Cart is Empty
by பேராசிரியர் பா.சந்திரமோகன்
படிப்பில் இருவிதமான கட்டங்கள். +2 வரையிலான படிப்புக்கும், அதன் பிறகான கல்லூரிப் படிப்புக்கும் நிறைய வித்தியாசங்கள். +2வில் மிகச் சிறப்பான மதிப்பெண் பெறுகிற ஒரு மாணவன் கல்லூரியில் சராசரி மதிப்பெண் வாங்கக்கூட தடுமாறும் நிலை. காரணம், தனக்குத் தகுந்த படிப்பு எது என்பதை அந்த மாணவன் அறியாததுதான். எதில் சாதிக்க முடியும் என்பதை மாணவர்கள் உணரத் தவறுவதும், பெற்றோர்கள் தங்களின் விருப்பத்தை மாணவர்களின் மீது திணிப்பதுமே இத்தகைய திண்டாட்டத்துக்கு வழிவகுக்கின்றன. இன்றைய நவீன உலகில் மருத்துவம், பொறியியல், நிர்வாகவியல், புள்ளியியல், விண்வெளியியல், பொருளாதாரம், சட்டம், விவசாயம், அழகியல்... என எத்தனையோ விதமான படிப்புகள் உள்ளன. நம் விருப்பத்துக்கு ஏற்ப, நம் கனவுக்குத் தகுந்த படிப்பைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு - நேற்றைய தலைமுறைக்கு வாய்க்காத வரம் இன்றைய மாணவர்களின் மடியில் சம்மணமிட்டு அமர்ந்து இருக்கிறது. +2 முடித்த பிறகு நமக்கான சிறந்த படிப்பைத் தேர்ந்தெடுக்கத் தேவையானது நிதானமான யோசனை. நமக்கான கோர்ஸ் எது, அதனை சிறப்பாக வழங்கும் அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் எவை என்பதை எல்லாம் ஆராய்ந்து மேற்படிப்பைத் தொடர்வதே சிறந்தது. அதற்காகவே பிரத்யேக முயற்சியுடன் பா.சந்திரமோகன் எழுதி இருக்கும் ஆக்கபூர்வ வழிகாட்டி இந்த நூல். பொறியியல், மருத்துவம் தொடங்கி சகலவிதமான படிப்புகள் குறித்தும், அதற்கேற்ற கல்லூரிகள் குறித்தும் நூலாசிரியர் விரிவாக எழுதி இருப்பது ஒவ்வொரு மாணவனையும் விரல் பிடித்து அழைத்துச் செல்லும் சேவைக்கு நிகரானது. மாணவர்கள் மட்டும் அல்லாது பெற்றோர்களும் படித்து, தக்க துணையாகக் கைகொள்ள வேண்டிய புத்தகம் இது. கிராமப்புற மாணவர்களை மனதில்கொண்டு, அவர்களுக்கு எளிதில் விளங்கும் வண்ணம், எத்தகையப் படிப்புகளுக்கு எதிர்காலம் உண்டு என்பதையும் விவரிக்கிறது இந்தப் புத்தகம். படிப்பைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்னர் அனைவரும் படிக்கவேண்டிய பயனுள்ள துணைவன் இந்தப் புத்தகம்!
RS. 50 More...by கா.பாலமுருகன்
கனரக வாகனங்களை ஓட்டிச்செல்லும் லாரி ஓட்டுநர்கள் இரும்புக் குதிரைகள் என்றாலும் ஈரம் குறையாத மனசுடைய மனிதர்களாகவே வாழ்கிறார்கள். பயணமே இவர்களுக்கு வாழ்க்கையாகிப்போனது. நெடுஞ்சாலைகளில், மலைப்பாதைகளில் வெயில், மழை என பாராமல் பயணிக்கும் இந்த வாழ்க்கையை, விரும்பியோ விரும்பாமலோ தேர்ந்தெடுத்து வாழ்வது இவர்களது இயல்பாகிவிட்டது. நெடுஞ்சாலைப் பயணங்களில் லாரி ஓட்டுநர்கள் படும் இன்னல்களை இந்த நூல் எடுத்துரைக்கிறது. அவற்றில் ஒன்று - கொள்ளை; விதவிதமாக பணம் பறிப்பவர்கள் மத்தியில் பணத்தைப் பிரித்து ஆங்காங்கே ஒளித்துவைத்து தன்னையும் தன் உடைமைகளையும் காப்பாற்றுவதற்கே அன்றாடம் போராடுகிறார்கள். விபத்து, வழக்கு, போலீஸ், கொலை, கொள்ளை, நோய் என அனைத்தையும் தாண்டி இந்தத் தொழிலை இவர்கள் நேசிக்கிறார்கள். கிட்டத்தட்ட 40, 50 ஆண்டுகள் இப்பணியில் தங்களது ஈடுபாட்டைச் செலுத்தியிருப்பவர்களும் உண்டு. திறமையான, அனுபவம்கொண்ட டிரைவராக இருந்தாலும், பயணப்படும் சாலையில் ஏதாவது பிரச்னை இருக்கிறதா என்பதைக் கவனித்துப் பயணிப்பது இவர்களுக்கான சவாலான விஷயம். பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிக்கும் தரைவழிப் போக்குவரத்தான லாரி பயணத்தில் ஏற்படும் இன்னல்களைக் களைய, தேசிய நெடுஞ்சாலைகளுக்குத் தனி பாதுகாப்பு ஏற்பாடு செய்யவேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார் நூலாசிரியர் கா.பாலமுருகன். லாரி ஓட்டுநர்கள் பற்றிய தவறான கண்ணோட்டத்தை விலக்கி, அவர்களின் உண்மையான நிலையை அவர்களுடன் பயணித்துப் பதிவு செய்திருக்கிறார். மோட்டார் விகடனில் வெளியான நெடுஞ்சாலை வாழ்க்கை, நூலாக்கம் பெற்று இப்போது உங்களையும் அழைத்துச் செல்லக் காத்திருக்கிறது!
RS. 123 More...by டாக்டர் சங்கர சரவணன்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கு உதவும் வகையில் இந்த நூல் உருவாக்கப்பட்டிருக்கிறது. ‘பொது அறிவுக் களஞ்சியம்’ வரிசையில் நான்காவதாக வெளிவரும் நூல் இது. வி.ஏ.ஓ. முதல் ஐ.ஏ.எஸ். வரையிலான தேர்வுகளில் பொருளாதாரப் பாடத்தில் இருந்து குறிப்பிட்ட அளவுகளில் கேள்விகள் கேட்கப்படும். பொருளாதாரப் பாடத்தை எடுத்துப் படித்தவர்கள் எளிதில் விடையளித்து விடுவார்கள். ஆனால், மற்ற பாடங்களை எடுத்துப் படித்தவர்களுக்கு கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கும். அதற்குக் காரணம், சரியான புரிதல் இல்லாததே. அதைப்போக்கும் விதமாக நாணயம் விகடனில் தொடராக வந்தவைதான் இந்தக் கட்டுரைகள். ரூபாய் 1,2,3 என்று மூன்று பகுதிகளாகப் பிரித்து எளிமையாகக் கொடுத்துள்ளார் நூல் ஆசிரியர் டாக்டர் சங்கர சரவணன். பொருளாதாரப் பாடத்தலைப்புகளில் இருந்து போட்டித் தேர்வில் கேட்கப்பட்ட வினாக்களுக்கு விடைகளோடு விளக்கங்களையும் தந்துள்ளது சிறப்பம்சம். பொருளாதாரப் பாடத்தில் இடம்பெற்றுள்ள தகவல்களை ‘ஒரு வரிக்குறிப்புகள்’ என்ற தலைப்பில் நூலின் இறுதியில் கொடுத்திருப்பது கூடுதல் சிறப்பம்சம். இந்த நூலைப் படித்து முடித்தவுடன், பொருளாதாரப் பாடத்தில் உங்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும் என்பது நிச்சயம்.
RS. 84 More...by எஸ்.எல்.வி.மூர்த்தி
பி.காம்., பி.எஸ்சி., இன்ஜினீயரிங் படித்தவர்கள் முன்பெல்லாம் தங்கள் துறையிலேயே முதுகலையைத் தேர்ந்தெடுப்பார்கள். ஆனால், தற்போது பெரும்பாலோர் எம்.பி.ஏ. படிப்பைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள். காரணம், சாஃப்ட்வேர் கம்பெனி முதல் தனியார் வங்கிகள் வரை அனைத்துத் துறையினருக்கும் எம்.பி.ஏ. படித்தவர்கள் தேவைப்படுகிறார்கள். படிக்கும்போதே கேம்பஸ் இன்டர்வியூவில் செலக்ட் செய்யப்பட்டு நல்ல சம்பளத்துடன் வேலை கிடைத்து விடுகிறது. ‘உலக அளவில் சி.இ.ஓ-க்கள் 40% பேர் எம்.பி.ஏ. படித்தவர்கள்’ என புள்ளிவிவரம் கூறுவதிலிருந்தே இந்தப் படிப்பின்மீது அநேகம் பேருக்கு அதீத ஆர்வம் ஏன் ஏற்படுகிறது என்பது புரிகிறது. எம்.பி.ஏ-வில் என்ன சொல்லித்தருகிறார்கள், எவ்வளவு செலவாகும், எந்தக் கல்லூரியைத் தேர்ந்தெடுப்பது என விரிவாக விளக்குகிறார் நூல் ஆசிரியர் எஸ்.எல்.வி.மூர்த்தி. எம்.பி.ஏ. படிக்கும் மாணவர்களிடம் ‘ஏன் படிக்கிறேன் எம்.பி.ஏ.?’ என்று கேட்டு அவர்களிடம் பதில் வாங்கி ஆங்காங்கே குறிப்பிட்டிருப்பது சிறப்பு. எம்.பி.ஏ. படிக்க விரும்புபவர்களிடம் ‘கேளுங்கள் சொல்கிறேன்’ என்று கேட்டு அவர்களுக்கு பதில் சொல்லியிருப்பது கூடுதல் சிறப்பம்சம். உலக அளவில் பல்வேறு துறைகளில் வெற்றிபெற்றவர்களின் கதைகளையும் உதாரணத்தோடு கூறியிருப்பது பிசினஸில் முன்னேறத் துடிப்பவர்களுக்கும் பயன்படும். நாணயம் விகடனில் தொடர் வெளிவந்தபோதே வாசகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘எம்.பி.ஏ. மூன்றெழுத்து மந்திரம்’, இப்போது நூல் வடிவில். புத்தகத்தைப் படித்து முடித்தவுடன் அனைவருக்கும் மூன்றெழுத்து மந்திரத்தின் மீது ஆர்வம் ஏற்படும் என்பது திண்ணம்.
RS. 98 More...by டாக்டர் சங்கர சரவணன், டாக்டர் த.ராமர்
ஐ.ஏ.எஸ். தேர்வு என்றாலே மாணவர்களுக்கு ஒருவித பயம் இருப்பது உண்மை. 30&40 வருடங்களுக்கு முன்பு வரை தமிழகத்திலிருந்து ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றவர்களின் சதவிகிதம் அதிகமாக இருந்தது. ஆனால், அடுத்த சில ஆண்டுகளில் இந்த விகிதம் மிகவும் குறைந்தது. சமீப காலங்களில் தேர்ச்சி விகிதம் அதிகரித்து இருக்கிறது. ஐ.ஏ.எஸ். தேர்வு பற்றிய புரிதல் அதிகரித்து இருப்பது உண்மைதான். ஆனாலும் தமிழ்நாட்டில் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க வேண்டும். அதற்குப் பள்ளி, கல்லூரிக் காலங்களிலேயே மாணவர்களைத் தயார்ப்படுத்த வேண்டும். மாணவர்களுக்கு டாக்டர் சங்கர சரவணன் மற்றும் டாக்டர் த.ராமர் ஆகியோர் இணைந்து எழுதிய இந்த ‘இந்தியா கையேடு’ பெரிதும் உதவும். ஐ.ஏ.எஸ். தேர்வு என்பது பல பகுதிகளை உள்ளடக்கியது. அதில் ஒரு பகுதியான இந்தியாவைப் பற்றி முழுமையாக இந்த நூலில் விவரிக்கப்பட்டு உள்ளது. இந்திய வரலாறு, புவியியல், பொருளாதாரம், அரசமைப்பு, அறிவியல் தொழில்நுட்பம், கலை, இலக்கியம் பற்றிய அனைத்துத் தகவல்களையும் ஒரே தொகுப்பாகத் தந்துள்ளார்கள் நூல் ஆசிரியர்கள். 2013-ம் ஆண்டு மற்றும் அதற்கு முந்தைய வருடங்களில் ஐ.ஏ.எஸ். முதல் கட்டத் தேர்வில் இந்தியா பற்றிக் கேட்கப் பட்ட பல வினா - விடைகள், விளக்கத்தோடு, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தரப்பட்டுள்ளன. டி.என்.பி.எஸ்.சி மற்றும் ஐ.ஏ.எஸ். தேர்வுகளுக்குத் தாயாராகி வரும் கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி எதிர்காலத்தில் தயாராகப்போகும் பள்ளி மாணவர்களும் அவசியம் படிக்க வேண்டிய நூல். புத்தகங்கள் வாங்குவதற்கு செய்யும் செலவு... எதிர்கால வெற்றிக்கும் அறிவுக்குமான முதலீடு!
RS. 189 More...by டாக்டர் சங்கர சரவணன், எஸ்.முத்துகிருஷ்ணன்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கு பத்தாம் வகுப்பு தரத்தில்தான் ‘பொதுத் தமிழ்’ பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பாடத்திட்டம் ஒன்றாக இருந்தாலும் நடைமுறையில் தேர்வுகளுக்கு ஏற்ப வினாக்களின் தரத்திலும் மாற்றம் இருக்கிறது. அதிலும் 2013-ம் ஆண்டு டி.என்.பி.எஸ்.சி பாடத் திட்டம் மாற்றப்பட்ட பிறகு ‘பொதுத் தமிழ் வினாக்கள் மிகவும் கடினமாக இருக்கிறது, தேர்வு எழுத நேரம் போதாது’ என்று போட்டித் தேர்வர்கள் குறைபட்டுக்கொள்கிறார்கள். வினாக்களின் போக்குகளை புரிந்துகொண்டு அதற்கு ஏற்றார்போல் படிக்கவும் தேர்வு எழுதும் நேரத்தை நிர்வாகம் செய்யவும் டி.என்.பி.எஸ்.சி பொதுத் தமிழ் ஒரிஜினல் வினாத்தாள்களை தொகுத்துத் தந்துள்ளோம். பொதுத் தமிழ்ப் பாடத்தை படிக்கும் முன்பும் படித்த பின்பும் இந்த வினாக்களை படித்துப் பார்க்கும்போது, பொதுத் தமிழ்ப் பாடத்தில் உங்களது திறனை நீங்களே எடைபோட்டு பார்க்க முடியும். விடைகளும் கேள்விக்கு அருகிலேயே தரப்பட்டுள்ளதால் உடனுக்குடன் விடைகளை சரிபார்த்துக்கொள்ள முடியும். தேவையான இடங்களில் விடைகளுக்குத் தேவையான விளக்கங்களும் தரப்பட்டுள்ளன. இந்த நூலில் 2013, 2014, 2015, 2016 (பிப்ரவரி வரை) டி.என்.பி.எஸ்.சி. பொதுத் தமிழ் வினாத்தாள்களை தந்துள்ளோம். இதில் மொத்தம் 1,060 கேள்விகள் இடம்பெற்றுள்ளன. போட்டித் தேர்வர்கள் பயிற்சி எடுத்து பயத்தைப் போக்கி அரசு பணிக்குச் செல்ல இந்த வினாத் தொகுப்பு பயன் உள்ளதாக இருக்கும். வாழ்த்துகள்!
RS. 105 More...by டாக்டர் இரா.ஆனந்த குமார், இ.ஆ.ப.
வதம்பச்சேரி என்னும் கிராமத்தில் தமிழ் வழிக் கல்வி பயின்று ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற டாக்டர் இரா.ஆனந்த குமார் தன் வாழ்க்கை அனுபவங்களைக் கலந்து இளைஞர்களுக்காக எழுதியுள்ள வழிகாட்டு நூல் இது. ஐ.ஏ.எஸ். என்பது இளைஞர்கள் பலருக்கு வாழ்வின் லட்சிய கனவாக உள்ளது. அப்படி ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றியை எட்டிப்பிடிக்க விரும்புபவர்களுக்கு அதை அடைய உதவும் வழிகளை, படிக்கும் அனுபவத்தை, கைக்கொள்ள வேண்டிய அறநெறிகளை ஒரு நண்பனைப் போல நின்று சுவையாக பேசியுள்ளார். படிப்பைச் சுமையாக நினைக்கும் இளைய தலைமுறைக்கு அதை சுகமாக மாற்றும் கலையை இந்த நூலில் கேலிச் சித்திரங்களுடன் கற்றுத் தருகிறார் நூல் ஆசிரியர். தனக்கு சொல்லிக்கொடுத்த ஆசிரியர்கள், நண்பர்கள், தன்னுடைய மேலதிகாரிகள் என்று அனைவரிடமும் இருந்தும் ஒவ்வொரு நல்ல விஷயத்தைக் கற்றுக்கொண்ட இவர், அதையே வாசகர்களுக்கும் பயனுள்ள விதத்தில் எடுத்துக்கூறியிருப்பது இந்த நூலின் சிறப்பு. ‘எதிர்ப்படுகின்ற எல்லோரிடத்திலும் ஏதாவதொன்றைக் கற்றுக்கொள்ள வேண்டும்’ என்ற திரைப்பட வசனத்தைப் போல தான் கற்றுக்கொண்டதை பிறருக்கும் பயன்படும்விதத்தில் கற்றுத் தருகிறார்; கற்றுப் பயன்பெறுங்கள்.
RS. 70 More...by டாக்டர் சங்கர சரவணன், எஸ்.முத்துகிருஷ்ணன்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கான தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள்தான் இந்தத் தேர்வை ஒரு காலத்தில் அதிக அளவில் எழுதுவார்கள். ஆனால் இப்போது பொறியியல் பட்டதாரிகளும் இந்த தேர்வை எழுதுகிறார்கள். போட்டித் தேர்வர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க ‘கட்-ஆஃப்’ மதிப்பெண்களும் அதிகரிக்கிறது. அதே நேரத்தில் இந்த தேர்வுக்கான வினாத்தாள்களின் தரமும் உயர்ந்துகொண்டே இருக்கிறது. எனவே தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், தேர்வுப் பாடத்திட்டப்படி படித்தாலும், பொது அறிவு பாடங்களை மிகவும் நுணுக்கமாக, ஆழமாகப் படிக்க வேண்டி இருக்கிறது. தேர்வுப் பாடத்தை நூறு சதவிகிதம் படித்திருந்தாலும் தேர்வு எழுதும்போது ஒருவித பதற்றம் ஏற்பட்டு வெற்றியை கோட்டை விட்டவர்கள் ஏராளம். படித்த பாடத்தை கேள்விக்கு தகுந்தாற்போல் ஞாபகப்படுத்தி பார்ப்பது, மாதிரித் தேர்வுகளை எழுதிப் பார்ப்பது பயத்தைப் போக்கி வெற்றியை எளிதாக்கும். அதிலும் முந்தைய டி.என்.பி.எஸ்.சி வினாக்களுக்கு திரும்பத் திரும்ப விடை எழுதிப் பார்க்கும்போது, வினாக்களின் அமைப்பு, அதன் போக்குகளை நன்கு புரிந்துகொண்டு குழப்பம் இல்லாமல் விடையளிக்க பயிற்சி கிடைக்கும். அரசுப் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள் சொல்லும் முக்கிய ரகசியம் ‘மாதிரித் தேர்வுகளை எழுதிப் பாருங்கள்’ என்பதுதான். அதற்காக டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளில் கேட்கப்பட்ட ஒரிஜினல் வினாத்தாள்களை தமிழ் மற்றும் ஆங்கிலம் வழியில் தந்திருக்கிறோம். அதற்கான விடைகளையும் தேவையான இடங்களில் விளக்கங்களையும் கொடுத்துள்ளோம். இந்த வினாக்களுக்கு விடை எழுதி பயிற்சி எடுக்கும்போது, தேர்வு எழுதும் நேர நிர்வாகத்தை கணித்து தேர்வை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும். ‘சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்’ என்பதுபோல உங்களின் தேர்வு திறத்தை நீங்களே சோதித்து, வெற்றிபெற இந்த டி.என்.பி.எஸ்.சி. ஒரிஜினல் வினாத்தாள் தொகுப்பு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளில் பட்டப்படிப்புத் தரத்தில் பல்வேறு துறைகளில் 2014, 2015, 2016 (ஜனவரி வரை) ஆண்டுகளில் கேட்கப்பட்ட 2,350 வினாக்கள் விடைகளுடன் இடம்பெற்றுள்ளன. பயிற்சி எடுத்து பயத்தைப் போக்கி அரசு பணிக்குச் செல்ல இந்த வினாத் தொகுப்பு பயன் உள்ளதாக இருக்கும். வாழ்த்துகள்!
RS. 263 More...by சி.கலா சின்னத்துரை
அரசுப்பணி என்பது குதிரைக்கொம்பாக இருந்த காலம் மலையேறிவிட்டது. ஆயிரக்கணக்கான பணியிடங்களைப் போட்டித் தேர்வுகளின் மூலமாகவே நிரப்ப இருக்கிறது அரசு. வரும் காலங்களில் அரசு நிறுவனங்களில் காலியாகும் பணியிடங்கள் இன்னும் அதிகமாக இருக்கும் என்கிறார்கள். அதனால், முறையாகப் படித்து அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தும் தேர்வுகளில் வெற்றி பெற்றால் அரசுப் பணி நிச்சயம் சாத்தியம். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் போது, விழுந்து விழுந்து படித்தால் மட்டும் போதாது. தேர்வு நுட்பம் அறிந்து, எத்தகைய கேள்விகளுக்கு ஒவ்வொரு தேர்வுகளின் போதும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்பதைக் கண்டறிந்து அதற்கு ஏற்றபடி நம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். சமீப காலங்களில் நடந்தப்படும் அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளில் பாடத் திட்டங்களின் அடிப்படையிலான கேள்விகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. குறிப்பாக ஆறாம் வகுப்பிலிருந்து 12&ம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்களில் இருந்து நிறைய கேள்விகள் கேட்கப்படுகின்றன. அதன்படி கணிதப் பாடத்தின் அனைத்துவிதமான கேள்வி பதில்களும் இந்த நூலில் சீராகத் தொகுத்து வழங்கப்பட்டு இருக்கிறது. அதிகமாகக் கேட்க வாய்ப்பிருக்கும் கேள்விகளைச் சரியாக அனுமானித்து, அவற்றைச் சரியாக வரிசைப்படுத்தி இருக்கிறார் நூல் ஆசிரியர். கேள்விகளை மாற்றி மாற்றிக் கேட்கும் நூதனம் அறிந்து, அதன் அடிப்படையிலான கேள்வி & பதில்களையும் தொகுத்திருப்பது தனிச்சிறப்பு. பாடத் திட்ட அடிப்படையில் தொகுக்கப்பட்டிருக்கும் இந்த நூல் இளைய தலைமுறையினரின் கணித அறிவைத் திறம்பட மேம்படுத்தி, போட்டித் தேர்வுகளுக்கு ஆகச்சிறந்த உறுதுணையாக விளங்கும். மாதிரித் தேர்வுக்காகப் பயிற்சி வினாக்களையும் சேர்த்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்த நூல் TNPSC - GROUP II, GROUP IV, UPSC - CSE, TET,VAO உள்ளிட்ட எல்லாவிதப் போட்டித் தேர்வுகளுக்கும் மிக எளிமையான வழிகாட்டியாக விளங்கும் என்பது நிச்சயம்!
RS. 88 More...