Cart is Empty
by விகடன் பிரசுரம்
வியாபார உலகத்தில் முன்னேறுவதற்கு பணத்தையும் படிப்பையும்விட ஜெயிக்க வேண்டும் என்கிற மன உறுதிதான் முக்கிய தேவை என்பதை ஆணித்தரமாக எடுத்துச் சொல்லும் ஹீரோக்களின் கதைதான் ‘ஜீரோ டூ ஹீரோ!’ இந்த நூலில் இடம்பெறும் தொழில் முனைவர்கள் பதினைந்து பேரும் சாதாரண குடும்பச் சூழ்நிலையிலிருந்து தங்கள் வாழ்க்கையைத் தொடங்கியவர்கள்தான். இன்று பல கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஒரே இரவில் இவர்கள் இந்த மாபெரும் வளர்ச்சியைக் கண்டுவிடவில்லை. ஓயாமல் உழைத்திருக்கிறார்கள்; தீவிரமாக யோசித்திருக்கிறார்கள். தங்களுக்குக் கிடத்த ஒவ்வொரு நிமிடத்தையும் சாதகமாக மாற்றித்தான் முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறார்கள். திடீர் திடீரென எழுந்த சிக்கல்கள், சறுக்கல்கள், தோல்விகள் என எல்லாவற்றையும் தாண்டித்தான் இந்த நிலைக்கு வந்திருக்கிறார்கள் இவர்கள். பொருளாதார நெருக்கடி என்கிற பின்னடைவினால் சோர்வடையாமல், பிஸினஸ் உலகத்தை எதிர்கொண்டு, கடுமையாக உழைத்திருக்கிறார்கள். சறுக்கல்கள் இல்லாமல் எந்த வெற்றியும் சாத்தியமில்லை என்பதற்கு இவர்களின் வாழ்க்கை மிகச் சிறந்த உதாரணம். ‘நாணயம் விகடன்’ இதழ்களில் தொடராக வெளிவந்த இந்
RS. 50 More...by செ.கார்த்திகேயன்
இன்றைய தினம் வளம் கொழிக்கும் தொழிலாக மாறியுள்ளது ஏற்றுமதி தொழில். ஆனால், ஏற்றுமதி தொழில் பற்றிய புரிதல் இல்லாததால் பலர் இந்தத் தொழிலில் இறங்க பயப்படுகின்றனர் என்பதே உண்மை. இந்தக் குறையை நீக்கவே இந்த நூல். ஏற்றுமதி செய்வது என்பது பெரும் சிக்கலா? எல்லோராலும் ஏற்றுமதி வியாபாரம் செய்ய முடியாதா? ஏற்றுமதி தொழில் லாபம் தரக்கூடியதா? சுலபம். மிக மிகச் சுலபம் என்கிறார் நூலாசிரியர். மேலைநாடுகளில் இந்திய உணவுப் பொருட்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை முக்கியமாக, மூன்று மாநிலங்கள் ஏற்றுமதியில் சிறந்து விளங்குகின்றன. இதில் முதல் இடத்தில் இருப்பது, குஜராத், இரண்டாவது இடத்தில் மஹாராஷ்டிரா, இதற்கு அடுத்து தமிழகம். உணவுப் பொருட்கள், பொறியியல் சார்ந்த பொருட்கள், வாகன உதிரி பாகங்கள், தோல் பொருட்கள், ஆடைகள் நறுமணப் பொருட்கள் ஆகியவற்றில் அதிகமான ஏற்றுமதி வாய்ப்புகள் உள்ளன. இந்த ஏற்றுமதி தொழிலை எப்படிச் செய்யலாம்? முதன்முதலாக ஏற்றுமதி தொழிலில் இறங்குகிறவர்கள், இந்தியாவுக்குப் பக்கத்தில் உள்ள ஏதாவது ஒரு நாட்டுக்கு, அங்கு அதிக தேவை உள்ள ஒரு பொருளைத் தேர்வு செய்து அனுப்பலாம். சின்னச் சின்ன ஆர்டர்கள் எடுத்து அனுப்பி, நன்கு அனுபவப்பட்ட பின் பெரிய ஆர்டராக எடுத்தால் இந்தத் தொழிலில் நீண்ட காலத்துக்கு நிலைக்க முடியும். இதுபோன்ற ஏற்றுமதி நுணுக்கங்கள் இந்த நூலில் உங்களுக்காக காத்திருக்கின்றன. ஏற்றுமதி குறித்த சந்தேகங்கள், தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு என்னென்ன பொருட்களை ஏற்றுமதி செய்யலாம், அதுதொடர்பாக கவனிக்க வேண்டிய அம்சங்கள், வழிமுறைகளை வாரி வழங்கியிருக்கிறார் நூலாசிரியர். நீங்கள் சிறந்த ஏற்றுமதியாளராக உருவாக... இந்த நூல் நிச்சயம் வழிகாட்டும்.
RS. 105 More...by மருத்துவர் கல்பனாதேவி
மனிதனுக்கு வரும் நோய்களைக் குணமாக்கும் மருந்து நம் விரல்களிலேயே இருக்கிறது என்றால் விந்தையாக இருக்கிறதல்லவா? ஆம், விரல்களைக் கொண்டு செய்யும் முத்திரைகளால் நோய் விலகிவிடும் என்பதை கடவுளர்களின் விக்கிரகங்களைப் பார்த்தாலே புரியும். இயற்கையிலேயே சில முத்திரைகள் நம் வாழ்வோடு இணைந்திருக்கிறது. தாயின் வயிற்றில் இருக்கும் சிசு தன் இரண்டு கைகளையும் அழுத்தமாக மூடிப் பிடித்திருக்கும் முத்திரை, ஆதி முத்திரை. வெளிப்புற ஈர்ப்புகள் மற்றும் கவனச் சிதறல்களிலிருந்து விடுபட இந்த முத்திரை உதவுகிறது. இதுபோன்று ஒவ்வொரு முத்திரைக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. உடல், மனம் சார்ந்த அனைத்து நோய்களையும் நமது விரல்களால் செய்யும் முத்திரைகளால் சரிசெய்யலாம். முத்திரைகள் நமது விரல்கள் வழியே, ஐம்பெரும் சக்திகள் மற்றும் உயிர் ஆதாரங்களையும் தூண்டி நோய் நிலைகளைச் சரிசெய்கிறது. முத்திரை என்பது ஓர் உயர் யோகக்கலை, யோகாசனப் பயிற்சிகளின் உச்சம். முத்திரைக்கான பயிற்சியை முறையாகச் செய்து அதன்படி முத்திரைகளைச் செய்து வந்தால் நோய்களில் இருந்து விடுபடலாம் என்பதை விளக்கும் நூல் இது! டாக்டர் விகடன் மற்றும் சக்தி விகடனில் வெளிவந்தவை இப்போது நூல் வடிவம் பெற்றுள்ளது. விரல் செய்யும் விந்தைகளைப் பாருங்கள், பலன் பெறுங்கள்!
RS. 140 More...by விகடன் பிரசுரம்
பல்லாண்டுகளாக நகைச்சுவைத் துணுக்குகளில் கோலோச்சும் ஆனந்த விகடன் இதழ்களில் வெளிவந்த ஜோக்குகளின் தொகுப்பு இது. மனிதனுக்கு வரும் பலவித நோய்களுக்கு மனமே காரணம் என்று சொல்பவர்களும் உண்டு. மன இறுக்கமே பல்வேறு நோய்களுக்கும் காரணியாகிறது என்பார்கள். அதற்கு ஓர் உன்னத மருந்தாகத் திகழ்வது நகைச்சுவை! எல்லாவற்றையும் எல்லோரிடமும் நம்மால் பகிர்ந்து கொள்ள முடியாது; நகைச்சுவையைத் தவிர! அறிவார்ந்த விஷயங்களைக்கூட அடுத்தவரிடம் பகிர்ந்து கொள்வதில் நிறையப் பேர் தயக்கம் காட்டுவார்கள். ஆனால், நகைச்சுவை அப்படிப் பட்டதல்ல. அடுத்தவரிடம் பகிர்ந்து கொண்டு, அவரை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி, நட்பை வளர்த்துக் கொள்வார்கள் பலர். 2008 விகடன் இதழ்களில் வெளியான ஜோக்குகளில் 200 ஜோக்குகள் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. ரசித்துப் படித்து, அடுத்தவரிடம் பகிர்ந்து கொண்டு, உங்கள் சூழலை இனிமையாக்க, இந்த நூல் உங்களுக்கு உதவும்.
RS. 50 More...by விகடன் பிரசுரம்
கோடையில் குளிர்ந்த நீரோடையையும், மழை வருமுன் வீசும் குளிர்ந்த காற்றையும் உணரும்போது ஏற்படும் பரவசத்தைப் போல, நம்மில் ஊடுருவி இருப்பது நகைச்சுவை உணர்வு. அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும் துன்பங்களையும் சோர்வையும் நீக்கி நம் மனதைச் சமப்படுத்துவதில் நகைச்சுவைதான் முக்கிய பங்கு வகிக்கிறது. எந்த ஒரு செயலையும் விளையாட்டாகவும் வேடிக்கையாகவும் செய்யும்போது அதன் வலி தெரியாமல் புத்துணர்வை அளிக்கும். இப்படி, சீரியஸான கருத்தையும் சின்ன ஜோக்குகளாக எழுதி அனைவரின் மனதிலும் எளிதில் பதிய வைத்திருக்கிறார்கள் விகடனின் ஜோக் எழுத்தாளர்கள். 2007_ம் வருடம், ஆனந்த விகடனில் வெளிவந்த ஜோக்குகளில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்துக் கையடக்க நூலாக வெளியிட்டிருக்கிறோம். சுவைத்து, சிரித்து மகிழுங்கள்!
RS. 50 More...by விகடன் பிரசுரம்
எப்போதுமே ஜோக் புத்தகங்களை ஒரே மூச்சில் படித்து முடித்துவிட முடியும். புன்னகைத்துக் கொண்டே ஜாலியாக பக்கங்களைப் புரட்ட முடியும். அதுமட்டுமல்ல, மன அழுத்தம் ஏற்பட்டு சோர்ந்து உட்கார்ந்திருக்கும் வேளையில் ஜோக் புக் ஆறுதலான ஒரு மருந்து. ஆரம்பகாலம் முதல் ஆனந்த விகடனில் வெளியாகிவரும் ஜோக்குகளை விரும்பிப் படிக்கும் வாசகர் வட்டம் மிகப் பெரியது. இன்று வரையில் அது தொடர்ந்து வருகிறது. விகடனில் வெளியான ஜோக்குகளைத் தொகுத்து அவ்வப்போது கையடக்க நூல்களாக வெளியிட்டு வருகிறது விகடன் பிரசுரம். அந்த வகையில், 2009_ம் ஆண்டில் விகடனில் வெளியான ஜோக்குகளில் 300_ஐ இந்த நூலில் தொகுத்திருக்கிறோம். இதில் உள்ள ஜோக்குகளை படிப்பதோடு உங்கள் சுற்றத்தாரிடமும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்ளவும், பரிசு அளித்து மகிழவும் இந்த நூல் உங்களுக்கு உதவும்!
RS. 60 More...by ஜல்லிப்பட்டி பழனிச்சாமி
இன்றைக்கு பெண்கள் சாதிக்காத துறைகளே இல்லை என்று சொல்லலாம். ஆட்டோ ஓட்டுதல் தொடங்கி விமானத்தில் பணிபுரிவது வரை பல்வேறு பணிகளில் பெண்கள் திறம்பட செயலாற்றிவருகிறார்கள். அந்த வகையில் விவசாயத்தில் ஈடுபட்டு, வெற்றிபெற்ற பெண்களின் அனுபவங்களை அழகாகச் சொல்கிறது இந்த நூல். மல்பெரி வளர்ப்பில் சாதனை புரிந்து, தேசிய அளவில் சிறந்த பெண்மணிக்கான பட்டத்தைப் பெற்றுள்ள, முதுகலைஜீ பட்டம் பெற்ற தமிழ்ச்செல்வி, பளபளக்கும் பட்டுக்கூடு வளர்ப்பில் விருதுபெற்ற பாப்பாத்தி, மார்கழி மற்றும் தையில் பெய்யும் பனியின் ஈரத்தைக்கொண்டே பனிக்கடலை பயிர் செய்யும் சாரதாமணி, பட்டை அவரையில் எட்டு டன் எடுக்கும் கவிதா, குறும்புடலையில் கொடிகட்டிப் பறக்கும் கௌசல்யா, கோழிக் கொண்டை பூ பூரிப்பில் தமிழரசி, எலுமிச்சையில் வெற்றிக்கனி பறிக்கும் ஜெயபாரதி, சின்ன வெங்காயம் சாகுபடியில் வஞ்சிக் கொடி, கனகாம்பரம் பூ விற்பனையில் பூங்கோதை என்று விவசாயத்தில் வெற்றிக்கொடி கட்டிய பெண்களின் பட்டியல் நீள்கிறது. மேலும், விவசாயம் சார்ந்த பண்ணைக் கோழி வளர்ப்பு, கொட்டில் முறை ஆடு வளர்ப்பு பற்றியும் இங்கே சொல்லப்பட்டு இருக்கிறது. விவசாயத்தில் முன்னேறத் துடிக்கும் இளம் தலைமுறைக்கு வழிகாட்டும் வகையில், அத்தனை பேரின் விளைச்சல் நிலங்களுக்கே சென்று, அவர்களின் அனுபவங்களை ஆதாரங் களோடு தகவல்களைத் திரட்டி இந்த நூலில் கொடுத்துள்ளார் ஜல்லிப்பட்டி பழனிச்சாமி. இந்தக் கட்டுரைகள் பசுமை விகடனில் வெளி வந்தபோதே வாசகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன. இப்போது நூல் வடிவில் உங்கள் கைகளில். உழைப்பால் உயர்வு பெற விரும்புபவர்களுக்கும், சாதிக்க நினைக்கும் விவசாயப் பெருமக்களுக்கும் பெரிதும் பயன்தரும், இந்தப் புத்தகம்!
RS. 63 More...by செ.திவான்
தெற்கே தரங்கம்பாடி-&நாகப்பட்டினம் தொடங்கி, வடக்கே காஷ்மீர், கிழக்கே வங்காளம், மேற்கே ஆப்கானிஸ்தான் என அகண்டு விரிந்த பேரரசை ஆட்சிசெய்தவர் மாமன்னர் ஔரங்கஜேப். ஐம்பது ஆண்டுகள் சிம்மாசனத்தில் வீற்றிருந்த ஔரங்கஜேப்பை ஒரு கொடுங்கோலன் என்று சரித்திரச் சான்றுகள் சொல்லி வருகின்றன. தன் தந்தை ஷாஜகானை சிறைக்குத் தள்ளி ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தவர் ஔரங்கஜேப் என்று பாடப்புத்தகங்கள் நமக்குப் பாடம் நடத்தியிருக்கின்றன. தன் சொந்த அண்ணன், தம்பியை அப்பட்டமாக படுகொலை செய்தவர்; தன்னை எதிர்த்த மகனையும், மகளையும் விரட்டிக் கொன்றவர் என்றெல்லாம் வழிவழியாக ஔரங்கஜேப் பற்றி சொல்லி வரப்படும் தகவல்கள் உண்மைதானா? ஔரங்கஜேப் இந்துக்களை இம்சித்தவரா? பெண்களை அவமதித்தவரா? காதலிப்பவர்களுக்கு கடுமையான தண்டனைகள் தந்தவரா? இல்லை.. இல்லை... இல்லவே இல்லை என்று ஆதாரங்களுடன் மறுக்கிறார் நூலாசிரியர் செ.திவான். மிகச்சிறந்த வரலாற்று ஆய்வாளரான செ.திவான், ஔரங்கஜேப் எத்தகைய குணம் உடையவர்? அவர் மீது வீண்பழி விழக்காரணம் என்ன என்பதை அலசி ஆராய்ந்ததின் விளைவே ‘வரலாற்றின் வெளிச்சத்தில் ஔரங்கஜேப்...’ ஒருவரைப் பற்றிய வரலாற்றை ஆய்வு செய்யும் போது, சம்மந்தப்பட்டவரைப் பற்றியோ, அவர் சார்ந்த சமூகத்தைப்பற்றியோ, காலத்தைப்பற்றியோ விளக்கங்களை ஆய்வாளர்கள், நூலாசிரியர்கள் வாசகர்களுக்கு விளக்குவார்கள். ஆனால், இந்த நூலில் ஔரங்கஜேப் யார் என்பதை உலகிற்கு உணர்த்த இந்து மதக் கோட்பாடுகளில் இருந்தும், கிருத்துவ, சமண மதங்களில் இருந்தும் எடுத்துக்காட்டுக்களை கையாண்டிருக்கிறார். வீரசிவாஜி யார்? சமணர்கள் கழுவேற்றப்பட்டது எப்படி? பாண்டிய மாமன்னர் இலங்கைத்தீவை பிடித்தது எப்படி-? என பல்வேறு வரலாற்று சம்பவங்களின் சுவையான பின்னணிகளை எடுத்துக்கூறுகிறார் செ.திவான். ஆக, வரலாற்றின் வெளிச்சத்தில் ஔரங்கஜேப்... தனிப்பட்டவரின் வரலாற்று ஆய்வு மட்டுமல்ல. அகண்ட பாரதத்தின் ஐம்பதாண்டுகால சமூக வரலாறு. படித்துப்பாருங்கள்; அதிசயித்துப் போவீர்கள்!
RS. 112 More...by ரேவதி
ஃபாஸ்ட் புட் யுகத்திலிருந்து கொஞ்சம் விலகி வருவோமா? மாத்திரை மருத்துக்குக் கட்டுப்படாத நோயெல்லாம் மூலிகைக்குதான் கட்டுப்படுகிறது! கை வைத்தியம் எப்படி நம் உடலைப் பாதுகாக்கிறது என்பதைப் பற்றி இந்த நூலில் நூல் ஆசிரியர் ரேவதி விளக்கி எழுதியிருக்கிறார். பிரண்டைத் துவையலை சாப்பிட இன்றைய தலைமுறை விரும்புவதில்லை. ஆனால், அதில்தான் நோய்களை எதிர்க்கும் ஆற்றல் இருக்கிறது. பிரண்டையை நுனியாகப் பறிக்காமல் அடித் தண்டையும் சேர்த்துப் பறித்துச் சமைத்தால் அரிப்பும் எரிச்சலுமாக இருக்கும். வைத்தியம் மட்டும் தெரிந்திருந்தால் போதாது. சுவையாகச் சமைக்கவும் தெரிய வேண்டும். பிரண்டை நீர் சுண்டினால் உப்புபோல படியும். குழந்தைகளுக்கு வாந்தி பேதி வந்தால் இந்த உப்பு மருந்தாகப் பயன்படும். இடியையே தாங்குகிற சக்தி வரகில் இருப்பதால்தான் அதைக் கோயில் கும்பத்தில் வைத்துப் பத்திரப் படுத்துகிறார்கள். தூதுயிலைப் பொடி பல்லை வெள்ளை வெளேர் என்று ஆக்கும். இவை போன்ற நுணுக்கமான ஏராளமான வித்தைகளை இதில் அள்ளித் தெளித்திருக்கிறார் நூல் ஆசிரியர். டிவி ரசித்துக்கொண்டே சிப்ஸைக் கொரிப்பதில்லையா அதுபோல வெறும் கைவைத்தியத்தை மட்டும் எழுதாமல் ஆங்காங்கே சொலவடைகளைச் சேர்த்து சுவை கூட்டி எழுதியிருப்பது புதுமை! டாக்டர் விகடனில் வெளிவந்த தொடர் இப்போது நூல் வடிவில் உங்கள் கைகளில் தவழ்கிறது.
RS. 63 More...by மயன்
கோயில்கள் நம் நம்பிக்கைக்கான வாயில்கள். வாழ்வின் சுழலில் துன்பங்கள் துரத்தும்போது ‘என்ன செய்தால் இவை அகலும்’ எனத் தெரியாமல் அல்லாடுகிறோம் நாம். பரிகாரத் தலங்களை நோக்கி ஓடுகிறோம். அப்படிப்பட்ட பரிகாரக் கோயில்களின் சிறப்பு குறித்தும், மகிமை குறித்தும் பரவசத்தோடு விளக்குகிறது இந்த நூல். படிக்கப் படிக்க அந்தக் கோயில் தலங்களுக்குச் சென்று தரிசித்து வந்த உணர்வும், அந்தக் கோயில்களுக்கு நாமும் சென்று பார்க்க வேண்டும் என்ற ஆவலும் ஏற்படுகிறது. பக்திக்கும், பழைமை பண்பாட்டுக்கும் பெருமை சேர்க்கும் கோயில்கள், வரலாறு, வாழ்க்கைமுறை, கலை, இலக்கியம், இதிகாசம், காப்பியம், மருத்துவம், ஜோதிடம், நிர்வாகம், நீதிமுறை, ஆகமம் போன்ற வாழ்வியலை நமக்கு வெளிப் படுத்தும் அரிய கருவூலங்களாகவும் வாழ்வை வளமாக்கும் தலங்களாகவும் திகழ்கின்றன. திருமணத்தடை நீங்கிடவும், பிரிந்த கணவன்&மனைவி சேர்ந்து வாழவும், குழந்தை இல்லாத குறையைப் போக்கிடவும் சர்ப்ப தோஷம் போக்கவும் பல்வேறு பரிகாரக் கோயில்களுக்கு பக்தர்கள் சென்று பயன்பெறுவதை அறியலாம். அதேபோல் கண்ணொளி பெற்றிடவும், ஊனம் நீங்கிடவும், வயிற்றுவலி, வலிப்பு நோய் நீங்கிடவும், சனி பகவான், குரு பகவான் கோயில்களுக்குச் சென்று வழிபடுவதையும் காணலாம். அவ்வாறான பல கோயில்களுக்கு நேரில் சென்று தரிசித்த நெகிழ்வோடு எழுதி இருக்கிறார் நூலாசிரியர் மயன். வெறுமனே பொழுதுபோக்குக்காக மட்டும் படித்துவிட்டு போகிற புத்தகமல்ல இது. வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட நற்காரியங்களுக்குப் பயன்படும் இந்தப் புத்தகம், உள்ளத்துக்கு ஒளிகொடுக்கும் காகித விளக்கு!
RS. 81 More...