Cart is Empty
by மதன்
அறிவுக்கு விருந்தாக, சிந்தனைக்குத் தெளிவாக, ஆனந்த விகடன் இதழ்களில் வெற்றி பவனி வரும் ‘ஹாய் மதன்’ கேள்வி_பதில் பகுதியை, பள்ளி_கல்லூரி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பு வாசகர்களும் படித்துப் பாராட்டி வருகிறார்கள். நவீன உலகத்து நாகரிகம், விஞ்ஞானம், சினிமா போன்ற விஷயங்களை விவரிப்பது மட்டுமல்லாமல், பண்டைய காலத்து கலை, கலாசாரம், வரலாறு என அனைத்துத் துறை சார்ந்த கேள்விகளுக்கு தன் கண்ணோட்டத்தில் மதன் பதில் அளிக்கும் அழகும், மனிதர்கள், விலங்குகள், பறவைகள், பூச்சிகள் என அனைத்து உயிரினங்களின் இயல்புகளை தனது எண்ணங்களில் கோத்து எழுதும் நேர்த்தியும் உண்மையிலேயே வாசகர்களின் அறிவுக்கு விருந்துதான்! ‘வாக்குறுதி தர ரொம்ப யோசிக்கிறவர்கள்தான் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவார்கள்!’ ‘சிறந்த மனிதனின் மனதில் ஓடுவது லட்சியங்கள். சாதாரண மனிதனின் மனதில் ஓடுவது ஆசைகள்!’ ‘விரோதிகளை ஒழித்துக் கட்ட சுலபமான ஒரு வழி _ அவர்களை நண்பர்களாக்கிக் கொண்டுவிடுங்கள்!’ _ இப்படி, சிந்தனைத் தெளிவு தரும் பதில்களும் ‘ஹாய் மத’னின் பலம்! ‘எனக்குப் பிடித்த அழகான சுற்றுலா தளம் _ புத்தகக் கடைகள்தான்’ என்று சொல்லும்
RS. 63 More...by மதன்
ஆனந்த விகடன் இதழ்களில் அறிவுக் களஞ்சியமாக, வெற்றிகரமாக பவனி வரும் ‘ஹாய் மதன்’ கேள்வி_பதில் பகுதி, பள்ளி_கல்லூரி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பு வாசகர்களையும் கவர்ந்து வருகிறது. வரலாறு படைத்தவர்களை மதன் தன் கண்ணோட்டத்தில் பாராட்டும் அழகும், விஞ்ஞான கண்டுபிடிப்புகளை அவர் கௌரவிக்கும் நேர்த்தியும், கிண்டலும் கேலியும் தொனிக்கும் கேள்விகளுக்கு அவர் அசராமல் விளாசித்தள்ளும் நகைச்சுவையான பதிலும்... படிக்கப் படிக்க திகட்டாதவை! மதன் தன் பரணில்கூட பல புத்தகங்களைத் தேடி, படித்து, அலசி, ஆராய்ந்து, அள்ளி வழங்கும் பதில்கள் சுவையாகவும் அறிவுபூர்வமாகவும் மனதைக் கவருவதால்தான், அதைப் படிக்கும் வாசகர்களும் உந்துசக்தி பெற்று நிறைய கேள்விகளை ஆர்வத்துடன் எழுதி அனுப்பிக் கொண்டு இருக்கிறார்கள். ‘கேட்கப்படாத கேள்விதான் விடை தெரியாத பதில்’ என்று சொல்லும் அளவுக்கு, சூரியனுக்குக் கீழே உள்ள அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள வாசகர்கள் காட்டும் ஆர்வம், அமோகமாக விற்பனையாகும் ‘ஹாய் மதன்’ புத்தக வரிசையில் தெரிகிறது! இது 7வது தொகுப்பு. ஆனந்த விகடனில் நவம்பர் 2008 முதல் அக்டோபர் 2009 வரை வெளியான கேள்
RS. 67 More...by விகடன் பிரசுரம்
இளமைப் பருவம் என்பது கடந்தகாலம், எதிர்காலம், நிகழ்காலம் சார்ந்த எண்ணற்ற கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பக்கூடிய மனநிலையைக் கொண்டது. பெரும்பாலானவர்களின் வாழ்க்கை வளமானதாக இருப்பதற்கும் இன்னல்கள் நிறைந்தவையாக அமைவதற்கும் இந்தப் பருவத்தில் எடுக்கக்கூடிய முடிவுகள்தான் காரணம். டீன் ஏஜ் பருவத்தைக் கடக்கும்போது சில சந்தேகங்கள் சங்கடங்கள் எழும். அந்த நேரத்தில் என்ன செய்வது யாரிடம் ஆலோசனை கேட்பது என்று யோசிக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், அப்படிக் கேட்பதனால் தரம் தாழ்ந்துவிடுவோமோ, நம்மைத் தவறாக எண்ணிவிடுவார்களோ என்ற ஒரு எண்ணமும் கூடவே எழுவது சகஜம்தான். இப்படி சங்கோஜப்படும் இளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும் சரியான ஆலோசனைகளை வழங்கவேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன், ஆனந்த விகடன் இதழ்களில் ‘டீன் கொஸ்டீன்’ என்ற தலைப்பில் வெளிவந்து கொண்டிருப்பதுதான் இந்த கேள்வி_பதில் பகுதி. இந்த நூலில், இளைஞர்களின் மனதில் எழும் கல்வி, உளவியல், உடற்கூறு, சட்டம் ஒழுங்கு என பல்வேறு விதமான சந்தேகங்களுக்கு அந்தந்த துறையில் உள்ள நிபுணர்களே வழங்கிய ஆலோசனைகள், இளம் பருவத்தினருக்கு வழிகாட்டியாக இருப்பதோடு மட்டுமல்லாமல் பெற
RS. 56 More...by திருமதி. ரூபியாஜோதி பாலச்சந்தர்
கல்வி மனித அறிவு வளர்ச்சியின் வித்து. எளிமை, கடினம், பொருள், கருத்து, விளக்கம், உரை, பாடல், கேள்வி ஆகிய பல நுண் கூறுகளைக் கொண்டது. இவையே தொடக்கக் கல்வி முதல் பட்டப் படிப்புகளை வரை நினைவாற்றல், அறிவாற்றல், செயல்திறன், பகுத்தறிவு, ஆளுமை போன்ற தனித்திறன் வெளிப்படுத்தும் நுண்ணறிவைக் கொடுக்கிறது. பள்ளி, கல்லூரி மற்றும் போட்டித் தேர்வு மாணவர்களுக்கான பல வழிகாட்டி நூல்களை விகடன் பிரசுரம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அவை கல்வி தொடர்பாக - கல்வி சார்ந்த பல நூல்கள் வெளிவந்து கல்வியின் வளர்ச்சிக்கு உரமாகியிருக்கின்றன. அதன் வரிசையில், TRB, SERT, TET, NET, SLET ஆகிய போட்டித் தேர்வு ஆர்வலர்களுக்கு உற்ற வழிகாட்டியாக வெளிவந்திருக்கிறது இந்த ‘கல்வியியல் கையேடு’ நூல். மேற்கண்ட தேர்வுகளை எழுதுவோருக்கு எல்லா வகையிலும் துணை நிற்கக்கூடியதாக இந்த நூல் விளங்கும். மேலும், B.Ed., M.Ed., கல்வியியல் கல்லூரிகளில் பயிலும் ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கும் உபயோகப்படும் விதத்தில் இந்த நூல் அமைந்திருக்கிறது. இதனோடு பல்வேறு போட்டித் தேர்வுகளில் கேட்கப்பட்ட வினா விடைகளையும், கல்வி பற்றிய சிந்தனையாளர்களின் கருத்துக்களையும், கல்வி சார்ந்த வாழ்வியல் விளக்கங்களையும் தன்னகத்தே கொண்டு களஞ்சிய தொகுப்பாக அமைக்கப்பட்டிருப்பது இந்த நூலின் சிறப்பம்சமாகும். நீங்கள் தெரிவு செய்து எழுதும் தேர்வுகளில் வெற்றியடையும் உத்தி இதனுள் கொட்டிக்கிடக்கிறது. வெற்றியடைய வாழ்த்துக்கள்.
RS. 231 More...by டாக்டர் இரா.ஆனந்த குமார், இ.ஆ.ப.
ஒருவரது மன ஓட்டம் மற்றொருவர் மனதில் தடங்களை உருவாக்குகிறது. தேர்வு வாழ்க்கைக்கும் வாழ்க்கைத் தேர்வுக்குமான ஆசிரியரது மன ஓட்டம் இங்கே கட்டுரைகளாகத் தடம் பதித்திருக்கிறது. உலக நாகரிகங்களுக்கெல்லாம் முன்னோடியான ரோம, கிரேக்க சாம்ராஜ்ஜியங்களின் வழியாகப் படர்ந்த ஆசிரியரின் பார்வை, வரலாற்றுச் சுவடுகளின் தனித்தன்மைகளை துல்லியமாய் அலசியிருக்கிறது. திரைப்படம், விளையாட்டு, விஞ்ஞானம், இயற்கை, ஒழுக்கம் என பல கண்ணோட்டங்களின் மீது பயணித்த ஆசிரியரின் கட்டுரைகள் உரையாடல்கள் மூலமாகவும் சுவாரஸ்யமான பல தகவல்களை அள்ளித் தருகிறது. கல்வி, வேலை, திருமணம், எதிர்காலம் என வாழ்க்கையின் அங்கங்கள் ஒவ்வொன்றையும் தேர்வு செய்வதில் மிகவும் கவனம் தேவை. தேர்வின் போது எதிர்பாராமல் ஏற்படும் சிறு சிறு தடுமாற்றங்களை எதிர்கொள்ளவும் தைரியமும் மன உறுதியும் வேண்டும். சில நேரங்களில் இவையே வாழ்வில் திருப்புமுனையாகவும் அமைந்துவிடலாம். பொதுவாக தேர்வு எழுதும்போது எப்படி நம்மை தயார் செய்துகொள்வோமோ அதுபோல வாழ்க்கையைத் தேர்வு செய்யும்போதும் கவனமாக இருக்க வேண்டும். எனினும் எல்லா சந்தர்ப்பங்களையும் நன்மைக்கே என்று எடுத்துக்கொள்ளும் பண்பு இருந்தால் முடிவு சுபமே என்கிறது இந்த நூல். நிலத்தில் விளையாடும் கால்பந்தையும், வாழ்க்கையில் உருண்டோடும் காலப்பந்தையும் உதைத்து, தேர்வுக்கும் வாழ்க்கைக்கும் இந்த நூலை ஒரு வழிகாட்டியாக அமைத்து தந்திருக்கிறார் நூலாசிரியர் டாக்டர் இரா.ஆனந்த குமார். தேர்வு செய்யுங்கள் இந்நூலை... வாழ்க்கையைத் தேர்வு செய்ய!
RS. 91 More...by டாக்டர் சங்கர சரவணன், எஸ்.முத்துகிருஷ்ணன்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கு பத்தாம் வகுப்பு தரத்தில்தான் ‘பொதுத் தமிழ்’ பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பாடத்திட்டம் ஒன்றாக இருந்தாலும் நடைமுறையில் தேர்வுகளுக்கு ஏற்ப வினாக்களின் தரத்திலும் மாற்றம் இருக்கிறது. அதிலும் 2013-ம் ஆண்டு டி.என்.பி.எஸ்.சி பாடத் திட்டம் மாற்றப்பட்ட பிறகு ‘பொதுத் தமிழ் வினாக்கள் மிகவும் கடினமாக இருக்கிறது, தேர்வு எழுத நேரம் போதாது’ என்று போட்டித் தேர்வர்கள் குறைபட்டுக்கொள்கிறார்கள். வினாக்களின் போக்குகளை புரிந்துகொண்டு அதற்கு ஏற்றார்போல் படிக்கவும் தேர்வு எழுதும் நேரத்தை நிர்வாகம் செய்யவும் டி.என்.பி.எஸ்.சி பொதுத் தமிழ் ஒரிஜினல் வினாத்தாள்களை தொகுத்துத் தந்துள்ளோம். பொதுத் தமிழ்ப் பாடத்தை படிக்கும் முன்பும் படித்த பின்பும் இந்த வினாக்களை படித்துப் பார்க்கும்போது, பொதுத் தமிழ்ப் பாடத்தில் உங்களது திறனை நீங்களே எடைபோட்டு பார்க்க முடியும். விடைகளும் கேள்விக்கு அருகிலேயே தரப்பட்டுள்ளதால் உடனுக்குடன் விடைகளை சரிபார்த்துக்கொள்ள முடியும். தேவையான இடங்களில் விடைகளுக்குத் தேவையான விளக்கங்களும் தரப்பட்டுள்ளன. இந்த நூலில் 2013, 2014, 2015, 2016 (பிப்ரவரி வரை) டி.என்.பி.எஸ்.சி. பொதுத் தமிழ் வினாத்தாள்களை தந்துள்ளோம். இதில் மொத்தம் 1,060 கேள்விகள் இடம்பெற்றுள்ளன. போட்டித் தேர்வர்கள் பயிற்சி எடுத்து பயத்தைப் போக்கி அரசு பணிக்குச் செல்ல இந்த வினாத் தொகுப்பு பயன் உள்ளதாக இருக்கும். வாழ்த்துகள்!
RS. 105 More...by டாக்டர் சங்கர சரவணன்
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-IIA தேர்வு எழுதுபவர்களுக்காகவே இந்த நூல் பிரத்யேகமாக வெளியிடப்படுகிறது. TNPSC-ன் குரூப்-IIA தேர்வு மற்றும் குரூப்-II முதன்மைத் தேர்வு ஆகிய இரண்டு தேர்வுகளுக்கும் சேர்த்து ஒரே நூலாகத் தந்துள்ளார் டாக்டர் சங்கர சரவணன். 2013, 2014, 2015-ம் ஆண்டு குரூப்-II தேர்வு வினாத்தாள்கள்-விடைகளுடன், தேவையான இடங்களில் விரிவான விளக்கங்களுடன் தந்துள்ளார் நூலாசிரியர். மத்திய அரசின் நிதி ஆயோக், ஜன் தன் யோஜனா, பிரதமரின் முத்ரா வங்கி போன்றவற்றைப் பற்றிய குறிப்புகளும் தமிழ்நாடு தொலைநோக்கு-2023, உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2015 போன்ற விவரங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பாட இறுதியில் கொடுத்துள்ள, பட்டப்படிப்பு தர பொது அறிவு பயிற்சி வினாக்கள், தேர்வு எழுதுகிறவர்கள் எளிதில் நினைவுகொள்ளும் வகையில் அமைக்கப்பட்டிருப்பது இந்தப் புத்தகத்தின் தனிச்சிறப்பாகும். விருது மற்றும் பரிசு விவரங்கள் 2015 வரை அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இந்த நூலில் உள்ள தகவல்கள் அனைத்தும் 2015 அக்டோபர் வரை அப்டேட் செய்யப்பட்டுள்ளது. வினா-விடைகளை தமிழ், ஆங்கிலத்தில் தந்திருப்பதோடு நூலின் இறுதியில் கலைச்சொல் அடைவும் தரப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பம்சம். பொது அறிவுக் களஞ்சியம் வரிசை நூல்களைப் போன்று இந்த குரூப்-IIA தேர்வு நூலும் தேர்வர்களுக்கு மிகுந்த பயனளிக்கும் என்பது திண்ணம்.
RS. 319 More...by டாக்டர் சங்கர சரவணன், டாக்டர் ஆ.ராஜா
யூ.பி.எஸ்.சி. மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கு உதவும் வகையில் இந்த நூல் உருவாக்கப்பட்டிருக்கிறது. ‘பொது அறிவுக் களஞ்சியம்’ வரிசையில் ஐந்தாவதாக வெளிவரும் நூல் இது. நடப்பு நிகழ்வுகளில் வரலாறு, அரசியல் அறிவியல், புவியியல், பொருளாதாரம், கண்டுபிடிப்புகள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் தகவல்களைத் தொகுத்து தந்துள்ளார்கள் டாக்டர் சங்கர சரவணன் & டாக்டர் ஆ.ராஜா. சமீபத்திய TNPSC தேர்வுகளில் கேட்கப்பட்டுள்ள வினாக்கள் ஒவ்வொரு அலகிலும் விடையோடு தரப்பட்டுள்ளன. சமீபத்திய ஆண்டுகளின் குரூப்-I முதன்மைத் தேர்வு ஒரிஜினல் வினாத்தாள் தரப்பட்டுள்ளது, தேர்வர்களுக்குப் பயிற்சி செய்துகொள்ள உதவியாக இருக்கும். குறிப்பிட்ட சில பகுதிகளுக்குப் பயிற்சி வினாக்களும் தரப்பட்டுள்ளன. போட்டித் தேர்வின் முதல் கட்டத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என்று அனைத்துக்கும் பயன்படக் கூடிய வகையில் தயாரித்திருப்பது இந்த நூலின் சிறப்பம்சம். அண்மை ஆண்டுகளில் ஐ.ஏ.எஸ். தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளும் பெரும்பாலான அலகுகளில் இடம் பெற்றுள்ளது இந்த நூலின் கூடுதல் சிறப்பம்சம். போட்டித் தேர்வில் வெல்வதற்கு இது போன்ற நூல்கள் உங்களுக்கு உற்ற துணைவனாக இருக்கும்.
RS. 347 More...by டாக்டர் சங்கர சரவணன், டாக்டர் ஆ.ராஜா
வி.ஏ.ஓ. பதவி ஒரு சின்ன ஐ.ஏ.எஸ். அலுவலர் பதவிக்கு ஒப்பானது. ஒரு கிராமத்துக்கான நலத் திட்டங்கள் அனைத்தையும் அந்தக் கிராமத்துக்குக் கொண்டு சேர்ப்பதும் கிராம மக்கள் வாழ்வில் உயர்வதற்கான கல்வி, வேலை வாய்ப்பு, நிலம் கொடுக்கல் வாங்கல் போன்ற பல விஷயங்களுக்கு ஆதாரமான பல சான்றிதழ்களை வழங்குவதும் அவரின் தலையாய பணி. வி.ஏ.ஓ. அலுவலர்கள் ஒவ்வொரு கிராமத்திலும் ஊழலற்ற நிர்வாகத்தை ஏற்படுத்தினால் நாடு ஊழலற்ற நாடாக உயரும். ஓர் அலுவலர் ஊழலற்றவராகத் திகழ வேண்டுமானால் அவர் அந்தப் பதவிக்கு வரும் விதமும் அவ்வாறே அமைய வேண்டும். தன் அறிவாலும் திறமையாலும் போட்டித் தேர்வை வெற்றி கொண்டு, வரும் ஒரு நல்ல அலுவலரால் ஊரும் நாடும் சிறக்கும். வி.ஏ.ஓ. தேர்வுக்கு டி.என்.பி.எஸ்.சி. தேர்வாணையம் புதிய பாடத் திட்டத்தை வெளியிட்டுள்ளது. இந்தப் புதிய பாடத் திட்டத்துக்கான பாடக் குறிப்புகளை முப்பருவ மற்றும் சமச்சீர் பாடப் புத்தகங்களிலிருந்தும் 2011-12ம் ஆண்டு வி.ஏ.ஓ. தேர்வு வினாக்களின் அடிப்படையிலும் இந்த நூலை டாக்டர் சங்கர சரவணன், டாக்டர் ஆ.ராஜா ஆகியோர் தொகுத்துத் தந்திருக்கின்றனர். குறிப்பாகக் கிராம நிர்வாகம், ஆப்டிட்யூட் ஆகிய புதிய பாடப் பகுதிகளுக்கான குறிப்புகள் நுட்பமாகத் தயாரிக்கப்பட்டு மாதிரி வினாக்களோடு தரப்பட்டுள்ளது சிறப்பு அம்சம். நடப்பு நிகழ்வுகளுக்கு 2013-14ம் ஆண்டு நாட்குறிப்புகளைப் பின்பற்றி தன்னறிவு சோதனை வினாக்கள் தரப்பட்டுள்ளன. போட்டித் தேர்வில் வெற்றி பெற்று அரசாங்க அலுவலராக வாழ்த்துகள்!
RS. 350 More...by டாக்டர் சங்கர சரவணன்
போட்டித் தேர்வில் ஒரே ஒரு மதிப்பெண் குறைந்து போய், வேலைவாய்ப்பை நூலிழையில் தவறவிட்டுப் பரிதவிப்போர் ஏராளம். ஏனெனில், போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில் முன்னணியில் இருப்பவர்களுக்கே முன்னுரிமை என்கிற நிலை. வருடந்தோறும் ஏற்படும் காலிப் பணியிடங்களை நிரப்ப, ‘தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்’ பல்வேறு போட்டித் தேர்வுகளை நடத்துகிறது. ஆயிரம் காலியிடங்களுக்கு லட்சக்கணக்கில் விண்ணப்பிக்கிறார்கள். எனவே, இந்தப் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற, புரிதலுடன் கூடிய படிப்பும் பயிற்சியும் அவசியம் தேவை. போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்குப் பயன்படும் வகையில் பிரத்யேகமாக ‘போட்டித் தேர்வு களஞ்சியம்’ வரிசையில் புத்தகங்கள் வெளியிடத் தீர்மானித்தோம். அந்த வரிசையில் ‘இந்திய அரசமைப்பு’ முதல் புத்தகமாக வெளிவருகிறது. TNPSC-யின் புதிய பாடத்திட்டப்படி இந்த நூலைத் தொகுத்துள்ளார், நூல் ஆசிரியர் டாக்டர் சங்கர சரவணன். இதில் இந்திய அரசமைப்பின் சிறப்பியல்புகள், அடிப்படை உரிமைகள், அடிப்படைக் கடமைகள், மத்திய நாடாளுமன்றம் மற்றும் இந்திய அரசமைப்பில் உள்ள அனைத்து அம்சங்களும் விரிவாகத் தொகுக்கப்பட்டுள்ளன. மாநில நிர்வாகம், தேர்தல் ஆணையம், சட்டத்துறை, உள்ளாட்சி அமைப்பு, மாவட்ட நிர்வாகம் போன்ற நிர்வாகரீதியிலான அமைப்புகளைப் பற்றியும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் ஜிழிறிஷிசி குரூப்-1 மற்றும் குரூப்-2 தேர்வுகளில் கேட்கப்பட்ட இந்திய அரசமைப்பு தொடர்பான வினாக்கள், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தொகுக்கப்பட்டு, தேவையான இடங்களில் விடைகளுடன் உரிய விளக்கங்களும் தரப்பட்டுள்ளது இதன் சிறப்பு அம்சம். சமச்சீர், முப்பருவக் கல்வி பாடநூல்களை அடிப்படையாகக்கொண்ட புதிய தகவல்கள் இடம் பெற்றுள்ளது கூடுதல் சிறப்பம்சம். மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் நூலின் இறுதியில் கலைச் சொற்களும் தரப்பட்டுள்ளன. மொத்தத்தில், போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கு மட்டுமல்ல; ஒவ்வோர் இந்திய குடிமகனும் வைத்திருக்க வேண்டிய பொக்கிஷப் புத்தகம் இது.
RS. 91 More...