Sakthi Vikatan குருப்பெயர்ச்சி சிறப்புப் பரிகார ஹோமம்
'திருப்பதி தரிசன' புண்ணியம் அருளும் திருவடிசூலத்தில் குருப்பெயர்ச்சி சிறப்புப் பரிகார ஹோமம்!
'திருப்பதி தரிசன' புண்ணியம் அருளும் திருவடிசூலத்தில் குருப்பெயர்ச்சி சிறப்புப் பரிகார ஹோமம்!
For Details Contact 89390 30246
advance_booking
இடம்: ஆதிபரமேஸ்வரிதேவி ஸ்ரீகருமாரியம்மன் திருக்கோயில், அருள்மிகு சப்தசைலஜ ஸ்ரீவாரு வேங்கடாசலபதி கோயில், திருவடிசூலம், செங்கல்பட்டு.
நாள்: 29.10.19 செவ்வாய்க்கிழமை நேரம்: 9:00 A.M. to 3 P.M.

நிகழும் விகாரி வருடம், ஐப்பசி 11-ம் தேதி - திங்கட்கிழமை, (விடிந்தால் செவ்வாய்) 28/29.10.2019 சுக்லபட்சம் பிரதமை திதி, கீழ்நோக்குள்ள விசாகம் நட்சத்திர தினத்தில், குரு பகவான் ஸ்திர வீடான விருச்சிகத்திலிருந்து தன் சொந்த வீடான தனுசு ராசிக்கு இடம்பெயர்கிறார்.

கிரகங்களில் முழு சுபகிரகமான குரு பகவான் தனுசு ராசியில் சஞ்சரிக்கும் ஒரு வருட காலத்தில் ரிஷபம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்கள் உரிய பரிகார வழிபாடுகளைச் செய்ய வேண்டும் என்கின்றன சாஸ்திரங்கள். இதன் மூலம், இந்த குருப்பெயர்ச்சி காலத்தில் தடைகள் மற்றும் சிரமங்களைத் தவிர்த்து முன்னேற்றம் காணலாம். மற்ற ராசிக்காரர்களும் குரு பகவானுக்கான சிறப்பு வழிபாடுகளில் கலந்துகொண்டு வழிபட்டால், அவரது பரிபூரண அருளைப் பெற்று சிறக்கலாம்.

அந்த வகையில் வாசகர்களின் நன்மைக்காக சக்தி விகடன் சார்பில், குருப்பெயர்ச்சி தினத்தில் (29.10.19 செவ்வாய்), பரிகார மகா ஹோமம் சாஸ்திரோக்தமான முறையில் மிகச் சிறப்பாக நடைபெற ஏற்பாடாகி உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், திருவடிசூலம் என்ற தலத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு சப்தசைலஜ ஸ்ரீவாரு வேங்கடாசலபதி கோயிலின் அருகிலுள்ள ஆதிபரமேஸ்வரிதேவி ஸ்ரீகருமாரியம்மன் திருக்கோயிலில் இந்தச் சிறப்புப் பரிகார ஹோமம் நடைபெறவிருக்கிறது.

நவகிரக நாயகி அம்பாளின் க்ஷேத்திரத்தில் நடைபெறும் இந்தப் பரிகார ஹோமம், சிறப்பான பலன்களைப் பெற்றுத்தரும். மேலும், குரு பகவானின் அதிதேவதை பிரம்மா. அவர், திருமாலின் நாபிக்கமலத்திலிருந்து தோன்றியவர். ஆக, அன்றைய தினம் திருமால் தரிசனமும் வழிபாடும் பன்மடங்கு பலன்களைப் பெற்றுத் தரும். அந்த வகையில் 108 திவ்ய தேச பெருமாள்களையும் ஒரே இடத்தில் தரிசிக்கும் வாய்ப்பும், சிறப்பு வழிபாடும் வாசகர்களுக்காகக் காத்திருக்கின்றன.

ஆம்! திருவடி சூலத்தில் 108 திவ்ய தேச சந்நிதிகளையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது, ஸ்ரீவாரு வேங்கடாசலபதி திருக்கோயில்.

devotional_member devotional_member

வாசகர்கள் கவனத்துக்கு...

* குருப்பெயர்ச்சியையொட்டி 29.10.19 செவ்வாய்க்கிழமை அன்று செங்கல்பட்டு அருகிலுள்ள திருவடிசூலம் ஶ்ரீவாரு வேங்கடேசபெருமாள் ஆலயம் அருகிலுள்ள ஆதிபரமேஸ்வரிதேவி ஸ்ரீகருமாரியம்மன் திருக்கோயிலில் வைத்து நடைபெறவுள்ளது.

* சிறப்புப் பரிகார ஹோமத்துக்கு வாசகர்களே கர்த்தாக்கள். ஆகவே, சங்கல்ப கட்டணமாக தனிநபர் ஒருவருக்கு ரூ.501 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது (ஜி.எஸ்.டி உள்பட).

* ஹோமத்துக்குப் பதிவு செய்துகொண்டவர்களுக்கு, பெயர் - நட்சத்திரத்துடன் தனித்தனியே சங்கல்பம் செய்துவைக்கப்படும்; அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த மற்றவர்கள், பார்வையாளர்களாக வழிபாட்டில் கலந்துகொள்ளலாம்.

* சங்கல்ப வைபவம் காலை 9 மணிக்கு தொடங்கிவிடும். அதற்கேற்ப உரிய நேரத்துக்குள் ஆலய வளாகத்துக்கு வந்துசேரவேண்டும்.

* சிறப்புப் பரிகார ஹோமத்துக்கு தங்களின் சொந்த இடத்திலிருந்து செங்கல்பட்டு அருகில் திருவடிசூலம் ஆதிபரமேஸ்வரிதேவி ஸ்ரீகருமாரியம்மன் திருக்கோயிலுக்கு வந்துசெல்வது (போக்குவரத்து) அவரவர் சொந்த பொறுப்பாகும்.

* ஹோம வைபவத்துக்கு நேரில் வர இயலாதவர்களும் முன்பதிவு செய்துகொள்ளலாம். அவர்களுக்கு உரிய முறைப்படி பூஜையில் சங்கல்பம் செய்யப்படும். ஹோமப் (விபூதிப்) பிரசாதம் 7.11.19-ம் தேதிக்குள் (தமிழ்நாடு பாண்டிச்சேரி மாநிலங்களுக்கு) அனுப்பிவைக்கப்படும் . தெளிவான முகவரி மற்றும் தொலைபேசி எண்ணைக் குறிப்பிடுவது அவசியம்.

* மழை வெள்ளம் முதலான இயற்கைக் காரணிகளால் ஏதேனும் தடைகள் - சிரமங்கள் ஏற்பட்டால் உடனுக்குடன் மாற்று ஏற்பாடு செய்யப்படும்.

* எனினும் அவை சார்ந்த நேர விரயம் மற்றும் மனச் சங்கடங்களுக்கு விகடன் நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பேற்க இயலாது.

* முன்பதிவை ஏற்பது மற்றும் தவிர்ப்பதில் ஆசிரியரின் முடிவே இறுதியானது.

சொந்த விவரங்கள்