநுஜர் வாழ்வு எப்படிப்பட்டது? நாம் அவரிடமிருந்து கற்க வேண்டியது என்ன? அத்தனையையும் இந்த நூலில் அழகுறச் சொல்லியுள்ளார் நூலாசிரியர் இராஜா ஆதிபரஞ்ஜோதி. ஆயிரமாவது ஆண்டை நெருங்கும் இந்தத் தருணத்தில் அந்த மகானின் வாழ்க்கையை அறிவதே ஆனந்தம்தானே. அற்புதத்தை உணர பக்கத்தைப் புரட்டுங்கள்.
RS. 95 More...