இயற்கை வழியில் அசத்தல் அழகு!

by:ராஜம் முரளி
Synopsis

இயற்கை உணவுப் பொருள்கள், ஆரோக்கியத்தோடு அழகையும் தரக்கூடியவை. அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்று பெண்கள் மட்டுமல்ல, இன்றைய காலத்தில் ஆண்களுமே ஆசை கொள்கின்றனர். அதற்காக செயற்கை முறையில் தயாரிக்கப்படும் அழகு சாதனப் பொருள்களை வாங்கி உபயோகிக்கின்றனர். அதனால் அழகுக்குப் பதில் உடல் ஆரோக்கியம்தான் கெடுகிறது. ஆனால், நமக்கு எளிதில் கிடைக்கும் கீரை வகைகளில் உடல் ஆரோக்கியத்தைக் காக்கும் சத்துகள் மட்டுமின்றி நம் உடல் பாகங்களை அழகாக்கும் பலன்களும் உள்ளன. பார்வையைக் கூர்மையாக்கி கண்களை அழகாக்கும் பொன்னாங்கண்ணி, வயிற்றுப் புண்ணை நீக்கி, பருக்களைப் போக்கி முகத்துக்குப் பொலிவு தரும் மணத்தக்காளி, தோலுக்குப் பளபளப்புத் தரும் கற்பூரவல்லி... என கீரைகள் ஒவ்வொன்றும் நமக்கு ஆரோக்கியத்தையும் அழகையும் சேர்த்தே தருகின்றன. கீரை மட்டுமின்றி நட்ஸ் வகைகள், பழங்கள் ஆகியவவை உடல் பாகங்களை அழகாக்க எப்படி யெல்லாம் உதவுகின்றன என்பதையும் பயன்படுத்தும் முறைகளையும் அழகாக எடுத்துச் சொல்கிறது இந்த நூல். ஆரோக்கியத்தோடு இயற்கை தரும் பேரழகையும் பெற்று ஜொலியுங்கள்!

Buy the eBook
List Price RS .150
Your price
RS .150
You save Rs. 0(0%)

You can read this item using Vikatan Mobile App: