Cart is Empty
by சுஜாதா
ஆனந்த விகடனில் 'கற்றதும்... பெற்றதும்' பகுதியில் பல்வேறு பொருளில் சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகளை எழுதினார் எழுத்தாளர் சுஜாதா. அவருடைய கட்டுரைகளை வாசிக்கும் ஆர்வமுடன் ஏராளமான வாசகர்கள் வாரந்தோறும் காத்திருந்தனர். சமூக நிகழ்வுகளின் மீது விமர்சனம் வைத்து கட்டுரைகள் எழுதிய சுஜாதா, இடைவிடாமல் பல புத்தகங்களைப் படித்ததோடு, தினந்தோறும் பலரையும் சந்தித்தார். அந்தத் தகவல்களைக் கட்டுரையில் தந்தபோது, அந்த அனுபவப் பகிர்வு பலருக்கும் அரிய பொக்கிஷமாக இருந்தது. ஆதலால், பிறர் எழுதிய கட்டுரை, கதை, கவிதை, பொன்மொழி, மேற்கோள்கள் போன்றவற்றில் அவருக்குப் பிடித்ததையும் கட்டுரைகளில் குறிப்பிட்டு எழுதினார். சுஜாதாவின் கருத்தால் பெற்ற அங்கீகாரத்தால் இளம் படைப்பாளர்கள் பலன் பெற்றனர். கற்றதும்... பெற்றதும்... பகுதியில் வெளிவந்த கட்டுரைகள் நான்காம் தொகுப்பு என இந்த நூலாக வெளிவந்திருப்பது, அக்கட்டுரைகளுக்கு வாசகர்கள் தரும் உற்சாகத்தை வெளிப்படுத்துகிறது. அரசியல்வாதிகளின் செயல்பாடு, பார்த்த சினிமாக்கள், கேட்ட பாடல்கள், படித்த புத்தகங்கள், நடந்த நிகழ்வுகள் போன்றவற்றை விமர்சித்தும், பாராட்டியும் எழுதியத
RS. 102 More...by சுஜாதா
தமிழ் வாசகர்களிடம் தன் எழுத்து நடையின் மூலம் உற்சாகத்தையும் புதிய நம்பிக்கைகளைத் தூண்டி பிரமிப்பையும் ஏற்படுத்துவதில் வல்லவர் சுஜாதா. இலக்கியம், சினிமா, இணையம், விஞ்ஞானம் என எந்தத் துறையைப்பற்றி எழுதினாலும் தன் இளமையான எழுத்தில் மின்சாரத்தைப் பாய்ச்சி மிளிரவைப்பவர். அந்த வகையில், சமூக வளர்ச்சியையும் சிதைவுகளையும் உன்னிப்பாகக் கவனித்து அலசி ஆராய்ந்து அக்கறையோடு எழுதப்பட்ட கட்டுரைத் தொடர் 'கற்றதும்... பெற்றதும்...' தான் கற்றதையும் பெற்ற அனுபவங்களையும் புதிய சிந்தனையுடன் கலந்து சுஜாதா அளித்திருக்கும் அற்புதமான அனுபவக் களஞ்சியம்தான் இப்போது உங்கள் கைகளில் புத்தமாகத் தவழ்கிறது. நாட்டு நடப்புகளை, நயமான நகைச்சுவை கலந்து சுஜாதா எழுதும் எழுத்தை வரவேற்றுப் படித்து வரும் வாசகர்களின் ஆர்வத்தைப் புரிந்துகொண்டு, விகடனில் வெளியான 'கற்றதும்... பெற்றதும்...' கட்டுரைத் தொடர்களை இதற்குமுன் இரண்டு பாகங்களாகத் தொகுத்து வெளியிட்டிருக்கிறோம். புதிய கட்டுரைகளுடன் மூன்றாவது பாகம் இதோ உங்கள் பார்வையில்! இந்தப் புத்தகம் புதிய நம்பிக்கைகளை ஏற்படுத்தி புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளத் தூண்டுதலாக அமையும்.
RS. 150 More...by எஸ்.கே.முருகன்
வேடதாரிகளும் போலிகளும் பெருகிவிட்ட ஆன்மிக உலகுக்கு லௌகீகத்தின் இயல்பைப் புரிந்துகொண்ட ஒரு நிதர்சன மனிதன் பிரவேசித்தால் எப்படியிருக்கும்? இந்தக் கேள்விக்கு ஞானகுருவில் பதில் இருக்கிறது. தனக்கு முன் மிதக்கும் இலைகளைக்கூட வாஞ்சையுடன் ஏந்திக்கொள்ளும் காதல் மிகுந்த துறவி இந்த ஞானகுரு! மடங்களையும் ஆசிரமங்களையும் கட்டிக்கொண்டு ஏமாற்றும் போலிச் சாமியார்களுக்கு நடுவே, ரகசியங்களோ அதிசயங்களோ எதுவும் இல்லாமல் நம்மை நெருங்குகிற புதிய ஆன்மிக அனுபவம் இது. சாதகமாகவே எல்லாவற்றையும் எதிர்பார்க்கும் மனித இயல்புகளை மீறாத தத்துவ விசாரணைகளைப் பேசும் இந்த ஞானகுரு, விதவிதமான கேள்விகளோடு நெருங்குபவர்களை பரிகசிப்பதில்லை. மாறாக, அவர்களின் பலவீனங்களுக்கு தீர்வுகள் சொல்கிறார். மனிதன் திருப்தியடைகிற மாதிரி நிறைய பதில்களை இவர் வைத்திருக்கிறார். தேடி வருபவர்களைப் பதில்களால் குழப்பி, திரும்பத் திரும்ப தன்னைச் சரணடைய வைக்கும் சிலருக்கு மத்தியில், வாழ்வின் ருசியைக் கற்றுக் கொடுத்து அனுப்பி வைக்கிறார் இந்த ஞானகுரு. வழிபாடு என்பது அப்படியே பின்பற்றுவதில்லை, பின்பற்றிப் போவதற்கு சரியான வழியைக் கண்டுபிடிப்பது! என்று நமக்கு
RS. 50 More...by சுஜாதா
இந்த நவீன உலகில் வாழும் மக்களுக்கு எதையும் விரித்துச் சொன்னால் பிடிப்பதில்லை; பிடிப்பதில்லை என்பதைவிட விரிவான விஷயத்தை, செய்தியை படிக்கவோ கேட்கவோ அவர்களுக்கு நேரமில்லை என்பதே உண்மை. ஆகவே, சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்கிற நடைமுறையை ஊடகங்களும் ஏற்றுக்கொண்டுவிட்டன. அதன்படியே, இன்றைக்கு அச்சு ஊடகங்களும் காட்சி ஊடகங்களும் நன்றாகவே அதை அமல்படுத்தவும் செய்கின்றன. அதை உள்வாங்கிக் கொண்டுதான் விகடன் குழுமத்திலிருந்து முன்பு வெளிவந்துகொண்டிருந்த ஜூனியர் போஸ்ட் இதழில், சுஜாதாட்ஸ் என்ற தொடர் வெளிவந்தது. அன்றைய காலகட்டத்தில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளையும் சம்பவங்களையும் தன் சிந்தனை ஓட்டத்தில் இருந்து எழுத்தாளர் சுஜாதா எழுதிவந்தார். அப்போது, ஜூனியர் போஸ்ட் வாசகர்கள் மத்தியில், அது மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. இலக்கியம், அரசியல், சினிமா, ஊடகம் என்று பல்வேறு துறைகளையும் சுஜாதா அந்தக் கட்டுரைகளில் அலசியிருக்கிறார். முன்பு சொன்ன மாதிரி சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்கிற முறையே அந்தக் கட்டுரைகளின் சிறப்பு. தனது சரளமான எழுத்து நடையால் வாசகர்களை மீண்டும் மீண்டும் தன் பக்
RS. 91 More...by சுகா
பசுமரத்து ஆணி போல, மனதில் ஆழமாகப் பதிந்துகிடக்கும் இளமைக் கால நினைவுகளைப் பிறரிடம் பகிர்ந்துகொள்ளும் சுகமே அலாதியானது. குறிப்பேடுகளில் குறித்துவைத்த சம்பவங்களைவிட, மனதில் பதிந்த விஷயங்கள் விசேஷமானவை. நினைத்தாலே இனிக்கக்கூடியவை. அப்படி, தனது மனதில் தேங்கியிருந்த சுகமான நினைவுகளை, எழுத்தாளரும், திரைப்பட இயக்குநருமான சுகா, ஆனந்த விகடனில் ‘மூங்கில் மூச்சு!’ என்ற தலைப்பில் தொடராக எழுதிவந்தார். மண்ணின் மணத்தோடு துவங்கி, பால்ய பருவத்து சகாக்களுடனான சந்தோஷ தருணங்களையும், ஆறு, கோயில், குளம், நீச்சல், விளையாட்டு... என வாழ்ந்த சூழலையும் நம் கண்முன்னே நிழலாடச் செய்திருக்கிறார். வாழ்வோடு ஒன்றிய பல விஷயங்களை வர்ணனைகளோடு வார்த்தைகளில் வடித்திருக்கிறார். அறிவு புகட்டிய ஆசான் முதல், அன்பு பாராட்டிய உறவுகள் வரை அனைவரைப் பற்றியும் நெல்லைத் தமிழ் மொழியின் வாசனையோடு, ஜனரஞ்சகமாக, சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறார். எலெக்ட்ரானிக் யுகத்தின் தலைமுறை மாற்றத்தையும் கூறியிருப்பது படிப்போரின் ஆர்வத்தைத் தூண்டும் விதமாக உள்ளது. சென்னைக்கு வந்த பிறகு, திரைத்துறையின் வழிகாட்டியான பாலுமகேந்திரா பற்றியும், பாலசந்தர், பாலா, சீமான், அறிவுமதி போன்றோருடனான நெருக்கத்தையும், சுவையான சம்பவங்களையும் திரையிட்டுக் காட்டுகிறார். ஆட்டோ டிரைவர், சைக்கிள் ரிக்ஷாக்காரர், கண் பார்வை தெரியாத முதியவர்... என பலரையும் தன் நினைவுகளில் தேக்கிவைத்து இவர் வெளிப்படுத்தியிருப்பது, பசுமையான அனுபவம் கொண்டிருக்கும் எவருக்கும், தம் அனுபவங்களை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டும்.
RS. 98 More...by விகடன் பிரசுரம்
“தென்றலைத் தீண்டியதில்லை. ஆனால், தீயைத் தாண்டி இருக்கிறேன்!” என்பது, ஒரு திரைப்படத்துக்கு கலைஞர் கருணாநிதி எழுதிய வசனம். “எனது வாழ்நாளில் மகிழ்ச்சி, அதிக நேரம் நீடிப்பதில்லை!” என்பதும் அவர் ஒரு மேடையில் சொன்னதுதான். ‘தமிழகத்தின் ஆட்சிச் சக்கரத்தை ஐந்து முறை பிடித்தவர்’ என்று ஒற்றை வரியில் சொல்லிவிடலாம். ஆனால், இந்த அரசியல் பயணத்தில் எத்தனை மேடுகள், பள்ளங்கள், நெளிவு சுழிவுகள் என்பதைப் பட்டியலிட்டுப் பார்த்தால்... ஒரு தனிமனிதன், இத்தனைச் சோதனைகளையும் தாண்டி சுறுசுறுப்பாக, உற்சாகத்தோடு வாழ முடியும் என்பதற்கு உதாரணமாக கலைஞரின் வாழ்க்கையைச் சொல்லலாம்! எழுத்து, பேச்சு, திரைப்படம், அரசியல், இலக்கியம்... என அவர் தொடாத துறை இல்லை; தொட்டால் துலங்காத துறையும் இல்லை என்பதை, தனது வாழ்க்கை மூலமாக நிரூபித்துக் காட்டியவர் கலைஞர். பள்ளிப் பாலகனாக ‘டென்னிஸ் பேட்’ ஏந்தி நின்று கொண்டிருக்கும் கலைஞரின் அரசியல் பயண விளையாட்டு, 80 வயது கடந்த பிறகும் தொடர்வதற்கு அவரது தளராத உழைப்பு மட்டுமே காரணம். உடல் சோர்ந்தாலும் உள்ளம் சோர்வடையவில்லை. முதுமை தொட்டாலும் மூளை தளரவில்லை. இந்தப் புகைப்படத் தொகுப்பில் மூழ்குவதன் மூலம், ‘கலைஞர்’ என்கிற தனிமனிதரை உணர்ந்து கொள்வது மட்டுமல்ல... ‘உழைப்பே உயர்வு’ என்ற உன்னதத் தத்துவத்தையும் உணர முடிகிறது! கலைஞர் கடந்து வந்த பாதையில் எத்தனையோ மைல் கற்கள். அவற்றையெல்லாம் ஒன்றுசேர்த்து எழுப்பப்பட்டுள்ள புகழாலயமே இந்தப் புத்தகம். உற்சாகத்துடன் உள்ளே நுழையுங்கள்... மேலும் புத்துணர்ச்சி பெறுவீர்கள்!
RS. 175 More...by து.கணேசன்
கடலும் கப்பலும் எப்போதுமே அழகானவை. ‘டைட்டானிக்’ படத்துக்குப் பிறகு கப்பல் மீதான ஆர்வம் எல்லோருக்கும் அதிகமானது உண்மை. கடலின் மீது மிதக்கும் பிரமாண்டமான கவிதையாகத்தான் கப்பலை நாம் பார்க்கிறோம். ஆனால், கப்பலில் பணிபுரிபவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று யோசிக்க வாய்ப்பு இல்லை. காரணம், ‘அவர்களுக்கு என்ன குறை? நல்ல வருமானம். சுகமான வாழ்க்கை...’ என நினைப்போம். இந்த எண்ணத்தைத் திருப்பிப்போடும் விதமாக, கடலும் கப்பலுமாக வாழும் து.கணேசன் எழுதி இருக்கும் அதிநுட்பப் பதிவு இது. பல வருடங்களுக்கு முன்னால் ‘கற்றது கடலளவு’ என்ற தலைப்பில் ஜூ.வி-யில் தொடராக வந்தபோதே ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். பல கற்பனைகளோடும், கனவுகளோடும் விரும்பி ஏற்றுக்கொண்ட பணியில் கிடைத்த அனுபவங்களை ஒரு நண்பனிடம் சொல்வதைப்போல் யதார்த்தமாகப் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர். கப்பல் பணியில் உள்ள நிறைகளையும் குறைகளையும் ஒளிவுமறைவின்றி நிதர்சனமாக எடுத்து வைத்திருக்கிறார். கப்பலில் இன்ஜினீயராக சேர்வது, வெவ்வேறு கப்பலுக்கு பணியை மாற்றிக்கொள்வது, கப்பல் பொறியாளர்களுக்கு வழங்கப்படும் விசா என பணியின் நடைமுறைகளையும் எல்லோருக்கும் விளங்கும் விதமாகப் புரியவைக்கிறார். நிலநடுக்கோட்டைக் கடக்கும் விழா, கப்பலில் கிடைக்கும் உணவு வகைகள், சரக்குக் கப்பல் பணிக்கும், பயணிகள் கப்பல் பணிக்கும் உள்ள வேறுபாடுகள், வசதிகள் என நாம் அறியாத பல தகவல்கள் இந்த நூலில் கொட்டிக் கிடக்கின்றன. கப்பலில் பயணிக்கும் அனுபவம் நம்மில் எத்தனை பேருக்கு வாய்த்திருக்கும் என்பது தெரியவில்லை. ஆனால், ஒரு நாவலுக்கு சற்றும் குறையாத இந்தப் புத்தகத்தை முழுமையாகப் படித்து முடிக்கையில் கப்பலில் பல நாட்கள் பயணித்த நிறைவு கிடைக்கும் என்பது நிச்சயம்!
RS. 81 More...by பட்டுக்கோட்டை பிரபாகர்
அலமாரியில், பீரோவில், மேசை இழுப்பறையில் ஏதோ ஒன்றைத் தேடினால் நம் கண்ணில்படுவது பழைய கடிதங்களாக இருக்கும்! தாத்தா பேரனுக்கு... அம்மா மகனுக்கு... மகள் அப்பாவுக்கு... மனைவி கணவனுக்கு... அண்ணன் தங்கைக்கு... என ஆண்டாண்டு காலமாக எழுதப்பட்ட கடிதங்களைப் படிக்க ஆரம்பித்தால், எழுதியவரின் முகம் பல உணர்வுகளோடு கண்முன்னால் விரியும். நேரில் பேசுவதுபோல உணர்ச்சிக் கொந்தளிப்போடு இருக்கும். அத்தனையும், அந்த நேரத்தில் அதை எழுதியவரின் மனம் வடித்த நிஜங்கள்! மனிதநேயம், பேராசை, கோபம், நன்றி, நட்பு போன்ற பண்புகளும் குணங்களும் நமக்கு எதையோ உணர்த்த நினைக்கின்றன. நம்மைச் சார்ந்து இருக்கும் செல்போன், ரயில், பணம், மைக் போன்ற பொருட்கள் நம்முடன் உறவு கொண்டாடிக் கொண்டுதான் இருக்கின்றன. அவை, ஏதோ ஒன்றை நமக்குச் சொல்ல நினைக்கின்றன. இவை அனைத்தும் நமக்கு கடிதம் எழுதினால் எப்படி இருக்கும்..? அந்த உண்மை வடிவத்தை - பரபரப்பான கடித நடையில் நமக்கு அளித்திருக்கிறார், எதையும் ஆழமாகச் சிந்தித்துப் படைக்கும் ஆற்றல் பெற்ற எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர். பொது இடத்தில் கடைபிடிக்க வேண்டிய நாகரிகம், மேடைப் பேச்சு நாகரிகம், மனிதஉயிரைக் காத்தல், உறுப்பு தானம், முதியோரைப் பேணுதல், சுற்றுச்சூழல் காத்தல், விருந்தோம்பல் கலாசாரம், சேமிப்பு... இப்படி அன்றாட வாழ்க்கையில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்களை அதி உன்னதக் கருத்துகளாகப் பதிவுசெய்திருக்கிறார் நூல் ஆசிரியர். பிரச்னைகள், சிந்தனைகள், உணர்வுகள், தகவல்கள் என அனைத்தையும் பிறர் மனதில் பதிவுசெய்ய சிறந்த வடிவம் கடிதம். உங்கள் நலம் விரும்பும் இந்தக் கடித நூலும் உங்களை நல்வழியில் நடத்திச் செல்லும் என்பது உறுதி.
RS. 70 More...by காஞ்சி எஸ்.சண்முகம்
ஜோதிடம், கைரேகை போன்ற புராதன சாஸ்திரங்களின் துணையோடு, மூன்று காலங்களுக்கும் உரிய பலன்களையும் பக்கவாட்டில் வைத்தபடியே ஓடிக்கொண்டு இருக்கிறது இன்றைய தலைமுறை. இவற்றுள் ‘கைரேகை’ என்பது, மனிதக் கருவறையில் இறைவனால் வரையப்பட்ட வாழ்க்கை வரைபடம் என்றுகூட சொல்வார்கள். கை நிறைய சம்பாதித்து, மனம் நிறைய மகிழ்ச்சியை உறவுகளோடு பகிர்ந்துகொண்டு வாழ வேண்டும் என்பதுதான், மனித சமுதாயத்தின் மாண்பு. இதற்கு உள்ளங்கைகளில் பதிந்துள்ள ரேகைகள் துணை புரியுமா? என்ற கேள்வி, அநேகரிடம் இருப்பதை காண முடிகிறது. பல்வேறுவிதமான வேலைகளையும் ஒரே சமயத்தில் செய்து பொருள் ஈட்டவேண்டிய இன்றைய சூழலில், ஒவ்வொருவரின் ரேகை அமைப்பும் என்ன சொல்கிறது, ரேகை சொல்லும் வணிகம் எது, வணிகம் செய்வதற்கான காலம் எது, எந்த வணிகத்தைத் தொடங்கினால் சிறப்படையலாம், தனி வணிகமா... கூட்டு வணிகமா... குடும்ப வணிகமா? என்பதையெல்லாம் ஆய்வின் அடைப்படையில் இந்த நூல் விளக்குகிறது. மேலும், ரேகை அமைப்பு முறைகளை அனைவரும் படித்து புரிந்துகொள்ளும் விதத்தில் வரைபடங்களுடன் எளிமையாக விவரித்துள்ளார் நூலாசிரியர். ரேகை மற்றும் கிரக மேடுகளின் அடிப்படையில் பலன்களை விவரித்துள்ள இந்த நூல், வணிகம் தொடங்கி வளம் பெற முயற்சிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒளிமயமான எதிர்காலத்தை நிச்சயம் காட்டும்.
RS. 50 More...by விகடன் பிரசுரம்
சில வெற்றியாளர்கள் தக்கவைத்திருக்கும் இடங்களை இன்றைய தலைமுறையினர் சுலபத்தில் நிரப்பிவிடுகிறார்கள். காலத்தின் வேகமும், திறமைக்குப் பஞ்சமே இல்லாத உழைப்பும் நேர்த்தியும் சாதனையாளர்களைச் சர்வசாதாரணமாக உருவாக்கிவிடுகிறது. ஆனால், குறிப்பிடத்தக்க சிலருடைய மறைவு காலத்துக்கும் மாறாத, எவராலும் நிரப்பமுடியாத வெற்றிடங்களை உருவாக்கிவிடுகிறது. தமிழை அறிவியல் பாதையில் பயணிக்க வைத்த அசகாய சூரர் சுஜாதா அத்தகைய தனித்தன்மைக்காரர். சுவாரஸ்ய நடையில், ஜெட் வேக விறுவிறுப்பில், சட்டெனச் சிலிர்க்க வைக்கும் புதுமையில், வியக்க வைக்கும் நவீனத்தில் படைப்புகளைக் கொடுத்துத் தமிழுக்குத் தனி மரியாதை ஏற்படுத்தியவர் சுஜாதா. விகடன் வாசகர்கள் அத்தனை பேராலும் அறியப்பட்ட அறிவுப் பேராயுதம். வாசிப்பு உலகமே வணங்கிக் கடன்பட வேண்டிய அளவுக்கு எல்லாவிதத் தளங்களிலும் எழுதிக் குவித்த எழுத்துலக எந்திரன். ‘கி.பி.2000&க்கும் அப்பால்’, ‘ஏன், எதற்கு, எப்படி?’, ‘கற்றதும் பெற்றதும்’, ‘கண்ணீர் இல்லாத யாப்பு’, ‘யவனிகா’, ‘எப்போதும் பெண்’, ‘பதவிக்காக’, ‘பேசும் பொம்மைகள்’, ‘இரயில் புன்னகை’, ‘கடவுள்களின் பள்ளத்தாக்கு’, ‘ஆயிரத்தில் இருவர்’, ‘கொலை அரங்கம்’, ‘நிர்வாண நகரம்’, ‘நைலான் கயிறு’, ‘கொலையுதிர் காலம்’ என வியக்கவைத்த சுஜாதாவின் படைப்புகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். 1953ம் ஆண்டு ‘சிவாஜி’ என்ற பத்திரிகையில் சிறுகதை எழுதி தன் எழுத்துப் பணியைத் தொடங்கிய சுஜாதா பத்திரிகைகள், இணையம், சினிமா என எங்கெங்கோ விரிந்து பறந்தபோது பேனா பிடித்தவர்கள் அனைவருக்குமான வெற்றியாகவே அது பார்க்கப்பட்டது. சுஜாதா மறைந்தாலும், அறிவும் செறிவும் அழகியலும் கொண்ட அவருடைய படைப்புகள் சாகா வரம் பெற்றவை. விகடன் வாசகர்களுக்குச் சொல்லவே வேண்டியதில்லை... சுஜாதாவின் படைப்பை மறு பிரசுரம் செய்தாலும் தீபாவளிக் கொண்டாட்டம்தான் அவர்களுக்கு. காலத்துக்கும் கொண்டாடத்தக்க சுஜாதாவின் படைப்புகளில் விகடனில் வெளியான பன்முகத் தளத்திலானவற்றைத் தொகுத்து இந்த மலரை உருவாக்கி இருக்கிறோம். சுஜாதாவுக்கு மிக நெருக்கமானவர்களின் நினைவலைகள், சுஜாதாவின் விதவிதமான புகைப்படங்கள் ஆகியவற்றோடு இந்தப் படைப்புகளைப் படிக்கையில் ‘சுஜாதா உலக’த்தில் நிச்சயம் நீங்கள் ரீ என்ட்ரியாகலாம்.நிறைவு செய்ய முடியாத அசாத்திய படைப்புகளைத் தமிழுக்கு வார்த்துத் தந்த சுஜாதாவுக்கு சிறப்பு மலர் வெளியிடுவதில் விகடன் பிரசுரம் பெருமகிழ்வு கொள்கிறது. காலப் பெருவெளியின் கௌரவ அடையாளமாக நெஞ்சம் சிலிர்க்கவைத்த படைப்பாளரின் நினைவுகளை மீட்டிப் பார்ப்பதுதானே அவருக்கு நாம் காட்டும் நன்றிக்கடனாக இருக்க முடியும்.
RS. 116 More...