Cart is Empty
by நாகப்பன் _ புகழேந்தி
உலக வாழ்வில் பணம் மட்டுமே எல்லாவற்றையும் நிர்ணயிக்கிறது. இந்த வியாபார உலகத்தில் மனித இருத்தலுக்குப் பணமே பிரதானம் என்பதால் மக்கள் இரவு பகல் பாராமல் பொருள் தேடி பயணிக்கின்றனர். கல்வி, திருமணம், வேலைவாய்ப்பு போன்ற வாழ்க்கை நிகழ்ச்சிகளுக்கு, முக்கியப் பங்கு வகிக்கும் பணத்தை சேர்த்துவைக்க எண்ணியவர்கள் பலர். அந்த எண்ணத்தைச் செயலாக்கியவர்கள் சிறப்பாக வாழ்கின்றனர். எதிர்கால நலனுக்காக சேமிக்கும் பழக்கம் இல்லாதவர்கள் பணத்தை இழந்து தவிக்கின்றனர். எனவே, உழைத்து பெரும் பாடுபட்டு சேமிக்கும் பணத்தை என்ன செய்வது என்று விழிக்கும் பலருக்கு வழிகாட்டவே ஆனந்த விகடன் இதழில் 'பணம் செய்ய விரும்பு' என்னும் தொடரை வழங்கினார்கள் நாகப்பன் _ புகழேந்தி. அந்தக் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். நாம் உழைத்துச் சம்பாதிக்கும் பணத்தை, மேலும் பெருக்க வழிமுறைகள் என்னென்ன இருக்கின்றன? அதனை எவ்வாறு செய்ய வேண்டும்? எந்தெந்த நிறுவனங்கள் மக்களின் பொருளாதார நலனுக்காக இயங்குகின்றன? அவற்றின் சாதக, பாதக நிலைகள் என்னென்ன? போன்ற சிறப்பான தகவல்களைத் தக்க ஆதாரங்களுடன் வெளிப்படுத்தி இருக்கின்றனர் நூலாசிரியர்கள். நாணயம் விகடன
RS. 50 More...by பூ.கொ.சரவணன்
எது வரலாறாகிறது? என்ற கேள்விக்கு செய்திகள் வரலாகின்றன என்பதே பதிலாக அமைந்தன. ஆனால், வெற்றியாளர்கள் மட்டுமே வரலாற்றின் பக்கங்களில் வாசிக்கப்படுகிறார்கள். வெற்றியாளர்கள் என்று பிரமிக்க வைத்தவர்கள் உருவானது எப்படி? வெற்றி சும்மா இருந்தால் வருமா? வெற்றியாளர்களின் மறுபக்கம் என்ன? வரலாற்றில் வெற்றி பெற்றவர்கள் பற்றிய சுவாரசியங்கள் நிறைந்த தகவல்களைத் தருகிறது இந்த நூல். வெற்றி பெறத்துடிக்கும் உங்களுக்குத்தான் இந்த நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது. வரலாற்றில் போற்றப்படும் ஒருவர் பெர்னாட்ஷா. அவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டதும் அவருக்குத் தகவல் சொன்னார்கள், “உங்களுக்கு நோபல் பரிசு ஷா” என்றார்கள். “எல்லா விருதையும் நானே எனக்குக் கொடுத்துக்கொண்டு விட்டேனே” என இவர் சொல்ல, “இது நீங்கள் எழுதிய ஜோன் ஆப் ஆர்க் நாடகத்துக்காக” என்றது எதிர்முனை; “அது போன வருடம் எழுதியது, உயிருக்குத் தண்ணீரில் மூழ்கி போராடிக்கொண்டு இருந்தவனுக்குக் கரை சேர்ந்ததும் லைப் ஜாக்கெட் தருவதைப்போல இருக்கிறது” என்ற ஷா அந்த விருதை வாங்கிக்கொள்ளப் போகவே இல்லை. இதுபோன்ற வரலாற்று மேதைகளின் மகத்துவம் நிறைந்த வாழ்வியலைப் பற்றி நிறைய தகவல்களை அள்ளித் தந்துள்ளார் நூலாசிரியர். பெர்னாட்ஷா சொன்னது போல.. வாழ்க்கை உங்களைக் கண்டடைவது இல்லை; உங்களைப் படைத்துக்கொள்வது என்பதற்கேற்ப உங்களை நீங்கள் படைத்துக் கொள்ள நீங்கள் படிக்க வேண்டியது இந்த வரலாற்று நாயகர்களை பற்றித்தான் என்பது இந்த நூலை நீங்கள் வாசிக்கத் தொடங்கும்போதே தெரிந்து கொள்வீர்கள். வாசியுங்கள்.. உங்களுக்காகவும் வரலாற்றின் பக்கங்கள் காத்திருக்கின்றன.
RS. 172 More...by ப.திருமாவேலன்
தங்கள் கடமைகளைச் செய்வதற்கே லஞ்சம் கேட்கும் அதிகாரிகளும், அமைச்சர்களும் உள்ள இந்த நாட்டில் ‘அரசியல்வாதிகளாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் அரசியலைத் திருத்த முடியாது’ என்ற வரிகள்கள்தான் ஞாபகத்துக்கு வருகிறது. குடும்ப அரசியல், ‘நட்பு’ அரசியல், வாரிசு அரசியல், சினிமா அரசியல் என்று அத்தனை வகை அரசியல்களையும் சகித்துக்கொள்ளும் மக்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே அதைப்பற்றிப் பேசி, பின் அதை மறந்துவிடுவார்கள். அரசியல்வாதிகளும் தாங்கள் கொடுக்கும் வாக்குறுதிகளை ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே புதுப்பித்துக்கொள்வார்கள். ஆனால், ஊடகங்கள் மட்டுமே அமைச்சர்கள் முதல் அரசியல்வாதிகள் வரை; ஆன்மிகவாதிகள் முதல் ஆண்டிகள் வரை நிகழ்த்தும் தில்லாலங்கடி வேலைகளை அவ்வப்போது வெளிச்சத்துக்குக் கொண்டு வரும். அந்த வகையில் விகடனில் வெளியாகும் அரசியல் கட்டுரைகள் அனைத்தும் மக்களின் மனக் குமுறல்களாகவே அமைந்திருக்கும். சாட்டையை எடுத்து விளாசினாலும் தார்க்குச்சி கொண்டு குத்தினாலும் அரசியல்வாதிகள் மீது கூறும் குற்றச்சாட்டுகள் ‘செவிடன் காதில் ஊதிய சங்காக’த்தான் இருக்கும். ஆனால், ஆளுங்கட்சி, எதிர்க் கட்சி என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரையும் தன் எழுத்தால், சொல் வன்மையால் அவர்கள் மேல் போர்த்தியிருக்கும் பல்வேறு ‘கலர்’ சட்டைகளைத் தோலுரித்துக் காட்டுகிறார் நூல் ஆசிரியர் திரு. ப.திருமாவேலன். கடந்த ஐந்து வருடங்களில் விகடன் இதழ்களில் வெளியான கட்டுரைகளின் கதம்பத் தொகுப்பே இந்த நூல். ஒவ்வொரு கட்டுரையின் இறுதியிலும் தேதி குறிப்பிட்டு இருப்பது, வாசகர்களை அந்தந்தக் காலகட்டத்துக்கே அழைத்துச்செல்லும் என்பதில் ஐயமில்லை.
RS. 95 More...by மதன்
இந்த நூலில் மொத்தம் 439 கேள்விகளுக்கு, பல புத்தகங்களை அலசி, ஆராய்ந்து மதன் அளித்துள்ள ஆதாரபூர்வமான பதில்கள் இடம் பெற்றிருக்கின்றன. புராணம், வரலாறு, விஞ்ஞானம், விளையாட்டு என்று பல்வேறு துறைகள் குறித்த வாசகர்களின் சந்தேகங்களுக்கு விடையளித்திருக்கிறார் மதன். அதேபோல், விலங்குகள், பறவைகள் பற்றியும்... காதல், மனித உறவுகள், மனோதத்துவம் பற்றியும்... இந்த மூன்றாம் பாகத்திலும் அறிவுபூர்வமான பதில்கள் பரவிக் கிடப்பதை வாசகர்கள் பார்க்கலாம். மேலும் அவரது அனுபவங்கள் சார்ந்த பல சுவையான தகவல்களையும் அளித்திருக்கிறார். 2005 நவம்பர் முதல் 2006 அக்டோபர் வரையில் விகடனில் வெளியான கேள்வி பதில்களின் தொகுப்பே இந்த ஹாய் மதன். ஒவ்வொருவரின் வீட்டு புத்தக அலமாரியிலும் இந்த நூல் இருக்க வேண்டும். இருந்தால், பொது அறிவு விஷயங்களில் சந்தேகம் ஏற்படும் போதெல்லாம், இந்நூலைப் புரட்டிப் பார்த்து வாசகர்கள் விடை தெரிந்து கொள்ளலாம்.
RS. 67 More...by சி.சரவணன்
இன்றைய காலகட்டத்தில் கடன் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகவே மாறிவிட்டது. கடனால் கண்கலங்கிய காலம் மாறி கடனே ஒருவரைக் கைதூக்கிவிடும் காலம் உருவாகி வருகிறது. கடனே கடவுள் காட்டிய வழி என நினைக்கிறது இன்றைய நடுத்தர வர்க்கம். விலைவாசியும், அத்தியாவசியத் தேவைகளும் அதிகரித்துக் கொண்டே செல்லும் இந்தக் காலகட்டத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப்பவர்களும் நடுத்தர வர்க்கத்தினரும் தங்களின் வாழ்க்கையை நடத்த சொல்ல முடியாத அல்லாடல் களுக்கு ஆளாகிறார்கள். மனை வாங்க, வீடு கட்ட, நகை வாங்க, நகை அடமானம் வைக்க, தொழில் தொடங்க, தனிநபர் முன்னேற்றத்துக்காக, கல்விக்காக, வாகனத்துக்காக என கடனுக்கான அவசியம் பெருகிக்கொண்டே போகிறது. உரிய தகுதிகள் இருந்தால் மட்டுமே கடன் என்கிற கந்துவட்டிப் பழக்கங்கள் மலையேறி, இன்றைய காலகட்டத்தில் நம்மைத் தேடி வந்து கடன் கொடுக்க அரசும் தனியார் வங்கிகளும் தயாராக இருக்கின்றன. வங்கிகள், நிதி நிறுவனங்களில் என்னென்ன கடன்கள் இருக்கின்றன? அவற்றைப் பெறுவது எப்படி? கடனைச் சரியாகக் கட்டினால் கிடைக்கும் நன்மை என்ன? எந்தத் தேவைக்கு எந்தக் கடன் வாங்க வேண்டும்? கடன் வாங்கும் தகுதி என்ன? எனக் கடன் குறித்த முழுத் தகவல்களையும் அலசி ஆராய்ந்து, அனைவருக்கும் பயன்படும் விதத்தில் தெளிவாக இந்த நூலை எழுதி இருக்கிறார் சி.சரவணன். இன்றைக்கு நம்மில் பலர் சொந்த வீட்டுக்கும் சொகுசான காருக்கும் உரிமையாளராக இருக்கிறார்கள் என்றால், நிச்சயம் அவர்களுக்குக் கைகொடுத்தது கடன்தான். கடன் குறித்த பயத்தைத் தெளியவைக்கும் இந்த நூல், நடுத்தர வர்க்கத்துக்கான விரல்பிடிப்பாக இருக்கும் நிச்சயமாக!
RS. 50 More...by செ.திவான்
வாணிபம் செய்ய வந்து அதிகாரம் செலுத்திய ஆங்கிலேயரை எதிர்த்து அடிமைச் சங்கிலியை உடைத்தெறியப் போராடியவர்கள் பலர். சரித்திரத்தின் பொன்னேடுகளில் பலரது புரட்சிகரமான வாழ்க்கைப் பதிவுகள் இடம்பெற்றிருக்கின்றன. மருதநாயகத்தின் வாழ்க்கையும் அந்த வகையில் ஒதுக்கமுடியாத இடத்தைப் பெற்றதே. ஆரம்ப காலங்களில் ஆங்கிலேயருடன் நட்பு பாராட்டினாலும் இறுதியில் மிகவும் கடுமையாக ஆங்கிலேயரை எதிர்த்து சிம்ம சொப்பனமாக விளங்கியவர் மருதநாயகம் என்னும் கான்சாகிப். இவர் பிறந்த ஆண்டு பற்றி துல்லியமாகத் தெரியாவிடினும், வரலாற்றுச் சான்றுகளையும், கட்டுரையாளர்களின் பதிவுகளையும் ஆதாரங்களாகக் காட்டி பூலித்தேவன் மற்றும் திப்பு சுல்தானின் தந்தை ஹைதர் அலியின் சம காலத்தவர் மருதநாயகம் என்பதைத் தெளிவாக விளங்கச் செய்துள்ளார் இந்த நூலின் ஆசிரியரும் வரலாற்று ஆய்வாளருமான செ.திவான். மேலும், மருதநாயகம் என்ற பெயர் எப்படி வந்தது என்பதையும், அவர் ஒரு முஸ்லிம்தான் என்பதையும் பல சான்றுகளுடன் ஆணித்தரமாக கூறியிருப்பது குறிப்பிடத்தக்க ஒன்று. வரலாற்றுப் பதிவுகள் என்றாலே அதில் ஒரு தேடலும், ஆய்வும், ஆராய்ச்சியும் கட்டாயம் இருக்கும் என்பதை இந்த நூலின் ஆசிரியர் கொடுத்திருக்கும் தகவல்கள் நமக்கு உணர்த்துகின்றன.மருதநாயகம் என்ற மாமனிதரின் வீர சாகசங்களையும், அதிரடியான போர்த்திறன்களையும் எளிய நடையில், உணர்ச்சி மிக்க எழுத்துகளால் பதிவு செய்திருக்கிறார் நூல் ஆசிரியர். நம்மில் பலருக்கும் தெரியாத பல அரிய தகவல்களை மேல்நாட்டு எழுத்தாளர்கள், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திய பதிவுகள் போன்றவற்றை ஆதாரங்களாகக் கொடுத்திருப்பது மிகுந்த வலு சேர்க்கக்கூடியது. வரவேற்கத்தக்கது. சரித்திரத்தின் உண்மைகளைத் தெரிந்துகொள்ள நினைக்கும் அத்தனைபேருக்கும் இந்த நூல் அற்புதமான ஆவணம்.
RS. 77 More...by ஸ்வாமி
நாம் சுவாசிக்கும் பிராணவாயு இல்லாவிட்டால் உடல் இயக்கமற்று, உடலுக்கும் உயிருக்குமான தொடர்பு இல்லாமல் போய்விடும். இப்படி நாம் உயிர்வாழ்வதற்கு முக்கியமானதாகத் தேவைப்படும் பிராணவாயு, ஒழுங்கற்ற முறையில் நம் நாசிகளின் வழியே சென்று நுரையீரலை அடைந்து உடலுக்கு உயிர்ச்சத்தை உருவாக்குகிறது. இப்படி ஒழுங்கற்ற வகையில் நம் உடலுக்குள் சென்றுவரும் பிராண வாயுவை ஒழுங்குபடுத்தி, சீரான வகையில் சென்றுவர வழிவகுத்தால், அது சுவாச உறுப்புகளுக்கு வலிமையும், உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரும். இது முன்னோரின் அனுபவம். அதனாலேயே பிராணாயாமக் கலை, மிகவும் உன்னதமாகப் போற்றப்படுகிறது. மூச்சை ஒழுங்குபடுத்தி சீராக சுவாசிப்பதால், மூளைக்கு பலம் கிடைக்கிறது என்பதோடு, நினைவாற்றலும் வளர்கிறதாம். மேலும், சுவாசம் தொடர்பான நோய்களில் இருந்து விடுதலை கிடைக்கிறது என்பதும் இந்தக் கலையின் பயன்களில் ஒன்று. இன்றைக்கும் அலர்ஜி, மூக்கில் நீர் கட்டுவது போன்ற சுவாச நோய்களுக்கும் பிராணாயாமக் கலை மருந்தில்லா நிவாரணி என்பது அனுபவ ரீதியாகக் கண்ட உண்மை. இதனால்தான் இந்தக் கலை வெளிநாடுகளிலும் பெரிய வரவேற்பு பெற்றுத் திகழ்கிறது. சிறப்புகள் வாய்ந்த இ
RS. 67 More...by முதியோர் மருத்துவர் வி.எஸ்.நடராசன்
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல். _ ‘நோய் இன்னதென்று அறிந்து, அதன் காரணத்தை ஆராய்ந்து, அதைப் போக்கும் வழியைக் கண்டுபிடித்து, உரிய மருத்துவ உதவியைப் பிழையில்லாமல் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் நோய் அடியோடு ஒழிந்து விடும்’ என்பது வள்ளுவர் வாக்கு. முதுமையில், உடல் தளர்ச்சியினாலும், சத்தில்லாத உணவினாலும் நோய்களின் தாக்குதல் அதிகமாக இருக்கும். நோய் வராமல் தடுத்து உடல்நலத்தைப் பாதுகாக்க, உணவு முறையையும், உடற்பயிற்சியையும் சீராகக் கடைப்பிடிக்க வேண்டும். நோயின் அறிகுறி தெரிந்தால் அதை அடியோடு ஒழிக்க முயற்சி செய்யவேண்டும். முதுமையில் வரும் நோய்கள் என்னென்ன... அந்த நோய்கள் வருவதற்கான காரணங்கள் என்னென்ன... நோய் வந்துவிட்டால் அதிலிருந்து எப்படி தற்காத்துக்கொள்வது... நோய்க்குரிய சிகிச்சை முறைகள் என்ன... மருந்துகளை உட்கொள்ளும் முறைகள் என்ன..? _ இப்படி பல கேள்விகளுக்குத் தெளிவான பதில் சொல்கிறார் 30 ஆண்டுகள் அனுபவம் கொண்ட முதியோர் மருத்துவர் வி.எஸ்.நடராசன். இந்த நூல், முதியோர் தங்கள் வாழ்நாளில் உடல்நலத்துடன் வாழ வழி காட்டியிருப்பதோடு, பலருடைய சந்தேகங்களைத் தெளிவுபடுத்தும் வகையில், எளிய தமிழில் அனைவருக்கும் விளங்கும் நடையில் ‘கேள்வி_பதில்’ பாணியில் எழுதப்பட்டிருக்கிறது. இளைஞர்களும் இந்த நூலைப் படித்துத் தெரிந்துகொண்டால், தங்கள் தாத்தா, பாட்டி, தாய், தந்தை ஆகியோரின் நிலையைப் புரிந்து கொண்டு, அவர்களுக்கு வழிகாட்டவும் இந்த பதில்கள் உதவும்!
RS. 88 More...by மதன்
ஆனந்த விகடனில் மாலி, ராஜூ, கோபுலு, ஸ்ரீதர் போன்றவர்கள் வகுத்துக் கொடுத்த பாதையில் தனது ஜோக்குகள் மற்றும் கார்ட்டூன்கள் மூலம் தனி முத்திரைப் பதித்தவர் மதன். ஜோக்குகளுக்கென்று பிரத்தியேகமாக காரெக்டர்களை உருவாக்கி, விகடன் நடுப்பக்கங்களில் அவர்களை மதன் உலா வரச்செய்த போது விலா நோகச் சிரித்து மகிழ்ந்தார்கள் வாசகர்கள். சிரிப்புத் திருடன் சிங்காரவேலு, முன் ஜாக்கிரதை முத்தண்ணா... இப்படி நிறைய உதாரணங்களைச் சொல்லலாம். மதன் ஜோக்குகளில் வாசகங்களை மட்டும் படித்துவிட்டுப் பக்கங்களைப் புரட்டிவிட முடியாது. அதற்கான படங்களையும் உற்றுக் கவனிக்க வைத்தவர் அவர். நாம் அன்றாடம் பார்க்கும் மனிதர்கள்கூட மதனின் கை வண்ணத்தில் வித்தியாசமாகத் தெரிவார்கள். அப்பாவித்தனமாக முகத்தை வைத்துக்கொண்டு ஒரு சிலரும், தொந்தியும் தொப்பையுமாக உருவத்தை வைத்துக் கொண்டு வேறு சிலருமாக... குறும்பு கொப்புளிக்கும் படங்கள் நம்மை புன்முறுவலிக்க வைக்கும். ஜூனியர் விகடன் தொடங்கப்பட்ட சமயத்தில் மதன் வரைந்த ஜோக்குகளும், கார்ட்டூன்களும் வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றன. அந்த ஜோக்குகளின் தொகுப்புதான் இது.
RS. 56 More...by விகடன் பிரசுரம்
ஆனந்த விகடன் பவழ விழாவை முன்னிட்டு, 2001-ம் ஆண்டு நடத்தப்பட்ட முத்திரைக் கவிதைப் பரிசுப் போட்டியில் வெற்றி பெற்ற 75 கவிதைகளின் தொகுப்பு இது. விகடனின் தேர்வு, ஒருவரின் வெற்றிக்கு எத்தகைய உந்துதலாக அமைகிறது என்பதற்கு இந்த நூலே சாட்சி. இதில் இடம்பெற்ற கவிஞர்களில் பலரும் இளைஞர்கள். கவிதை உலகில் அப்போதுதான் அடியெடுத்து வைத்தவர்கள். இப்போது அவர்களில் பலரும் பிரபலமாக வலம் வருகிறார்கள். வாழ்வியல், சூழல், முரண்பாடு, ஆவேசம் என தங்கள் வாழ்வின் அத்தனைவிதமான கூறுகளையும் சில வரிகளிலேயே இங்கே இறக்கி வைத்திருக்கிறார்கள் இந்த யதார்த்தவாதிகள். சில கவிதைகளைக் கடக்கையில் நெஞ்சு முழுக்க நிசப்தம் பரவுகிறது. அடுத்த கவிதையைப் படிக்கும் மனமின்றி முதல் கவிதையின் லயிப்பிலேயே சுருண்டு கிடக்கத் தோன்றுகிறது. தாயின் குடங்கைக்குள் ஒடுங்கிக்கொள்ளும் சிசுவைப்போல் இந்தப் புத்தகத்துக்குள் புதைந்துகொள்ள மனம் துடிக்கிறது. ஒன்றையன்று விஞ்சும் விதமாக இறைந்துகிடக்கும் கவிதைகள், ஒவ்வொரு பக்கத்தையும் மயிலிறகுப் பக்கமாக மலர்த்தி இருக்கின்றன. வாழ்ந்து கெட்டவனின் வீடு தொடங்கி இ-மெயிலில் வரும் இறப்புச் செய்தி வரை இந்தக் கவிதைகள் பந்திவைக்கும் விஷயங்கள் வன்மையானவை. ஒரே நேரத்தில் செவலையெனும் சித்தப்பாவுக்காக அழவைக்கவும், ‘ஏ... கோழையே...’ எனத் தீவிரவாதத்துக்கு எதிராக எழவைக்கவும் இந்தக் கவிதைகளால் முடிகிறது. நிறைய கவிதைகள், நம் நெஞ்சத்து நியாயத்தராசை வேகமாக ஆட்டிவிட்டு வேடிக்கை பார்க்கின்றன. நம்மை நாமே சுயபரிசோதனை செய்துகொள்ளும் சூத்திரங்களே இந்தக் கவிதைகள். 75 கவிதைகளையும் வாசித்து முடிக்கையில் வாழ்வின் கடைசிக் கோட்டைத் தொட்டுத் திரும்பிய உணர்வோடு நீங்கள் வெளிவருவீர்கள் - புது மனிதர்களாக!
RS. 50 More...