Cart is Empty
by விகடன் பிரசுரம்
அரசியல், சமூகம், சினிமா, போலீஸ், கோர்ட் நடவடிக்கை என நாட்டு நடப்புகளை அவ்வப்போது கவனித்து வருபவர்கள், அந்தச் சம்பவத்தின் குறைபாடுகளைத் தெரிந்து கொண்டு, அதை நக்கல், நையாண்டி செய்து பேசத் தோன்றும். பத்திரிகைச் செய்திகளைப் படிப்பவர்கள், அறிவுபூர்வமான பல தகவல்களை அறிந்து கொண்டு, அதை மற்றவர்களுக்கும் சுவையாகச் சொல்லத் தோன்றும். இப்படி, நமது கருத்துகளையும், நமக்குத் தெரிந்த தகவல்களையும் மற்றவர்களுக்குச் சுவாரஸ்யமாகச் சொல்ல சிறந்த வழி கேள்வி_பதில் அமைப்புதான். நாம் தெரிந்துகொள்ளும் தகவல்களே சில நேரங்களில் நமக்குள் சில கேள்விகளை எழுப்புவதும் உண்டு. அதன் அடிப்படையில், ஆனந்த விகடன் வாசகர்களின் மனங்களுக்குள் எழுந்த தகவல்களுக்கு, அவர்களே கேள்விகளை எழுப்பி, அதற்கு ‘சுருக்’கென்று பதிலும் எழுதத் தூண்டியபோது... பிரமிக்க வைத்தனர்! உதாரணமாக, சுவாரஸ்யமான, அறிவுபூர்வமான, சிந்தனையைத் தூண்டும் விதமாக அமைந்த பதில்கள் வாசகர்களின் ரசனையை வெளிப்படுத்தின. விமரிசனங்களுக்கு உரியவர்களின் மனம் புண்படாமல், நையாண்டி செய்து எழுதி அனுப்பிய பதில்கள் ரசிக்க வைத்தன! மொத்தத்தில், சிந்திக்க வைத்த அற்புதமான கேள்விகளும், பொருத்தமான பதில்களுமாக, வாசகர்களே படைத்து அளித்த பயனுள்ள தகவல்களின் பெட்டகம்தான், ‘நானே கேள்வி... நானே பதில்!’
RS. 50 More...by பேராசிரியர் பா.சந்திரமோகன்
படிப்பில் இருவிதமான கட்டங்கள். +2 வரையிலான படிப்புக்கும், அதன் பிறகான கல்லூரிப் படிப்புக்கும் நிறைய வித்தியாசங்கள். +2வில் மிகச் சிறப்பான மதிப்பெண் பெறுகிற ஒரு மாணவன் கல்லூரியில் சராசரி மதிப்பெண் வாங்கக்கூட தடுமாறும் நிலை. காரணம், தனக்குத் தகுந்த படிப்பு எது என்பதை அந்த மாணவன் அறியாததுதான். எதில் சாதிக்க முடியும் என்பதை மாணவர்கள் உணரத் தவறுவதும், பெற்றோர்கள் தங்களின் விருப்பத்தை மாணவர்களின் மீது திணிப்பதுமே இத்தகைய திண்டாட்டத்துக்கு வழிவகுக்கின்றன. இன்றைய நவீன உலகில் மருத்துவம், பொறியியல், நிர்வாகவியல், புள்ளியியல், விண்வெளியியல், பொருளாதாரம், சட்டம், விவசாயம், அழகியல்... என எத்தனையோ விதமான படிப்புகள் உள்ளன. நம் விருப்பத்துக்கு ஏற்ப, நம் கனவுக்குத் தகுந்த படிப்பைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு - நேற்றைய தலைமுறைக்கு வாய்க்காத வரம் இன்றைய மாணவர்களின் மடியில் சம்மணமிட்டு அமர்ந்து இருக்கிறது. +2 முடித்த பிறகு நமக்கான சிறந்த படிப்பைத் தேர்ந்தெடுக்கத் தேவையானது நிதானமான யோசனை. நமக்கான கோர்ஸ் எது, அதனை சிறப்பாக வழங்கும் அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் எவை என்பதை எல்லாம் ஆராய்ந்து மேற்படிப்பைத் தொடர்வதே சிறந்தது. அதற்காகவே பிரத்யேக முயற்சியுடன் பா.சந்திரமோகன் எழுதி இருக்கும் ஆக்கபூர்வ வழிகாட்டி இந்த நூல். பொறியியல், மருத்துவம் தொடங்கி சகலவிதமான படிப்புகள் குறித்தும், அதற்கேற்ற கல்லூரிகள் குறித்தும் நூலாசிரியர் விரிவாக எழுதி இருப்பது ஒவ்வொரு மாணவனையும் விரல் பிடித்து அழைத்துச் செல்லும் சேவைக்கு நிகரானது. மாணவர்கள் மட்டும் அல்லாது பெற்றோர்களும் படித்து, தக்க துணையாகக் கைகொள்ள வேண்டிய புத்தகம் இது. கிராமப்புற மாணவர்களை மனதில்கொண்டு, அவர்களுக்கு எளிதில் விளங்கும் வண்ணம், எத்தகையப் படிப்புகளுக்கு எதிர்காலம் உண்டு என்பதையும் விவரிக்கிறது இந்தப் புத்தகம். படிப்பைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்னர் அனைவரும் படிக்கவேண்டிய பயனுள்ள துணைவன் இந்தப் புத்தகம்!
RS. 50 More...by விகடன் பிரசுரம்
இளமைப் பருவம் என்பது கடந்தகாலம், எதிர்காலம், நிகழ்காலம் சார்ந்த எண்ணற்ற கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பக்கூடிய மனநிலையைக் கொண்டது. பெரும்பாலானவர்களின் வாழ்க்கை வளமானதாக இருப்பதற்கும் இன்னல்கள் நிறைந்தவையாக அமைவதற்கும் இந்தப் பருவத்தில் எடுக்கக்கூடிய முடிவுகள்தான் காரணம். டீன் ஏஜ் பருவத்தைக் கடக்கும்போது சில சந்தேகங்கள் சங்கடங்கள் எழும். அந்த நேரத்தில் என்ன செய்வது யாரிடம் ஆலோசனை கேட்பது என்று யோசிக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், அப்படிக் கேட்பதனால் தரம் தாழ்ந்துவிடுவோமோ, நம்மைத் தவறாக எண்ணிவிடுவார்களோ என்ற ஒரு எண்ணமும் கூடவே எழுவது சகஜம்தான். இப்படி சங்கோஜப்படும் இளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும் சரியான ஆலோசனைகளை வழங்கவேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன், ஆனந்த விகடன் இதழ்களில் ‘டீன் கொஸ்டீன்’ என்ற தலைப்பில் வெளிவந்து கொண்டிருப்பதுதான் இந்த கேள்வி_பதில் பகுதி. இந்த நூலில், இளைஞர்களின் மனதில் எழும் கல்வி, உளவியல், உடற்கூறு, சட்டம் ஒழுங்கு என பல்வேறு விதமான சந்தேகங்களுக்கு அந்தந்த துறையில் உள்ள நிபுணர்களே வழங்கிய ஆலோசனைகள், இளம் பருவத்தினருக்கு வழிகாட்டியாக இருப்பதோடு மட்டுமல்லாமல் பெற
RS. 56 More...by மதன்
அறிவுக்கு விருந்தாக, சிந்தனைக்குத் தெளிவாக, ஆனந்த விகடன் இதழ்களில் வெற்றி பவனி வரும் ‘ஹாய் மதன்’ கேள்வி_பதில் பகுதியை, பள்ளி_கல்லூரி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பு வாசகர்களும் படித்துப் பாராட்டி வருகிறார்கள். நவீன உலகத்து நாகரிகம், விஞ்ஞானம், சினிமா போன்ற விஷயங்களை விவரிப்பது மட்டுமல்லாமல், பண்டைய காலத்து கலை, கலாசாரம், வரலாறு என அனைத்துத் துறை சார்ந்த கேள்விகளுக்கு தன் கண்ணோட்டத்தில் மதன் பதில் அளிக்கும் அழகும், மனிதர்கள், விலங்குகள், பறவைகள், பூச்சிகள் என அனைத்து உயிரினங்களின் இயல்புகளை தனது எண்ணங்களில் கோத்து எழுதும் நேர்த்தியும் உண்மையிலேயே வாசகர்களின் அறிவுக்கு விருந்துதான்! ‘வாக்குறுதி தர ரொம்ப யோசிக்கிறவர்கள்தான் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவார்கள்!’ ‘சிறந்த மனிதனின் மனதில் ஓடுவது லட்சியங்கள். சாதாரண மனிதனின் மனதில் ஓடுவது ஆசைகள்!’ ‘விரோதிகளை ஒழித்துக் கட்ட சுலபமான ஒரு வழி _ அவர்களை நண்பர்களாக்கிக் கொண்டுவிடுங்கள்!’ _ இப்படி, சிந்தனைத் தெளிவு தரும் பதில்களும் ‘ஹாய் மத’னின் பலம்! ‘எனக்குப் பிடித்த அழகான சுற்றுலா தளம் _ புத்தகக் கடைகள்தான்’ என்று சொல்லும்
RS. 63 More...by டாக்டர் க.விஜயகார்த்திகேயன், ஐ.ஏ.எஸ்.
சாதி மத இன பேதமின்றி அனைவராலும் கொண்டாடப்படுபவர்கள் சாதனையாளர்கள். சாதித்துக் காட்டுபவர்களை உலகம் தன்னகத்தே அணைத்துக் கொள்ளும். அத்தகைய செயற்கருஞ் செயல்களை எப்படிச் செய்ய முடியும்? உங்கள் கையில் அரசின் அதிகாரம் இருந்தால்... எதையும் சாதிக்க முடியும். ஏழைகளின் கண்ணீரைத் துடைக்கவேண்டும், எளியோருக்கு நல்ல வாழ்வு கிடைக்க வேண்டும் என்று நினைப்பவரா நீங்கள்? உங்களுக்காகத்தான் இந்தப் புத்தகம். ஆம்! இந்திய ஆட்சிப் பணி என்ற ஐ.ஏ.எஸ். பணிதான் அனைத்தையும் சாதிக்கும் வல்லமை கொண்டது. ஆட்சியாளர்களுக்கும், மக்களுக்கும் பாலமாக இருந்து நிர்வாகத் திறமையால் நற்பணிகள் செய்யும் திறன்வாய்ந்தது ஐ.ஏ.எஸ். பணி. நம் நாட்டின் எதிர்காலத் தேவை நல்ல நிர்வாகிகள். நம் அரசின் செயல்பாடுகளை நிர்வகிக்கக்கூடிய திறன் உங்களிடத்திலும் இருக்கலாம். ஆனால், ‘ஐ.ஏ.எஸ்., தேர்வு கடினம். தேர்ச்சி பெறுவதே குதிரைக் கொம்பு’ என்றெல்லாம் பேசுபவர்களை புறந்தள்ளிவிட்டு இந்தப் புத்தகத்தைப் படியுங்கள். ‘தேர்வுக்குத் தயார்ப்படுத்திக்கொள்வது எப்படி? ஒவ்வொரு தேர்வையும் எப்படி எழுத வேண்டும்? எளிதாக எப்படி விடையளிக்கலாம்?’ போன்ற எண்ணற்ற கேள்விகளுக்கு பதில் அளித்திருக்கிறார் இந்த நூலாசிரியரும் ஐ.ஏ.எஸ்., அதிகாரியுமான விஜயகார்த்திகேயன். அற்புத டிப்ஸ்களையும் அள்ளி வழங்கி இருக்கிறார். தன்னுடைய தேர்வு அனுபவத்தையும் வாழ்க்கை அனுபவத்தையும் அற்புதமான நடையில் வடித்துத் தந்துள்ளார். இந்திய ஆட்சிப் பணிக்கு தங்களைத் தயார்ப்படுத்திக்கொள்ளத் துணிந்தவர்களுக்கு, சாதிக்க துடிப்பவர்களுக்கு சத்துள்ள நம்பிக்கை டானிக் இந்த புத்தகம். படியுங்கள்... அதிகாரத்தை எட்டிப் பிடியுங்கள்.
RS. 63 More...by மதன்
ஆனந்த விகடன் இதழ்களில் அறிவுக் களஞ்சியமாக, வெற்றிகரமாக பவனி வரும் ‘ஹாய் மதன்’ கேள்வி_பதில் பகுதி, பள்ளி_கல்லூரி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பு வாசகர்களையும் கவர்ந்து வருகிறது. வரலாறு படைத்தவர்களை மதன் தன் கண்ணோட்டத்தில் பாராட்டும் அழகும், விஞ்ஞான கண்டுபிடிப்புகளை அவர் கௌரவிக்கும் நேர்த்தியும், கிண்டலும் கேலியும் தொனிக்கும் கேள்விகளுக்கு அவர் அசராமல் விளாசித்தள்ளும் நகைச்சுவையான பதிலும்... படிக்கப் படிக்க திகட்டாதவை! மதன் தன் பரணில்கூட பல புத்தகங்களைத் தேடி, படித்து, அலசி, ஆராய்ந்து, அள்ளி வழங்கும் பதில்கள் சுவையாகவும் அறிவுபூர்வமாகவும் மனதைக் கவருவதால்தான், அதைப் படிக்கும் வாசகர்களும் உந்துசக்தி பெற்று நிறைய கேள்விகளை ஆர்வத்துடன் எழுதி அனுப்பிக் கொண்டு இருக்கிறார்கள். ‘கேட்கப்படாத கேள்விதான் விடை தெரியாத பதில்’ என்று சொல்லும் அளவுக்கு, சூரியனுக்குக் கீழே உள்ள அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள வாசகர்கள் காட்டும் ஆர்வம், அமோகமாக விற்பனையாகும் ‘ஹாய் மதன்’ புத்தக வரிசையில் தெரிகிறது! இது 7வது தொகுப்பு. ஆனந்த விகடனில் நவம்பர் 2008 முதல் அக்டோபர் 2009 வரை வெளியான கேள்
RS. 67 More...by டாக்டர் இரா.ஆனந்த குமார், இ.ஆ.ப.
வதம்பச்சேரி என்னும் கிராமத்தில் தமிழ் வழிக் கல்வி பயின்று ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற டாக்டர் இரா.ஆனந்த குமார் தன் வாழ்க்கை அனுபவங்களைக் கலந்து இளைஞர்களுக்காக எழுதியுள்ள வழிகாட்டு நூல் இது. ஐ.ஏ.எஸ். என்பது இளைஞர்கள் பலருக்கு வாழ்வின் லட்சிய கனவாக உள்ளது. அப்படி ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றியை எட்டிப்பிடிக்க விரும்புபவர்களுக்கு அதை அடைய உதவும் வழிகளை, படிக்கும் அனுபவத்தை, கைக்கொள்ள வேண்டிய அறநெறிகளை ஒரு நண்பனைப் போல நின்று சுவையாக பேசியுள்ளார். படிப்பைச் சுமையாக நினைக்கும் இளைய தலைமுறைக்கு அதை சுகமாக மாற்றும் கலையை இந்த நூலில் கேலிச் சித்திரங்களுடன் கற்றுத் தருகிறார் நூல் ஆசிரியர். தனக்கு சொல்லிக்கொடுத்த ஆசிரியர்கள், நண்பர்கள், தன்னுடைய மேலதிகாரிகள் என்று அனைவரிடமும் இருந்தும் ஒவ்வொரு நல்ல விஷயத்தைக் கற்றுக்கொண்ட இவர், அதையே வாசகர்களுக்கும் பயனுள்ள விதத்தில் எடுத்துக்கூறியிருப்பது இந்த நூலின் சிறப்பு. ‘எதிர்ப்படுகின்ற எல்லோரிடத்திலும் ஏதாவதொன்றைக் கற்றுக்கொள்ள வேண்டும்’ என்ற திரைப்பட வசனத்தைப் போல தான் கற்றுக்கொண்டதை பிறருக்கும் பயன்படும்விதத்தில் கற்றுத் தருகிறார்; கற்றுப் பயன்பெறுங்கள்.
RS. 70 More...by ராஜுமுருகன்
“உங்களுடைய கால் பெருவிரலிலோ, பல்லிலோ, தலையிலோ அல்லது இதயத்திலேயேகூட வலி இருந்தாலும் வேலை செய்யுங்கள்; வேலைதான் சிறந்த வலி நிவாரணி. மரணம், தூக்கம், க்ளோராஃபார்ம் ஆகியவற்றைவிட அதுதான் நன்றாக வேலை செய்யும்” என்றார் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த சீர்திருத்தவாதியும், எழுத்தாளருமான லியோனார்ட் உல்ஃப். வேலை! அதுவே செயல். நம்முடைய செயல் ஒவ்வொன்றும் நம்மை மேம்படுத்தும். நம்மை வாழவைக்கும். வாழும்போதே சிறப்பாக வாழ்கிறோம் என்ற உணர்வை நமக்கு நம்முடைய செயல்கள் ஏற்படுத்துகின்றன. அப்படிப்பட்ட செயல் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்? இதோ... பத்திரிகையாளர், எழுத்தாளர்,- திரைப்பட இயக்குநர் ராஜுமுருகன் போல. அவரது பயணத்தைப் போல செயல்கள் இருந்தால் அதுவே வாழ்வாகும். அதுவே பூரணத்துவம். ஆம்! ராஜுமுருகன் மேற்கொண்ட இலக்கு இல்லாத, இலக்குகளை கற்பித்த பயணம்தான், இதோ ‘ஜிப்ஸி’ என்ற பெயரில் உங்கள் கைகளில் தவழும் இந்த நூல். எந்த இடமும் சொந்த இடமாக இல்லாத, உயிரையும் உறவையும் தம்முடன் இணைத்து நிலம், நீர் ஆகியவற்றுடன் உறவாடி, காற்றுவழித் திரியும் நாடோடிகளைப் பற்றி நமக்கு தெரியாத- புரியாத வாழ்நிலைகளைத் தன் பயணத்தில் உணர்ந்து, அந்த உணர்வை வார்த்தைகளாக்கித் தந்துள்ளார் ராஜுமுருகன். ‘பச்சைத் தவளையைத் தின்னும் வாத்து பச்சை முட்டை போடும். தானியங்களைத் தின்னும் வாத்து பழுப்பு வண்ணத்தில் முட்டை போடும்’ & வாத்து மேய்க்கும் நாடோடிக் கூட்டத்திடம் இருந்து நமக்கு கிடைக்கும் தகவல் இது. இதுபோன்று ஏராளமான செய்திகளை, மனித மனத்தின் சொல்லாடல்களை, வரலாறுகளை தன்போக்கில் சொல்லிச் செல்லும்போது, ராஜுமுருகனும் ஜிப்ஸியாகவே உருமாறியிருக்கிறார். விகடனில் தொடராக வந்த ஜிப்ஸிக்கு கிடைத்த வரவேற்பு இப்போது நூல் வடிவெடுத்துள்ளது. ‘வட்டியும் முதலும்’ மூலம் சராசரி மனிதர்களின் நெகிழ்வைத் தந்த ராஜுமுருகன், ‘ஜிப்ஸி’ மூலம் நம்மை நெகிழ வைக்கிறார். காற்றுவழி மனிதர்களின் அற்புத தரிசனங்களைக் காண ஜிப்ஸியைத் தொடருங்கள்.
RS. 81 More...by டாக்டர் சங்கர சரவணன்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கு உதவும் வகையில் இந்த நூல் உருவாக்கப்பட்டிருக்கிறது. ‘பொது அறிவுக் களஞ்சியம்’ வரிசையில் நான்காவதாக வெளிவரும் நூல் இது. வி.ஏ.ஓ. முதல் ஐ.ஏ.எஸ். வரையிலான தேர்வுகளில் பொருளாதாரப் பாடத்தில் இருந்து குறிப்பிட்ட அளவுகளில் கேள்விகள் கேட்கப்படும். பொருளாதாரப் பாடத்தை எடுத்துப் படித்தவர்கள் எளிதில் விடையளித்து விடுவார்கள். ஆனால், மற்ற பாடங்களை எடுத்துப் படித்தவர்களுக்கு கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கும். அதற்குக் காரணம், சரியான புரிதல் இல்லாததே. அதைப்போக்கும் விதமாக நாணயம் விகடனில் தொடராக வந்தவைதான் இந்தக் கட்டுரைகள். ரூபாய் 1,2,3 என்று மூன்று பகுதிகளாகப் பிரித்து எளிமையாகக் கொடுத்துள்ளார் நூல் ஆசிரியர் டாக்டர் சங்கர சரவணன். பொருளாதாரப் பாடத்தலைப்புகளில் இருந்து போட்டித் தேர்வில் கேட்கப்பட்ட வினாக்களுக்கு விடைகளோடு விளக்கங்களையும் தந்துள்ளது சிறப்பம்சம். பொருளாதாரப் பாடத்தில் இடம்பெற்றுள்ள தகவல்களை ‘ஒரு வரிக்குறிப்புகள்’ என்ற தலைப்பில் நூலின் இறுதியில் கொடுத்திருப்பது கூடுதல் சிறப்பம்சம். இந்த நூலைப் படித்து முடித்தவுடன், பொருளாதாரப் பாடத்தில் உங்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும் என்பது நிச்சயம்.
RS. 84 More...by ஸ்ரீநிவாஸ் பிரபு
“அடடே..! எல்லா கேள்வியும் தெரிஞ்ச கேள்விங்கதான்; ஆனா, அதுக்கெல்லாம் நான் தேர்தெடுத்திருக்கும் பதில்தான் சரியான்னு தெரியல!” - இதுதான் இன்றைய மாணவர்கள் மற்றும் இளைய சமுதாயத்தினரின் கல்வி நிலை. சுழன்றுகொண்டு இருக்கும் உலகில், நாமும் தினம் தினம் ஓடிக்கொண்டுதான் இருக்கிறோம். அப்படி ஓடுபவர்களின் வெற்றி இலக்கு என்ன, நல்லதொரு பணி; அதுவும் அரசுப் பணி. இதற்கான நுழைவுத் தேர்வில் வெற்றி பெற நெக்குருகிப் படித்தாலும், ‘முடிவில் பாஸா... ஃபெயிலா? அதைச் சொல்லு’ என்பதுதான் இன்றைய சமுதாயத்தின் அதிவிரைவான எதிர்பார்ப்பு. இதை எதிர்கொள்ளும் வகையில், போட்டித் தேர்வு என்றால் என்ன, எந்தெந்தத் துறை எப்படியெல்லாம் போட்டித் தேர்வை நடத்துகின்றது, தேர்வை சந்திக்கும் முன்பு நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை எவை, எந்தெந்தப் பாடப் பிரிவின் கீழ் இந்தப் போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன என்கிற விவரங்களின் தொகுப்புதான் இந்த நூல். மேலும், பல்வேறு தேர்வுக் குறிப்புகளுடன், போட்டித் தேர்வை GENERAL INTELLIGENCE, GENERAL LANGUAGE, NUMERICAL ABILITY, GENERAL KNOWLEDGE என, நான்கு பிரிவுகளாகப் பிரித்து அது அதற்கான விடைகளையும் கொடுத்து, உங்களைப் பயிற்சிக் களத்திலும் இறக்கியுள்ளார் நூலாசிரியர். அனைத்துத் துறை வேலை வாய்ப்புகளுக்கும் போட்டித் தேர்வுகள், நுழைவுத் தேர்வுகள், தகுதித் தேர்வுகள் போன்றவை கட்டாயமாக்கப்பட்டுள்ளன. போட்டித் தேர்வு பாடத் திட்டம் தொடர்பான நுணுக்கமான சில பயிற்சிகளைக் கற்றுக்கொண்டாலே வெற்றி நம்மை தொற்றிக்கொள்ளும். முடிந்தவரை முயற்சிப்பதைவிட, முடிக்கும்வரை முயற்சிப்பதே சிறப்பு!
RS. 88 More...