Cart is Empty
by மருத்துவர் கு.சிவராமன்
பயணங்கள் எப்போதுமே சுவாரஸ்ய அனுபத்தைத் தருபவை. மனிதனுக்குள் பலவித மாற்றங்களை, புத்துணர்ச்சியை ஏற்படுத்துபவை. கொலம்பஸின் பயணம் அமெரிக்காவைக் கண்டுபிடித்தது. வாஸ்கோடகாமாவின் பயணம் இந்தியாவின் கடல் வழியைக் கண்டுபிடித்தது. இப்படி பயணங்கள் தேடல்களை நமக்குள் தந்து கொண்டிக்கின்றன. மனிதன் மட்டுமல்ல, பல நாட்டின் நிலங்களை, கடல்களைக் கடந்து வேடந்தாங்கல் வந்திறங்கும் ஒரு பறவையின் பயணமும் அதற்கு புதிய அனுபவங்களைக் கொடுக்கிறது. இப்படி ஏதோ ஒரு தேடலின் பயணங்கள்தான் உலகைப் புதுப்பித்துக்கொண்டே வருகிறது. கனடா, இங்கிலாந்து, கத்தார் உள்ளிட்ட பல நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்ட மருத்துவர் சிவராமன் அந்தந்த நாடுகளின் கலாசாரம், மனிதர்களின் பழக்கவழக்கங்கள், பார்க்க வேண்டிய இடங்கள், சூழலியல் மாறுபாடுகள் என ஒவ்வொரு நாட்டைப் பற்றியும் அங்கு தமக்கேற்பட்ட அனுபவங்கள் பற்றியும் இந்தப் பயணக் கட்டுரைகளில் பதிந்திருக்கிறார். மேலும் உலக நாடுகளில் வாழும் தமிழர்கள் நம் தமிழ்க் கலாசாரத்தை, பண்டிகைகளை எப்படியெல்லாம் போற்றி வருகின்றனர் என்றும், அந்தந்த நாடுகளின் உணவு கலாசாரம் பற்றியும் இந்த நூலில் குறிப்பிட்டிருக்கிறார். இனி, பயணத்தைத் தொடருங்கள்...
RS. 160 More...by டாக்டர் சங்கர சரவணன்
குரூப்-IV தேர்வு எழுதுவோர்களுக்காகவே இந்த நூல் பிரத்யேகமாக வெளியிடப்படுகிறது. குரூப்-IV தேர்வு பாடத்திட்டத்தில் பொதுத் தமிழ் மற்றும் பொது அறிவு ஆகிய இரண்டு தாள்களுக்கும் சேர்த்து ஒரே நூலாக அமைந்துள்ளது. பொது அறிவியல், பொது அறிவும் நடப்பு நிகழ்வுகளும், புவியியல், வரலாறும் பண்பாடும், இந்திய அரசமைப்பு, இந்தியப் பொருளாதாரம், இந்திய விடுதலைப் போராட்டம், திறனறிதலும் அறிவுக்கூர்மையும் மற்றும் பொதுத் தமிழில் இலக்கணமும், இலக்கிய வரலாறும் மற்றும் தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் ஆகிய பாடங்களுக்கான விளக்கங்களைக் கொண்ட நூலாகத் தந்திருக்கிறார்கள் டாக்டர் சங்கர சரவணன் மற்றும் டாக்டர் ஆ.ராஜா. இலக்கணம், இலக்கியம் அமைந்த பொதுத் தமிழ் பாடப் பயிற்சி வினாக்கள் டி.என்.பி.எஸ்.சி போட்டித் தேர்வு எழுதுகிறவர்களுக்கு மாத்திரமல்ல, தமிழ் ஆர்வலர்களுக்கும் பெருந்துணையாக அமையும். ஒவ்வொரு பகுதியிலும் தன்னறிவுச் சோதனை வினாக்களுடன் அவற்றுக்கு விடைகளைக் கொடுத்திருப்பதும் தேவையான இடங்களில் பயிற்சி வினாக்களைக் கொடுத்திருப்பதும் தேர்வு எழுதுவோருக்கு மிகுந்த பயன் அளிக்கும். தகவல்கள் அனைத்தும் 2015 செப்டம்பர் வரை அப்டேட் செய்யப்பட்டுள்ளது இந்த நூலின் சிறப்பம்சம். மேலும் 2012, 2013 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் வெளிவந்த டி.என்.பி.எஸ்.சி வினாத்தாள்களை இந்நூலின் இறுதியில் இணைத்திருப்பது கூடுதல் சிறப்பம்சமாகும். பொது அறிவுக் களஞ்சியம் வரிசை நூல்களைப் போன்று இந்த குரூப்-4 தேர்வு நூலும் தேர்வர்களுக்கு மிகுந்த பயனளிக்கும் என்பது திண்ணம்.
RS. 350 More...by ராஜுமுருகன்
“உங்களுடைய கால் பெருவிரலிலோ, பல்லிலோ, தலையிலோ அல்லது இதயத்திலேயேகூட வலி இருந்தாலும் வேலை செய்யுங்கள்; வேலைதான் சிறந்த வலி நிவாரணி. மரணம், தூக்கம், க்ளோராஃபார்ம் ஆகியவற்றைவிட அதுதான் நன்றாக வேலை செய்யும்” என்றார் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த சீர்திருத்தவாதியும், எழுத்தாளருமான லியோனார்ட் உல்ஃப். வேலை! அதுவே செயல். நம்முடைய செயல் ஒவ்வொன்றும் நம்மை மேம்படுத்தும். நம்மை வாழவைக்கும். வாழும்போதே சிறப்பாக வாழ்கிறோம் என்ற உணர்வை நமக்கு நம்முடைய செயல்கள் ஏற்படுத்துகின்றன. அப்படிப்பட்ட செயல் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்? இதோ... பத்திரிகையாளர், எழுத்தாளர்,- திரைப்பட இயக்குநர் ராஜுமுருகன் போல. அவரது பயணத்தைப் போல செயல்கள் இருந்தால் அதுவே வாழ்வாகும். அதுவே பூரணத்துவம். ஆம்! ராஜுமுருகன் மேற்கொண்ட இலக்கு இல்லாத, இலக்குகளை கற்பித்த பயணம்தான், இதோ ‘ஜிப்ஸி’ என்ற பெயரில் உங்கள் கைகளில் தவழும் இந்த நூல். எந்த இடமும் சொந்த இடமாக இல்லாத, உயிரையும் உறவையும் தம்முடன் இணைத்து நிலம், நீர் ஆகியவற்றுடன் உறவாடி, காற்றுவழித் திரியும் நாடோடிகளைப் பற்றி நமக்கு தெரியாத- புரியாத வாழ்நிலைகளைத் தன் பயணத்தில் உணர்ந்து, அந்த உணர்வை வார்த்தைகளாக்கித் தந்துள்ளார் ராஜுமுருகன். ‘பச்சைத் தவளையைத் தின்னும் வாத்து பச்சை முட்டை போடும். தானியங்களைத் தின்னும் வாத்து பழுப்பு வண்ணத்தில் முட்டை போடும்’ & வாத்து மேய்க்கும் நாடோடிக் கூட்டத்திடம் இருந்து நமக்கு கிடைக்கும் தகவல் இது. இதுபோன்று ஏராளமான செய்திகளை, மனித மனத்தின் சொல்லாடல்களை, வரலாறுகளை தன்போக்கில் சொல்லிச் செல்லும்போது, ராஜுமுருகனும் ஜிப்ஸியாகவே உருமாறியிருக்கிறார். விகடனில் தொடராக வந்த ஜிப்ஸிக்கு கிடைத்த வரவேற்பு இப்போது நூல் வடிவெடுத்துள்ளது. ‘வட்டியும் முதலும்’ மூலம் சராசரி மனிதர்களின் நெகிழ்வைத் தந்த ராஜுமுருகன், ‘ஜிப்ஸி’ மூலம் நம்மை நெகிழ வைக்கிறார். காற்றுவழி மனிதர்களின் அற்புத தரிசனங்களைக் காண ஜிப்ஸியைத் தொடருங்கள்.
RS. 81 More...by கா.பாலமுருகன்
கனரக வாகனங்களை ஓட்டிச்செல்லும் லாரி ஓட்டுநர்கள் இரும்புக் குதிரைகள் என்றாலும் ஈரம் குறையாத மனசுடைய மனிதர்களாகவே வாழ்கிறார்கள். பயணமே இவர்களுக்கு வாழ்க்கையாகிப்போனது. நெடுஞ்சாலைகளில், மலைப்பாதைகளில் வெயில், மழை என பாராமல் பயணிக்கும் இந்த வாழ்க்கையை, விரும்பியோ விரும்பாமலோ தேர்ந்தெடுத்து வாழ்வது இவர்களது இயல்பாகிவிட்டது. நெடுஞ்சாலைப் பயணங்களில் லாரி ஓட்டுநர்கள் படும் இன்னல்களை இந்த நூல் எடுத்துரைக்கிறது. அவற்றில் ஒன்று - கொள்ளை; விதவிதமாக பணம் பறிப்பவர்கள் மத்தியில் பணத்தைப் பிரித்து ஆங்காங்கே ஒளித்துவைத்து தன்னையும் தன் உடைமைகளையும் காப்பாற்றுவதற்கே அன்றாடம் போராடுகிறார்கள். விபத்து, வழக்கு, போலீஸ், கொலை, கொள்ளை, நோய் என அனைத்தையும் தாண்டி இந்தத் தொழிலை இவர்கள் நேசிக்கிறார்கள். கிட்டத்தட்ட 40, 50 ஆண்டுகள் இப்பணியில் தங்களது ஈடுபாட்டைச் செலுத்தியிருப்பவர்களும் உண்டு. திறமையான, அனுபவம்கொண்ட டிரைவராக இருந்தாலும், பயணப்படும் சாலையில் ஏதாவது பிரச்னை இருக்கிறதா என்பதைக் கவனித்துப் பயணிப்பது இவர்களுக்கான சவாலான விஷயம். பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிக்கும் தரைவழிப் போக்குவரத்தான லாரி பயணத்தில் ஏற்படும் இன்னல்களைக் களைய, தேசிய நெடுஞ்சாலைகளுக்குத் தனி பாதுகாப்பு ஏற்பாடு செய்யவேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார் நூலாசிரியர் கா.பாலமுருகன். லாரி ஓட்டுநர்கள் பற்றிய தவறான கண்ணோட்டத்தை விலக்கி, அவர்களின் உண்மையான நிலையை அவர்களுடன் பயணித்துப் பதிவு செய்திருக்கிறார். மோட்டார் விகடனில் வெளியான நெடுஞ்சாலை வாழ்க்கை, நூலாக்கம் பெற்று இப்போது உங்களையும் அழைத்துச் செல்லக் காத்திருக்கிறது!
RS. 123 More...by சு.வெங்கடேசன்
வைகை நதி நாகரிகம்! ஒரு நகரத்தைப் பற்றியும் அங்கு நிலவிய ஒரு நாகரிகத்தையும் பற்றியது. எழுத்துகள், ஆவணங்கள், சான்றுகள், மரபுகள், சாட்சியங்கள், இலக்கியங்கள், காப்பியங்கள், ஆய்வுகள் யாவும் ஆதி மரபை நினைவுபடுத்தி, 2400 ஆண்டுகள் பழைமையான நம் நாகரிகத்தின் அடையாளத்தைப் பதிவு செய்கிறது. பாண்டிய, சேர, சோழர்களின் செல்வச் செழிப்பான வாழ்வைக் கண்டறிவதோடு கீழடி, தேனூர் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட ஆவணங்கள்வழி யாரும் அறியாத பல தகவல்கள் ஆனந்தவிடனில் கட்டுரையாக வெளியாகி அவற்றை மக்கள் அறிந்துகொண்டனர். நம் பழம்பெரும் வரலாற்றை நாம் அறிய முற்படுவதும் இவற்றை வைத்துத்தான். காப்பியங்களைப் படித்த நாம் காப்பியங்களுக்குள் சென்று காணும் சூழலை இந்த நூல் ஏற்படுத்துகிறது. ஆதி மனிதன் ஓவியத்தின் வழியாக தனக்கான வாழ்வு நெறிகளை வகுத்துக்கொண்டான். அந்த ஓவியத்தைச் சுண்டக் காய்ச்சி எடுத்த வடிவமான எழுத்துகள்தாம் பழம்பெருமை பேசுகின்றன. இன்று நாம் சுலபமாக உரையாடும் எழுதும் வடிவத்துக்கு அவைதான் தாய் எழுத்துகள். வளர்ந்த நாகரிகத்தின் பழைமையான சாட்சியங்கள் பாறை ஓவியங்கள்தான். பல நூற்றாண்டைக் கடந்தும் ரோமானியக் கப்பல்கள் இருந்ததற்கான சான்றாக பானையின் கோட்டோவியங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு நாட்டு வணிகமும் எவ்வாறு, எப்படி நடந்தது என்பதைப் பற்றியும் ரோமாபுரியைச் சேர்ந்த மண்பாண்டங்களும் வட இந்திய பிராகிருதப் பெயர்களுமாக வணிகமும் பண்பாடும் கைகோத்து நடந்த பெருநகரமாக விளங்கியது மதுரை மாநகரம் என்பதையும் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் நூல் ஆசிரியர் சு.வெங்கடேசன். காவியத்தில் வருகிற குறிப்புகளை வைத்து, அகழாய்வு நடத்தி கண்டறியப்பட்ட நகரத்தையே பூர்வீகப் பெயர்கொண்டு குறிப்பிட்டது ஏன்? காப்பியங்களின் வழி கிடைத்த நிலக்குறிப்பை அடிப்படையாக வைத்து மண்ணுக்குள் இருக்கும் நகரை ஆய்வாளர்கள் என்னவென்று குறிப்பிட்டார்கள் என்பன போன்ற கேள்விகளுக்கு விடை தருவதோடு, பழங்கால வைகை நாகரிகத்தை நம் கண்முன் காட்டும் அரிய பொக்கிஷம் இது.
RS. 149 More...by டாக்டர் இரா.ஆனந்த குமார், இ.ஆ.ப.
வதம்பச்சேரி என்னும் கிராமத்தில் தமிழ் வழிக் கல்வி பயின்று ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற டாக்டர் இரா.ஆனந்த குமார் தன் வாழ்க்கை அனுபவங்களைக் கலந்து இளைஞர்களுக்காக எழுதியுள்ள வழிகாட்டு நூல் இது. ஐ.ஏ.எஸ். என்பது இளைஞர்கள் பலருக்கு வாழ்வின் லட்சிய கனவாக உள்ளது. அப்படி ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றியை எட்டிப்பிடிக்க விரும்புபவர்களுக்கு அதை அடைய உதவும் வழிகளை, படிக்கும் அனுபவத்தை, கைக்கொள்ள வேண்டிய அறநெறிகளை ஒரு நண்பனைப் போல நின்று சுவையாக பேசியுள்ளார். படிப்பைச் சுமையாக நினைக்கும் இளைய தலைமுறைக்கு அதை சுகமாக மாற்றும் கலையை இந்த நூலில் கேலிச் சித்திரங்களுடன் கற்றுத் தருகிறார் நூல் ஆசிரியர். தனக்கு சொல்லிக்கொடுத்த ஆசிரியர்கள், நண்பர்கள், தன்னுடைய மேலதிகாரிகள் என்று அனைவரிடமும் இருந்தும் ஒவ்வொரு நல்ல விஷயத்தைக் கற்றுக்கொண்ட இவர், அதையே வாசகர்களுக்கும் பயனுள்ள விதத்தில் எடுத்துக்கூறியிருப்பது இந்த நூலின் சிறப்பு. ‘எதிர்ப்படுகின்ற எல்லோரிடத்திலும் ஏதாவதொன்றைக் கற்றுக்கொள்ள வேண்டும்’ என்ற திரைப்பட வசனத்தைப் போல தான் கற்றுக்கொண்டதை பிறருக்கும் பயன்படும்விதத்தில் கற்றுத் தருகிறார்; கற்றுப் பயன்பெறுங்கள்.
RS. 70 More...by டாக்டர் சங்கர சரவணன், டாக்டர் த.ராமர்
ஐ.ஏ.எஸ். தேர்வு என்றாலே மாணவர்களுக்கு ஒருவித பயம் இருப்பது உண்மை. 30&40 வருடங்களுக்கு முன்பு வரை தமிழகத்திலிருந்து ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றவர்களின் சதவிகிதம் அதிகமாக இருந்தது. ஆனால், அடுத்த சில ஆண்டுகளில் இந்த விகிதம் மிகவும் குறைந்தது. சமீப காலங்களில் தேர்ச்சி விகிதம் அதிகரித்து இருக்கிறது. ஐ.ஏ.எஸ். தேர்வு பற்றிய புரிதல் அதிகரித்து இருப்பது உண்மைதான். ஆனாலும் தமிழ்நாட்டில் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க வேண்டும். அதற்குப் பள்ளி, கல்லூரிக் காலங்களிலேயே மாணவர்களைத் தயார்ப்படுத்த வேண்டும். மாணவர்களுக்கு டாக்டர் சங்கர சரவணன் மற்றும் டாக்டர் த.ராமர் ஆகியோர் இணைந்து எழுதிய இந்த ‘இந்தியா கையேடு’ பெரிதும் உதவும். ஐ.ஏ.எஸ். தேர்வு என்பது பல பகுதிகளை உள்ளடக்கியது. அதில் ஒரு பகுதியான இந்தியாவைப் பற்றி முழுமையாக இந்த நூலில் விவரிக்கப்பட்டு உள்ளது. இந்திய வரலாறு, புவியியல், பொருளாதாரம், அரசமைப்பு, அறிவியல் தொழில்நுட்பம், கலை, இலக்கியம் பற்றிய அனைத்துத் தகவல்களையும் ஒரே தொகுப்பாகத் தந்துள்ளார்கள் நூல் ஆசிரியர்கள். 2013-ம் ஆண்டு மற்றும் அதற்கு முந்தைய வருடங்களில் ஐ.ஏ.எஸ். முதல் கட்டத் தேர்வில் இந்தியா பற்றிக் கேட்கப் பட்ட பல வினா - விடைகள், விளக்கத்தோடு, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தரப்பட்டுள்ளன. டி.என்.பி.எஸ்.சி மற்றும் ஐ.ஏ.எஸ். தேர்வுகளுக்குத் தாயாராகி வரும் கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி எதிர்காலத்தில் தயாராகப்போகும் பள்ளி மாணவர்களும் அவசியம் படிக்க வேண்டிய நூல். புத்தகங்கள் வாங்குவதற்கு செய்யும் செலவு... எதிர்கால வெற்றிக்கும் அறிவுக்குமான முதலீடு!
RS. 189 More...by விகடன் பிரசுரம்
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆனந்த விகடன், கடந்த எண்பத்து ஐந்து ஆண்டுகளாக ஆற்றி வரும் பணியைப் பற்றி வாசகர்களுக்குத் தனியாகச் சொல்லத் தேவையில்லை. நம் பாரதம் ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த காலம்தொட்டு, சுதந்திர தேசத்தின் இன்றைய ஆட்சி முறை வரையில் தயங்காமல் விமரிசனங்களை வெளியிட்டு வருகிறது விகடன். மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபபாய் பட்டேல், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் என இந்தியச் சுதந்திரத் துக்காகப் பாடுபட்ட தலைவர்களைப் பற்றியும், அவர்களின் சுதந்திரப் போராட்ட நடவடிக்கைகள் பற்றியும் விரிவான கட்டுரைகள் வெளியிட்டு, மக்களிடம் சுதந்திர வேட்கையைப் பரப்பியதில் ஆனந்த விகடனுக்கு முக்கியப் பங்கு உண்டு. பிரிட்டிஷாரை எதிர்த்துக் கார்ட்டூன்களும் தலையங்கங்களும் துணிந்து வெளியிட்டு, அவர்களின் ஒடுக்குதல் நடவடிக்கையை எதிர்த்துப் போராடிய சந்தர்ப்பங்களும் மறக்க இயலாதவை. கசந்து வடியும் பல உண்மைகளைக்கூட நகைச்சுவைத் தேன் தடவிக் கொடுப்பதன் மூலம்... சிரித்துக்கொண்டே ஜனங்களைச் சிந்திக்கச் செய்வது விகடனுக்கே உரிய பாணி! 'எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே’ என்ற தனது கொள்கையிலிருந்து இம்மியும் வழுவாமல்... அரசாங்கம், அதிகார அமைப்புகள், ஆன்மிகம், இலக்கியம், ஓவியம், இசை, நடனம், திரைப்படம் என சமுதாயத்தின் அத்தனை அம்சங்களிலும்... அந்தந்த காலகட்டத்தைப் பிரதிபலிக்கும் வகையில் சுவாரஸ்யமான செய்தி விருந்து அளித்து வந்திருக்கிறான் விகடன். ஆனந்த விகடன் பிறந்த 1926-ம் ஆண்டு தொடங்கி, 2000-ம் ஆண்டு வரையிலான 75 ஆண்டு கால விகடனின் விறுவிறுப்பான பதிவுகள்தான் 'ஆனந்த விகடன் காலப் பெட்டகம்’ என்கிற நூலாக உங்கள் கையில் கம்பீரமாக மின்னிக்கொண்டு இருக்கிறது. ஆழ்கடலில் முத்தாக அனைத்துத் தகவல்களையும் தேர்ந்தெடுத்து, அழகாகத் தொகுத்திருப்பவர்கள் ரவிபிரகாஷ், ராஜா. பக்கங்கள் புரளப் புரள... நம் தேசத்தின் கடந்த கால சரித்திரத்தை, நிகழ்காலத்தில் நின்றபடியே அணுஅணுவாகச் சுவைக்கப் போகிறீர்கள். அந்த வகையில், இந்தக் காலப் பெட்டகம் என்னும் பொக்கிஷத்துக்கு உங்கள் வீட்டு நூலகத்தில் நிரந்தரமான ஓர் இடம் நிச்சயம் உண்டு!
RS. 140 More...by விகடன் பிரசுரம்
அரசியல், சமூகம், சினிமா, போலீஸ், கோர்ட் நடவடிக்கை என நாட்டு நடப்புகளை அவ்வப்போது கவனித்து வருபவர்கள், அந்தச் சம்பவத்தின் குறைபாடுகளைத் தெரிந்து கொண்டு, அதை நக்கல், நையாண்டி செய்து பேசத் தோன்றும். பத்திரிகைச் செய்திகளைப் படிப்பவர்கள், அறிவுபூர்வமான பல தகவல்களை அறிந்து கொண்டு, அதை மற்றவர்களுக்கும் சுவையாகச் சொல்லத் தோன்றும். இப்படி, நமது கருத்துகளையும், நமக்குத் தெரிந்த தகவல்களையும் மற்றவர்களுக்குச் சுவாரஸ்யமாகச் சொல்ல சிறந்த வழி கேள்வி_பதில் அமைப்புதான். நாம் தெரிந்துகொள்ளும் தகவல்களே சில நேரங்களில் நமக்குள் சில கேள்விகளை எழுப்புவதும் உண்டு. அதன் அடிப்படையில், ஆனந்த விகடன் வாசகர்களின் மனங்களுக்குள் எழுந்த தகவல்களுக்கு, அவர்களே கேள்விகளை எழுப்பி, அதற்கு ‘சுருக்’கென்று பதிலும் எழுதத் தூண்டியபோது... பிரமிக்க வைத்தனர்! உதாரணமாக, சுவாரஸ்யமான, அறிவுபூர்வமான, சிந்தனையைத் தூண்டும் விதமாக அமைந்த பதில்கள் வாசகர்களின் ரசனையை வெளிப்படுத்தின. விமரிசனங்களுக்கு உரியவர்களின் மனம் புண்படாமல், நையாண்டி செய்து எழுதி அனுப்பிய பதில்கள் ரசிக்க வைத்தன! மொத்தத்தில், சிந்திக்க வைத்த அற்புதமான கேள்விகளும், பொருத்தமான பதில்களுமாக, வாசகர்களே படைத்து அளித்த பயனுள்ள தகவல்களின் பெட்டகம்தான், ‘நானே கேள்வி... நானே பதில்!’
RS. 50 More...by விகடன் பிரசுரம்
2011-ஜனவரியில், ‘சென்னை புத்தகக் காட்சி’ நடந்த நேரத்தில் ‘ஆனந்த விகடன் காலப்பெட்டகம்’ வெளியானது. 1926 முதல் 2000 வரையிலான தமிழக, இந்திய மற்றும் உலக நிகழ்வுகளைப் படம்பிடித்துக் காட்டிய விகடனின் காலக் கண்ணாடி அந்தப் புத்தகம் என்றால் மிகையில்லை! அந்தப் புத்தகத்துக்கு வாசகர்களாகிய உங்களிடம் கிடைத்த அமோக வரவேற்பை எண்ணி மகிழ்ச்சியும் பிரமிப்பும் அடைந்த அதே வேளையில், உங்களில் பலர் தெரிவித்திருந்த ஒரு நியாயமான ஆதங்கத்தையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். ‘ஒவ்வோர் ஆண்டும் நடந்த முக்கியச் சம்பவங்களை ஆனந்த விகடன் எப்படி மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறது என்பதை ‘காலப் பெட்டகம்’ புத்தகம் மூலம் தெரிந்துகொண்டோம். ஆனால், ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதமாக... முக்கிய சம்பவங்கள் ஒவ்வொன்றிலும் ஒரு துளியளவே படிக்கக் கிடைத்தது. உதாரணமாக, தமிழ் சினிமாவின் முதல் பேசும்படமான ‘காளிதாஸ்’ படத்துக்கு கல்கி எழுதிய விமர்சனத்தில் ஆரம்பச் சில வரிகள்தான் எங்களுக்குப் படிக்கக் கிடைத்தன. அந்த வரிகளைப் படித்ததுமே, Ôஇந்த விமர்சனக் கட்டுரையை முழுமையாகப் படிக்க மாட்டோமாÕ என்று அடக்க முடியாத பேராவல் உண்டாகிவிட்டது. எனவே, அடுத்த முறை புத்தகம் வெளியிடும்போது, இதை மனத்தில் கொண்டு, அந்தக் காலத்தில் விகடனில் வெளியான சினிமா, அரசியல் மற்றும் சமூகக் கட்டுரைகளை அதிகம் குறைக்காமல், முடிந்தால் முழுமையாக எங்களுக்குப் படிக்கக் கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்’ என்று உங்களின் எண்ணத்தை கடிதம், இ-மெயில் உள்ளிட்ட அனைத்து தகவல் பரிமாற்றச் சாதனங்களின் மூலம் எங்களிடம் தெரிவித்துள்ளீர்கள். இதோ, அது நிறைவேறுகிறது - இந்தப் பொக்கிஷத்தில்! காந்தி முதல் ஜெயலலிதா வரை, டி.பி.ராஜலட்சுமி முதல் ஐஸ்வர்யா ராய் வரை, நௌஷாத் முதல் ஏ.ஆர்.ரஹ்மான் வரை... இப்படி, அரசியல், சினிமா, ஆன்மிகம், இசை, நடனம், இலக்கியம் என அனைத்துத் துறைகளிலும் அந்தந்த காலகட்டத்தில் ஆனந்த விகடனின் பங்களிப்பை அதே சுவையோடும் ரசனையோடும் தொகுத்துக் கொடுத்துள்ளோம். லக்ஷ்மி, ஜெயகாந்தன், சுஜாதா... என ஸ்டார் ரைட்டர்களின் சிறுகதைகளும் உண்டு. உங்கள் ரசனையும், தேடலும்தான் இந்தப் பொக்கிஷத்தில் மின்னும் அத்தனை மணிகளுக்கும் ஆதாரம்!
RS. 161 More...