Cart is Empty
by விகடன் பிரசுரம்
கோடையில் குளிர்ந்த நீரோடையையும், மழை வருமுன் வீசும் குளிர்ந்த காற்றையும் உணரும்போது ஏற்படும் பரவசத்தைப் போல, நம்மில் ஊடுருவி இருப்பது நகைச்சுவை உணர்வு. அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும் துன்பங்களையும் சோர்வையும் நீக்கி நம் மனதைச் சமப்படுத்துவதில் நகைச்சுவைதான் முக்கிய பங்கு வகிக்கிறது. எந்த ஒரு செயலையும் விளையாட்டாகவும் வேடிக்கையாகவும் செய்யும்போது அதன் வலி தெரியாமல் புத்துணர்வை அளிக்கும். இப்படி, சீரியஸான கருத்தையும் சின்ன ஜோக்குகளாக எழுதி அனைவரின் மனதிலும் எளிதில் பதிய வைத்திருக்கிறார்கள் விகடனின் ஜோக் எழுத்தாளர்கள். 2007_ம் வருடம், ஆனந்த விகடனில் வெளிவந்த ஜோக்குகளில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்துக் கையடக்க நூலாக வெளியிட்டிருக்கிறோம். சுவைத்து, சிரித்து மகிழுங்கள்!
RS. 50 More...by விகடன் பிரசுரம்
மலர்கள் இல்லாத உலகத்தை யாராவது நினைத்துப் பார்க்க முடியுமா...? சுகமோ... சோகமோ... எதுவாக இருந்தாலும் அந்த இடங்களில் மலர்களுக்கு முக்கியத்துவம் கிடைத்துவிடும். பல சமயங்களில் நம்மை மனிதர்கள் என்று நினைவூட்டுவதே இந்த மலர்கள்தான். ஆம், மலர்களின் வாசனைக்கு மயங்காத மனிதர்களே இல்லை! உணவுப் பொருள்களைப் போலவே நம்முடைய வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்ட பல விஷயங்களில் ஒன்றுதான் இந்த வண்ண வண்ண மலர்கள். கத்தரிக்காய், முருங்கைகாய், நெல், கரும்பு என்கிற விவசாய விளைபொருள் வரிசையில் மலர்களும் விளைபொருட்கள்தான். என்றாலும், மலர்களின் விற்பனை என்பது தனித்தன்மை கொண்டது. நிறமும் மணமும் ஓரிரு நாட்களே உயிர் பெற்றிருக்கும் என்றாலும், திருமணம் மற்றும் பூஜைக்கான பொருளாக மதிக்கப்படுவதால் மலர்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மலர்ச் சந்தை என்பது உள்ளூரில் மட்டுமல்ல... உலக அளவிலும் மிகமிகப் பெரியது! இதைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு, மலர் சாகுபடியை கையில் எடுத்து, வெற்றி வாசம் வீசியபடி வலம் வரும் விவசாயிகள் தமிழக அளவில் நிறையவே இருக்கிறார்கள். அந்த விவசாயிகளின் சாகுபடி அனுபவங்கள் மற்றும்
RS. 50 More...by விகடன் பிரசுரம்
பல்லாண்டுகளாக நகைச்சுவைத் துணுக்குகளில் கோலோச்சும் ஆனந்த விகடன் இதழ்களில் வெளிவந்த ஜோக்குகளின் தொகுப்பு இது. மனிதனுக்கு வரும் பலவித நோய்களுக்கு மனமே காரணம் என்று சொல்பவர்களும் உண்டு. மன இறுக்கமே பல்வேறு நோய்களுக்கும் காரணியாகிறது என்பார்கள். அதற்கு ஓர் உன்னத மருந்தாகத் திகழ்வது நகைச்சுவை! எல்லாவற்றையும் எல்லோரிடமும் நம்மால் பகிர்ந்து கொள்ள முடியாது; நகைச்சுவையைத் தவிர! அறிவார்ந்த விஷயங்களைக்கூட அடுத்தவரிடம் பகிர்ந்து கொள்வதில் நிறையப் பேர் தயக்கம் காட்டுவார்கள். ஆனால், நகைச்சுவை அப்படிப் பட்டதல்ல. அடுத்தவரிடம் பகிர்ந்து கொண்டு, அவரை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி, நட்பை வளர்த்துக் கொள்வார்கள் பலர். 2008 விகடன் இதழ்களில் வெளியான ஜோக்குகளில் 200 ஜோக்குகள் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. ரசித்துப் படித்து, அடுத்தவரிடம் பகிர்ந்து கொண்டு, உங்கள் சூழலை இனிமையாக்க, இந்த நூல் உங்களுக்கு உதவும்.
RS. 50 More...by விகடன் பிரசுரம்
வியாபார உலகத்தில் முன்னேறுவதற்கு பணத்தையும் படிப்பையும்விட ஜெயிக்க வேண்டும் என்கிற மன உறுதிதான் முக்கிய தேவை என்பதை ஆணித்தரமாக எடுத்துச் சொல்லும் ஹீரோக்களின் கதைதான் ‘ஜீரோ டூ ஹீரோ!’ இந்த நூலில் இடம்பெறும் தொழில் முனைவர்கள் பதினைந்து பேரும் சாதாரண குடும்பச் சூழ்நிலையிலிருந்து தங்கள் வாழ்க்கையைத் தொடங்கியவர்கள்தான். இன்று பல கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஒரே இரவில் இவர்கள் இந்த மாபெரும் வளர்ச்சியைக் கண்டுவிடவில்லை. ஓயாமல் உழைத்திருக்கிறார்கள்; தீவிரமாக யோசித்திருக்கிறார்கள். தங்களுக்குக் கிடத்த ஒவ்வொரு நிமிடத்தையும் சாதகமாக மாற்றித்தான் முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறார்கள். திடீர் திடீரென எழுந்த சிக்கல்கள், சறுக்கல்கள், தோல்விகள் என எல்லாவற்றையும் தாண்டித்தான் இந்த நிலைக்கு வந்திருக்கிறார்கள் இவர்கள். பொருளாதார நெருக்கடி என்கிற பின்னடைவினால் சோர்வடையாமல், பிஸினஸ் உலகத்தை எதிர்கொண்டு, கடுமையாக உழைத்திருக்கிறார்கள். சறுக்கல்கள் இல்லாமல் எந்த வெற்றியும் சாத்தியமில்லை என்பதற்கு இவர்களின் வாழ்க்கை மிகச் சிறந்த உதாரணம். ‘நாணயம் விகடன்’ இதழ்களில் தொடராக வெளிவந்த இந்
RS. 50 More...by நாகப்பன் _ புகழேந்தி
உலக வாழ்வில் பணம் மட்டுமே எல்லாவற்றையும் நிர்ணயிக்கிறது. இந்த வியாபார உலகத்தில் மனித இருத்தலுக்குப் பணமே பிரதானம் என்பதால் மக்கள் இரவு பகல் பாராமல் பொருள் தேடி பயணிக்கின்றனர். கல்வி, திருமணம், வேலைவாய்ப்பு போன்ற வாழ்க்கை நிகழ்ச்சிகளுக்கு, முக்கியப் பங்கு வகிக்கும் பணத்தை சேர்த்துவைக்க எண்ணியவர்கள் பலர். அந்த எண்ணத்தைச் செயலாக்கியவர்கள் சிறப்பாக வாழ்கின்றனர். எதிர்கால நலனுக்காக சேமிக்கும் பழக்கம் இல்லாதவர்கள் பணத்தை இழந்து தவிக்கின்றனர். எனவே, உழைத்து பெரும் பாடுபட்டு சேமிக்கும் பணத்தை என்ன செய்வது என்று விழிக்கும் பலருக்கு வழிகாட்டவே ஆனந்த விகடன் இதழில் 'பணம் செய்ய விரும்பு' என்னும் தொடரை வழங்கினார்கள் நாகப்பன் _ புகழேந்தி. அந்தக் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். நாம் உழைத்துச் சம்பாதிக்கும் பணத்தை, மேலும் பெருக்க வழிமுறைகள் என்னென்ன இருக்கின்றன? அதனை எவ்வாறு செய்ய வேண்டும்? எந்தெந்த நிறுவனங்கள் மக்களின் பொருளாதார நலனுக்காக இயங்குகின்றன? அவற்றின் சாதக, பாதக நிலைகள் என்னென்ன? போன்ற சிறப்பான தகவல்களைத் தக்க ஆதாரங்களுடன் வெளிப்படுத்தி இருக்கின்றனர் நூலாசிரியர்கள். நாணயம் விகடன
RS. 50 More...by விகடன் பிரசுரம்
சென்னை கம்பன் கழகம், ஆழ்வார்பேட்டை ஆஸ்திக சமாஜத்தில், ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஆதரவில் அண்மையில் ‘கம்பனில் _ ராமன் எத்தனை ராமன்?’ என்ற தலைப்பில் தொடர் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்திருந்தது. எட்டு நாட்கள் நிகழ்ந்த இந்தச் சொற்பொழிவுகளில், கம்பன் தன் ராமாயணத்தில் நாயகனான ராமபிரானை எத்தனை முகங்களில் சிறப்புறக் காட்டியிருக்கிறார் என்பதை மையக் கருத்தாக எடுத்துக்கொண்டு சொற்பொழிவாளர்கள் நயத்துடன் முன்வைத்தனர். காலத்தைக் கடந்து வந்த கம்பனின் கருத்துமணிகள், காற்றோடு வெறுமே கரைந்து போய்விடக்கூடாது; எழுத்தில் வடித்தால் அந்த எண்ணத் துளிகள் எண்ணற்ற வாசகர்களுக்குப் போய்ச் சேரும் என்பதால் விகடன் பிரசுரம் இதைத் தொகுத்து நூலாக்க முனைந்தது. இந்நிகழ்வின் பொறுப்பாளர்களான சென்னை கம்பன் கழகம், ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ், ஆழ்வார்பேட்டை ஆஸ்திக சமாஜம் ஆகியோர் மகிழ்வுடன் அனுமதியளித்தனர். தங்கள் சொற்பொழிவுகளைத் தொகுக்க மனமுவந்து அனுமதியளித்த சொற்பொழிவாளர்களுக்கும் நன்றி. ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளி ‘நாள்தோறும் நல்லது செய்வோம்’ என்று தினமும் ஒரு நிகழ்ச்சியை நடத்த உதவினார். கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா, கனிவு கொடுக்கும்
RS. 50 More...by விகடன் பிரசுரம்
ஆனந்த விகடன் பவழ விழாவை முன்னிட்டு, 2001-ம் ஆண்டு நடத்தப்பட்ட முத்திரைக் கவிதைப் பரிசுப் போட்டியில் வெற்றி பெற்ற 75 கவிதைகளின் தொகுப்பு இது. விகடனின் தேர்வு, ஒருவரின் வெற்றிக்கு எத்தகைய உந்துதலாக அமைகிறது என்பதற்கு இந்த நூலே சாட்சி. இதில் இடம்பெற்ற கவிஞர்களில் பலரும் இளைஞர்கள். கவிதை உலகில் அப்போதுதான் அடியெடுத்து வைத்தவர்கள். இப்போது அவர்களில் பலரும் பிரபலமாக வலம் வருகிறார்கள். வாழ்வியல், சூழல், முரண்பாடு, ஆவேசம் என தங்கள் வாழ்வின் அத்தனைவிதமான கூறுகளையும் சில வரிகளிலேயே இங்கே இறக்கி வைத்திருக்கிறார்கள் இந்த யதார்த்தவாதிகள். சில கவிதைகளைக் கடக்கையில் நெஞ்சு முழுக்க நிசப்தம் பரவுகிறது. அடுத்த கவிதையைப் படிக்கும் மனமின்றி முதல் கவிதையின் லயிப்பிலேயே சுருண்டு கிடக்கத் தோன்றுகிறது. தாயின் குடங்கைக்குள் ஒடுங்கிக்கொள்ளும் சிசுவைப்போல் இந்தப் புத்தகத்துக்குள் புதைந்துகொள்ள மனம் துடிக்கிறது. ஒன்றையன்று விஞ்சும் விதமாக இறைந்துகிடக்கும் கவிதைகள், ஒவ்வொரு பக்கத்தையும் மயிலிறகுப் பக்கமாக மலர்த்தி இருக்கின்றன. வாழ்ந்து கெட்டவனின் வீடு தொடங்கி இ-மெயிலில் வரும் இறப்புச் செய்தி வரை இந்தக் கவிதைகள் பந்திவைக்கும் விஷயங்கள் வன்மையானவை. ஒரே நேரத்தில் செவலையெனும் சித்தப்பாவுக்காக அழவைக்கவும், ‘ஏ... கோழையே...’ எனத் தீவிரவாதத்துக்கு எதிராக எழவைக்கவும் இந்தக் கவிதைகளால் முடிகிறது. நிறைய கவிதைகள், நம் நெஞ்சத்து நியாயத்தராசை வேகமாக ஆட்டிவிட்டு வேடிக்கை பார்க்கின்றன. நம்மை நாமே சுயபரிசோதனை செய்துகொள்ளும் சூத்திரங்களே இந்தக் கவிதைகள். 75 கவிதைகளையும் வாசித்து முடிக்கையில் வாழ்வின் கடைசிக் கோட்டைத் தொட்டுத் திரும்பிய உணர்வோடு நீங்கள் வெளிவருவீர்கள் - புது மனிதர்களாக!
RS. 50 More...by சி.சரவணன்
இன்றைய காலகட்டத்தில் கடன் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகவே மாறிவிட்டது. கடனால் கண்கலங்கிய காலம் மாறி கடனே ஒருவரைக் கைதூக்கிவிடும் காலம் உருவாகி வருகிறது. கடனே கடவுள் காட்டிய வழி என நினைக்கிறது இன்றைய நடுத்தர வர்க்கம். விலைவாசியும், அத்தியாவசியத் தேவைகளும் அதிகரித்துக் கொண்டே செல்லும் இந்தக் காலகட்டத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப்பவர்களும் நடுத்தர வர்க்கத்தினரும் தங்களின் வாழ்க்கையை நடத்த சொல்ல முடியாத அல்லாடல் களுக்கு ஆளாகிறார்கள். மனை வாங்க, வீடு கட்ட, நகை வாங்க, நகை அடமானம் வைக்க, தொழில் தொடங்க, தனிநபர் முன்னேற்றத்துக்காக, கல்விக்காக, வாகனத்துக்காக என கடனுக்கான அவசியம் பெருகிக்கொண்டே போகிறது. உரிய தகுதிகள் இருந்தால் மட்டுமே கடன் என்கிற கந்துவட்டிப் பழக்கங்கள் மலையேறி, இன்றைய காலகட்டத்தில் நம்மைத் தேடி வந்து கடன் கொடுக்க அரசும் தனியார் வங்கிகளும் தயாராக இருக்கின்றன. வங்கிகள், நிதி நிறுவனங்களில் என்னென்ன கடன்கள் இருக்கின்றன? அவற்றைப் பெறுவது எப்படி? கடனைச் சரியாகக் கட்டினால் கிடைக்கும் நன்மை என்ன? எந்தத் தேவைக்கு எந்தக் கடன் வாங்க வேண்டும்? கடன் வாங்கும் தகுதி என்ன? எனக் கடன் குறித்த முழுத் தகவல்களையும் அலசி ஆராய்ந்து, அனைவருக்கும் பயன்படும் விதத்தில் தெளிவாக இந்த நூலை எழுதி இருக்கிறார் சி.சரவணன். இன்றைக்கு நம்மில் பலர் சொந்த வீட்டுக்கும் சொகுசான காருக்கும் உரிமையாளராக இருக்கிறார்கள் என்றால், நிச்சயம் அவர்களுக்குக் கைகொடுத்தது கடன்தான். கடன் குறித்த பயத்தைத் தெளியவைக்கும் இந்த நூல், நடுத்தர வர்க்கத்துக்கான விரல்பிடிப்பாக இருக்கும் நிச்சயமாக!
RS. 50 More...by மதன்
ஆனந்த விகடனில் மாலி, ராஜூ, கோபுலு, ஸ்ரீதர் போன்றவர்கள் வகுத்துக் கொடுத்த பாதையில் தனது ஜோக்குகள் மற்றும் கார்ட்டூன்கள் மூலம் தனி முத்திரைப் பதித்தவர் மதன். ஜோக்குகளுக்கென்று பிரத்தியேகமாக காரெக்டர்களை உருவாக்கி, விகடன் நடுப்பக்கங்களில் அவர்களை மதன் உலா வரச்செய்த போது விலா நோகச் சிரித்து மகிழ்ந்தார்கள் வாசகர்கள். சிரிப்புத் திருடன் சிங்காரவேலு, முன் ஜாக்கிரதை முத்தண்ணா... இப்படி நிறைய உதாரணங்களைச் சொல்லலாம். மதன் ஜோக்குகளில் வாசகங்களை மட்டும் படித்துவிட்டுப் பக்கங்களைப் புரட்டிவிட முடியாது. அதற்கான படங்களையும் உற்றுக் கவனிக்க வைத்தவர் அவர். நாம் அன்றாடம் பார்க்கும் மனிதர்கள்கூட மதனின் கை வண்ணத்தில் வித்தியாசமாகத் தெரிவார்கள். அப்பாவித்தனமாக முகத்தை வைத்துக்கொண்டு ஒரு சிலரும், தொந்தியும் தொப்பையுமாக உருவத்தை வைத்துக் கொண்டு வேறு சிலருமாக... குறும்பு கொப்புளிக்கும் படங்கள் நம்மை புன்முறுவலிக்க வைக்கும். ஜூனியர் விகடன் தொடங்கப்பட்ட சமயத்தில் மதன் வரைந்த ஜோக்குகளும், கார்ட்டூன்களும் வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றன. அந்த ஜோக்குகளின் தொகுப்புதான் இது.
RS. 56 More...by விகடன் பிரசுரம்
பெரிய பெரிய நிறுவனங்களில் சி.இ.ஓ_வாக பணியாற்றும் தமிழர்களின் செயல்பாடுகளையும் அனுபவங்களையும் எடுத்துக்கூறும் நூல் இது. ‘நாணயம் விகடன்’ இதழ்களில் தொடராக வந்து வாசகர்களின் வரவேற்பைப் பெற்ற இந்த நேர்காணல்கள், இப்போது நூல் வடிவம் பெறுகிறது. சி.இ.ஓ., என்றால் அசகாய சூரர்கள், அவர்களுக்கெல்லாம் ஏதோ திறமை இருக்கிறது, நமக்கெல்லாம் அது எங்கே இருக்கிறது என்பதே பரவலான எண்ணம். திறமை எல்லோருக்கும் இருக்கிறது, ஆனால் அவர்கள் எப்படி அந்தத் திறமையைக் கூர்தீட்டி வளர்த்துக்கொண்டார்கள் என்பதை, சாதனை படைத்த 23 சி.இ.ஓ._க்களின் அனுபவங்கள் விளக்குகிறது. கிட்டத்தட்ட அத்தனை பேரும், தங்கள் பெற்றோர்கள் சிறுவயதில் தங்களுக்குப் போதித்த அறிவுரைகளையே தலைமைப் பீடத்தில் பிரயோகித்திருக்கிறார்கள் என்பது நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் விஷயம். ஏதோ ஒரு கணக்கை வைத்துக்கொண்டு தலைமை இடத்தில் இருந்து செயல்பட்டால் வெற்றி அடையமுடியாது. ஒவ்வொரு சூழ்நிலைக்கும் ஏற்றவாறு தங்கள் விவேகத்தையும் சாதுர்யத்தையும் சாமர்த்தியத்தையும் பயன்படுத்தியே அவர்கள் வெற்றி பெற்றார்கள் என்பது நிச்சயம். அதேநேரத்தில் கொஞ்சம் தைரியமாக ‘ரிஸ்க்’கும் எடுத்திர
RS. 56 More...