Cart is Empty
by பேராசிரியர். யொஹான் கால்டுங் முனைவர் சு.ப. உதயகுமாரன்
இரு மனிதர்களுக்கிடையே அல்லது இரு குழுக்களுக்கு இடையேயான கருத்து முரண்பாட்டின் அடுத்த நிலையே தகராறு. ஆக, தகராறு முற்றும்போது தீர்வு என்று ஒன்று உருவாகும். சமாதானம் அல்லது சண்டை என்ற நிலையில் இருந்து முடிவாக என்ற சொல்லுக்கு தீர்ப்பு என்ற வார்த்தையே சரியானதாக இருக்கும். அப்படி தீர்ப்பு தருபவர் யார்? அவர் சொல்லும் தீர்ப்பு நடுநிலையானதா? யார் பக்கம் நின்றாவது தீர்ப்புச் சொல்லப்படுகிறதா? தகராறுகளுக்கு நிவாரணம் என்ன? பேச்சுவார்த்தை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்? என்பதைப்பற்றி எல்லாம் சிறப்பாகவே சொல்கிறது இந்தப் புத்தகம். பொதுமக்களுக்கு எதிரான ஒரு தகராறில் அரசின் நிலைப்பாடு என்ன? மக்களுக்கு ஆதரவான நிலையையா அரசு எடுக்கிறது? இதுபோன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்வது மட்டுமல்லாமல், சமாதான முயற்சி என்ற பெயரில் அரசின் கருத்துக்கள் திணிக்கப்படுவதை தோலுரித்துக் காட்டுகிறது இந்த அற்புதமான புத்தகம். ‘ஆராய்ந்துணர்தல்,முன்னறிவித்தல்,நிவாரணம்’ ஆகியவற்றைத் தேர்ந்து, தகராறுகளை எப்படி மாற்றி அமைத்துக்கொள்வது, சமாதானத்தை எப்படி உருவாக்குவது என்பது பற்றித் தெரிந்து கொள்ள இந்நூல் பெரிதும் உதவும். உலககின் பெரும்பான்மையான நாடுகளில் தகராறு என்னும் சொல் ‘ஹலோ’ சொல்வது போலாகிவிட்டது. நாம் அன்றாடம் சந்திக்கும் மனிதர்கள் குறிப்பாக, பக்கத்து நாற்காலியில் உட்கார்ந்து பணிபுரிபவரிடமிருந்து தொடங்கி & பக்கத்து தெருவரை, அண்டை மாநிலம் தொடங்கி & அண்டை நாடுவரை யாரிடம் நாம் தகராறு செய்யவில்லை? யார் நம்மிடம் தகராறுக்கு வரவில்லை?! எதற்காக தகராறுகள் உருவெடுக்கின்றன? தீர்வுக்கு வழிதான் என்ன? என்று நீங்கள் கேட்டால் அத்தனைக்கும் பதில் உண்டு இந்தப் புத்தகத்தில். கடந்து சென்றிடும் வழிவகையையும், அதை மாற்றியமைத்திடும் நெறிமுறையையும் தருகிறார் பேராசிரியர் யொஹான் கால்டுங். தமிழ் வாசகர்களுக்காக இந்தப் புத்தகத்தை மொழிமாற்றம் செய்து தந்திருக்கிறார் சுப.உதயகுமார். அவருடைய எளிமையான மொழிநடை வாசிப்புக்குச் சுவை கூட்டுகிறது. இன்றைய சூழலில் வாசிக்கத் தேவையான புத்தகம் இதுவே. ஏனெனில் காதல் தகராறுகள், கணவன்&&மனைவி தகராறுகள், சாதி தகராறுகள், அரசுக்கு எதிரான தகராறுகள் என தகராறுசூழ் தருணத்தில் உலாவரும் நம் நெஞ்சுக்கு நீதி சொல்கிறது இந்தப் புத்தகம். வாசித்துப்பாருங்கள். எந்த தகராறும் உங்களிடம் நெருங்காது.
RS. 60 More...by பெரு.முருகன்
திரையரங்குகளை நோக்கிவரும் ரசிகப் பெருமக்கள் திரைப்படத்தை பார்த்து ரசிக்க வேண்டும் அல்லது வயிறு வலிக்கச் சிரிக்க வேண்டும் அல்லது திரைப்படத்தைப் பார்த்து ஒருவன் திருந்த வேண்டும்... இப்படித்தான் திரைப்பட இயக்குநர்கள் தாங்கள் இயக்கும் திரைப்படங்கள் குறித்துச் சொல்கிறார்கள்... சொல்வார்கள்! ஆனால், தன்னுடைய திரைப்படத்தைப் பார்த்துப் பார்வையாளர்கள் அலறியடித்துக்கொண்டு ஓட வேண்டும் என்று ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக் கூறினார்! “திரைப்படம் என்ன சொல்லவருகிறது என்பதைப்பற்றி எனக்குக் கவலையில்லை. பார்வையாளர்களை அலறவைக்கும் யுக்தியைப் பற்றித்தான் எனக்கு அக்கறை. ஒரு படம் நேர்த்தியாக அளிக்கப்படுவதன் மூலம் பார்வையாளர்கள் ஜப்பானில் இருந்தாலும் சரி, இந்தியாவில் இருந்தாலும் சரி அவர்கள் ஒரே விதமாக திகிலுற வேண்டும்” என்றார் அந்த திகில் மன்னன். ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக்கின் கதைகள் அனைத்தும் ஒரு கொலையையோ அல்லது திகில் சம்பவத்தையோ மையப்படுத்தி இருக்கும். சின்னஞ்சிறிய கதையை மர்ம சினிமாவாக எடுத்து ரசிகர்களை மிரட்டியவர் அவர். தமிழ்ப் படங்களில் கதாநாயகனை போலீஸ் அல்லது வில்லன் துரத்தும் போது வழியில் ஆட்டு மந்தையோ, மாட்டு மந்தையோ வாத்துக் கூட்டமோ வழிமறிக்கும். இந்தக் காட்சியை முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர் ஹிட்ச்காக்தான். தொடக்கக் காலத்தில் மௌனப் படங்களுக்கு டைட்டில் கார்டுகள் எழுதிவந்த சிறந்த ஓவியர் ஹிட்ச்காக். இங்கிலாந்தில் பிறந்த அவர், உலக சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்க மர்மக் கதைக் களம் பேருதவி புரிந்தது. சினிமாவில் புதுமைகளைப் புகுத்திய திகில் மன்னன் ஹிட்ச்காக்கிடம் “சிறந்த திரைப்படம் எடுக்க என்ன செய்யவேண்டும்?” என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ஹிட்ச்காக் சொன்னது மூன்று அம்சங்கள். ஒன்று திரைக்கதை, இரண்டு திரைக்கதை, மூன்று திரைக்கதை. ஆம்! கதையை மட்டுமே நம்பி ஹிட்ச்காக் சினிமா எடுத்தார். அவருடைய ஒவ்வொரு மர்மக் கதையும் நிச்சயம் திகிலை ஏற்படுத்தும்; வாசிப்பதற்கு சுவாரசியம் நிறைந்தது. வாசகர்களின் குதூகலத்துக்காக ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக் மர்மக் கதைகளில் சிறப்புடைய சிலவற்றை இந்த நூலில் தொகுத்துத் தந்துள்ளோம். இனி, திகிலோடு உறவாடுங்கள்!
RS. 77 More...by எம்.டி.யேட்ஸ்
எவ்வளவோ பேர் எப்படி எப்படியோ இந்தியாவுக்குள் வந்தார்கள். அதற்கு எத்தனையோ காரணங்கள் இருந்தன. ஆனால், வாஸ்கோடகாமா இந்தியாவுக்கு வந்ததற்கு ஒரே ஒரு காரணம்தான். இந்தியாவுக்கு வர கடல் வழி ஒன்றைக் கண்டுபிடிக்க விரும்பினார். அவ்வளவுதான்! வாஸ்கோடகாமா கடல் வழியாக இந்தியாவுக்கு வருவதற்கு முன்னர் கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்தார். ஆனாலும், அவரும் இந்தியாவுக்கு ஒரு கடல் வழியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில்தான், இடறி விழுந்து அமெரிக்காவைக் கண்டுபிடித்தார். ஆகவே, இந்தியாவுக்கு வர போர்ச்சுகீசியர்கள் பாடுபட்டிருக்கிறார்கள். வாஸ்கோடகாமா மூன்று முறை போர்ச்சுகலில் இருந்து இந்தியாவின் மேற்குக் கரையோரம் உள்ள கள்ளிக்கோட்டைக்கு கடல் வழியாகவே வந்திருக்கிறார். ஆனால், அவர் முதன்முறையாக அந்தக் கடல் வழியைக் கண்டுபிடித்த பயண வரலாறே இந்த நூல். போர்ச்சுகலில் இருந்து கிளம்பி ஆப்பிரிக்காவின் மேற்குக் கரையோரமாகவே கீழே இறங்கி செயின்ட் ஹெலனா வழியாக ஆப்பிரிக்காவின் கீழ்க் கோடியிலுள்ள நன்னம்பிக்கை முனையைச் சுற்றிக்கொண்டு மீண்டும் மேல் நோக்கிச் சென்று திடீரென்று கிழக்கில் திரும்பி கள்ளிக்கோட்டையை அடைந்திருக்கிறார். 1497&ம் வருட காலகட்டத்தை கவனத்தில் கொள்ளும்போது மிகவும் கஷ்டமான கண்டுபிடிப்புதான் இது. எந்த நேரத்திலும் வழி தவறி மேற்கே போய்விடக்கூடிய அபாயம்; இதன் நடுவில் மாதக் கணக்காக வேற்று முகத்தையே பார்க்காமல், போகும் முடிவும் தெரியாமல் சில மாலுமிகளும், சில கப்பல் பணியாளர்களும் திரும்பத் தன் நாட்டுக்கே போய்விட வேண்டும் என்று கலகம் செய்தது; ஆங்காங்கே கரையில் இறங்கிய இடத்தில் அபாயம், உணவுப் பற்றாக்குறை, குடிநீர் பற்றாக்குறை, புயல் சீற்றத்தின் பயமுறுத்தல் என்று எண்ணிலடங்காத சோதனையைக் கடந்து கள்ளிக்கோட்டையில் கால் வைத்ததே சாதனைதான். சினிமாவுக்குச் சற்றும் குறையாத ட்விஸ்ட்டுகள் கொண்ட வாஸ்கோடகாமாவின் பயண அனுபவங்கள் உங்கள் சிந்தனையைச் சிலிர்க்க வைக்கும் என்பது நிச்சயம்!
RS. 50 More...by விளாதீமிர் கொரலேன்கோ
ரஷ்ய எழுத்தாளர் கொரலேன்கோ எழுதிய பிரசித்தி பெற்ற குறுநாவல்களில் முக்கியமானது ‘கண் தெரியாத இசைஞன்’. 13 ஆண்டுகளாகச் சிந்தித்து ஒரு வருடத்தில் எழுதி முடித்த இந்தக் கதை பதினைந்து முறை பல்வேறு பத்திரிகைகளில் வெளி வந்துள்ளது. வெளிவந்தபோதெல்லாம் கொரலேன்கோ சிறு திருத்தங்கள் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒளியைத் தேடும் வேட்கை பார்வையற்றவர்களிடம் இருப்பதை வலியுறுத்துவதே இந்தக் கதை என்று கொரலேன்கோ கூறுகிறார். இது முற்றிலும் கற்பனைக் கதையன்று. தாம் சந்தித்த பார்வையற்ற திறமைசாலிகளை முன்வைத்து இதைப் பட்டை தீட்டியுள்ளார். மனித மகிழ்ச்சியும், அதனை அடையக்கூடிய வழிகளும் இந்தக் கதையில் அலசப்படுகின்றன. கதாநாயகனான கண் தெரியாத இசைஞன், பியோத்தரைச் சுற்றி நடமாடக்கூடிய, நம்பிக்கையளிக்கக்கூடிய அவனது தாய், காதலி, மாமா ஆகியோர் சமூகத்தில் அவனுக்கு வாய்த்த அதிர்ஷ்டங்கள். அன்பைப் பொழியும் ஆற்றலைக்கொண்ட இந்தக் கதை மனித சமுதாயத்தின் உயர்ந்த தன்மையை உணர்த்தக் கூடியது. ரஷ்ய மொழியில் படித்தவர்கள் எப்படி ரசித்து, லயித்து இந்தக் கதையைச் சுவைத்தார்களோ... அந்தச் சுவை சிறிதும் கெடாமல் மொழிபெயர்ப்பாளர் தமிழில் மொழிபெயர்த்து இருக்கிறார். படிக்கும்போது, கதைக் களம், இயற்கை அழகு வர்ணிப்பு, அன்பு, காதல், பிரிவு, சாதனை ஆகியவற்றில் பல்வேறு பரிமாணங்களில் ரஷ்ய இலக்கியம் மிளிர்வதை உணர்வீர்கள். பக்கத்தைப் புரட்டுங்கள். கண் தெரியாத இசைஞன்... உங்கள் அக விழியைத் திறந்து ஊடுருபவன் என்பதை அறிவீர்கள்.
RS. 81 More...