Cart is Empty
by விகடன் பிரசுரம்
‘விகடன் இயர் புக்’ என்பது ஒவ்வோர் ஆண்டுக்கான தகவல் களஞ்சியம் மட்டும் அல்ல, பொக்கிஷமாகப் பாதுகாக்க வேண்டிய அறிவுக் கருவூலமும் ஆகும். 2013-ம் ஆண்டு முதல் ‘விகடன் இயர் புக்’ வெளியிடப்பட்டு வருகிறது. தமிழக மாணவர்கள், இளைஞர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் அத்தியாவசியமான ஒரு புத்தகமாகத் திகழும் விகடன் இயர் புக், ஆண்டுதோறும் மேன்மேலும் பரிணாமம் பெற்று வருகிறது. தொடர்ச்சியாக ஐந்தாம் ஆண்டு அறிவுலகத்தின் திறவுகோலாக விகடன் இயர்புக் வெளியிடப்பட்டிருக்கிறது. தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா, கீழடி அகழாய்வு, தமிழ் எழுத்துரு பற்றிய ஆய்வுக் கட்டுரை கல் முதல் கணினி வரை, எம்.ஜி.ஆர். என்சைக்ளோபீடியா, இந்திரா இதிகாசம், ஜெயா கிராஃபி, மத்திய - மாநில அரசுகளின் புதிய திட்டங்கள், கொள்கைகள், முத்திரை முகங்கள், முத்திரைச் செய்திகள் என அனைத்தும் கொண்ட தகவல் களஞ்சியமாக அமைந்துள்ளது. இவற்றோடு, ஐ.ஏ.எஸ். தேர்வு மாணவர்களுக்கு வழிகாட்டும் ‘தப்பான கற்பிதங்களில் இருந்து தப்பிப்போம்’ என்ற கட்டுரை, டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கான பொது ஆங்கிலம், சர்வதேச அளவிலான விருதுகள், இந்திய, தமிழக விருது விவரங்கள், 2016 நோபல் பரிசுகள், ஐந்து நூல்கள் பற்றிய அலசல், 2016-ல் வெளியான புதிய புத்தகங்கள், இந்திய வரலாறு - தகவல் தொகுப்பு, உடற்செயலியல் தகவல் தொகுப்பு, தொல்காப்பியத் துளிகள், மின் ஆளுகை, அன்றாட வாழ்வில் நுண்ணுயிரிகள் பங்கு... என இதில் இல்லாதது எதுவுமில்லை என வியக்கும் வகையில் அரிய பெரிய தகவல்களைத் தன்னகத்தே தாங்கி வெளிவந்திருக்கிறது இந்த இயர்புக்! மேலும், போட்டித் தேர்வு ஆர்வலர்களுக்கு வழிகாட்டும் வகையில் விகடன் வழிகாட்டல் நிகழ்ச்சியின் விவரங்களும், வெற்றியாளர்கள் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. போட்டித் தேர்வு வினா விடை களஞ்சியமும் இலவச இணைப்பாகத் தரப்பட்டுள்ளது. எதிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்; அதற்கான ஆகச்சிறந்த வழிகாட்டிதான் விகடன் இயர்புக்!
RS. 126 More...by டாக்டர் இரா.ஆனந்த குமார், இ.ஆ.ப.
ஒருவரது மன ஓட்டம் மற்றொருவர் மனதில் தடங்களை உருவாக்குகிறது. தேர்வு வாழ்க்கைக்கும் வாழ்க்கைத் தேர்வுக்குமான ஆசிரியரது மன ஓட்டம் இங்கே கட்டுரைகளாகத் தடம் பதித்திருக்கிறது. உலக நாகரிகங்களுக்கெல்லாம் முன்னோடியான ரோம, கிரேக்க சாம்ராஜ்ஜியங்களின் வழியாகப் படர்ந்த ஆசிரியரின் பார்வை, வரலாற்றுச் சுவடுகளின் தனித்தன்மைகளை துல்லியமாய் அலசியிருக்கிறது. திரைப்படம், விளையாட்டு, விஞ்ஞானம், இயற்கை, ஒழுக்கம் என பல கண்ணோட்டங்களின் மீது பயணித்த ஆசிரியரின் கட்டுரைகள் உரையாடல்கள் மூலமாகவும் சுவாரஸ்யமான பல தகவல்களை அள்ளித் தருகிறது. கல்வி, வேலை, திருமணம், எதிர்காலம் என வாழ்க்கையின் அங்கங்கள் ஒவ்வொன்றையும் தேர்வு செய்வதில் மிகவும் கவனம் தேவை. தேர்வின் போது எதிர்பாராமல் ஏற்படும் சிறு சிறு தடுமாற்றங்களை எதிர்கொள்ளவும் தைரியமும் மன உறுதியும் வேண்டும். சில நேரங்களில் இவையே வாழ்வில் திருப்புமுனையாகவும் அமைந்துவிடலாம். பொதுவாக தேர்வு எழுதும்போது எப்படி நம்மை தயார் செய்துகொள்வோமோ அதுபோல வாழ்க்கையைத் தேர்வு செய்யும்போதும் கவனமாக இருக்க வேண்டும். எனினும் எல்லா சந்தர்ப்பங்களையும் நன்மைக்கே என்று எடுத்துக்கொள்ளும் பண்பு இருந்தால் முடிவு சுபமே என்கிறது இந்த நூல். நிலத்தில் விளையாடும் கால்பந்தையும், வாழ்க்கையில் உருண்டோடும் காலப்பந்தையும் உதைத்து, தேர்வுக்கும் வாழ்க்கைக்கும் இந்த நூலை ஒரு வழிகாட்டியாக அமைத்து தந்திருக்கிறார் நூலாசிரியர் டாக்டர் இரா.ஆனந்த குமார். தேர்வு செய்யுங்கள் இந்நூலை... வாழ்க்கையைத் தேர்வு செய்ய!
RS. 91 More...by டாக்டர் சங்கர சரவணன், எஸ்.முத்துகிருஷ்ணன், எஸ்.நடராஜ சுப்பிரமணியன்
தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வை எழுதும் பொதுப்பிரிவினருக்கும் துறை சார்ந்தவர்களுக்கும் சேர்த்தே தயாரிக்கப்பட்டு இருக்கும் முதல் நூல் என்பது இந்த நூலின் சிறப்பம்சம். நாம் வெளியிட்டுள்ள பல போட்டித் தேர்வு நூல்களை எழுதியுள்ள டாக்டர் சரவணன் அவர்கள், இந்த நூலையும் அவரது குழுவோடு சேர்ந்து எழுதியுள்ளார். பொது அறிவியல், இந்திய வரலாறு, புவியியல், பொருளாதாரம் மற்றும் வணிகம், இந்திய அரசமைப்பு, நடப்பு நிகழ்வுகள், உளவியல், காவல்துறை நிர்வாகம் மற்றும் சட்டங்கள் என்ற பகுதிகளாகப் பிரித்துக் கொடுத்திருக்கிறார்கள் நூல் ஆசிரியர்கள். துறை சார்ந்தவர்களுக்காக காவல்துறை அமைப்பு, காவல்துறை நிர்வாகம், இந்திய தண்டனைச் சட்டம், இந்திய சான்றுச் சட்டம், இந்திய குற்ற நடைமுறைச் சட்டம் ஆகிய பகுதிகள் இடம் பெற்று இருப்பது கூடுதல் சிறப்பம்சம். பொதுப்பிரிவினருக்கான 2007 மற்றும் 2010-ம் ஆண்டு வினாத்தாள்களும், துறை சார்ந்தவர்களுக்கான 2010-ம் ஆண்டு வினாத்தாளும் இணைக்கப்பட்டுள்ளது. இவற்றின் விடைகளோடு விளக்கங்களையும் கொடுத்திருப்பது தேர்வர்களுக்கு அதிக பயன் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை. தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி பயின்றவர்களுக்குப் பயன்படும் வகையில் இரு மொழிகளிலும் தேர்வு வினாக்கள் தரப்பட்டுள்ளதோடு சட்டப்பிரிவுகள் குறித்த குறிப்புகளும் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தரப்பட்டுள்ளன. காவல்துறைப் பணியை லட்சியமாகக்கொண்ட பலருக்கும் காவல்துறை பற்றிய ஓர் அறிமுக நூலாகவும் காவல்துறை பணி சார்ந்த வேறு தேர்வுகளுக்கான கருவி நூலாகவும் இந்த நூல் பயன்படும் என்பது நிச்சயம்.
RS. 245 More...by டாக்டர் சங்கர சரவணன்
குரூப்-IV தேர்வு எழுதுவோர்களுக்காகவே இந்த நூல் பிரத்யேகமாக வெளியிடப்படுகிறது. குரூப்-IV தேர்வு பாடத்திட்டத்தில் பொதுத் தமிழ் மற்றும் பொது அறிவு ஆகிய இரண்டு தாள்களுக்கும் சேர்த்து ஒரே நூலாக அமைந்துள்ளது. பொது அறிவியல், பொது அறிவும் நடப்பு நிகழ்வுகளும், புவியியல், வரலாறும் பண்பாடும், இந்திய அரசமைப்பு, இந்தியப் பொருளாதாரம், இந்திய விடுதலைப் போராட்டம், திறனறிதலும் அறிவுக்கூர்மையும் மற்றும் பொதுத் தமிழில் இலக்கணமும், இலக்கிய வரலாறும் மற்றும் தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் ஆகிய பாடங்களுக்கான விளக்கங்களைக் கொண்ட நூலாகத் தந்திருக்கிறார்கள் டாக்டர் சங்கர சரவணன் மற்றும் டாக்டர் ஆ.ராஜா. இலக்கணம், இலக்கியம் அமைந்த பொதுத் தமிழ் பாடப் பயிற்சி வினாக்கள் டி.என்.பி.எஸ்.சி போட்டித் தேர்வு எழுதுகிறவர்களுக்கு மாத்திரமல்ல, தமிழ் ஆர்வலர்களுக்கும் பெருந்துணையாக அமையும். ஒவ்வொரு பகுதியிலும் தன்னறிவுச் சோதனை வினாக்களுடன் அவற்றுக்கு விடைகளைக் கொடுத்திருப்பதும் தேவையான இடங்களில் பயிற்சி வினாக்களைக் கொடுத்திருப்பதும் தேர்வு எழுதுவோருக்கு மிகுந்த பயன் அளிக்கும். தகவல்கள் அனைத்தும் 2015 செப்டம்பர் வரை அப்டேட் செய்யப்பட்டுள்ளது இந்த நூலின் சிறப்பம்சம். மேலும் 2012, 2013 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் வெளிவந்த டி.என்.பி.எஸ்.சி வினாத்தாள்களை இந்நூலின் இறுதியில் இணைத்திருப்பது கூடுதல் சிறப்பம்சமாகும். பொது அறிவுக் களஞ்சியம் வரிசை நூல்களைப் போன்று இந்த குரூப்-4 தேர்வு நூலும் தேர்வர்களுக்கு மிகுந்த பயனளிக்கும் என்பது திண்ணம்.
RS. 350 More...by டாக்டர் சங்கர சரவணன்
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-IIA தேர்வு எழுதுபவர்களுக்காகவே இந்த நூல் பிரத்யேகமாக வெளியிடப்படுகிறது. TNPSC-ன் குரூப்-IIA தேர்வு மற்றும் குரூப்-II முதன்மைத் தேர்வு ஆகிய இரண்டு தேர்வுகளுக்கும் சேர்த்து ஒரே நூலாகத் தந்துள்ளார் டாக்டர் சங்கர சரவணன். 2013, 2014, 2015-ம் ஆண்டு குரூப்-II தேர்வு வினாத்தாள்கள்-விடைகளுடன், தேவையான இடங்களில் விரிவான விளக்கங்களுடன் தந்துள்ளார் நூலாசிரியர். மத்திய அரசின் நிதி ஆயோக், ஜன் தன் யோஜனா, பிரதமரின் முத்ரா வங்கி போன்றவற்றைப் பற்றிய குறிப்புகளும் தமிழ்நாடு தொலைநோக்கு-2023, உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2015 போன்ற விவரங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பாட இறுதியில் கொடுத்துள்ள, பட்டப்படிப்பு தர பொது அறிவு பயிற்சி வினாக்கள், தேர்வு எழுதுகிறவர்கள் எளிதில் நினைவுகொள்ளும் வகையில் அமைக்கப்பட்டிருப்பது இந்தப் புத்தகத்தின் தனிச்சிறப்பாகும். விருது மற்றும் பரிசு விவரங்கள் 2015 வரை அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இந்த நூலில் உள்ள தகவல்கள் அனைத்தும் 2015 அக்டோபர் வரை அப்டேட் செய்யப்பட்டுள்ளது. வினா-விடைகளை தமிழ், ஆங்கிலத்தில் தந்திருப்பதோடு நூலின் இறுதியில் கலைச்சொல் அடைவும் தரப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பம்சம். பொது அறிவுக் களஞ்சியம் வரிசை நூல்களைப் போன்று இந்த குரூப்-IIA தேர்வு நூலும் தேர்வர்களுக்கு மிகுந்த பயனளிக்கும் என்பது திண்ணம்.
RS. 319 More...by மருத்துவர் கு.சிவராமன்
பயணங்கள் எப்போதுமே சுவாரஸ்ய அனுபத்தைத் தருபவை. மனிதனுக்குள் பலவித மாற்றங்களை, புத்துணர்ச்சியை ஏற்படுத்துபவை. கொலம்பஸின் பயணம் அமெரிக்காவைக் கண்டுபிடித்தது. வாஸ்கோடகாமாவின் பயணம் இந்தியாவின் கடல் வழியைக் கண்டுபிடித்தது. இப்படி பயணங்கள் தேடல்களை நமக்குள் தந்து கொண்டிக்கின்றன. மனிதன் மட்டுமல்ல, பல நாட்டின் நிலங்களை, கடல்களைக் கடந்து வேடந்தாங்கல் வந்திறங்கும் ஒரு பறவையின் பயணமும் அதற்கு புதிய அனுபவங்களைக் கொடுக்கிறது. இப்படி ஏதோ ஒரு தேடலின் பயணங்கள்தான் உலகைப் புதுப்பித்துக்கொண்டே வருகிறது. கனடா, இங்கிலாந்து, கத்தார் உள்ளிட்ட பல நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்ட மருத்துவர் சிவராமன் அந்தந்த நாடுகளின் கலாசாரம், மனிதர்களின் பழக்கவழக்கங்கள், பார்க்க வேண்டிய இடங்கள், சூழலியல் மாறுபாடுகள் என ஒவ்வொரு நாட்டைப் பற்றியும் அங்கு தமக்கேற்பட்ட அனுபவங்கள் பற்றியும் இந்தப் பயணக் கட்டுரைகளில் பதிந்திருக்கிறார். மேலும் உலக நாடுகளில் வாழும் தமிழர்கள் நம் தமிழ்க் கலாசாரத்தை, பண்டிகைகளை எப்படியெல்லாம் போற்றி வருகின்றனர் என்றும், அந்தந்த நாடுகளின் உணவு கலாசாரம் பற்றியும் இந்த நூலில் குறிப்பிட்டிருக்கிறார். இனி, பயணத்தைத் தொடருங்கள்...
RS. 160 More...by திருமதி. ரூபியாஜோதி பாலச்சந்தர்
கல்வி மனித அறிவு வளர்ச்சியின் வித்து. எளிமை, கடினம், பொருள், கருத்து, விளக்கம், உரை, பாடல், கேள்வி ஆகிய பல நுண் கூறுகளைக் கொண்டது. இவையே தொடக்கக் கல்வி முதல் பட்டப் படிப்புகளை வரை நினைவாற்றல், அறிவாற்றல், செயல்திறன், பகுத்தறிவு, ஆளுமை போன்ற தனித்திறன் வெளிப்படுத்தும் நுண்ணறிவைக் கொடுக்கிறது. பள்ளி, கல்லூரி மற்றும் போட்டித் தேர்வு மாணவர்களுக்கான பல வழிகாட்டி நூல்களை விகடன் பிரசுரம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அவை கல்வி தொடர்பாக - கல்வி சார்ந்த பல நூல்கள் வெளிவந்து கல்வியின் வளர்ச்சிக்கு உரமாகியிருக்கின்றன. அதன் வரிசையில், TRB, SERT, TET, NET, SLET ஆகிய போட்டித் தேர்வு ஆர்வலர்களுக்கு உற்ற வழிகாட்டியாக வெளிவந்திருக்கிறது இந்த ‘கல்வியியல் கையேடு’ நூல். மேற்கண்ட தேர்வுகளை எழுதுவோருக்கு எல்லா வகையிலும் துணை நிற்கக்கூடியதாக இந்த நூல் விளங்கும். மேலும், B.Ed., M.Ed., கல்வியியல் கல்லூரிகளில் பயிலும் ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கும் உபயோகப்படும் விதத்தில் இந்த நூல் அமைந்திருக்கிறது. இதனோடு பல்வேறு போட்டித் தேர்வுகளில் கேட்கப்பட்ட வினா விடைகளையும், கல்வி பற்றிய சிந்தனையாளர்களின் கருத்துக்களையும், கல்வி சார்ந்த வாழ்வியல் விளக்கங்களையும் தன்னகத்தே கொண்டு களஞ்சிய தொகுப்பாக அமைக்கப்பட்டிருப்பது இந்த நூலின் சிறப்பம்சமாகும். நீங்கள் தெரிவு செய்து எழுதும் தேர்வுகளில் வெற்றியடையும் உத்தி இதனுள் கொட்டிக்கிடக்கிறது. வெற்றியடைய வாழ்த்துக்கள்.
RS. 231 More...