இசைப்பேரொளி நித்யஶ்ரீமகாதேவன்
காளிகாம்பாள் கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர்
ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு ஆன்மிக மாலை வைபவம் இது.`இசையால் வசமாவான் இறைவன்' எனும் தலைப்பில் கீர்த்தனைகளும் விளக்கங்களுமாக சிறப்புரை ஆற்றுகிறார் இசைப்பேரொளி நித்யஶ்ரீ மகாதேவன். முருகக்கடவுளுக்கு உகந்த இந்நாளில், குமாரதீப வழிபாட்டின் மகிமையை விளக்கி, வீட்டிலிருந்தபடியே நாம் வழிபடவும் வழிகாட்டுகிறார் காளிகாம்பாள் கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர். ஈசனின் நெற்றிக்கண்ணிலிருந்து தீப்பொறியாகக் கனலாகத் தோன்றிய கார்த்திகேய கடவுளைத் தீப வடிவிலும் தீபத்தாலும் வழிபடுவதும் மிகவும் சிறப்பாகும். வாருங்கள் மனமுருக வழிபடுவோம் வடிவேலனை! என்ற ஆன்லைன் பயிலரங்கில் தங்கு தடையின்றிப் பங்கேற்க, கீழுள்ள குறிப்புகளை மறக்காமல் பின்பற்றுங்கள்!
வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம். https://zoom.us/download
https://play.google.com/store/apps/details?id=us.zoom.videomeetings&hl=en_IN
வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம். https://apps.apple.com/us/app/zoom-cloud-meetings/id546505307
நீங்கள் ரிஜிஸ்டர் செய்த இமெயில் ஐடி மூலம் வெபினர் அட்மின், உங்கள் வருகையை சரிபார்த்தபின் வகுப்புக்குள் அனுமதிக்கப் படுவீர்கள்.
வெபினாரில் பங்கேற்கும் முன் அதிகம் தொந்தரவு இல்லாத நல்ல இடமாக தேர்ந்தெடுத்துக்-கொள்ளுங்கள். இணையத் தொடர்பு நன்றாக இருக்கிறதா என்பதையும் கவனத்தில் -கொள்ளவும். இணைய வேகத்தை டெஸ்ட் செய்ய - https://www.speedtest.net
நிகழ்ச்சி தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே பங்கேற்பாளர்கள் ஜூம்-ல் லாக்-இன் செய்துவிடவேண்டும்.
ஜூம்-ல் லாக்-இன் செய்யும்போதே, மைக் மற்றும் வீடியோவை தயவுகூர்ந்து ம்யூட் (mute) செய்துகொள்ளவும். அப்போதுதான் அனைவரும் தொந்தரவு இல்லாமல் தெளிவாகச் சிறப்புப் பேச்சாளர்களின் கருத்தைக் கேட்க முடியும்.
செமினாரில் கலந்துகொள்வதற்கு ஏற்ப, (நீங்களும் வீடியோவில் வர வாய்ப்புண்டு என்பதால்) செமி ஃபார்மல் உடைகளையே அணியுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
பங்கேற்பாளர்கள் குறிப்புகள் எடுத்துக்கொள்ள நோட்-பேட் வைத்துக்கொள்ளுங்கள். அதில் முக்கியமான விஷயங்களையும் சந்தேகங்களையும் குறித்து வையுங்கள்.
ஆகஸ்ட் 11, மாலை 6.30 மணிக்கு பதிவு முடிவடைகிறது.