Cart is Empty
by மொஹமத் சலீம்
ஏன் மாமரத்தில் மாங்காய்தான் காய்க்க வேண்டுமா? ஆப்பிள் காய்க்கக் கூடாதா? கோழி ஏன் குட்டி போடுவது இல்லை, ஒட்டகம் ஏன் முட்டை போடுவதில்லை? இவை யெல்லாம் முட்டாள்தனமான கேள்வியாக இருக்கலாம். ஆனால் இவையெல்லாம் மரபியலின் மகத்தான மர்மங்கள். மரபியலைப் பற்றிய ஞானம் வெகு காலத்துக்கு முன்பிருந்தே முன்னோர்களால் கையாண்டிருப்பதும் உண்மையே. இதுதான் ‘மரபியல்’ என்று தெரியாமல். ஆதிகால மனிதன், தன் குழந்தை தன்போலவே இருப் பதைக் கண்டறியும்போது, நாகரிகம், கலாசாரம், பண்பாடு என வளர்ச்சியடையும்போது இதன் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டதன் பிறகே மரபியல் கண்டுபிடிப்பு உருவானது. முதன்முதலில் மரபியல் குறித்த கேள்வியை எழுப்பிய அறிஞர்கள் பலரது ஆராய்ச்சியில் மனிதன் உருவாவதில் ஆண் பெண் இருவரின் சமபங்கு இருக்கிறது. எப்படி ஆண் பெண் இனங்கள் உருவாகிறது? - எனத் தொடங்கிய கண்டுபிடிப்பு, விலங்கினங்கள், தாவர இனங்களிலும் மரபியல் சோதனை மேற்கொள்ளப்பட்டு ஆராய்ச்சியாக மாறி, பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டு ஜீன்களுக்குள் ஒளிந்திருக்கும் ஆச்சர்யமான தகவல்களை புலனாய்வு செய்து, நமக்குப் பொக்கிஷமாகக் கொடுத்திருக்கிறார் ஆசிரியர். சிக்கலான அறிவியல் அடிப்படைகளை எளிய மனிதர்களும் புரிந்துகொள்ளும்படி அமைத்திருப்பது இந்நூலின் சிறப்பம்சமாகும். நான் யார்? எப்படி உருவானேன்? எங்கு உருவாக்கப் பட்டேன்? என்கிற ஒரு மனிதன் யூகிக்க முடியாத ரகசியங்கள் ஜீன்களால்தான். மற்றும் டி.என்.ஏ, குரோமோசோம்களால் நிகழக்கூடிய மாற்றம், அவற்றின் விளைவு, அதன் நுணுக்கமான ஆய்வுகள் என்ன என்று விரிவாக விளக்கியிருப்பது இந்த நூலின் கூடுதல் சிறப்பாகும். மக்களிடையே மரபியல் தொடர்பான விழிப்புஉணர்வு ஏற்படும் நோக்கில், ஜூனியர் விகடனில் வெளியான தொடர் இப்போது நூல் வடிவில் வெளியிடப்படுகிறது.
RS. 112 More...by காம்கேர் கே.புவனேஸ்வரி
இன்றைய இணைய உலகில், மனிதனின் உள்ளங்கைக்குள் உலகம் சுருண்டு உட்கார்ந்துகொண்டுள்ளது. நினைத்த நேரத்தில், நினைத்த இடத்தில், உலகின் எந்த மூலையில் உள்ள நபர்களையும் பார்க்க முடியும். உட்கார்ந்த இடத்தில் இருந்தே ஊறுகாய் முதல் உயிருள்ள ஓவியம் வரை அனைத்தையும் விற்பனை செய்யக்கூடிய காலம் இது. வீட்டிலேயே இருந்துகொண்டு நாம் விரும்பும் எதையும் வீட்டுக்கே தேடி வரவைத்துக் கொண்டிருக்கிறோம். எல்லாம் இணையமயமானதால் இவையெல்லாம் சாத்தியமாகின்றன. அதேபோல் சமூக வலைதளங்களால் இன்று அரிய பெரிய மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அந்த சமூக வலைதளங்கள் மூலம் நம் திறமையை மூலதனமாக்கி வியாபாரத்தைப் பெருக்க, வாய்ப்புகள் வாசல் திறந்து வைத்து காத்திருக்கின்றன. நீங்கள் எவ்வாறு அந்த சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி முன்னேறலாம் என்று வழிகாட்டுகிறார் நூலாசிரியர் காம்கேர் கே.புவனேஸ்வரி. இணையம் வழியே வேலை செய்து கொடுத்துவிட்டு அதற்கான பலன் கிடைக்காமல் ஏமாந்து போவோர் அனேகர். அவ்வாறெல்லாம் ஏமாறாமல் நம் தொழிலை, நம்மிடம் உள்ள திறமையைக் கொண்டு சமூக வலைதளங்களால் வளமான முன்னேற்றம் பெற, இந்த நூல் பல நுட்பங்களைச் சொல்லிக்கொடுக்கிறது. இமெயில், கூகுள்+, வெப்சைட், பிளாக், யு-டியூப், ஃபேஸ்புக், டிவிட்டர், லிங்க்குடுஇன், சவுண்ட் கிளவுட், இன்ஸ்டாகிராம், ஸ்கைப், பின் - என அனைத்து சமூக வலைதளங்களும் உங்கள் தொழில் திறனை உலகுக்குக் காட்ட காத்துக்கிடக்கின்றன. பக்கங்களைப் புரட்டுங்கள். உங்களுக்கு வளமான வாழ்வு காத்திருக்கிறது!
RS. 151 More...by காம்கேர் கே.புவனேஸ்வரி
கம்ப்யூட்டர் ரெசிப்பி என்ற கான்செப்டில் உருவாகியுள்ள மைக்ரோசாஃப்ட் வேர்ட் 2013 புத்தகம், லேட்டஸ்ட் வர்ஷனான மைக்ரோசாஃப்ட் ஆபீஸ் 2013-ல் வேலை செய்யக்கூடிய சாஃப்ட்வேர். மைக்ரோசாஃப்ட் வேர்ட் என்பது முக்கியமாக வேர்ட் பிராசசிங் வேலைகள் செய்வதற்கு மட்டும்தான் என்று எல்லோரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதைத் தவிர பல வேலைகளைச் சுலபமாக மேற்கொள்ள முடியும் என்று விரிவாக விவரித்துள்ளார் நூல் ஆசிரியர் காம்கேர் கே.புவனேஸ்வரி. ஒரே கடிதத்தை பல பேருக்கு அனுப்ப நினைப்பவர்கள் வேர்டையும் எக்ஸலையும் இணைக்கும் ‘மெயில் மெர்ஜ்’ என்ற ஆப்ஷன்; தகவல்களை முறைப்படுத்த உதவும் ‘டேபிள்’; பல வேலைகளை ஒருங்கிணைத்து ஒரே க்ளிக்கில் சீக்கிரம் வேலையை முடிக்கும் ‘மேக்ரோ’; மல்டிமீடியாக்களுடன் இணைந்து செய்யும் வேலை போன்ற பல வசதிகளை உள்ளடக்கியது இந்த ‘வேர்ட்’. வேர்ட் டாக்குமென்ட் ஃபைலை கிளவுட் கம்ப்யூட்டிங்கில் சேமித்து வைத்துக்கொண்டால் எங்கு இன்டர்நெட் கனெக்ஷன் உள்ளதோ அங்கே அந்த ஃபைலை திறந்து பார்க்கும் வசதி; பிடிஎஃப் ஃபைல்களைத் திறந்து பார்க்கவும் மாற்றங்கள் செய்து சேமிக்கவும் முடியும் என்ற வசதி ஆகிய வேர்ட் 2013&ல் மட்டுமே உள்ள சிறப்பான வசதிகள் இதில் விவரிக்கப்பட்டிருக்கின்றன. இந்த நூலில் உள்ள விஷயங்களை ஒவ்வொன்றாகக் கற்றுக்கொண்டு அதை நீங்கள் கம்ப்யூட்டரில் சோதித்துப் பார்த்தால் ‘வேர்ட்’-ல் எக்ஸ்பர்ட் ஆகிவிடுவீர்கள் என்பதில் சந்தேகமில்லை.
RS. 165 More...by காம்கேர் கே.புவனேஸ்வரி
கம்ப்யூட்டர் ரெசிப்பி என்ற கான்செப்டில் உருவாகியுள்ள ‘போட்டோஷாப்’ புத்தகத்தை, லேட்டஸ்ட் வெர்ஷனான ‘அடோப் போட்டோஷாப் க்ரியேட்டிவ் க்ளவுட் 2014’&ஐப் பின்பற்றி எழுதியுள்ளார் நூல் ஆசிரியர் காம்கேர் கே.புவனேஸ்வரி. இருந்தாலும் போட்டோஷாப்பின் முந்தையப் பதிப்புகளை பயன்படுத்துபவர்களும் கற்றுக்கொள்ளும் வகையில் இந்தப் புத்தகத்தில் பொதுவான கான்செப்ட்களில் அதிகம் கவனம் செலுத்தியுள்ளார். கிளவுட் கம்ப்யூட்டிங் என்பது ‘ஆகாய கம்ப்யூட்டர்’ எனப் பொருள்படும். உலகளாவிய சர்வரில் சாஃப்ட்வேர்களை இன்ஸ்டால் செய்து வைத்திருப்பார்கள். அந்த சாஃப்ட்வேர்களை இங்கிருந்தபடியே பயன்படுத்திக்கொள்ளலாம். இந்தத் தொழில்நுட்பத்துடன் அடோப் நிறுவனம் தன்னை இணைத்துக்கொண்டு செயல்பட ஆரம்பித்ததின் விளைவாகத் தோன்றியதே ‘அடோப் கிரியேட்டிவ் கிளவுட்’ என்ற பெயர் மாற்றம். போட்டோஷாப்பை முதன்முதலில் கற்றுக்கொள்ள ஆரம்பிப்பவர்களை மனதில்கொண்டே இந்தப் புத்தகத்தை தயார்செய்துள்ளார் நூலாசிரியர். இந்தப் புத்தகத்தின் ஒவ்வோர் அத்தியாயமாகப் படித்துப் பார்த்து அதில் கொடுத்துள்ள வழிமுறைகளுடன் பயன்படுத்திக்கொண்டே வந்தால் போட்டோஷாப்பை முழுமையாகக் கற்றுக்கொண்டு விடலாம். புகைப்படங்களைக் கையாள்வதற்கான பல்வேறு சிறப்புச் செயல்பாடுகளைக்கொண்ட போட்டோஷாப் சாஃப்ட்வேரில் உள்ள டூல்கள், மெனுக்கள், லேயர்கள் போன்றவற்றை எளிமையான வழிமுறைகளுடன் விளக்கியிருப்பதுடன் 3ஞி தொழில்நுட்பம், வெப்சைட்டுகளின் பேனர்கள் மற்றும் வெப் பக்கங்களை வடிவமைத்தல், அனிமேஷன்களை உருவாக்கும் முறை, புகைப்படங்களில் கலர் கரெக்ஷன்கள் செய்யும் நுணுக்கம் போன்ற பல்வேறு மேம்படுத்தப்பட்ட வசதிகளை ஏராளமான விளக்கப்படங்களுடன் விளக்கியுள்ளார். ஒரு மல்டிமீடியா அனிமேஷன் படைப்பை விஷுவலாகப் பார்க்கும்போது கிடைக்கும் தெளிவு இந்தப் புத்தகத்தில் கிடைக்கும்.
RS. 298 More...by பரணிராஜன்
உலக அளவில் ஆட்டோமொபைல் என்பது மிகப் பெரிய துறை. இந்தத் துறை, நம் நாட்டில் கடந்த பத்து ஆண்டுகளாகத்தான் மிகப் பெரிய வளர்ச்சியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. ஒரு நாட்டில் குறிப்பிட்ட ஒரு துறை வளரவேண்டுமானால், அந்தத் துறையில் அறிவுசார் பங்களிப்பிலும் தொழில்நுட்பத்திலும் நிபுணத்துவம் பெற்றவர்கள் உருவாகிக்கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் அந்தத் துறையின் வளர்ச்சி முழுமையடையும். முன்பு, கார் என்றாலே ஒரு சில மாடல்களே இருந்தன. சுலபமாக நமக்குத் தேவையான ஒன்றைத் தேர்ந்தெடுத்துவிடவும் முடியும். ஆனால், இன்றைக்கு கார் வாங்கலாம் என்று நினைத்தால், எந்த காரை வாங்குவது என்ற குழப்பம் நிச்சயம் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுவது இயல்பு. வாடிக்கையாளர்கள் அந்தக் குழப்பம் இல்லாமல் தனக்கு ஏற்ற வாகனத்தைத் தேர்ந்தெடுக்க உதவும் விதத்தில், கடந்த 2007-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது `மோட்டார் விகடன்' மாத இதழ். புதுப்புதுப் பெயர்களில் அறிமுகமாகும் நவீனத் தொழில்நுட்பங்களின் செயல்பாடுகள் தொடங்கி, எதிர்காலத் தொழில்நுட்பங்கள் வரை இன்றைக்கு தமிழ் வாசகர்கள், வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்வதில் முன்னோடியாக விளங்கும் மோட்டார் விகடனில் வெளிவந்த தொடர்தான் `எந்திரன்'. காரில் என்னவெல்லாம் இருக்கின்றன; அது எப்படி வேலை செய்கிறது. ஒவ்வொரு பாகத்தின் செயல்பாடுகள் என்ன; எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்கிற விவரங்களை, நமக்கு எளிதாகப் புரியும் விதத்தில், உதாரணங்களோடு மிக அழகாக விளக்கியிருக்கிறார் இந்த நூலாசிரியர். ஆட்டோமொபைலின் அடிப்படையே, மெக்கானிக்கல் ஆற்றலில் செயல்படுவதுதான். ஆனால், மெக்கானிக்கலுடன் மிக எளிதாக இணைந்து கொண்டது எலெக்ட்ரானிக்ஸ். அதேசமயம், அடிப்படை என்பது எப்போதும் மாறாதது. அந்த அடிப்படை மெக்கானிஸித்தையும் எலெக்ட்ரானிக்ஸ் செயல்பாடுகளையும் தனது அனுபவத்தின் மூலம் இங்கே பதிவு செய்திருக்கிறார் பரணிராஜன். இந்தப் புத்தகம் ஆட்டோமொபைல் துறை சார்ந்த மாணவர்களுக்கு மட்டுமல்லாமல், ஆட்டோமொபைல் துறையில் ஆர்வம் இருக்கும் எல்லோருக்கும் மிகப் பயனுள்ள நூலாகவும் இருக்கும்.
RS. 105 More...by காம்கேர் கே.புவனேஸ்வரி
கம்ப்யூட்டர் ரெசிப்பி என்ற கான்செப்டில் உருவாகியுள்ள மைக்ரோசாஃப்ட் பவர்பாயின்ட் 2013 புத்தகம், லேட்டஸ்ட் வர்ஷனான மைக்ரோசாஃப்ட் ஆபீஸ் 2013&ல் வேலை செய்யக்கூடிய பிரசன்டேஷன் சாஃப்ட்வேர். மீட்டிங்கில் பேசும் ஒருவர், தான் வெளிப்படுத்த வேண்டிய விஷயங்களை மற்றவர்களுக்கு எளிதாக விளக்கும் பொருட்டு எழுத்துகளுடன் ஆடியோ மற்றும் வீடியோவையும் சேர்த்து சமர்ப்பிப்பதே பவர்பாயின்ட் பிரசன்டேஷன். இதை புரொஜக்டர் மூலம் பெரிதுபடுத்தித் திரையில் காண்பிப்பதால் அந்த பிரசன்டேஷனைப் பார்ப்பவர்களுக்கு எளிதாகப் புரியும்; அவர்களுக்குப் பயனுள்ள வகையிலும் அமையும். பவர்பாயின்ட் ஸ்லைடுகளில் கேம்ஸ்கள், அனிமேஷன்கள், போஸ்டர்கள் போன்றவற்றை சுலபமாகவும், விரைவாகவும் தயாரிக்க முடியும் என்று விரிவாக எடுத்துக் கூறியிருக்கிறார் நூலாசிரியர் காம்கேர் கே.புவனேஸ்வரி. தானாக இயங்குகிற (ஷிமீறீயீ ஸிuஸீஸீவீஸீரீ றிக்ஷீமீsமீஸீtணீtவீஷீஸீ) பவர்பாயின்ட் பிரசன்டேஷன் ஃபைலை வடிவமைப்பதைப் பற்றியும் பிரசன்டேஷன் ஃபைலை வீடியோ ஃபைலாக மாற்றும் முறை பற்றிக் கூறியிருப்பதும் கூடுதல் சிறப்பம்சம். இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்தவுடன் பவர்பாயின்ட்டில் நீங்களும் ஒரு எக்ஸ்பர்ட் ஆவீர்கள் என்பது திண்ணம்.
RS. 186 More...by முனைவர் இல.சுந்தரம்
கணினியைத் தவிர்த்து இன்றைய உலகத்தை கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது. நம் அன்றாட வாழ்க்கையில் அனைத்துச் ெசயல்பாடுகளும் கணினி இன்றி நடைபெறாது என்ற நிலை உருவாகிவிட்டது. உலகத்தை ஒவ்வொருவர் உள்ளங் கையிலும் கொண்டுவந்து கொடுத்துவிட்டது கணினியுகம். மனிதர்களின் அதிதேவையாக மாறிவிட்ட கணினியில் தமிழ் நுழைந்துவிட்டது நம் மொழியின் பெருமை. ஆனால் தமிழில் தட்டச்சு செய்வதால் மட்டும் கணினியின் அனைத்து செயல்களிலும் தமிழ் கலந்துவிட்டது என்றாகிவிடாது. அந்தக் குறையைப் போக்க வந்ததே இந்நூல். கணினியின் அடிப்படை முதற்கொண்டு அனைத்து நிலைகளிலும் தமிழைக் கையாளுவதற்கு வழிசொல்லும் நூல் இது. நாம் கணினிப் பயன்பாடு சொற்களில் சில சொற்களுக்கு மட்டுமே தமிழ் சொல் அறிந்து வைத்திருக்கிறோம். ஆனால் இந்த நூலில் கணினியின் அனைத்து தொழில்நுட்ப சொற்களுக்கும் தமிழ் சொல் கொடுக்கப்பட்டிருக்கிறது. 'தாய்ப்பலகை - Motherboard, நேரடி அணுகல் நினைவகம் - RAM, வன்தட்டு நிலைவட்டு - Hard Disk' என அனைத்துக்கும் இதில் தமிழில் கொடுக்கப்பட்டுள்ளது சிறப்பம்சம். அனைத்துத் தரப்பினரும் கணினி செயல்பாடுகளை எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் விரிவாகக் கொடுத்துள்ளார் நூலாசிரியர் முனைவர் இல.சுந்தரம். வன்பொருள், மென்பொருள் தொழில்நுட்பம் பற்றி அறிமுக நிலையில் தெரிந்துகொள்ளவும், இணையத்தின் அடிப்படையையும் அதில் தமிழை எவற்றிலெல்லாம் பயன்படுத்தலாம் என்பதையும் விளக்கிக் கூறுகிறது நூல். மொத்தத்தில் எல்லாத் தரப்பினருக்கும் குறிப்பாக தமிழ்மொழியியல் ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், கணினியிலும் இணையத்திலும் தமிழைக் கையாள விரும்பும் அனைவருக்கும் ஆகச் சிறந்த நூலாகத் திகழும் என்பதில் மாற்று இல்லை.
RS. 161 More...by விகடன் பிரசுரம்
‘பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல' என்பதற்கேற்ப, புதிய புதிய மாற்றங்கள்தாம் பழைய பூமியை இன்னும் உயிர்ப்புடன் வைத்துள்ளன. கற்களை உரசி ஆதி மனிதன் கண்டுபிடித்த நெருப்பில் இருந்து தொடங்கிய புதிய கண்டுபிடிப்பு தாகம் மனித இனத்துக்கு இன்னும் தணியவே இல்லை. அப்படி மனிதன் கண்டுபிடித்த மின்சாரமும் தகவல் தொழில்நுட்பமும் பூமியின் முகத்தையே மாற்றின. அயல் கிரக ஆராய்ச்சிகள், நானோ, ரோபோ என மனிதனின் தொழில்நுட்பத் தேடல்கள் பல வகைகளில் பல தளங்களில் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. இப்போது உலக நாடுகள் எல்லாம் பல துறைகளில் பயன்படுத்த, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் தீவிரம் காட்டிக்கொண்டிருக்கின்றன. புதிய புதிய தொழில்நுட்பங்கள் பற்றி ‘சர்வைவா’ எனும் தலைப்பில் ஆனந்த விகடனில் டெக்னோ தொடர் கட்டுரைகள் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றன. அவற்றின் தொகுப்பு நூல் இது! ‘தொழில்நுட்பங்கள் மனிதனைக் கடவுள்களாக மாற்றிக்கொண்டிருக்கின்றன. கடவுளைப்போன்ற சக்திகளை நாம் பெறத்தொடங்கியிருக்கிறோம். அப்படிப்பட்ட சக்தியை வைத்துக்கொண்டு நாம் என்ன செய்யப்போகிறோம் என்கிற கேள்வியில்தான் இருக்கிறது நம் எதிர்காலம்' என்று நூலாசிரியர் குறிப்பிட்டிருப்பதைப்போல, மாற்றங்களை ஏற்றுக்கொள்வது அவசியம் என்றாலும் அந்த மாற்றங்களால் மனித குலம் செழிக்கவேண்டும், பூமியில் அமைதி பூக்கவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்!
RS. 160 More...