Cart is Empty
by ராஜுமுருகன்
“உங்களுடைய கால் பெருவிரலிலோ, பல்லிலோ, தலையிலோ அல்லது இதயத்திலேயேகூட வலி இருந்தாலும் வேலை செய்யுங்கள்; வேலைதான் சிறந்த வலி நிவாரணி. மரணம், தூக்கம், க்ளோராஃபார்ம் ஆகியவற்றைவிட அதுதான் நன்றாக வேலை செய்யும்” என்றார் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த சீர்திருத்தவாதியும், எழுத்தாளருமான லியோனார்ட் உல்ஃப். வேலை! அதுவே செயல். நம்முடைய செயல் ஒவ்வொன்றும் நம்மை மேம்படுத்தும். நம்மை வாழவைக்கும். வாழும்போதே சிறப்பாக வாழ்கிறோம் என்ற உணர்வை நமக்கு நம்முடைய செயல்கள் ஏற்படுத்துகின்றன. அப்படிப்பட்ட செயல் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்? இதோ... பத்திரிகையாளர், எழுத்தாளர்,- திரைப்பட இயக்குநர் ராஜுமுருகன் போல. அவரது பயணத்தைப் போல செயல்கள் இருந்தால் அதுவே வாழ்வாகும். அதுவே பூரணத்துவம். ஆம்! ராஜுமுருகன் மேற்கொண்ட இலக்கு இல்லாத, இலக்குகளை கற்பித்த பயணம்தான், இதோ ‘ஜிப்ஸி’ என்ற பெயரில் உங்கள் கைகளில் தவழும் இந்த நூல். எந்த இடமும் சொந்த இடமாக இல்லாத, உயிரையும் உறவையும் தம்முடன் இணைத்து நிலம், நீர் ஆகியவற்றுடன் உறவாடி, காற்றுவழித் திரியும் நாடோடிகளைப் பற்றி நமக்கு தெரியாத- புரியாத வாழ்நிலைகளைத் தன் பயணத்தில் உணர்ந்து, அந்த உணர்வை வார்த்தைகளாக்கித் தந்துள்ளார் ராஜுமுருகன். ‘பச்சைத் தவளையைத் தின்னும் வாத்து பச்சை முட்டை போடும். தானியங்களைத் தின்னும் வாத்து பழுப்பு வண்ணத்தில் முட்டை போடும்’ & வாத்து மேய்க்கும் நாடோடிக் கூட்டத்திடம் இருந்து நமக்கு கிடைக்கும் தகவல் இது. இதுபோன்று ஏராளமான செய்திகளை, மனித மனத்தின் சொல்லாடல்களை, வரலாறுகளை தன்போக்கில் சொல்லிச் செல்லும்போது, ராஜுமுருகனும் ஜிப்ஸியாகவே உருமாறியிருக்கிறார். விகடனில் தொடராக வந்த ஜிப்ஸிக்கு கிடைத்த வரவேற்பு இப்போது நூல் வடிவெடுத்துள்ளது. ‘வட்டியும் முதலும்’ மூலம் சராசரி மனிதர்களின் நெகிழ்வைத் தந்த ராஜுமுருகன், ‘ஜிப்ஸி’ மூலம் நம்மை நெகிழ வைக்கிறார். காற்றுவழி மனிதர்களின் அற்புத தரிசனங்களைக் காண ஜிப்ஸியைத் தொடருங்கள்.
RS. 81 More...by டாக்டர் சங்கர சரவணன்
போட்டித் தேர்வில் ஒரே ஒரு மதிப்பெண் குறைந்து போய், வேலைவாய்ப்பை நூலிழையில் தவறவிட்டுப் பரிதவிப்போர் ஏராளம். ஏனெனில், போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில் முன்னணியில் இருப்பவர்களுக்கே முன்னுரிமை என்கிற நிலை. வருடந்தோறும் ஏற்படும் காலிப் பணியிடங்களை நிரப்ப, ‘தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்’ பல்வேறு போட்டித் தேர்வுகளை நடத்துகிறது. ஆயிரம் காலியிடங்களுக்கு லட்சக்கணக்கில் விண்ணப்பிக்கிறார்கள். எனவே, இந்தப் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற, புரிதலுடன் கூடிய படிப்பும் பயிற்சியும் அவசியம் தேவை. போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்குப் பயன்படும் வகையில் பிரத்யேகமாக ‘போட்டித் தேர்வு களஞ்சியம்’ வரிசையில் புத்தகங்கள் வெளியிடத் தீர்மானித்தோம். அந்த வரிசையில் ‘இந்திய அரசமைப்பு’ முதல் புத்தகமாக வெளிவருகிறது. TNPSC-யின் புதிய பாடத்திட்டப்படி இந்த நூலைத் தொகுத்துள்ளார், நூல் ஆசிரியர் டாக்டர் சங்கர சரவணன். இதில் இந்திய அரசமைப்பின் சிறப்பியல்புகள், அடிப்படை உரிமைகள், அடிப்படைக் கடமைகள், மத்திய நாடாளுமன்றம் மற்றும் இந்திய அரசமைப்பில் உள்ள அனைத்து அம்சங்களும் விரிவாகத் தொகுக்கப்பட்டுள்ளன. மாநில நிர்வாகம், தேர்தல் ஆணையம், சட்டத்துறை, உள்ளாட்சி அமைப்பு, மாவட்ட நிர்வாகம் போன்ற நிர்வாகரீதியிலான அமைப்புகளைப் பற்றியும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் ஜிழிறிஷிசி குரூப்-1 மற்றும் குரூப்-2 தேர்வுகளில் கேட்கப்பட்ட இந்திய அரசமைப்பு தொடர்பான வினாக்கள், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தொகுக்கப்பட்டு, தேவையான இடங்களில் விடைகளுடன் உரிய விளக்கங்களும் தரப்பட்டுள்ளது இதன் சிறப்பு அம்சம். சமச்சீர், முப்பருவக் கல்வி பாடநூல்களை அடிப்படையாகக்கொண்ட புதிய தகவல்கள் இடம் பெற்றுள்ளது கூடுதல் சிறப்பம்சம். மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் நூலின் இறுதியில் கலைச் சொற்களும் தரப்பட்டுள்ளன. மொத்தத்தில், போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கு மட்டுமல்ல; ஒவ்வோர் இந்திய குடிமகனும் வைத்திருக்க வேண்டிய பொக்கிஷப் புத்தகம் இது.
RS. 91 More...by விகடன் பிரசுரம்
இளமைப் பருவம் என்பது கடந்தகாலம், எதிர்காலம், நிகழ்காலம் சார்ந்த எண்ணற்ற கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பக்கூடிய மனநிலையைக் கொண்டது. பெரும்பாலானவர்களின் வாழ்க்கை வளமானதாக இருப்பதற்கும் இன்னல்கள் நிறைந்தவையாக அமைவதற்கும் இந்தப் பருவத்தில் எடுக்கக்கூடிய முடிவுகள்தான் காரணம். டீன் ஏஜ் பருவத்தைக் கடக்கும்போது சில சந்தேகங்கள் சங்கடங்கள் எழும். அந்த நேரத்தில் என்ன செய்வது யாரிடம் ஆலோசனை கேட்பது என்று யோசிக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், அப்படிக் கேட்பதனால் தரம் தாழ்ந்துவிடுவோமோ, நம்மைத் தவறாக எண்ணிவிடுவார்களோ என்ற ஒரு எண்ணமும் கூடவே எழுவது சகஜம்தான். இப்படி சங்கோஜப்படும் இளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும் சரியான ஆலோசனைகளை வழங்கவேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன், ஆனந்த விகடன் இதழ்களில் ‘டீன் கொஸ்டீன்’ என்ற தலைப்பில் வெளிவந்து கொண்டிருப்பதுதான் இந்த கேள்வி_பதில் பகுதி. இந்த நூலில், இளைஞர்களின் மனதில் எழும் கல்வி, உளவியல், உடற்கூறு, சட்டம் ஒழுங்கு என பல்வேறு விதமான சந்தேகங்களுக்கு அந்தந்த துறையில் உள்ள நிபுணர்களே வழங்கிய ஆலோசனைகள், இளம் பருவத்தினருக்கு வழிகாட்டியாக இருப்பதோடு மட்டுமல்லாமல் பெற
RS. 56 More...by விகடன் பிரசுரம்
2011-ஜனவரியில், ‘சென்னை புத்தகக் காட்சி’ நடந்த நேரத்தில் ‘ஆனந்த விகடன் காலப்பெட்டகம்’ வெளியானது. 1926 முதல் 2000 வரையிலான தமிழக, இந்திய மற்றும் உலக நிகழ்வுகளைப் படம்பிடித்துக் காட்டிய விகடனின் காலக் கண்ணாடி அந்தப் புத்தகம் என்றால் மிகையில்லை! அந்தப் புத்தகத்துக்கு வாசகர்களாகிய உங்களிடம் கிடைத்த அமோக வரவேற்பை எண்ணி மகிழ்ச்சியும் பிரமிப்பும் அடைந்த அதே வேளையில், உங்களில் பலர் தெரிவித்திருந்த ஒரு நியாயமான ஆதங்கத்தையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். ‘ஒவ்வோர் ஆண்டும் நடந்த முக்கியச் சம்பவங்களை ஆனந்த விகடன் எப்படி மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறது என்பதை ‘காலப் பெட்டகம்’ புத்தகம் மூலம் தெரிந்துகொண்டோம். ஆனால், ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதமாக... முக்கிய சம்பவங்கள் ஒவ்வொன்றிலும் ஒரு துளியளவே படிக்கக் கிடைத்தது. உதாரணமாக, தமிழ் சினிமாவின் முதல் பேசும்படமான ‘காளிதாஸ்’ படத்துக்கு கல்கி எழுதிய விமர்சனத்தில் ஆரம்பச் சில வரிகள்தான் எங்களுக்குப் படிக்கக் கிடைத்தன. அந்த வரிகளைப் படித்ததுமே, Ôஇந்த விமர்சனக் கட்டுரையை முழுமையாகப் படிக்க மாட்டோமாÕ என்று அடக்க முடியாத பேராவல் உண்டாகிவிட்டது. எனவே, அடுத்த முறை புத்தகம் வெளியிடும்போது, இதை மனத்தில் கொண்டு, அந்தக் காலத்தில் விகடனில் வெளியான சினிமா, அரசியல் மற்றும் சமூகக் கட்டுரைகளை அதிகம் குறைக்காமல், முடிந்தால் முழுமையாக எங்களுக்குப் படிக்கக் கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்’ என்று உங்களின் எண்ணத்தை கடிதம், இ-மெயில் உள்ளிட்ட அனைத்து தகவல் பரிமாற்றச் சாதனங்களின் மூலம் எங்களிடம் தெரிவித்துள்ளீர்கள். இதோ, அது நிறைவேறுகிறது - இந்தப் பொக்கிஷத்தில்! காந்தி முதல் ஜெயலலிதா வரை, டி.பி.ராஜலட்சுமி முதல் ஐஸ்வர்யா ராய் வரை, நௌஷாத் முதல் ஏ.ஆர்.ரஹ்மான் வரை... இப்படி, அரசியல், சினிமா, ஆன்மிகம், இசை, நடனம், இலக்கியம் என அனைத்துத் துறைகளிலும் அந்தந்த காலகட்டத்தில் ஆனந்த விகடனின் பங்களிப்பை அதே சுவையோடும் ரசனையோடும் தொகுத்துக் கொடுத்துள்ளோம். லக்ஷ்மி, ஜெயகாந்தன், சுஜாதா... என ஸ்டார் ரைட்டர்களின் சிறுகதைகளும் உண்டு. உங்கள் ரசனையும், தேடலும்தான் இந்தப் பொக்கிஷத்தில் மின்னும் அத்தனை மணிகளுக்கும் ஆதாரம்!
RS. 161 More...by டாக்டர் சங்கர சரவணன்
மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு பணிகளுக்குரிய தேர்வுகளை நடத்தி வருகின்றன. மேலும், பொது அறிவு சம்பந்தமான பாடங்களோடு, மொழி பற்றிய அறிவுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வினாத்தாள்கள் தயாரித்து வருகின்றன. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் தேர்வுகளைக்கூட தமிழில் எழுதலாம் என்பது நடைமுறையில் இருக்கிறது. TNPSC - குரூப் 1 மற்றும் குரூப் 2 தேர்வுக்காக ஏற்கெனவே ‘பொது அறிவுக் களஞ்சியம்’ என்கிற நூலை வெளியிட்டுள்ளது விகடன் பிரசுரம். போட்டித்தேர்வு எழுதுவோரிடம் இருந்தும், பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் அந்த நூலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்போது, TNPSC - குரூப் 2, குரூப் 4 தேர்வுகளுக்காக, பொதுத் தமிழ்ப் பாடத்தை மட்டுமே மையமாக வைத்து வெளிவந்திருக்கும் நூல்தான் இந்தப் ‘பொதுத் தமிழ்க் களஞ்சியம்’. தமிழ்ப் பாடங்களை எவ்வளவுதான் கரைத்துக் குடித்திருந்தாலும், ‘தேர்வு’ என்றவுடன் லேசான பயம் பற்றுவது இயல்பு. ஆனால், இந்த நூலைப் படித்தவர்கள் தன்னம்பிக்கையோடு தேர்வுக் களத்தில் குதிக்கலாம். பத்தாம் வகுப்புத் தரத்திலிருந்து பட்டப்படிப்புத் தரம் வரை அமைந்த போட்டித் தேர்வு பொக்கிஷமான இந்த நூலில், பொதுத் தமிழ்ப் பாடத் திட்டம் பல்வேறு தலைப்புகளின் கீழ் பிரிக்கப்பட்டு, விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. மாதிரி வினா&விடை அளித்திருப்பது கூடுதல் சிறப்பு. தமிழ்ப் பாடம் குறித்த அடிப்படை தொடங்கி, இலக்கணம் தொடர்பான ஒவ்வொரு வார்த்தைக்கும் உரிய விளக்கங்களோடு, இதுவரை வெளிவராத நுணுக்கமான தகவல்களையும், அழகிய தமிழில் பழகிய வார்த்தைகளைக் கொண்டு தொகுத்து எழுதியிருக்கிறார் டாக்டர் சங்கர சரவணன். ஆன்றோர்களும் சான்றோர்களும் பாராட்டும்படியாக அமைந்திருக்கும் ‘தமிழ் இலக்கிய வரலாறு’ என்னும் அத்தியாயம், தமிழ் அறிவை வளர்த்துக்கொள்ள ஆர்வமாக உள்ள அனைவருக்கும் சிறந்த வழிகாட்டியாக இருக்கும். போட்டித் தேர்வு எழுதுபவர்கள் மட்டுமன்றி, தமிழின் சுவைக்காகவும், தகவல்கள் அறியும் ஆர்வத்துக்காகவும் இந்த நூலைப் படிக்கலாம். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெறலாம். மொத்தத்தில் ஆசிரியர்கள், பள்ளி&கல்லூரி மாணவர்கள், வெளிநாடு வாழ் தமிழர்கள் அனைவருக்கும் பயனுள்ள ‘பொதுத் தமிழ்க் களஞ்சியம்’ இது!
RS. 315 More...by எஸ்.லாரன்ஸ் ஜெயக்குமார்
1800-களில் நடந்த தொழிற்புரட்சிக்குப் பிறகு, இங்கிலாந்து பேரரசு உலகின் பெரும்பாகத்தை தனது ஆளுமைக்குள் உட்படுத்தியது. அரசியல் பொருளாதார ஆளுமை இங்கிலாந்தின் ஒரு சிறு மக்கள் குழுவின் மொழியை உலக மொழியாக மாற்றியது. ஆம், ஆங்கிலம் உலக மொழியானது. பல்லாயிரக்கணக்கான அறிவியல் தொழில்நுட்ப சொற்கள் ஆங்கிலத்தில் உருவாகின. ஆங்கிலேயர் ஆட்சி செய்த நாடுகளில் மட்டுமன்றி வர்த்தக, இராணுவ மற்றும் பல்வேறு தொடர்புகளை வைத்திருந்த நாடுகளில் பேசப்பட்ட வெவ்வேறு மொழிகளில் இருந்தும் பல சொற்களை ஆங்கிலம் உள்வாங்கிக் கொண்டது. ஒரு கணிப்பின் படி 146 மொழிகளில் இருந்து சொற்களை ஆங்கிலம் தம்மொழிக்குள் உள்வாங்கிக்கொண்டுள்ளது. தமிழில் இருந்தும் பலசொற்களை ஆங்கிலம் தம்மொழிக்குள் உள்வாங்கிக்கொண்டுள்ளது. இந்தியாவில் ஆங்கிலம் இல்லாத இடமே இல்லை. தொடர்புமொழியில் ஆங்கிலமே முதலிடம் வகிக்கிறது. ஆக, ஆங்கிலம் என்பது வாழ்க்கைக்கு அத்தியாவசியமானதொன்று என்ற நிலையில் அதை எளிமையாக கற்க இந்த நூலில் வழிகாட்டுகிறார் பேராசிரியர் எஸ்.லாரன்ஸ் ஜெயக்குமார். முக்கிய ஆங்கில சொற்கள், சொற்றொடர்கள், இலக்கணத்தோடு ஆங்கிலம் பேசும் முறை என ஆங்கிலப்பயிற்சி முறைகள் அற்புதமாக இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. இந்த நூலைப்படிக்கும் வாசகர் நிச்சயம் ஆங்கில மேதாவியாக தன்னை மாற்றிக்கொள்வார் என்பது உறுதி. தமிழ் மூலம் ஆங்கிலத்தைக் கற்று, தகவல் தொடர்பில் அசத்த அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!
RS. 322 More...by விகடன் பிரசுரம்
அரசியல், சமூகம், சினிமா, போலீஸ், கோர்ட் நடவடிக்கை என நாட்டு நடப்புகளை அவ்வப்போது கவனித்து வருபவர்கள், அந்தச் சம்பவத்தின் குறைபாடுகளைத் தெரிந்து கொண்டு, அதை நக்கல், நையாண்டி செய்து பேசத் தோன்றும். பத்திரிகைச் செய்திகளைப் படிப்பவர்கள், அறிவுபூர்வமான பல தகவல்களை அறிந்து கொண்டு, அதை மற்றவர்களுக்கும் சுவையாகச் சொல்லத் தோன்றும். இப்படி, நமது கருத்துகளையும், நமக்குத் தெரிந்த தகவல்களையும் மற்றவர்களுக்குச் சுவாரஸ்யமாகச் சொல்ல சிறந்த வழி கேள்வி_பதில் அமைப்புதான். நாம் தெரிந்துகொள்ளும் தகவல்களே சில நேரங்களில் நமக்குள் சில கேள்விகளை எழுப்புவதும் உண்டு. அதன் அடிப்படையில், ஆனந்த விகடன் வாசகர்களின் மனங்களுக்குள் எழுந்த தகவல்களுக்கு, அவர்களே கேள்விகளை எழுப்பி, அதற்கு ‘சுருக்’கென்று பதிலும் எழுதத் தூண்டியபோது... பிரமிக்க வைத்தனர்! உதாரணமாக, சுவாரஸ்யமான, அறிவுபூர்வமான, சிந்தனையைத் தூண்டும் விதமாக அமைந்த பதில்கள் வாசகர்களின் ரசனையை வெளிப்படுத்தின. விமரிசனங்களுக்கு உரியவர்களின் மனம் புண்படாமல், நையாண்டி செய்து எழுதி அனுப்பிய பதில்கள் ரசிக்க வைத்தன! மொத்தத்தில், சிந்திக்க வைத்த அற்புதமான கேள்விகளும், பொருத்தமான பதில்களுமாக, வாசகர்களே படைத்து அளித்த பயனுள்ள தகவல்களின் பெட்டகம்தான், ‘நானே கேள்வி... நானே பதில்!’
RS. 50 More...by டாக்டர் சங்கர சரவணன், டாக்டர் ஆ.ராஜா
வி.ஏ.ஓ. பதவி ஒரு சின்ன ஐ.ஏ.எஸ். அலுவலர் பதவிக்கு ஒப்பானது. ஒரு கிராமத்துக்கான நலத் திட்டங்கள் அனைத்தையும் அந்தக் கிராமத்துக்குக் கொண்டு சேர்ப்பதும் கிராம மக்கள் வாழ்வில் உயர்வதற்கான கல்வி, வேலை வாய்ப்பு, நிலம் கொடுக்கல் வாங்கல் போன்ற பல விஷயங்களுக்கு ஆதாரமான பல சான்றிதழ்களை வழங்குவதும் அவரின் தலையாய பணி. வி.ஏ.ஓ. அலுவலர்கள் ஒவ்வொரு கிராமத்திலும் ஊழலற்ற நிர்வாகத்தை ஏற்படுத்தினால் நாடு ஊழலற்ற நாடாக உயரும். ஓர் அலுவலர் ஊழலற்றவராகத் திகழ வேண்டுமானால் அவர் அந்தப் பதவிக்கு வரும் விதமும் அவ்வாறே அமைய வேண்டும். தன் அறிவாலும் திறமையாலும் போட்டித் தேர்வை வெற்றி கொண்டு, வரும் ஒரு நல்ல அலுவலரால் ஊரும் நாடும் சிறக்கும். வி.ஏ.ஓ. தேர்வுக்கு டி.என்.பி.எஸ்.சி. தேர்வாணையம் புதிய பாடத் திட்டத்தை வெளியிட்டுள்ளது. இந்தப் புதிய பாடத் திட்டத்துக்கான பாடக் குறிப்புகளை முப்பருவ மற்றும் சமச்சீர் பாடப் புத்தகங்களிலிருந்தும் 2011-12ம் ஆண்டு வி.ஏ.ஓ. தேர்வு வினாக்களின் அடிப்படையிலும் இந்த நூலை டாக்டர் சங்கர சரவணன், டாக்டர் ஆ.ராஜா ஆகியோர் தொகுத்துத் தந்திருக்கின்றனர். குறிப்பாகக் கிராம நிர்வாகம், ஆப்டிட்யூட் ஆகிய புதிய பாடப் பகுதிகளுக்கான குறிப்புகள் நுட்பமாகத் தயாரிக்கப்பட்டு மாதிரி வினாக்களோடு தரப்பட்டுள்ளது சிறப்பு அம்சம். நடப்பு நிகழ்வுகளுக்கு 2013-14ம் ஆண்டு நாட்குறிப்புகளைப் பின்பற்றி தன்னறிவு சோதனை வினாக்கள் தரப்பட்டுள்ளன. போட்டித் தேர்வில் வெற்றி பெற்று அரசாங்க அலுவலராக வாழ்த்துகள்!
RS. 350 More...by சி.கலா சின்னத்துரை
இன்றைய இளைஞர்கள் சவாலான போட்டிகளை எதிர்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். அரசு வேலை வாய்ப்பு என்பது இளைய சமுதாயத்தின் தவிர்க்க முடியாத கனவாக இருக்கிறது. தனியார் நிறுவனங்கள் ஊதியத்தை எந்த அளவுக்குக் கொட்டிக் கொடுத்தாலும் அரசுப் பணி மீதான ஆர்வம் யாருக்கும் குறையவில்லை. அதனால்தான் ஆயிரக்கணக்கில் இருக்கும் அரசுப் பணிகளுக்காக லட்சக்கணக்கிலான இளைஞர்கள் போட்டி போட்டு தேர்வு எழுதுகிறார்கள். மிகப் பெரிய எண்ணிக்கையில் இருந்து மிகச் சிலரையே தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நம் அரசு, அதற்கேற்றபடி கேள்விகளைக் கேட்கும் விதத்திலும், தேர்ந்தெடுக்கும் பக்குவத்திலும் மிகுந்த கவனம் காட்டுகிறது. வெறுமனே மனப்பாடம் செய்துகொண்டு தேர்வுக்குப் போய் மதிப்பெண் பெறுவது இனி சாத்தியம் இல்லாதது. தேர்வுத்துறை சமீபகாலமாகத் தேர்ந்தெடுக்கும் கேள்விகளில் பாடத்திட்டத்தின் பங்களிப்பு மிகுதியாக இருக்கிறது. 6-ம் வகுப்பில் இருந்து 12-ம் வகுப்பு வரையிலான தமிழ்ப் பாடத் திட்டத்தின் அடிப்படையில் இருந்தே நிறைய கேள்விகள் கேட்கப்படுகின்றன. இதனை நுட்பமாக உணர்ந்து மிகச் சரியான முறையில் பொதுத் தமிழ்க் கேள்விகளை எதிர்கொள்ளும் விதமாக இந்த நூல் உருவாக்கப்பட்டு உள்ளது. எல்லாத் துறை வேலை வாய்ப்புகளுக்கும் போட்டித் தேர்வுகள், நுழைவுத் தேர்வுகள், தகுதித் தேர்வுகள் போன்றவை இப்போது கட்டாயமாக்கப்பட்டு உள்ளன. பள்ளி, கல்லூரிகளில் நடக்கும் தேர்வுகளுக்காக நாம் படிப்பதற்கும் போட்டித் தேர்வுகளுக்கு நாம் படிப்பதற்கும் வித்தியாசம் அதிகம். அந்த நுட்பத்தை இந்த நூல் உங்களுக்கு நிச்சயம் தெளிவுபடுத்தும். பாடத்திட்டங்களில் இருந்து எப்படி கேள்விகள் எடுக்கப்படுகின்றன? ஒரே கேள்வியை எப்படி மாற்றிக் கேட்பார்கள்? மிக முக்கிய வினாக்கள் எவை? நாம் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டிய மிக முக்கிய விவரங்கள் எவை என்கிற அத்தனை விதமான கேள்விகளுக்கும் இந்த நூல் வழிகாட்டுகிறது. தமிழக அரசுத் துறை சார்ந்த எந்தத் தேர்வாக இருந்தாலும் அதில் மிக முக்கியமான பகுதியாக பொதுத் தமிழ் இடம்பெறும். பொதுத் தமிழில் இருந்து 100 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு கேள்விக்கும் ஒன்றரை மதிப்பெண் வழங்கப்படும். மொத்த மதிப்பெண்களில் பாதி தமிழுக்கே ஒதுக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆகவே, பொதுத் தமிழில் கவனம் செலுத்தினால் சுலபமாக அதிக மதிப்பெண்களைப் பெற்றுவிட முடியும் என்பது நிதர்சனமான உண்மை. அதன் அடிப்படையில் தமிழ்நாடு பாடத்திட்டத்தில் உள்ள பொதுத் தமிழுக்கான இலக்கணம், செய்யுள், உரைநடைப் பகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்வி-பதில்கள், பயிற்சிக்கான கேள்விகள் என அற்புதமான தொகுப்பாக மிளிர்கிறது இந்த நூல். உங்களின் வெற்றிக்கு விகடன் பிரசுரத்தின் மனமார்ந்த வாழ்த்துகள்!
RS. 130 More...by டாக்டர் சங்கர சரவணன், டாக்டர் ஆ.ராஜா
யூ.பி.எஸ்.சி. மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கு உதவும் வகையில் இந்த நூல் உருவாக்கப்பட்டிருக்கிறது. ‘பொது அறிவுக் களஞ்சியம்’ வரிசையில் ஐந்தாவதாக வெளிவரும் நூல் இது. நடப்பு நிகழ்வுகளில் வரலாறு, அரசியல் அறிவியல், புவியியல், பொருளாதாரம், கண்டுபிடிப்புகள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் தகவல்களைத் தொகுத்து தந்துள்ளார்கள் டாக்டர் சங்கர சரவணன் & டாக்டர் ஆ.ராஜா. சமீபத்திய TNPSC தேர்வுகளில் கேட்கப்பட்டுள்ள வினாக்கள் ஒவ்வொரு அலகிலும் விடையோடு தரப்பட்டுள்ளன. சமீபத்திய ஆண்டுகளின் குரூப்-I முதன்மைத் தேர்வு ஒரிஜினல் வினாத்தாள் தரப்பட்டுள்ளது, தேர்வர்களுக்குப் பயிற்சி செய்துகொள்ள உதவியாக இருக்கும். குறிப்பிட்ட சில பகுதிகளுக்குப் பயிற்சி வினாக்களும் தரப்பட்டுள்ளன. போட்டித் தேர்வின் முதல் கட்டத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என்று அனைத்துக்கும் பயன்படக் கூடிய வகையில் தயாரித்திருப்பது இந்த நூலின் சிறப்பம்சம். அண்மை ஆண்டுகளில் ஐ.ஏ.எஸ். தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளும் பெரும்பாலான அலகுகளில் இடம் பெற்றுள்ளது இந்த நூலின் கூடுதல் சிறப்பம்சம். போட்டித் தேர்வில் வெல்வதற்கு இது போன்ற நூல்கள் உங்களுக்கு உற்ற துணைவனாக இருக்கும்.
RS. 347 More...