Cart is Empty
by அருணகிரி
தஞ்சம் என வந்தோரையும், இங்கு பிறக்கும் பேறு பெற்றோரையும் தலை நிமிரச்செய்யும் தமிழ்நாடு, இந்திய மாநிலங்களுக்கு எல்லாம் எடுத்துக்காட்டாக விளங்குகிறது என்பதை வெறும் வார்த்தைகளால் விளக்கிவிட முடியாது. எண்ணிலடங்கா தமிழர்களையும், தரமான தலைவர்களையும், கண்ணியம் கலந்த கட்டுப்பாடு மிகுந்த கட்சிகளையும், மக்களுக்கான அரசை மக்களே தேர்ந்தெடுக்கும் முறையைத் தொடர்ந்து செயல்படுத்திவரும் தமிழ்நாட்டு அரசியல் பின்னணிகளையும், கடந்து வந்த தடங்களையும் பார்த்துப் பெருமை பொறாமைகொள்ளும் பிற மாநிலங்கள் இன்று அநேகம். உலக மேடையில் அரங்கேறும் பல்வேறு நிகழ்வுகளை நாம் அன்றாடம் அறிந்து வருகிறோம். ஆனால், பிறந்து வளர்ந்து வாழ்ந்துவரும் தமிழ்நாட்டைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் நமக்கு எப்போதாவது தோன்றி உள்ளதா? அப்படியே தோன்றினாலும் அதனைக் குறித்த சரியான தகவல்கள் எங்குக் கிடைக்கும், எப்படிக் கிடைக்கும், கிடைக்கும் தகவல்கள் உண்மையானதா என்பது போன்ற மனச் சிதறல்களுக்கு இதுவரை நாம் ஆளாகி வந்ததுதான் மிச்சம். இனி, தமிழனுக்கு மட்டுமல்லாமல், சிந்தனையில் தரமும், உடலில் உரமும் உள்ள அனைவருக்கும், “உங்களின் திறமைக்கான வழித்தடமாக நான் இருக்கிறேன். என்னைப் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொண்டு, உங்களின் அறிவுத்திறனை இந்த உலகுக்குக் காட்டுங்கள்!” என்று நம்மை வரவேற்கிறது, தன்னிகரில்லா மாநிலமான தமிழ்நாடு. அப்படிப்பட்ட தமிழ்நாட்டின் பூர்வீக தோற்றம் முதல், இன்றைய சமூக, அரசியல் கட்சிகளுக்கான பின்னணி, தமிழக அரசியல் களம், இந்தியக் கட்சிகள், ஒடுக்கப்பட்டோர் உரிமை இயக்கங்கள், மதச்சார்பு இயக்கங்கள், தமிழகத்தில் முன்பு இயங்கிய கட்சிகள், தமிழ்நாட்டு அரசியலை உலுக்கிய நிகழ்வுகள் வரை அரசியல் அதிரடி நிகழ்வுகளை வரிசைப்படி தொகுத்துள்ளார் நூலாசிரியர். மேலும், எந்தக் கட்சி எப்போது உதித்தது, அதன் அரசியல் செயல்பாடுகள் என்ன, மக்களுக்கு ஆற்றியப் பணிகள் என்ன, இவற்றின் மூலம் தமிழ்நாடு அடைந்த வளர்ச்சி என்பது போன்ற பல்வேறு வகையான தகவல்கள் அடங்கிய உண்மைத் தகவல்களை சுவாரஸ்யமான நடையில் தொகுத்துள்ளார் நூலாசிரியர் அருணகிரி. பள்ளி, கல்லூரி மற்றும் போட்டித் தேர்வாளர்கள் என வரலாற்றின் மீது தணியா தாகம் கொண்ட வாசகர்களுக்கும், வரலாற்று ஆசிரியர்களுக்கும், தமிழ்நாட்டின் குறிப்புகளை எடுத்துச்சொல்லும் ஒரு கையேடாக இந்த நூல் விளங்கும் என்பது திண்ணம்.
RS. 196 More...by சுபஸ்ரீ மோகன்
சீனா, அண்ணன் தேசமாக அன்பு குறையாமல் அறியப்பட்டாலும், தற்போதைய நிலைமைகள் அப்படி இல்லை. இந்திய எல்லைகளை ஆக்கிரமிக்கும் தேசமாக, மிரட்டல் விடுக்கும் வம்பு நாடாக சீனா மாறி வருகிறது. அதனால், சீனா மீதான அபிப்பிராயம் நம்மிடத்தில் குறைந்திருக்கும் காலகட்டம் இது. ஆனால், சூழ்நிலைகளால் தீர்மானிக்கப்படும் இந்தப் பகை நிலைமைகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால்... உண்மையில் சீனா நம் சொந்த அண்ணன் தேசம்தான். அழகில், கட்டமைப்பில், பொருளாதார உயர்வில், வாழ்வியலில் சீனா நம் முன்னோடியாகவே விளங்குகிறது. ஒரு சுற்றுலாப் பார்வையாக அல்லாமல், சீனா குறித்த அத்தனை சுவாரஸ்யங்களையும் அழகு தமிழில் சொல்லி இருக்கிறார் நூல் ஆசிரியர் சுபஸ்ரீ மோகன். சீனாவில் வாழ்வதற்கான வாய்ப்புகளைச் சொல்லி ஆரம்பிக்கும் நூல், சீனர்களின் குணாதிசயங்கள், விழாக்கள், ஆன்மிக ஈடுபாடுகள் என அத்தனை விதமான பார்வைகளையும் வெகு அழகாகப் பதிவு செய்கிறது. ரசனைமிகுந்த எழுத்துக்களுக்கும், பார்வைகளுக்கும் பக்கபலம் சேர்க்கும் விதமாக பொன்.காசிராஜனின் புகைப்படங்கள் மிகுந்த மெனக்கெடுதலோடு எடுக்கப்பட்டிருக்கின்றன. அமெரிக்காவில் சாஃப்ட்வேர் தொழில் சரிவடைந்ததால், இப்போது பணி வாய்ப்புக்காக சீனாவுக்கு இந்தியர்கள் அதிகமாகச் செல்கிறார்கள். இத்தகைய காலகட்டத்தில் சீனா குறித்து முழுக்க அறிந்துகொள்ள இந்த நூல் அற்புதமான வழிகாட்டியாக விளங்கும். சீனர்களின் வரலாறும், பாரம்பரியமும், கலைகளின் மீது அவர்கள் கொண்டிருக்கும் ஈடுபாடும் எல்லோரையும் ஈர்க்கக்கூடியவை. சுத்தம், நேரம் தவறாமை, பணியில் முழு ஈடுபாடு என சீன மக்களின் அத்தனைவிதமான பெருமைகளையும் வாழ்வியல் வழிகாட்டியாக இந்த நூல் எடுத்துரைக்கிறது. சாலை ஓரச் செடிகளில் இருக்கும் ரோஜாக்களை யாரும் பறிப்பதில்லை என்பது உட்பட இந்த நூலில் ஏராளமான அழகு ஆச்சர்யங்கள்! சுற்றுலா செல்பவர்களுக்குப் பயண வழிகாட்டியாகவும், பிறதேசம் அறியும் ஆர்வ மிகுதியாளர்களுக்கு சுவாரஸ்ய கிடங்காகவும், தொழில் நிமித்தம் செல்பவர்களுக்கு பக்க துணையாகவும் இந்த நூல் நிச்சயம் விளங்கும்.
RS. 77 More...by பா.மாணிக்கவேலு, எம்.ஏ.,
உலக வல்லரசுகளும், அண்டை நாடுகளும் இந்தியத் துணைக் கண்டத்தை உற்று நோக்கி வருகின்றன. ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக ஜனநாயக முறையில் ஆட்சி நடைபெற்று வரும் நாடான இந்தியா, உலகத்தின் பார்வைக்கு வளர்ந்து வரும் வல்லரசு. 1947&க்கு முன்னால் இந்தியாவின் நிலைமை என்ன? ‘சக உணர்வுகளால் ஒன்றுபட்டு, தங்களுக்குள் அதிக அளவில் விரும்பி, இசைந்துபோகும் மனப் பக்குவம் பெற்று, தங்களுக்கென்று ஏற்படுத்திக்கொண்ட, அதிலும் தாங்களே நடத்துகின்ற அரசாங்கத்தின் ஆதரவில் வாழ விரும்பும் மக்கட் கூட்டத்தினரே தேசிய இனத்தவராவர்’ என்பது தேசிய இனம் குறித்த அறிஞர் மில் என்பவருடைய கூற்று. ஆனால், ஒரே இனம், ஒரே மொழி, ஒரே சமயம் அல்லது இசைவான பண்பாடு, வரையறுக்கப் பெற்ற நிலப் பரப்பில் நிலைத்து வாழ்தல், பொதுவான வரலாற்று மரபுகள், அரசியலில் பொதுவான நோக்கங்கள், பொதுவான அன்னிய ஆதிக்கத்துக்கு உட்பட்டிருத்தல் போன்ற பல சூழ்நிலைகளில் இத்தகைய உணர்வு தோன்றும். இந்தியாவைப் பொறுத்தவரை பல்வேறு இனக் குழுக்கள், வேறுபட்ட மதங்கள், கலாச்சார பின்னணியில் இந்திய தேசியம் என்பது எப்படி சாத்தியமானது? இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி தொடங்கிய காலத்தில் நாட்டு மக்களிடையே இந்திய தேசிய உணர்வு தோன்றியிருக்கவில்லை. ஆனால், காலப்போக்கில் இந்தியா நமது நாடு, நாமெல்லாம் இந்தியர், நமது நாட்டை அந்நியர் ஆட்சியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்கிற உணர்வுகள் நாட்டு மக்களிடையே வளரத் தொடங்கின. இந்த எண்ணம் ஒருவரால் வந்ததல்ல. எத்தனை பேரின் தியாகங்கள்? எத்தனை வேள்விகள்? எத்தனை போராட்டங்கள்? வரலாற்-று மரபின் மறுமலர்ச்சியும், மக்களுடைய மனவெழுச்சியும் சேர்ந்து இந்திய தேசிய இயக்கம் உருவானது. இந்த இயக்கத்தின் வரலாறு உன்னதமானது. தேசப் பிதா அண்ணல் காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பாலகங்காதர திலகர், மோதிலால் நேரு என தேசிய இயக்கத் தலைவர்கள் அன்றைய அரசியல் சூழலில் அந்நிய சக்தியை எதிர்கொண்டது எப்படி? இந்திய தேசிய வரலாறு எனும் இந்தப் புத்தகம் நம் நாட்டின் எழுச்சி வரலாற்றைச் சொல்கிறது. நூல் ஆசிரியர் பா.மாணிக்கவேலு, இந்திய தேசிய இயக்கத்தின் வரலாற்றை கால வரிசைப்படி துல்லியமாக தொகுத்துள்ளார். மக்கள் சக்தியின் மகத்துவத்தையும் சுதந்திரத்தின் மகத்துவத்தையும் புரிந்துகொள்ள இந்த நூலைக் கட்டாயம் படிக்க வேண்டும்.
RS. 95 More...