Cart is Empty
by ரேவதி சண்முகம்
இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் ரசனை மிக்கவர்கள். எல்லாவற்றிலும். சமையல் என்பதை வேலையாகப் பார்க்காமல் கலையாகப் பார்க்கிற வழக்கம் இங்கேதான் உண்டு. 'இந்த ஓட்டலில் இது ஸ்பெஷல்', 'இந்த நண்பர் கொண்டுவரும் உணவில் இந்த அயிட்டம் பிரமாதம்' என்று சாப்பாட்டை வயிறோடு தொடர்புடையதாக மட்டும் கருதாமல், நாக்குக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் இங்கே ஏராளம்! திருநெல்வேலி என்றால் அல்வா, மதுரை என்றால் புட்டு, திருவையாறு என்றால் அசோகா, கொல்கத்தா என்றால் ரஸகுல்லா என்று ஊர்களையே உணவுப் பொருட்களோடு தொடர்புபடுத்தி நினைவுகூர்கிற ரசனைக்காரர்கள் நாம். பெண்களும் வேலைக்குச் செல்கிற அவசர உலகத்தில் சமையல் அறைக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது என்கிற கேள்வி தவிர்க்க முடியாதது. அதற்கு ரேவதி சண்முகம் சொல்கிற பதில்தான் அவரது சமையல் குறிப்புகள். மிகவும் எளிய முறையில், செலவு அதிகம் பிடிக்காத வகையில் ரேவதி சண்முகத்தின் குறிப்புகள் அமைந்திருப்பது பாராட்டத்தக்கது. இவரது முந்தைய புத்தகமான 'முப்பது நாள் முப்பது சமைய'லுக்கு கிடைத்த வரவேற்பைப் பார்க்கும்போது வாசகர்கள் எந்த அளவுக்கு வெரைட்டி பிரியர்களாக இருக்கிறார்
RS. 160 More...by அ.உமர் பாரூக்
பண்டைய மரபு, கலாசாரம், பழக்கவழக்கம் ஆகியன உணவிலிருந்தே தொடங்கியது என்றால் மறுக்கமுடியாது. வாழ்க்கையின் மையமே வயிறுதான். தாயின் வயிற்றிலிருந்துதான் உணவு தொப்புள்கொடி வழியாக குழந்தைக்குச் செல்கிறது. அவ்வகை உணவில் நஞ்சு கலக்கப்பட்டால்? குழந்தைக்கு அடிப்படையான உணவு பால். அந்தப் பாலில் தொடங்கி, அனுதினம் உண்ணும் உணவில் பாதி விஷம் என்றால் நம்மால் ஏற்றுக்கொள்ளமுடியுமா? ஆனால் அதுதான் நிஜம். உணவுப் பொருள் கலப்படங்களை அம்பலப்படுத்தி நம்மை அதிரவைத்து எச்சரிக்கிறது இந்த நூல். ‘ஆக்சிடோசின்’ - மாடு மூலம் மனிதன் உடலிலும் கலந்த ஒரு நச்சு. ‘ஹெக்சேன்’ - பெட்ரோலிய கச்சா எண்ணெயின் கழிவுப்பொருள். இது உணவு சமைக்கும் எண்ணெயில் கலக்கப்படுகிறது. ‘அலோக்சான்’ - எலிக்கு சர்க்கரை நோயை வரவழைக்கும் ரசாயனம். இதை சேர்த்துதான் மைதா மாவை மென்மையாக்குகிறார்கள். பாப்கார்னின் சுவையைக் கூட்ட, சேர்க்கப்படும் ரசாயனம் ‘டைஅசிட்டைல்’. நூடுல்ஸ் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க `வேக்ஸ்’ எனும் மெழுகு தடவப்படுகிறது. இதுபோன்ற அதிர்ச்சி தரும் தகவல்களைக் கொடுப்பதோடு எந்தெந்த உணவுகளில் எந்தவகை நச்சுகள் கலந்திருக்கின்றன, அதனால் என்னென்ன நோய் உண்டாகிறது? அவற்றுக்கு மாற்று என்ன? என்பதையும் எடுத்துக்காட்டியிருக்கிறார் நூல் ஆசிரியர் உமர் பாரூக். டாக்டர் விகடனில் வெளியான தொடர் இதோ உங்கள் கைகளில் நூல் வடிவில். இயந்திரங்களும் நாகரிகங்களும் பெருகிவிட்ட இந்தக் காலத்தில் இயற்கையோடு இணைந்து வாழாமலும், உணவு குறித்த விழிப்பு உணர்வை மக்கள் பெறாமலும் இருப்பது எதிர்காலத் தலைமுறையை நிச்சயம் பாதிக்கும். நச்சு கலப்பட உணவை அறிந்துகொள்ளச் செய்து நம் ஆரோக்கியம் காக்க வழிகாட்டுகிறது இந்த நூல்.
RS. 77 More...by சீதா ராஜகோபாலன்
காலங்காலமாக நம் முன்னோர்கள் பாரம்பர்யமாக கடைப்பிடித்து வந்த கலாசாரங்களை இக்கால தலைமுறையினரின் வாழ்வியலில் காண்பது அரிதாகி வருகிறது. அக்கலாசாரங்களில் ஒன்றுதான் பண்டிகைகள். நம் வாழ்க்கை நெறிகளில் இன்றியமையாதது, தலையாயது இறைவனை வழிபடுவதாகும். இப்படி இறைவனை வணங்க விசேஷ நாட்களை நியமிப்பதே பண்டிகைகள் ஆகும். நாள் நட்சத்திரங்களின்படி விசேஷ நாட்களின் சிறப்பையும் இப்பண்டிகைகள் உணர்த்துகிறது. பண்டிகை காலங்களின் விசேஷமே எல்லா நலன்களும் அருளி, வாழ வழி செய்யும் இறைவனை வணங்கி, அந்நாளில் பல்வேறு சுவைகளில் சமைத்து உணவுகளை பரிமாறி பூஜித்து, உறவினர்களோடு இணைந்து கொண்டாடுவதே. ஆனால், இன்றைய வேகத்தடையில்லா கால ஓட்டத்தில் பண்டிகைக் காலங்களில் பலகாரங்களை வீடுகளில் செய்யும் முறைகள் மாறி, கடைகளில் வாங்கி கொண்டாடும் பழக்கம் வழக்கமாகிக் கொண்டிருக்கிறது. இந்துக்கள் பாரம்பர்யமாகக் கொண்டாடி மகிழ்ந்த பண்டிகைகளைக் கொண்டாடும் முறைகளை இந்நூல் விளக்கிக் காட்டுகிறது. அந்நாட்களில் எவ்வகை பலகாரங்களை செய்து, எவ்விதத்தில் இறைவனுக்கு வழிபாடு செய்ய வேண்டுமென்பதை இந்நூலில் தெளிவாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இன்றைய இளைய தலைமுறையினர் காய்கறிகள், பழங்கள், கீரைகள், பயறுவகைகள் ஆகிய உணவு பொருட்களைக் கொண்டு எளிய முறையில் சுவையாக பொறியல், கூட்டு, பச்சடி, மசியல் போன்ற பலவிதங்களில் சமைக்கும் முறையை அறிந்து கொள்ளலாம். பலருக்கும் பயன்படும் வகையில் பாரம்பர்யத்துடன் வெளிவரும் இந்தப் புத்தகம் எல்லோருக்கும் பிரயோஜனமாயிருக்கும் என்பதே இந்நூலின் சிறப்பாகும்.
RS. 88 More...by சாந்தா ஜெயராஜ்
சைனீஸ் ஃபிரைட் ரைஸ், முட்டை பிரியாணி, கோழி பிரியாணி, ஆம்பூர் பிரியாணி, ஐதராபாத் பிரியாணி... பட்டியலைப் பார்க்கும்போதே ஏக்கம் பிறக்கிறதா? பன்னாட்டு அசைவ உணவுகளையும் பந்தி வைக்கும் இந்த நூல், அசைவ உணவு விரும்பிகள் அனைவருடைய வீடுகளிலும் இருக்க வேண்டிய அவசிய வழிகாட்டி என்றால், அதில் எள் அளவும் மிகையில்லை. ஹோட்டல், விருந்தினர்களின் வீடுகள்... உள்ளிட்ட வெளி இடங்களில் சாப்பிடும்போது, இந்த உணவு சரியானதுதானா, சத்தானதுதானா என்கிற பலவிதமான குழப்பங்களும் மனதுக்குள் அலையடிக்கத் தவறுவதில்லை. குறிப்பாக, அசைவ உணவுகளைச் சாப்பிடும்போது, ‘இது நல்லதா, கெட்டதா?’ எனப் புரியாமல் நாம் திண்டாடிப்போகிறோம். இதற்கெல்லாம் தக்க பதில் தரும் விதத்தில் வீட்டிலேயே செய்து பார்க்கத்தக்க சுவை மிகுந்த அசைவ உணவுகளை விதவிதமாகப் பட்டியல் போடுகிறது இந்த நூல். சீனாவின் நண்டு சூப், இறால் சூப், மிளகுத் தண்ணீர், ஆட்டுக்கால் சூப், பிலிப்பைன்ஸ் கறி உருண்டை சூப், சிக்கன் சூப், ஃபிரான்ஸின் சிக்கன் சூப் போன்ற சூப் வகைகளும், தொடக்க உணவுகளான தாய்லாந்தின் மீன் கேக், டென்மார்க்கின் கறி கட்லட், சீனாவின் டெவில் சிக்கன், ஸ்வீட் அண்ட் சவர் கோழி கெபாப், இந்தோனேஷியாவின் இறால்&வேர்க்கடலை பஜ்ஜி... என இந்தப் புத்தகத்தில் நிரம்பி இருக்கும் உணவுத் தயாரிப்புகளைப் படிக்கும்போதே நாவில் எச்சில் சுரக்கும். அதோடு, பலவிதப் பிரியாணி வகைகளையும் பட்டியல் போட்டு மிக எளிதாக எல்லோரும் செய்து பார்க்கும் அளவுக்கு விளக்கி இருக்கிறார் சாந்தா ஜெயராஜ். அசைவ உணவு விரும்பிகளுக்கான அசத்தல் பரிசு, இந்த நூல்!
RS. 119 More...by ஆஸ்மி
அசைவம் சாப்பிடுபவர்களில் மீனை விரும்பிச் சாப்பிடாதவர்கள் இல்லை. இறைச்சியைத் தொடாதவர்கள் கூட மீனைச் சாப்பிடுவார்கள். இந்த நூலில் மீன் சமையல் பக்குவத்தை விவரிக்கிறார் நூலாசிரியர் எம்.ஷம்ஷாத் பேகம். எந்த உணவுமே சுவையாகச் சமைப்பதில் பாதி நுட்பம் இருக்கிறது. மீதி பாதி அதற்காக சமையல் சாமான்களை தயாரிப்பதில் இருக்கிறது. மீனை செதில்கள் இல்லாமலும் முதலில் உரசிக்கொண்டும் முள் அகற்றியும் சமைப்பதற்கு முன் தயார் செய்துகொள்ள வேண்டும். மீன் வாடை போவதற்கு முன் முக்கியமாக மஞ்சள் தூள் பொடி போட்டு அலச வேண்டும்... அதிகமாக வேக வைத்தால் மீன் பொடிப்பொடியாகிவிடும்... போன்ற அத்தனை முன் ஏற்பாடுகளும் இந்த நூலில் சொல்லப்பட்டிருக்கின்றன. இன்னின்ன சாமான்கள்தான் போட வேண்டும் என்று கண்டிப்பு இல்லாமல் தேவையான இடங்களில் வாசகர்கள் விருப்பப்படி மாற்று சாமான்களைப் போட்டுக்கொள்ள வழியும் சொல்லியிருக்கிறார். மீன் கண்ணுக்கு நல்லது என்பதால் மீனைச் சேர்க்காமல் அசைவ உணவு முழுமை பெறாது. டாக்டர்கள் கூட மீன் எண்ணெய் சாப்பிடச் சொல்கிறார்கள். ஆகவே மீனை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். சமைத்துப் பாருங்கள்... சுவைப்பது சுலபம்
RS. 67 More...by ஜெயஸ்ரி சுரேஷ்
உணவே மருந்து என்னும் தத்துவம் பரவலாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இச்சூழலில் நமது பாரம்பரிய உணவு முறைகளுக்கு வரவேற்பு கூடிக்கொண்டே வருகிறது என்பதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். இயற்கை வழியில் உடலை பேணிக்காக்க உயிர்ச்சத்துள்ள சிறுதானியங்கள் நமக்குக் கிடைத்த வரப்பிரசாதங்கள். நம் முன்னோர்கள் நோயற்ற வாழ்வு வாழ்ந்ததற்கு இந்த சிறுதானிய சமையலே காரணமென்றால் அது மிகையாகாது. உடலுக்குக் கேடு விளைவிக்காத, ஊட்டச்சத்து மிகுந்த குதிரைவாலி, சாமை அரிசி, கேழ்வரகு, கொள்ளு போன்ற சிறுதானியங்கள் மனிதனை நூறு ஆண்டு வாழ வைக்கும் அற்புத சக்தி மிகுந்தவை. இன்றுள்ள சூழலில் நமக்குத் தேவை சிறுதானிய சமையல் வகைகளே. பீட்சா, பர்கர் போன்ற துரித சமையல் வகைகளுக்கு அடிமைப்பட்ட நம் நாக்கு சிறுதானியங்களை ஏற்குமா? இந்த சிறுதானியங்களைச் சமைக்க வேண்டிய முறையில் சமைத்தால் நம் நாவிற்கு சுவை கூடும். தாது சத்துக்கள், புரதச் சத்துக்கள் நிறைந்த சிறுதானிய சமையல் வகைகள் நம் உள்ளத்தில் எழுச்சியையும், உடம்பிற்கு ஆரோக்கியத்தையும் தரும் வல்லமை வாய்ந்தவை. இந்த அற்புத சமையலை எப்படி செய்யலாம்? எவ்வாறு உண்ணலாம்? என்று வகை வகையாக இந்நூலில் அடுக்கியிருக்கிறார் ஜெய சுரேஷ். உடல்நலம் காக்க விருப்பப்படுபவரா நீங்கள்? உங்களுக்காகத்தான் இந்த அரிய புத்தகம்.
RS. 91 More...