Cart is Empty
by சாந்தா ஜெயராஜ்
சைனீஸ் ஃபிரைட் ரைஸ், முட்டை பிரியாணி, கோழி பிரியாணி, ஆம்பூர் பிரியாணி, ஐதராபாத் பிரியாணி... பட்டியலைப் பார்க்கும்போதே ஏக்கம் பிறக்கிறதா? பன்னாட்டு அசைவ உணவுகளையும் பந்தி வைக்கும் இந்த நூல், அசைவ உணவு விரும்பிகள் அனைவருடைய வீடுகளிலும் இருக்க வேண்டிய அவசிய வழிகாட்டி என்றால், அதில் எள் அளவும் மிகையில்லை. ஹோட்டல், விருந்தினர்களின் வீடுகள்... உள்ளிட்ட வெளி இடங்களில் சாப்பிடும்போது, இந்த உணவு சரியானதுதானா, சத்தானதுதானா என்கிற பலவிதமான குழப்பங்களும் மனதுக்குள் அலையடிக்கத் தவறுவதில்லை. குறிப்பாக, அசைவ உணவுகளைச் சாப்பிடும்போது, ‘இது நல்லதா, கெட்டதா?’ எனப் புரியாமல் நாம் திண்டாடிப்போகிறோம். இதற்கெல்லாம் தக்க பதில் தரும் விதத்தில் வீட்டிலேயே செய்து பார்க்கத்தக்க சுவை மிகுந்த அசைவ உணவுகளை விதவிதமாகப் பட்டியல் போடுகிறது இந்த நூல். சீனாவின் நண்டு சூப், இறால் சூப், மிளகுத் தண்ணீர், ஆட்டுக்கால் சூப், பிலிப்பைன்ஸ் கறி உருண்டை சூப், சிக்கன் சூப், ஃபிரான்ஸின் சிக்கன் சூப் போன்ற சூப் வகைகளும், தொடக்க உணவுகளான தாய்லாந்தின் மீன் கேக், டென்மார்க்கின் கறி கட்லட், சீனாவின் டெவில் சிக்கன், ஸ்வீட் அண்ட் சவர் கோழி கெபாப், இந்தோனேஷியாவின் இறால்&வேர்க்கடலை பஜ்ஜி... என இந்தப் புத்தகத்தில் நிரம்பி இருக்கும் உணவுத் தயாரிப்புகளைப் படிக்கும்போதே நாவில் எச்சில் சுரக்கும். அதோடு, பலவிதப் பிரியாணி வகைகளையும் பட்டியல் போட்டு மிக எளிதாக எல்லோரும் செய்து பார்க்கும் அளவுக்கு விளக்கி இருக்கிறார் சாந்தா ஜெயராஜ். அசைவ உணவு விரும்பிகளுக்கான அசத்தல் பரிசு, இந்த நூல்!
RS. 119 More...by கே.ஸ்ரீதர்
ஆயக்கலைகள் அறுபத்து நான்கில் அற்புத கலை சமையற்கலை என்றால் அது மிகையாகாது. சுவைக்க தெரிந்த நாவுக்குத் தேவை ருசி. ருசிக்க, ரசிக்க வைக்கும் சமையலில் எத்தனை வகைகள்! சுவையான சமையல் எப்படி இருக்க வேண்டும்? உடம்பை கெடுக்காததாக இருக்க வேண்டும். இதுதானே நமது விருப்பம். நவநாகரீக உலகில் உணவுப்பிரியர்கள் வகைவகையான உணவுகளைத் தரும் ஓட்டல்களை நோக்கி படையெடுக்கும் காலம் இது. ஓட்டல் உணவுகள் உடல் நலத்துக்கு நன்மை செய்யுமா? ஆனால், வகைவகையான சமையல்களை வீட்டில் எப்படி சமைத்து சாப்பிடுவது? அதுவும் ருசியாக... இதோ உங்களுக்காகத்தான் இந்தப் புத்தகம். சமையற் கலையில் கைதேர்ந்த ஞானமுடையவர் இந்த நூலாசிரியர் தர். இந்த நூலில் 158 சமையல் வகைகளை அடுக்கி இருக்கிறார். ‘சைவ உணவு தொடங்கி அசைவ உணவு வரை, வட இந்திய உணவு முதல் தென்னிந்திய உணவு வரை வகை வகையாக பரிமாறியிருக்கிறார்' என்றுதான் சொல்ல வேண்டும். பன்னீர் பசந்து, நவரத்தின குருமா, மொகலாய சிக்கன், சிக்கன் பர்கர், பச்சை சட்னி மசாலா என நாவுக்கு சுவை தரும் வகைகள். ஓட்டல் வகைகள் போன்றிருக்கிறதே... இவைகளை வீட்டில் எப்படி சமைப்பது..? இந்த ஐயம் வேண்டாமே உங்களுக்கு. சமையல் நிபுணர் ஸ்ரீதர் இந்த நூலில் சூத்திரம் ஒன்றை சமையல் ஆர்வலர்களுக்கு கற்றுத் தருகிறார். அது என்ன? ஒரே வகை மசாலாவைப் பயன்படுத்தி ஒன்பது சமையல்களைச் செய்யலாம் என்கிறார். அதுவும் அருஞ்சுவையுடன்... நாவில் எச்சில் ஊறுகிறதா? பக்கத்தைப் புரட்டுங்கள். மொத்த வித்தையையும் கற்றுக் கொள்ளுங்கள். இனி உங்கள் சமையல் அறை உங்களுக்கு மகுடத்தைச் சூட்டுவது நிச்சயம்.
RS. 130 More...by தொகுப்பு: SEED அறக்கட்டளை
ஃபாஸ்ட் ஃபுட், ஜங்க் ஃபுட், பர்கர், பீஸா, பப்ஸ், பரோட்டா என உணவு என்கிற பெயரில் உடலின் குடல் இயக்கத்தை தடைசெய்யும் இந்த பண்டங்களால் பாதிப்படைந்தோர் பலர். நோயுற்றோர் சிலர். அவர்கள் புத்துணர்ச்சி பெறவும் உடல் பாகங்களை சீராக இயங்கச் செய்யவும் நலமான வாழ்வை அருளும் ஒரே உணவு நம் பாரம்பர்ய உணவு மட்டுமே. கேப்பை, கம்பு இவற்றை மாவாக்கி முள்ளுருண்டை, கொழுக்கட்டை, அல்வா, பர்பி, இனிப்பு பண்டங்கள் மற்றும் கூட்டு, கிச்சடி, அவியல், துவையல், நவதானிய இட்லி, முடக்கத்தான் தோசை, அத்தி அல்வா, சிறுதானியங்களில் புட்டு, பாயசம், கூழ், பொங்கல், காலை உணவுகளை வரிசைப்படுத்தி, சோள மிக்சர், கொள்ளு ரசம், கருப்பட்டி பானம் பலவகையான பாரம்பர்ய உணவுகளை சமைக்கும் முறைகளை எடுத்துரைக்கிறது இந்த நூல். சிறுதானிய மற்றும் பெருந்தானிய, பழம்பெரும் அரிசி உணவுகள் சமைக்கத் தூண்டும் வகையில் படங்களுடன் இந்த நூல் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பம்சமாகும். விதவிதமான பெயர்களில் அமைந்திருக்கும் இந்த உணவுகள் சிறுவர்களை ஈர்ப்பதோடு பெரியவர்களுக்கும் மாலைநேர உணவாக அமையும். சிறுதானிய உணவில் சமைக்க ஆர்வமுள்ளவர்களுக்கு இந்த நூல் நல்ல வரப்பிரசாதம். நோயுற்றோர் மட்டுமன்றி, உணவு முறையை மாற்ற நினைப்பவர்களுக்கும், இந்த நூல் வழிகாட்டுவதோடு பாரம்பர்ய உணவு வகைகளை நம் கைக்குள் அடக்கிக் கொடுக்கிறது. திருநெல்வேலியில் நடைபெற்ற பாரம்பர்ய உணவுத் திருவிழாவில் சமையல் கலையில் தேர்ந்த வாசகிகள், பாரம்பர்ய உணவுகளின் செய்முறைகளை விளக்கி தங்கள் திறனை வெளிப்படுத்தினர். அந்த உணவு வகைகளை, புகைப்படங்களுடன் பரிமாறுகிறது இந்த நூல்.
RS. 130 More...by க.ஸ்ரீதர்
பழந்தமிழர் வீரத்துக்கும் உடல் வலிமைக்கும் அடிப்படைக் காரணம் அவர்கள் மேற்கொண்ட உணவு முறைகள்தான். சிறுதானியங்கள் பழந்தமிழர் வாழ்வில் பின்னிப் பிணைந்திருந்தன. அவர்கள் பயிர் வகைகளை நன்செய், புன்செய் என்ற இரு பிரிவுகளாகப் பிரித்துவைத்திருந்தனர். தண்ணீர் அதிகம் தேவைப்படும் பயிர்கள் நன்செய். மானாவரி அல்லது குறைந்த நீர் தேவையுள்ள பயிர்கள் புன்செய். புன்செய்ப் பயிர்கள்தான் சிறுதானியங்கள். கம்பு, தினை, கேழ்வரகு, வரகு, குதிரைவாலி, சாமை, சோளம், காடைக்கண்ணி, உளுந்து போன்றவை உடலுக்குச் சக்தியையும், நோயற்ற வாழ்வையும் அருள்கின்றன. கம்பு உருண்டை, உளுத்தங் களி, கேப்பைக் களி போன்றவை சில சிறுதானிய உணவுகள். கம்பங் கூழ், வரகரிசிச் சோறு, கம்பு தோசை, தேன் கலந்த தினை மாவு போன்றவை முற்காலத்தில் தமிழர்களின் உணவுகள். ஆனால், தற்காலத்தில் சிறுதானியங்களைக் கொண்டு விதவிதமான உணவைச் சமைக்கும் பழக்கம் குன்றிவிட்டது. அரிசியைப் பயன்படுத்தும்போது, அதிலுள்ள உயிர்ச் சத்துகள் பலவிதங்களில் நீக்கப்பட்டுவிடுகின்றன. ஆனால், சிறுதானியங்களைப் பயன்படுத்தும்போது அதிலுள்ள உயிர்ச் சத்துகள் காக்கப்படுகின்றன. சிறுதானிய உணவுகள் ஆறு மாதக் குழந்தை முதல் முதியோர் வரை யாவரும் உண்ண உகந்தவை. கேழ்வரகு, கம்பு போன்ற தானியங்கள் குருதியில் உள்ள ட்ரைகிளிசிரைட்ஸ் மற்றும் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. ஆஸ்துமா நோய் உள்ளவர்களுக்கு இளைப்பைக் குறைக்க உதவுகின்றன. செரிமானம் எளிதில் நடைபெறுகிறது. இத்தகைய அற்புதங்கள் வாய்ந்த சிறுதானிய உணவுகளே சமுதாயத்தின் இப்போதையத் தேவை. ‘சிறுதானிய உணவுகள் என்றால் கூழாகவோ, கஞ்சியாகவோதான் சாப்பிட வேண்டும். இதில் எந்தச் சுவையும் இல்லை’ என்ற நிலையை மாற்றி, சிறுதானிய உணவு வகைகளில் மணம் கமழும் சிற்றுண்டி வகைகளை எளிதாகச் சமைத்துச் சாப்பிடலாம் என்ற புதிய வழிகாட்டியை இந்தப் புத்தகத்தின் மூலம் வடித்துள்ளார் நூல் ஆசிரியர் செஃப் க.ஸ்ரீதர். செயற்கை மணமூட்டிகளும் சுவை கூட்டிகளும் இல்லாத உயிர்ச்சத்து நிறைந்த, மனதுக்கு இனிய, மகத்துவம் அளிக்கும் சிறுதானிய உணவு வகைகளை இந்த நூலின் மூலம் தமிழ்ச் சமுதாயத்துக்கு அளித்திருக்கிறார் நூல் ஆசிரியர். பக்கவிளைவுகள் இல்லாத, வயிறைக் கெடுக்காத வகை வகையான சிறுதானிய உணவுகளை அறிய பக்கத்தை புரட்டுங்கள்... நூறாண்டு வாழுங்கள்!
RS. 151 More...by ரேவதி சண்முகம்
இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் ரசனை மிக்கவர்கள். எல்லாவற்றிலும். சமையல் என்பதை வேலையாகப் பார்க்காமல் கலையாகப் பார்க்கிற வழக்கம் இங்கேதான் உண்டு. 'இந்த ஓட்டலில் இது ஸ்பெஷல்', 'இந்த நண்பர் கொண்டுவரும் உணவில் இந்த அயிட்டம் பிரமாதம்' என்று சாப்பாட்டை வயிறோடு தொடர்புடையதாக மட்டும் கருதாமல், நாக்குக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் இங்கே ஏராளம்! திருநெல்வேலி என்றால் அல்வா, மதுரை என்றால் புட்டு, திருவையாறு என்றால் அசோகா, கொல்கத்தா என்றால் ரஸகுல்லா என்று ஊர்களையே உணவுப் பொருட்களோடு தொடர்புபடுத்தி நினைவுகூர்கிற ரசனைக்காரர்கள் நாம். பெண்களும் வேலைக்குச் செல்கிற அவசர உலகத்தில் சமையல் அறைக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது என்கிற கேள்வி தவிர்க்க முடியாதது. அதற்கு ரேவதி சண்முகம் சொல்கிற பதில்தான் அவரது சமையல் குறிப்புகள். மிகவும் எளிய முறையில், செலவு அதிகம் பிடிக்காத வகையில் ரேவதி சண்முகத்தின் குறிப்புகள் அமைந்திருப்பது பாராட்டத்தக்கது. இவரது முந்தைய புத்தகமான 'முப்பது நாள் முப்பது சமைய'லுக்கு கிடைத்த வரவேற்பைப் பார்க்கும்போது வாசகர்கள் எந்த அளவுக்கு வெரைட்டி பிரியர்களாக இருக்கிறார்
RS. 160 More...by கே.ஸ்ரீதர்
சமீபகாலமாக ‘உணவே மருந்து’ என்னும் சொல் உலகெல்லாம் ஓங்கி ஒலித்து வருகிறது. நம் முன்னோர்களும் இதைத்தான் சொன்னார்கள். இதையே செய்தார்கள். உணவை மருந்தாக உட்கொண்டார்கள். உடலைப் பேணிக் காத்தார்கள். ஒரு நூற்றாண்டையும் கடந்து உயிர் வாழ்ந்தார்கள். இயற்கை உணவு நம்மை வாழவைக்கும். குறிப்பாக, கடலில் இருந்து கிடைக்கும் மீன் உணவு நமக்கு வலிமை சேர்க்கும். இன்று ‘அவசியம் மீன் சாப்பிடுங்கள்' என்று சொல்லாத மருத்துவர்களே இல்லை. இதய நோய் உள்ளவர்கள், கொழுப்பு அதிகரித்து உடல் பருமனாகிப் போனவர்கள் யாவருக்கும் மீன் உணவு ஒரு வரப்பிரசாதமாகும். மனிதனுக்கு நோய் எதிர்ப்பு சக்தி, உடல் திடம், புத்திக் கூர்மை என்று மனிதனை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது மீன் உணவு. மீன் உணவில், கொழுப்பு அறவே இல்லை. அதிகமாக புரோட்டீன் சத்து உள்ளது. இதில் உள்ள ‘ஒமேகா-3’ என்ற ஒரு வகை திரவ சக்தி, வேறு எந்த உணவிலும் இல்லை. உடலில் எந்த நோயும் அண்டாமல் இருக்க, இந்த திரவ சக்தி பெரிதும் உதவுகிறது. அமெரிக்காவில் தாய்மார்களிடம் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆராய்ச்சியில் நல்ல மீன் வகைகளை அடிக்கடி உண்ணும் தாய்மார்களின் குழந்தைகள், மீன் உணவு உண்ணாத தாய்மார்களின் குழந்தைகளைவிட, அறிவுக்கூர்மை அதிகம் உடையவர்களாக இருக்கிறார்கள் என்ற உண்மை வெளிப்பட்டிருக்கிறது. நெய்தல் நிலமான கடலில் இருந்து கிடைக்கும் மீன், இறால், நண்டு, கனவா போன்ற அசைவ உணவு வகைகளை சுவையாக பல விதங்களில் சமைப்பது எப்படி? அதாவது நாவிற்கு இனிய ருசியாக சமைப்பது எப்படி? என்ற ரகசியத்தை இந்த நூல் நமக்குச் சொல்லித் தருகிறது. புகழ்பெற்ற சமையற் கலை வல்லுநர் செஃப் தர் அவர்கள் பல்வேறு சுவை நுணுக்கங்களைக் கற்றறிந்தவர். எண்ணற்ற கடல் உணவு வகைகள் நமக்காக காத்திருக்கின்றன. ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வொரு சுவை அறிய... பக்கத்தைப் புரட்டுங்கள்!
RS. 172 More...