by மதன்
இந்த நூலில் மொத்தம் 439 கேள்விகளுக்கு, பல புத்தகங்களை அலசி, ஆராய்ந்து மதன் அளித்துள்ள ஆதாரபூர்வமான பதில்கள் இடம் பெற்றிருக்கின்றன. புராணம், வரலாறு, விஞ்ஞானம், விளையாட்டு என்று பல்வேறு துறைகள் குறித்த வாசகர்களின் சந்தேகங்களுக்கு விடையளித்திருக்கிறார் மதன். அதேபோல், விலங்குகள், பறவைகள் பற்றியும்... காதல், மனித உறவுகள், மனோதத்துவம் பற்றியும்... இந்த மூன்றாம் பாகத்திலும் அறிவுபூர்வமான பதில்கள் பரவிக் கிடப்பதை வாசகர்கள் பார்க்கலாம். மேலும் அவரது அனுபவங்கள் சார்ந்த பல சுவையான தகவல்களையும் அளித்திருக்கிறார். 2005 நவம்பர் முதல் 2006 அக்டோபர் வரையில் விகடனில் வெளியான கேள்வி பதில்களின் தொகுப்பே இந்த ஹாய் மதன். ஒவ்வொருவரின் வீட்டு புத்தக அலமாரியிலும் இந்த நூல் இருக்க வேண்டும். இருந்தால், பொது அறிவு விஷயங்களில் சந்தேகம் ஏற்படும் போதெல்லாம், இந்நூலைப் புரட்டிப் பார்த்து வாசகர்கள் விடை தெரிந்து கொள்ளலாம்.
RS. 67 More...by ஸ்வாமி
நாம் சுவாசிக்கும் பிராணவாயு இல்லாவிட்டால் உடல் இயக்கமற்று, உடலுக்கும் உயிருக்குமான தொடர்பு இல்லாமல் போய்விடும். இப்படி நாம் உயிர்வாழ்வதற்கு முக்கியமானதாகத் தேவைப்படும் பிராணவாயு, ஒழுங்கற்ற முறையில் நம் நாசிகளின் வழியே சென்று நுரையீரலை அடைந்து உடலுக்கு உயிர்ச்சத்தை உருவாக்குகிறது. இப்படி ஒழுங்கற்ற வகையில் நம் உடலுக்குள் சென்றுவரும் பிராண வாயுவை ஒழுங்குபடுத்தி, சீரான வகையில் சென்றுவர வழிவகுத்தால், அது சுவாச உறுப்புகளுக்கு வலிமையும், உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரும். இது முன்னோரின் அனுபவம். அதனாலேயே பிராணாயாமக் கலை, மிகவும் உன்னதமாகப் போற்றப்படுகிறது. மூச்சை ஒழுங்குபடுத்தி சீராக சுவாசிப்பதால், மூளைக்கு பலம் கிடைக்கிறது என்பதோடு, நினைவாற்றலும் வளர்கிறதாம். மேலும், சுவாசம் தொடர்பான நோய்களில் இருந்து விடுதலை கிடைக்கிறது என்பதும் இந்தக் கலையின் பயன்களில் ஒன்று. இன்றைக்கும் அலர்ஜி, மூக்கில் நீர் கட்டுவது போன்ற சுவாச நோய்களுக்கும் பிராணாயாமக் கலை மருந்தில்லா நிவாரணி என்பது அனுபவ ரீதியாகக் கண்ட உண்மை. இதனால்தான் இந்தக் கலை வெளிநாடுகளிலும் பெரிய வரவேற்பு பெற்றுத் திகழ்கிறது. சிறப்புகள் வாய்ந்த இ
RS. 67 More...by மதன்
ஆனந்த விகடனில் மாலி, ராஜூ, கோபுலு, ஸ்ரீதர் போன்றவர்கள் வகுத்துக் கொடுத்த பாதையில் தனது ஜோக்குகள் மற்றும் கார்ட்டூன்கள் மூலம் தனி முத்திரைப் பதித்தவர் மதன். ஜோக்குகளுக்கென்று பிரத்தியேகமாக காரெக்டர்களை உருவாக்கி, விகடன் நடுப்பக்கங்களில் அவர்களை மதன் உலா வரச்செய்த போது விலா நோகச் சிரித்து மகிழ்ந்தார்கள் வாசகர்கள். சிரிப்புத் திருடன் சிங்காரவேலு, முன் ஜாக்கிரதை முத்தண்ணா... இப்படி நிறைய உதாரணங்களைச் சொல்லலாம். மதன் ஜோக்குகளில் வாசகங்களை மட்டும் படித்துவிட்டுப் பக்கங்களைப் புரட்டிவிட முடியாது. அதற்கான படங்களையும் உற்றுக் கவனிக்க வைத்தவர் அவர். நாம் அன்றாடம் பார்க்கும் மனிதர்கள்கூட மதனின் கை வண்ணத்தில் வித்தியாசமாகத் தெரிவார்கள். அப்பாவித்தனமாக முகத்தை வைத்துக்கொண்டு ஒரு சிலரும், தொந்தியும் தொப்பையுமாக உருவத்தை வைத்துக் கொண்டு வேறு சிலருமாக... குறும்பு கொப்புளிக்கும் படங்கள் நம்மை புன்முறுவலிக்க வைக்கும். ஜூனியர் விகடன் தொடங்கப்பட்ட சமயத்தில் மதன் வரைந்த ஜோக்குகளும், கார்ட்டூன்களும் வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றன. அந்த ஜோக்குகளின் தொகுப்புதான் இது.
RS. 56 More...by நாகப்பன் _ புகழேந்தி
உலக வாழ்வில் பணம் மட்டுமே எல்லாவற்றையும் நிர்ணயிக்கிறது. இந்த வியாபார உலகத்தில் மனித இருத்தலுக்குப் பணமே பிரதானம் என்பதால் மக்கள் இரவு பகல் பாராமல் பொருள் தேடி பயணிக்கின்றனர். கல்வி, திருமணம், வேலைவாய்ப்பு போன்ற வாழ்க்கை நிகழ்ச்சிகளுக்கு, முக்கியப் பங்கு வகிக்கும் பணத்தை சேர்த்துவைக்க எண்ணியவர்கள் பலர். அந்த எண்ணத்தைச் செயலாக்கியவர்கள் சிறப்பாக வாழ்கின்றனர். எதிர்கால நலனுக்காக சேமிக்கும் பழக்கம் இல்லாதவர்கள் பணத்தை இழந்து தவிக்கின்றனர். எனவே, உழைத்து பெரும் பாடுபட்டு சேமிக்கும் பணத்தை என்ன செய்வது என்று விழிக்கும் பலருக்கு வழிகாட்டவே ஆனந்த விகடன் இதழில் 'பணம் செய்ய விரும்பு' என்னும் தொடரை வழங்கினார்கள் நாகப்பன் _ புகழேந்தி. அந்தக் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். நாம் உழைத்துச் சம்பாதிக்கும் பணத்தை, மேலும் பெருக்க வழிமுறைகள் என்னென்ன இருக்கின்றன? அதனை எவ்வாறு செய்ய வேண்டும்? எந்தெந்த நிறுவனங்கள் மக்களின் பொருளாதார நலனுக்காக இயங்குகின்றன? அவற்றின் சாதக, பாதக நிலைகள் என்னென்ன? போன்ற சிறப்பான தகவல்களைத் தக்க ஆதாரங்களுடன் வெளிப்படுத்தி இருக்கின்றனர் நூலாசிரியர்கள். நாணயம் விகடன
RS. 50 More...by விகடன் பிரசுரம்
மலர்கள் இல்லாத உலகத்தை யாராவது நினைத்துப் பார்க்க முடியுமா...? சுகமோ... சோகமோ... எதுவாக இருந்தாலும் அந்த இடங்களில் மலர்களுக்கு முக்கியத்துவம் கிடைத்துவிடும். பல சமயங்களில் நம்மை மனிதர்கள் என்று நினைவூட்டுவதே இந்த மலர்கள்தான். ஆம், மலர்களின் வாசனைக்கு மயங்காத மனிதர்களே இல்லை! உணவுப் பொருள்களைப் போலவே நம்முடைய வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்ட பல விஷயங்களில் ஒன்றுதான் இந்த வண்ண வண்ண மலர்கள். கத்தரிக்காய், முருங்கைகாய், நெல், கரும்பு என்கிற விவசாய விளைபொருள் வரிசையில் மலர்களும் விளைபொருட்கள்தான். என்றாலும், மலர்களின் விற்பனை என்பது தனித்தன்மை கொண்டது. நிறமும் மணமும் ஓரிரு நாட்களே உயிர் பெற்றிருக்கும் என்றாலும், திருமணம் மற்றும் பூஜைக்கான பொருளாக மதிக்கப்படுவதால் மலர்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மலர்ச் சந்தை என்பது உள்ளூரில் மட்டுமல்ல... உலக அளவிலும் மிகமிகப் பெரியது! இதைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு, மலர் சாகுபடியை கையில் எடுத்து, வெற்றி வாசம் வீசியபடி வலம் வரும் விவசாயிகள் தமிழக அளவில் நிறையவே இருக்கிறார்கள். அந்த விவசாயிகளின் சாகுபடி அனுபவங்கள் மற்றும்
RS. 50 More...by பி.சுவாமிநாதன்
இறையருள் பெற்று இனிமையுடனும் நிம்மதியுடனும் வாழ்வதற்கு நமது சாஸ்திரத்திலும் வேதங்களிலும் ஏராளமான வழிமுறைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. அவற்றுள் க்ஷேத்திராடனம் முக்கியமான ஒன்று. தரிசனம் செய்ய வேண்டிய புனிதத் தலங்கள் என்று காசி, ராமேஸ்வரம் போன்று பல இடங்கள் சிறப்பித்துச் சொல்லப்படுகின்றன. இத்தகைய தலங்களுள் மலைகளுக்கும் முக்கியத்துவம் உண்டு. வழிபாட்டில் கயிலாய மலை, பர்வத மலை, கொல்லிமலை, வெள்ளியங்கிரி மலை, திருவண்ணாமலை என்று ஏராளமான மலைப் பிரதேசங்கள் போற்றிப் புகழப்படுகின்றன. இத்தகைய மலைத் தலங்களுள் சதுரகிரியும் குறிப்பிடத்தக்க ஒன்று. சதுரகிரியின் மலைப்பகுதிக்கு மேலே இருக்கும் நூற்றுக் கணக்கான குகைகளில் சித்தர் பெருமக்கள் எண்ணற்றோர் இன்றைக்கும் அரூபமாக வீற்றிருந்து சித்து விளையாட்டுகள் புரிகிறார்கள். சக்தி விகடன் இதழில் புராண முக்கியத்துவம் வாய்ந்த சதுரகிரி பற்றி சிறப்பான தொடர் ஒன்று வெளியானது. 'குடந்தை ஸ்யாமா' என்ற புனைபெயரில் பி.சுவாமிநாதன் எழுதிய அந்தத் தொடர் வெளியாகும்போதே, அது தொடர்பான ஆன்மிக அன்பர்கள் பலர் தங்களது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்கள். உலகெங்கும் உள்ள எத்தனையோ பக்தர்க
RS. 116 More...by மதன்
கேள்வி பிறந்தது எப்போது?' என்ற கேள்விக்கு பதில் கிடைக்க வேண்டுமென்றால் தனி ஆராய்ச்சியே மேற்கொள்ள வேண்டும்! குழந்தை, மழலை மொழியில் பேசத் துவங்கியதுமே கேள்வி கேட்க ஆரம்பித்து விடுகிறது. அது வளர வளர சந்தேகங்கள் அதிகமாகின்றன. அவை கேள்வியாக உருபெறுகின்றன. ஒரு கேள்விக்கான விடை கிடைத்தவுடன் அடுத்த கேள்வி பிறந்து விடுகிறது. இது ஒரு சங்கிலித் தொடர்! கேள்வி கேட்பதற்கு வயது வரம்பு கிடையாது. சப்ஜெக்ட் தடை கிடையாது. யார் வேண்டுமானாலும் எதைப் பற்றி வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம்; துணைக் கேள்வி கேட்கலாம். கிடைக்கும் பதில்களுக்கு அகக் கண்களைத் திறந்து விடும் வலிமை உண்டு! விகடனில் 'ஹாய் மதன்' பகுதி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இன்று வரை வாசகர்கள் சளைக்காமல் கேள்வி கேட்டு வருகிறார்கள். சலிக்காமல், சுவை குறையாமல் அவற்றுக்கு பதில் சொல்லி வருகிறார் மதன்! இப்போது உங்கள் கரங்களில் தவழ்கிறது 'ஹாய்மதன்'தொகுப்பின் நான்காம் பாகம். இது 2004, நவம்பர் முதல் 2005, அக்டோபர் வரை விகடனில் வெளியான பதில்களின் தொகுப்பு. ஏற்கெனவே வெளியான மூன்று பாகங்கள் போலவே இதிலும் பல்வேறு துறை சம்பந்தமான மதனின் துல்லியமான, அறிவுபூர்வமான ப
RS. 67 More...by விகடன் பிரசுரம்
சென்னை கம்பன் கழகம், ஆழ்வார்பேட்டை ஆஸ்திக சமாஜத்தில், ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஆதரவில் அண்மையில் ‘கம்பனில் _ ராமன் எத்தனை ராமன்?’ என்ற தலைப்பில் தொடர் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்திருந்தது. எட்டு நாட்கள் நிகழ்ந்த இந்தச் சொற்பொழிவுகளில், கம்பன் தன் ராமாயணத்தில் நாயகனான ராமபிரானை எத்தனை முகங்களில் சிறப்புறக் காட்டியிருக்கிறார் என்பதை மையக் கருத்தாக எடுத்துக்கொண்டு சொற்பொழிவாளர்கள் நயத்துடன் முன்வைத்தனர். காலத்தைக் கடந்து வந்த கம்பனின் கருத்துமணிகள், காற்றோடு வெறுமே கரைந்து போய்விடக்கூடாது; எழுத்தில் வடித்தால் அந்த எண்ணத் துளிகள் எண்ணற்ற வாசகர்களுக்குப் போய்ச் சேரும் என்பதால் விகடன் பிரசுரம் இதைத் தொகுத்து நூலாக்க முனைந்தது. இந்நிகழ்வின் பொறுப்பாளர்களான சென்னை கம்பன் கழகம், ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ், ஆழ்வார்பேட்டை ஆஸ்திக சமாஜம் ஆகியோர் மகிழ்வுடன் அனுமதியளித்தனர். தங்கள் சொற்பொழிவுகளைத் தொகுக்க மனமுவந்து அனுமதியளித்த சொற்பொழிவாளர்களுக்கும் நன்றி. ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளி ‘நாள்தோறும் நல்லது செய்வோம்’ என்று தினமும் ஒரு நிகழ்ச்சியை நடத்த உதவினார். கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா, கனிவு கொடுக்கும்
RS. 50 More...by மதன்
‘என்னுடைய புத்தக அலமாரியில் விகடன் பிரசுரமாக வெளிவந்த ‘ஹாய் மதன்’ கேள்வி_பதில் தொகுப்பின் நான்கு பாகங்களும் இருக்கின்றன. எந்த சப்ஜெக்ட்டில் எனக்கு எப்போது சந்தேகம் வந்தாலும் நான் உடனே புரட்டிப் பார்ப்பது இந்த நூல்களைத்தான்... ஐந்தாவது பாகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்...’ _ வாசகர் ஒருவர் எங்களுக்கு எழுதியிருந்த கடிதத்தின் ஒரு பகுதி இது. பொதுவாக பொது அறிவு புத்தகங்களில் சுவாரஸ்யங்கள் இருக்காது; வெறும் தகவல்களால் மட்டுமே நிரப்பப் பட்டிருக்கும். அது விரைவில் நம்மை சோர்வடையச் செய்துவிடும். இந்த மனோபாவம் தெரிந்துதான், ‘என் கேள்விக்கு என்ன பதில்?’ என்று வாசகர்கள் எழுப்பும் வினாக்களுக்கு ஏனோதானோவென்று இல்லாமல் நிஜமான ஈடுபாட்டுடன், அங்கங்கே நகைச்சுவை கலந்து மதன் பதிலளித்து வருகிறார். தவிர, யாருமே தொடுவதற்குத் தயங்கும் ஏரியாக்களில்கூட இவர் புகுந்து புறப்படுவதால் ‘எதைப் பற்றியும் இவரிடம் சந்தேகம் கேட்டு தெளிவு பெறலாம்’ என்ற நம்பிக்கை பெரும்பாலான வாசகர்களிடம் இருந்துவருகிறது. விகடனில் வெளியான கேள்வி_பதில்களைத் தொகுத்து, வெளியான நான்கு பாகங்களும் வாசகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றுவருகின்
RS. 60 More...by விகடன் பிரசுரம்
பல்லாண்டுகளாக நகைச்சுவைத் துணுக்குகளில் கோலோச்சும் ஆனந்த விகடன் இதழ்களில் வெளிவந்த ஜோக்குகளின் தொகுப்பு இது. மனிதனுக்கு வரும் பலவித நோய்களுக்கு மனமே காரணம் என்று சொல்பவர்களும் உண்டு. மன இறுக்கமே பல்வேறு நோய்களுக்கும் காரணியாகிறது என்பார்கள். அதற்கு ஓர் உன்னத மருந்தாகத் திகழ்வது நகைச்சுவை! எல்லாவற்றையும் எல்லோரிடமும் நம்மால் பகிர்ந்து கொள்ள முடியாது; நகைச்சுவையைத் தவிர! அறிவார்ந்த விஷயங்களைக்கூட அடுத்தவரிடம் பகிர்ந்து கொள்வதில் நிறையப் பேர் தயக்கம் காட்டுவார்கள். ஆனால், நகைச்சுவை அப்படிப் பட்டதல்ல. அடுத்தவரிடம் பகிர்ந்து கொண்டு, அவரை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி, நட்பை வளர்த்துக் கொள்வார்கள் பலர். 2008 விகடன் இதழ்களில் வெளியான ஜோக்குகளில் 200 ஜோக்குகள் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. ரசித்துப் படித்து, அடுத்தவரிடம் பகிர்ந்து கொண்டு, உங்கள் சூழலை இனிமையாக்க, இந்த நூல் உங்களுக்கு உதவும்.
RS. 50 More...