Cart is Empty
by டாக்டர் சங்கர சரவணன்
சுட்டிவிகடன் வருடந்தோறும் க்விஸ் விஸ் நிகழ்ச்சியினை நடத்தி வருகிறது. அதில் கலந்துகொள்ளும் மாணவர்கள், பொது அறிவில் சிறந்து விளங்க வேண்டும். சரித்திரம் தெரிந்து செயல்பட்டால்தான் சரித்திரம் படைக்கமுடியும் என்பதற்கேற்ப, கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்காக, சுட்டி விகடனில் இணைப்பாக வெளிவந்த தகவல் புத்தகங்களைத் தொகுத்து கையளவு களஞ்சியம் என்ற தலைப்பில் ஒரே புத்தகமாக வெளிவந்துள்ளது. இந்திய வரலாற்றில் சிந்துச் சமவெளி நாகரிகம் தொடங்கி மக்களை ஆட்சி செய்த பேரரசுகள், இந்திய தேசிய இயக்கத்தில் ஈடுபட்ட தலைவர்களின் வரலாறு, பழந்தமிழக வரலாற்றுச் சான்றுகள், தமிழகத்தில் வாழ்ந்த சிறந்த தலைவர்கள், உலக வரலாற்றில் அலெக்ஸாண்டர், நெப்போலியன், ஆப்ரகாம் லிங்கன் வரை இந்நூல் உலக வரலாற்றை ஒரு வரிச் செய்திகளாக விவரிக்கிறது. மேலும், அறிவியல் கண்டுபிடிப்புகள் முதல் மக்கள் வாழ்வில் அறிவியலின் பங்கு வரை, உடல் கூறுகளின் இயக்கம் முதல் மருத்துவ கண்டுபிடிப்புகள் வரை, சங்க இலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரை, விளையாட்டுத் துறையின் சாதனையாளர்கள் முதல் ஒவ்வொரு விளையாட்டு பற்றிய அடிப்படைத் தகவல்கள் வரை, உலக நாடுகளின் அரசிய
RS. 200 More...by மதன்
அறிவுக்கு விருந்தாக, சிந்தனைக்குத் தெளிவாக, ஆனந்த விகடன் இதழ்களில் வெற்றி பவனி வரும் ‘ஹாய் மதன்’ கேள்வி_பதில் பகுதியை, பள்ளி_கல்லூரி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பு வாசகர்களும் படித்துப் பாராட்டி வருகிறார்கள். நவீன உலகத்து நாகரிகம், விஞ்ஞானம், சினிமா போன்ற விஷயங்களை விவரிப்பது மட்டுமல்லாமல், பண்டைய காலத்து கலை, கலாசாரம், வரலாறு என அனைத்துத் துறை சார்ந்த கேள்விகளுக்கு தன் கண்ணோட்டத்தில் மதன் பதில் அளிக்கும் அழகும், மனிதர்கள், விலங்குகள், பறவைகள், பூச்சிகள் என அனைத்து உயிரினங்களின் இயல்புகளை தனது எண்ணங்களில் கோத்து எழுதும் நேர்த்தியும் உண்மையிலேயே வாசகர்களின் அறிவுக்கு விருந்துதான்! ‘வாக்குறுதி தர ரொம்ப யோசிக்கிறவர்கள்தான் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவார்கள்!’ ‘சிறந்த மனிதனின் மனதில் ஓடுவது லட்சியங்கள். சாதாரண மனிதனின் மனதில் ஓடுவது ஆசைகள்!’ ‘விரோதிகளை ஒழித்துக் கட்ட சுலபமான ஒரு வழி _ அவர்களை நண்பர்களாக்கிக் கொண்டுவிடுங்கள்!’ _ இப்படி, சிந்தனைத் தெளிவு தரும் பதில்களும் ‘ஹாய் மத’னின் பலம்! ‘எனக்குப் பிடித்த அழகான சுற்றுலா தளம் _ புத்தகக் கடைகள்தான்’ என்று சொல்லும்
RS. 63 More...by ஸ்ரீநிவாஸ் பிரபு
“அடடே..! எல்லா கேள்வியும் தெரிஞ்ச கேள்விங்கதான்; ஆனா, அதுக்கெல்லாம் நான் தேர்தெடுத்திருக்கும் பதில்தான் சரியான்னு தெரியல!” - இதுதான் இன்றைய மாணவர்கள் மற்றும் இளைய சமுதாயத்தினரின் கல்வி நிலை. சுழன்றுகொண்டு இருக்கும் உலகில், நாமும் தினம் தினம் ஓடிக்கொண்டுதான் இருக்கிறோம். அப்படி ஓடுபவர்களின் வெற்றி இலக்கு என்ன, நல்லதொரு பணி; அதுவும் அரசுப் பணி. இதற்கான நுழைவுத் தேர்வில் வெற்றி பெற நெக்குருகிப் படித்தாலும், ‘முடிவில் பாஸா... ஃபெயிலா? அதைச் சொல்லு’ என்பதுதான் இன்றைய சமுதாயத்தின் அதிவிரைவான எதிர்பார்ப்பு. இதை எதிர்கொள்ளும் வகையில், போட்டித் தேர்வு என்றால் என்ன, எந்தெந்தத் துறை எப்படியெல்லாம் போட்டித் தேர்வை நடத்துகின்றது, தேர்வை சந்திக்கும் முன்பு நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை எவை, எந்தெந்தப் பாடப் பிரிவின் கீழ் இந்தப் போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன என்கிற விவரங்களின் தொகுப்புதான் இந்த நூல். மேலும், பல்வேறு தேர்வுக் குறிப்புகளுடன், போட்டித் தேர்வை GENERAL INTELLIGENCE, GENERAL LANGUAGE, NUMERICAL ABILITY, GENERAL KNOWLEDGE என, நான்கு பிரிவுகளாகப் பிரித்து அது அதற்கான விடைகளையும் கொடுத்து, உங்களைப் பயிற்சிக் களத்திலும் இறக்கியுள்ளார் நூலாசிரியர். அனைத்துத் துறை வேலை வாய்ப்புகளுக்கும் போட்டித் தேர்வுகள், நுழைவுத் தேர்வுகள், தகுதித் தேர்வுகள் போன்றவை கட்டாயமாக்கப்பட்டுள்ளன. போட்டித் தேர்வு பாடத் திட்டம் தொடர்பான நுணுக்கமான சில பயிற்சிகளைக் கற்றுக்கொண்டாலே வெற்றி நம்மை தொற்றிக்கொள்ளும். முடிந்தவரை முயற்சிப்பதைவிட, முடிக்கும்வரை முயற்சிப்பதே சிறப்பு!
RS. 88 More...by சி.கலா சின்னத்துரை
“அரசுப் பணியையே வாழ்க்கை இலக்காகக் கொண்ட இளைய தலைமுறையினர், மிகுந்த தேடுதலோடும் விடாமுயற்சியோடும் படிக்க வேண்டும். தேர்வு ஆணையத் தேர்வுகள் எந்தவிதப் பாரபட்சமும் இன்றி மிகுந்த கவனத்தோடு நடத்தப்படுவதால், உரிய முயற்சியும் பயிற்சியும் இருந்தால் அரசுப் பணி நிச்சயம் உங்கள் கைவசமாகும்!” & தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்தின் தலைவர் நவநீதகிருஷ்ணன் வார்த்திருக்கும் நம்பிக்கை இது. பல்லாயிரக்கணக்கான பணியிடங்களைப் போட்டித் தேர்வுகள் மூலமாகவே நிரப்ப இருக்கிறது அரசு. அரசுப் பணியை லட்சியக் கனவாகக் கொண்ட இளைய தலைமுறையினர் போட்டித் தேர்வுகளில் வெல்வதற்காக பலவிதங்களிலும் போராடுகிறார்கள். விதவிதமான பயிற்சிப் புத்தகங்களைத் தேடிப்பிடித்துப் படிக்கிறார்கள். ஆனாலும், ‘‘நாங்கள் படித்த புத்தகங்களில் இருந்து சில கேள்விகள் மட்டுமே கேட்கப்பட்டன... அதனால், தேர்வை சரியாக எழுத முடியவில்லை!” என ஏமாற்றத்தோடு பலரும் வேதனைப்படுகிறார்கள். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராக சரியான திட்டமிடலே முக்கியம். எல்லாவற்றையும் கற்றறிவது நல்லதுதான். ஆனாலும், போட்டித் தேர்வுகளில் எத்தகைய கேள்விகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது, தொடர்ந்து கேட்கப்படும் கேள்விகள் எவை, கேட்பதற்கான சாத்தியம் மிகுந்த கேள்விகள் எவை, தேர்வுக் குழுவால் கவனிக்கப்படும் விஷயங்கள் எவை, எத்தகைய பாடங்களில் இருந்து தேர்வுக் குழு அதிகக் கேள்விகளைத் தேர்ந்தெடுக்கிறது என்ற விவரங்களை எல்லாம் அலசி ஆராய்ந்து, அதன்படியான தேடுதலோடு படிப்பதே போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள சரியான அணுகுமுறையாக இருக்கும். சமீபத்திய போட்டித் தேர்வுகள் பலவற்றையும் கூர்ந்து பார்க்கையில் அரசுப் பாடத் திட்டங்களில் இருந்தே அதிகக் கேள்விகள் கேட்கப்படுகின்றன. குறிப்பாக 6&ம் வகுப்பில் இருந்து 12&ம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்களில் இருந்து நிறைய கேள்விகள் கேட்கப்படுகின்றன. அடுத்தடுத்து வரும் தேர்வுகளிலும் பாடத்திட்ட அடிப்படையிலான கேள்விகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என அரசுத் தேர்வு ஆணையம் அறிவித்து உள்ளது. அதன்படி அறிவியல் பாடத்தின் அத்தனை விதமான கேள்வி வாய்ப்புகளையும் கண்டறிந்து அதன் அடிப்படையில் இந்த நூல் உருவாக்கப்பட்டு உள்ளது. அறிவியல் பிரிவில் பாடவாரியாகக் கேள்விகளை மிக எளிதாகப் பிரித்துக் கொடுத்து, அதற்கான பதில்களையும் தொகுத்திருப்பது இந்த நூலின் தனிச்சிறப்பு. ஒரே விஷயத்தை எப்படி எல்லாம் விதவிதமாக மாற்றி கேள்வியாக்குவார்கள் என்பதையும் உதாரண வடிவில் இந்த நூல் விளக்குகிறது. தேர்வு நுட்பம் அறிந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வினா & விடைகளும், பயிற்சித்தாள்களும் கொண்ட இந்த நூல் TNPSC - GROUP II, GROUP IV, UPSC-CSE, TET, VAO உள்ளிட்ட எல்லாவிதமான போட்டித் தேர்வுகளுக்கும் மிக எளிமையான வழிகாட்டியாக விளங்கும் என்பது நிச்சயம்!
RS. 133 More...by மதன்
ஆனந்த விகடன் இதழ்களில் அறிவுக் களஞ்சியமாக, வெற்றிகரமாக பவனி வரும் ‘ஹாய் மதன்’ கேள்வி_பதில் பகுதி, பள்ளி_கல்லூரி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பு வாசகர்களையும் கவர்ந்து வருகிறது. வரலாறு படைத்தவர்களை மதன் தன் கண்ணோட்டத்தில் பாராட்டும் அழகும், விஞ்ஞான கண்டுபிடிப்புகளை அவர் கௌரவிக்கும் நேர்த்தியும், கிண்டலும் கேலியும் தொனிக்கும் கேள்விகளுக்கு அவர் அசராமல் விளாசித்தள்ளும் நகைச்சுவையான பதிலும்... படிக்கப் படிக்க திகட்டாதவை! மதன் தன் பரணில்கூட பல புத்தகங்களைத் தேடி, படித்து, அலசி, ஆராய்ந்து, அள்ளி வழங்கும் பதில்கள் சுவையாகவும் அறிவுபூர்வமாகவும் மனதைக் கவருவதால்தான், அதைப் படிக்கும் வாசகர்களும் உந்துசக்தி பெற்று நிறைய கேள்விகளை ஆர்வத்துடன் எழுதி அனுப்பிக் கொண்டு இருக்கிறார்கள். ‘கேட்கப்படாத கேள்விதான் விடை தெரியாத பதில்’ என்று சொல்லும் அளவுக்கு, சூரியனுக்குக் கீழே உள்ள அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள வாசகர்கள் காட்டும் ஆர்வம், அமோகமாக விற்பனையாகும் ‘ஹாய் மதன்’ புத்தக வரிசையில் தெரிகிறது! இது 7வது தொகுப்பு. ஆனந்த விகடனில் நவம்பர் 2008 முதல் அக்டோபர் 2009 வரை வெளியான கேள்
RS. 67 More...by எம்.நிர்மல்
கை நிறைய சம்பளம், வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பு, முன்னேறுவதற்கான வழிகள் இருப்பதால்தான் இன்ஜினீயரிங் படிப்புக்கு இத்தனை டிமாண்ட்! இன்ஜினீயரிங் படிக்கும் மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பது இன்டர்வியூதான், அதுவும் குறிப்பாக கேம்பஸ் இன்டர்வியூ! நேர்முகத் தேர்வில் எப்படி பதில் சொல்லவேண்டும், எப்படி நடந்துகொள்ள வேண்டும், பன்னாட்டு நிறுவனங்கள் ஒரு மாணவனிடம் என்ன எதிர்பார்க்கின்றன, எப்படிப்பட்ட தகுதிகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்கான முழுமையான பதில் இந்தப் புத்தகத்தில் இருக்கிறது. ‘ஒவ்வொரு பொறியியல் மாணவனும் ஒரு விற்பனைப் பொருள். அவனை வாங்குவதற்காகத்தான் இன்டர்வியூ நடத்துகின்றன பன்னாட்டு நிறுவனங்கள். அவனிடம் எப்படிப்பட்ட தகுதிகள், திறமைகள் ஒளிந்து இருக்கின்றன என்பதை அவன்தான் எடுத்துச் சொல்லவேண்டும். தான் ஒரு திறமைசாலி, நேரம் காலம் பார்க்காமல் உழைக்கக் கூடியவன், குழுவினரோடு இணைந்து வேலை பார்க்க விரும்புபவன், சொல்லித் தருவதை உடனே கற்றுக் கொள்பவன் என்றெல்லாம் மிகத் தெளிவாக வெளிப்படுத்தும் மாணவரை உடனே வேலைக்கு எடுத்துக் கொள்வார்கள்’ என்று இந்தப் புத்தகத்தை ஒரு மேனேஜ்மென்ட் வடிவில் எழுதி வழி காட்டி இருக்கிறார், நூலாசிரியர் எம்.நிர்மல். இன்டர்வியூவின் வடிவம் முதல் அதனை வெற்றி கொள்வது வரையிலும் முழுமையான தகவல்கள் இந்த நூலில் உள்ளன. இதனைப் படிப்பவர்களுக்கு, ஒரு தேர்ந்த வழிகாட்டியின் கையைப் பிடித்துக்கொண்டு இன்டர்வியூ சென்றுவந்த அனுபவம் கிடைக்கும். அதனால், வேலை பெறவேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கும் மாணவர்களுக்கு வெற்றி நிச்சயம்!
RS. 63 More...by விகடன் பிரசுரம்
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆனந்த விகடன், கடந்த எண்பத்து ஐந்து ஆண்டுகளாக ஆற்றி வரும் பணியைப் பற்றி வாசகர்களுக்குத் தனியாகச் சொல்லத் தேவையில்லை. நம் பாரதம் ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த காலம்தொட்டு, சுதந்திர தேசத்தின் இன்றைய ஆட்சி முறை வரையில் தயங்காமல் விமரிசனங்களை வெளியிட்டு வருகிறது விகடன். மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபபாய் பட்டேல், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் என இந்தியச் சுதந்திரத் துக்காகப் பாடுபட்ட தலைவர்களைப் பற்றியும், அவர்களின் சுதந்திரப் போராட்ட நடவடிக்கைகள் பற்றியும் விரிவான கட்டுரைகள் வெளியிட்டு, மக்களிடம் சுதந்திர வேட்கையைப் பரப்பியதில் ஆனந்த விகடனுக்கு முக்கியப் பங்கு உண்டு. பிரிட்டிஷாரை எதிர்த்துக் கார்ட்டூன்களும் தலையங்கங்களும் துணிந்து வெளியிட்டு, அவர்களின் ஒடுக்குதல் நடவடிக்கையை எதிர்த்துப் போராடிய சந்தர்ப்பங்களும் மறக்க இயலாதவை. கசந்து வடியும் பல உண்மைகளைக்கூட நகைச்சுவைத் தேன் தடவிக் கொடுப்பதன் மூலம்... சிரித்துக்கொண்டே ஜனங்களைச் சிந்திக்கச் செய்வது விகடனுக்கே உரிய பாணி! 'எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே’ என்ற தனது கொள்கையிலிருந்து இம்மியும் வழுவாமல்... அரசாங்கம், அதிகார அமைப்புகள், ஆன்மிகம், இலக்கியம், ஓவியம், இசை, நடனம், திரைப்படம் என சமுதாயத்தின் அத்தனை அம்சங்களிலும்... அந்தந்த காலகட்டத்தைப் பிரதிபலிக்கும் வகையில் சுவாரஸ்யமான செய்தி விருந்து அளித்து வந்திருக்கிறான் விகடன். ஆனந்த விகடன் பிறந்த 1926-ம் ஆண்டு தொடங்கி, 2000-ம் ஆண்டு வரையிலான 75 ஆண்டு கால விகடனின் விறுவிறுப்பான பதிவுகள்தான் 'ஆனந்த விகடன் காலப் பெட்டகம்’ என்கிற நூலாக உங்கள் கையில் கம்பீரமாக மின்னிக்கொண்டு இருக்கிறது. ஆழ்கடலில் முத்தாக அனைத்துத் தகவல்களையும் தேர்ந்தெடுத்து, அழகாகத் தொகுத்திருப்பவர்கள் ரவிபிரகாஷ், ராஜா. பக்கங்கள் புரளப் புரள... நம் தேசத்தின் கடந்த கால சரித்திரத்தை, நிகழ்காலத்தில் நின்றபடியே அணுஅணுவாகச் சுவைக்கப் போகிறீர்கள். அந்த வகையில், இந்தக் காலப் பெட்டகம் என்னும் பொக்கிஷத்துக்கு உங்கள் வீட்டு நூலகத்தில் நிரந்தரமான ஓர் இடம் நிச்சயம் உண்டு!
RS. 140 More...by டாக்டர் க.விஜயகார்த்திகேயன், ஐ.ஏ.எஸ்.
சாதி மத இன பேதமின்றி அனைவராலும் கொண்டாடப்படுபவர்கள் சாதனையாளர்கள். சாதித்துக் காட்டுபவர்களை உலகம் தன்னகத்தே அணைத்துக் கொள்ளும். அத்தகைய செயற்கருஞ் செயல்களை எப்படிச் செய்ய முடியும்? உங்கள் கையில் அரசின் அதிகாரம் இருந்தால்... எதையும் சாதிக்க முடியும். ஏழைகளின் கண்ணீரைத் துடைக்கவேண்டும், எளியோருக்கு நல்ல வாழ்வு கிடைக்க வேண்டும் என்று நினைப்பவரா நீங்கள்? உங்களுக்காகத்தான் இந்தப் புத்தகம். ஆம்! இந்திய ஆட்சிப் பணி என்ற ஐ.ஏ.எஸ். பணிதான் அனைத்தையும் சாதிக்கும் வல்லமை கொண்டது. ஆட்சியாளர்களுக்கும், மக்களுக்கும் பாலமாக இருந்து நிர்வாகத் திறமையால் நற்பணிகள் செய்யும் திறன்வாய்ந்தது ஐ.ஏ.எஸ். பணி. நம் நாட்டின் எதிர்காலத் தேவை நல்ல நிர்வாகிகள். நம் அரசின் செயல்பாடுகளை நிர்வகிக்கக்கூடிய திறன் உங்களிடத்திலும் இருக்கலாம். ஆனால், ‘ஐ.ஏ.எஸ்., தேர்வு கடினம். தேர்ச்சி பெறுவதே குதிரைக் கொம்பு’ என்றெல்லாம் பேசுபவர்களை புறந்தள்ளிவிட்டு இந்தப் புத்தகத்தைப் படியுங்கள். ‘தேர்வுக்குத் தயார்ப்படுத்திக்கொள்வது எப்படி? ஒவ்வொரு தேர்வையும் எப்படி எழுத வேண்டும்? எளிதாக எப்படி விடையளிக்கலாம்?’ போன்ற எண்ணற்ற கேள்விகளுக்கு பதில் அளித்திருக்கிறார் இந்த நூலாசிரியரும் ஐ.ஏ.எஸ்., அதிகாரியுமான விஜயகார்த்திகேயன். அற்புத டிப்ஸ்களையும் அள்ளி வழங்கி இருக்கிறார். தன்னுடைய தேர்வு அனுபவத்தையும் வாழ்க்கை அனுபவத்தையும் அற்புதமான நடையில் வடித்துத் தந்துள்ளார். இந்திய ஆட்சிப் பணிக்கு தங்களைத் தயார்ப்படுத்திக்கொள்ளத் துணிந்தவர்களுக்கு, சாதிக்க துடிப்பவர்களுக்கு சத்துள்ள நம்பிக்கை டானிக் இந்த புத்தகம். படியுங்கள்... அதிகாரத்தை எட்டிப் பிடியுங்கள்.
RS. 63 More...by டாக்டர் சங்கர சரவணன்
மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையங்கள் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கு உதவும் வகையில் இந்த நூல் உருவாக்கப்பட்டிருக்கிறது. ‘பொது அறிவுக் களஞ்சியம்’ வரிசையில் மூன்றாவதாக வெளிவரும் நூல் இது. இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியும் இந்திய விடுதலைப் போராட்டமும் எல்லோரும் அறிந்த எளிமையான பாடங்கள்தான் என்றாலும் ஐ.ஏ.எஸ். தேர்விலும், TNPSC தேர்விலும் இந்தப் பாடங்களில் இருந்து கேட்கப்படும் கேள்விகள் அதிக நுட்பமும் நுணுக்கமும் வாய்ந்தவை. UPSC மற்றும் TNPSC பாடத்திட்ட அடிப்படையில் பள்ளிப் பாட நூல் முதல் பல்கலைக்கழகப் பாட நூல்கள் வரை பல நூல்களிலிருந்து திரட்டப்பட்ட தகவல்களின் தொகுப்பாகத் தந்திருக்கிறார் நூல் ஆசிரியர் டாக்டர் சங்கர சரவணன். UPSC நடத்தும் ஐ.ஏ.எஸ்.- ஐ.பி.எஸ். தேர்வு அகில இந்திய அளவிலும் TNPSC தேர்வு மாநில அளவிலும் நடைபெறுவதால் அவற்றில் கேட்கப்படும் கேள்விகளின் தன்மையும் தரமும் ஒன்றுக்கொன்று வேறுபடும் என்றபோதிலும் நூல் ஆசிரியர் இரண்டு வகையான தேர்வுகளுக்கும் பயிற்சி அளித்து வரும் அனுபவத்தால் இரண்டையும் இணைக்க முயன்றுள்ளார். UPSC மற்றும் TNPSC தேர்வுகளில் இந்தப் பாடங்களில் இருந்து கேட்கப்பட்ட கேள்வி&பதில்களை தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் தந்து விளக்கங்களைத் தமிழ் மொழியில் தந்துள்ளது இந்த நூலின் சிறப்பம்சம். நமது நாட்டின் வரலாற்றையும் தெரிந்து கொள்வதோடு போட்டித் தேர்வுக்கும் உபயோகமான இந்த நூல் அனைவருக்கும் ஒரு வரப்பிரசாதம்!
RS. 137 More...by டாக்டர் சங்கர சரவணன்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கு உதவும் வகையில் இந்த நூல் உருவாக்கப்பட்டிருக்கிறது. ‘போட்டித் தேர்வுக் களஞ்சியம்’ வரிசையில் இரண்டாவது. பாட புத்தகத்தைப் படிக்கும்போது படிக்கும் விஷயத்தைக் கிரகித்துக்கொள்கிறோம். சில சமயம் மேற்கொண்டு படிப்பதற்கு என்று அதிலேயே சில புத்தகங்களை மேற்கோள் காட்டுவதும் உண்டு. ஏனென்றால் புத்தக ‘ஸ்கோப்’பைத் தாண்டிய ஆனால், தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் இருக்கும். மேற்கொண்டு இருக்கும் விஷயங்களைப் பாடுபட்டுச் சேகரிக்க வேண்டும். ஆனால், இந்தப் புத்தகம் அனைத்தையும் மொத்தமாகத் தருகிறது. இந்திய வரலாறு பண்பாடு ஆகியவற்றைப் பற்றி போட்டித் தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதிலை அறியப் பயன்படும் வகையிலும் அந்தக் குறிப்பிட்ட விஷயங்களை அங்கங்கே தேடிக்கொண்டு இருக்காமல், ஒரே இடத்தில் தொகுத்து இந்தப் புத்தகத்திலேயே அனைத்து விஷயங்களும் வரிசைவாரியாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இதில் வரலாற்றுக்கு முந்தைய காலம் தொடங்கி, சிந்து சமவெளி நாகரிகம், பண்டைத் தமிழகம், பௌத்தம், சமணம், பேரரசுகளின் தொடர்ச்சி, டெல்லி மொகலாயர் ஆட்சி, பிரிட்டிஷ் ஆட்சி, நேரு யுகம், இந்திரா யுகம் என அனைத்து விஷயங்களும் சின்னஞ்சிறு குறிப்புகளாக தொகுக்கப்பட்டிருக்கின்றன. பண்பாட்டுப் பகுதியிலும் இந்து மத நூல்களில் தொடங்கி, பக்தி இயக்கம், ராமாயணம், மகாபாரதம், தமிழர் பாரம்பரியம், கலாசாரம், சங்கத் தமிழ், தமிழ் நூல்கள், தற்கால இலக்கியம், நுண் கலைகள் என அனேக விஷயங்கள் அடங்கியிருக்கின்றன. அவ்வப்போது எடுத்துப் பார்த்து சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ளவும், போட்டித் தேர்வுகளுக்கு ஆழ்ந்து படிக்கவும் தேவையான ஒரு நூல்!
RS. 126 More...