ஆன்மிக மாலை- "எல்லோரும் இன்புற்றிருக்க" என்னும் தலைப்பில் அருளாசி வழங்குபவர் - திருக்கயிலாய பரம்பரைத் திருவண்ணாமலை ஆதீனகர்த்தர் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்.
அன்பே தவமென வாழ்ந்து வரும் குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரை அறியாதோர் யாரும் இருக்க முடியாது.
திருவருளாலும் குருவருளாலும் உலகம் முழுக்க அமைதியை வளர்த்துவரும் இந்த ஞானியின் அருளுரையால் நன்மைகள் பல நானிலம் எங்கும் நடைபெற்று வருகின்றன.
நாளும் தமிழ்த் தொண்டு, சமயத் தொண்டு, சமுதாயத் தொண்டு ஆற்றிவரும் இவரது தீந்தமிழ் பேச்சினை பருக வாருங்கள் என்று அழைக்கிறோம்.
அடிகளாரின் அருளாசிக்குப் பிறகு திருமாந்துறை உச்சிஷ்டகணபதி ஆலய தரிசனத்தையும் அந்த ஆலய சிறப்புகளையும் காணவிருக்கிறோம்.
சக்தி விகடன் நடத்தும் `ஆன்மிக மாலை' என்ற ஆன்லைன் ஆன்மிக சிறப்பு நிகழ்ச்சியில் தங்கு தடையின்றிப் பங்கேற்க, கீழுள்ள குறிப்புகளை மறக்காமல் பின்பற்றுங்கள்!
வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம். https://zoom.us/download
https://play.google.com/store/apps/details?id=us.zoom.videomeetings&hl=en_IN
வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம். https://apps.apple.com/us/app/zoom-cloud-meetings/id546505307
நீங்கள் ரிஜிஸ்டர் செய்த இமெயில் ஐடி மூலம் வெபினர் அட்மின், உங்கள் வருகையை சரிபார்த்தபின் வகுப்புக்குள் அனுமதிக்கப் படுவீர்கள்.
வெபினாரில் பங்கேற்கும் முன் அதிகம் தொந்தரவு இல்லாத நல்ல இடமாக தேர்ந்தெடுத்துக்-கொள்ளுங்கள். இணையத் தொடர்பு நன்றாக இருக்கிறதா என்பதையும் கவனத்தில் -கொள்ளவும். இணைய வேகத்தை டெஸ்ட் செய்ய - https://www.speedtest.net
நிகழ்ச்சி தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே பங்கேற்பாளர்கள் ஜூம்-ல் லாக்-இன் செய்துவிடவேண்டும்.
ஜூம்-ல் லாக்-இன் செய்யும்போதே, மைக் மற்றும் வீடியோவை தயவுகூர்ந்து ம்யூட் (mute) செய்துகொள்ளவும். அப்போதுதான் அனைவரும் தொந்தரவு இல்லாமல் தெளிவாகச் சிறப்புப் பேச்சாளர்களின் கருத்தைக் கேட்க முடியும்.
செமினாரில் கலந்துகொள்வதற்கு ஏற்ப, (நீங்களும் வீடியோவில் வர வாய்ப்புண்டு என்பதால்) செமி ஃபார்மல் உடைகளையே அணியுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
பங்கேற்பாளர்கள் குறிப்புகள் எடுத்துக்கொள்ள நோட்-பேட் வைத்துக்கொள்ளுங்கள். அதில் முக்கியமான விஷயங்களையும் சந்தேகங்களையும் குறித்து வையுங்கள்.